Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நினைவலைகள்
#21
வணக்கம் இமயமலை ஈசனே...உங்ளுக்குமா? என்ன இமயமலை ஞாபகங்களா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
" "
" "

Reply
#22
இமயமலையெண்டா என்ன சந்திரமண்டலமெண்டா என்ன
இளவயது ஞாபகங்கள் எல்லோர்க்கும் இனிப்பவைதான் இல்லையா

!
Reply
#23
என்ன சந்திர மண்டலத்தையே தலையில வைச்சுக் கொண்டு இப்படியா சொல்றது ஆஆஆ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#24
கல்யாணி கிரீம் ஹவுஸ்தான் கஸ்தூரியார் வீதியில் இருந்தது. கல்யாணி அல்ல,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
Quote:கல்யாணி கிரீம் ஹவுஸ்தான்
நானும் இப்படி அனுபவித்திருக்கிறேன் மதன். சோடா வகைகளும் பச்சைத் தண்ணீர் குடித்த மாதிரி இருந்திருக்குமே.சின்ன வயசில பெரிசா தெரிஞ்ச விசயங்கள் எல்லாம் நினைவில மட்டுந்தான் பெரிசா இருக்கும் நிசத்தில அப்பிடி இல்லை என்டுறது வேதனையான விசயம். நினைவில மட்டுமே இனிப்பா இருந்த பல விசயங்கள் இப்ப ஏமாத்தங்களா மட்டும் மிஞ்சியிருக்கு.

!
Reply
#26
Quote:கல்யாணி கிரீம் ஹவுஸ்தான் கஸ்தூரியார் வீதியில் இருந்தது. கல்யாணி அல்ல,
என்ணண்ணா நீங்க கல்யாணி கிரீம் கவுஸ் என்றியல் பிறகு கல்யாணி இல்லை என்றியள்...என்ன கல்யாணி சரிய குழப்பிறாவோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
" "
" "

Reply
#27
மதன் உடனடியாக பட்டி மன்ற மேடைக்கு அழைக்கப் படுகிறார்.!!!!

!
Reply
#28
ஏன் மதன் அண்ணாவை இங்கை இருந்து கூட்டிக்கொண்டு போறிங்க? நாங்க மதன் அண்ணாவின் கல்யாணி பற்றி பேசுறம் ஆமா.. :twisted: :twisted: :twisted: :mrgreen:
" "
" "

Reply
#29
மழலை உங்க கவிதை நல்லாயிருக்கு
ஞாபங்கள் தாலாட்டும்
ஞாபகங்கள் தீ மூட்டும்
அப்படியா?
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#30
நன்றி குளம் அண்ணா...சே சே தீ ஒன்றும் மூட்டாது பட் ஞாபகங்கள் தாலட்டும்..நித்திரைக்கு போறத்துக்கு முன்னம் நினைச்சுப்பார்ப்பன் அப்படியே நித்திரையாகிடுவன்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "

Reply
#31
பிள்ளை சும்மா சொல்ல கூடாது சாத்திரியின்ரை மனசையே கலங்க வைச்சிட்டாய் பிள்ளை .கனடாவிலை இருந்தாலும் அது விடுதியெண்டு தெரிய வைச்சிட்டாய் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#32
Quote:பிள்ளை சும்மா சொல்ல கூடாது சாத்திரியின்ரை மனசையே கலங்க வைச்சிட்டாய் பிள்ளை
என்ன சாத்திரி பழைய ஞாபங்கள் அலை பாயுதோ.....சரி சரி அதுக்காக நீங்க உங்க கண்களில் அலை பாய விடுறதா.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:கனடாவிலை இருந்தாலும் அது விடுதியெண்டு தெரிய வைச்சிட்டாய்

அப்ப நீங்க தமிழன் தான்...... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: அப்ப சாத்திரிக்கு கனடாவோ தற்போதைய விடுதி....... :mrgreen: :mrgreen:
" "
" "

Reply
#33
Quote:பள்ளிப் பருவத்தில்
கள்ளமடிக்காது
பள்ளிக்கு சென்றாலும்
வகுப்பறையில் படிப்பதாக
பாசாங்கு செய்து
அம்புலிமாமா கதைபடித்த
அந்நாள் ஞாபகங்கள்
நீங்காது நெஞ்சிலிருந்து...!


