Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்மையின் மெளனபாசை...!
#61
தமிழினி கவிதை நன்று. இப்படி கிளப்பிவிடுகிறீர்களே ? :oops: :oops: :oops:
Reply
#62
<img src='http://www.tamilnet.com/img/publish/2005/10/28_10_05_jaffna_03.jpg' border='0' alt='user posted image'>

தமிழினி... இது புத்தூரில் இன்று...! ஆயுதம் தரித்த அந்தியப்படைகள் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள பாலியல் வன்முறைகளை எதிர்த்து எங்கள் அன்னையர் போர்க்கொடி தூக்கும் காட்சி..! இதன்போது நடந்த துப்பாக்கி பிரயோகத்தில் அன்னையர் சிலர் உட்பட 7 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்...!

பெண்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உத்தரவாதம் செய்யும் நிலை கட்டாயம் வரவேண்டும்..அதுபோல் தங்கள் உரிமைக்காக தாங்களே குரல் கொடுக்க வேண்டும்..! இதில் அநாவசியமாக ஆண்களின் தயவு வேண்டக்கூடாது...! ஆண்கள் பலரின் நயவஞ்சகமான குரல் பெண்களை சுயாதீனமாக அவர்களின் பாதையில் செல்லவிடாது... தங்களின் கபடப் பாதைக்கு இட்டுச் செல்லவே வழிசெய்யும்...! ஆண்கள் பெண்களுக்காக குரல் கொடுக்கிறார்கள் என்றால்..அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்..! அவர்கள் தங்களுக்கான (ஆண்கள் ஆண்களுக்கு) சீர்திருத்தத்தை கொண்டுவரவே முதன்மை படுத்த வலியுறுத்த வேண்டும்..! பெண்ணின் தனிச் சுதந்திரத்தில் தலையிடும் உரிமை ஆணுக்கு கிடையாது...! அதே போல் ஆணோ பெண்ணோ அடிப்படை மனித வாழ்வியல் கோலங்களை சீர்குலைக்க சுதந்திரம் அளிக்கக் கூடாது...! புரட்சி என்ற பெயரில்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#63
Rasikai Wrote:தமிழினி கவி அழகாக இருக்கிறது.ஆனால் உங்கள் கவியின் கரு இந்தக்காலத்திலும் இருக்கா??.
வாழ்த்துக்கள். தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்

கண்டிப்பாக இந்தக்காலத்தில என்ன கண்கூடு கண்டுகொண்டிருக்கன் பலரை. நீங்க வேறை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:இப்படி கிளப்பிவிடுகிறீர்களே ?
சே சே கிளப்பிவிடவில்லை நமக்கும் தென்பு வரும் அல்லவா?? :wink:

நன்றி குருவிகள் உங்கள் செய்திக்கும் கருத்திற்கும். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#64
tamilini Wrote:[.!


எண்ணிப்பார்ப்போம் சோதரியே
ஏக்கங்கள் உனக்குள்ளும்
எக்கச்சக்கமாய்
தேக்கி ஏன் வைக்கிறாய் ?
துணிந்து வா பெண்மையே..!
தூய்மையாய் ஓர் உலகம்
துரிதமாய் அமைப்போம்.
ஆக்கமும் அழிவும்
துணிந்த எங்கள் கையிலே..!

ஆக்குவோம் நல்லவற்றை
அழிப்போம் அராஜகத்தை
அடிமை விலங்கிற்கு
விலங்கிட்டு
புரட்சி செய்வோம்.
பெண்மை மென்மை என்ற
இயலாமையை நீக்கி
பெண்மை வல்லமை என்று
அர்த்தம் செய்வோம்.

வெண்மையாய் மிளிரவும்.
கருமையாய் எரிக்கவும்
கற்றுக்கொள்வோம்.
பேதையாய் ஒரு வாழ்வு
பேச்சிற்கும் வேண்டாம்.
வாராய் சோதரி
வல்லமையோடு
வாழ்வோம்
வாழவைப்போம்
வாழ்ந்து காட்டுவோம்..!

