Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலங்கைக்கு 5 ஆயிரம் அமெரிக்க இராணுவத்தினர்!?
#41
ஆகா .. நல்ல செய்தி அவர்களும் தொடங்கிடார்களா... கிழக்கு மாகாணத்தில் ஒசாமா குழு.. சூப்பர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#42
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/January/08/f-1.jpg' border='0' alt='user posted image'>
இவர் (கொலின் பவல் ) இப்படி எங்கும் சிரித்ததை யாராவது கண்டிருக்கிறீர்களா... ஏன்.... எதுக்காகவோ.... :!: :?: <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :? :wink: :mrgreen:

[இவரும் சிரிப்பார் என இப்பதான் தெரியும்.... அம்மே நல்லாத்தான் (துணிவுடன்) நிக்கிறா...] <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:
Reply
#43
அம்பாறையில் அமெரிக்கப் படைகள்

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட அம் பாறை மாவட்டத்தில் அமெரிக்கப் படையினர் தற்போது வந்திறங்கியிருக்கின்றனர். சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மைதானத்தில் நவீன ரக ஹெலிகொப்ரர்கள் மூலம் இவர்கள் வந்திறங்குகின்றனர் எனவும் - அங்கு அவர்கள் தங்கியிருப்பதற்கு ஏற்ற - வசதிகள் கொண்ட கூடாரங்கள் அமைக்கப் பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனினும்ää அம்பாறை மாவட்ட மக்களுக்கு அமெரிக்கப் படையினரின் வருகை எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகின்றது என்று அங்குள்ள எமது செய்தியாளர் கூறியிருக் கின்றார்.

அமெரிக்க விமானம் தாங்கிக்கப்பல் மட்டக்களப்பு நாவலடியில் நங்கூரமிட்டுள்ளது - படைகள் தரையிறக்கம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவலடி கடற்கரையோரமாக அமெரிக்கக் கடற்படையின் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள் இன்று நங்கூரமிட்டுள்ளதாகவும் கப்பிலிருந்து பலநூறு அமெரிக்கப் படையினர் நண்பகல் தரையிறங்கியதாகவும் நேரில் கண்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. இவர்கள் இன்று கிழக்கு மாகாணத்தில் பல பகுதிகளிலும் புனர்நிர்மாண நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் மட்டக்களப்பிலுள்ள பல இரும்புக் கடைகளிலுள்ள அனைத்து இரும்புக் கேடர்களையும் இவர்கள் கொள்வனவு செய்து வாகனங்களில் ஏற்றிச்செல்வதாகவும் நகர்புறச் செய்திகள் தெரிவிக்கின்றது.

நன்றி:நிதர்சனம் (ஆனால் இப்போ சர்சையில் உள்ளது இவ்இணயதளம்) Idea
Reply
#44
வாங்கோ அமரிக்கா பிள்ளையள் வாங்கோ ஆணால் கை பையை அடிப்பம் பிரச்சனை இல்லையோ ?????????????????? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#45
அமெரிக்க இராணுவத்தின் வருகை பூகோள அரசியல் நலன் சார்ந்ததல்ல

திட்டவட்டமாக மறுக்கிறது அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு


இலங்கையில் அவசர நிவாரணப் பணியில் ஈடுபடும் அமெரிக்க இராணுவத்தின் செயற்பாடுகள் பூகோள அரசியல் நலன் சார்ந்தவையல்லவென வருகை தந்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழு திட்டவட்டமாக நேற்று புதன்கிழமை மறுத்துள்ளது.

கடள்கோள் அனர்த்த அழிவைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த காங்கிரஸ் பிரதிநிதிகள் குழுவே இதனைத் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமெரிக்க காங்கிரஸ் குழுஇ இலங்கையில் பணி புரியும் முக்கிய தளபதிகள் முதற் கொண்டு சாதாரண இராணுவத்தினர் வரை தாங்கள் இங்கு மனிதாபிமான நோக்கத்திலேயே செயற்படுவதாக கருதுகின்றனர் எனவும் தெரிவித்தது.

