10-30-2004, 07:39 AM
இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ?
நான் தான் யாப்;பாணத்திலை இருந்து உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச சுப்பைய வாத்தியார்தான் இந்த கடிதத்தை எழுதிறன். லண்டனிலை இருக்கிற எங்கடை சனத்தோடை ஓருக்கா கதைக்க வேணும் என்று பலநாள் யோசிச்சு கொண்டு இருந்தனான் இப்பதான் சரியான நேரம் கிடைசிருக்குது.
என்ன யோசி;க்கிறியள்? இவர் யார் எங்களோடை கதைக்க என்றுதானே? நீங்கள் யோசிக்கிறது சரிதான் புள்ளையள். என்ன செய்யிறது மனம் கேக்குது இல்லையே நீங்கள் உங்கை இருந்து செய்யிற விளையாட்டை கேக்கேக்க தம்பியவை ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோ இங்கை இருக்கிற பெடியள் எல்லாம் அடுத்ததா ஒரு பொங்கு தமிழை யாப்பாணத்திலை நடாத்துவம் என்று யோசித்து கொண்டிருக்கிறாங்கள். நீங்கள் என்னடாப்பா செய்யிறியள்? உங்களை மாதிரி பெடியங்கள் தானே கனடாவிலையும் ஓடியாடி செய்தவங்களாம். தம்பியவை உங்களை மாத்திரம் குறை சொல்லேல உங்கை இருக்கிற எல்லாருக்குந்தான் சொல்லுறன்.
போன கிழமை தான் என்ர பாலிய சினேகிதன் ஒருத்தன் உங்கை இருந்து இங்கை வந்தவன். ஒரு எட்டு அவனைப்போய் சந்தி;ச்ச பிறகுதான் உங்கை என்ன நடக்குது என்று தெரியுது. எங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது போலதான் கிடக்குது. இருக்கிற இடத்திலாவது நிம்மதியா இருங்கோவன் புள்ளையள்.
எதுக்கெடுத்தாலும் போட்டி. எதுதில போட்டியா இருக்கிறது என்று ஒரு வரமுறை தெரியாமல் எல்ல இருக்கிறியள் போல கிடக்கு. நான் என்னத்தை சொல்லுறன் என்று விளங்கேலையே? அதுதான் உங்கை இருக்கிற கோயில்களை தான் சொல்றன். கடவுள் என்ன பாவம் செய்தவர் அவற்றை பேரை சொல்லி அடிபடாதைங்கோ. அவர் ஒன்றை செய்தா நானும் அதிலையும் பாக்க கூட செய்ய வேணும் என்டு யோசிக்காதைங்கோ? அவர் கோயிலை சுத்தி தேர் இழுத்தா நான் றோட்றோட்டா இழுப்பன் எண்டு வெளிக்கிடாதைங்கோ. உங்கடை இந்த போட்டியலை நல்ல விசயத்திலை காட்டுங்கோ. அதுதான் தம்பியவை கனடாவிலை செய்த பொங்கு தமிழிலும் பாக்க பெரிசா செய்ய வேணும் என்று யோசிங்கோ?
அடுத்தது தம்பியவை உந்த பேப்பர்- இரண்டு முண்டு பேர் சேர்ந்தோனை இலவசமா பேப்பரை தொடங்கறியளாம். நல்ல விசியம் தான் புள்ளையள் பேப்பர் தொழில் தம்பி புனிதமானது. உதுக்காவே தம்பி நிமலராசன் நடேசன் எல்லாம் உயிரைக் கொடுத்திருக்கினம். நீங்கள் என்;னண்டா யாரோ கஷ்டபட்டு எடுத்த செய்தியை இருந்த இடத்திலை இருந்து கொண்டு இந்தியாவிலை இருந்து வாறா புத்தகத்திலை இருந்தும் எதாவது கொஞ்சத்தை எடுத்து பத்தாததுக்கு இப்பதானையாம் கொம்பிரரிலை எல்லாம் வருதாமே அதையும் எடுத்து போட்டு எங்கையாவது ஒரு இடத்திலை உங்களுக்கு வேண்டாத ஆக்களை பற்றி எழுதிவிட பேந்து என்ன குடும்பி பிடி சண்டை தானே. உங்கை இருந்து வாற பேப்பர் இரண்டு முண்டை என்ர நண்பன் பாக்க தந்தவன். அதை பாக்கேக்கை விளங்குது. தயவு செய்து இப்படி அடிபடாதைங்கோ. உங்கடை பேப்பருக்குளாலை மக்களை ஒண்டுதிரட்டி உந்த பொங்கு தமிழை ஒருக்கா நடாத்துங்கோவன்.
