Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்துக்கு ஆறுவிருதுகள் .
#41
தற்போது தமிழகத்திலிருந்து வரும் எந்தப் படத்தில் வன்முறையில்லை...கதையும் காட்சிகளும் எப்படியிருப்பினும் அவசியமற்ற சண்டைக்காட்சிகள் அதைத்தானே செய்கின்றன
Reply
#42
கன்னத்தில் முத்தமிட்டால்
கரு எங்கோ இருக்கின்றது
கதை எங்கோ செல்கின்றது
[b] ?
Reply
#43
கப்டன் பிரபாகரன் தாயக போராட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது மோகன் பாக்கவில்லையா?
Reply
#44
Confusedhock: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> இது என்ன புதுக்கதை..?!
.
Reply
#45
சேது அது வீரப்பன் கதை.அல்லது நீங்கள ஏதாவது புதிய படத்தைப்பற்றி சொல்கிறீர்களா?
Reply
#46
<img src='http://www.thamilan.info/tamil/bilder/cinema/01.jpg' border='0' alt='user posted image'>
அகதிகளுக்காக ஒரு தமிழ்ப்பேனா சிந்திய கண்ணீர்த்துளிகளே விருது பெற்றுள்ளது:
சிறந்த பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து
இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 5ஆவது முறையாகப் பெற்ற கவிஞர் வைரமுத்து, கண்ணதாசன்விழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் விடுத்துள்ள அறிக்கை: 5 ஆம் முறையாக தமிழ் மீண்டும் தேசிய விருது பெற்றிருக்கிறது. என் மனதில் பொங்கும் மகிழ்ச்;சியை உலகத் தமிழ் மக்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்தாம் முறை விருது பெற்றதன் மூலம் இந்திய மொழிகளுள் தமிழ் உச்சத்தை எட்டியிருக்கிறது. தமிழ் கூறு நல்லுலகத்தின் தோள்களில் இந்த வெற்றி மாலையைக் காணிக்கையாக்குகிறேன்.

கன்னத்தில் முத்தமிட்டால் பாடல்கள் வெறும் படம் சார்ந்த பாடல்கள் அல்ல. உலகமெங்கும் அல்லல்படும் அகதிகளுக்காக ஒரு தமிழ்ப் பேனா சிந்திய கண்ணீர்த் துளிகள் அவை. எந்த நாட்டு குடிமகனும் சொந்த நாட்டை இழந்து அகதியாகிவிடக்கூடாது என்பதுதான் அந்தப் பாடல்களின் கதறல்.

உலக அமைதிக்காக இந்தியா உயர்த்திப்பிடிக்கும் வெள்ளைக்கொடியென்றும் இந்தவிருதைக் கருதுகிறேன். திரை உலகில் என்னை விதைப்பவர், வளர்த்தவர், காப்பவர் அனைவருக்கும் நனைந்த உள்ளத்தோடு நன்றி சொல்கிறேன்.

நன்றி - http://www.thamilan.info/tamil/html/cinema...ma/cinema_1.htm
nadpudan
alai
Reply
#47
<b>வைரமுத்து </b>

பேனா
சிந்தியது
மையை அல்ல
கண்ணீர்
துளிகளை
என்கிறாய்.............

சிந்தியது
வெறும்
கண்ணீர்
துளிகளல்ல
எம்
தாய்
ஊட்டி விட்ட
இரத்தத் துளிகள்...............

கவிஞனே
உன்
வார்தையின்
வரிகளில்
எம்
வேதனை
வெடித்துச்
சிதறியது ..................

வதைபடும்
நெஞ்சுக்கு
நீதி
கிடைத்தால்
அதுவே
உனக்குக்
கிடைக்கும்
அடுத்த
விருது ................

வைரமுத்துவுக்கு வாழ்த்துகள் ............
Reply
#48
Alai Wrote:உலக அமைதிக்காக இந்தியா உயர்த்திப்பிடிக்கும் வெள்ளைக்கொடியென்றும் இந்தவிருதைக் கருதுகிறேன்............

