Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பேச்சு
#21
பரணி.. பணச்சடங்கு அந்தக் காலம்.. இப்ப இஞ்சை கொடுக்கிறதுக்கு மேலாலை.. சாப்பாடு.. சர்பத்.. சிற்றுண்டி.. வெள்ளி.. கும்பா.. தட்டு என்று தந்து வழியனுப்புறதுதான் சடங்காயிருக்கு.. ஆக.. குடுக்கிறதை நீட்டவே கூச்சமாயிருக்க.. இதுக்கை பரணி வேறை..
.
Reply
#22
இந்த நிகழ்வு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது யாருக்குமே தெரியாதா ?

பின்பு எதற்காக அதைக்கொச்சைப்படுத்துகின்றீர்கள்.
[b] ?
Reply
#23
Karavai Paranee Wrote:<b>இந்த நிகழ்வு எதற்காக ஆரம்பிக்கப்பட்டது யாருக்குமே தெரியாதா ?</b>
.

பரணி

எதைக் கேட்கிறீர்கள்? சாமத்தியச் சடங்கைத்தானே!

உண்மையில் சாமத்தியச்சடங்கை பெண்களைக் காட்சிப் பொருளாக்கும் கோலாகலமான விழாவாகக் கொண்டாடும் பெரும்பான்மையான பெற்றோர்களில் யாருக்குமே இதன் காரணம் தெரியாது.

நானும் பலருடன் இது பற்றிப் பேசிப் பார்த்து விட்டேன். திடமான சரியான பதில் என்பது இதுவரை கிடைக்கவில்லை.

சில தேடல்கள் செய்ததில் வேறுபட்ட பல கருத்துக்கள் அவ்வப்போது கிடைத்தன
அவைகளைச் சமயம் வரும் போது தர முயற்சிக்கிறேன்.

தற்போதைக்கு தமிழீழத்தில் இருந்து அர்த்தநாரி தந்த ஒரு கருத்தைத் தருகிறேன்.


[b]சாமத்தியச் சடங்கு
[b]வளரிளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும் அழைக்கப்படும் இச்சடங்கு, குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு மாறும் ஒரு இடைக்கட்டத் தொழிற்பாடுகள் குழந்தையின் உடற் தொழிற்பாட்டில் ஏற்படும் இயல்பான ஒரு மாற்றத்தை ஊரறியச் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் ஒரு சடங்காகும். 'பெண் கரு உற்பத்திக்கு தயாராகிவிட்டாள்' என்பதை ஊரறிய தம்பட்டம் அடிப்பதே இச்சடங்கு கொண்டாடூடப்படுவதன் அடிப்படை நோக்கமாகும். குடும்பத்தின் பொருளாதார வசதிக்கேற்ப சடங்கின் பரிமாணமும் கூடிக்குறையும்.
- தமிழீழத்தில் இருந்து அர்த்தநாரி -
Nadpudan
Chandravathanaa
Reply
#24
நன்றி சந்திரவதனா அக்கா

இந்த சடங்கைப்பற்றி பல நண்பர்களுடன் கருத்துக்கள் கேட்டபோது ( இங்கு திருணமானவர்கள் ஆகாதவர்கள் என பலர் பதிலளித்துள்ளார்கள் ) அவர்களின் கருத்துக்கள் இதோ . .

1)
ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டாள் என்பதை மற்றவர்களிற்கு தெரியப்படுத்தும் ஒரு நிகழ்வு

2)
பெண்ணிற்கான ஒரு தனித்துவத்தை மற்றவர்கள் மத்தியில் இருந்து இந்த பெண்ணை வேறுபடுத்திவைப்பதற்கு மற்றவர்களிற்கு இவள் பருவமடைந்த பெண் என்பதை இனம்காட்டிக்கொள்வதற்கான நிகழ்வு

3)
பருவமடைந்த மங்கையை பெரியவர்களின் ஆசிர்வாதம் பெறச்செய்வதற்கான நிகழ்வு

4)
பெண் பருவமடைந்துவிட்டால் சில தீட்டுக்கள் ஏற்படுகின்றன என்பதால் அவற்றை கழித்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வு

5)
இந்த வீட்டில் ஒரு பருவப்பெண் இருக்கின்றாள். இனிமேல் இங்கு ஒரு வித்தியாசமான பார்வை இருக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவது. அதாவது முன்னைய காலத்தில் வீடுகளிற்கு எல்லைகள் எல்லையாம். எல்லாமே திறந்தவெளியில் குடிசைகளாக தோன்றிய காலம். அந்த நிலையில் ஒரு பெண் பருவமடைந்து விட்டாள் என்றால் அந்த வீட்டிற்கு ஆடவர்கள் போய்வருவதை தடுப்பதற்கு ஒரு அறிவிப்பு

மேலே கூறிய கருத்துக்கள் எனக்குத்தெரிந்த நண்பர்கள் கூறியவை.