பாலபோதினி
படிக்கும் காலத்தில்
பாலமித்திரா கதை

அம்புலிமாமா
பார்க்கும் வயதில்
அம்புலிமாமா கதை

என்ன
அந்த நாளில்
இந்த மழலை
திருவிளையாடலா.. ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Quote:மனமதனை மகிழ வைக்கும்
மழைக்காலம்
பாடப்புத்தகங்களுக்கு
வேட்டு வைக்கும் காலமது...!
படித்த பாடங்கள் கப்பலாக
மழை நீரில் தத்தளித்து
கரை சேர்ந்திட துடிதுடிக்கும்...!
கப்பல் செய்த களிப்பு
இறுதியாண்டு பரீட்சையினை
மறக்கடிக்க செய்துவிடும்...!
ஆண்டு இறுதியில் தான்
செய்து விட்ட கப்பல்கள்
கொண்டு சென்ற பாடங்கள்
நினைவுக்கு வரும்...!

வேட்டுச் சத்தம் கேட்டு
கதிகலங்கிய காலத்தில்
பாடப் புத்தகங்களுக்கே
வேட்டு வைக்கும்
மழலையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


கப்பல் செய்து
கடல் கடந்து
சாதனை படைத்தது போல்
பாடப் புத்தகத்தை
மழை நீரில் விட்டு
விடுப்பு பார்த்து விட்டு
ஆண்டிறுதியில்
அம்மா அடுப்பு
பத்தவைக்க விட்டதை
சொல்ல வில்லைப் போல் இருக்கிறதே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

துடுக்காய் ரொக்கற்
விட்ட
சோழியன் அண்ணா
மிடுக்காய்
இன்றும் பட்டி மன்றத்தில்
நடுவர் கதிரையில் கூட
அமராமால்
தொழில் நுட்பத்தில்
ரொக்கற்றை தானே
கண்டு பிடித்தது போல்
ஓடிக் கொண்டே இருக்கிறாரே
உற்சாகமாக. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



இனிக்க இனிக்க
குடித்த குளிர்கழியை
இன்னும்
மறக்காமல் இருக்கிறாராம்
எங்கள் மதன்
எதுக்கு,
என்றால்,
இப்போ குடிப்பது
இனிக்கவில்லையாம்.
எது?


Quote:ஞாபங்கள் தாலாட்டும்
ஞாபகங்கள் தீ மூட்டும்
அப்படியா?

தாலாட்டையே இன்னும்
மறக்காமல்
தாவரங்களையே
தாலாட்டி திரியும்
தவப் புதல்வன்
காண்பதை எல்லாம்
தன் கண்ணுக்குள்
சீ.. கருவிக்குள்
அடக்கி
பொக்கிசமாக்குகிறார்.
மறக்காமல் இருக்கவா?


அந்த நாள்
ஞாபகங்களை
நியாயமாய் சொல்லாமல்
எல்லோரும் சொல்பவற்றை
தன்னது
என்பது போல
துடுக்காய் பேசிவிட்டு
தனிக்காட்டு இராணியாய்
யாழிலை திரியுறாவாம்
யாரது.?
மன்னரிடம் தான் கேக்கணும்..



சோடா போத்தில்
பற்றி
எல்லாம்
சுருக்கமாய் சொல்கிறார்,
ஈஸ்வாரா..!
உனக்கே,
இது நியாயமா.
வேண்டாம்பா வம்பு,
எனக்கு.


Quote:கடல் அலைகள் கரையோடு சரியும்...மன அலைகள் உடலோடு இருக்கும் உயிர் வரை...!

தன் மன அலைகளை களக் கடலில் பரப்பி விட்ட மழலைத் தங்கைக்கு வாழ்த்துக்கள்...!


மலரை
மயக்கவென
அலைந்த அந்த காலங்களை
மறக்காமல் சொல்கிறார்
மறவர் தாம் என
மார்தட்டி நிக்கும்
பறவை இனம்,
பாவம்
எங்கள் மன்னர்
படைமுன்
பரிதாப பட்டு நின்ற
அந்த நினைவுகளை
மறந்துவிட்டார் போலும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->




மழலை கவிதை அருமை வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்.
[b][size=18]
Reply
#34
அடேங்கப்பா....என்ன கவிதன் அண்ணா கவி மழையாகப் பொழிந்து இருக்கிறார்.... நன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு... அழகான அபிநயமான குட்டிக் குட்டிக் கவி....

Quote:பாலபோதினி
படிக்கும் காலத்தில்
பாலமித்திரா கதை

அம்புலிமாமா
பார்க்கும் வயதில்
அம்புலிமாமா கதை

என்ன
அந்த நாளில்
இந்த மழலை
திருவிளையாடலா.. ?

பாலபோதினி படிக்க முன்
பாலமித்திரா படிப்பவர்கள்
என்றால் எமக்கு
என்ன வேலை பள்ளியில்....?

