02-06-2006, 08:29 AM
<b>சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி</b>
மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர்.
மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்;டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார் இவர் 1958. 03.01ம் திகதி சுவாமி இராமக் கிருஸ்ணர் குழு பூசை தினத்தன்று சன்னியாசம் பெற்றார்.
அன்று முதல் இவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும். இந்தியா இருந்து 1966. 03.17ம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17ம் திகதி முதல் மட்டக்களப்பு இராமக்கிரு;ணமிசன் தலைமைபீட பொறுப்பை ஏற்று தனது மறைவு முதல் 2006.02.04ம் திகதி வரை அரும்பணி ஆற்றி வந்தார்.
மட்டக்களப்பு இராமக் கிருஸ்ணமிசனின் கீழ் இயங்கிவரும் மட். கல்லடி சிறுவர் இல்லம், மட்.சாரதா பெண்கள் இல்லம், மட்.காரைதீவு சிறுவர் இல்லங்களை நிருவகித்து வந்தார்.
இதேவேளை கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உப தலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01ம் திகதி முதல் 1991.06.30ம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04ம் திகதி வரை மட்டக்களப்பில் இறைபணி ஆற்றிய இவர் தனது கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சன்னியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்.ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார்.
மட். ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது. இறைபணி ஆற்றி வந்த சுவாமி அவர்கள் சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மக்களுக்கும் உதவி புரிந்து வந்தார். கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணியும் அளப்பரியதாகும்.
இவரால் சுவாமி விவேகானந்தர் ஓராண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தா எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களை அங்கு குடியமர்த்தியுள்ளார். அதேவேளை சுனாமியினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தர வீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார்.
தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு பூர்த்தியடையும் வேளையில் உயிர் பிரிந்துள்ளார். இதனை கட்டி முடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார்.
ஆத்மீக நெறியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆத்மாத்தமான பணியை மேற்கொண்ட இவர் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி விபுலானந்தருக்குப் பின் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையில் அவரின் மறைவிற்கு பின் மூன்றாவது தலைமைப் பொறுப்பினை மறைந்த சிறிமத் சுவாமி ஜீவனானந்த ஜீ மகராஜ் ஏற்று நடாத்தி வந்தார்.
இவரது தகனக் கிரியை நாளை பி.ப 4.00 மணிக்கு மட். சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம் பெறும் தற்போது மட்.கல்லடி மிசனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடழுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர்.
மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்;டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார் இவர் 1958. 03.01ம் திகதி சுவாமி இராமக் கிருஸ்ணர் குழு பூசை தினத்தன்று சன்னியாசம் பெற்றார்.
அன்று முதல் இவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும். இந்தியா இருந்து 1966. 03.17ம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17ம் திகதி முதல் மட்டக்களப்பு இராமக்கிரு;ணமிசன் தலைமைபீட பொறுப்பை ஏற்று தனது மறைவு முதல் 2006.02.04ம் திகதி வரை அரும்பணி ஆற்றி வந்தார்.
மட்டக்களப்பு இராமக் கிருஸ்ணமிசனின் கீழ் இயங்கிவரும் மட். கல்லடி சிறுவர் இல்லம், மட்.சாரதா பெண்கள் இல்லம், மட்.காரைதீவு சிறுவர் இல்லங்களை நிருவகித்து வந்தார்.
இதேவேளை கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உப தலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01ம் திகதி முதல் 1991.06.30ம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04ம் திகதி வரை மட்டக்களப்பில் இறைபணி ஆற்றிய இவர் தனது கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சன்னியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்.ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார்.
மட். ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது. இறைபணி ஆற்றி வந்த சுவாமி அவர்கள் சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மக்களுக்கும் உதவி புரிந்து வந்தார். கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணியும் அளப்பரியதாகும்.
இவரால் சுவாமி விவேகானந்தர் ஓராண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தா எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களை அங்கு குடியமர்த்தியுள்ளார். அதேவேளை சுனாமியினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தர வீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார்.
தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு பூர்த்தியடையும் வேளையில் உயிர் பிரிந்துள்ளார். இதனை கட்டி முடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார்.
ஆத்மீக நெறியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆத்மாத்தமான பணியை மேற்கொண்ட இவர் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி விபுலானந்தருக்குப் பின் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையில் அவரின் மறைவிற்கு பின் மூன்றாவது தலைமைப் பொறுப்பினை மறைந்த சிறிமத் சுவாமி ஜீவனானந்த ஜீ மகராஜ் ஏற்று நடாத்தி வந்தார்.
இவரது தகனக் கிரியை நாளை பி.ப 4.00 மணிக்கு மட். சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம் பெறும் தற்போது மட்.கல்லடி மிசனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடழுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
"
"
"


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->