இனி உங்கள் தெரிவுகள். எனினும் எனக்கு இவற்றில் ஏற்ககூடியது

2 வதும் 3 வதும்தான்
[b] ?
Reply
#25
<b>யேர்மனிய மருத்துவர்கள் கூறுகிறார்கள் -</b>
<b>ருதுவாகும் பருவத்தில் ஒரு பெண் பிள்ளையின் உளத்திலும் உடலிலும் பல் வேறு மாறுதல்கள் ஏற்பட்டு அவள் ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளப் படுகிறாள். இந்த அசாதாரண நிலை அவள் மனதை மேலும் குழப்பாத வகையில் பெற்றோர்கள் இது சாதாரண விடயந்தான் என்பதை அவளுக்கு விளங்கப் படுத்த வேண்டும். தாழ்வு மனப்பான்மையோ தற்பயமோ அவளுக்கு ஏற்படாத வகையில் அவளுடன் நிறையப் பேச வேண்டும். ஆதரவுடன் நடக்க வேண்டும் என்றும்..
இந்த நேரத்திலான அவளின் உடலின் அதீத வளர்ச்சியினால் அவள் தோள்மூட்டுகளிலும் முதுகுப் பகுதியிலும் ஏற்படும் உபாதைகளின் தன்மையை உணர்ந்து அவளுக்குத் தாராளமான ஓய்வைக் கொடுக்க வேண்டும்.
அவளின் தோள்மூட்டுக்களும் முதுகும் வலுப்பெறக் கூடிய வகையில் சில உடற் பயிற்சிகளை அவள் செய்ய வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று</b>..

<b>யேர்மனியப் பாடசாலை உளவியல் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.</b>.
<b>பூப்படையும் நிகழ்வை சாதாரண நிகழ்வாக எடுக்காமல் இப்படிப் பெருவிழாவாகக் கொண்டாடிப் பெரிது படுத்தும் போது அது அந்தப் பெண்பிள்ளைகளின் மனதில் பல்வேறு பட்ட சலனங்களையும் உளவியற் தாக்கங்களையும் ஏற்படுத்தி அந்தப் பிள்ளைகளைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்ல வழி கோலுகின்றது என்று..</b>

ஆனால் இங்கே புலத்தில் என்ன நடைமுறைப் படுத்தப் படுகிறது? பல அத்தியாவசியத் தேவைகளை பெண்பிள்ளைகள் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் அத்தனையையும் விடுத்து வெறுமே சாமத்தியச் சடங்கு என்ற பெருவிழா நடாத்தப் படுகிறது. <b>இப்படிச் செய்வதால் அந்தப் பெண்பிள்ளைகள் என்ன பயனைப் பெறுகிறார்கள்? </b>

<b>இதைச் சண்டையாகவோ ஆண் பெண் பாலாருக்கிடையிலான விவாதமாகவோ எண்ணாமல் யதார்த்தமாக எல்லாப் பெற்றோர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்</b>.

யேர்மனிய மருத்துவர்கள் கூறிய இந்த ஆதரவுகள் பெற்றோர்களிடமிருந்து கிடைக்காத பட்சத்தில்தான் பெண்பிள்ளைகள் மற்றவர்கள் மேல் கோபப் படுபவர்களாகவும் எரிச்சால் படுபவர்களாகவும் காணப்படுகிறார்கள். அல்லாதுவிடில் அழுமூஞ்சிகளாகி விடுகிறார்கள்.

இந்த உடல் ரீதியான மாறுதல்கள் ஆண்களிடமும் ஏற்படுகிறதுதான். அது சற்று வேறுபாடானதாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த நேரத்தில் அன்பு ஆறுதல் அரவணைப்பு என்பன தேவைப் படுகின்றன. அது கிடைக்காத பட்சத்தில்தான் அவர்களும் எரிச்சல், கோபம், மௌனம் என்பவற்றிற்கு ஆளாகிறார்கள். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு வெளியில் செல்லவும் அவர்கள் விரும்பியதைச் செய்யவும் தாராளமான சுதந்திரம் இருப்பதால் பெண்பிள்ளைகளிடம் ஏற்படுமளவுக்கு பாதிப்பு ஆண்பிள்ளைகளிடம் ஏற்படுவதில்லை.

அதனால் முக்கியமாக கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்பிள்ளைகளைக் கட்டி வைக்கும் எமது சமூக அமைப்பில் வளர்ந்து கொண்டிருக்கும் எமது பெண்பிள்ளைகளுக்கு இந்த சமயத்தில் பெற்றோரினது அன்பும் முழு ஆதரவும் தேவை என்பதை தமிழ்ப் பெற்றோர்கள் மறந்து விடவோ அலட்சியப் படுத்தி விடவோ கூடாது.

<b>சந்திரவதனா செல்வகுமாரன்
யேர்மனி</b>




Nadpudan
Chandravathanaa
Reply
#26
சாமத்தியச் சடங்கு

மாதவிடாய் ஆரம்பமாவது பெண்குழந்தையின் வளர்ச்சியில் மிகவும் முக்கியத்துவமான நிகழ்வாகும். வளர்ச்சியடையும் போது வேறு மாற்றங்களும் நடைபெறுகின்றன. ஆண்பிள்ளைகளினதைப் போலல்லாமல் பெண்பிள்ளைகளின் குரல் மெலிவடைந்து ஆழமாகும். உடலின் இரத்த அழுத்தம், செங்குருதி சிறுதுணிக்கைகளின் அளவு விருத்தியடைதல், உடலின் வெப்பநிலை குறைதல், மூச்சு விடுதல் மிகவும் இலேசாக நடைபெறுதல், எலும்புகள் வலுப்படுதல் போன்றன இக்காலத்தில் நடைபெறுவதாகும். ஆண் குழந்தை பருவ வயதிற்கு வரும்போது உடலின் உட்பகுதியிலும் அதேபோல் வெளித்தோற்றத்திலும் மாற்றங்கள் நடைபெறும். இக்காலத்தில் முகத்தில் மயிர் முளைப்பதுடன் குரல் ஆழமாவதையும் எம்மால் கண்டுகொள்ள முடியும். ஆண் குழந்தையின் உடலின் உட்பகுதியிலும் இக்காலத்தில் இன விருத்திக்கான செயற்பாட்டில் கலந்து கொள்வதற்காக விதைச் சுரப்பிகளில் விந்துக்கள் உற்பத்தியாவது ஆரம்பமாகும்.

