Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழ இந்திய புரிந்துணர்வு - கருத்துப்பகிர்வு
Quote:ம்.. இரண்டு வகையானோர் எமது போராட்டம் குறித்து தவறான புரிந்துணர்வும் விளக்கமின்றியும் அதனால் தவறான அபிப்பிராயமும் கொண்டு இருக்கின்றனர்.
ஒரு வகையானோர் ஏற்கனவே மனதளவில் புலியெதிர்ப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் கதைப்பவர்கள். மற்றொருவகையினர் உண்மையிலேயே தெளிவில்லாமல், (உண்மையில் ஒரு பிறநாட்டைச் சேர்ந்தவரிடம் இயல்பில் அந்த தெளிவை நாம் எதிர்பார்க்க முடியாது.)தமது சந்தேகங்களை முன் வைப்பவர்கள். இரண்டாம் வகையினருக்கு தெளிவு படுத்த வேண்டியது நமது பொறுப்பே. அவர்களது ஒவ்வொரு கேள்விகளுக்கும் ஆணித்தரமாக ஆதார புூர்வமாக பதில்களை சொல்ல வேண்டும். ஒரு கட்டத்தில் அவர் எந்தப் பிரிவிஇ சேர்ந்தவர் என்று தெரிந்து விடும். அவர் முதலாமவர் எனில் பேசிப் பயனில்லை. இரண்டாமவர் எனில் சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டும். இங்கே லக்கி லுக் மற்றும் ராஜா ஆகியோர் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களாக இருக்க கூடும் என நான் இந்தக் கணம் வரை நம்புகிறேன். அதனால்த்தான் பொறுமையாக பதில் சொல்லி கொண்டிருக்கிறேன்.

கிட்டத்தட்ட எல்லோரும் ஒரு நேர்கோட்டிற்கு வந்து விட்டார்கள் என்று நினைகின்றேன்.

தமிழீழ தமிழர்கள் தமிழீழத்தின் மேலுள்ள அதீத பற்றும் இந்திய தமிழர்கள் இந்தியாவின் மேலுள்ள அதீதபற்றும் ஈழ-இந்திய தமிழர்களின் புரிந்துணர்வின்மையுமே பிரச்சினைகள் என்று நினக்கின்றேன். காவடியின் முயற்சி வெற்றி பெற வேண்டும். தனித்தனியாக இல்லாமல் அடுத்த சுற்றூ பேச்சில் மூன்று தரப்பும் கூட்டறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறேன். [இடையில் ஒட்டுக்குழுக்களால் பிரச்சினை வராமல் இருந்தால் சரி.]

<b>குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.</b>
.
Reply
Quote:தனித்தனியாக இல்லாமல் அடுத்த சுற்றூ பேச்சில் மூன்று தரப்பும் கூட்டறிக்கை விடுமாறு கேட்டு கொள்கிறேன்
ம்.. கிட்டத்தட்ட சரிவரும்.
, ...
Reply
கள உறவுகளே.. புலிகளின் அரசியல் ஆலோசகர் ஜெனிவா பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலிருந்து ஒரு பகுதியினை கீழே இடுகிறேன். புலிகள் எந்த அளவிற்கு இந்தியாவுடனான உறவை விரும்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி..

இந்தியா எமது தாயகப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள மிகப் பெரிய வல்லரசு. தமிழர் தாயகத்தில் அமைதியும் ஆனந்தமான சுூழ்நிலையும் நிலவினால் தான் இந்தியாவின் ஸ்திரமான நிலைக்கு அது ஏதுவாக அமையும்.
இந்தியா எமது பிரச்சினையில் நீண்ட காலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. சில கால கட்டத்தில் மிகவும் தீவிரமான அக்கறையை காட்டியது. அவர்கள் இராஜதந்திர, அரசியல் ரீதியாகவும் இராணுவ அழுத்தங்கள் மூலமாகவும் அக்கறை காட்டினார்கள். இப்பொழுதும் அவர்கள் அக்கறையோடு தான் செயற்பட்டு வருகின்றனர்.
இந்திய அரசைப் பொறுத்தவரை நோர்வே ஊடாக எமக்கு தரப்படும் தகவல்களைப் பொறுத்தவரை இந்தியா எமக்கு சொல்லியுள்ளது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்தும் இச் சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசியல் ரீதியாக ஒரு தீர்வைப் பெற முயற்சி செய்யுங்கள். தமிழ் மக்களுக்கு நாங்கள் உதவியாய் இருப்போம். தமிழர்களின் அபிலாசைகளை ஆதரிப்போம். தமிழர் தாயகத்தில் ஒரு பிரதேச சுயாட்சி ஏற்படுவதை இந்தியா விரும்புகிறது.
இதேவேளை, இந்தியாவின் பங்களிப்பை நாமும் விரும்புகிறோம். ஆனால், இந்தியாவின் இந்த பங்களிப்பு தமிழ் மக்களுக்கு நீதியையும் நியாயத்தையும் வழங்கக்கூடிய ஒரு பங்களிப்பாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.
இந்திய அரசுடன் எமக்கு மறைமுகமான தொடர்புகள் இருக்கிறது என்பதை மட்டும் தான் இப்போதைக்கு சொல்லமுடியும் எனவும் பாலசிங்கம் தெரிவித்தார்.

ஆகவே.. ம்... நான் என்ன சொல்வது..?
, ...
Reply
காவடி

பாலசிங்கமென்ன பிரபாகரன் இப்படிச் சொன்னாலும் பிரைச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கருத்தெழுத வருவோர்களுக்கு இவை காதில் ஏறாது.
<i><b> </b>


</i>
Reply
<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->காவடி

பாலசிங்கமென்ன பிரபாகரன் இப்படிச் சொன்னாலும் பிரைச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கருத்தெழுத வருவோர்களுக்கு இவை காதில் ஏறாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஆக மொத்தம் நாங்கள் எழுதும் கருத்து தான் இந்தியாவை எங்களுக்கு எதிராக வேலை செய்ய வைக்குது அப்படி தானே வசம்பு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
வினித் கொஞ்சம் விட்டுபிடியுங்கோவன் இந்த முறை. ஜேவிபி மாதிரி கூட்டறிக்கையை குழப்பிறன் எண்டு அடம்பிடிக்கிறீங்களே அய்யா?
Reply
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->அகிலன் அருவி, காவடியின் முயற்சியில் புரிந்துணர்விற்கு இன்னொரு சந்தர்ப்பத்தை குடுங்கோவன்?

கைச்சாத்திட்டு 4 வருடத்திற்கு பிறகு அமுல்படுத்தல் பற்றி கதைக்க ஒரு சுற்று அல்ல இரண்டாம் சுற்றுக்கும் சம்மதிக்கிறார்கள். நீங்கள் அந்த பொறுமை விட்டுக் கொடுப்பில் ஒரு பகுதியை இங்கே?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--QuoteBegin-Vasampu+-->QUOTE(Vasampu)<!--QuoteEBegin-->காவடி

பாலசிங்கமென்ன பிரபாகரன் இப்படிச் சொன்னாலும் பிரைச்சினைகளை உருவாக்க வேண்டுமென்று கருத்தெழுத வருவோர்களுக்கு இவை காதில் ஏறாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

குறுக்ஸ் இப்ப புரிதா
நாங்க அமைதியா இருந்தாலும் விடமாட்டன் எண்டுகொண்டு.

:roll: :roll: :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
இந்திய அரசு என்ன செய்யப் போகிறது?

* இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் இழுதில் சோலை என்பவர் எழுதிய கட்டுரை

* அமெரிக்கா அமைக்கும் ஆயுத வலைப்பின்னல் இந்தியாவுக்கும் ஆபத்தானதாகலாம்

மீண்டும் ஈழத் தமிழர்கள் அகதிகளாக, ஊமை மனிதர்களாக இராமேஸ்வரம் வரத் தொடங்கிவிட்டனர். இப்போது ஈழம் அமைதியாகத்தானே இருக்கிறது? ஏன் புலம் பெயர்ந்து வருகிறீர்கள்? என்று இங்குள்ளவர்கள் விசாரிக்கிறார்கள்.

`இப்போது போர் மூளவில்லைத்தான். ஆனால், போர்ச் சூழலை சிங்கள இராணுவம் வெகு வேகமாக உருவாக்கி வருகிறது. ஆங்காங்கே தமிழ் இளைஞர்களை சிங்கள இராணுவம் பிடித்துச் செல்கிறது. பலர் வீடு திரும்புவதேயில்லை. பாடசாலைகளை மூடுகிறார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெண்கள் எப்போதுமே ஆபத்தில்தான் இருக்கிறார்கள். பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் என்றுதான் இரவோடு இரவாக இங்கு வருகிறோம்' என்று அவர்கள் சோகத்தைப் பிழிகிறார்கள்.

இன்னொரு பக்கம் ஈழப் போராளிகளுக்காகவும் ஈழத் தமிழர்களுக்காகவும் பாடுபடுகிற பலர், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்தக் கொலைகார முகமூடி மனிதர்கள் யார் என்பது சிங்கள இராணுவத்துக்குத் தெரியும். அவர்கள் எந்தக் கூண்டிற்குள் இருந்து திறந்து விடப்படுகிறார்கள் என்பது ஈழத்து மக்களுக்குத் தெரியும்.

