Mathuran Wrote:vasisutha Wrote:ஏன்தான் இப்படி அடிபடுறீங்களே தெரியாது..
கமல் மும்பை எக்ஸ்பிரஸ் என்று ஏன் பெயர் வைத்தாரோ
யாருக்கு தெரியும்? ஒருவேளை படத்தில் அவரின் பெயர் தான்
மும்பை எக்ஸ்பிரஸ்சோ?? :roll: :roll:
கிறுக்கு தனமா அந்தாள் அப்படி பெயர் வைத்து கொண்டாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல.
<b>மதுரன் நாங்க நினைச்சது சரிதான்.. இதோ இன்றைய விகடனில் வந்த கமலின் பேட்டி.. :roll: .
------------------------
[b]சினிமாக்காரர்களை மிரட்ட அரசியல்வாதிகளுக்கு உரிமை உண்டு! </b>
<i>கமல் புது நியாயம்! </i>
எந்தக் கேள்வியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார். கமலின் அழகே அதுதான். பளிச் பளிச்சென வந்து விழுகின்றன பதில்கள்!
தடதடவென எக்ஸ்பிரஸ் வேகத்தில் தயாராகிற மும்பை எக்ஸ்பிரஸ் பட வேலைகளில் இருந்த கமலுடன் பேசியதிலிருந்து...
<b>மும்பை எக்ஸ்பிரஸ்... என்ன விசேஷம்? </b>
மும்பைதான் கதையின் களம். இந்தியாவின் வர்த்தக வாசல். குரோட்டன்ஸ் களும், போன்சாய்களும் வீட்டுக்குள் வளர்க்கிற நகரம். இந்தியாவின் மிகப் பெரிய குப்பம். விஞ்ஞானத்தின் எல்லா வாய்ப்புகளும் வசதிகளும் இருக்கிற... கிடைக்கிற இடம் மும்பை. ஆனாலும் அது பற்றி எதுவும் அறியாத சில கோடி மக்கள் தெருக்கோடியில் கிடக்கிற நகரம். வாழ்க்கையின் அற்புதங்களையும் அபத்தங்களையும் நையாண்டி பண்ணுகிற படம். சிரிச்சுட்டே சிந்திக்கலாம்.
நான் எக்ஸிபிஷன்ல மரணக்கிணற்றில் பைக் ஓட்டி வித்தை காட்டுற ஆளு.<span style='color:red'> என் பேரு அவினாசி. ஆனா, மும்பை எக்ஸ்பிரஸ்னுதான் என்னைக் கூப்பிடுவாங்க என் பைக்கும் இதில் ஒரு கேரக்டரா நடிச்சிருக்கு!
<b>படப்பிடிப்பில் மோட்டார் பைக் ஓட்டும்போது நிறைய ரிஸ்க் எடுத்தீங்களாமே? </b>
ரிஸ்க் இல்லாம வாழ்க்கை இல்லையே! நிறைய காட்சிகளை டூப் போட்டு பண்ணலாம்னு யோசனை சொன்னாங்க. ஆனா, சில விஷயங்களை நானே பண்ணலைன்னா எனக்குத் தூக்கம் வராது. அது என் பலம் அல்லது பலவீனம். எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளோடும் ஒரு ரிஸ்க்கான காட்சிக்குத் தயாரானேன். பைக்கில் என் பின்னால் ஒரு சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். பைக்ல சீறிக் கிளம்பினப்போ மிஸ் ஆகிட்டது. நான் மட்டும்னா தப்பிச்சிருப்பேன். பின்னாடி இருந்த பையனுக்கு எதுவும் ஆகிடக் கூடாதேனு அவன் விழாம கை வெச்சுத் தடுத்தபோது விழுந்து என் கை எலும்பில் ஃபிராக்சர்! கைய விடுங்க... அந்தக் காட்சி பிரமாதமாக வந்தது!