அந்த துணிவு தான் நிச்சயம் வேண்டும். நீண்ட நாட்களுக்கு பின் கவி கண்டதில் மகிழ்ச்சி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#65
ஆகா.. ஆகா அக்கா கவிதை எழுதிட்டா.. ஆனா பாசையா வந்திருக்கு ஒருவன் வரேல்லை தான் .. ஆனாலும் கவிதை கரு நன்று .. வாழ்த்துக்கள் அக்கா
[b][size=18]
Reply
#66
<img src='http://www.yarl.com/forum/files/other_158.gif' border='0' alt='user posted image'>

<b>காளைகள் விற்பனைக்கு.?

[b]சீதனச்சந்தையில்
சில்லறைக்கு
சீரழிகிறது ஆண்களின் வாழ்க்கை
பொருளிற்காய் விற்கப்படும்
வாயற்ற ஊமைகளாய் அவர்கள்..!
இவர்கள் நிலை கண்டு
பெண்களே பொங்கியெழுங்கள்.
ஊமைகளின்
குரலாக மாறுங்கள்.
கோழைகளாய் மாறி
வாய் மூடித்தலையாட்டும்
மந்தைகளுக்காய்
குரல் கொடுங்கள்.
சீதனம் கொடோம் என்று
உரத்துக்கூறுங்கள்
உறுதியாய் நில்லுங்கள்...!

பொருளா?? வாங்குகிறோம்
பொருத்தமான புருசனை அல்லவா தேடுகிறோம்.
பொருளாட்டம் பொருள் கொடுத்து
பேரம் பேசி விற்கும் நிலையிலா
ஆண்மகன் நிற்கிறான்...?
அவமானம் அவமானம்.
அவன் புத்தியில் உறைக்க
குரல் கொடுங்கள்..!

காசிற்காய் தன்னை விற்பவள்
விபச்சாரி
பொருளிற்காய் வாழ்க்கையை விற்பவன்..
யார் யார் யார்...!!!
அவன் யார்..??
........................!
சிறுமை சேர்க்கும்
சீதனத்திற்காய்
பெருமையாய் காரணம் கூறும்
மாட்டு மந்தைகளே...
விலைபோகும் உங்கள் சிந்தனை
சிறைபட்டுக்கொண்டதோ
சீதனச் சந்தையில்..??

சிந்தித்து செயற்படுங்கள்.
விலைபேசி விற்பனை செய்ய
பெண்கள்
பொருள் கொடுத்து வாங்கி
விளையாடி மகிந்திட
நீங்கள் ஒன்றும் பொம்மைகள் அல்ல..!


மனமுள்ள உணர்வுள்ள
மனிதர்கள்.
ஆண்மக்கள் அல்லவா..??
நிமிர்ந்து நில்லுங்கள்
சிறுமைக்கு காரணம் கூறும்
போலி வேலிகள் இனியும் எதற்கு
தகர்த்தெறிந்து மனிதனாய் நில்லுங்கள்
ஆண்மகனாய் செயற்படுங்கள்
இல்லையேல்
ஆண்மைகள்
கன்னிகளால்
காவல்காக்கப்படலாம்
முடிவும் உங்கள் கையிலே..!</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

www.tamilini.blogspot.com
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#67
Quote:ஆகா.. ஆகா அக்கா கவிதை எழுதிட்டா.. ஆனா பாசையா வந்திருக்கு ஒருவன் வரேல்லை தான் ..
இதைக்கவிக்காமல் விட்டிட்டன். கருத்துச்சொன்ன அனைவருக்கும் நன்றிகள். பின்ன எப்பவும் ஒருவனா?? அவருக்கு ஓய்வு வேண்டாமோ அது தான். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#68
<b>கவிதை நன்று கருவும் நன்று. ஆனாலும் என்றும் என்னுள் உதைக்கும் ஒரு கேள்வி.</b>
<b>புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????</b>
Reply
#69
தமிழ்..! உங்கட உணர்வுக்கு தலை வணங்கினாலும்....சீதணம் பெண்ணுக்காய் ஆணுக்கு வளங்கமல்... பெண்ணின் சொத்து பெண்ணுக்கு கொடுப்பது தப்பில்லை... Idea

உதாரணமாய் எனது நண்பி சொன்னது ஞாபகத்தில் வருக்குது. அவருக்கு 2 அண்ணன்கள். அவவைக் கல்யாணம்கட்ட வந்தவர் தனக்கு சீதணமாய் எதுவும் வேண்டாம் எண்ட.. அந்தப் பெண் சொன்னது எனக்கு அப்பாவிடம் இருந்து அண்ணாமாருக்கு என்ன சொத்துப் போகுதோ அதில எனக்கும் பங்கு வேணும்... :!:

எனக்கு அவரின் கோரிக்கை நியாயமாய்த்தான் படுகுது...