அம்புலிமாமா கதை
அடிபட்டு படித்தது
வானில் பார்த்த
அம்புலிமாமாவை
தரைக்கு எடுத்து
செல்லவே...

நாங்க பேபி ஜீனியஸ் ஆக்கும்.....
நன்றி கவிதன் அண்ணா...ஆனா உங்களைப் பார்க்க பாவமா இருக்கு..யாரிட்டை எல்லாம் வாங்கிக் கட்டப் போறியளோ.... :wink: :wink: :wink:
" "
" "

Reply
#35
Quote:துடுக்காய் ரொக்கற்
விட்ட
சோழியன் அண்ணா
மிடுக்காய்
இன்றும் பட்டி மன்றத்தில்
நடுவர் கதிரையில் கூட
அமராமால்
தொழில் நுட்பத்தில்
ரொக்கற்றை தானே
கண்டு பிடித்தது போல்
ஓடிக் கொண்டே இருக்கிறாரே
உற்சாகமாக.

ரொக்கற்மட்டுமா விட்டோம்?!

சிரட்டை பொறுக்கிவந்து
சோறுகாய்ச்சி மண்ணில்விட்டோம்
மண்ணில் உருவம்செய்து
சூரன்போர் புரியவிட்டோம்
குரும்பையில் ஈர்க்குக் குத்தி
தேரும் அசையவிட்டோம்
வளைந்த வேம்பேறி
'வஸ்'ஸும் நல்லாய்விட்டோம்
அம்மாவின் சீலையிலே
'சீன்'கட்டி கூத்தும் விட்டோம்
கொய்யா நாவல் என்று
தாவிநின்று பயமும் விட்டோம்
வண்டில் வளையத்தில்
தடிகொண்டு சவாரி விட்டோம்
சந்தியில் குந்தியே நாம்
குறும்புகள் பலதும் விட்டோம்
குறும்பின் இடையினிலே
விளையாட்டுக் கழகம் விட்டோம்
கோயில் திருநாளில் - தண்ணீர்
பந்தலும் கட்டி விட்டோம்
துடியாட்டப் பருவத்திலே
தொண்டும் தொந்தரவும் இணைத்து விட்டோம்
எல்லாமே விட்டதாய்
கிட்டாத நினைவுகளாய்
விட்டோடி வந்தோம் நாம்
ஆனால் என்ன?!
சந்தியில் நின்று நாங்கள்
அன்று விட்டுவைத்த
விளையாட்டுக் கழகமும் வாசிகசாலையும்
இன்று..
சொந்த நிலமும் கட்டிடமுமாய்...
எங்கள் ரொக்கற்றுகளில் சில
விளைச்சலுற்ற களிப்பெமக்குள்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.
Reply
#36
அப்பப்பா அசத்திறியளே.. தம்பி தலைகாட்டி கவி மழையையே பொழிந்திட்டார். :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
Quote:துடுக்காய் ரொக்கற்
விட்ட
சோழியன் அண்ணா
மிடுக்காய்
இன்றும் பட்டி மன்றத்தில்
நடுவர் கதிரையில் கூட
அமராமால்
தொழில் நுட்பத்தில்
ரொக்கற்றை தானே
கண்டு பிடித்தது போல்
ஓடிக் கொண்டே இருக்கிறாரே
உற்சாகமாக.

நாங்க ரொக்கற்றா விட்டோம்?!