ஈழப் போராளிகளுக்கு எதிராக ஏற்கனவே இலங்கை அரசும் இராணுவமும் சில குழுக்களை உருவாக்கின. இப்போது இன்னொரு குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட குழுக்கள் முடமாகிவிட்டன. புதிய குழு மட்டும் தீட்டிய மரத்தையே பதம் பார்க்கத் துடிக்கிறது.

அந்தக் குழு எங்கிருந்து செயற்படுகிறது என்று கேட்டால், `அப்படி ஒரு குழு இருக்கிறதா?' என்று இலங்கை அரசு திரும்பக் கேட்கிறது. `இரைபோடும் மனிதனுக்குப் பருந்தை அடையாளம் தெரியவில்லை' என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் `கருணா குழு எங்கிருக்கிறது?' என்று இலங்கை அரசைக் கேட்டார். சாமி சத்தியமாய் தங்களுக்குத் தெரியாது என்று புத்தர்மீது அரசு சத்தியம் செய்தது.

ஆனால், கிழக்கு மாகாணத்துக்கு அவர் சென்றார். `கருணா குழு எங்கிருக்கிறது?' என்று இலங்கை இராணுவத்தைக் கேட்டார். சரியான பாதையை இராணுவம் தெளிவாக அடையாளம் காட்டியது. அங்கே எப்படிப் போகவேண்டும் என்றும் கூறியது.

ஆயுதம் ஏந்திய சிறிய சிறிய குழுக்களைக் கலைக்க வேண்டும் என்பது போர் நிறுத்த உடன்பாட்டின் ஓர் அம்சமாகும். ஆனால், அப்படி எந்தக் குழுவையும் இலங்கை அரசோ, இராணுவமோ கலைக்கவில்லை. அதற்கு மாறாக, நொண்டிகளுக்குத் தீனி போட்டு வளர்க்கின்றன. இதயத்தை இழந்துவிட்ட இன்னொரு தமிழனே, ஈழத் தமிழனைப் படுகொலை செய்ய வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள். வாடகை மனிதர்களுக்கு வீரம் என்பது எள் முனை அளவும் இருக்காது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. சர்வ ஆயுதங்களையும் தரித்த இலங்கை இராணுவம் சாதிக்க முடியாததை இந்தச் சப்பாணிகளா சாதிக்க முடியும்?

இலங்கை இராணுவம் தர்மக்கோடுகளை தார்பூசி அழித்துவிட்டது. போர் நிறுத்த உடன்பாட்டை மதிப்பதே இல்லை. சப்பாத்துக் கால்களால் மிதிக்கிறது. இதனை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இலங்கை அரசுக்கு எடுத்துக் கூறிவிட்டனர்.

அந்த அரசு என்ன செய்கிறது? பாராளுமன்றத்தை ஈழப் போராளிகள் தாக்குகிறார்கள் என்று கூட்டத்தையே தள்ளி வைத்துவிட்டது. பரிதாபம், கண்ணாடியில் தெரிகிற தங்கள் உருவங்களைப் பார்த்தே கிலி கொள்கிறார்கள்.

வட, கிழக்கு மாகாணங்களில் நடைபெறும் வன்முறைகளை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அங்கே போர் நிறுத்த உடன்பாட்டைச் சீர்குலைக்கின்ற சக்திகளை அடக்க வேண்டும். இல்லையெனில், மீண்டும் போர் மூள்வதைத் தடுக்க முடியாது என்று கண்காணிப்புக் குழுப் பேச்சாளர் எச்சரித்திருக்கிறார்.

இன்றைக்கு இலங்கை எரிமலையின் முகட்டில் அமர்ந்திருப்பதற்கு இலங்கை இராணுவமும் அந்த இராணுவம் தயார்படுத்தும் சிற்சில குழுக்களும்தான் காரணம் என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு கூறுகிறது.

இன்றுவரை, ஈழப் போராளிகளை அந்தக் குழு குற்றம் சாட்டவில்லை. தங்கள்மீது பழி படிந்துவிடக் கூடாது என்பதற்காக, துரோகிகளின் தாக்குதலையும் போராளிகள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையைப் போர் விளிம்பில் நிறுத்தியவர்களை இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்று இராணுவமும் பொலிஸும் கூறுகிறது. அவர்களே வளர்த்த நாகபாம்புகளை அவர்களுக்கே அடையாளம் தெரியவில்லை என்பதனை உலகம் நம்பத் தயாராக இல்லை.

ஒருபக்கம், `பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று இலங்கை அரசு கூறுகிறது. இன்னொரு பக்கம், `போர் நிறுத்த உடன்பாடு மனநிறைவு அளிக்கவில்லை' என்று சிங்கள இனவாத அமைச்சர்கள் கூறுகிறார்கள். இவர்கள் சமரசத்திற்கும் தயாராக இல்லை. இவர்களுடைய இராணுவம் போருக்கும் தயாராகவில்லை. தனித்தனியாக இயங்கும் சில தமிழ்க் குழுக்களை ஏவிவிட்டே ஈழப் போராளிகளை அழித்துவிடலாம் என்று தவறாகக் கணக்குப் போடுகிறார்கள்.

போர்நிறுத்த உடன்பாட்டுக்குப் பின்னர் தொடர்ந்து ஈழ மக்களும் போராளிகளும் தான் தாக்கப்படுகிறார்கள். கடற்பரப்பில் தங்கள் சக்தி என்ன? வான்வெளியில் தங்கள் வல்லமை என்ன? என்பதனை போராளிகள் மெய்ப்பித்த பின்னர், உடன்பாட்டை ஈழம் ஏற்றுக்கொண்டது. தோல்வி முனையில் நின்று உடன்பாட்டுக்குத் தலை அசைக்கவில்லை.

இராணுவமும் அதன் பொம்மைக் குழுக்களும், அவ்வப்போது சீண்டுவதைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கவனத்துக்கு ஈழப் போராளிகள் கொண்டு வருகிறார்கள். அதனை அந்தக் குழு இலங்கை அரசிடம் கேட்கிறது. அந்த அரசோ எரிச்சல் கொள்கிறது. இப்போது நோர்வே மீதே நம்பிக்கை இல்லை. `போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தேவையில்லை' என்று சிங்கள இனவாதிகள் சீறுகிறார்கள்.

அதே சமயத்தில், நோர்வே மீதோ போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் மீதோ இன்றுவரை இலங்கை அரசு நேரடியாக குற்றம்சாட்டவில்லை. அந்தக் குழு மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று இரு தரப்பும் தெரிவித்தால்தான் அந்தக் குழு வெளியேறும். இலங்கை இராணுவத்தின் குட்டிச்சாத்தான் வேலைகளை அந்தக் குழு மூலம்தான் ஈழப் போராளிகள் அம்பலத்துக்குக் கொண்டு வருகிறார்கள்.

இன்றுவரை ஈழப் போராளிகளை போர் நிறுத்தக் குழு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவில்லை. ஆனால், இலங்கை இனப்பிரச்சினைக்கு ஈழப் போராளிகள்தான் காரணமென எச்சரிக்கை விடுகிறார் சர்வதேச சட்டாம்பிள்ளை. சர்வதேச கசாப்புக் கடைக்காரர் சைவம் பேசுகிறார்.

ஈழத்து மக்களையும் போராளிகளையும் இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் இப்படிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார். அது அவருடைய வேலை அல்ல. ஆனாலும், தமது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த தமது தூதுவர்களையே அமெரிக்கா ஏவிவிடுகிறது.

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவர். மத்திய அரசையே எச்சரிக்கிறார். எந்தப் பிரச்சினையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கிறார். இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவரோ ஈழத்து மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார். நரிகள் நாட்டாண்மை செய்கின்றன.

திருகோணமலையில் தமது இராணுவத் தளத்தை அமைக்கத் தொடர்ந்து அமெரிக்கா முயற்சித்து வருகிறது. அதற்கு எதிராக இருப்பவர்கள் ஈழப் போராளிகள்தான்.

எனவே, சிங்கள இனவாதத்துக்கு ஆதரவாக, ஈழமக்களுக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுக்கிறது. ஈழப் போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா, சிங்கள இராணுவத்துக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது. முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர, நேபாளத்தில் போராடும் மக்களுக்கு எதிராக தமது ஆயுதக் கிடங்கை மன்னருக்காகத் திறந்துவிடுகிறது. இன்றுவரை, இராணுவத்தின் கோரக் கால்களில் விழிபிதுங்கி நிற்கும் மியான்மார் (பர்மா) மக்களுக்கு எதிராக இராணுவத்துக்கு துப்பாக்கிகளைத் தூக்கித் தருகிறது.

அமெரிக்கா நம்மைச் சுற்றி அமைக்கும் இந்த ஆயுத வலைப் பின்னல், ஓர் நாள் இந்தியாவை அச்சுறுத்துவதற்குப் பயன்படும்.

இந்திய அரசு என்ன செய்யப்போகிறது?
, ...
Reply
மட்டுறுத்தினருக்கும்....
சக யாழ்கள உறப்பினருக்கும.;.....
நியாயத்தின் பக்கம் நிற்க விரும்பும் இந்திய உறவுகளுக்கும்!