இருப்பவர்கள் பெண்ணுக்குச் சேரவேண்டியதைக் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அதைக் கட்டாயம் ஆக்கக்கூடாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>எப்பிடி எண்டாலும் உங்கட உணர்வுபூர்வமான கவிதை மிகவும் நண்றாக இருக்கு... நண்றி.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>
::
Reply
#70
Quote:புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????

இது சரியான கேள்வி.. ஆனால் எத்தனை பேர் அப்படி தங்கள் சகோதரர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்க்க வேண்டும். அதே வேளை வெறுமனே தலையை ஆட்டி தாலியைக்கட்டிக்கொள்வதோடு நின்றுவிடாமல் ஆண்களும் இதை சாதிக்கலாம் அல்லவா?? ஏன் என்றால் அதோடு சம்பந்தப்பட்டது வாழப்போகும் ஆணும் பெண்ணுமே. அவர்கள் இருவரும் சீதனம் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை என்று உறுதியாய் நின்றால் யார் என்ன செய்துவிட முடியும். தன் வங்கிக்கணக்கை நிரப்ப நினைக்கும் தாயென்ன சகோதரி என்ன ஒன்றும் செய்துவிட முடியாது தானே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#71
Thala Wrote:தமிழ்..! உங்கட உணர்வுக்கு தலை வணங்கினாலும்....சீதணம் பெண்ணுக்காய் ஆணுக்கு வளங்கமல்... பெண்ணின் சொத்து பெண்ணுக்கு கொடுப்பது தப்பில்லை... Idea

உதாரணமாய் எனது நண்பி சொன்னது ஞாபகத்தில் வருக்குது. அவருக்கு 2 அண்ணன்கள். அவவைக் கல்யாணம்கட்ட வந்தவர் தனக்கு சீதணமாய் எதுவும் வேண்டாம் எண்ட.. அந்தப் பெண் சொன்னது எனக்கு அப்பாவிடம் இருந்து அண்ணாமாருக்கு என்ன சொத்துப் போகுதோ அதில எனக்கும் பங்கு வேணும்... :!:

எனக்கு அவரின் கோரிக்கை நியாயமாய்த்தான் படுகுது...

இருப்பவர்கள் பெண்ணுக்குச் சேரவேண்டியதைக் கொடுப்பதில் தப்பில்லை ஆனால் அதைக் கட்டாயம் ஆக்கக்கூடாது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ம் அந்த பங்கு என்றதைப்பாருங்க தந்தையார் சொத்து அவர்விருப்பத்தின் படி பகிர்கிறார்கள் சரி. அது அவர்களின் உரிமை உருத்து தானே. அது எப்படியும் அவரை சென்றடையவேணும் (முந்தி பெண்ணிற்கு பங்கில்லை என்று சொன்னார்களே.. :wink: ) (இப்படிச் சொத்து அற்றவர்களால் கொடுக்க முடியாது தானே) இதையே தரகர் மூலம் இத்தனை சவரன் நகை இந்தனை லட்சம் பணம் என்றார்கள் இது தேவையா இதை பெறுபவர்கள் சிந்திக்கக்கூடாதா?? பெண்ணிற்கு எப்படியாவது கலியாணம் நடக்கவேணும் என்ற அவதில பெற்றோர் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். இது கிட்டத்தட்ட ஆண்மகனை விலைக்கு வாங்கிறது விக்கிறது மாதிரித்தானே??

பெற்றோர் சொத்தை ஆண்களிற்கு பகிரும் போது தனக்கும் பகிரச்சொல்லி அந்த பெண் கேட்டாரே அது நியாயம் தான். அந்தச்சொத்தில் இவ்வளவு தா என்ற பேரம் கிடையாது உரிய பங்கு தானே?? சீதனத்தில் வியாபாரம் அல்லவோ நடக்குது.

