11-26-2003, 08:23 PM
<b>புதிய செய்தி</b>
வணக்கம் கருத்துக்கள நண்பர்களே,
கடந்த சில காலங்களாக கருத்துக்களத்தில் நடந்து வரும் கருத்தாடல்கள் நிர்வாகத்திற்கு அதிருப்தியையும், மற்றைய கள அங்கத்துவர்களுக்கும், பார்வையாளர்களிற்கும் மனவருத்தையும் அளித்திருக்கிறது. கருத்தாடல்கள், தலைப்புகளைத் தாண்டி தனிப்பட்ட கருத்தாளர்கள் மீதான சாடல்களாகவும், வசைபாடல்களாகவும் அமைந்திருந்தமை யாழ் கருத்துக்களத்தின் தன்மையைப் பாதித்துள்ளது. கருத்தாட முடியாத அல்லது எதிர்க்கருத்துக் கூறமுடியாத சந்தர்ப்பத்தில், எதிர்க்கருத்தாளர் மீது பயன்படுத்தப்படுகின்ற சொற்பிரயோகங்கள் கவலையளிப்பதாக உள்ளன.
ஒரு தலைப்பின்கீழ் நடைபெறும் கருத்தாடலில் முரண்பாடு வந்துவிட்டால், அந்த முரண்பாட்டைத் தனிப்பட்ட பகையாக்கிக் கொண்டு மற்றைய பிற கருத்தாடல்களின் போதும் பழிதீர்த்துக் கொள்ள நமது கள அங்கத்துவர்கள் பலர் முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது. கருத்துக்களத்தில் சுதந்திரமாகக் கருத்தாடுவதற்கு உங்கள் அனைவருக்கும் அனுமதியுண்டு. ஆனால், யாழ் கருத்துக்களம் வழங்கும் இந்தச் சுதந்திரத்தைத் தவறான முறையில் பலர் பயன்படுத்துகிறார்கள்.
களவிதிகளை மீறி எழுதப்படும் கருத்துகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், களநிர்வாகத்தை குறை சொல்வதும், கேலி செய்வதும் வருத்தமளிக்கிறது. நிர்வாகம் 24 மணிநேரமும் கருத்துக்களத்தைக் கண்காணிக்க முடியாது. இருந்தாலும் முடிந்தளவு கருத்துக்களைக் கண்காணித்து தக்க சமயத்தில் (சில நேரங்களில் அதிகமாகவே தாமதமாகலாம்) முடிவெடுக்கும்.
கள அங்கத்துவர்கள் பலரிடையே புரிந்துணர்வுகள் இல்லை என்பது இதுவரைகாலம் நடந்தவற்றின் மூலம் தெளிவாகிறது. கருத்தாடல்களின் போது எதிர்க்கருத்தாளரைத் தாழ்த்தியும், மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கியும் கருத்துகள் (?) முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக எதிர்க்கருத்தாளரும் தனது கோபத்தைக் காட்டிக்கொள்ள தவறான சொற்பிரயோகங்களை உபயோகிக்கிறார்.
ஒரு கருத்தாடலின் போது யாரும் தோற்பதுமில்லை, வெல்வதுமில்லை. யாரையும் தோற்கடிப்பதற்காக நாம் கருத்துக்களை முன்வைப்பதில்லை. எனவே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று எண்ணி ஏன் சோர்ந்து போகிறீர்கள்? நிறையவே கற்றுக் கொண்டுள்ளோம் என்று மனதில் மகிழ்வடையுங்கள்.
<b>எனவே, தயவுசெய்து இதுவரை காலம் நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம்.</b> யாழ் கருத்துக்களம், தரமானதும், சமூகத்திற்குத் தேவையானதும், பண்பானதுமான கருத்தாடல்களையே எதிர்பார்க்கிறது. களநிர்வாகத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கருத்துக்களத்தைக் கண்காணிக்கவில்லை. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் வாழ்கிறார்கள். தம்முடைய நேரத்தை செலவழித்து இங்கே கருத்துக்களத்தைக் கண்காணிக்கிறார்கள். அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கேலி செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். நன்மையளிக்குமெனில் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
அதேநேரத்தில், அனைத்துக் கருத்துக்கள அங்கத்துவர்களிடமும் நாம் வேண்டி நிற்பது:
+ புதிதாக வருகின்ற/இணைகின்ற அங்கத்துவர்களை நட்போடும், நற்பண்போடும் வரவேற்றுக் கொள்ளுங்கள்.
+ உங்களுக்கிடையில் பழி உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
+ கருத்துக்களைப் பண்பான முறையில் முன்வையுங்கள்.
+ மறைமுகமாகவோ, நேரடியாகவோ பிறரைத் தனிப்பட்டுத் தாக்கிப் புண்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
+ பிற கள அங்கத்துவர்களை ஒருமையில் அழைக்காதீர்கள்.