பெண்குழந்தையின் வளர்ச்சி சம்பந்தமாக பிழையான ஐதீகங்களும் அவற்றால் உண்டான சடங்குகளும் இலங்கைச் சமூகத்தில் காணப்படுகின்றன. எனினும் ஆண் குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்புபட்ட விசேட சடங்குகள் என எதுவும் கிடையாது. பெண் குழந்தையின் முதலாவது மாதவிடாய் வெளியேற்றமானது சாமத்தியடைதல், பூப்பெய்தல், பருவடைதல், பெரிய பிள்ளையாதல் எனும் பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் நமது கிராமப்புறங்களை போன்றே நகர்ப்புறங்களிலும் நடைபெறும் சில சடங்குகள் பின்வருமாறு:

சிறுமியை வீட்டின் தனியான பகுதியிலோ, தனி அறையிலே தனிமைப்படுத்தி வைத்தல்.

அவளது துணைக்கு ஒரு பெண்ணையோ ஒரு சிறுமியையோ வைத்தல் (குளிக்கும் வரை சிறுமி இவ்வறையிலேயே இருக்க வேண்டும்)

சிறுமியின் அருகில் இரும்பு ஆயுதமொன்றை (கத்தி) வைத்தல்

சிறுமி மலசலகூடத்திற்கு செல்லும்போது அதையும் கொண்டு செல்லல் (இது பேய் பிசாசுகளிடமிருந்து தற்காத்து கொள்வதற்காகும்)

உடனடியாக பெற்றோர் சோதிடரை அணுகி சிறுமி வயதிற்கு வந்த நேரத்தைப் பார்த்து பலன் கேட்பர். (இதில் சிறுமியை குளிப்பாட்டுவதற்கு ஏற்ற சுபநாளும் நேரமும் பார்ப்பதும் நடைபெறும்.)

குளிப்பாட்டும் நாள்வரையும் தேங்காய்ப்பால் சேர்க்காது உணவு கொடுத்தல். மீன், இறைச்சி, எண்ணெய் சேர்ந்த பொரித்த உணவுகளை கொடுக்காமல் விடுவது.

சுபநேரத்தில் சலவைத் தொழில் செய்யும் பெண்ணைக்கொண்டு சிறுமியைக் குளிப்பாட்டுவது (சிறுமி பருவமையும் நேரத்தில் உடுத்தியிருந்த உடைகள் ஆபரணங்கள் போன்றவற்றைக் குளிப்பாட்டிய பெண்ணுக்கே கொடுப்பது)

குளிப்பாட்டும் நாளில் பாற்சோறு, பலகாரம், இனிப்புப்பண்டங்கள் போன்ற உணவுவகைகளைத் தயாரித்தல்.

குளிப்பாட்டிய பின் சிறுமிக்கு புத்தாடை அணிவிப்பது.

சில பிரதேசங்களைச் சார்ந்த சில குடும்பங்களில் சிறுமி 3ம் மாதம் வரையும் சலவை செய்யும் பெண் கொண்டுவரும் உடைகளையே உடுத்த வேண்டும்.

சிலர் சிறுமியை குளிப்பாட்டிய பின் சடங்கு செய்வர். இதை சாமத்திய சடங்கு என அழைப்பர்.

இந்த விருந்துக்கு தூர இடங்களிலிருந்தும் உறவினர் நண்பர்களை அழைப்பர். அவர்கள் சிறுமிக்கு பரிசுகளுடன் வருவர்.

கடந்த பல வருடங்களாக நான் மேற்கண்டவாறு சாமத்தியச் சடங்குகளை நடத்திய தாய்மார் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் (70வீதம் வரை) பருவடையும் போது என்ன நடக்கிறது என்பதை தமது மகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இதைப்பற்றிய தெளிவான அறிவு தாய்மாரிடமும் இல்லை. ஓரளவு கல்விகற்ற சில தாய்மார்களிடமே ஓரளவு தெளிவு இருந்தது. எனினும் தமது மகளுக்கு சரியான முறையில் விளக்கப்படுத்தும் அளவுக்கு அவர்களிடம் ஆற்றல் கிடையாது. பெரும்பாலான தாய்மார் தமது மகளுக்குக் கூறிய அறிவுரை "இதன் பிறகு ஆண்களிடம் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்" என்பதாகும்.

விரைவான உடல் வளர்ச்சியினால் 18-19 வயதுகள் வரும் வரையும் அவளினுள் உளவியல் ரீதியாகவும் மாற்றம் ஏற்படலாம் என்பது பற்றி எதுவித அக்கறையும் எடுத்துக் கொள்ளப்படாதது தெரிந்தது. பெண் குழந்தைகளின் முதல் மாதவிடாய் வெளியேற்றம் தொடர்பான சடங்குகள், சம்பிரதாயங்கள் இன்று பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. பெண்ணுடலைப் பற்றி சரியான விஞ்ஞான பூர்மான அறிவின்மையே இந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அடிப்படையாகும். பெண்ணின் உடல், உள வளர்ச்சியின் மிகவும் தீர்க்கமான காலப்பகுதியான இந்தப் பருவ வயதில் சிறுமிகள் மத்தியில் அவர்கள் உடலைப்பற்றிய பிழையான எண்ணக் கருத்துக்களை ஏற்படுத்துவதும் பெரியவர்கள் தம் எண்ணப்படி காலங்கடந்த சடங்கு சம்பிரதாயங்களுக்கு அவர்களை உட்படுத்துவதும், பிற்காலத்தில் பெண் என்ற முறையில் அவளது உடலைப்பற்றிய பிழையான கருத்துக்கள் மிக ஆழமாக அவளுள் வேரூன்ற காரணமாயுள்ளது. அவ்வாறே தமது சகோதரனைவிட அல்லது பெண் என்ற முறையில் ஆண்களைவிட தாம் கீழானவர்கள் எனும் உணர்வு சிறுமிகளிடம் ஏற்பட இந்த சடங்குகள் காரணமாகின்றன.