நான் எனது சின்னம் சிறு அறிவில் படுவதை எழுதுகிறேன். இந்த பகுதிக்கு தேவையென நினைக்கிறேன். தேவையில்லையென மட்டறுத்னர்கள் நினைத்தால் அகற்றிவிடுங்கள்.

ஈழவிடதலைப்போராட்டத்திற்கு தொன்று தொட்டு இந்திய அரசு துரோம் இழைத்தது என்பது உலகறிந்த உண்மை..... இது இன்னமும் தொடர்கிறதை அன்றாடம் நாம் பத்திரிகை செய்திகளில் படித்துக்கொண்டே இருக்கிறோம். ஏன் என்று கேட்கும் ஈழ தமிழருக்கு காலத்துக்கு காலம் மாறிய விடைகள்தான் கிடைக்கின்றன உண்மை எதுவானாலும் சரி
ஈழம் வெல்வது எங்களின் கடமை.... எங்களின் உரிமை இதை யார் எதிர்த்தாலும்...
பங்கம் விளைவித்தாலும்....
எமை எப்படி துற்றினாலும்...
ஈழம் வரும் வரை நாம் ஓய்வதில்லை! இது புலிகளின் நிலைப்பாடு.
ஆகவேதான் புலிகள் இதுபற்றி ஒருபோதும் அலட்டுவதில்லை
நடந்தவைகளை அனுபவங்களாக கொண்டு அவர்கள் தமது அடுத்த இலக்கு நோக்கி நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு காலத்தில் ஈழம் எட்டா கனியாக இருந்தது வெறும் கனவாகவே இருந்தது...... இப்போது ஒரு குறிப்பிட்ட பகுதியிலேனும் அது மெய்யாகிவிட்டது. கனவாக இருந்த காலத்தில் சிங்கள அரசின் ஓசி சோற்றில் வயிறு வளர்க்க விரும்பிய சில ஈழ அரசியல் வாதிகள் உந்த வேலையில்லா பெடியளின்ர கதையை கேட்டு வீணாக சொந்தபிள்ளைகளை கொலைகளத்துக்கு அனுப்புவதை ஒருபோதும் எண்ணாதீர்கள் என்று கூக்குரல் போட்டனர்...... அதற்காகத்தான் சிங்கள அரசு அவர்களுக்க சோறு போட்டது. எமது ஈழவிடுதலை போராட்டம் என்று தொடங்தியதோ. அன்றே துரோகிகளும் பிறப்பெடுத்துவிட்டார்கள் இவர்களில் சுயநலவாதிகள் பணபித்தர்கள் பெண்ணாசைபிடித்தவர்கள் பதவி ஆசைபிடித்தவர்கள் (இவர்களுக்குளும் ஓரு அபாவி கூட்டம் இருக்கிறது இவர்கள் தமிழ்ஈழம் என்பதே என்னவென்று தெரியாமல் போரடபோனவர்கள் பின்பு முரண்பாடுகளால் புலிகளை வெறுப்பவர்கள் ஆனால் ஏன் எதற்கு என்ற காரணம் தெரியாது) மதுஅடிமைகள் என்றுபல. சமூகத்துக்குள் சேர்ந்துவாழ்வதற்கு தாமாகவே அஞ்சி சமூகத்தில் இருந்து விலகி சுயஇன்பங்களுக்காக எதையும் செய்ய தயாரானவர்கள். இப்படியானவர்களை தமிழ் சமூதாயத்திற்குள் தேடி வலைவிரிப்பதுதான் இந்திய உளவுதறையினரினதும் சிறீலங்கா இராணுவ புலனாய்வுபிரிவினதும் முதல் கட்ட நடவடிக்கையாக இருந்தது. அதில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியும் கண்டார்கள். இந்தியாவின் தலையீடும் துரோகிகளின் துரோகமும் இல்லாவிடின் ஈழ விடுதலைப்போராட்டம் என்பது என்றோ வென்றிருக்ம். இதை இந்திய நண்பர்கள் மறுக்கலாம் ஆனால் இது உண்மை என்பது இந்திய அரசுக்கு தெரியும். இரண்டாவது உலகமகா யுத்தம் முடிந்த காலத்தில் இந்திய அரசில் பொதுநலவாதிகளே அரசியல்வாதிகளே இருந்தனர். அணிசேரா நாடுகளின் தலைநாடு எனும் hPதியிலும். அடிமைதனத்திற்கு எதிரா போராடியவர்கள் என்றாPதியில் உலகம் புூராகவும் நடந்த விடுதலைப் போர்களுக்கும் இந்தியா தனது முளுமையான ஆதரவை வழங்கி வந்தது என்பது யாராலும் மறக்க முடியாததே. இருப்பினும் பின்னாளில் சொத்து சுகம் சேர்க்க ஆசைப்பட்டவர்கள் பலரும் ஆட்சிபீடம் ஏற இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. சொல்லப்போனால் இந்தியாவின் எதிர்காலமே தள்ளாட தொடங்கியது. தன்னிறைவு கொண்ட நாடான இந்தியாவின் வறுமைக்கு அரசியல்வாதிகளின் கொள்ளையே காரணம். ஏழைகளிடம் சேரவேண்டியது எல்லாம் அரசியல்வாதிகளின் வங்கி கணக்குகளை நிரப்ப தொடங்கியது. இந்தியாவின் சுதந்திர போராட்டம் முடிவுற்றபின் மிக சிலரே இந்தியாவின் நலனனுக்காக படுபட்டார்கள் அனேகர் நான்பெரிது நீபெரிது எனும் சாதியத்தினுள் வீழ்ந்துவிட்டனர். அத்தருணத்தில் தம்மை உயர்சாதி என எண்ணிய ஒரு கூட்டமே அதிகாரங்களை தனது கைக்குள் போட்டுக்கொள்ள திட்டம்தீட்டியது........ அதில் வெற்றியும் கண்டது. அக்கூட்டத்தினரின் அதிகாரம் அரசியலிலும் இருந்தது என்பது உண்மையே.
மேலே சில இந்திய நண்பர்கள் பங்களாதேசத்திற்கு இந்தியா போராடி சுதந்திரம் பெற்றுகொடுத்தது என்று சொன்னார்கள்........
அதில் இனனொரு விடயம் மறைந்திருப்பதை கவனிக்க வேண்டும் அதாவது பகிஸ்த்தானின் ஒருபகுதி பிரிக்கப்பட்டு தனிநாடக்கப்பட்டது இது இந்தியாவிற்கு தோலைஉரித்து பழத்தை வாயில்வைத்ததுபோல.... இப்போதும் பாகிஸ்தானின் ஓருபகுதி பிரிகிறது என்றால் இந்தியாவிற்கு இன்னொரு தீபாவளி. ஆகவே அதை ஒரு உதவியாக எடுக்கமுடியாது. ஈழப்போரட்டத்திற்கும் இந்தியா உதவியதுதானே..........
ஏன் இப்போது அது முடியவில்லை???? காரணம் இருக்கிறது! 1970 துகளில் சோவித்யுூனியனுடன் நட்ப்பு வைத்திருந்த இந்தியா மீது அமெரிக்கா ஒரு கண்வைத்திருந்தது. பாகிஸ்தானின் நட்ப்பை வைத்து இந்துசமுத்திரத்திற்குள் நுழைய அமெரிக்கா முயன்றது. அப்போதைய இந்திய பிரதமரான இந்திராகாந்தியின் பதில் அமெரிக்காவின் கப்பல் இந்தியாவால் தாக்கியழிக்கபடும் என்பது. அப்போதுதான் அமெரிக்காவின் கடைகண் இலங்கை மீது பட்டது. அதனால் அப்போதைய இலங்கை சிங்கள அரசு இந்தியாவை தட்டிகளித்தது. இப்போதுதான் இந்திராகாந்தியின் கண்ணில் இலங்கையின் உள்வீட்டு விவகாரம் தட்டுபட்டது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்திய உளவுபடையின் உதவி இதனால்தான் கிடைக்கபெற்றது. 'றோ' பயிற்சி அளிக்க தயாரான போது ..... முதலில் ரெலோ என்ற அமைப்புடன்தான் தொடர்பை ஏற்படுத்தியது. அந்நாளில் குட்டிமணி தங்கத்துரை ஆகியோரால் உருப்பெற்றெதனால். அவர்கள் கைது செய்யப்பட்ட போது ஈழத்தில் பெரும் அதிர்சி அலையொன்று அடித்ததையும் 'றோ' அறிந்திருந்தது. அதனாலேயே 'றோ" ரெலோவை அணுகியது. புலிகள் அப்போது இந்தியாவில் அவ்வளவாக கால் ஊன்றவில்லை. காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்ய தமிழக பொலிஸார் தேடிக்கொண்டிருந்தனர். புலிகளை பொறுத்த மட்டில் அன்ரன் பாலசிங்கம் அவர்களே றோ வுடன் தொடர்பை ஏற்படுத்தி இந்தியாவின் உதவி புலிகளுக்கு கிடைக்க வழிசெய்தார் எனலாம். அப்போதும் கூட உதவி எனும் பெயரில் தன்னை கைது செய்ய இந்தியா திட்டம் தீட்டுகிறது என்றே தலைவர் எண்ணினார். றோ உதவி செய்து கொண்டிருந்த நேரத்திலும் புலிகள் "றோ' வுடன் அதிகமாக நெருங்க விரும்பவில்லை. காரணம் உள்நோக்கம் இருக்கிறது என்பதை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். ஆனால் தமிழக முதல்வர் எம்.ஜீ.ஆர் ருடன் நெருங்கி பழகினார்கள். இந்திய இராணுவ வீரர்கள் புலிகளுக்கு பயிற்சி அளித்த போது;ம் தலைவர் பிரபாகரன் தமது எல்லா பலத்தையும் றோ அறிவதை விரும்பியிருக்கவில்லை. அதனால் பொன்னாம்மானின் தலைமயில் புலிகளுக்கு வேறாகவும் பயிற்சி அழிக்கப்பட்டது. பின்பு 3வது பிரிவில் பயிற்சி பெற்ற லெப் கேணல் ராதா புலிகளுக்கு பயிற்சி வழஙிகினார் மொத்தம் 10 பிரிவுகளே புலிகள் இயக்கத்தில் இந்தியாவில் பயிற்சிபெற்றன. இந்த கணக்கே றோ விற்கு தெரிந்திருந்தது. ஆனால் இதர ஈழவிடுதலை இயக்கங்களோ றோ வை முழுதாக நம்பிவிட்டார்கள். அதனால் ஆயிர கணக்கில் ஈழத்து இளைஞர்களை இந்தியா கொண்டு போனார்கள். ரெலோவும் ஈபிர்ல்வ் வும் எதுவித முன்னேற்பாடுகளும் இன்றி திட்டங்களும் இன்றி பெண்களையும் கொண்டு போய் சேர்த்தார்கள். இவர்கள் சரியான இடத்தில் தங்கவைக்க படாததினாலும் அவர்களிடம் பெண்கள் அமைப்பு பற்றி முன்திட்டம் எதுவும் இல்லையென்பது தெரிந்ததனாலேயும் விரக்த்தி அடைந்தனர். அவர்களில் சிலர் புலிகளிடம் தொடர்பை ஏற்படுத்தி ஈழம் திரும்ப முயற்சி செய்தனர். அவர்களுக்கு உதவுவதற்கு விரும்பிய புலிகள் அவர்களை அழைத்து வந்து திருமதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் தங்கவைத்தனர். தீலிபன் பெண்களை போரட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் ஈழத்தில் வியட்னாம் போன்று அனைவரும் சிங்கள அடக்குமுறை இராணுவதடதுக்கு எதிராக போரவேண்டும் என்றும் எண்ணம் கொண்டிருந்தார். தீலிபனின் எண்ணத்தி;ன் கருவாகவே மகளிர் படையணி உருவாக்கம் பெற்றது அப்போது பிற இயக்கங்களால் கைவிடபட்ட பெண்கள் அனைவரும் புலிகளுடன் இணைந்து கொண்டனர். புலிகளின் மகளிர் படையணியின் முதலாவது தலைவி சோதியா அவ்வாறே வந்து சேர்ந்தார்.
(ஜெயதேவனின் பாஸையில்)) அ'றோ"கரா!!!!!!
இந்தியாவின் (றோவின); முதலாவது துரோகம்.
1986ம் ஆண்டு ஐ.நா பொது கூட்டத்திற்கான நாள் நெருங்கிகொண்டிருந்தது. இதுக்காக இலங்கை ஜனாதிபதி ஜே.
ஆர். ஜெயவர்த்தனா காத்திக்கொண்டிருக்கிறார் என்பதும் இந்தியாவுக்கு தெரியும். பயங்கரவாதி என்று உலகமே கூறிவந்த வேளையிலே ஜாசீர் அரபாத்தை ஐ.நா கூட்டிசென்று இவர்களது போராட்டம் நியாயமானது என்று அடையாளம் காட்டியவர் இந்திராகாந்தியே. அதனால் இஸ்ரேலுடன் கூட்டுவைத்திருந்த மேலைநாடுகளுடன் பகைமை உணர்வு கொஞ்சம் தோண்றியது. இவ்வேளையில் இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா வில் வைத்து தமது நாட்டுக்குள் பயங்கரவாதிகளை இந்தியா உருவாக்குகிறது என்று சாடினால். உலக நாடுகளின் கவனம் இலங்கையின் பக்கமே திரும்பும் என்பது உண்மை. இவ் இக்கட்டான நிலையில்தான் இந்தியா தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளும் நாடகம் ஒன்றை அரங்கேற்றியது. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா உதவியபேர்து ஒர் தப்பு கணக்கை போட்டிருந்தது அதாவது இவ்யிக்கங்கள் ஓரு போதும் இந்தியாவை மீறாது என்று அதாவது இந்தியாவின் பாட்டுக்கு இவர்கள் எப்போதும் ஆடுவார்கள் என்று. 1985-1986 பகுதியிலே இந்தியாவிடம் உதவிபெற்று வந்த இயக்கங்களில் புளட் என்ற அமைப்பு மற்ற இயக்கங்களுடன் ஒரு போதும் நெருங்கியதில்லை அத்தோடு லெபனான் பலஸ்தீனம் போன்ற நாடுகளுக்கு போராளிகளை அனுப்பி பயிற்சி பெறுவதிலும் அதிக அளவு ஆர்வம் காட்டிவந்தது. அதனால் றோ புளட்டுடன் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி நெருங்க முடிவு செய்தது. கூடுதல் நட்பு போன்ற ஒர் நிலையையும் தோற்றுவிது;தது. அதலால் முதலாவது துரேகத்திற்கு புளட் இலகுவான இலக்கானது. நெருக்கமாக இருந்த புளட்டிற்கு இந்தியா தந்திரம் வய்ந்த அதே நேரம் ஐ.நா செல்ல இருந்த இந்திராகாந்தி மேலைநாடுகளுக்கு மந்திரம் சொல்ல கூடியதுமான ஒரு ஆலோசனையை கூறியது. புளட்டும் இந்தியாவின் உள்நோக்கம் அறியாது தலையாட்டியது. திட்டம் இதுதான் மாலைதீவை முளுமையாக கைப்பற்றி வைத்துகொண்டு உலக நாடுகளின் உடாக இலங்கையுடன் சமரசம் பேசி தமிழ் ஈழம் பெற்று அதை புளட்டே ஆளுவது. இந்தியா திட்டத்தை கூறியபோது புளட்டிற்கு உள் மனதெல்லாம் ஒரே குளிர்ச்சி. மனம் குளிர்ந்த புளட் திட்டத்தின் படியே மாலைதீவை கைப்பறற் பெரிய படையணியுடன் படகு ஏறி பயணத்தை தொடர்ந்தது இந்து சமுத்திரத்தினில் இரு வேறு நாட்டு படைகள் மாலைதீவை நோக்கி பயணித்தன ஒன்று புளட் மற்றது இந்தியா. புளட் சென்றது மாலைதீவை கைப்பற்றவெனில் இந்திய கடல்படையோ புளட்டை கைப்பெற்ற. திட்டத்தின்படி புளட் அமைப்பு மாலைதீவில் தரையிறங்கி துப்பாக்கி வேட்டுக்களை தீர்க்க தொடர்ந்து சென்ற இந்தியா அவர்களை சிறைபிடித்து சென்று இந்தியாவில் சிறையிட்டது. திட்டத்தின் பிரகாரம் பிரச்சாரம் தொடங்கியது. ஈழ விடுதலைப் போராளிகள் மாலைதீவை கைப்பற்ற முயன்ற போது இந்தியா வெற்றிகரமாக அதை முறியடித்து அவர்களை சிறையில் அடைத்துள்ளது...............!!!!!!!
துரோகங்கள் தொடரும்........ (3-4 நாட்களின் பின்பு)
I dont hate anyland.....But Ilove my motherland
Reply
இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.
அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.
Reply
இந்தியாவை புழுதி வாரித் தூற்றும் கருத்துகள் மட்டுமே இங்கே இடம் பெறும்.... அதற்கு பதில் சொன்னாலோ அல்லது மாற்றுக் கருத்துகள் சொன்னாலோ வெட்டப்படும்... நன்றி வலைஞன்....
,
......
Reply
பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாது, இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். புலனாய்வு துறை சம்பந்தமான எந்த விழங்களும் வெளியே தெரியாது. இவ்வவள்வு எழுதியவர் ஒன்று கதை விடுவராக இருக்க வேண்டும் அல்லது அங்கு வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்

