10-18-2005, 02:09 PM
நாற் சுவரெ உலகமென
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.
பாரம் சுமக்கவல்ல
படைத்து; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி.
'ஈழம்' தவிர்த்தெந்த
இன்பமும் யாம்
வேண்டாமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
பூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே - நீ
காட்டிச் சென்ற தெவ்வழி
கடைசி வரை நாமும் அவ்வழி !
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான லெப்.மாலதி அவர்களின் நினைவாய் (10.10.1987)
நன்றி செம்பருத்தி
நம்பி நின்ற பெண்களைப்
பார் உலகை எனப்
பார்ப்பிக்கச் செய்தவளே.
பாரம் சுமக்கவல்ல
படைத்து; பெண்களை
வீரத்தரசிகளாய்
வீதியுலா வருவதற்கேயென
உரக்கச் சொன்னவளே,
மாலதி,
நீயே வரலாற்றின் முதல்வரி.
'ஈழம்' தவிர்த்தெந்த
இன்பமும் யாம்
வேண்டாமென
களத்தில் வீழ்கையில்
கடைசியாய் நீ சொன்னாய்.
பூட்டுடைத்து விடுதலைக்காய்
புறப்பட்ட மகளே - நீ
காட்டிச் சென்ற தெவ்வழி
கடைசி வரை நாமும் அவ்வழி !
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் மாவீரரான லெப்.மாலதி அவர்களின் நினைவாய் (10.10.1987)
நன்றி செம்பருத்தி
----- -----

