01-17-2006, 11:14 AM
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க வேண்டும் எனச் சிரேஷ்டஅமைச்சர்கள் சிலர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதமானதானால் வரவேற்கத்தக்கவையே. ஏனெனில் நாட்டில் சமாதான முயற்சிகள் முன்னேற்றம் காண்பதற்கும் அமைதிச் சூழ்நிலை தோற்றுவதற்கும், இது சிலவேளை உதவக்கூடும்.
ஆனால் இச்சிரேஷ்ட அமைச்சர்களின் ஆலோசனைகளை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றத்தக்கதானதொரு சூழ்நிலை உள்ளதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் அவர் உருவாக்கியுள்ள அரசியல் களம் அதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சமாதான முயற்சிகளுக்கு மாறானதொரு கூட்டையே சனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு புறத்தில் அவர் சனாதிபதியாவதற்கு உதவிய ஜே.வி.பியினரும், ஜாதிக ஹெல உறுமயவினரும் ஆசியாவிற்கு வெளியில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் தயாராக இருப்பதாக இல்லை. இதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அவர்களுக்கு அண்மையில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் து}துவரின் பேச்சும் அமெரிக்க அரசின் சில நகர்வுகளும் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு ஆசியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே பேசுவது தேவையற்றது என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியிருக்கும்.
அதாவது அமெரிக்கத்து}துவர் சிறிலங்கா அரசிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் பலமான சிறிலங்காப் படையினரைச் சந்திக்க வேண்டிவரும் எனக் கூறியுள்ளமை இப்பேரினவாத சக்திகளுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகியுள்ளது.
அமெரிக்காவின் இவ் அறிவிப்பை ஜே.வி.பி வெளிப்படையாக ஆதரிக்காது விட்டாலும்- அதாவது அமெரிக்காவுடனான இராணுவ உறவு அவர்களின் சித்தாந்தத்திற்கு மாறானது என்ற hPதியில்- அது மனமகிழ்வு கொண்டுள்ள அதேவேளை ஜாதிக ஹெல உறுமய இதனை வெளிப்படையாக வரவேற்றுள்ளதுடன் அமெரிக்காவிடம் இருந்து மேலும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கோரும் நிலைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமயவும் பேச்சுவார்த்தை இனி அவசியமற்றது என்ற நிலைப்பாட்டிற்கு முற்றிலுமாகவே வரக்கூடும். இந்நிலையில் உள்ளுராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என அடுத்தடுத்துத் தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதென்பது சிரமமானதே.
இது ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் தனது ஆட்சியை முன்னெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், ஆலோசகர்கள் என்பவர்களும் மகிந்த ராஜபக்ஷ சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வழிவிடுவார்களா? என்பது கேள்விக்குரியதொன்றே ஆகும்.
எடுத்துக்காட்டாக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா போன்றவர்களைச் சுட்டிக்காட்ட முடியும். இவர்கள் தமது சேவைக்காலத்தில் என்றுமே இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டில் நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளாகவே இருந்துள்ளனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதென்பதை அவர்கள் அனுமதிப்பார்கள் என்றில்லை. இதனால், ஏதோ ஒருவகையில் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டைகளைப்போட முடியும். குறிப்பாக இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் - அதாவது படுகொலைகள், கைதுகள், சித்திர வதைகள் என்பதன் மூலம் இத்தகையதொரு நிலையைத் தோற்றுவிக்க முடியும். இத்தகைய செயல்களை அவர்கள் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
இந்த வகையில் அரசியல் தளத்தில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகளும், மற்றொரு புறத்தில் தெட்டத்தெளிவாக சரத் பொன்சேகா போன்றவர்கள் மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை எட்டாததொரு நிலைக்குக்கொண்டு சென்றுவிடக்கூடும்.
ஆகையினால் மகிந்த ராஜபக்ஷ இன்றைய சூழ்நிலையில் தான் விரும்பினாலும் கூட ஐரோப்பியாவில் மட்டுமல்ல ஆசியாவில் கூடப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியதொரு சூழ்நிலையில் இருக்கின்றாரா? என்பது சந்தேகமே. அத்தோடு பல தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்கூடப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளாரா? என்பதும் கேள்விக்குரியதே.
ஏனெனில் மகிந்த ராஜபக்ஷவும் தனது 35 வருட அரசியல் வாழ்வில் என்றுமே சிங்களப் பேரினவாதத்தை ஆதரிப்பவராகவும், அதற்குத் தலைமை கொடுக்க முற்பட்டவராகவுமே இருந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுதுமட்டும் அவர் மனம் மாறிவிடுவார்என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?