மற்றர்வகள் பணம் ஏன் ஒன்று சேர்ந்த பின் இருவரும் உழைத்து வாழ்க்கை நடத்துவது தானே மற்றர்களில் ஏன் தங்கியிருக்கவேண்டும்..?? சீதனம் என்ற பேரில் பிச்சை எடுப்பது போலத்தானே இதுவும். என்ன கெளரவமாய் எடுக்கினம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#72
பொருளா?? வாங்குகிறோம்
பொருத்தமான புருசனை அல்லவா தேடுகிறோம்.
பொருளாட்டம் பொருள் கொடுத்து
பேரம் பேசி விற்கும் நிலையிலா
ஆண்மகன் நிற்கிறான்...?
அவமானம் அவமானம்.
அவன் புத்தியில் உறைக்க
குரல் கொடுங்கள்..!

தமிழினி உங்கள் புரட்சி கவிதை நன்று... ஆம் சீதனம் கொடுப்பதையோ வாங்குவதையோ முதலில் பெண் சமுதாயம் தான் எதிர்க்க வேண்டும். பல இடங்களில் மாமிமார்களால் தானே சீதனப் பிரச்சனைகள் வருகின்றது

Reply
#73
<b>தமழினி
நீங்கள் எழுதும்போது இலகுவாக எழுதலாம். ஆனால் பல ஆண்கள் தாயாரின் கண்ணீர் முன் உடைந்து போய் விடுவார்கள். தாயாரின் விருப்பத்திற்கு மாறாக நடந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் தாயாரிடம் சாபம் வாங்கிய படியே வாழ்கின்றார்கள். இப்படி எத்தனையோ ஆண்களை நானே சந்தித்து இருக்கின்றேன். அதேபோல் தன் தங்கைக்கு தன்னைவிட சீதனம் கூடக் கொடுத்ததால் தனக்கும் அப்படி வேண்டும். இல்லையேல் தங்கையின் திருமணத்தில் தன் கணவரை வைத்தே பிரைச்சினை ஏற்படுத்துவேன் என மிரட்டிய தாய்க்குலங்களையும் எனக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் அடிப்படையில் சீதனப் பிசாசிற்கு நீரூற்றி வளர்பது பெண்களே. ஆனாலும் பழியை வழமைபோல் ஆண்களின் மேல் போட்டுவிட்டு பெண்கள் தப்பித்து விடுகின்றார்கள்.</b>
Reply
#74
நல்லதொரு கவி...பலரது உள்ளங்களுக்குள்ளும் கேள்விக் கணைகளுக்கு வித்திட்டிருக்கும்...! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#75
நல்ல கருவுடன் கூடிய கவி நன்று. இந்தக்காலத்தில் தேவையான ஒரு கவி. மேலும் தொடருங்கள்
<b> .. .. !!</b>
Reply
#76
tamilini Wrote:
Quote:புரட்சிகள் தேவைதான் அதனைப் பெண்கள் தம் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சீதனம் கொடுப்பதா எனச் சீறி எழும் பெண்கள் தம் ஆண் சகோதரர்கள் வாங்கும் போது மட்டும் ஏன் எதிர்பதில்லை. வரும் பணம் இவர்களின் வங்கிக் கணக்கை நிரப்புவதாலோ?????

இது சரியான கேள்வி.. ஆனால் எத்தனை பேர் அப்படி தங்கள் சகோதரர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணும் இதை எதிர்க்க வேண்டும். அதே வேளை வெறுமனே தலையை ஆட்டி தாலியைக்கட்டிக்கொள்வதோடு நின்றுவிடாமல் ஆண்களும் இதை சாதிக்கலாம் அல்லவா?? ஏன் என்றால் அதோடு சம்பந்தப்பட்டது வாழப்போகும் ஆணும் பெண்ணுமே. அவர்கள் இருவரும் சீதனம் கொடுப்பதும் இல்லை வாங்குவதும் இல்லை என்று உறுதியாய் நின்றால் யார் என்ன செய்துவிட முடியும். தன் வங்கிக்கணக்கை நிரப்ப நினைக்கும் தாயென்ன சகோதரி என்ன ஒன்றும் செய்துவிட முடியாது தானே. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