[ஃஉஒடெ="றகுவரன்"]இது எல்லாம் இவர்களுக்கு தெரியுமோ தெரியாது.
இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் பிளேனில் சோற்று பார்சல் கொண்டு வந்து கொட்டியது தான்.
அதையே இப்பவும் சொல்லி திரிகிறார்கள். அந்த நன்றியை மறந்து வேற ஏதோ பெரிசா செய்திட்டம் என்று.[/ஃஉஒடெ]
.
.
Reply
ராஜா,

உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்... உங்கள் பதிலும் கூட இன்னும் கொஞ்ச நேரத்தில் வெட்டப்பட்டு விடும்.....
,
......
Reply
rajathiraja Wrote:பிளெனில் பார்சல் போட்டது எமக்கு தெரியாது, இன்று வரை எங்களுக்கு சிரமங்கள் பல நேர்ந்தாலும் உங்கள் அனைவரையும் அடைகலம் குடுப்பது இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தான். புலனாய்வு துறை சம்பந்தமான எந்த விழங்களும் வெளியே தெரியாது. இவ்வவள்வு எழுதியவர் ஒன்று கதை விடுவராக இருக்க வேண்டும் அல்லது அங்கு வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்

ராஜா அது பொய்யான விடையம் இல்லை...! எனது நண்பனின் அண்ணா <b>PLOT</b> யில் ஆயுதப்பயிற்சியை, பலஸ்தீனத்தில் பெற்றவர்... புளொட் பல பிரிவாக பிரிந்த போது பிரிந்து சென்ற "தீப்பொறி" குழுவோடு பிரிந்து போனவர். பின்னர் அவர் இந்தியா போய்.. <b>கர்நாடகா பங்களூரில் இருந்தார்.</b> இப்போ அவர் ஜேர்மனியில் இருக்கிறார்.