ஆசிய- பசுபிக்கிற்கான காங்கிரஸ் உப குழுவின் தலைவரான ஜேம்ஸ் ஏ.லீச் தலைமையில் இலங்கை வந்திருந்த இந்தக் குழுவினர் கொழும்புப் பிளாசாவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்ததாவது;

அமெரிக்க இராணுவம் இங்கு மனிதாபிமானப் பணிகளை மாத்திரம் மேற்கொள்ளும். பல இராணுவத்தினருடன் பேசிய போது இலங்கையில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமிதம் வெளியிட்டனர்.

எமது இராணுவத்தின் செயற்பாடுகளில் எந்த வித கேந்திர முக்கியத்துவ நோக்கங்களும் இல்லை.

முக்கிய தளபதிகள் முதல் சாதாரண உத்தியோகத்தர்கள் வரை எங்களிடம்இ தாங்கள் நூறு வீதம் மனிதாபிமான பணிகளிலேயே அக்கறை காட்டுவதாகத் தெரிவித்தனர்.

சுனாமி காரணமாக ஏற்பட்ட இழப்பினை தெரிந்து கொள்ளவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு என்ன வகையில் உதவலாம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் அமெரிக்க காங்கிரஸ் சார்பில் இந்தோனேசியாஇ தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும் உங்களது நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டோம்.

நாங்கள் இங்கு சுனாமியால் பேரிடர் ஏற்பட்டுள்ளதையும்இ குறிப்பிடத்தக்க இழப்பு ஏற்பட்டுள்ளதையும் புரிந்து கொண்டோம்.

சர்வதேச சமூகம் இதனை மனித சமூகத்திற்கு ஏற்பட்ட பாரிய துயராக இனம் கண்டுள்ளது. இதன் காரணமாகவே பாதிக்கப்பட்ட நாடுகளின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அது தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உங்கள் மீது கரிசனையும்இ அக்கறையும் கொண்டுள்ளது.

சர்வதேச சமூகம் ஐக்கியப்பட்டு முன்னரெப்போதுமில்லாத வழியில் உதவுகின்றது.

எதிர்காலத்தில் இயற்கை அழிவுகள் ஏற்படும் பட்சத்தில் எப்படி அதனை எதிர்கொள்ளலாம் என்பதற்கு இது முன்னுதாரணமாக அமையப் போகின்றது.

இந்தப் பிராந்தியத்தில் அதிகம் இழப்புக்களை சந்தித்த நாடுகள் நீண்டகால அரசியல் மோதல்களையும் எதிர்கொண்டுள்ளன.

சுனாமித் தாக்கத்திற்கு பிறகு இந்த விடயங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்த புதிய கருத்தியற் கோட்பாடு உருவாகியுள்ளது.

விடயங்களை புதிய வழியில் பார்ப்பது குறித்த சிந்தனை தோன்றியுள்ளது. இலங்கை எதிர்கொண்ட அழிவுகளை அறிந்து கொள்வதற்கான எமது முதல் பயணம் இது.

எமது அனுபவங்களூடாக ஆலோசனைகளையும்இ உதவிகளையும் எப்படி வழங்குவது என்பதை தீர்மானிக்கலாம். இந்தச் சுனாமி அனர்த்தம் புதிய கருத்தியல் ஒன்றுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. சர்வதேச சமூகம் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக அவதானிக்கும்.

பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவி எவ்வாறு செலவழிக்கப்படுகின்றது என்ற துல்லியமான விபரங்கள் அவசியம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிகள்இ உதவிகள் போய்ச் சேருவதை உறுதி செய்வதற்கான சரியான அடித்தளத்தை இட விரும்புகின்றோம். சர்வதேசம் ஒன்று திரண்டு உதவியளிக்கின்றது.

நாங்கள் சரியாக செயற்படாவிடில்இ சரியான கணக்குகளைப் பேணாவிடில் எதிர்காலத்தில் இவ்வாறான உதவிகள் கிடைக்காமல் போய்விடும்.

நாங்கள் இலங்கைக்கு என்ன வகையான உதவி தேவை என்பது குறித்தே கவனம் செலுத்துகின்றோம்.