சில இடத்தில்... மிகச் சமீபத்தில் கூட.. சகோதரிகளே உனக்கு சீதனம் கூட எனக்கு குறைய என்று அடிப்பட்டிருக்குதுகள்...! அவையும் பெண்கள் தானே...! ஆண்கள் மட்டுமில்ல...பெண்களும் மனதளவில் உறுதியா மாறனும்..கொடுக்கம்...கொடுக்கிறதை வாங்கம் (இப்ப சீதனம்..பல இடங்களில் நேரடியாக..ஆண்களுக்கு கொடுக்கிறதில்லை..பெண்ணுக்கு கொடுக்கிறம் என்று கொடுக்கப்படுகிறது..! அவைட வங்கிக் கணக்கே நிரப்பப்படுகிறது..! அதை பெரும்பாலான பெண்கள் ஆதரிக்கினம்...! அதுகூட மறைமுகமா சீதனம் வளரத்தான் இடமளிக்குது..! இவையும் கண்டிக்கப்படனும்..! தாழ்வென்று காட்டப்படனும்..!) குறிப்பா சீதனத் தடைச்சட்டம் வந்தாப் பிறகு..நன்கொடை என்றும் கொடுத்த பெண் வீட்டார் இருக்கினம்..அந்தளவுக்கு ஏன் கட்டாயப்படுத்தினம்...ஆண்களை...! அவையையும் கொஞ்சம் கண்டிக்கனும்...!

எங்கடை ஆக்கள் லேசான ஆக்களில்ல... தாயகத்தில காணி விற்றா புலிகளுக்கு பங்கு கொடுக்கனும் என்று..புலத்தில இருந்து ரகசியமா எழுதி மாத்திற ஆக்கள்..எங்க கள்ளம் செய்யலாம்...எப்படி சட்டத்தை ஏய்க்கலாம்...என்றதில...எங்கட சனம் கெட்டிக்காரர்..! ஒரு பக்கம் புரட்சி முழக்கம் இட்டு..பொழுது கழிச்சிட்டு இன்னொரு பக்கம்...எல்லாம் சர்வ சாதாரணமா செய்வினம்...சோ...எங்கடை ஆக்களுக்கு ஒரு விசயத்தை சொல்லிப் புரிய வைக்கிறது ரெம்ப கஸ்டம்..! தமிழினி..முயன்றிருக்காங்க..பாப்பம் என்ன நடக்குது என்று..! நல்லது நடந்தாச் சரி..சந்தோசம்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#77
தமிழினி அக்கா... உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.

புலம் பெயர்நாடுகளில் சீதனம் கொடுமை அதிகம் இல்லை என்று தான் நினைக்கிறேன்..... வேறு இடத்திலும் விவாதிக்கப்பட்ட விடயம் தான்....

உங்கள் நினைவேடுக்கும் சென்று வந்தேன் அழகாய் இருக்கிறது. மேலும் தொடரட்டும்.
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#78
கவிதையின் கருபொருள் நன்றாக இருக்கின்றது. ஆனால் சீதனத்திற்கு தனியே ஒரு பகுதியை குற்றம் சாட்ட முடியாது. ஒருத்தர் கேட்டதால் கொடுக்கின்றேன் என்பார், இன்னொருவர் கொடுத்ததால் வாங்குகின்றேன் என்பார். ஆக சீதனத்திற்கு ஒருபகுதிதான் காரணம் என்று சொல்லி மற்றய பகுதி தப்பிக்க முடியாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#79
Vasampu Wrote:<b>தமழினி
நீங்கள் எழுதும்போது இலகுவாக எழுதலாம். ஆனால் பல ஆண்கள் தாயாரின் கண்ணீர் முன் உடைந்து போய் விடுவார்கள். தாயாரின் விருப்பத்திற்கு மாறாக நடந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் தாயாரிடம் சாபம் வாங்கிய படியே வாழ்கின்றார்கள். இப்படி எத்தனையோ ஆண்களை நானே சந்தித்து இருக்கின்றேன். அதேபோல் தன் தங்கைக்கு தன்னைவிட சீதனம் கூடக் கொடுத்ததால் தனக்கும் அப்படி வேண்டும். இல்லையேல் தங்கையின் திருமணத்தில் தன் கணவரை வைத்தே பிரைச்சினை ஏற்படுத்துவேன் என மிரட்டிய தாய்க்குலங்களையும் எனக்குத் தெரியும். எப்படிப் பார்த்தாலும் அடிப்படையில் சீதனப் பிசாசிற்கு நீரூற்றி வளர்பது பெண்களே. ஆனாலும் பழியை வழமைபோல் ஆண்களின் மேல் போட்டுவிட்டு பெண்கள் தப்பித்து விடுகின்றார்கள்.</b>

