<b>ஒரே சாதிதான்!
நம்மைப் பிரித்துவைத்தது இடைத் தரகர்களே!</b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <span style='color:red'>நிலத்தால் தமிழகமும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு சில கோடி நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒன்றாக இருந்தது என்று வரலாறு கூறுகிறது. இப்படி இருக்கையில், தமிழகத்தில் எப்படி சிவப்புத் தோல் உடையவர்கள் வந்தார்கள்? மதன் உள்பட எல்லாரும் வாஸ்கோடகாமா வாரிசுகளா?

<b>மதன்</b>:-
தமிழகம் மட்டும் இல்லை... லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் இந்தியாவே ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாகத்தான் இருந்தது. பிறகு, அங்கேயிருந்து பிய்த்துக்கொண்டு ஒரு ராட்சச பஜ்ஜி மாதிரி மிதந்து சென்று, ஆசியாவோடு ஒட்டிக்கொண்டது. உலகில் மக்களே இல்லாத காலம் அது! பிறகு, ஆப்பிரிக்கர்கள் நெடும் பயணம் மேற்கொண்டனர். குழுக் குழுவாகப் பிரிந்து அவர்கள் போய்ச் சேர்ந்த இடத்தின் பருவ நிலையைப் பொறுத்து, அவர்களுடைய தோல் நிறம் மாறியது.
அப்போது சாதிகளே கிடையாது என்றாலும், தோல் நிறத்தைப் பொறுத்து சரமாரியாகக் கலப்புத் திருமணங்களும் நிகழ்ந்தன. ஆகவே, அடிப்படையில் நாமெல்லாருமே ஒரே சாதிதான்! நம்மைப் பிரித்துவைத்தது இடைத் தரகர்களே!
(வாஸ்கோடகாமா என்னைப் பார்த்தால், Ôகறுப்பர்Õ என்றுதான் அழைப்பார்!)
நன்றி: விகடன் மதன் </span>
கன்னடத்தினர் அனைவருமே தமிழர்களை தாக்கவில்லை.
ஒரு சில காடையர்களே அதைச் செய்தார்கள்.
இப்போதும் தமிழர்கள் அங்கே வாழ்கிறார்கள்..................
<b>தமிழர்களை காப்பாற்றியவர்களும் கன்னடர்கள்தான்.</b>
இதே நிலை 1981ல் இலங்கையிலும் நடந்தது.
உரிமைகளை பெறப் போராடுவதென்பது வேறு..................
இதற்கு எதிராக போராடும் நாம்
அதையே வேறொவருக்குச் செய்வது எவ்வகையில் நியாயம்?