இந்த விடயத்தில் பின்னோக்கிச் செல்லக் கூடாது . உடனடித் தேவைகளுக்கு அப்பால் புனர்வாழ்வுஇவீடுகளை இழந்தோருக்கு வீடுகளை அளித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கைக்கான உதவியின் வடிவம் மாற வேண்டும்இ நீண்ட கால அடிப்படையில் சிந்திக்க வேண்டும். மீனவர்களுக்கு அவர்கள் மீண்டும் மீன்பிடித் தொழில் புரிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.மீனவர்களின் விதவைகளுக்கு சுயதொழில் வாய்ப்புத் திட்டங்கள் அவசியம்.

படகுகளைஇ மீன்பிடி வலைகளை அளிக்க வேண்டும். தற்போது வழங்கப்படும் உதவியின் வடிவத்தை மாற்ற வேண்டும். நீண்ட கால மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகளில் சமீபத்தில் ஊழல் நடைபெற்றதாக வெளிவந்த தகவல்களால் ஏற்பட்ட சர்ச்சை சுனாமி நிதியுதவி முறைகேட்டைத் தடுத்து நிறுத்தும். நிதியுதவி விடயத்தில் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

அமெரிக்காவிற்கு சென்றதும்இ இலங்கைக்கு என்ன தேவை என்பதைத் தெளிவுபடுத்தும் சட்ட மூலமொன்றைக் காங்கிரஸில் சமர்ப்பிப்போம்.

தேவைகள் குறித்த தெளிவான ஆவணங்கள் அவசியம். நிதியுதவி பயன்படுத்தலில் அரசு அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும்.

அமெரிக்கா இந்த விடயத்தில் உதவுவதன் மூலம் தென் ஆசியாவின் 32 நாடுகளுடன் உறவுகளை ஆழமாக்கிக் கொள்ளப் போகின்றது.

இலங்கையிலும்இ பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளிலும் பல அமைப்புகளும் பல நாடுகளும் பாரிய பணி ஆற்றி வருகின்றன. இது எங்களைக் கவர்ந்துள்ளது.

நாங்கள் சர்வதேச சமூகத்தின் இந்தப் பங்களிப்பை மதிக்கின்றோம். இந்தோனேசியாவிலும்இ இலங்கையிலும் அமெரிக்க இராணுவம் ஆற்றி வரும் பங்களிப்பு எங்களைக் கவர்ந்துள்ளது.

தென்பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாம் செயற்படுவோமா என்பதை எதிர்காலத்தில் நிகழ்பவையே தீர்மானிக்கும்.

இது குறித்து என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது என்பது எமக்குத் தெரியாது. இந்த விடயத்தில் நாங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளோம்.

ஆனால்இ நாங்கள் இந்த மனிதாபிமான துயரம் எவ்வாறு கையாளப்படுகின்றது என்பதில் அக்கறை கொண்டுள்ளோம்.

தமிழர் பகுதிகளுக்கும் நிவாரண உதவிகள் போய்ச்சேர வேண்டும். இந்தப் பேரழிவுஇ நல்லிணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டும். இலங்கையிலும்இஅசேயிலும்இதாய்லாந்திலும் கூட இதுவே இடம்பெற வேண்டும். சாதாரண மக்கள் சேர்ந்து செயற்படத் தொடங்கி விட்டார்கள்.

நாங்கள் தென் பகுதிக்கு மாத்திரமே சென்றோம். இதற்குக் காரணம்இ எமது இராணுவம் எவ்வாறு பணியாற்றுகின்றது எனப் பார்ப்பதே. நாங்கள் ஏனைய பகுதிகளுக்கும் செல்ல விரும்புகின்றோம். தமிழர் பகுதிகளுக்கும் செல்ல விரும்புகின்றோம்.

நேரப் பிரச்சினையே எமக்குப் பாரிய பிரச்சினை. இதற்காக மன்னிப்புக் கோருகின்றோம்.

தமிழர் விவகாரத்தை இலங்கை அரசாங்கத்துடன் பேசியுள்ளோம். பல விடயங்களை வலியுறுத்தியுள்ளோம்.

அரசாங்கம் சிறப்பாகச் செயற்படுகின்றது. அவசரப் பணிகளை தாங்கள் சமாளித்து விட்டதாகவும்இ அடுத்த கட்டப் புனர்நிர்மாணப் பணிகளுக்கே எமது உதவி தேவை எனவும் அரசாங்கம் தெரிவித்தது.