+ நீங்கள்தான் இங்கே நாயகர்கள். எனவே உங்கள் தனித்துவத்தைப் பேணும் அதேநேரத்தில், பொறுப்புடனும் நடந்து கொள்ளுங்கள்.
<b>கருத்து:</b> பயனற்ற, பண்பற்ற, மற்றும் எழுதப்பட்ட கருத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் எழுதப்பட்ட கருத்துக்களிற்குப் பதில் எழுதுவதைத் தவிர்க்கவும். காரணம், விதிமுறைகளை மீறும் வண்ணம் அமையும் கருத்துக்களை நீக்கும் பொழுது, அப்படியான கருத்துக்களிற்கு எழுதப்பட்ட பதில்களும் நீக்கப்படும். ஒருவருடைய மனது புண்படியாக கருத்துகள் அநைம்திருப்பின் அதுபற்றி களநிர்வாகத்திற்கு அறியத் தாருங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்களும் பதிலுக்கு தவறாக எழுதாதீர்கள்.
இந்த செய்தியோடு உங்களிற்கு இன்னொரு மகிழ்ச்சியான தகவலையும் வழங்குகிறோம். நாளையிலிருந்து ஏறகனவே "எச்சரிக்கை" வழங்கப்பட்டவர்களின் எச்சரிக்கைகள் நல்லெண்ண அடிப்படையில் நீக்கப்படுகின்றன. அதேபோல் கருத்துக்களத்தில் தடுக்கப்பட்டவர்களுக்கும் மீள எழுத அனுமதி வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் கருத்துகளத்தில் வழங்கப்படுகின்ற கருத்தாடல் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.
யாழ் இணையத்தினூடே நண்பர்களாய், தமிழர்களாய், மனிதர்களாய் என்றும் இணைந்திருப்போம். மகிழ்ந்திருப்போம். பழையதை மறந்து அனைவரும் மகிழ்வோடு களமாட வாருங்கள். உற்சாகத்துடன் வந்து முதலில் இங்கே கைகுலுக்கிக் கொள்ளுங்கள். <b>இது புதிய சுற்று!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நன்றி
யாழ் கருத்துக்கள நிர்வாகம்
வணக்கம் கருத்துக்கள நண்பர்களே,
கடந்த சில காலங்களாக கருத்துக்களத்தில் நடந்து வரும் கருத்தாடல்கள் நிர்வாகத்திற்கு அதிருப்தியையும், மற்றைய கள அங்கத்துவர்களுக்கும், பார்வையாளர்களிற்கும் மனவருத்தையும் அளித்திருக்கிறது. கருத்தாடல்கள், தலைப்புகளைத் தாண்டி தனிப்பட்ட கருத்தாளர்கள் மீதான சாடல்களாகவும், வசைபாடல்களாகவும் அமைந்திருந்தமை யாழ் கருத்துக்களத்தின் தன்மையைப் பாதித்துள்ளது. கருத்தாட முடியாத அல்லது எதிர்க்கருத்துக் கூறமுடியாத சந்தர்ப்பத்தில், எதிர்க்கருத்தாளர் மீது பயன்படுத்தப்படுகின்ற சொற்பிரயோகங்கள் கவலையளிப்பதாக உள்ளன.
ஒரு தலைப்பின்கீழ் நடைபெறும் கருத்தாடலில் முரண்பாடு வந்துவிட்டால், அந்த முரண்பாட்டைத் தனிப்பட்ட பகையாக்கிக் கொண்டு மற்றைய பிற கருத்தாடல்களின் போதும் பழிதீர்த்துக் கொள்ள நமது கள அங்கத்துவர்கள் பலர் முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது. கருத்துக்களத்தில் சுதந்திரமாகக் கருத்தாடுவதற்கு உங்கள் அனைவருக்கும் அனுமதியுண்டு. ஆனால், யாழ் கருத்துக்களம் வழங்கும் இந்தச் சுதந்திரத்தைத் தவறான முறையில் பலர் பயன்படுத்துகிறார்கள்.
களவிதிகளை மீறி எழுதப்படும் கருத்துகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், களநிர்வாகத்தை குறை சொல்வதும், கேலி செய்வதும் வருத்தமளிக்கிறது. நிர்வாகம் 24 மணிநேரமும் கருத்துக்களத்தைக் கண்காணிக்க முடியாது. இருந்தாலும் முடிந்தளவு கருத்துக்களைக் கண்காணித்து தக்க சமயத்தில் (சில நேரங்களில் அதிகமாகவே தாமதமாகலாம்) முடிவெடுக்கும்.
கள அங்கத்துவர்கள் பலரிடையே புரிந்துணர்வுகள் இல்லை என்பது இதுவரைகாலம் நடந்தவற்றின் மூலம் தெளிவாகிறது. கருத்தாடல்களின் போது எதிர்க்கருத்தாளரைத் தாழ்த்தியும், மறைமுகமாகவும் நேரடியாகவும் தாக்கியும் கருத்துகள் (?) முன்வைக்கப்படுகின்றன. இதன் காரணமாக எதிர்க்கருத்தாளரும் தனது கோபத்தைக் காட்டிக்கொள்ள தவறான சொற்பிரயோகங்களை உபயோகிக்கிறார்.