வைரமுத்துவுக்கும் குசும்புதான்
Reply
#49
Mullai Wrote:[quote=Alai]
உலக அமைதிக்காக இந்தியா உயர்த்திப்பிடிக்கும் வெள்ளைக்கொடியென்றும் இந்தவிருதைக் கருதுகிறேன்.....
வைரமுத்துவுக்கும் குசும்புதான்தன்நாடு.. பொன்நாடு.. அவர்நாடு.. இந்தியநாடு.. அப்படித்தான்.. வரும்.. ஏற்றுக்கொள்ளப்.. பக்குவப்படுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#50
ஆனால் உங்களை மாதிரி லண்டனுக்கு வந்த உடனே வடலியை மறக்கிற கூட்டமா அந்த ஆள் இல்லை எண்டுதானே சொல்லவாறியள் தாத்தா.....பிறகு சொல்லுவியள் துரத்தினாங்கள் ஓடி வந்தம் எண்டு அங்க இன்னும் 20 லட்சம் வாழுதுகள்...எதுகள் என்ன தமிழர்கள் இல்லையோ...உங்களுக்கு உழைப்புக்கு பிழைப்புக்கு வழியில்லாம லண்டனுக்க ஓடி வந்திட்டு கடைசியில சாட்டுக்கு எல்லாருக்கும் இருக்கு வரிப் பொடியள் இட்ட பெயர்....! நல்லப் பாவியுங்கோ...ஒரு நாளைக்கி கொப்பி றைட்ஸ் எடுக்கச் சொல்லைக்க தெரியும் விளைவு....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#51
பிழைதிருத்தம்....
எதுகள்---அதுகள்
நல்லப்---நல்லாப்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#52
முத்தமிட்டால் படத்தில் விடுபட்ட காட்சி.சுஜாதா எழுதியது.
நல்லவேளை விடுபட்டது என்பது எனது கருத்து<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இதுதான் அந்த விடுபட்ட காட்சி பற்றி சுஜாதா எழுதியது

ஓரிரு எண்ணங்கள்



'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்துக்காக பல காட்சிகள் எழுதப்பட்டு பல்வேறு காரணங்களால் முக்கியமாக படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்டன. அவற்றில் எனக்கு முழுதும் திருப்தியளித்த காட்சி இது. படத்தில் கிளைமாக்சுக்கு மிக அருகில் இருந்ததால் படத்தின் வேகம் கருதி மனசில்லாமல் நீக்கினேன் என்று மணிரத்னம் சொன்னார். சினிமாவில் இந்த விபத்துகள் தவிர்க்க முடியாதவை. படம் பார்த்திருப்பவர்கள் இந்தக் காட்சி எங்கே வருவதற்காக எழுதப்பட்டது என்பதை சுலபமாக யூகிக்கலாம். படம் பார்க்காதவர்கள் சீன் அமைப்பைப் பற்றிய ஒரு எளிய பாடமாக இதைக் கொள்ளலாம்.

விக்ரமசிங்கேயும் அமுதாவும் தனியாக வீற்றிருக்கும்போது விக்ரம் அவளுக்கு உணவு ஸ்பூனிலிருந்து கொடுக்கிறார்.

அமுதா: அங்கிள் உங்களை ஒண்ணு கேக்கணும்.

விக்ரம் (நிமிர)

அமுதா: எதுக்காக இந்த சண்டை?

விக்ரம்: சண்டையா? எங்க சண்டை? அத்தை இங்க எங்கயாவது சண்டை நடக்குதா என்ன?

அமுதா: (அவரையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க)

விக்ரம்: அமுதா சினிமாலதாம்மா சண்டை. அப்புறம் நீ அம்மாகூட போடற சண்டை. வேற என்ன சண்டை?

அமுதா: அங்கிள் அப்ப நான் பார்த்ததெல்லாம் பொய்யா? ஹெலிகாப்டர்இ குண்டுவெடிச்சதுஇ ஆர்மிக்காரங்க செக் பண்ணதுஇ ரைஃபிளை தூக்கிட்டு ஓடினது..

விக்ரம்: இதெல்லாம் ஒரு மாதிரி... ஒரு மாதிரி எக்சர்ஸைசம்மா.

அமுதா: ஜனங்கள் ஓடினது?

விக்ரம்: ஒருவேளை ஏதாவது சந்தைத் திருவிழா பார்க்க ஓடியிருக்கலாம்.

அமுதா: அன்னிக்குப் பார்க்ல அந்தப் பையன் வெடிச்சது.. அதுகூட எக்சர்ஸைசா?

விக்ரம் (மௌனம்)

அமுதா: இதெல்லாம் எங்க ஊர்ல இல்லை அங்கிள்.

விக்ரம்: உங்க ஊர்ல வேற மாதிரி சண்டைம்மா?

அமுதா: அங்கிள் ப்ளீஸ். பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு சொல்ல இஷ்டமில்லைன்னா.

விக்ரம்: (சுதாரித்து) சொல்றேம்மா என்ன தெரியணும்.

அமுதா: இந்தச் சண்டை எந்த நாட்டுக்கும் எந்த நாட்டுக்கும்...

விக்ரம்: ரெண்டு நாடு இல்லை. ஒருநாட்டின் ரெண்டு ஜனங்களுக்குள்ள. இதுக்கு சிவில் வார்னு பேரு.

அமுதா: யாரும் யாரும் போட்டுக்கறாங்க.