தமிழர் பகுதிகளில் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அரசாங்கம் தெரிவித்தது. செயலணிகளை அமைத்துள்ளதாக குறிப்பிட்டனர். இது சமாதான முயற்சிகளுக்கு உதவும் எனவும் அரசு தெரிவித்தது.

அரசாங்கம் சிறப்பாக செயற்படுகின்றது. எனினும்இ அவர்களுக்குச் சர்வதேச சமூகத்தின் உதவி தேவை. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்தோம்.

இது செனட்டிற்கு விபரங்களைத் தெரிவிக்க வாய்ப்பை அளித்துள்ளது. இலங்கைக்கு எதிர்காலத்தில் எவ்வாறு தேவைப்படும் என்பது தெரியாது.
நன்றி:தினக்குரல்
Reply
#46
அமெரிக்கப் படை தங்க பொருத்தமான கட்டிடங்கள் தேடப்படுகின்றன

கடற்கோள் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடமராட்சிப் பகுதியில்இ மருத்துவ உதவிகளை வழங்குவதாகக் கூறப்படும் அமெரிக்கக் கடற்படையினரை தங்க வைக்க பருத்தித்துறை முனைப் பகுதியில் வசதியான கட்டிடங்கள் தேடப்பட்டு வருகின்றன.

பருத்தித்துறை முனையின் தும்பளைப் பகுதியில் கடற்கரையை அண்டியதாகவும் பிரதான வீதியை அண்மித்ததாகவும் இருக்கக் கூடிய கட்டிடமே இவர்களுக்குத் தேவையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அமெரிக்கக் கடற்படையின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த 39 பேர் மந்திகை ஆஸ்பத்திரியில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாழ். நகரிலுள்ள விடுதியொன்றில் தங்கியுள்ளனர். இவர்கள் தினமும் காலையில் வாகனங்கள் மூலம் பருத்தித் துறை சென்று மாலை நேரம் திரும்புகின்றனர்.

இரண்டு வாரங்களே பருத்தித்துறையில் தங்கியிருந்து மருத்துவ உதவிகளை செய்யவுள்ளதாக அமெரிக்கக் கடற் படையினர் முதலில் தெரிவித்திருந்த போதிலும்இ தற்போது இவர்கள் பருத்தித்துறையில் தங்குவதற்காக கட்டிடங்கள் தேடப்படுகின்றமையானதுஇ இங்கு இவர்கள் நீண்ட நாட்கள் தங்கும் சாத்தியமிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடற்கோளினால் பருத்தித்துறை முனைப் பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டு எஞ்சியிருந்தவர்களும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் இந்தப் பகுதியில் தாங்கள் தங்குவதற்கு அமெரிக்கப் படையினர் இடம் தேடுவது குறித்தும் ஆச்சரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினக்குரல்
Reply
#47
:|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#48
பீதுருதாலகால மலையில் அமெரிக்க கண்காணிப்பு மையம் ?

அமெரிக்க படைகள் இலங்கையின் அதி உயர் பிரதேச மலைச்சிகரமான பீதுருதாலகால மலையில்
அமெரிக்க கண்காணிப்பு மையம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை வான்பரப்பில் பறப்பில் ஈடுபடும் வானூர்திகளை கண்காணிப்பதற்கான நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கு அனுமதி கோரியே கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்புகளினாலும் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களை அடுத்து அமெரிக்க படைகளின் கோரிக்கையினை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள் நாட்டின் பல பாகங்களிலும் அதிசக்தி மிக்க தொலைத் தொடர்பு சாதனங்களை பொருத்தியுள்ளதாகவும் இதனால் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என இந்திய பாதுகாப்பு தரப்பு கருதுவதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-சூரியனில் புதினம் கூறியதாக
Reply
#49
Confusedhock: :evil: :twisted: :evil:
. .
.
Reply
#50
நீண்டகாலம் தங்கியிருக்க அமெரிக்கா திட்டம்

கடல்கோள் அனர்த்த உதவியின் வடிவத்தை மாற்றியிருப்பதாக நேற்று அறிவிப்பு


கடல்கோள் அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி அவசர மீட்பு நிவாரணப் பணிகளுக்கு உதவிய அமெரிக்கா இங்கு நீண்டகாலம் தங்கியிருந்து புனர்வாழ்வு புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவியளிக்கப்போவதாக நேற்று சனிக்கிழமை அறிவித்திருக்கிறது.