ஒரு கருத்தாடலின் போது யாரும் தோற்பதுமில்லை, வெல்வதுமில்லை. யாரையும் தோற்கடிப்பதற்காக நாம் கருத்துக்களை முன்வைப்பதில்லை. எனவே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்று எண்ணி ஏன் சோர்ந்து போகிறீர்கள்? நிறையவே கற்றுக் கொண்டுள்ளோம் என்று மனதில் மகிழ்வடையுங்கள்.
<b>எனவே, தயவுசெய்து இதுவரை காலம் நடந்தவைகளை மறப்போம். மன்னிப்போம்.</b> யாழ் கருத்துக்களம், தரமானதும், சமூகத்திற்குத் தேவையானதும், பண்பானதுமான கருத்தாடல்களையே எதிர்பார்க்கிறது. களநிர்வாகத்தினர் அனைவரும் ஒரே இடத்தில் இருந்து கருத்துக்களத்தைக் கண்காணிக்கவில்லை. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவர்கள் வாழ்கிறார்கள். தம்முடைய நேரத்தை செலவழித்து இங்கே கருத்துக்களத்தைக் கண்காணிக்கிறார்கள். அவர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. கேலி செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். நிர்வாகத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். நன்மையளிக்குமெனில் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
அதேநேரத்தில், அனைத்துக் கருத்துக்கள அங்கத்துவர்களிடமும் நாம் வேண்டி நிற்பது:
+ புதிதாக வருகின்ற/இணைகின்ற அங்கத்துவர்களை நட்போடும், நற்பண்போடும் வரவேற்றுக் கொள்ளுங்கள்.
+ உங்களுக்கிடையில் பழி உணர்வுகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
+ கருத்துக்களைப் பண்பான முறையில் முன்வையுங்கள்.
+ மறைமுகமாகவோ, நேரடியாகவோ பிறரைத் தனிப்பட்டுத் தாக்கிப் புண்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
+ பிற கள அங்கத்துவர்களை ஒருமையில் அழைக்காதீர்கள்.
+ நீங்கள்தான் இங்கே நாயகர்கள். எனவே உங்கள் தனித்துவத்தைப் பேணும் அதேநேரத்தில், பொறுப்புடனும் நடந்து கொள்ளுங்கள்.
<b>கருத்து:</b> பயனற்ற, பண்பற்ற, மற்றும் எழுதப்பட்ட கருத்தின் நோக்கத்தை திசைதிருப்பும் வண்ணம் எழுதப்பட்ட கருத்துக்களிற்குப் பதில் எழுதுவதைத் தவிர்க்கவும். காரணம், விதிமுறைகளை மீறும் வண்ணம் அமையும் கருத்துக்களை நீக்கும் பொழுது, அப்படியான கருத்துக்களிற்கு எழுதப்பட்ட பதில்களும் நீக்கப்படும். ஒருவருடைய மனது புண்படியாக கருத்துகள் அநைம்திருப்பின் அதுபற்றி களநிர்வாகத்திற்கு அறியத் தாருங்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். நீங்களும் பதிலுக்கு தவறாக எழுதாதீர்கள்.
இந்த செய்தியோடு உங்களிற்கு இன்னொரு மகிழ்ச்சியான தகவலையும் வழங்குகிறோம். நாளையிலிருந்து ஏறகனவே "எச்சரிக்கை" வழங்கப்பட்டவர்களின் எச்சரிக்கைகள் நல்லெண்ண அடிப்படையில் நீக்கப்படுகின்றன. அதேபோல் கருத்துக்களத்தில் தடுக்கப்பட்டவர்களுக்கும் மீள எழுத அனுமதி வழங்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் கருத்துகளத்தில் வழங்கப்படுகின்ற கருத்தாடல் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்திப் பயன்பெறுங்கள்.
யாழ் இணையத்தினூடே நண்பர்களாய், தமிழர்களாய், மனிதர்களாய் என்றும் இணைந்திருப்போம். மகிழ்ந்திருப்போம். பழையதை மறந்து அனைவரும் மகிழ்வோடு களமாட வாருங்கள். உற்சாகத்துடன் வந்து முதலில் இங்கே கைகுலுக்கிக் கொள்ளுங்கள். <b>இது புதிய சுற்று!</b> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> நன்றி
யாழ் கருத்துக்கள நிர்வாகம்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->அவரும் ஒரு எல்லைக்குள் நின்றது தெரிந்தது ஆரையும் நான் குறைநினைக்க வில்லை ஆனால் இந்த மாற்றம் கட்டாயம் வரும் என்னதுக்காகவே தொடர்ந்து எழுதினேன்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->