Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எப்படித்தான்...?
#1
எப்படித்தான்...?

நீண்ட நாளின் பின்னான
இந்த இரவு எங்களுக்காய்
தனிமையில் காய்கிறது.

வழமைபோல் இந்த இரவும்
அரசியல்,சமூகம்,
ஆணாதிக்கம்;...பெண்ணியம்...,
அப்படித்தானே ஆரம்பித்தோம்.
யாருக்காகவோ நாங்களே
எங்கள் மனங்களைச்
சுட்டுக் கொள்ளும் வழமை
இன்றும் என்றையும் போல....

எத்தனையோ கவனமாய்
எடுத்து வந்த வார்த்தைகள்...
எப்படித்தான்....?
'மௌனக்கண்ணீர்" வடித்து
எங்கள் மனங்களைச் சிதைக்கும்
மகத்துவம் கற்றதோ....?

27.08.04.
Reply
#2
மௌனத்தின் மொழி மனங்களை சிதைக்கும் என்று இன்றுதான் அறிந்துகொண்டேன்

புரிகிறது கண்ணீர் வழிமொழிந்த மௌன வார்த்தைகள் வீரியம் பெற்றவையாகி நிற்கின்றது

வாழ்த்தக்கள் சாந்தி அக்கா !

எதையோ பட்டும் படாமல் தொட்டுச்செல்கின்றீர்கள்
[b] ?
Reply
#3
Quote:யாருக்காகவோ நாங்களே
எங்கள் மனங்களைச்
சுட்டுக் கொள்ளும் வழமை
இன்றும் என்றையும் போல....
அடுத்தவை கதை எடுத்தாலே பிரச்சனை தானா....?? வாழ்த்துக்கள் சாந்தி அக்கா....! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
shanthy Wrote:எத்தனையோ கவனமாய்
எடுத்து வந்த வார்த்தைகள்...
எப்படித்தான்....?
'மௌனக்கண்ணீர்" வடித்து
எங்கள் மனங்களைச் சிதைக்கும்
மகத்துவம் கற்றதோ....?

<b>நன்று. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் அக்கா</b>
----------
Reply
#5
Quote:வழமைபோல் இந்த இரவும்
அரசியல்,சமூகம்,
ஆணாதிக்கம்;...பெண்ணியம்...,
அப்படித்தானே ஆரம்பித்தோம்.
யாருக்காகவோ நாங்களே


நல்ல நல்ல வரிகள்.... தொடர்ந்து கவிதை தர வாழ்த்துக்கள் அக்கா
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)