![]() |
|
பொங்கலோ பொங்கல்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பொங்கலோ பொங்கல்! (/showthread.php?tid=1383) |
பொங்கலோ பொங்கல்! - வர்ணன் - 01-14-2006 <b>ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b> <b>மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்!</b> <b> நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்!</b> <b>ஊர்மனையாவிலும் பால் சொரிந்து - உறைந்த இருளில் கிடந்தவர் வாயிலெங்கும் அகல்விளக்கேற்றி சேதிகள் இனியாவும் நல்லதென்றே வரும் இந்த செந்தமிழர்நாள் முதல் ஒருவாழ்வு வரும்... என்று கதிரவனிடம் எமக்கு சொல்ல சொல்லு! கவலை தரவேண்டாமினியும் என்று அவன் காதில் சொல்லு! தாயகத்தின் கண்ணீர் நிறுத்தச்சொல்லி ததிங்கிணத்தோம்-என்று பாடு பாடு குயிலே பொங்கலோ பொங்கல்!!</b> -வர்ணன் - - Rasikai - 01-16-2006 வர்ணன் மிக அழகாக உங்கள் ஆதங்களை கவிதையாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கோ - வர்ணன் - 01-16-2006 நன்றி ரசிகை அவர்களே! முயற்சிப்பேன்! 8) - தூயா - 01-18-2006 அழகன கவிதை. வாழ்த்துக்கள் வர்ணன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- RaMa - 01-18-2006 நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ********************************* வர்ணன்.... இன்று இருப்பவர் நாளை இருப்பாரே நமக்கு தெரியாது. ஆகவே இருக்கும் பொழுதில் சந்தோசமாக வாழ பழகி கொள்ளவேண்டும் என்பதை சொல்லி பொங்கலை வரவேற்று இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். - sWEEtmICHe - 01-22-2006 வாழ்த்துக்கள் வர்ணன் :wink: - ப்ரியசகி - 01-22-2006 பொங்கலைப்பற்றிய அழகான கவி வர்ணன்..தொடர்ந்தும் எழுதுங்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- கீதா - 01-22-2006 நல்ல கவிதை நன்றி வர்ணன் |