மாதவிடாய் ஏற்பட்ட மகளை பல நாட்களுக்கு வீட்டுக்குள் அடைத்த வைத்திருப்பது ஏன்? மகனின் குரல் மாற்றமடையும் போது முகத்தில் தாடி, மீசை முளைக்கும் போது மகனை பல நாட்களுக்கு விலக்கி வைத்திருப்பார்களா? மாதவிடாய் ”தீட்டு” எனும் கருத்தை மகளுக்கு மாத்திரம் கொடுப்பது ஏன்?

மாதவிடாய் என்பது சூலகங்களின் முதிராத முட்டையுடன் கருப்பைச்சுவரும் இரத்தமும் சேர்ந்து வெளியேறுவதாகும். பெண் உடலில் கருப்பை இல்லாவிட்டால் குழந்தை உற்பத்தி செய்யமுடியாது. பெண்களின் மாதவிடாய் அசுத்தம் என்று கூறும், அக்கருத்தை ஏற்றுக்கொண்டு பின்பற்றும் பரிசுத்தவான்கள் இவ்வுலகத்திற்கு வந்தது தாய் வயிற்றின் மூலமாயில்லையா?

உணவுகளில் தடை விதிப்பதன் மூலம், முதலாவது மாதவிடாய் வெளியேற்றத்தை ஒரு நோயெனக் கருத சிறுமியைத் தூண்டுவதாகும். உண்மையிலேயே உடல் மிகத் துரிதமாக வளர்ச்சியடையும் இந்நாட்களில் வேறு நாட்களையும் விட போசாக்கான உணவுகளை சிறுமிக்குக் கொடுக்க வேண்டும். முதலாவது மாதவிடாய் ஏற்படும்போது சிறுமியை பேய் பூதங்களிலிருந்து காப்பாற்ற வேண்டும் எனும் உணர்வை ஒரு குழந்தையின் மனதில் ஏற்படுத்துவது அவளது எதிர்கால வாழ்விற்கு மிகவும் பாதகமாகும். பிற்காலத்தில் ஏற்படும் சில நோய்களுக்குக் காரணம் வயதிற்கு வந்த நாளில் ஏற்பட்ட தனிமையே (கெட்ட பார்வை) எனக் கருதும் பெண்களும் இந்நாட்டில் இருக்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் இலங்கையின் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் ஆய்வுநடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இவ்வாறு கருதும் பெண்களை பெருமளவில் நான் சந்திக்கநேர்ந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் கல்வி பெறாத வறிய பெண்களாகும். தனிமை (கெட்ட பார்வை) பற்றியுள்ள ஆழமான நம்பிக்கையினால் தேவையான வைத்திய பரிகாரத்தைப் பெற்றுக்கொள்ள அவர்கள் முயல்வது சாத்தியமில்லாத ஒன்றென எனக்கு விளங்கியது. வறுமைக்கும் கல்வியறிவின்மைக்கும் அடுத்ததாக பெண் உடலைப்பற்றி ஐதீகங்கள் அவர்களது வாழ்வின் சாபமாய் உள்ளது மிகத் துயரமானதொன்றாகும். சாமத்தியச் சடங்குகளை பின்பற்றுவது ஏன் என பெருந்தொகையான தாய்மார்களிடம் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுபற்றி அவர்களிடமிருந்து கிடைத்த காரணங்களை கீழே தருகின்றேன்.

"எனக்குத் தெரியும் இந்த சடங்கள் பிழையானவை என நான் மற்ற நாட்களில் போன்றே மகளுக்கு உணவு கொடுத்தேன் எனினும் எனது அயலவர்கள் இதற்காக என்மீது மிகவும் குறைகூறினார்கள். அப்படியிருக்க நான் யாருக்கும் தெரியாமல் மகளுக்கு நன்றாக உணவளித்தேன். நேரம் பார்ப்பது பொய்யான காரியம் என நான் மகளின் தந்தைக்குக் கூறினேன். நேரம் பார்க்காதுவிடுவது சரியில்லையெனக் கூறிய அவர் தானே சென்று நேரம் பார்த்துக் கொண்டு வந்தார்."(மருத்துவத் தாதி)

"யாருக்கும் இது பற்றி அறிவிக்க நான் விருப்பப்படவில்லை. எனது அண்ணன் கொண்டாட்டம் நடத்த வேண்டும் என வற்புறுத்தினார். அதனாலேயே கொண்டாட்டம் நடத்த நேர்ந்தது." (தொழிலாளப் பெண். இவளின் மகளுக்கு தந்தை இல்லை)

"நான் சடங்குகளை நம்புவதில்லை. எனினும் எனது மாமியாரின் தொந்தரவினால் இதைச் செய்யாமல்விட முடியவில்லை"(ஆசிரியை)

"எமது வாழ்வில் மகிழ்ச்சியான வைபவங்களில் பங்குபெற வாய்ப்பில்லை. எமக்கு இருந்திருந்தென்றாலும் கொண்டாட்டங்கள் தேவை. அதனாலேயே நாம் மகள் வயதுக்கு வந்ததை கொண்டாடினோம்." (இதைச் சொன்னவர் ஒரு தந்தை)

சாமத்தியச் சடங்குகளை விமர்சிக்கதவர்கள் கூட நேர்மையாக அவற்றை எதிர்க்காததும், பிழையான கருத்துக்களை நிராகரித்துப்போகும் சக்தியும் தைரியமும் அவர்களுக்கு இல்லாததும் மேற்குறிப்பிட்ட அவர்களது கருத்துக்களில் இருந்து தெரிய வருகின்றது.