அவர் இதை முதலிலேயே சொன்னார். நல்ல வேலை மாலைதீவு போன குழுவில் அவர் இருக்கவில்லை. ஆனால் போனவர்களையும் ஏன் போனார்கள் எண்ற விபரம் தெரிந்தவர்.. CIA யுடனும். இருந்த தொடர்பு என்ன என்பதை அறிந்தவர் அவர்...... இது கதை அல்ல.
Reply
¿øÄ ¸ðΨÃ, ¦¾¡¼Õí¸û ........Maruthankerny





என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்.:
!




-
Reply
¾õÀ¢Ô¨¼Â¡ý Wrote:¿øÄ ¸ðΨÃ, ¦¾¡¼Õí¸û ........Maruthankerny





<b>என்னை தன்னிச்சையாக எப்போதும் உள்நுளைய அனுமதிக்கவும்</b>.:

ஏன் என்னாச்சு தம்பி ஏதாவது பிரச்சினையா....???
Reply
வலைப்பதிவுகள் பற்றி தெரிந்திருப்பீர்கள். நந்தன் என்பவருடைய வலைப்பதிவில் தமிழக இளைய சமுதாயப்பார்வையில் தமிழீழம் என்ற தலைப்பில் அவர் சில கருத்துக்களை எழுதியுள்ளார். சில விடயங்களை தெளிவாய்ச் சுட்டிக்காட்டினாலும் ஆயுதப்போராட்டம் குறித்தும், அதன் தேவை குறித்தும் மாறுபாடான கருத்துக்களை கொண்டிருக்கின்றார். (இறுதியில் இவை தனது அறியாமையின் கேள்விகள் என்பதனையும் ஏற்றுக்கொள்கிறார்) இந்த அவரது பதிவு தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைய சமுதாயப் பிரஜை தமிழீழம் பற்றி கொண்டிருக்கும் எண்ணங்களை எடுத்து சொல்கிறது. இந்தப் பதிவுக்கு வந்த எதிர்வினைகளையும் இணைக்கின்றேன்..

தமிழக இளைய சமுதாயத்தின் பார்வையில் தமிழீழம்.
"எழுந்திருடா ராஜீவ்காந்திய சுட்டுடாங்களாம்" என என் அம்மா எழுப்பிய ஒரு வெயிற்கால விடியல் தான் எனக்கு இலங்கை தமிழ் பிரச்சனை பற்றிய
முதல் ஞாபகம்.
என்னைப்போல பலர், குறிப்பாய் 1980களிலோ அதற்கு பிறகோ பிறந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், எங்களின் அறியாமை தெரியவரும். இஸ்ரேல் பாலஸ்தீனம் பற்றி அறிந்த அளவுகூட இலங்கை பிரச்சனை குறித்து அறிந்திருக்க மாட்டோம். ஏன்?

1. என்னதான் காரணம் சொன்னாலும் ராஜீவின் கோர கொலை புலிகளின் மிகப்பெரிய அரசியல் தவறு. அந்த கொடூரமும், அது தமிழ் மன்னில்
நடந்ததும் எங்கள் மனதில் அகல முடியாத ஒரு பதிவு.

2. இதையே காரணம் காட்டி, IPKF மூலம் கையை சுட்டுக்கொண்ட இந்திய அரசு இந்த பிரச்சனையை கைக்கழுவியது. இலங்கை செய்திகள்
இருட்டடிப்பு செய்ய பட்டன, அல்லது திரித்து கூறப்பட்டன.
15 வருட மூளைச்சலவை - பயன் இப்போது பார்கிறோம்.

இது எல்லாருக்கும் தெரிந்ததுதான், ஆனால் இதன் நீண்ட கால விளைவுகள் மிகவும் கலவரப்படுத்துபவை. இதோ இன்னுமொரு பேச்சு வார்த்தை, JVP எதிர்ப்பு என முடிவில்லாமல் தொடரும் இந்த பிரச்சனை இப்போதைய
தலைவர்களின் கையால் தீர்க்கபடும் என்பதற்கு ஒரு நல்ல நம்பிக்கையில்லை. இந்தியாவோ (அ) உலக நாடுகளின் உதவியோ இல்லாமல் இப்பிரச்சனை தீர்வது மிகவும் கடினம்.

அப்படியிருக்க, முடிவெடுக்க வேண்டிய அடுத்த தலைமுறை Decission Makers அறியாமல் இருப்பது நல்லதா? நாங்கள் பாதிக்க படாதவர்கள்,
உங்களுக்கு உதவ நாங்கள் தமிழர்கள் என்ற அடையாளம் மட்டும் போதாது அதுவும் அந்த அடையாளமே இப்போது அழிக்கபட்டு வரும்
இவ்வேளையில். உங்களின் வலி உணர்ந்தால் மட்டுமே எங்களின் சிந்தனை மாறும். எப்படி ?

உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்

அனைவரும் யுத்ததை வெறுக்கிறார்கள். அயுதம் தாங்கி நீங்கள் என்ன தான் உரக்க உண்மை பேசினாலும் ஆயுதத்தின் சத்தம் அதை கேட்கவிடாது. அதற்காக அடிப்பதை வாங்குங்கள் என கூற வில்லை. ஆரம்பிக்காதீர். குறைந்தபட்ச, எதிர் தாக்குதல் மட்டும் போதுமே. அவற்றையும் உலகம்
அறியவிடுங்கள். இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.

யுத்தம் மக்களை புலம் பெயர்த்து விடுகிறது. எல்லாரும் போனபின் யாருக்காக சண்டை? மனிதர்கள் இல்லாத ஈடுகாட்டிற்கு தமிழீழம் என பெயர் வைத்து என்ன லாபம்? ஆய்த போராட்டதை விடுத்து மக்களின் போராட்டமாக இது மாற வேண்டியதை உணரவில்லையா நீங்கள்?

You should now have a two pronged approach. Short term one - to protect yourself incase of military oppression, Long term one to mould international opinion. இரண்டவதால் மட்டுமே தீர்வு ஏற்படும். முதலாவது ஒரு Stop gap மட்டுமே.

இவை என்னுடைய, மற்றும் என் நன்பர்களின் எண்ணங்கள்...Given the fact they are from a varying background, I am convinced that this would be the
general opinion in a large sample size also.

கன்னத்தில் முத்தமிட்டால் என ஒரு படம் வந்தது...சென்னையில் மிகவும் 'happening' தியேட்டரில் இரண்டுமுறை அதை பார்த்தபோது ஒரு
ஆச்சரியமான விஷயத்தை கவனித்தேன். படம் முடிந்தபின்னும் அந்த பாதிப்பில் நிறைய இளைஞர்கள் சிலையாய் சமைந்திருந்தனர். குறிப்பாய் சில பெண்கள் அழுவதை கூட என் நன்பன் எனக்கு காட்டினான். நம்புங்கள், கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.

நாளை நல்லதாய் இருக்கட்டும்!
, ...
Reply
//உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்...தவறுகள் உங்களுடையதாய் இருந்தாலும் 'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். தன் தவறை மறைக்காதவன் வார்த்தைகளில் உண்மை அதிகமாய் இருக்கும் என்பது ஊர் அறியும்//

இது மிகச்சரியான ஆலோசனை என்பதுடனும், அவசியம் செய்யப்படவேண்டியது என்பதுடனும் நான் உடன்படுகிறேன்.

இன்றைய இலங்கை அரசின் வல்லாதிக்க நிலைப்பாட்டையும், இராணுவ நடவடிக்கைகளையும் நீங்கள் படிக்கும் நிலையில் ஆயுதப்போராட்டம் கைவிடப்படக்கூடியதாகவோ, முக்கியமற்றதாகவோ தெரிகிறதா? அப்படி ஆயுதப்போராட்டத்தை கைவிட யாராவது இந்தியத்தரப்பில் இருந்து வலியுறுத்தினால் அதன் நோக்கம் என்ன எனபதை உங்களால் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புகிறேன்.
//கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை பயன் படுத்தாமல் இருப்பது உங்களுக்கே நஷ்டம்.//
உண்மை.
பதிவுக்கு நன்றி!

-தங்கமணி
//இண்டர்னேஷனல் மீடியாவிற்கு உங்கள் பிரதேசங்களை திரந்து விடுங்கள்.//


எங்கு அடைக்கப்பட்டுள்ளதென்று சொல்ல முடியுமா? நடந்து முடிந்த ஜெனீவாப் பேச்சில்கூட தங்கள் பகுதிக்கு வந்து உண்மையை அறிந்து செல்லுமாறு புலிகள் உலகத்தைக் கேட்டிருக்கின்றனர். வராமலேயே வெளியிலிருந்து எழுதித்தள்ளுவதையிட்டு பலமுறை தமது விசனத்தைத் தெரியப்படுத்தியுள்ளனர்.

