03-04-2004, 04:49 PM
<img src='http://www.tamilcinema.com/cinenews/images/vikram12.jpg' border='0' alt='user posted image'>
ஷங்கரின் புதுபடம் - அந்நியன் பட பூஜை
பாய்ஸ் படத்தின் தோல்வியினால் திக்குமுக்காடி போயிருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஷங்கர். இனிமேல் அவரை நம்பி யார் படம் தருவா? என்றெல்லாம் நாக்கு மேல் பல்லை போட்டு நாக்கு கூசாமல் பேசியது, ஷங்கரை வானாளாவ புகழ்ந்த அதே பொதுஜனம்! வாய் வலிக்க பேசி வம்பளப்பவர்கள் வளர்க்கட்டும். என் கடன் படம் செய்து கிடப்பதே என்று முடிவெடுத்த ஷங்கர் வெயிட்டான தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கதை சொல்லி, விக்ரம் நடிக்க அந்நியன் என்ற படத்திற்கு பூஜை போட்டுவிட்டார். இதுவரைக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் எடுத்த எந்த படத்திற்கும் பிரமாண்டமாக பூஜை போட்டதில்லை. ஆபிஸ் பூஜை என்று சொல்லி, நாலு பேரை நிற்க வைத்து ஸ்டில் எடுத்து அந்த ஸ்டில்லை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முறை நடந்த கதையே வேறு. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமாக பூஜை போட்டார்கள். ஏ.வி.எம் வாயிலில் இருந்தே விக்ரமின் விதவிதமான ஸ்டில்கள், கொடிகள், தோரணங்கள் என்று ஒரே ரகளையாக இருந்தது.
விழா நடந்த ஏ.சி ஹாலில் அறிஞர்கள், தத்துவ மேதைகள், கவிஞர்களின் பொன் மொழிகளை சுவற்றில் எழுதியிருந்தார்கள். வெறுங்கை என்பது மூடத்தனம்: விரல்கள் பத்தும் மூலதனம் -கவிஞர் காசி.ஆனந்தன் என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நம்மை ஈர்த்தது. (உண்மையில் அந்த கவிதையை எழுதியது தாராபாரதி என்ற கவிஞராயிற்றே..)
இதுவரை ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம், வர்ணஜாலம் படங்களை அடுத்து சதாதான் இந்த படத்தின் ஹீரோயின் என்று சொல்கிறார்கள். அநேகமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்படலாம். அந்நியனில் விக்ரமுக்கு மூன்று வேடங்களாம். ஒரு விக்ரமுக்கே ஓ போடும் ரசிகர்கள் பொங்க பொங்க சந்தோஷப்படுங்களேன்...
நன்றி - தமிழ் சினிமா
ஷங்கரின் புதுபடம் - அந்நியன் பட பூஜை
பாய்ஸ் படத்தின் தோல்வியினால் திக்குமுக்காடி போயிருந்தார் அப்படத்தின் இயக்குனர் ஷங்கர். இனிமேல் அவரை நம்பி யார் படம் தருவா? என்றெல்லாம் நாக்கு மேல் பல்லை போட்டு நாக்கு கூசாமல் பேசியது, ஷங்கரை வானாளாவ புகழ்ந்த அதே பொதுஜனம்! வாய் வலிக்க பேசி வம்பளப்பவர்கள் வளர்க்கட்டும். என் கடன் படம் செய்து கிடப்பதே என்று முடிவெடுத்த ஷங்கர் வெயிட்டான தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் கதை சொல்லி, விக்ரம் நடிக்க அந்நியன் என்ற படத்திற்கு பூஜை போட்டுவிட்டார். இதுவரைக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் எடுத்த எந்த படத்திற்கும் பிரமாண்டமாக பூஜை போட்டதில்லை. ஆபிஸ் பூஜை என்று சொல்லி, நாலு பேரை நிற்க வைத்து ஸ்டில் எடுத்து அந்த ஸ்டில்லை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த முறை நடந்த கதையே வேறு. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரமாண்டமாக பூஜை போட்டார்கள். ஏ.வி.எம் வாயிலில் இருந்தே விக்ரமின் விதவிதமான ஸ்டில்கள், கொடிகள், தோரணங்கள் என்று ஒரே ரகளையாக இருந்தது.
விழா நடந்த ஏ.சி ஹாலில் அறிஞர்கள், தத்துவ மேதைகள், கவிஞர்களின் பொன் மொழிகளை சுவற்றில் எழுதியிருந்தார்கள். வெறுங்கை என்பது மூடத்தனம்: விரல்கள் பத்தும் மூலதனம் -கவிஞர் காசி.ஆனந்தன் என்று எழுதப்பட்ட ஒரு கவிதை நம்மை ஈர்த்தது. (உண்மையில் அந்த கவிதையை எழுதியது தாராபாரதி என்ற கவிஞராயிற்றே..)
இதுவரை ஷங்கர் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ். ஜெயம், வர்ணஜாலம் படங்களை அடுத்து சதாதான் இந்த படத்தின் ஹீரோயின் என்று சொல்கிறார்கள். அநேகமாக கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்படலாம். அந்நியனில் விக்ரமுக்கு மூன்று வேடங்களாம். ஒரு விக்ரமுக்கே ஓ போடும் ரசிகர்கள் பொங்க பொங்க சந்தோஷப்படுங்களேன்...
நன்றி - தமிழ் சினிமா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->