சாமத்திய சடங்கு வைபவங்களுக்கு அழைக்கப்பட்டு அவற்றில் பங்கு பற்றிய பலருடன் இதுபற்றிக் கருத்துக்கேட்டேன். அவர்கள் சொன்னவற்றைக் கீழே தருகின்றேன்.

"மகள் வயதுக்கு வந்துவிட்டாள் என ஆண்களான எம்மை சடங்குக்கு அழைப்பது எத்தனை வெட்கங்கெட்ட செயலாகும். ? தமது மகளைப் பற்றிய இத்தகைய விடயத்தை பெற்றார் இன்னொருவருக்கு சொல்வது எப்படி? எமது சமூகம் எவ்வளவு தூரம் சீரழிந்து விட்டது என்பதனையே இது காட்டுகின்றது."(விவசாயி)

சாமத்திய வைபவங்களை நடத்துவதன் முதற்காரணம் பணமும் பரிசுகளும் சேகரிப்பதற்காகும். பணத்திற்கும் வெளிப்பகட்டுக்கும் நமது சமூகம் எவ்வளவு தூரம் உட்பட்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. (தொழிலாளி)

"பெரும்பாலானவர்கள் தமது குறைபாடுகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே சாமத்தியச் சடங்கு வைபவங்களை நடத்துகிறார்கள். மகளைக் காரணமாய்க் கொண்டு பரிசுகள் சேகரிப்பதை அருவறுக்காமல் செய்கிறார்கள்." (ஆசிரியை)

"சுருங்கக் கூறின் சாமத்தியச் சடங்கென்பது சுருக்கமாக பொருள் சேகரிப்பதற்காக செய்யும் ஒரு ஒரு காரியமாகும். பெண் மகளை இப்படியாக விற்கும் ஒரு சமூகம் ஏன் பெண்ணின் ஒழுக்கத்தை இவ்வளவு தூரம் தேடுகிறது? ஏழைப் பெண்கள் விபச்சாரத்திற்கு செல்வது இயலாமையினாலாகும். சாமத்தியச் சடங்கு நடாத்தும் சமூகம் ஏன் விபச்சாரியை அசிங்கமாகப் பார்க்கின்றது. பெண்மகளை முதன்மைப்படுத்தி பொருள் பண்டம் பெற்றுக்கொள்வது விபச்சாரம் இல்லையா?"(தொழிலாளப் பெண்)

பெண்ணைப் பற்றியும் பெண் உடலைப்பற்றியும் நிலவிடும் கருத்துக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அதேபோல் சாமத்தியச் சடங்குகள் மூலம் வெளிப்படுவது எமது சமுதாயத்தில் பெண்கள் பற்றியுள்ள பரஸ்பர விரோதமான சிந்தனையாகும். சாமத்தியப்படுவது தீட்டானது. அசுரத்தனமானது என்பது வெறும் நம்பிக்கையாகும். அப்படி நம்புவர்களே அதன்பிறகு அதற்காக கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.

உடல் சம்பந்தமான இத்தகைய பித்தலாட்டங்களுக்கு இளம் பெண்பிள்ளைகளை உட்படுத்துவது மிகவும் அநீதியானதாகும். வளர்ந்து வரும் பெண் பிள்ளைக்கு பெற்றோரினால் ஆற்றப்படவேண்டிய கடமைகளிலொன்று உடல் - உள வளர்ச்சி பற்றி சரியான வயதில் (அவளது வளர்ச்சி வெளிப்படையாகத் தெரியும்போது, சாதாரணமாக அவளது வயது 11ஆக இருக்கும் போது) முறையாக சொல்லிக் கொடுப்பதாகும். முதலாவாது மாதவிடாய் வெளியாகி தமது வாலிபப் பருவத்தைத் தாண்டுமளவும் (வயது 19 -20) உடலில் ஹோமோன் மாற்றமடைவது நடைபெறும். இதனால் சிறுமியொருத்திக்கு பல்வேறு உடலியல், உளவியல் பிரச்சனைகள் ஏற்பட இடமுண்டு. இந்தப்பிரச்சனைகளை விளங்கிக்கொள்ளவும் அவற்றிற்கு முகம் கொடுக்கவும் அவளுக்குள் அவளது உடல்பற்றி, விசேசமாக பாலுறுப்பின் அமைவு பற்றியும், குழந்தையுற்பத்தி செயற்பாடு பற்றியும் முறையான விஞ்ஞானபூர்வமான விளக்கம் இருக்க வேண்டும். அவளை இது தொடர்பாக அறிவூட்டுவது விசேடமாக பெற்றோர், ஆசிரியர்களது கடமையாகும். தமது உடலைப்பற்றிய முறையான, சாதகமான, நன்மையான கருத்துக்களை சிறுமிகளிடம் ஏற்படுத்துவது, தன்னம்பிக்கையுடனும் ஆத்ம கௌரவத்துடனும் கூடிய சுயாதீனமான பெண்கள் சமூகமொன்றை இந்நாட்டில் உருவாக்குவதற்கு மிக அத்தியாவசியமானதாகும்.

