Quote:ஆனால் இப் பெண்கள் சந்திப்பு மலர் வெளிவந்தவுடன் பல ஆண்கள் தங்களது காழ்ப்புணர்ச்சிகளை கொட்டவும் தவறவில்லை. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில் பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி மிகக் கேவலமான முறையில் யாழ்.கொம்மில் 14 பக்கங்கள் வரை தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர். அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர். அம் மலரை கண்ணால்கூட பார்க்காமல், அதில் வந்த கட்டுரைகளை வாசிக்காமல் கருத்துச் சொல்ல வருமளவுக்கு ஆண் மேலாதிக்கச் சிந்தனை எழுத்துத் தர்மத்தையே மீறி செயற்பட வைத்தது. இதற்குத் துணைபோன இணையத்தளங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு எனது வன்மையான கண்டனத்தைத் முன்வைத்தேன். இதன்பால் அபிப்பிராயம் தொ¢வித்த பலரும், இவர்களைப் போன்றவர்களை நாம் கணக்கில் எடுத்து விவாதிப்பதும் விமர்சிப்பதும் தேவையில்லாதது. இவர்கள் எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைப்பவர்கள். அதனால் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை எனவும் அத்துடன் சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும் கருத்துக்கள் கூறப்பட்டதுடன் யாழ்.கொம் மீது கண்டனமும் தொ¢விக்கப்பட்டது.
வணக்கம் நண்பர்களே...
யாழ் இணையத்தளம் (கருத்துக்களம் உட்பட) ஒரு தனி மனிதரால் தன்னுடைய சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி நடாத்தப்படும் ஒரு இணையத்தளம். யாழ் இணையம் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை அதன் வளர்ச்சி வேகமானது. பல புதிய நுட்பஙகளை (தானிறங்கி எழுத்துரு, யூனிக்கோட் எழுத்துரு) இணைத்து எப்பொழுதுமே தன்னை மெருகூட்டிக்கொண்டே இருக்கின்ற ஒரு இணையத்தளம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது.
அனைத்துப் படைப்பாளிகளுக்கும் களம் அமைத்துக்கொடுத்துள்ளதுடன், புதியவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறது. யாழ் இணையம் பற்றி இன்னும் பலதை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனாலும் அதைவிடுத்து விடயத்திற்குள் வருவோம்.
குறிப்பாக யாழ் இணையக் கருத்துக்களம் பல எழுத்தாளர்களுக்கும், கலைஞர்களுக்கும், இளைஞர்களுக்கும், தொழில்நுட்பத்துறை சர்ந்தவர்களுக்கும் என்று அனைத்துத் தரப்பினர்க்கும் பாகுபாடின்றிக் கருத்துக்கள் முன்வைக்க இடமளித்தது. தமிழ்த் தேசியத்தைப் பாதிக்காத, பொய்யான பரப்புரைகளை நிகழ்த்தாத அனைத்துக் கருத்துக்களுக்கும் சுதந்திரமாக இடமளிக்கப்பட்டது. மற்றைய தளங்கள் போல் அல்லாமல், முரண்பட்ட கருத்துக்கள் உடையவர்களை வரவேற்றுக் கொண்டது யாழ் இணையம். சில இணையத்தளங்கள் குறிப்பிட்ட நோக்கத்திற்காய்த் தொடங்கப்பட்டும், காலப்போக்கில் அவை செயிலிழந்து போனதும், தம்முடைய நோக்கத்தைக் கைவிட்டுத் திசைமாறிப்போனதும் நடந்திருக்கின்றன. இன்னும் நடக்கின்றன. இப்படியான ஒரு வேகமான, பலத்த போட்டிகளைச் சந்திக்கக் கூடிய இணைய உலகில் தன்னுடைய நோக்கத்தில் தொடர்ந்தும் பயணிப்பது நமது யாழ் இணையமாகும்.
அப்படி இருக்க, சிலகாலங்களாய் சிலர் நிர்வாகத்தையும், யாழ் இணையத்தளத்தையும் அவமதிப்பது வருத்தத்தையளிக்கிறது. நிர்வாகத்தின் செயற்பாடுகளைக் கேலி செய்வது எமக்குக் கவலையளிக்கிறது. தம்முடைய இயலாமையைக் காட்டிக் கொள்வதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பதிவுகள் இணையத்தளத்தில் இடம்பெற்ற பெண்கள் சந்திப்புமலர் பற்றிய ஒரு கட்டுரையில் யாழ் இணையத்தின் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயமான கண்டனமாய் அது இருந்திருந்தால், அதை அனைவரும் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் வெறும் காரணமில்லாத ஒரு கண்டனத்திற்குப் பதில் எழுதவேண்டியே இதனை எழுதுகிறேன்.
