11-01-2005, 06:23 AM
<b>தீபாவளி திருநாள்</b>
அன்று,
சீயக்காயிலும், எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்து,
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !
வீடுகளிளும், வீதிகளிலும்
விளக்குகளால் ஒளிர்ந்த தீபாவளி என
பண்டிகைகள் பண்பாட்டுச்
சின்னங்களாக ஒளிர்ந்தது !
இன்று,
சின்னத்திரையிலும், வண்ணத்திரையுலும்
அடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டையில்
கவர்ச்சி நாயகிகளும்,
அடிதடி நாயகர்களும் !
தயாராய் அங்காடியில் என்றோ செய்த
இனிப்பு பலகாரங்கள் !
பத்தாடையுடன், விசில் ஒலியுடன்
திரையரங்கின் இருளில்
மறையும் தீபாவளி !
வீதியைத்தாண்டி,
திரை அரங்குகளுக்கு
இடம்பெயர்ந்த தீபாவளி என
பண்டிகைகள் கடமைச்
சடங்குகளாக சிதைந்து !
சிரிக்கும் மத்தாப்புகளில்
சிவகாசி சிறுவர்களின் சிரிப்பும்,
வெடிக்காத ஊசி வெடிகளில்
கடற்கோளால் அமிழ்ந்த
சோக முகங்கள் தெரிய,
இன்னும் அடங்காத துக்கத்தால்,
தீபாவளியின் மங்களமான ஒளிவிளக்கும்
மங்கலாகத்தான் தெரிகிறது !
<b>கோவி.கண்ணன், சிங்கப்பூர்-
</b>
அன்று,
சீயக்காயிலும், எண்ணையிலும்
தொடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டைகளில்
வழிபடும் கடவுள் படங்கள் !
தாயார் கையால் சுடச்சுட செய்த
நெய்மணக்கும் அதிரசம் !
புத்தாடை அணிந்து,
கூதுகுலத்துடன் கோவில்களையும்
அடையும் தீபாவளி !
வீடுகளிளும், வீதிகளிலும்
விளக்குகளால் ஒளிர்ந்த தீபாவளி என
பண்டிகைகள் பண்பாட்டுச்
சின்னங்களாக ஒளிர்ந்தது !
இன்று,
சின்னத்திரையிலும், வண்ணத்திரையுலும்
அடங்கிய தீபாவளி !
வாழ்த்து அட்டையில்
கவர்ச்சி நாயகிகளும்,
அடிதடி நாயகர்களும் !
தயாராய் அங்காடியில் என்றோ செய்த
இனிப்பு பலகாரங்கள் !
பத்தாடையுடன், விசில் ஒலியுடன்
திரையரங்கின் இருளில்
மறையும் தீபாவளி !
வீதியைத்தாண்டி,
திரை அரங்குகளுக்கு
இடம்பெயர்ந்த தீபாவளி என
பண்டிகைகள் கடமைச்
சடங்குகளாக சிதைந்து !
சிரிக்கும் மத்தாப்புகளில்
சிவகாசி சிறுவர்களின் சிரிப்பும்,
வெடிக்காத ஊசி வெடிகளில்
கடற்கோளால் அமிழ்ந்த
சோக முகங்கள் தெரிய,
இன்னும் அடங்காத துக்கத்தால்,
தீபாவளியின் மங்களமான ஒளிவிளக்கும்
மங்கலாகத்தான் தெரிகிறது !
<b>கோவி.கண்ணன், சிங்கப்பூர்-
</b>

