வணக்கம்,
சோழியான் எதிர் கனொன் போரினுள் நான் தலையிட வரவில்லை. விட்டால் ரோட்டில் நின்று வெட்டுப் படுவார்கள் போலிருக்கிறது?
இனி எனது பிரட்சனைக்கு வருகிறேன் ......................
சோழியான் எழுதியது:01....
Quote:தேசியத் தலைவர்கூட 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்" படத்தால் கவரப்பட்டவர்.. அதே சிவாஜிதான் 'வசந்தமாளிகை"யில்.. 'குடிமகளே! நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு" என்ற பாட்டுக்கும்.. சிவகாமியின் செல்வன்" படத்தில் 'எத்தனை அழகு கொட்டிக் கிடக்கு" என்ற பாட்டுக்கும் நடிச்சவர்.. நீ வடிதட்டானால்.. உனக்கு சக்கைதானே கண்ணுக்குத் தெரியும்.. முதலில் 'பகுத்தறிவு" எனும் கண்ணாடி போட்டுக் கொள்.. புரியும்
சோழியான் எழுதியது:02....
Quote:சினிமாவுக்குள்ளும் தமிழின உணர்வா ..
1. மேலே எழுதியது என்னவென்று உமக்கே விளங்குகிறதா?
2.ஏன் உதுக்கெல்லாம் தலைவரை ... ? கருத்தை வலுப்படுத்தவோ? ஆதரவாளர் எனும் போர்வை போர்ப்பதற்கா?
3. நீர் மேலெழுதியதற்கும் பகுத்தறிவிற்கும் என்ன சம்பந்தம்? இல்லை தெரிந்த வசனமெல்லாம் எழுத வேண்டுமென்று எழுதிப் போட்டீரோ?
4. நீர் எழுதியதை திரும்ப வாசித்துப் பாரும் சக்கை எங்கே கிடக்கென்று?
5. இதே தேசியத் தலைவர் தான் சினிமாவையே ஈழத்தில் ஏன், என்னத்திற்கு தடை செய்தவர் என்பது உமக்கு தெரியுமா?
சோழியான் எழுதியது:03
Quote:இங்கே புறக்கணிப்புக்குள்ளானது சினிமாவோ அல்லது கலைஞர்களோ அல்ல.. எம்மவர்களின் பண விரயம் மட்டுமே..! எம்மவர்களின் பணம் எமது தாயகத்துக்கு பயன்படவேண்டும் என்ற நல்ல எண்ணத்திலேயே புறக்கணிக்கப்பட்டது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.. இது தவறு என்றால்..
1. மெகா நைற் புறக்கணிக்கப்பட்டதானது பணத்திற்கு மட்டும் தானா என்பதை பழைய கருத்துக் களம் சென்று பாரும் புரியும்?
2. இந்த புறக்கணிப்பு சம்பந்தமான பிரித்தானிய பல்களைக்கழக மாணவர்களின் அறிக்கையை திரும்ப வாசியும் மீண்டும் தெளிவாக விளங்கும்?
3. அரை குறை தகவல்களுடன் தயவு செய்து எழுத வெளிக்கிட வேண்டாம்?
சோழியான் எழுதியது:04
Quote:எங்கே இந்த வித்துவான்கள் கூறட்டும் பார்ப்போம்.. யாராவது பங்களிக்காதவனை பங்களிக்க வைத்ததாக.. காரணம் இவர்கள் முன்மாதிரியாக நடந்து காட்டினால்தானே நிகழும்
சோழியான், நீர் இருப்பதோ வேறொரு நாட்டில், என்னைப்பற்றி ஏதும் தெரியுமா? தெரியாவிடில் எழுதாதேயடாப்பா? இனி களத்தில் வருபவர்கள் தங்களைப் பற்றி சுய விளம்பரம் செய்தல்லோ வரவேண்டும் போலக் கிடக்கின்றது?
சோழியான் எழுதியது:05
Quote:'தழிழ் உணர்வு" என்ற பதமானது.. பரமசிவன் கழுத்திலை இருக்கிற பல திறமையற்ற பாம்புகளுக்கு.
சோழியான் எழுதியது:06
Quote:திருமணம் தனிப்பட்ட நிகழ்ச்சி.. தனிப்பட்ட நிகழ்வு வேறு.. கலை என்பது வேறு.. ஒன்றுக்கு மற்றது உதவியாக இருக்கலாம்.. ஆனால் இரண்டும் வெவ்வேறு...
யாழ் களத்திலுள்ள தலைப்புக்கள் எமது கள, புல வாழ்வில் நன்மை, தீமைகளைப் பற்றி ஆராய்வதாகவும், அது சம்பந்தமான கருத்துக்களை பகிருவதாகவும் தானொன்று நினைக்கிறேன். அதி மாற்றுக் கருத்து இருக்காது என நினைக்கிறேன். அது சினிமாவாகட்டும் அல்லது எதுவாகட்டும்.
அரசியல்வாதியையோ, கலையுலகத்தை சேர்ந்தவர்களையோ, .. சமூகத்தில் "முன்னுதாரணகாரராகப்" பார்க்கப் படுபவர்கள். அவர்களுடைய தனிப்பட்ட வழக்கை மீடிமறைக்க முடியாதது. இதில் ஜெயலலிதாவோ, கிளின்டனோ, எம்.ஜி.ஆரோ, கமலகாசனோ,... இல்லை இந்த மீனாவோ தப்பமுடியாது. அதை விடுத்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, கலை வாழ்க்கை என எழுத நல்லாக இருக்கும், நிஜத்தில் வேறு!
எமது தமிழ் இளைஞனோ அல்லது யுவதியோ வேறொரு நாட்டை சேர்ந்த ஒருவரோடோ அல்லது வேறு மொழி பேசுபவரோடோ திரியவோ அல்லது திருமனம் செய்யவோ நாம் அனுமதிப்போமா?, ஆதரவேனும் கூட வழங்குவோமா? பதில் இல்லை என்று தான் வரும். ஏன் இல்லை? எதற்கு இல்லை என்கிறோம் .... இதைப் பார்த்து வேறு சிலரும் அப்படிப் போய் விடக்கூடாதென்பதற்காக!, அறியாமையினாலோ, வயசுக் கோளாறினாலோ செய்கிறார்கள் என்பதற்காக!....... அதே போலத்தான் இந்த சினி மோக திருமணங்களும் .. இதுவும் எமது புலப் பெயர்வின் சீரளிவுகளில் ஒன்று தான் .. . இது ஏன் தமிழர்களிடையே நடந்தால் மட்டும் வேதனைப் படுகின்றோம், தடுக்க முற்படுகின்றோம்!--- தமிழரல்லாத வேறொருவருக்கு நடந்தால் எமது உணர்வு அதே மாதிரியாகவா இருக்கும் ... பதில் இல்லவே இல்லை. அப்படியென்றால் அந்த உணர்வுதான் என்ன?
எம்மில் புலம் பெயர் வாழ்வில் நடக்கும் சீரழிவுகளை காவி வேட்டி கொண்டு மறைக்கும் உம் போன்றவர்கள் " பூனை கண்ணை மூடிக் கோண்டு ......... " கதை போலத்தான் நினைக்கிறீர்கள். இயன்ற மட்டும் மறைக்கப் பார்க்கிறீர்கள், ஆனால் ........................