//'அது ஒரு துன்பியல்' என நழுவாதீர். //
இதற்கு மேல் எதை எதிர்பார்க்கிறீர்களென்று தெரியவில்லை.
என்னைப் போன்ற சாதாரணமானவர்கள் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அதிகாரபூர்வமாக ஓர் அமைப்பு கருத்து வெளியிடுவதிலுள்ள சிக்கல்கள் தெரியுந்தானே?
மேலும் இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே பலமுறை வலைப்பதிவுகளில் கேட்கப்பட்ட கேள்விதான் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

"துன்பியல் சம்பவம்" என்றாவது ஒரு தரப்பிலிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதைவிட ஆயிரம் மடங்கு துன்பம் விளைவித்தவர்களிடமிருந்து என்ன கருத்து வந்துள்ளது?
புலிகள் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எழுதும் எவனுமே, இந்தியா ஈழத்தில் நடத்திய கொடுமைக்கு என்ன செய்தது என்று கேட்டுப்பார்த்துக் கொள்வது நல்லது. அல்லது தாங்கள் அதுமட்டில் என்ன கருத்தை வெளிப்படுத்தினோமென்றாவது சிந்திப்பது நல்லது.

ஓர் ஈழத்தவனாக மீண்டும் சொல்கிறேன்:

இந்தியா மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்காதவரை, ஈழத்தமிழர் தரப்பிலிருந்து எந்த வருத்தமோ மன்னிப்போ தெரிவிக்கப்படக் கூடாதென்பது எனதும் என் போன்றவர்களதும் அவா.(இங்கே புலியெதிர்பொன்றே நோக்கமாகக் கொண்டதால் ராஜீவுக்காகக் (நீலிக்)கண்ணீர் வடிக்கவும் ஈழத்தவர் சிலர் இருக்கிறார்கள்) புலிகளின் "துன்பியல் சம்பவம்" என்ற கதைகூட சொல்லப்பட்டிருக்கக் கூடாதென்று கருத்துடையவன் நான். அப்படிச் சொன்னதற்கூடாக, புலிகள் இந்தியாவுக்குப் பணிந்து போனதாக விசனப்பட்டவன் நான்.
இதெல்லாம் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் விளங்குமென்று தெரியவில்லை. ஆனாலும் சொல்ல வேண்டிய இடங்களில் சொல்லிவிடுவது நல்லது.
(இதற்கு மேல் "தனியொரு அவில்தாரின் அரிப்பு" என்று பழம்பஞ்சாங்கம் பாடிக்கொண்டு வரும் கோமாளிகளுக்குப் பதிலளிக்க எண்ணமில்லை.)
*********************************
ஓரளவு புரிந்துணர்வுடனோ, நடுநிலைமையாகவோ எழுதப்பட்டதாகத் தோன்றும் உங்கள் பதிவுமேல் எனது இந்தப் பின்னூட்டம் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் இது உங்களுக்கானது மட்டுமன்று.

பெயருடனேயே எழுதுகிறேன்.
-வசந்தன்.-

//சரியான ஆலொசனை; கேட்பார்களா?//

அந்த ஆலோசனைகள், <<<உங்களை பற்றிய உண்மைகளை நிறைய ஆவணப்படுத்துங்கள். இனைய உலகின் இந்நேரத்தில் இந்திய அரசின் "மீடியா" ஒரு சிறு துளி. அதை
தாண்டி நீங்கள் கேட்க பட வேண்டும். குறும் படங்கள், வலைப்பதிவுகள், இனைய இதழ்கள், ஒரு சில தமிழ்/இந்திய இதழ்கள் (உண்மை சொல்பவை)
என எல்லாவற்றிலும் எழுதுங்கள். கவனம் - உண்மையை மட்டுமே எழுதுங்கள்.<<<
என்பதைக் குறிக்கிறதென்றால் சரிதான்.


ஏன் ஆயுதம் கைவிடப்பட முடியாது? ஆயுதம் இல்லாமல் ஏதாவது தீர்வு கிட்டுமா? இறுதித் தீர்வொன்று வந்தாலும் ஆயுதத்தைக் கைவிடுவது சாத்தியமா? என்பவற்றுக்கு இப்பதிவில் ஏதாவது விளக்கம் கிடைக்கிறதா பாருங்கள்.

மக்கள் போராட்டமென்பதற்கு என்ன விளக்கத்தைக் கொடுக்கிறீர்கள்?
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு பிரகடனம் செய்கிறார்கள், ஒன்றல்ல இரண்டல்ல பலதடவைகள். வடக்கு - கிழக்கின் எல்லா பாகங்களிலும் இந்த தமிழ்த்தேசியப் பிரகடனம் நடக்கிறது. பொங்குதமிழ் என்ற பேரில் யுத்தம் நடந்தபோதே இலட்சம் பேர் திரண்டு போராடினார்கள்.
இராணுவ முகாம்களை அகற்று என்பதுட்பட பல கோரிக்கைகள். இவைகளெதுவும் மக்கள் கோரிக்கைகளாக உலகுக்கோ உங்களுக்கோ தெரியவில்லை.
ஏன் கனடாவில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்ட பொங்குதமிழோ, பெல்ஜியத்தில் பல்லாயிரம் பேர் திரண்டு மேற்கொண்ட தேசியப் பிரகடனமோ கண்ணுக்குத் தெரியவில்லை. (ஆனால் இருபது பேர் நடத்தும் பேரணி மட்டும் எல்லோருக்கும் தெரிகிறது.)

***நீங்கள் எதற்காக இந்த எடுத்துக்காட்டைச் சொன்னீர்களோ தெரியாது, கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்த்துக் கண்ணீர் வடிப்பவனெல்லாம் ஈழத்தமிழரின் பிரச்சினையைப் புரிகிறானென்று கருத முடியாது. அதுவொரு உணர்ச்சிபூர்வமான சினிமா. இதே கதையை வேறெங்காவது நடப்பதாக மணிரத்தினம் எடுத்திருந்தாற்கூட இதே உணர்ச்சியோடு எல்லோரும் அழுதிருப்போம். அல்லது சரியான மொழிபெயர்ப்போடு எந்த மூலையில் போட்டாலும் அம்மக்கள் அழத்தான் போகிறார்கள். இங்கே 'ஈழத்தவர்க்கு இப்படியெல்லாம் நடக்கிறதே' என்று வருத்தப்படுபவர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்தவில்லை. மாறாக, ஒரு படத்தில் கிடைக்கும் அனுதாபத்தை, ஈழப்பிரச்சினையின் அரசியல் அபிலாசை வரை முடிச்சுப் போடுவதுதான் வேதனைக்குரியது. இதைவிட அப்படத்தின் மூலமான பல அனுதாபங்கள், ஈழத்தவரால் சினிமா பார்க்க முடியவில்லை, அவர்களுக்கு மின்சாரமில்லை, பிற இடங்களைப்போல் மகிழ்ச்சியான வாழ்க்கையில்லை என்ற அளவிலானவைதான்.

என்பார்வையில், ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும், பொய்யையும் புரட்டுக்களையும் வைத்தும் எழுதுபவர்களெல்லாம் கன்னத்தில் முத்தமிட்டாலைப் பார்த்து அழாதவர்களென்றா நினைக்கிறீர்கள்?

***அறியவும் தெரியவும் நிறையப் பேர் ஆவலாயுள்ளார்களென்று நான் உணர்கிறேன். அதையிட்டு மகிழ்ச்சியுமடைகிறேன். ஆனால் அதற்கு நீங்கள் பாவித்த எடுத்துக்காட்டு சிக்கலானது.
மேலும் இவ்வெடுத்துக்காட்டுக்கூடாக, துன்பங்களையும், பட்ட கொடுமைகளையும் தான் வெளிப்படுத்துங்கள் என்ற ஆலோசனை சொல்வதாக யாரும் நினைத்துவிடலாம்.

அதைவிடுத்து ஆதாரச் சிக்கலை வெளிப்படுத்த வேண்டும்.
ஏன் ஆயுதப்போராட்டம் தொடங்கப்பட்டது?, அதற்கு முன் என்ன நடந்தது? ஆயுதம் தூக்க முன்னும் சரி, பின்னும்சரி, ஏற்பட்ட தீர்வுகளுக்கு என்ன நடந்தது?
என்பன குறித்து ஏற்கனவே சில புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றைவிடச் சிறப்பாக யாரும் வலைப்பதிவில் எழுதிவிட முடியாது. அதற்கான தரவுகளோ தகவல்களோ திரட்ட முடியாது.
இப்புத்தகங்களில் சிலவற்றைப்பற்றி பத்ரி, மதி கந்தசாமி வலைப்பதிவுகளில் எழுதப்பட்டதாக நினைவு.

இவ் இனச்சிக்கல் இப்போதுதான் தொடங்கப்பட்டதா?
ஈராயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து உருவேற்றப்பட்டுக்கொண்டு வரும் தமிழருக்கெதிரான சிங்களக் கருத்தியலை எதிர்கொண்டு யாராவது பேச்சு மூலம் தீர்வு ஏற்படுத்த முடியுமா?
என்ற கேள்விகளில் தற்போதைய நிலையில் எது தீர்வு என்பதற்கான விடையுள்ளது.