இன்று உலகெங்கிலுமுள்ள பெண்கள் சர்வதேச அளவில் தமது ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்புகிறார்கள். பெண் உடல் பற்றிய எல்லாவிதமான மூட நம்பிக்கைகளையும் ஐதீகங்களையும் நவீன விஞ்ஞானத்தின் மூலமாயும் பெண்விடுதலை இயக்கத்தினூடாகவும் வெற்றிகரமாக உடைத்துள்ளார்கள். இத்தகைய சகாப்த்தத்தில், சிறுமியொருத்திக்கு முதன்முதல் மாதவிடாய் வெளியேற்றம் ஏற்படுகையில் சடங்குகள் செய்வது அர்த்தமில்லாதது. பெண் உடல் சம்பந்தமான வெற்றுத்தனமான சாமத்தியச் சடங்குகள் எவ்விதத்திலும் அவசியமற்றவை.


நன்றி - பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு
Reply
#27
இங்கு இச்சடங்குகள் மிகக் குறைவு.. எனக்குத்தெரிய நடந்தது ஒன்றுதான்.. எட்டு அல்லது 9 வருடத்துக்கு முதல் அவர்களது வீட்டிலேயே.. நடந்தது.. எனக்கும் அழைப்பு வந்தது.. நான் போகவில்லை. பெற்ரோரை கண்டிப்போமா என்று தோன்றியது.. இருந்தும் பேசாமல் இருந்துவிட்டேன்..அது நல்லதாகவே படுகின்றது.. அவர்களது சுதந்திரத்தைப் பறிக்க நான் யார்..? அவர்கள் கொடுத்தாலென்ன வாங்கினாலென்ன.. காஞ்சிபுரம் பட்டணிந்து நகையணிந்து எனது பெண் வயதுக்கு வந்துவிட்டாள் கருத்தரிக்கும் வயதுக்கு வந்துவிட்டாளென பறையடித்தாலென்ன.. அவர்கள் சந்தோஷத்தில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை.. கூனினாள் குறுகினாள்.. என்ற பேச்சுக்கே இடம்வைக்காது.. பிள்ளை பாதிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லாது யுூனியில் கடைசியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.

மேலும் சம்பந்தப்பட்ட தாய் தகப்பன் சகோதரங்கள் நெருங்கிய நண்பர்களை மட்டும் வரவழைத்து நடக்கும் கொண்டாட்டங்கள் பலவும் நடக்கின்றன.. இதனால்கூட எந்தவித பாதிப்பும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை..

கருத்தரிப்பது இயற்கையானது.. அந்தந்த வயதில் அவையும் நடைபெறவேண்டும்.. ஐவிஎ.ப் ரெஸ்ரியுூப்.. கோவில்களென திரிவதை விட அது மிகவும் ஆரோக்கியமானதும்.. முக்கிமானதுமாகும்.. ஒவ்வொரு குடும்பத்திலும் 6-8 பிள்ளைகளென்பதால்தான்.. நமது சமூகம் சமூகமாயிருந்தது..

படங்களில் செய்யடும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்போல.. தனிமைப்படுத்தி கிடுகுக்கொட்டிலமைத்து சிறைவைத்து கத்தி பொல்லு உரல் உலக்கையுடன் சடங்குகள் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை.. அப்படி நடந்தாலும் அவர்களது நம்பிக்கையில் குறுக்கிட எனக்கு எந்தவித உரிமையுமில்லை..

சடங்கு நாடாத்தினாலென்ன காஞ்சிபுரம் உடுத்தாலென்ன.. பணம் பொருள்.. குடுத்தாலென்ன வாங்கினாலென்ன.. அவர்களது. சந்தோஷத்தில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை..

மேற்குலக நாடுகள் எதுவும் இதற்கெதிராக சட்டம் கொண்டுவரவுமில்லை.. இதனால் அடிமையாக்கப்படுகிறாள் என்று கூக்குரலிடவுமில்லை.. நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
#28
இங்கு இச்சடங்குகள் மிகக் குறைவு.. எனக்குத்தெரிய நடந்தது ஒன்றுதான். எட்டு அல்லது 9 வருடத்துக்கு முதல் அவர்களது வீட்டிலேயே நடந்தது. எனக்கும் அழைப்பு வந்தது. நான் போகவில்லை. பெற்ரோரை கண்டிப்போமா என்று தோன்றியது. இருந்தும் பேசாமல் இருந்துவிட்டேன்.. அது நல்லதாகவே படுகின்றது. அவர்களது சுதந்திரத்தைப் பறிக்க நான் யார்..? அவர்கள் கொடுத்தாலென்ன வாங்கினாலென்ன காஞ்சிபுரம் பட்டணிந்து நகையணிந்து எனது பெண் வயதுக்கு வந்துவிட்டாள் கருத்தரிக்கும் வயதுக்கு வந்துவிட்டாளென பறையடித்தாலென்ன அவர்கள் சந்தோஷத்தில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை. கூனினாள் குறுகினாள் என்ற பேச்சுக்கே இடம்வைக்காது.. பிள்ளை பாதிக்கப்பட்டது என்ற பேச்சுக்கே இடமில்லாது யுூனியில் கடைசியாண்டு படித்துக்கொண்டிருக்கிறாள்.

மேலும் சம்பந்தப்பட்ட தாய் தகப்பன் சகோதரங்கள் நெருங்கிய நண்பர்களை மட்டும் வரவழைத்து நடக்கும் கொண்டாட்டங்கள் பலவும் நடக்கின்றன. இதனால்கூட எந்தவித பாதிப்பும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை.