நன்றி: ஈழநாதம்
ஆனால் இச்சிரேஷ்ட அமைச்சர்களின் ஆலோசனைகளை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றத்தக்கதானதொரு சூழ்நிலை உள்ளதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் அவர் உருவாக்கியுள்ள அரசியல் களம் அதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சமாதான முயற்சிகளுக்கு மாறானதொரு கூட்டையே சனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு புறத்தில் அவர் சனாதிபதியாவதற்கு உதவிய ஜே.வி.பியினரும், ஜாதிக ஹெல உறுமயவினரும் ஆசியாவிற்கு வெளியில் பேச்சுவார்த்தை நடாத்துவதற்குத் தயாராக இருப்பதாக இல்லை. இதற்குத் தொடர்ந்தும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் அவர்களுக்கு அண்மையில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் து}துவரின் பேச்சும் அமெரிக்க அரசின் சில நகர்வுகளும் சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு ஆசியாவில் மட்டுமல்ல உலகில் எங்குமே பேசுவது தேவையற்றது என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியிருக்கும்.
அதாவது அமெரிக்கத்து}துவர் சிறிலங்கா அரசிற்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். விடுதலைப் புலிகள் பலமான சிறிலங்காப் படையினரைச் சந்திக்க வேண்டிவரும் எனக் கூறியுள்ளமை இப்பேரினவாத சக்திகளுக்குப் பெரிதும் நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகியுள்ளது.
அமெரிக்காவின் இவ் அறிவிப்பை ஜே.வி.பி வெளிப்படையாக ஆதரிக்காது விட்டாலும்- அதாவது அமெரிக்காவுடனான இராணுவ உறவு அவர்களின் சித்தாந்தத்திற்கு மாறானது என்ற hPதியில்- அது மனமகிழ்வு கொண்டுள்ள அதேவேளை ஜாதிக ஹெல உறுமய இதனை வெளிப்படையாக வரவேற்றுள்ளதுடன் அமெரிக்காவிடம் இருந்து மேலும் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படவேண்டும் எனக் கோரும் நிலைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமயவும் பேச்சுவார்த்தை இனி அவசியமற்றது என்ற நிலைப்பாட்டிற்கு முற்றிலுமாகவே வரக்கூடும். இந்நிலையில் உள்ளுராட்சித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என அடுத்தடுத்துத் தேர்தல்களை எதிர்நோக்கியிருக்கும் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதென்பது சிரமமானதே.
இது ஒருபுறம் இருக்க மகிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் தனது ஆட்சியை முன்னெடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், ஆலோசகர்கள் என்பவர்களும் மகிந்த ராஜபக்ஷ சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வழிவிடுவார்களா? என்பது கேள்விக்குரியதொன்றே ஆகும்.
எடுத்துக்காட்டாக பாதுகாப்பு மற்றும் பொலிஸ் திணைக்கள ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனிய இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா போன்றவர்களைச் சுட்டிக்காட்ட முடியும். இவர்கள் தமது சேவைக்காலத்தில் என்றுமே இனப்பிரச்சினைக்கு அரசியற் தீர்வு என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் இல்லை. இனப்பிரச்சினை தொடர்பான நிலைப்பாட்டில் நெருப்பெடுத்துக் கொடுக்கும் மந்திரிகளாகவே இருந்துள்ளனர்.
இந்நிலையில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதென்பதை அவர்கள் அனுமதிப்பார்கள் என்றில்லை. இதனால், ஏதோ ஒருவகையில் இவர்கள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டைகளைப்போட முடியும். குறிப்பாக இயல்பு வாழ்க்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் - அதாவது படுகொலைகள், கைதுகள், சித்திர வதைகள் என்பதன் மூலம் இத்தகையதொரு நிலையைத் தோற்றுவிக்க முடியும். இத்தகைய செயல்களை அவர்கள் ஆரம்பித்து விட்டதாகவே தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
இந்த வகையில் அரசியல் தளத்தில் ஜே.வி.பியும், ஜாதிக ஹெல உறுமய போன்ற பேரினவாதக் கட்சிகளும், மற்றொரு புறத்தில் தெட்டத்தெளிவாக சரத் பொன்சேகா போன்றவர்கள் மக்கள் மத்தியில் இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இனப்பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்பதை எட்டாததொரு நிலைக்குக்கொண்டு சென்றுவிடக்கூடும்.
ஆகையினால் மகிந்த ராஜபக்ஷ இன்றைய சூழ்நிலையில் தான் விரும்பினாலும் கூட ஐரோப்பியாவில் மட்டுமல்ல ஆசியாவில் கூடப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடியதொரு சூழ்நிலையில் இருக்கின்றாரா? என்பது சந்தேகமே. அத்தோடு பல தேர்தல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் அவர்கூடப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளாரா? என்பதும் கேள்விக்குரியதே.
ஏனெனில் மகிந்த ராஜபக்ஷவும் தனது 35 வருட அரசியல் வாழ்வில் என்றுமே சிங்களப் பேரினவாதத்தை ஆதரிப்பவராகவும், அதற்குத் தலைமை கொடுக்க முற்பட்டவராகவுமே இருந்துள்ளார். இந்நிலையில் தற்பொழுதுமட்டும் அவர் மனம் மாறிவிடுவார்என எவ்வாறு எதிர்பார்க்கமுடியும்?
நன்றி: ஈழநாதம்