விக்ரம்: தமிழ் பேசறவங்களும் சிங்களா பேசறவங்களும்.

அமுதா: ஏன்? ஒருத்தர் சொல்றது ஒருத்தருக்கு புரியலையா?

விக்ரம்: யோசித்துப் பாத்தா அதான் காரணமோன்னு தோணுது. புரிஞ்சுக்க விரும்பலைன்னு கூட சொல்லலாம்.

அமுதா: தமிழர்களுக்கும் சிங்களாக்கும் என்ன வித்தியாசம்?

விக்ரம்: தமிளர்கள் இந்தியாவிலிருந்து வந்தவங்க.

அமுதா: சிங்களா?

விக்ரம்: அவங்களும் இந்தியாதான். கொஞ்சம் முன்னால வந்தாங்க. இப்ப ஒரு ரயில் வந்து நிக்கறது அதில் முன்னால போய் இடம் பிடிக்கிறதில்லையா.

அமுதா: ரெண்டு பேரும் ரயில்ல போறது.

விக்ரம்: வேணாம் எங்களுக்கு வேற ரயில் வேணும்கறாங்க.

அமுதா: யாரு?

விக்ரம்: தமிளங்க.

அமுதா: அதுக்கா அத்தனை பெரிய சண்டை. நீங்க சிங்களாவா?

விக்ரம்: ஆமாம்.

அமுதா: நான் தமிழ்?

விக்ரம்: ஆமாம்.

அமுதா: கையைக் காட்டுங்க (இருவர் கையையும் ஒப்பிட்டுப் பார்க்கிறாள்) ரெண்டும் ஒரே கலர்தானே?

விக்ரம்: கைமட்டும் போதாதும்மா. மனசு ஒரே கலர்ல வேணும்மா.

அமுதா: போங்க அங்கிள். மனசுக்கு கலர் கிடையாது.

விக்ரம்: இருக்குமா! சிவப்புஇ பச்சைஇ மஞ்சள்இ காவிக்கலர்இ கருப்புஇ பழுப்புன்னு பலதும் தமிளு ஆளுங்க சம உரிமை வேணும்னு கேக்கறாங்க. எங்க ஆளுங்க நாங்கதான் அதிக எண்ணிக்கைங்கறாங்க.

அமுதா: அதில யாரு ரைட்டு யாரு தப்பு?

விக்ரம்: (ஆயாசத்துடன்) இந்த டார்ச்சர் கேஜிபி பெண்ணை யாராவது கூட்டிட்டு போங்களேன். இல்லைன்னா இங்க ஒரு கொரில்லா வார் நடக்கும்.

அமுதா: கொரில்லான்னா..? குரங்கா..?

விக்ரம்: ஒண்ணு செய்யறேன். நாளைக்கு காலை பொழுது விடிஞ்சதும் சந்திரிகாவுக்கு போன் பண்ணி அமுதான்னு ஒரு பெண் இருக்குது. அவளை ஒருநாள் ப்ரெசிடெண்டாக போடுங்க. சண்டை தீர்ந்துடும்னு சிபாரிசு பண்றேன்.

அமுதா: போங்க அங்கிள் கேலி பண்றீங்க.

விக்ரம்: நிசமாவே இந்த சண்டை எதுக்குன்னு எங்களுக்கெல்லாம் புரிலைம்மா.

விக்ரம்: ஒருநாள் நின்னுரும்மா.. நிக்கணும்.
Reply
#53
அப்படியே எமது கருத்தும்....அதுமட்டுமல்ல இப்படி ஒரு கட்டம் வந்திருந்தால் ஒருவேளை சிறிலங்கா அரசு தேசிய விருது கொடுத்திருக்கும்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#54
kuruvikal Wrote:ஆனால் உங்களை மாதிரி லண்டனுக்கு வந்த உடனே வடலியை மறக்கிற கூட்டமா அந்த ஆள் இல்லை எண்டுதானே சொல்லவாறியள் தாத்தா.....பிறகு சொல்லுவியள் துரத்தினாங்கள் ஓடி வந்தம் எண்டு அங்க இன்னும் 20 லட்சம் வாழுதுகள்...எதுகள் என்ன தமிழர்கள் இல்லையோ...உங்களுக்கு உழைப்புக்கு பிழைப்புக்கு வழியில்லாம லண்டனுக்க ஓடி வந்திட்டு கடைசியில சாட்டுக்கு எல்லாருக்கும் இருக்கு வரிப் பொடியள் இட்ட பெயர்....! நல்லப் பாவியுங்கோ...ஒரு நாளைக்கி கொப்பி றைட்ஸ் எடுக்கச் சொல்லைக்க தெரியும் விளைவு....!
ஓமெம்.. எல்லாம்.. மறந்துதான்.. அழிவுகள்பற்றி.. எழுதிறனாக்கும்.. மறந்படியால்தான்.. நாடு:பற்றி.. எழுதிறனாக்கும்.. அதுசரி.. சிங்களப்பகுதியிலை.. வாழுற.. தமிழர்.. எவ்வளவு.. அதுகள்.. ஏன்.. அங்கைவந்து.. இருக்குதுள்..? யாருக்குப்.. பயந்து.. வந்து.. இருக்குதுகள்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#55
சுரதா/suratha Wrote:விக்ரம்: நிசமாவே இந்த சண்டை எதுக்குன்னு எங்களுக்கெல்லாம் புரிலைம்மா.

