தயாகம் திரும்பத் தயாராகும் அமெரிக்கப் படைகள்
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :roll: :wink: :!: :?: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 19:47 ஈழம்)
சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் தமது நிவாரணப்பணிகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பத்தயாராகி வருகிறார்கள் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிக்கென பாதிக்கப்ட்ட ஏழு நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா தற்போது படிப்படியாக படைகளைத் தாயகத்துக்குத் திருப்பியழைத்து வருகிறது.
கடந்த இரு வாரங்களாக சுமார் 1600 படையினருக்கு மேல் சிறீலங்காவிலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையானோரே தற்போது சிறீலங்காவில் உள்ளனர். அவர்களும் தற்போது தாயகம் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர் என்றும் அவ்வட்டாரஙகள் தெரிவித்திருக்கின்றன.
ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து சுமார் 12ற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகள் நிவாரணப் பணிகளுக்காக சிறீலங்காவுக்கு வந்தன. அவற்றில் பல நாட்டுப்படைகள் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டன.
ஒஸ்ரியா கனடா பெல்ஜியம் கிரீஸ் இத்தாலி பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாட்டுப்படைகள் கடந்த சில நாட்களில் தமது படைகளில் பெரும் பகுதியினர் தாயகம் திரும்பிவிட்டனர்
நன்றி: புதினம்