யாத்திரீகன், வசந்தன், யாள்ப்பாணத்தவன் நன்றி.
சில விளக்கங்கள்
1. அந்த திரைப்பட உதாரணம் மக்களின் (இளைஞர்களின்) மனதில் இன்னமும் ஈரமும் நெகிழ்தலும் இருக்கு என்பதற்காக. அதுவும் ஒரு ஈழத்தை பற்றிய படம் என்பதால் அதை எழுதினேன். உங்களின் போராட்டத்தை எவ்வகையிலும் கொச்சை படுத்த அல்ல,
2. சில புத்தகங்களை தேடி படித்தேன். சில புத்தகங்களை படிக்க ஆவல் (Saturday Review Sivanayagam) ஆனால் அவை இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ கிடைக்கவில்லை. ஐரோப்பாவில் இருந்து வரவைக்க செலவு பிடிக்கிறது. இதுவே ஒரு நல்ல உதாரணம்...நாடி வருபவர்கள் இத்தனை செலவு செய்ய சொன்னால் நமக்கேன் என சென்று விடுவர். அவர்கள் தங்களுக்கு 'கூறப்பட்டவை'விட்டு உங்களிடம் வருவதே மிக பெரியது. அந்த சந்தர்பத்தை இப்படி அறுவடை செய்யாமல் இருப்பது சரியா? உங்களின் உண்மையை உணர நீங்கள் தான் Large scale/easily reachable வழிகளை செய்து தரவேண்டும்.
சில கேள்விகள்
1. 'இதற்கு மேல் என்ன International opinion' என்றே இதுவரை பார்த்த பதிவுகள் சொல்கின்றன. Hard work always pays, if it hasnt paid you havent worked hard enough
2. திறந்து வைத்திருந்தால் ஏன் அவை இன்னும் எழுதப்படவில்லை? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்று?
3. டில்லியின் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்காக அவையில் மன்னிப்பு கேட்டது எங்கள் அரசு. தவறு என உணர்ந்தபின் அவன் கேட்கட்டும் நான் கேட்கிறேன் என்பது என்ன ஞாயம்? அதுவும் தேவை உங்களுக்கு என்றபோது.
4. ஆயுத போராட்டம் தேவையில்லை என கூற இந்தியர்களை தவிர உரிமை உள்ளவர்கள் யார்? எங்களின் வரலாற்றை அறிந்தவர் தானே நீங்க்ள்?

By: நந்தன்

//ஆயுத போராட்டம் தேவையில்லை என கூற இந்தியர்களை தவிர உரிமை உள்ளவர்கள் யார்? எங்களின் வரலாற்றை அறிந்தவர் தானே நீங்க்ள்?
//

'உரிமை' என்பதற்குப் பதிலாக 'அருகதை' என்ற சொல்லைப் பாவித்திருக்க வேண்டுமோ?
மிகக்கொடூரமான நகைச்சுவை இதுதான்.
அப்போ தொடக்க காலத்தில் இயக்கங்களுக்கு ஆயுதம் கொடுத்தது, ஆயுதப்பயிற்சிகள் கொடுத்தது, சண்டைக்கு உதவி செய்ததெல்லாம் இந்தியா இல்லையோ? அல்லது அதெல்லாம் அகிம்சை வழியென்று நினைத்துக்கொண்டுதானா அவ்வளவும் செய்தது? எட. இந்தியா உதவி செய்திருக்காட்டி உவங்கள் நாலைஞ்சு துவக்கை வைச்சுச் சுட்டுப்போட்டு ஏலாம கடசியில அகிம்சைக்கு வந்திருப்பாங்கள் எண்டு சும்மா ஒரு வாதத்துக்காவது சொல்லியிருக்கலாம். இப்போது ஆயுதப்போராட்டமின்றி தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கலாமென்று சொல்வதற்கு இந்தியாவைவிட்டால் யாருக்கு உரிமையிருக்கிறதென்று சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வருகிறதோ தெரியவில்லை. இதையெல்லாம் நகைச்சுவையாக நினைத்துச் சிரிக்க முடியவில்லை.
ஏனென்றால் பலரும் அச்சொல்லைப் பாவித்திருக்கிறார்கள்.
ஆனால் இக்கேள்விக்குள்ளால் என்ன சொல்ல வருகிறீர்களென்று தெரியவில்லை.
ஏன் உங்களளவுக்குக்கூட எதுவும் செய்யாமல் சிறுதுரும்பைக் கூடப் பொறுக்கிப்போடாமலேயே சும்மா இருந்து காலாட்டக் கிடைத்ததுதான் சிறிலங்காவுக்கான வெள்ளையனின் சுதந்திரம்.
ஆக தமிழரும் காலாட்டிக்கொண்டிருந்தால் எல்லாம் கிடைக்குமென்று சிங்களவன் சொல்லாவிட்டாலும் நீங்கள் சொல்வீர்கள் போலுள்ளது.

முதலில் இந்திய சுதந்திரப்போராட்டத்தையும் ஈழப்போராட்டத்தையும் எப்படி ஒப்பிடுகிறீர்களென்று தெரியவில்லை. மிகமிகச் சிறுபான்மையெதிரிக்கு எதிரான மிகமிகப்பெரும்பான்மை சுதேசிகளின் போராட்டம் தான் இந்தியப்போராட்டம். அதைவிட எங்கோ தூரதேசத்திலிருந்து வந்து ஆக்கிரமித்துக்கொண்டிருந்த பிற அரசுக்கெதிரான போராட்டம். ஆக்கிரமிப்பென்பது வெளிப்படை.
இவற்றில் எதை ஈழப்போராட்டத்தோடு ஒப்பிட முடியும்?
இந்தியாவுக்கான சுதந்திரம் முழுக்க முழுக்க அகிம்சையாற் கிடைத்தது என்று சொல்லிக்கொண்டிருப்பதைவிட மோசமான நகைச்சுவை, அதை ஈழப்போராட்டத்துக்குப் பரிந்துரைப்பது.

வெள்ளையனுக்கும் இந்தியாவுக்குமான பகை என்ன? எவ்வளவு காலம்?
ஆனால் ஈழத்தமிழனுக்கும் சிங்களவனுக்குமான பிரச்சினை எவ்வளவு காலமென்று தெரியுமா?
ஈராயிரமாண்டு காலப் பிரச்சினை. அந்த ஈராயிரமாண்டுகாலம் தமிழருக்கெதிரான துவேசத்தை ஊட்டிஊட்டி வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள இனத்துக்கும் அதன் பேரினவாதச் சித்தாந்தத்துக்குமெதிரான போராட்டம் தான் ஈழப்போராட்டம். (இது பற்றி இன்னும் விளக்க, தமது வரலாற்று நூலாக இன்றுவரை சிங்களவராற் சொல்லப்படும் மகாவம்சக்கதை கொண்டு எழுத வேண்டும். முடிந்தால் இச்சுட்டியில் ஏதாவது கிடைக்கிறதா பாருங்கள்.) இவற்றில் எந்த ஓர் இளையிலும் நெருங்க முடியாத இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் ஓர் உபாயமான அகிம்சையை ஈழத்துக்குப் பரிந்துரைப்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனம்?

சரி. ஈழத்தில் அகிம்சையே பயன்படுத்தப்படவில்லையா?
ஆயுதம் ஏந்த முதல் என்ன நடந்தது?
வெள்ளையன் நாட்டைவிட்டுப்போக முன்பேயே போராட்டம் தொடங்கிவிட்டது. அன்றிலிருந்து ஆயுதமேந்தும் வரை, (ஆயுதமேந்திய பின்னும்கூட) அகிம்சைதான் போராட்ட வழி. இடையிலே எத்தனை இனப்படுகொலைகள்? எத்தனை ஆயிரம் பேரைக் காவு கொடுத்தோம்?
இடையில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் சிறிது நாட்களிலேயே கிழித்தெறியப்பட்டன. யார் கேட்டது?
இன்று 'சட்ட முராணானது, தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் ஒப்பந்தத்தை முறிக்கவோ கிழித்தெறியவோ எந்தச் சிங்களவனுக்கும் துணிவில்லையென்றால் என்ன காரணம்?
ஏன் இந்தியாவுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதிருந்து அகிம்சையிற் போராடிய இரு உயிர்களை இழந்தோமே?
என்ன தீர்வு?
அவர்கள் கேட்டதில் எந்தக் கோரிக்கையாவது நியாயத்துக்குப் புறம்பானதாயிருந்ததா? இதையெல்லாம் பார்த்த ஒருவனிடம் நீங்கள் "இந்தியாவின் அகிம்சையை"ப் போதிக்கலாமா?
இப்போது உங்கள் கேள்வியையே திருப்பிக் கேட்கிறேன்.
அகிம்சை பற்றி ஈழத்தமிழனுக்குப் போதிக்க இந்தியாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?
விடை தெரிந்தாற் சொல்லுங்கள்.
(கேள்வி கடுமையானதென்றாலும் உங்களின் அறிவுரைக்கு இப்படிக் கேட்பது சரியே)

