12-31-2004, 02:38 PM
<img src='http://img108.exs.cx/img108/6879/tsunimi.jpg' border='0' alt='user posted image'>
கடலவளே...
கோர வெறியோடு வந்தாயா..??
இல்லைப்பசியோடு வந்தாயா..??
வந்த வழி எல்லாம்
அங்காங்கே உன் எண்ணத்திற்கு
கொன்று போட்டிருக்கிறாய்..??
கொடியவளே
கேட்க ஆள் இல்லை என்று
கோர தாண்டவம் ஆடினையோ..??
ஏழைகளிற்கு வாழ்வழிக்கும்
வளமாய் ஆனாய்
இன்று ஏழை மக்கள்
உயிர் குடிக்கும் பேயாய் ஆனாய்
அள்ளிக்கொடுத்தவள் நீ
அத்தனையும் அள்ளி எடுத்தாயே..??
தாயே என்று உன்னை வணங்கியவன்
கடல்
தண்ணீருடன் வாழ்ந்தவன்
தண்ணீரினுள் மாண்டுவிட்டான்
தண்ணீரில் மீன்கள் மிதக்கும்
சடலங்கள் மிதக்கும் கொடுமையிது
கண்டு அடங்கினையா..??
மீண்டும் மீண்டும் வந்தாய்
மூன்று முறை வந்தாய்
முறையா இது..??
ஒன்றா இரண்டா - உன்னோடு
ஒட்டி உறவாடிய
ஒவ்வொரு வீட்டிலும்
ஓலம் மரண ஓலம்
இறந்த உயிர்களை வைத்து
ஓவென்று அழுதிட
ஒரு குடிலில்லை
அத்தனையும்
அடித்துச்சென்றாயே
ஆடு மாடுகள் போல
ஆங்காங்கே
மனித உடல்கள்
மாண்டு கிடக்கும் கோலம்
மனித வரலாற்றில்
மாறாத வடுவாகும்
பிணக்கோலம் போட்டாய்
கோலம் நீ போட
கொண்டு சென்றது எம்மக்களா...??
நாடகம் நீ போட
நாதியற்றுப்போனது
பச்சிளம் பாலகரா..??
பொறுக்காது இது
ஒரு கணம் நீ நின்று
சிந்தித்திருந்தால் தெரிந்திருப்பாய்..!
சீற்றம் நீ கொள்ள
சின்னஞ்சிறு பிஞ்சுகள்
என்ன செய்தன..??
வாரிக்கொண்டு போனாயே..??
பண்டிகைக்காய்
பலகாரம் செய்து
பாத்துப்பாத்து துணியெடுத்து
பலருடன் கூடி உண்டது
செரிக்க முன்னே
சொத்துப்போய் கிடக்கும்
காட்சியிது காண்பாயா..?? நீ
செய்து விட்ட காரியத்தின்
காரணம் தான் சொல்வாயா...??
பாய்ந்து பகையாய் வந்த
அலைகள் செய்த கொடுமையில்
அமைதியாய் அடங்கின உயிர்கள்
நீ மட்டும் இன்னும்
அடித்துக் கொண்டிருக்கிறாய்..
அகங்கார தொனியுடன்...!
கடலவளே...
கோர வெறியோடு வந்தாயா..??
இல்லைப்பசியோடு வந்தாயா..??
வந்த வழி எல்லாம்
அங்காங்கே உன் எண்ணத்திற்கு
கொன்று போட்டிருக்கிறாய்..??
கொடியவளே
கேட்க ஆள் இல்லை என்று
கோர தாண்டவம் ஆடினையோ..??
ஏழைகளிற்கு வாழ்வழிக்கும்
வளமாய் ஆனாய்
இன்று ஏழை மக்கள்
உயிர் குடிக்கும் பேயாய் ஆனாய்
அள்ளிக்கொடுத்தவள் நீ
அத்தனையும் அள்ளி எடுத்தாயே..??
தாயே என்று உன்னை வணங்கியவன்
கடல்
தண்ணீருடன் வாழ்ந்தவன்
தண்ணீரினுள் மாண்டுவிட்டான்
தண்ணீரில் மீன்கள் மிதக்கும்
சடலங்கள் மிதக்கும் கொடுமையிது
கண்டு அடங்கினையா..??
மீண்டும் மீண்டும் வந்தாய்
மூன்று முறை வந்தாய்
முறையா இது..??
ஒன்றா இரண்டா - உன்னோடு
ஒட்டி உறவாடிய
ஒவ்வொரு வீட்டிலும்
ஓலம் மரண ஓலம்
இறந்த உயிர்களை வைத்து
ஓவென்று அழுதிட
ஒரு குடிலில்லை
அத்தனையும்
அடித்துச்சென்றாயே
ஆடு மாடுகள் போல
ஆங்காங்கே
மனித உடல்கள்
மாண்டு கிடக்கும் கோலம்
மனித வரலாற்றில்
மாறாத வடுவாகும்
பிணக்கோலம் போட்டாய்
கோலம் நீ போட
கொண்டு சென்றது எம்மக்களா...??
நாடகம் நீ போட
நாதியற்றுப்போனது
பச்சிளம் பாலகரா..??
பொறுக்காது இது
ஒரு கணம் நீ நின்று
சிந்தித்திருந்தால் தெரிந்திருப்பாய்..!
சீற்றம் நீ கொள்ள
சின்னஞ்சிறு பிஞ்சுகள்
என்ன செய்தன..??
வாரிக்கொண்டு போனாயே..??
பண்டிகைக்காய்
பலகாரம் செய்து
பாத்துப்பாத்து துணியெடுத்து
பலருடன் கூடி உண்டது
செரிக்க முன்னே
சொத்துப்போய் கிடக்கும்
காட்சியிது காண்பாயா..?? நீ
செய்து விட்ட காரியத்தின்
காரணம் தான் சொல்வாயா...??
பாய்ந்து பகையாய் வந்த
அலைகள் செய்த கொடுமையில்
அமைதியாய் அடங்கின உயிர்கள்
நீ மட்டும் இன்னும்
அடித்துக் கொண்டிருக்கிறாய்..
அகங்கார தொனியுடன்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->