"பெண்கள் சந்திப்பு மலர்" பற்றி முன்னைய யாழ் இணையக் கருத்துக்களத்தில் கருத்தாடல் ஒன்று நிகழ்ந்தது பல பழைய அங்கத்துவர்கள் அறிந்ததே. பலர் பல விதமாகத் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். குறிப்பாக பால்வினைத் தொழில் பற்றி வந்த அம்மலரில் இடம்பெற்ற கட்டுரைகள் பற்றியும், அட்டைப்படம் பற்றியதுமாய் அந்தக் கருத்துக்கள் இடம்பெற்றன. அந்த "பெண்கள் சந்திப்பு மலரை" பலர் வாசிக்காமலே(பார்க்காமலே) தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தார்கள் என்பது உண்மையே. பலர் புனைபெயரில் கருத்துக்களை எழுதினார்கள் என்பதும் உண்மையே. ஆனால் அங்கே வைக்கப்பட்ட கருத்துக்கள் ஒவ்வொரு தனிமனிதருடைய கருத்துக்களே ஒழிய அது யாழ் இணையத்தின் கருத்து அல்ல.
யாழ் இணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ள கண்டனத்திலிருந்து கட்டுரை எழுதியவருக்கும், கண்டனம் தெரிவித்தவர்களுக்கும் நான் ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த முடியும்:
<b>A)</b>
Quote:1. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் ... பெண்கள் சந்திப்பு மலரைப் பற்றி ... தங்களது காழ்ப்புணர்வுகளை கொட்டித்தீர்த்தனர்.
2. அதற்குப் பதிலடி கொடுத்து இளைஞனும், சந்திரவதனாவும் தமது கருத்துக்களை கூறியிருந்தனர்.
இதில் மேலே குறிப்பிடப்பட்ட இரு வேறு கருத்துக்களும் யாழ் இணையத்தின் ஊடாகத்தான் வெவ்வேறு கருத்துக்களையுடைய அங்கத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள கருத்துக்காக யாழ் இணையத்தைக் கண்டித்துள்ள இவர்கள், இரண்டாவது குறிப்பிட்டுள்ள கருத்துக்காக இரு அங்கத்துவர்களை மட்டும் அரவணைக்கிறார்கள். இதெப்படி? உண்மையில் இது சிரிப்பைத்தான் தருகிறது!
இரண்டாவது கருத்துக்காக, அப்படியான அங்கத்துவர்கள் கருத்துத் தெரிவித்தமைக்காக யாழ் இணையத்துக்குப் பாராட்டுத் தெரிவிக்காமல் கண்டனம் தெரிவிக்கிறார்கள். உண்மையில் தங்கள் கருத்துக்களுக்குள் முரண்பாடுகளை வைத்திருப்பவர்கள், மற்றவருடைய கருத்தை எப்படி உள்வாங்கி ஆழமாகச் சிந்திக்கப் போகிறார்கள் (-றீர்கள்)?
<b><!--emo&B)--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/cool.gif' border='0' valign='absmiddle' alt='cool.gif'><!--endemo--></b>
Quote:1. யாழ் இணையத்தில் தங்களது ஆணாதிக்கக் கருத்துக்களை வலுப்படுத்துவதற்காக பெண்கள் சந்திப்புமலரை கொச்சையாக எழுதியதும் மட்டுமல்லாமல், தங்களது சொந்தப் பெயர்களில் எழுத திராணியற்ற ஆண்கள் வேறு பெயர்களில்...
2. ... சொந்தப் பெயர்களில் எழுதுவதை விடுத்து புனைபெயர்களின் பின்னால் ஒளிந்துகொள்வதே அவர்களது கருத்துகளின்மீதான திராணியற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும்...