ம் சரியண்ணா நீங்க சொல்றதைப்படி பாத்தாலும் அம்மா அழுகிறா கண்ணீர் வடிக்கிறா என்றிட்டு எத்தனை விடயங்களைச்செய்யாமல் விட்டிருக்கிறோம். உதாரணத்திற்கு அனேகமாய் காதலிக்கும் இளைஞர்களிற்கு தாய் தகப்பன் கண்ணீர் வடிச்சு மருந்து குடிப்பன் என்றெல்லாம் வெருட்டுவார்கள். அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சேந்த காதலர்களும் இருக்கிறார்கள். ஆகமொத்தம் இந்த கண்ணீர் தண்ணீர் என்றது ஒரு சாட்டாகத்தான் படுது. பெண்கள் அப்படியான தவறுகள் செய்கையில் அவர்களை புத்திமதி கூறி பிரச்சனையை எடுத்து விளக்கி திருத்த முயலவேண்டுமே தவிர. அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்றதை ஏற்று அதன்படி நடக்கமுடியுமா?? நடக்கலாமா?? சீதனவிடயத்தில் தவறு செய்கின்ற பெண்களும் இருகக்கிறார்கள் இல்லை என்று சொல்லவில்லை அவர்களையும் திருத்த வேண்டியது ஒவ்வொருவரது கடமையும் கூடவே. சாட்டுக்கள் சொல்லிக்கொண்டு போனால் தீர்வு வருமோ?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#80
Quote:சில இடத்தில்... மிகச் சமீபத்தில் கூட.. சகோதரிகளே உனக்கு சீதனம் கூட எனக்கு குறைய என்று அடிப்பட்டிருக்குதுகள்...! அவையும் பெண்கள் தானே...! ஆண்கள் மட்டுமில்ல...பெண்களும் மனதளவில் உறுதியா மாறனும்..கொடுக்கம்...கொடுக்கிறதை வாங்கம் (இப்ப சீதனம்..பல இடங்களில் நேரடியாக..ஆண்களுக்கு கொடுக்கிறதில்லை..பெண்ணுக்கு கொடுக்கிறம் என்று கொடுக்கப்படுகிறது..! அவைட வங்கிக் கணக்கே நிரப்பப்படுகிறது..! அதை பெரும்பாலான பெண்கள் ஆதரிக்கினம்...! அதுகூட மறைமுகமா சீதனம் வளரத்தான் இடமளிக்குது..! இவையும் கண்டிக்கப்படனும்..! தாழ்வென்று காட்டப்படனும்..!) குறிப்பா சீதனத் தடைச்சட்டம் வந்தாப் பிறகு..நன்கொடை என்றும் கொடுத்த பெண் வீட்டார் இருக்கினம்..அந்தளவுக்கு ஏன் கட்டாயப்படுத்தினம்...ஆண்களை...! அவையையும் கொஞ்சம் கண்டிக்கனும்...!

எங்கடை ஆக்கள் லேசான ஆக்களில்ல... தாயகத்தில காணி விற்றா புலிகளுக்கு பங்கு கொடுக்கனும் என்று..புலத்தில இருந்து ரகசியமா எழுதி மாத்திற ஆக்கள்..எங்க கள்ளம் செய்யலாம்...எப்படி சட்டத்தை ஏய்க்கலாம்...என்றதில...எங்கட சனம் கெட்டிக்காரர்..! ஒரு பக்கம் புரட்சி முழக்கம் இட்டு..பொழுது கழிச்சிட்டு இன்னொரு பக்கம்...எல்லாம் சர்வ சாதாரணமா செய்வினம்...சோ...எங்கடை ஆக்களுக்கு ஒரு விசயத்தை சொல்லிப் புரிய வைக்கிறது ரெம்ப கஸ்டம்..! தமிழினி..முயன்றிருக்காங்க..பாப்பம் என்ன நடக்குது என்று..! நல்லது நடந்தாச் சரி..சந்தோசம்..!

அந்த சண்டை போட்ட சகோதரியின் கணவன் அவருக்கு புத்திமதி சொல்லி அவரை திருத்தியிருக்கலாமே?? அவரும் சேந்து நிண்டாரா என்னை குறைந்த விலையில் வாங்கீட்டாங்கள் என்று. அல்லது தான் குறைந்த விலையில் விற்கப்பட்டு விட்டேன் என்று கவலைப்பட்டுவிட்டாரா என்ன..?? :wink: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)