Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கலோ பொங்கல்!
#1
<b>ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன்
மேதினிதழைக்க வேர்வை சிந்தி-
ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ
பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>


<b>மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட -
வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள-
பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு!
சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி-
சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>

<b>
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!</b>

<b>ஊர்மனையாவிலும் பால் சொரிந்து - உறைந்த
இருளில் கிடந்தவர் வாயிலெங்கும் அகல்விளக்கேற்றி
சேதிகள் இனியாவும் நல்லதென்றே வரும் இந்த செந்தமிழர்நாள் முதல் ஒருவாழ்வு வரும்... என்று

கதிரவனிடம் எமக்கு சொல்ல சொல்லு!
கவலை தரவேண்டாமினியும் என்று அவன் காதில் சொல்லு!
தாயகத்தின் கண்ணீர் நிறுத்தச்சொல்லி ததிங்கிணத்தோம்-என்று
பாடு பாடு குயிலே பொங்கலோ பொங்கல்!!</b>

-வர்ணன் -
-!
!
Reply
#2
வர்ணன் மிக அழகாக உங்கள் ஆதங்களை கவிதையாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கோ
<b> .. .. !!</b>
Reply
#3
நன்றி ரசிகை அவர்களே! முயற்சிப்பேன்! 8)
-!
!
Reply
#4
அழகன கவிதை. வாழ்த்துக்கள் வர்ணன் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#5
நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை!
இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை!
நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்!
நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று
இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!
*********************************
வர்ணன்.... இன்று இருப்பவர் நாளை இருப்பாரே நமக்கு தெரியாது. ஆகவே இருக்கும் பொழுதில் சந்தோசமாக வாழ பழகி கொள்ளவேண்டும் என்பதை சொல்லி பொங்கலை வரவேற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

Reply
#6
வாழ்த்துக்கள் வர்ணன் :wink:
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#7
பொங்கலைப்பற்றிய அழகான கவி வர்ணன்..தொடர்ந்தும் எழுதுங்கள்... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#8
நல்ல கவிதை நன்றி வர்ணன்

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)