மற்றது என்ர சினேகிதன் சொன்னான். உங்கையாம் சமரோ கிமரோ அதுதான் வெய்யில் காலம் வந்த உடனேயாம் புத்துக்கிலை ஒழிஞ்சிருக்கிற சங்கம் எல்லாம் ஆண்டு விழா கொண்டாட தொடங்கிடுவியளாம்.. அதுக்கெண்டே நல்ல கலர் பக்கத்திலை புத்தகம் வேறையடிக்கிறியள் பாத்தன். அதிலை ஏதேன் நல்ல விசியம் இருக்குமெண்டால் உங்களுக்கிலேயே ஓருத்தரை ஓருத்தர் புகழ்ந்து எழுதிறியள்.
ஏன் ராசா இந்த வேலை. அதுதான் பரவாயில்லை எண்டு பாத்தா ஒரு பள்ளிக்கூடத்துக்கு இரண்டு சங்கம் வேறை என்னடாப்பா உதுகள். தம்பியவை. அதுமாத்திரமே! உந்த பல்கலைக்கழகத்திலை படிக்கிற பெடியள் என்ன எண்டு பாத்தாவாம் டிஷ்கோவோ குஷ்கோவோ என்று நோட்டிசு அடிச்செல்ல நிகழ்ச்சி வைக்கிறிங்களாம். தம்பியவை உங்கடை வயதுப்பெடியள் தான் இங்கை ஆமிக்காரனுக்குள்ள இருந்துகொண்டு முதலாவது பொங்கு தமிழை நடாத்தினவங்கள் தெரியும்தானே? கனடாவிலையும் இப்படி பெடியங்கள் தானாம் முன்னுக்கு நிண்டு செய்தவங்களாம்.
தம்பியவை அதுக்காக உங்களை டிஷ்கோவுக்கு போகவேணாம் எண்டு சொல்லலே. உந்த வயதிலை தான் எல்லாம் செய்ய வேணும். ஆனாலும் அதிலும் பாக்க பெரிய கடமை எல்ல ஒன்று முன்னுக்கு இருக்குது.
சினேகிதன் சொன்னான் உங்கையாம் கிட்டத்தட்ட இருப இருபதைஞ்சு கோயில் இருக்காம். இலவச பேப்பர் என்று பார்த்தா எல்லாஞ் சேர்ந்து ஒரு பத்து வருமாம். உந்த சங்கங்கள் சின்னன் பெருசு என்று எடுத்து பார்த்தா ஒரு முப்பது நாப்பது வருமாம். இப்படி நல்ல வசதியா தான் இருக்கிறியள். நீங்கள் எல்லாரும் ஒருக்கா ஒண்டா சேந்தா இந்த பொங்கு தமிழை நல்லா நடாத்தலாம் தானே?. என்ன காசுக்கு என்ன செய்யுறது என்று யோசிக்கிறியளே? அதுக்கு கவலை படாதைங்கோ. சும்மா சும்மா யார் யாருக்கோ பாரட்டு விழா செய்யிறம். அங்கை கூழ் ஊத்திறம் இச்ச கஞ்சி ஊத்திறம் என்று வெளிக்கிட்டு திரியிறவங்களுக்கெல்லாம் காசு கொடுக்கிற எங்கடை வியாபாரிமார் பொங்கு தமிழுக்கு காசு தரமாட்டினமா?
சும்மா இருந்தா நடக்காது. எல்லாரும் ஒருக்கா வெளிக்கிடுங்கோ. இலண்டனில பொங்கு தமிழை பொங்க வைச்சிடுவம் என்று பொங்குங்கோ. இந்த கட்டை கட்டையில போறத்துக்கு முதல் இலண்டன் பொங்கு தமிழ் நடந்ததாம் என்று கேட்டுட்டு போவம்.
சரி தம்பியவை நல்ல செய்தி கேள்விப்பட்டா மீண்டும் கடிதம் எழுதுறன். கோவிக்காதைங்கோ. ஒரு வேகத்திலை எல்லாருக்கும் பேசிப்போட்டன் திரும்பவும் து}ஷணத்திலை பேச வைச்சிடாதைங்கோ. நல்ல செய்தியா பதிலை போடுங்கோ.
இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
சுப்பையா வாத்தியார்
நன்றி:தமிழ்நாதம்
நான் தான் யாப்;பாணத்திலை இருந்து உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச சுப்பைய வாத்தியார்தான் இந்த கடிதத்தை எழுதிறன். லண்டனிலை இருக்கிற எங்கடை சனத்தோடை ஓருக்கா கதைக்க வேணும் என்று பலநாள் யோசிச்சு கொண்டு இருந்தனான் இப்பதான் சரியான நேரம் கிடைசிருக்குது.
என்ன யோசி;க்கிறியள்? இவர் யார் எங்களோடை கதைக்க என்றுதானே? நீங்கள் யோசிக்கிறது சரிதான் புள்ளையள். என்ன செய்யிறது மனம் கேக்குது இல்லையே நீங்கள் உங்கை இருந்து செய்யிற விளையாட்டை கேக்கேக்க தம்பியவை ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோ இங்கை இருக்கிற பெடியள் எல்லாம் அடுத்ததா ஒரு பொங்கு தமிழை யாப்பாணத்திலை நடாத்துவம் என்று யோசித்து கொண்டிருக்கிறாங்கள். நீங்கள் என்னடாப்பா செய்யிறியள்? உங்களை மாதிரி பெடியங்கள் தானே கனடாவிலையும் ஓடியாடி செய்தவங்களாம். தம்பியவை உங்களை மாத்திரம் குறை சொல்லேல உங்கை இருக்கிற எல்லாருக்குந்தான் சொல்லுறன்.
போன கிழமை தான் என்ர பாலிய சினேகிதன் ஒருத்தன் உங்கை இருந்து இங்கை வந்தவன். ஒரு எட்டு அவனைப்போய் சந்தி;ச்ச பிறகுதான் உங்கை என்ன நடக்குது என்று தெரியுது. எங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது போலதான் கிடக்குது. இருக்கிற இடத்திலாவது நிம்மதியா இருங்கோவன் புள்ளையள்.
எதுக்கெடுத்தாலும் போட்டி. எதுதில போட்டியா இருக்கிறது என்று ஒரு வரமுறை தெரியாமல் எல்ல இருக்கிறியள் போல கிடக்கு. நான் என்னத்தை சொல்லுறன் என்று விளங்கேலையே? அதுதான் உங்கை இருக்கிற கோயில்களை தான் சொல்றன். கடவுள் என்ன பாவம் செய்தவர் அவற்றை பேரை சொல்லி அடிபடாதைங்கோ. அவர் ஒன்றை செய்தா நானும் அதிலையும் பாக்க கூட செய்ய வேணும் என்டு யோசிக்காதைங்கோ? அவர் கோயிலை சுத்தி தேர் இழுத்தா நான் றோட்றோட்டா இழுப்பன் எண்டு வெளிக்கிடாதைங்கோ. உங்கடை இந்த போட்டியலை நல்ல விசயத்திலை காட்டுங்கோ. அதுதான் தம்பியவை கனடாவிலை செய்த பொங்கு தமிழிலும் பாக்க பெரிசா செய்ய வேணும் என்று யோசிங்கோ?
அடுத்தது தம்பியவை உந்த பேப்பர்- இரண்டு முண்டு பேர் சேர்ந்தோனை இலவசமா பேப்பரை தொடங்கறியளாம். நல்ல விசியம் தான் புள்ளையள் பேப்பர் தொழில் தம்பி புனிதமானது. உதுக்காவே தம்பி நிமலராசன் நடேசன் எல்லாம் உயிரைக் கொடுத்திருக்கினம். நீங்கள் என்;னண்டா யாரோ கஷ்டபட்டு எடுத்த செய்தியை இருந்த இடத்திலை இருந்து கொண்டு இந்தியாவிலை இருந்து வாறா புத்தகத்திலை இருந்தும் எதாவது கொஞ்சத்தை எடுத்து பத்தாததுக்கு இப்பதானையாம் கொம்பிரரிலை எல்லாம் வருதாமே அதையும் எடுத்து போட்டு எங்கையாவது ஒரு இடத்திலை உங்களுக்கு வேண்டாத ஆக்களை பற்றி எழுதிவிட பேந்து என்ன குடும்பி பிடி சண்டை தானே. உங்கை இருந்து வாற பேப்பர் இரண்டு முண்டை என்ர நண்பன் பாக்க தந்தவன். அதை பாக்கேக்கை விளங்குது. தயவு செய்து இப்படி அடிபடாதைங்கோ. உங்கடை பேப்பருக்குளாலை மக்களை ஒண்டுதிரட்டி உந்த பொங்கு தமிழை ஒருக்கா நடாத்துங்கோவன்.