கருத்தரிப்பது இயற்கையானது. அந்தந்த வயதில் அவையும் நடைபெறவேண்டும். ஐவிஎ.ப் ரெஸ்ரியுூப் கோவில்களென திரிவதை விட அது மிகவும் ஆரோக்கியமானதும்.. முக்கிமானதுமாகும். ஒவ்வொரு குடும்பத்திலும் 6-8 பிள்ளைகளென்பதால்தான் நமது சமூகம் சமூகமாயிருந்தது.

படங்களில் செய்யடும் மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள்போல தனிமைப்படுத்தி கிடுகுக்கொட்டிலமைத்து சிறைவைத்து கத்தி பொல்லு உரல் உலக்கையுடன் சடங்குகள் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படி நடந்தாலும் அவர்களது நம்பிக்கையில் குறுக்கிட எனக்கு எந்தவித உரிமையுமில்லை.

சடங்கு நாடாத்தினாலென்ன.. காஞ்சிபுரம் உடுத்தாலென்ன.. பணம் பொருள் குடுத்தாலென்ன வாங்கினாலென்ன.. அவர்களது. சந்தோஷத்தில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை.

மேற்குலக நாடுகள் எதுவும் இதற்கெதிராக சட்டம் கொண்டுவரவுமில்லை.. இதனால் அடிமையாக்கப்படுகிறாள் என்று கூக்குரலிடவுமில்லை.

அன்பும் ஆதரவும் இருந்தமையால்தான் எமது பெற்றோர் தாங்கள் அங்கிருந்துகொண்டு எம்மை இங்கனுப்பி நம்மையும் பெற்ரோராக்கியுள்ளார்கள நாமும் எமது கணிப்பில் சுயசிந்தனையுடன் செயற்பட்டு ஒருபிள்ளையோ இரண்டு பிள்ளையோ.. பிள்ளைகள் எந்த மொழி போசுகின்றார்களோ பெற்ரோராகியிருக்கிறோம்.

மேலும் சடங்கு நடந்த பிள்ளைகள் எதுவும் சோடைபோனதாக இங்கு சரித்திரமில்லை. லண்டனில் கிறமர் ஸ்கூல்சரி யுூனிகள்சரி அத்தனையிலும் தமிழ்ப்பிள்ளைகள் நிரம்பி வழிகின்றனர். இத்தனைக்கும் பலருக்கும் குடும்பத்தினரை சகோதரங்களை மாத்திரம் வரவழைத்து சிறியமுறையில் சடங்குகள் நடைபெற்றுத்தானிருக்கிறது..
நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
#29
ஆண்களுக்கும் முகச்சவரம் எடுத்து.. காதில் கடுக்கன் மாட்டும் சடங்கு நிகழ்ந்ததாக கேள்விப்படுகிறேன்.. ஆனால் அனுபவரீதியாக காணவில்லையே?!
.
Reply
#30
தகவலிற்கு நன்றி மோகன் அண்ணா

தாத்ஸிற்கும் நன்றி


அன்றிலிருந்து இன்றுவரை முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்டது பணவருவாய் பெறுதல்தான். பருவமடைந்தவுடன் பெண்ணின் மனதில் ஏற்படும் ஒரு பய உணர்வை போககுவதற்காகவும் இந் நிகழ்வு நடாத்தப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

எதுவாகினும் 90 வயதைத்தாண்டிய பாட்டிமாரைத்தான் தேடிப்பிடித்து கேட்கவேண்டும்.
[b] ?
Reply
#31
sOliyAn Wrote:ஆண்களுக்கும் முகச்சவரம் எடுத்து.. காதில் கடுக்கன் மாட்டும் சடங்கு நிகழ்ந்ததாக கேள்விப்படுகிறேன்.. ஆனால் அனுபவரீதியாக காணவில்லையே?!
இங்கு எழுதப்படும் விடயம் சாமத்தியச்சடங்கு (புூ......விழா) தவிர கடுக்கன் தாடிவளர்ப்பு..மயிர் வளர்ப்பு முகச்சவரம் அல்ல..

இருந்தாலும் நீங்கள் இங்கு குறிப்பிட்டு எழுதியதற்கிணங்க..

உங்ளை யாரும் தடைசெய்யவிலைலையே.. சட்டம் கொண்டுவரவில்லையே.. தாராளமாக நீங்கள் மறுபடியும் தெடங்கலாம்..

தற்போது பல வாலியபுகள் காதுகுத்தியிருக்கிறார்கள்.. சீராக சிறியஅளவில் முதத்தில் மயிர்வளர்த்தும் திரிகின்றனர்.. ஒரு காலத்தில் அவர்கள் முதன்மறையாக வழித்திருப்பார்கள் ஒருவேளை தங்கள் சினேகிதர்களுடன் கொண்டாடியுமிருப்பார்கள்.. யார்கண்டது..
Truth 'll prevail
Reply
#32
எரிச்சல் படுகிறார்கள் கோபப்படுகிறார்களென்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சிறுவயதில் இ;ங்குவந்த.. இங்கு பிறந்த வளர்ந்த பிள்ளைகள் எவரும் கோபப்படுவதாகத்தெரியவில்லை. கோபப்படுபவர்கள் அனைவரும் அங்கு போர்ச்சூழலில் வயதடைந்தவர்கள்.. சமுதாயக் கட்டமைப்பு சீரழிந்தநிலையில் வாழ்ந்தவர்களேயண்றி.. தற்போதய இளம் சமுதாயமல்ல. இப்படியான சடங்கை மும்மரமாக எதிர்ப்பவர்கள் யாரென இந்த டாக்டர்கள் ஆராய்ந்திருப்பார்களாயின் உண்மையான காரணம் என்ன என்பது நன்றாகப் புரிந்திருக்கும்.