<b>திரும்பவும் உங்கள் படத்தின் பெயர் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கே?</b>
ஏன் இப்படி நடக்குதுனு எனக்கு நிஜமாவே புரியலை. சண்டியர் என்கிற தலைப்பு, ஓர் இனத்தைக் குறிக்குதுனு அப்போ அபத்தமா சொன்னாங்க. சண்டித்தனம் பண்ற யாரும் சண்டியர்தான்னு சொன்னேன்... அவங்க கேட்கலை. அதை அப்புறம் விருமாண்டினு மாற்றியதால் அந்தப் பேர் இன்னும் தெளிவாக, குறிப்பிட்ட ஓர் இனத்தை அடையாளம் காட்டியது. அப்புறம் வசூல்ராஜானு பேர் வெச்சதுக்கு டாக்டர்கள் எல்லாம் கோவிச்சுக்கிட்டாங்க. திருடானு கூப்பிட்டா இவங்க ஏன் திரும்பிப் பார்க்கிறாங்கனு தெரியலை. வசூல் பண்ற டாக்டரே இல்லையா? சாதாரண ஜனங்களிடம் போய்க் கேட்டுப் பாருங்கள்... எது உண்மை என பளிச்னு தெரியும். அந்தக் கலாட்டா முடிஞ்சுது... இப்போ அடுத்தது!
மும்பை எக்ஸ்பிரஸ்னு பேர் வெச்சேன். அது ஆங்கிலத் தலைப்புனு மாத்தச் சொல்றாங்க. நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த நினைக்கிறேன். குருதிப்புனல்னு பேர் வெச்சப்போ என்னை யாரும் பாராட்டலை. மஹா நதினு கூடச் சொல்லலை... மகாநதினு படம் எடுத்தவன் நான்.
இப்போ இந்தப் படத்தில் கதையே மும்பையைச் சுற்றித்தான் நடக்குது. என் பேரே படத்தில் அதுதான். அதுக்காக நிறைய செலவு செய்தாச்சு. திடீர்னு பேரை மாத்துப்பானு சொன்னா எப்படிங்க? முதல்வர் சினிமாவுக்கு ஆதரவா இந்த விஷயத்தில் அறிக்கை விட்டுட்டாங்க என்கிற தெம்பில் நான் இதைச் சொல்லல. வீம்பு பண்ற ஆள் இல்லை நான். நான் உண்மையான தமிழ்ப்பற்று உள்ள தமிழன். ஆனால், யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி சிறந்ததாக இருந்தாலும் என் தமிழ் மட்டுமே போதாது. ஆங்கிலம்தான் நான் மற்ற மாநில நண்பர்களுடன் தொடர்புகொள்கிற மொழி. வழக்கத்தில் இருக்கிற சொற்களை என்ன பண்ண முடியும்?
போராட்டம் நடத்தறவங்களோட முனைப்பு எனக்குப் புரிகிறது. ராகேஷ், ரோகேஷ்னு பிள்ளைகளுக்குப் பெயர் வைக்காமல் தமிழில் பெயர் சூட்டுவதிலிருந்து அதைத் தொடங்கலாம். தமிழ் வழியில் கல்வி, தமிழில் பேசுவது தவறில்லை என்பதையெல்லாம் கொண்டு வாருங்கள். அப்புறம் சினிமாவைப் பார்க்கலாம்! தமிழ் மேல் பற்று வைத்திருக்கிற என்னைத் தயவு செய்து எல்லோரோடவும் சேர்த்துடாதீங்க. கலைஞர் சொன்ன மாதிரி தமிழ்தான் எனக்கு வாள். அந்த வீச்சு எனக்கு உண்டு. ஆங்கிலம் கேடயம். அது தற்காப்புக்காக! இந்தப் படத்தின் பெயரையும் நான் மாத்திட்டா அப்புறம் இதெல்லாம் கேலிக்கூத்து மாதிரி ஆகிடும். போராடுகிறவர்களிடம் நான் சொல்லிக்கொள்வது இதுதான்... என்னைப் புரிந்துகொள்ளுங்கள்!ÕÕ
<b>சினிமாவும் அரசியலும் ஏன் இப்படி எதிரும் புதிருமா இருக்கு? </b>
இது ரொம்பப் பழசு! பராசக்தியில் பேசப்படாத அரசியலா? மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!னு பாடினார் எம்.ஜி.ஆர். எந்த மூன்றெழுத்து? அரசியலில் இருப்பவர்களை சினிமாவைப் பற்றிப் பேசாதேனு தடுக்க முடியாது. சினிமாவில் இருப்பவர்களையும் அரசியலுக்குப் போகாதீங்கனு நிறுத்த முடியாது. இப்போ பல படங்களில் நம் ஹீரோக்கள் ஸ்கிரீனைப் பார்த்து ஆவேசமா அரசியல் பேசறாங்க. பஞ்ச் டயலாக் விடறாங்களே!