இங்கு மேலே "புனை பெயர்களில்" எழுதியவர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். புனைபெயரில் எழுதியவர்கள் தனியே ஆண்கள்தான் என்று பொருள்பட எழுதியிருப்பது வியப்புக்குரியதாகவே இருக்கிறது. அது பெண்ணாகக் கூட இருந்திருக்கலாம். அதெப்படி ஆண்கள் தான் என்று குறிப்பிட்டு எழுத முடியும்? தங்களுடைய கருத்துக்கு வலுச் சேர்ப்பதற்காக பல பெண்கள் ஆண்களின் புனைபெயர்களில் கருத்தெழுதுவதை நிர்வாகம் அறியும். இருந்தாலும் புனைபெயரில் எழுதுபவர்கள் பற்றி நாம் அலட்டிக் கொள்ளவில்லை. எந்தப் புனைபெயரில் யார் சொன்னார்கள் என்பதை விடுத்து, சொல்லப்பட்ட கருத்து உங்களுக்குப் பயனுள்ளதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்களே ஒழிய, உங்களுக்குப் பயனுள்ளது (பிடித்தது, அவசியமானது) இதுதான் என்று தீர்மானிப்பது யாழ் இணையத்தினது வேலையில்லை. அதைவிடுங்கள், நீங்கள் குறிப்பிட்ட இளைஞனின் சொந்தப் பெயர் இளைஞன் இல்லை என்பது நீங்கள் அறியவில்லையா?
"சொந்தப் பெயர்களில் எழுதத் திராணியற்ற ஆண்கள்" என்று குறிப்பிட்டீர்களே, அப்படியானால் சொந்தப் பெயரில் எத்தனை பெண்கள் எழுதினார்கள்? நான் அறிந்து குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்கள் இருவர்தான் (சந்திரவதனா, நளாயினி). கட்டுரை எழுதிய நீங்கள் கூட யாழ் இணையத்தைப் பார்வையிடுபவர்தான். நீங்கள் முன்வந்து உங்கள் சொந்தப் பெயரில் கருத்து எழுதினீர்களா? அனைவரும் பயந்து ஒதுங்கித்தானே போனீர்கள்? எதற்குப் பயந்தீர்கள்? பால்வினைத் தொழில் பற்றி இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால், சொந்தப் பெயரில் நீங்களும் கருத்தெழுதும் பொழுது உங்கள் மீதும் <b>"பால்வினைத் தொழில்" புரிபவர்</b> என்கின்ற சாடல் வரும் என்கின்ற
பயத்தினால் தானே ஒதுங்கிப் போனீர்கள்? உண்மையில் நீங்கள் பெண்விடுதலைபற்றிப் பேசுபவராக இருந்தால், எதற்கு அஞ்சி ஒதுங்கவேண்டும்? இன்னமும் சமுதாயத்திற்குப் பயந்து பயந்துதானே வாழ்கிறீர்கள்? (உண்மையில் பால்வினைத் தொழில் பற்றிய கருத்தாடலில் நான் கருத்தாடியதையிட்டு இப்பொழுது வெட்கப்படுகிறேன்!)
<b>C)</b>
Quote:1. அம் மலரை கண்ணால்கூட பார்க்காமல், அதில் வந்த கட்டுரைகளை வாசிக்காமல் கருத்துச் சொல்ல வருமளவுக்கு ஆண் மேலாதிக்கச் சிந்தனை எழுத்துத் தர்மத்தையே மீறி செயற்பட வைத்தது.
இந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இப்பொழுது யாழ் இணையத்தில் வந்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்த, "பெண்கள் சந்திப்பு 2003" இல் கலந்து கொண்ட பெண்களில் எத்தனை பேர் அந்தக் கருத்துக்களை முழுமையாக வாசித்தார்கள்? எத்தனை பேர் பதிலுக்கு கருத்தெழுதினார்கள்?
