Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனதுமட்டும்
#1
சந்தோசத்துக்கும் அதை பகிரவும் மட்டும் தானா
சகியே உன் மனது உன்சந்தோசம் கண்டு புன்னகை
சகிதம் வரவேற்கும் மனது புரிந்தால் உன்வார்த்தைகள்
சுகமாய் வருடும் தென்றல் மனதின் வலிபுரியா உறவும்

மங்கையரை புரியாது தவிக்கும் வாலிபங்களும்
மனதைபடிக்கமுடியா தனிமையும் எப்போதுமே
மனதின் வலிபுரியா உன் வார்த்தைகளும் என்
மயக்கங்களும் எப்போதும் என் வார்த்தைகள்
மதிக்கப்படாதபோது வரும் வலி உனக்கு

புரியாது உன்னை சுற்றி உறவு இருக்கும் என்னை
புரியாது உன்மனம் புரிந்தால் மனதுமட்டும் அழுவது
புரியும் பகிரவும் ஆறுதல் கிடைக்கவும் அதற்கோர்
புரிந்த உறவு வேண்டும் கிடைத்தவர் மட்டும்

அதை அறியாமலே புன்னகை யின்றி வாழ்வை தொலைத்து
அன்பும் புரியா மனதுடனும் வாழும் தனி மனித
அவலங்கள் எம் தலைவிதி மாறா ரணங்களும்
அருகில் இல்லா மனதும் அலைகின்ற போது நீ வேண்டும்
inthirajith
Reply
#2
இந்திரஜித் உங்கள் மனதுமட்டும் கவிதை அழகாக இருக்கிறது மேலும் தொடருங்கோ
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)