முன்னே ஒரு முனைப்போட அரசியல் பேசினாங்க. இப்போ பல பேருக்கு சி.எம். ஆகணும்னு ஆசை. எல்லோரும் அரசியலில் மூக்கை நுழைப்பது அதிகமாகி விட்டது. அதுவும் ஒரு தொண்டனா ஆரம்பிச்சு படிப்படியா தலைவனா ஆகணும்னு நினைப்பதில்லை... ஆரம்பமே தலை தான்!
அதனால் அரசியலுக்குள் சினிமாவோ, சினிமாவுக்குள் அரசியலோ வரத்தான் செய்யும். சினிமாக்காரர்களை மிரட்ட அரசியல்வாதிகளுக்கும் உரிமை உண்டு. அது கருத்துச் சுதந்திரம். வரும்போது கனிவான விமர்சன மாக வந்தால் சரி... காழ்ப்புடன் வருவதுதான் பிரச்னை. ஏன் இவ்வளவு கடுமை காட்டறாங்கனு தோணுது!
<b>திருமணம் என்கிற சடங்கி லேயே உடன்பாடில்லைனு சொன்னீங்க! ஆனாலும், இரண்டு முறை திருமணம் செய்து பிரிஞ்சிருக்கீங்க?</b>
ஆமா! எனக்கு அதில் உடன்பாடில்லை, இப்போதும்! ஆனாலும், இந்தச் சமூகத்தில் வாழ வேண்டி, சில விஷயங்களை சமரசம் செய்துகொள்ள வேண்டியது தேவையாகிறது. அப்படி ஆனதுதான் என் கல்யாணம். இப்போ நாங்க பிரிஞ்சுட்டாலும், அப்போ இருந்த அன்பும் காதலும் பொய்யாகிவிடாது. நான் உண்மையாகக் காதலித்தேன். குழந்தைகள் பெற்றோம். எல்லாம் சரியாக இருந்தது போல் இருந்தது. பிறகு கருத்து வேறுபாடுகளால், தவிர்க்க முடியாததாகிவிட்டது பிரிவு!
<b>பிரிவைச் சரி பண்ணணும்னு தோணலையா?</b>
தோணாம எப்படி இருக்கும்? தவறுகளைச் சரி செய்வதுதானே வளர்ச்சி! குறைந்தபட்சம் தோல்வியையாவது ஒப்புக் கொண்டாகணும். Ôஹே ராம்Õ படம் சூப்பர் ஹிட்னு சொன்னா அது என்னை நானே ஏமாற்றிக்கொள்வது. அதுக்காக, அந்தப் படத்தை உழைப்பில்லாமல், ஈடுபாடு இல்லாமல் எடுத்ததாக அர்த்தமில்லை. சில தவறுகளைச் சரி செய்யலாம். சிலவற்றைச் செப்பனிட முடியாமலே போகும். என் திருமண வாழ்க்கை அப்படிச் செப்பனிட முடியாத ஒன்றாகிவிட்டது.
<b>பிரிவுக்குக் காரணம்தான் என்ன? </b>
ம்... சுருக்கமா சொல்லணும்னா ஈகோ!
<b>அவ்வப்போது ஏதாவது ஒரு பெண்ணுடன் இணைத்துப் பேசப்படுகிறீர்கள்... இப்போது புதிதாக கவுதமி! </b>
பெண்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது! நான் பெண்களோடு சேர்ந்து வளர்ந்தவன். அம்மா, பெரியம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலினு என்னைச் சுற்றி எப்போதும் பெண்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள்... இருப்பார்கள். எனக்குக் காதல் இன்னமும் இருக்கிறது. உணர்வுகள் இன்னும் இருக்கின்றன. இது மனித இயற்கை!
என்னைப் பற்றி எழுதப்படுவதைத் தவிர்க்கணும்னு கூட நான் நினைக்கலை. ஏனென்றால், நான் அடுத்தவர்களுக்காக வாழவில்லை!
</span>
thanks:
Vikatan.com