*******
புத்தகங்கள் பற்றிய உங்கள் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டேன். இது தொடர்பில் தனிப்பட்டு நான் செய்ய ஏதுமில்லை. இப்புத்தகங்களுக்குச் சட்ட ரீதியாக இந்தியாவில் என்ன சிக்கலென்று தெரியவில்லை. இல்லாத பட்சத்தில் புத்தகவெளியீட்டாளர்கள் இதுபற்றிக் கவனத்திலெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இப்புத்தகங்கள் இப்புத்தகங்கள் மட்டில் சிக்கல்கள் இருக்க நியாயமில்லையே?
********
////தவறு என உணர்ந்தபின் அவன் கேட்கட்டும் நான் கேட்கிறேன் என்பது என்ன ஞாயம்? அதுவும் தேவை உங்களுக்கு என்றபோது.////

தவறு என்று நீங்களல்லவா சொன்னீர்கள்? இப்போது என் தலையில் தூக்கிப் போடுகிறீர்களே?
"அதுவும் தேவை உங்களுக்கு என்ற போது" என்ற இடத்தில்தான் இந்திய மேலாதிக்கம் வெளிப்படுகிறது. ஆக, தவறென்று இந்தியா உணர்ந்தாலும் வருத்தமோ மன்னிப்போ கேட்கப்போவதில்லை. யாருக்குத் தேவையிருக்கிறதோ அவர் எசமானிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்படித்தானே? இதில் நியாயம், நேர்மை எல்லாம் எங்கே வந்தது?

-வசந்தன்.-

//திறந்து வைத்திருந்தால் ஏன் அவை இன்னும் எழுதப்படவில்லை? //

-வசந்தன்.-

ஏன் போகவில்லை. போவதை யார் தடுக்கிறார்கள்?
இந்தியப் பத்திரிகைகள் கூட வன்னி சென்று வந்து கட்டுரைகள் எழுதியுள்ளனவே. பிபிசி, சி.என்.என், றொய்டர் என்ற பன்னாட்டுச் செய்தித் தாபனங்களும் போய்வந்து எழுதியுள்ளனவே? நீங்கள் வாசிக்கவில்லை போலுள்ளது. புலிகளின் வங்கி பற்றி, காவல்துறை பற்றி, நிர்வாக சேவை பற்றி, திரைப்படத்துறை பற்றி, சட்டப்பிரிவு - நீதிமன்றங்கள் பற்றி என பலவாறாகப் புகழ்ந்தும் நிறையக் கட்டுரைகள் வந்துள்ளன. தமிழீழக் காவல்துறை, திரைப்படத்துறையைப் பற்றி பி.பி.சி சிறப்பு நிழ்ச்சியே செய்தது. அதைவிட சுனாமி மீட்புப் பணிகள் பற்றி நிறைய பன்னாட்டு ஊடகங்கள் புகழ்ந்து எழுதியுள்ளனவே. அதுவும் நேரடியாக பாதிக்கப்பட்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து.
புலிகள் தங்கள் பகுதிக்கு வரச்சொல்லிப் பலகாலமாகவே பகிரங்க அழைப்பு விட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள்?

யுத்த நேரத்தில் 1999 இல் ஐரோப்பியப் பெண் பத்திரிகையாளரொருவர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வர முயற்சித்து அரச தரப்பால் அனுமதி மறுக்கப்பட்டது. பின் அப்பெண்மணி களவாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சில நாட்களில் மீண்டும் தெற்கு நோக்கிச் செல்கிறார். அப்போது இராணுவத்தினர் அப்பெண் மீது பதுங்கித்தாக்குத்லொன்றை மேற்கொண்டார்கள். கொல்லும் நோக்கோடு தாக்குதல் மேற்கொண்டாலும் அப்பெண்மணி காயத்தோடு தப்பிக் கொள்கிறார். பின் அனுராதபுரம் வைத்தியசாலையில் தனக்கு நடந்தவையுட்பட பல தகவல்களை அப்பெண்மணி வெளயிட்டார்.

புலிகளின் பகுதிக்குச் செல்பவர்களைத் தடுப்பதும், அவர்களை இல்லாத பொல்லாதவற்றைச் சொல்லி வெருட்டுவதும் அரசதரப்பாற் செய்யப்படும் வேலைகள்.

வசந்தன் என்னுடையவை முழு அறியமையால் வரும் கேள்விகள், அறிந்துக்கொள்ளும் ஆவலுடன் கேட்க படுபவை. சிறு குழந்தைகளின் கேள்விகள் போன்றதே. அதை மதித்து பதிலளித்தமைக்கு நன்றி. மற்றபடி உங்கள் போராட்டத்தை கொச்சை படுத்தும் நோக்கம் எனக்கில்லை.

1. Saturday review Sivanayagamத்தின் புத்தகம் இங்கே எங்கு கிடைகிறது?
2. இவற்றை தவிர மேலும் தகவல் அறிய என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்? Honest opinions please, சில பதிவுகள் பிரச்சார பீரங்கியாய் உள்ளன. சார்புதன்மை கூடாது என கூறவில்லை தனி மனித வழிபாடுகளாய் இருந்தால், எனக்கு கொஞ்சம் நம்பிக்கையின்மை வந்துவிடும்
3. "மன்னிப்பு கேட்க கூச்ச படாதீர்கள், அதுவும் தேவை இருக்கும் போது கொஞ்சம் கூட" இதில் எந்த Big Brother approach'ம் இல்லை. என் வாழ்வில் நான் உணர்ந்து தெளிந்த பாடம். உங்கள் பதிலை படித்தப்பின் தான் இப்படியும் ஒரு அர்த்தம் இருப்பது தெரிந்தது.
4. ஈழத்தின் ஆரம்ப கால அஹிம்சை போரட்டங்களை பற்றி சிறிது படித்துள்ளேன், ஆனாலும் அவை ஆயுதப்போரட்டங்களால் over-shadow செய்யப்பட்டுவிட்டனவே.
5. "அருகதை", சரியான சமயத்தில் வார்த்தை கிடைக்கவில்லை <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
6. இந்திய சுதந்திர போராட்டமும், உங்களுடையதும் ஒப்பிடவில்லை, அஹிம்சை உன்மையாகவே நல்ல ஆயுதம். ஆரம்பகாலங்களில் எப்படியோ இப்போழுது உங்களுக்கென ஒரு following, உலக அளவில் ஒரு முகவரி/பரிச்சயம்/அங்கிகாரம் (வார்ததை கிடைக்கவில்லை) வந்த பிறகு கூட ஏன் அயுத போரட்டம்?
7. போகிறார்களா? சில வருடங்களுக்கு முன் புலித்தலைவர் பேட்டியின் போது மட்டும் எப்படி கூட்டம் கூடிற்றே அப்படி ஒரு மீடியா அட்டேன்ஷன் என் இல்லை? அதைக்கொண்டு வர என்ன முயற்சிகள் செய்யபடுகின்றன?
9. எல்லாரும் போற்றி எழுதுகிறார்கள், சீரான அரசு அங்கு இயங்குகிறது என்றால் இன்னும் ஏன் புலம் பெயர்ப்பு? மக்கள் திரும்புகிறார்களா? வெளியில் கிடைக்கும் வசதிகளும் வாய்புகளும் கிடைக்காது தான்...ஆனாலும் பரவாயில்லை என பொகிறார்களா? ஒரு ஆர்வத்தில் கேட்கிறேன்.
8. என்னுடைய இந்த பதிவின் மூலம் நீங்கள் கண்டிப்பாய் எங்கள் அறியாமையை அறிந்திருப்பீர். உன்மையை சொல்லவேண்டும் என்றால் நான் தான் என் நன்பர்கள் வட்டத்தில் இதைப்பற்றி ஒரு அளவு அறிந்தவன்...நானே இப்படி எனில்...நீங்கள் செய்யவேண்டியது எவ்வளவு என தெரிந்திருக்கும். அதுவே இப்பதிவின் நோக்கம்.
9. உங்களுக்கு நாங்கள் எப்படி உதவமுடியும்? *****ஆயுத போராட்டத்தை தவிர****
10. கடைசியாய் ஒரு கேள்வி - புலம் பெயர்ந்த இரண்டாவது, மூன்றாவாது தலைமுறையினரின் கருத்துக்கள் எவ்வாறு உள்ளன? Are they alienated from your cause?

வந்தமைக்கு நன்றி


By: நந்தன்
http://mkannadi.blogspot.com/2006/02/blog-post.html
, ...
Reply
காவடி,

நல்ல விஷயத்துக்கு முயற்சி செய்கிறீர்கள்.... பாராட்டுகள்... உங்கள் முயற்சியைக் குலைக்க இங்கே ஒரு தற்கொலைப் படையே இயங்குகிறது.... அதற்கு என்ன சொல்கிறீர்கள்?
,
......
Reply
அவர்களை ஏன் தற்கொலைப்படை என்று கூறுகிறீர்கள் லக்கிலுக். நீங்கள் எப்படி இந்தியதேசியத்தின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களோ அதே போல அவர்கள் தமிழ்த்தேசியத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதனாலேயே அவர்கள் கருத்துக்கள் அவ்வாறு அமைகின்றன. நீங்களும் அதே தளத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். நீங்கள் நம்பும் சில விடயங்களை அவர்கள் வேறு கோணத்தில் பார்க்கின்றனர்.
அவ்வளவே.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)