மற்றது என்ர சினேகிதன் சொன்னான். உங்கையாம் சமரோ கிமரோ அதுதான் வெய்யில் காலம் வந்த உடனேயாம் புத்துக்கிலை ஒழிஞ்சிருக்கிற சங்கம் எல்லாம் ஆண்டு விழா கொண்டாட தொடங்கிடுவியளாம்.. அதுக்கெண்டே நல்ல கலர் பக்கத்திலை புத்தகம் வேறையடிக்கிறியள் பாத்தன். அதிலை ஏதேன் நல்ல விசியம் இருக்குமெண்டால் உங்களுக்கிலேயே ஓருத்தரை ஓருத்தர் புகழ்ந்து எழுதிறியள்.
ஏன் ராசா இந்த வேலை. அதுதான் பரவாயில்லை எண்டு பாத்தா ஒரு பள்ளிக்கூடத்துக்கு இரண்டு சங்கம் வேறை என்னடாப்பா உதுகள். தம்பியவை. அதுமாத்திரமே! உந்த பல்கலைக்கழகத்திலை படிக்கிற பெடியள் என்ன எண்டு பாத்தாவாம் டிஷ்கோவோ குஷ்கோவோ என்று நோட்டிசு அடிச்செல்ல நிகழ்ச்சி வைக்கிறிங்களாம். தம்பியவை உங்கடை வயதுப்பெடியள் தான் இங்கை ஆமிக்காரனுக்குள்ள இருந்துகொண்டு முதலாவது பொங்கு தமிழை நடாத்தினவங்கள் தெரியும்தானே? கனடாவிலையும் இப்படி பெடியங்கள் தானாம் முன்னுக்கு நிண்டு செய்தவங்களாம்.
தம்பியவை அதுக்காக உங்களை டிஷ்கோவுக்கு போகவேணாம் எண்டு சொல்லலே. உந்த வயதிலை தான் எல்லாம் செய்ய வேணும். ஆனாலும் அதிலும் பாக்க பெரிய கடமை எல்ல ஒன்று முன்னுக்கு இருக்குது.
சினேகிதன் சொன்னான் உங்கையாம் கிட்டத்தட்ட இருப இருபதைஞ்சு கோயில் இருக்காம். இலவச பேப்பர் என்று பார்த்தா எல்லாஞ் சேர்ந்து ஒரு பத்து வருமாம். உந்த சங்கங்கள் சின்னன் பெருசு என்று எடுத்து பார்த்தா ஒரு முப்பது நாப்பது வருமாம். இப்படி நல்ல வசதியா தான் இருக்கிறியள். நீங்கள் எல்லாரும் ஒருக்கா ஒண்டா சேந்தா இந்த பொங்கு தமிழை நல்லா நடாத்தலாம் தானே?. என்ன காசுக்கு என்ன செய்யுறது என்று யோசிக்கிறியளே? அதுக்கு கவலை படாதைங்கோ. சும்மா சும்மா யார் யாருக்கோ பாரட்டு விழா செய்யிறம். அங்கை கூழ் ஊத்திறம் இச்ச கஞ்சி ஊத்திறம் என்று வெளிக்கிட்டு திரியிறவங்களுக்கெல்லாம் காசு கொடுக்கிற எங்கடை வியாபாரிமார் பொங்கு தமிழுக்கு காசு தரமாட்டினமா?
சும்மா இருந்தா நடக்காது. எல்லாரும் ஒருக்கா வெளிக்கிடுங்கோ. இலண்டனில பொங்கு தமிழை பொங்க வைச்சிடுவம் என்று பொங்குங்கோ. இந்த கட்டை கட்டையில போறத்துக்கு முதல் இலண்டன் பொங்கு தமிழ் நடந்ததாம் என்று கேட்டுட்டு போவம்.
சரி தம்பியவை நல்ல செய்தி கேள்விப்பட்டா மீண்டும் கடிதம் எழுதுறன். கோவிக்காதைங்கோ. ஒரு வேகத்திலை எல்லாருக்கும் பேசிப்போட்டன் திரும்பவும் து}ஷணத்திலை பேச வைச்சிடாதைங்கோ. நல்ல செய்தியா பதிலை போடுங்கோ.
இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
சுப்பையா வாத்தியார்
நன்றி:தமிழ்நாதம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->