யாழ் இணையத்தளத்தில் உங்களைக் கருத்தெழுத வேண்டாம் என்று யாராவது தடுத்தார்களா அல்லது யாழ் இணையம் உங்களை அனுமதிக்கவில்லையா? உங்களால் கருத்தெழுத முடியவில்லை அல்லது கருத்துக்களைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை அல்லது எழுதப்பட்ட கருத்துக்கள் பிடிக்கவில்லை, என்றால் விலகிப் போவதுதானே பண்பு. அதைவிடுத்து உங்கள் இயலாமையைத் தீர்த்துக்கொள்ள அல்லது மறைத்துக்கொள்ள ஒரு இணையத்தளத்தின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்வதா பண்பு? செய்வதையெல்லாம் தான் செய்துவிட்டு எல்லாம் இறைவன் செயல் என்று சொல்வது போல் இருக்கிறது உங்கள் கண்டனம். "ஆடத் தெரியாதவன் மேடை சரியில்லை" என்றானாம். "படிக்கத் தெரியாதவன் பள்ளிக்கூடமே சரியில்லை" என்றானாம். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
புதிய தொழில்நுட்பத்தைப்பற்றியும், நவீன உலகின் மாற்றங்கள் பற்றியும் விளங்கிக் கொள்ளாமல் எப்படிப் பெண்விடுதலையை முன்னெடுக்கிறீர்கள்? இணையம் என்றால் என்ன என்பதன் பொருள் விளங்கியிருந்தால் அல்லது இணையத்தில் இயங்கும் ஒரு கருத்துக்களம் என்றால் என்ன என்பது பற்றி அறிந்திருந்தால் நீங்கள் இந்தக் கண்டனத்தைத் தெரிவித்திருக்கமாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களின் இந்தக் கண்டனம் உங்களுடைய அறியாமையைக் காட்டுகிறது என்பதையே என்னால் உணர முடிகிறது. குறிப்பாக யாழ் இணையத்தளத்தில் இணையும் பொழுது சில விதிமுறைகளை வாசித்து விளங்கிக்கொண்ட பின்னரே அனைவரும் அங்கத்துவராக இணைகிறார்கள். நீங்களும் யாழ் இணைய அங்கத்துவராக இருந்தால் அதனை வாசித்திருப்பீர்கள். அல்லது வாசிக்காமலேயே அவசரத்தில் அங்கத்துவராக இணைந்தீர்களா? (முடிந்தால் விதிமுறைகளை மறுபடி வாசியுங்கள்)
நீங்கள் "பதிவுகள்.கொம்" இல் எழுதிய கட்டுரை எமக்கு முரண்பாடாக இருக்கிறது, அல்லது யாழ் இணையத்தை காரணமில்லாமல் கண்டிக்கிறது என்பதற்காக, அதை அனுமதித்த "பதிவுகள்.கொம்" இணையத்தளத்தின் மீது நாங்கள் கண்டனம் தெரிவிப்பது எந்த வகையில் நியாயம். நீங்களே யோசித்துப்பாருங்கள் ஒரு இணைய ஊடகத்தின் தன்மை உங்களுக்குப் புரியும். கண்டனங்கள் தெரிவிப்பதற்கு "கீ போர்ட்டும், வேர்ட் பாட்டும்" போதாது, சரியான <b>காரணமும்</b> வேண்டும் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் இந்தக் கண்டனத்தைப் பற்றி எனது நண்பிகளிடம் குறிப்பிட்டேன். அவர்கள் சிரித்தார்கள்! மண்டைப் பிரதேசம் வெறுமையாக இருக்கிறதா என்று கேட்டார்கள். கண்டனம் தெரிவித்த அத்தனை பெண்களும் கருத்தெழுதாமல் எங்கே ஓடி ஒழிந்தார்கள் என்று கேட்டார்கள். ஒன்றுமட்டும் எனக்கு விளங்குகிறது. இவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் இன்னும் தெளிவடையவில்லை. நீங்கள் நீதிமன்றத்தில் போய் வழக்குத் தொடுத்து நீதி கேட்டால் (கூட) உங்களைப் பார்த்து சிரிப்பார்கள், நீங்கள் எந்த உலகத்தில் இருக்கின்றீர்கள் என்று! "<b>சிறுபிள்ளைத் தனம்</b>" என்கின்ற சொல்லை எனக்குப் பலர் பயன்படுத்தியிருக்கிறார்கள், தங்களுடைய இயலாமையை மறைப்பதற்காக. அதே வார்த்தையை நான் உங்களுக்குப் பயன்படுத்த விரும்பவில்லை. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி
பி.கு.: இங்கே எழுதப்பட்டது யாழ் இணையத்துக்குக் கண்டனம் தெரிவித்தவர்களுக்கு மட்டும். எவரையும் தாக்குவதற்காக இது எழுதப்படவில்லை. சில உண்மைகளைச் சொல்வதற்காகவும், தெளிவில்லாமல் கண்டனம் தெரிவித்தவர்களுக்கு விளக்கம் கொடுப்பதற்காகவும் மட்டுமே இது எழுதப்பட்டது.