08-27-2004, 12:33 AM
எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?
நீழும் இரவின் கருமைக்குள்
கண்ணெங்கும் விளக்காக....
அச்சத்தின் விரல்களுக்குள்
ஆவிகள் நசிபட
வேலி பிரியும்..., நாய் குரைக்கும்....,
விதம் விதமாய்
ஒலியெழும் திசைபார்த்து
விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு
உத்தரவாதம் தராத இரவுகள்.
வேட்டதிரும்....,
எங்கோ ஒரு வீட்டின் மகனோ , மகளோ....
அவர்களுக்கு இரையாக....
இருளோடு ஒரு சாவு உறுதியாய்....
'சலோ" என்றபடி விடிகாலை - அவர்கள்
வீதியுலா வெளிக்கிடுவர்.
புலியொன்றைக் கொன்றதாய் பொய்சொல்லி
ஊர்வாயில் மெய்யாக்கிப் போய்விடுவர்.
சந்திகளில் அரணமைத்து
சாவிழுத்தக் காத்திருக்கும்
மந்திகளின் மணம் உணரும்
மூக்குத் துவாரங்கள் - உயிர்
மூச்சையே அதிர்விக்கும்.
வீதியில் தேவைகட்காய்
விரையும் மனிதரின்
உயிர்களில் வலியெடுக்கும்....
பெண்களைக்காணும் பனைமரத்து
அரணிருக்கும் பேய்களின்
இடையிருக்கும் உடை நழுவ
விரல் நீட்டி அழைக்கும்
விழுங்கிடும் பார்வைகளில்
உயிர் மூச்சே நின்றுவிடும்....,
பாவாடை கட்டிய ஒரு பூவின் இதழ்கள்
பற்களின் அடையாளங்களுடன்
பனைவடிலிப் பற்றையில் பிணமாகும்.
இப்படித்தான் அவர் வருகை
சாவையும் , கண்ணீரையும் ,
உறவுப்பிரிவையும் , ஊரழும் துயரையும்
தந்து போன உண்மைகள்.
எதை மறக்க....? எதை நினைக்க.....?
என்றுதான் எமை வாழவிட்டார் நன்றியுரைக்க
எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?
நீழும் இரவின் கருமைக்குள்
கண்ணெங்கும் விளக்காக....
அச்சத்தின் விரல்களுக்குள்
ஆவிகள் நசிபட
வேலி பிரியும்..., நாய் குரைக்கும்....,
விதம் விதமாய்
ஒலியெழும் திசைபார்த்து
விக்கித்துப் போய்விடும் உயிர்களுக்கு
உத்தரவாதம் தராத இரவுகள்.
வேட்டதிரும்....,
எங்கோ ஒரு வீட்டின் மகனோ , மகளோ....
அவர்களுக்கு இரையாக....
இருளோடு ஒரு சாவு உறுதியாய்....
'சலோ" என்றபடி விடிகாலை - அவர்கள்
வீதியுலா வெளிக்கிடுவர்.
புலியொன்றைக் கொன்றதாய் பொய்சொல்லி
ஊர்வாயில் மெய்யாக்கிப் போய்விடுவர்.
சந்திகளில் அரணமைத்து
சாவிழுத்தக் காத்திருக்கும்
மந்திகளின் மணம் உணரும்
மூக்குத் துவாரங்கள் - உயிர்
மூச்சையே அதிர்விக்கும்.
வீதியில் தேவைகட்காய்
விரையும் மனிதரின்
உயிர்களில் வலியெடுக்கும்....
பெண்களைக்காணும் பனைமரத்து
அரணிருக்கும் பேய்களின்
இடையிருக்கும் உடை நழுவ
விரல் நீட்டி அழைக்கும்
விழுங்கிடும் பார்வைகளில்
உயிர் மூச்சே நின்றுவிடும்....,
பாவாடை கட்டிய ஒரு பூவின் இதழ்கள்
பற்களின் அடையாளங்களுடன்
பனைவடிலிப் பற்றையில் பிணமாகும்.
இப்படித்தான் அவர் வருகை
சாவையும் , கண்ணீரையும் ,
உறவுப்பிரிவையும் , ஊரழும் துயரையும்
தந்து போன உண்மைகள்.
எதை மறக்க....? எதை நினைக்க.....?
என்றுதான் எமை வாழவிட்டார் நன்றியுரைக்க
எல்லாம் நாசமே இதிலெங்கே நேசமாம்....?
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->