ஆரம்ப கட்ட வேலைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கும் அமெரிக்க இராணுவம் இலங்கையிலிருந்து படையினர் மற்றும் தளபாடங்களின் தொகையைக் குறைத்துக்கொள்ள ஆரம்பித்துள்ள அதேசமயம் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க பொது மக்களின் உதவியை அதிகரிக்கப் போவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி ஜேம்ஸ் என்ற்விஸ்ரில் நேற்று கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளுடன் அமெரிக்கா அரசியல் ரீதியான தொடர்பு எதனையும் வைத்திருக்கப்போவதில்லையெனவும் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அமெரிக்கா புனர்நிர்மாண உதவிப் பணியில் ஈடுபடப் போவதில்லையெனவும் தெரிவித்த ஜேம்ஸ் என்ற்விஸ்ரில் புலிகள் அமைப்பு தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறினார்.

கடல்கோள் அனர்த்தத்தையடுத்து இலங்கைக்கு வழங்கிவரும் அமெரிக்க உதவியின் வடிவம் மாற்றமடைகிறது.

இலங்கையின் ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கென்றும் தனது ஆதரவை வழங்கியது போன்று கடல்கோள் அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்.

அமெரிக்க இராணுவத்தினரின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. புனர்நிர்மாணப் பணிகளில் அமெரிக்காவின் ஏனைய பிரிவினர் கவனம் செலுத்துவர். காலப்போக்கில் அமெரிக்க உதவியின் வடிவம் மேலும் மாற்றமடையும்.

நாங்கள்இ இங்கு நீண்ட நாட்களுக்கு தங்கியிருக்கப் போகிறோம். நாங்கள் போகப் போவதில்லை.

விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள தகவல் உற்சாகமளிக்கிறது.

இது தொடரும் எனவும் தீர்வொன்றிற்கு உதவும் எனவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஆசியாவைத் தாக்கிய கடல்கோள் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடல்கோளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து நாங்கள் சில கணிப்பீடுகளைச் செய்தோம். அமெரிக்க சனத்தொகையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைக் கணிப்பிட்டோம்.

அமெரிக்க இராணுவம் மிகத் துரிதமாகச் செயற்பட்டுள்ளது.

அமெரிக்கா உதவிய விதம் அமெரிக்காவிற்கும் இந்த நாடுகளுக்கும் இடையில் இருந்த உறவின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது.

அதேவேளைஇ இது உறவுகளை இன்னொரு கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் உதவுவதற்குத் தயாராக உள்ளோம்.

இலங்கையுடன் எமக்கு நீண்டகால இராணுவ உறவு உள்ளது.

இலங்கை தனது புனர்நிர்மாணப் பணிகளில் அமெரிக்க இராணுவத்தின் உதவி எதிர்காலத்தில் தேவையெனக் கருதினால் நாங்கள் அதற்கு உதவத் தயாராகவுள்ளோம்.

அமெரிக்க இராணுவம் தற்போது முற்று முழுதாக மனிதாபிமானப் பணிகளையே மேற்கொண்டு வருகின்றது.

கடல்கோளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது வழங்கும் உதவி எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்ற ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது.

எனினும் இலங்கையுடன் எமக்கு மிக நீண்டகால இராணுவ உறவு உள்ளதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் பணியாற்றி வரும் இந்திய இராணுவத்துடன் எமக்கு நல்ல உறவும் ஒத்துழைப்பும் உள்ளன. அவர்கள் மிகச் சிறந்த பணியை ஆற்றியிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கம் தனது புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் வேளை எமது உதவியைக் கோரினால் நாங்கள் உதவி புரியத் தயாராகவுள்ளோம். எமது பணி என்ன என்பதைப் பொறுத்ததாகும். புனர்வாழ்வு புனர்நிர்மாணப் பணிகளுக்கு பின்னாலுள்ள சக்தி இலங்கை அரசாங்கமே. நாங்கள் அவர்களுக்கு உதவுவோம்.

எமது படையினர் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் புனர்வாழ்வு புனர் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வர்.

அமெரிக்க இராணுவம் காலி அம்பாறை யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தனது பணியினை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பத் தொடங்கியுள்ளது.

