அப்பு கனேஸ்,
எழுதுகிறேன் என பிழையாக எடுக்க வேண்டாம். உமது எழுத்துக்களிலிருந்து தெரிகிறது,
*உமக்கு படிப்பறிவு என்பது குறைவு
*அதனால் விளங்கிக் கொள்ளும் தன்மையும் குறைவு
*இதைச் சிலர் தமது தேவைகளுக்கு பயன் படுத்துகிறார்கள்
*அவர்கள் ஓடித் தப்பி விடுவார்கள் இல்லை தமக்கும் உமக்கும் தொடர்பில்லை என்று விடுவார்கள்
*பின் அனுபவிப்பது நீர்தான்.
நீர் எழுதினீர்....
Quote:மோகன் தனிப்பட்டவர்களை விமர்சித்து எழுதுபவர்களை நிறுத்துங்கள் அப்படி நிறுத்தா விட்டால் உமது மனைவியைப்பற்றி எனது தளத்தில் எழுதுவேன்
*இதன் தாக்கம் தெரியுமா?
*இதற்கு மன நஸ்ட சட்ட நடவடிக்கை எடுக்கலாமென உமக்கு புரியுமா?
*அதை சந்திக்க பண வசதி உம்மிடம் உள்ளதா?
*காலம் முழுக்க அனுபவிக்க வேண்டுமென உமக்கு புரியுமா?
*இல்லை வேறொருவர் இங்கு வந்து உமது குடும்பத்தப் பற்றி எழுத எவ்வளவு நேரமாகும்?
உமது அம்மா, அப்பா கஸ்டப்பட்டு இங்கு அனுப்பியது நாலெலுத்தைப் படித்து தமக்குப் பின் உதவியாக இருப்பீரென! ஆனால் நீரோ நாசமாகப் போவேன் என நிற்கின்றீர். நானும் லண்டனில் தான் வசிக்கின்றேன் உமக்கு இந்தக் கும்பலகளிலிருந்து விலகுவதற்கு உதவி தேவையாயின் உதவ தயாராகவுள்ளேன்.
ஒன்றை செய்ய எழுத முன் ஒன்றுக்கு நூறோ இல்லை ஆயிரம் தரம் யோசியும்.