3 ஆம் இணைப்பு) பருத்தித்துறை கிளைமோர்த் தாக்குதலில் 11 படையினர் பலி!!
ஜசெவ்வாய்க்கிழமைஇ 27 டிசெம்பர் 2005இ 13:59 ஈழம்ஸ ஜம.சேரமான்ஸ
யாழ். பருத்தித்துறையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.50 மணியளவில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் 11 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
யாழ். பருத்தித்துறை பேரூந்து பணிமனை அருகே கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா இராணுவ வாகனம் இலக்கானது. இதில் சம்பவ இடத்திலேயே 11 படையினர் கொல்லப்பட்டனர். 6 படையினர் படுகாயமடைந்தனர். இவர்களில் மூவர் மிக ஆபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலையடுத்து படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
4 படையினரும் 3 பொதுமக்களும் பருத்தித்துறை மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தோர் விவரம்:
பொலிகண்டியைச் சேர்ந்த நல்லதம்பி தங்கராஜா (வயது 40)
புலோலியைச் சேர்ந்த சிவகௌரி சுப்பிரமணியம் (வயது 24)
தும்பளையைச் சேர்ந்த கந்தையா சுப்பிரமணியம் (வயது 53).
இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் யாழ். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முன்னதாக 12.20 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் பருத்தித்துறை சிறிலங்கா இராணுவ காவலரண் அருகே கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து அனுப்பப்பட்ட மேலதிக சிறிலங்கா இராணுவத்தினர் அடங்கிய வாகனம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
கிறிக்கற் ஸ்கோர்மாதிரி தொகை கூடுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இன்னும் பழைய கணக்கில் நாலுதமிழ் மக்களின் கணக்கு சிங்களப்பிள்ளையளிலை தீர்ப்பினம்.. அவை திரும்ப பொதுமக்களை தொடுவினம் . இருக்கிற நாப்பதினாயிரம் எத்தனை நாளைக்கு வரும் <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->