தற்போது பெரிதாகக் கொண்டாடுபவர்கள் யாரான்று ஒரு கணிப்பீடுசெய்துபாருங்ள்.. எந்த வயதினர் என்றுபாருங்கள்.. அனேகமாக மிகக்குறுகியகாலம் போர்ச்சூழலில் வாழ்ந்தவர்களாகத்தானிருக்கும். நின்மதியற்ற ஒரு சமூகம் உருவாகியதற்கு போர்ச்சூழல் முக்கியமான காரணம்.

தமது தாய்மார் ஊட்டியதை நல்லது பொல்லாததறிந்த மேல்நாடுகளில் பள்ளிகளுக்குப்போய் படித்த மேல்நாட்டு நாகரீகமுறை நன்றே அறிந்த தாய்மார்கள்தான் வீட்டில் சடங்கு செய்கிறார்கள்.. அவருகளுக்கு நல்லது பொல்லாதது தெரியும். அவர்களாக சிந்தித்து முடிவெடுப்பார்கள். தமிழர்கள் தமிழர்களை திருமணம்செய்யவிடுங்கள். சிறிதுகாலமாவது புலம்பெயர் தமிழ்ச்சமூகம் வாழட்டும் நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
#33
மதிவதனன் நான் இங்கு இணைத்த விடயம் ஈழப்போராட்டத்திற்கு முன்னர் எழுதப்பட்ட விடயமாகும். இதற்குள்ளும் உங்கள் புத்தியைக் காட்டிவிட்டீர்கள்.
Reply
#34
நன்றி மோகன்.. நீங்கள்.. 30 வருடத்துக்கு முன்னம் இருந்ததென்று எழுதியதை தற்போது நடப்பதாகத் திணித்தற்கு நான் பதில் எழுதவில்லை.. யேர்மனி டாக்டர்கள் ஆய்வு என சொல்லப்பட்டிருக்கிறதே அதற்குத்தான் பதிலளித்திருக்கிறேன்.. உங்கள் திணிப்புக்கும் பதில் தரவில்லையென்பதை தாழ்மையாகக் குறிப்பிடவிரும்புகிறேன்..நன்றி வணக்கம்.
Truth 'll prevail
Reply
#35
அப்படியா <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#36
ஞாபக மறதியுள்ளவனுக்கு எப்போதோ நடந்த விடயமென புூச்சுத்தலாம். ஒருவருடத்துக்குள் பத்திரிகைகளில வந்த விடயம் கட்டுரை. ஏற்கெனவே தளத்தில் எழுதப்பட்ட விடயங்கள்தான்.
பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லவேண்டும். திணிப்புக்கு ஓர் அளவுண்டு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#37
திசை திருப்பலைக் கைவிடுவீர்கள் என நினைக்கின்றேன். நீங்கள் தான் விளக்கம் இல்லாமல் கதைக்கின்றீர்கள்.

அனேகமாக மிகக்குறுகியகாலம் போர்ச்சூழலில் வாழ்ந்தவர்களாகத்தானிருக்கும். நின்மதியற்ற ஒரு சமூகம் உருவாகியதற்கு போர்ச்சூழல் முக்கியமான காரணம். மேலோட்டமாக எதையும் வாசிக்காது ஆழ வாசியுங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இத்துடன் இது தொடர்பான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து சாமத்தியச்சடங்கு பற்றி மற்றவர்களின் கருத்துக்கு வழிவிடுவோம்.
Reply
#38
நன்றி மோகன்..
ஆமாம் ஆய்வுசெய்தவர் உண்மையான காரணங்களை மறந்து பொய்யான காரணங்களைக் கூறுகின்றாரெண்று எழுதியுள்ளேன். கொண்டாட்டம் நடாத்தும் தாய் தந்தையரைப்பற்றித்தான் எழுதியுள்ளேன். அவர்கள் கூட்டாக சமூகமாக வாழ்ந்தவர்கள் வாழ்க்கையின் இனிமையை அனுபவித்தவர்கள். அதைத்தான் எழுதியுள்ளேன்..

அவர்கள் அதே கூட்டாக சமூகமாக உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்கிறார்களென்றுதான் குறிப்பிட்டேன்..

கருத்தை மீண்டும் படித்துப்பாருங்கள் புரிந்தாலும் புரியலாம்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#39
<b>அந்தக் கட்டுரையை இணைத்ததற்கு நன்றி மோகன்</b>.

முன்னுக்குள்ள - கட்டுரைகள் பகுதியில் தேடிப் பார்த்தேன். ஆரம்ப கால ஆக்கங்களில் எழுத்துக்கள் மாறியிருப்பதால் அவைகளை வாசிக்கவோ அவைகளிலிருந்து தேவையானதைக் கண்டு பிடிக்கவோ முடியாது போய் விட்டது.
Nadpudan
Chandravathanaa
Reply
#40
கரவை பரணி கூறியதைப்போல.. சாமத்தியச் சடங்ககளை பணவரவுக்காக நடாத்தப்படும் சடங்கெனக் கொள்ள முடியாது.. தாயகத்தில் என் சுற்றாடலில் அப்படியான தோற்றத்தை நான் காணவில்லை.. ஆனால் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாமே பணத்தை வைத்துத்தானே நடாத்தப்படுகின்றன.. கேணியில்லாத ஆலயங்களைப்போல.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)