நன்றி: தினக்குரல்
Reply
#51
அமெரிக்கர்கள் ஆயிரம் பேர் இலங்கையைவிட்டுப் புறப்பட்டுவிட்டார்களாமே

-
Reply
#52
anpagam Wrote:நீண்டகாலம் தங்கியிருக்க அமெரிக்கா திட்டம்

இது எதிர்பார்த்தவிடயம்தான்.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Reply
#53
அனர்த்த நிவாரணப்பணியை உறுதிப்படுத்த ஐ.நா.வின் தூதுவராக கிளிண்டன் நியமனம்

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணி தொடர்பில் சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடரும் இழுபறித்தீர்வு காண உதவிபுரியவும் அனர்த்த நிவாரணப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனை ஐ.நா.வின் சிறப்புத்தூதராக நியமிக்கவுள்ளார்.

இந்தத் தகவலை ஜ.நா. இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிண்டனின் நியமனம் குறித்த ஐ.நாவின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா சிறீலங்கா ஆகிய நாடுகளில் மீள்கட்டுமானப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஐ.நாவின் விசேட தூதுவராக கிளிண்டனை நியமிக்க எண்ணியுள்ள அனான் இந்த இரு நாடுகளிலும் அரசுக்கும் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சச்சரவுகளுக்கான தீர்வுக்கும் கிளிண்டன் உதவவேண்டும் எனக்கருதுகிறார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவிலும் சிறீலங்காவிலும் சுதந்திரத்துக்காக இருதசாப்த காலத்துக்கு மேலாகப் போராடிவரும் இயக்கங்களுக்கும் அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் பணியாற்றி தனது அரசியல் முதிர்ச்சி மூலம் நல்ல பங்களிப்பை நல்கி தீர்வுக்காக உழைக்க கிளிண்டனுக்கு நல்ல சந்தரர்ப்பம் கிடைத்துள்ளது என்று ஐ.நா. வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஆழிப்பேரலையால் அழிந்துபோன இடங்களைப் பார்வையிட சிறீலங்காவுக்கு அண்மையில் வந்திருந்த கோபி அனானை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்லவிடாமல் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா தடுத்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதினம்
Reply
#54
தயாகம் திரும்பத் தயாராகும் அமெரிக்கப் படைகள்
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :x :roll: :wink: :!: :?: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:

(தெ.அருணன் வியாழக்கிழமை 10 பெப்ரவரி 2005 19:47 ஈழம்)

சிறீலங்காவில் ஆழிப்பேரலை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவென நிலைகொண்டுள்ள அமெரிக்கப்படையினர் தமது நிவாரணப்பணிகளை நிறைவுசெய்துகொண்டு தாயகம் திரும்பத்தயாராகி வருகிறார்கள் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிக்கென பாதிக்கப்ட்ட ஏழு நாடுகளுக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா தற்போது படிப்படியாக படைகளைத் தாயகத்துக்குத் திருப்பியழைத்து வருகிறது.

கடந்த இரு வாரங்களாக சுமார் 1600 படையினருக்கு மேல் சிறீலங்காவிலிருந்து வெளியேறிவிட்டனர் என்றும் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த சொற்ப எண்ணிக்கையானோரே தற்போது சிறீலங்காவில் உள்ளனர். அவர்களும் தற்போது தாயகம் திரும்ப ஆயத்தமாகி வருகின்றனர் என்றும் அவ்வட்டாரஙகள் தெரிவித்திருக்கின்றன.

ஆழிப்பேரலை அனர்த்தத்தை அடுத்து சுமார் 12ற்கும் மேற்பட்ட நாடுகளின் படைகள் நிவாரணப் பணிகளுக்காக சிறீலங்காவுக்கு வந்தன. அவற்றில் பல நாட்டுப்படைகள் ஏற்கனவே தாயகம் திரும்பிவிட்டன.

ஒஸ்ரியா கனடா பெல்ஜியம் கிரீஸ் இத்தாலி பாகிஸ்தான் இந்தியா ஆகிய நாட்டுப்படைகள் கடந்த சில நாட்களில் தமது படைகளில் பெரும் பகுதியினர் தாயகம் திரும்பிவிட்டனர்

நன்றி: புதினம்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)