வெற்று ரவைகள் பொறுக்கிவந்து
செயினாக்கி சோக் காட்டினம்
மண்ணாங்கட்டியில் கிரனைட் செய்து
புலி - ஆமி போர் புரிந்தோம்
செல் குத்தும் சத்தம் சொல்லி
ஆட்லறியா நோமலா
கதையும் அளந்தோம்
வளைந்த வேம்பேறி
சென்றி வைத்தோம்
தென்ன மட்டை எல் எம் ஜி
கூட செய்து வைத்தோம்
அம்மாவின் சீலையால்
மறைப்புக்கட்டி நாடு பிரித்தோம்
கொய்யா நாவல் என்று
மறைந்திருந்து கரந்தடித்தோம்
வண்டில் அம்புலன்ஸ் செய்து
வீட்டுக் கோடிக்கு சவாரி விட்டோம்
சந்தியில் குந்தாமலே நாம்
பழகி விட்டோம்
குறும்பின் வயதினிலே
கோட்டை வாசலே வதிவிடமானதால்...!
கோயில் திருநாளில்
துப்பாகியும் ரப்பர் செல்லும்
தேடி அலைந்தோம்
துடியாட்டப் பருவத்திலே
போரது தந்த வேதனைகள் சுமந்தம்
கெலி அடிக்க அடிக்க
எல்லாமே விட்டு ஓடி வந்தோம்
தலையாட்டி முன் நிற்க வைத்து
போட்டோவும் இலவசமாய் எடுத்து வைச்சு
கோலாவும் தந்து
கொழும்புக்கு அனுப்பி விட்டார்
வீட்டுக் காவலில் இருந்தி வைக்க..!
அமைதியென்று
அர்த்த சாமத்தில் படிக்க அமர்ந்தா
வீட்டு பெல் அடிக்கும்
நெஞ்சு பதை பதைக்கும்
சிங்களம் அமைதி குலைக்கும்
"கொட்டி" தேடி
சப்பாத்துக்கள் கதவு தட்டும்
ஐடியும் பொலிஸ் பதிவுமாய்
குலை நடுங்க அம்மா பின்
பதுங்கி நின்றே பழகிவிட்டோம்...!
சந்திப்பக்கம் தலைகாட்டம்
சென்றிகள் அங்க தாராளம் என்பதால்..!
விளையாட்டுக் கழகங்கள் சேர்ந்ததில்லை
தற்கொலைக்குப் பயிற்சி என்று
பொல்லாப்புச் சொல்லி
காசு பறிக்க ஒரு கூட்டம் இருந்ததால்...!
வெடி கொழுத்தி பழகமறுத்தம்
வெடியே வெடிக்க தடையங்கு
கொலன்னாவையில் வெடித்த போது
எல்லாம் சேர்த்து ஒன்றாய் ரசித்தம்
வான் முட்டும் புகையும் கிளம்ப
பட்டப் பகலில்
கொழும்பே இருட்டாகக் கண்டம்
தீபாவளிக்கு சூரியக்கதிரால்
வெடி விடுவதாய் சொன்ன அங்கிளுக்கு
அவர் வாசலிலையே
வருடப் பிறப்புக்கு
துறைமுகத்தில் முழங்கக் கண்டம்
சன் ரிவியும் சூரியனும் நம்பிக்கையாக
அதையே நம்பி வாழ்ந்துவிட்டோம்
பள்ளிப் புத்தகம் நடுவே
தினமுரசு வாசித்தம்
அற்புதன் அன்று அற்புதமாய் எழுதியதற்காய்
இன்று அதை மறந்தே விட்டோம்..!
கூடப் பிறந்ததுகள்
தூர தேசம் பறந்திட
அன்பு நண்பரும்
அடிபாட்டில் மாவீரராக
நட்புக்கள் இன்றி
தனியே வாழ்ந்துவிட்டோம்
தனிமை எமக்கே சொந்தமாக
நாமே நமக்குள் பேசிப் பழகிக் கொண்டோம்
வீட்டுக்குள் விளையாட்டு மைத்தானம்
அமைத்தே விளையாடிவிட்டோம்
சின்ன வயதுச் சுதந்திரம் என்பது
பாதி இழந்த சின்னச் சிட்டுக்களாய்
எங்கள் காலம் இழந்தாயிற்று
எனினும் எமக்குள்ளும்
நினைவுகள் ஏராளம்
உங்களைப் போலவே....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#38
என்னாங்கடா இன்னாங்கடா ஏண்டா ஆளாளாளுக்கு அழவைக்கிறீங்க.
எல்லோரும் கூடி இருந்து ஒப்பாரி வைப்பமா ஆஆஆ :evil: :evil: :evil:

!
Reply
#39
Quote:என்னாங்கடா இன்னாங்கடா ஏண்டா ஆளாளாளுக்கு அழவைக்கிறீங்க.
எல்லோரும் கூடி இருந்து ஒப்பாரி வைப்பமா ஆஆஆ
ஈசன் உங்களுக்கும் இருக்குமே... எடுத்துவிடுறது. :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#40
குருவி அண்ணா உங்கள் கவி நன்றாக இருக்கிறது ஆனால் மனதுக்கு கஸ்டமாகவும் அதே சமயம் நாங்கள் வாழ்ந்த அந்தக் கொடிய வாழ்க்கையையும் பயத்துடன் நினைவு படுத்துகிறது.....இமயமலை ஈசன் சொன்னது போல அழத்தான் தோணுது...... Cry Cry Cry Cry Cry Cry

பசுமரத்தாணியாய்
சில ஞாபகங்கள்
பச்சைப் பசேலென
பசுமையாய் இருந்தாலும்
பளிங்கிலே கறையாக
பல கிலி பிடித்த
வேண்டாத ஞாபகங்களும்
ஆங்காங்கே அலையடிக்கும் Cry Cry
" "
" "

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)