விக்ரம்: ஒருநாள் நின்னுரும்மா.. நிக்கணும்.
கடைசி.. இரண்டு.. வரி.. நல்லாயிருக்கு..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#56
நீங்கள் எழுதிறது எல்லாம் சமகாலத்து உண்மைகளுக்குப் புறம்பானது....சிங்களப் பகுதியில பயத்தால வரெல்லை...அங்கதான் தினமும் கைதும் கொள்ளையும் கொலையும் நடக்குது...வெளிநாட்டுக் காசில உல்லாசம் காண வந்திருக்கினம்.....! அது அவையவையின்ற சொந்த விருப்பம்...அதுக்கும் முடிச்சுப் போட்டுட்டியள் போல....! ஏன் எனி கலியாணம் முடிச்சு கொழும்புக்கு வந்தாலும்...அங்க துரத்துறாங்கள் அதுதான் கொழும்பு மாப்பிள்ளை பாத்து முடிச்சனாங்கள் எண்டுவியள் போல...உங்க அகதியந்தஸ்து வாங்க பயஙகரவாதிகள் அக்குங்கோ...அங்க ஊரில தம்பிராசா போடுங்கோ...கொழும்பில அவங்கள் கப்பகார எண்டுங்கோ....உங்களை விதிவிலக்குகளை திருத்த ஏலாது.....ஒருவர் சொன்னாராம்....உலகத்தில 100% எல்லாரையும் திருப்திபடுத்தும் வகையில் மனிதர்களை கடவுள் படைக்கவில்லை என்று....அதுதான் உண்மை...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#57
kuruvikal Wrote:நீங்கள் எழுதிறது எல்லாம் சமகாலத்து உண்மைகளுக்குப் புறம்பானது....சிங்களப் பகுதியில பயத்தால வரெல்லை...அங்கதான் தினமும் கைதும் கொள்ளையும் கொலையும் நடக்குது...வெளிநாட்டுக் காசில உல்லாசம் காண வந்திருக்கினம்.....! அது அவையவையின்ற சொந்த விருப்பம்...அதுக்கும் முடிச்சுப் போட்டுட்டியள் போல....! ஏன் எனி கலியாணம் முடிச்சு கொழும்புக்கு வந்தாலும்...அங்க துரத்துறாங்கள் அதுதான் கொழும்பு மாப்பிள்ளை பாத்து முடிச்சனாங்கள் எண்டுவியள் போல...உங்க அகதியந்தஸ்து வாங்க பயஙகரவாதிகள் அக்குங்கோ...அங்க ஊரில தம்பிராசா போடுங்கோ...கொழும்பில அவங்கள் கப்பகார எண்டுங்கோ....உங்களை விதிவிலக்குகளை திருத்த ஏலாது.....ஒருவர் சொன்னாராம்....உலகத்தில 100% எல்லாரையும் திருப்திபடுத்தும் வகையில் மனிதர்களை கடவுள் படைக்கவில்லை என்று....அதுதான் உண்மை...!
அதுதான்.. அந்தக்.. கொலை..கொள்ளைக்கு.. மத்தியிலும்.. 8-10 இலட்சம்.. ஏன்.. வந்து.. இருக்குதுகள்.. எண்டுதான்.. கேட்டன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#58
மதி தனது காலத்தில் ஒரு பிரச்சனையுமிருக்கவில்லை என்று சொல்கிறவர்.இவரது கருத்தின்படி யார்த்தால் யாரோ கலைத்தெல்லவா இங்கு வந்திருக்கவேண்டும்?
Reply
#59
நீங்கள்தான்.. திரத்தினது.. போனது.. இரண்டையும்.. சொல்லுறியள்.. அதுசரி.. அகதி.. விண்ணப்பம்.. கோரேக்கை.. என்ன.. சொல்லி.. விண்ணப்பிச்சியள்.. அதைச்.. சொல்லுங்கோவன்..?
Truth 'll prevail
Reply
#60
பொய்தான் என்று உண்மையை சொல்லசொல்கிறீர்களா?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)