Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கந்தரின் புல(ப)ம்பல் மடம்
நன்றிகள்..... குருவிகள்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
கந்தர்..
உதவிபணம் எடுக்கிறதுதான் இப்ப முழுப் பிரச்சனைமாதிரி பேட்டி போச்சுது..
தாங்களில்லாமல் ஒண்டும் செய்யக்கூடாது செய்ய விடமாட்டம் எண்டு சொல்லப்பட்டுது..
இதுவரை நடந்ததுக்கு ஒஃபிஷலா ஸ்ரேற்மன்ற் விட்டு ஒப்புக்கொண்டிருருக்கினம்..
அறுத்து எடுத்த எலெக்றிசிற்ரி அவங்கள் அறுக்க அறுக்க செய்து முடிச்ச மாதிரி..
இப்ப போற போக்கைப்பார்க்க.. சிங்களவன்தான் வீடு கட்டப்போறான்.. றோட்டுப் போடப்போறான்.. போலைகிடக்கு..
ஹலோ ட்றஸ்ற் க்கு என்ன நடந்தது என்டு இப்ப விளங்கிது..
அமெரிக்க கொம்பனியொண்டு ஹலோ ட்றஸ்ற் க்கு உதவப்போறதாக இணையத்திலை வாசிச்சன்.. போற போக்கைப் பார்க்க அந்தக் கதையும் மாறுது..
என்ன நடக்கிது.. விளங்கப்பதுத்துங்கோ..
Truth 'll prevail
Reply
நல்ல வேடிக்கை தாத்தாவுக்கே விளங்கவில்லை அம்மான் விளங்கப்படுத்துவாராம் நடக்கட்டும் கூத்து
\" \"
Reply
என்ன கந்தர் தெற்கிலை அவங்கள் பிரெஞ்சுக்காரர்.. கொரியன்.. யப்பனீஸ்.. எண்டு கொன்ரைக்ற் குடுத்து கட்டுறான்.. கட்டிக்கொண்டே இருக்கிறான்.. இஞசாலை ஈராக் பாணியிலை காய் நகர்த்துப்படுது.. சரிவருமோ..?
:?:
Truth 'll prevail
Reply
தாத்தா
எல்லாம் ஒரு அரும்பொட்டுளை நிக்குது
எங்கை எதில என்ன வரப்போகுது எண்டு கொஞ்சம் பொறுங்கோ.
சந்தைக்கு வருந்தானே நல்லா மலிஞ்சா என்ன தாத்தா மெய்தானே?
Reply
<b>அவலம் போகும் புலம்பெயர்ந்தவர்களின் பணம்!
அதுவே தமிழருக்கு ஆப்பாக மாறுகின்ற அவலம்!</b>

போரினால் வட கிழக்கில் இருந்து உயிருக்கு அஞ்சிப் பலர் வெளிநாடுகளுக்கு சென்றனர். தொடர்ந்து வந்த காலப்பகுதியில் தொழில் வாய்ப்புக்களை நாடி இன்னுமொரு பகுதியினர் புலம்பெயர்ந்தனர். அண்மைக்காலங்களில் தாய், தகப்பன், மனைவி, பிள்ளைகள், அண்ணன், தம்பி எனவரும் உறவுமுறைகளால் மூன்றாவது தடவையாகவும் மக்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தாய் நாட்டில் இருந்து வௌ;வேறு காலப்பகுதிகளிலும் புலம் பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வாழ்ந்த வாழ்வை எண்ணி தொடர்ந்தும் தாயகத்தில் இருக்கும் தமது உறவுகளுக்காக பெருந்தொகையான பணத்தை வாரிவாரி வழங்குகிறார்கள். புலம்பெயர்ந்த எம்மக்களில் அனேகர் வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்களாக, வசதி வாய்ப்புகளில் மன ஆறுதல்களைப் பெறாதவர்களாக தமது எண்ணங்களை தாயகத்தை நோக்கி திருப்புவது அவர்களுடன் உரையாடும் போது உணரக்கூடியதாக இருந்தது.

புலம்பெயர்ந்த மக்களின் மனமாற்றங்களை பலவீனமாக கருதுவதாகவே குடாநாட்டில் இருப்பவர்கள் சிலரின் செயல்கள் மூலம் எண்ணத்தோன்றுகின்றது.

மற்றைய மக்களின் மனங்களைப் புரிந்து கொள்ளாத அதிதீவிர சுயநலவாதிகளாக இந்த மக்களை மாற்றியது எது?

குடாநாட்டு மக்களின் போக்கை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருப்பது எது?

குடாநாட்டு மக்களை மாற்றுவதால், இம் மாற்றங்களை செய்பவர்களுக்கு என்ன இலாபம் கிடைக்கின்றது?

தமிழர்களின் பலவீனங்களை தமிழர்களுக்கு எதிரான அரசியலாக்கப்படுவதை அப்பாவி புலம் பெயர்ந்தவர்களும், அவர்களின் உறவினர்களும் அறிவார்களா?

குடாநாட்டில் இடம்பெறும் எல்லா வகையான துன்பங்களுக்கும் தமிழர் விடுதலையை, தமிழரின் சுதந்திர தாயகத்தை விரும்பாதவர்களின் மறைமுக நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டிருப்பதை அறிவார்களா?

எல்லோரும் உலகியல் உண்மையை அறியுங்கள், அதன் மூலம் இந்த பிரபஞ்ச இயக்கத்தின் உண்மையை அறியலாம். ஒவ்வொருவருக்கும் தேடல் இருந்தால் மட்டுமே இந்த உலகில் எங்களை நாம் தற்பாதுகாத்துக் கொள்ள முடியும்!

குடாநாட்டில் முதன் முதல் தன்னுடைய தம்பிக்கோ அல்லது தங்கைக்கோ மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்தவர் ஒரு நல்ல சிந்தனையின் முடிவாக இருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதாவது வெளிநாட்டில் இருக்கும் அண்ணன் குடாநாட்டில் இருக்கும் தனது உறவுகள் எவரும் கஷ்டப்படக்கூடாது என எண்ணியே மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருப்பார்!

ஆனால் இன்று மோட்டார் சைக்கிள் என்பது எல்லா இளைஞர் யுவதிகளுக்கும் (வேலைக்கு போகின்றவர்கள், வேலைக்குப் போகாதவர்கள் என எல்லோருக்கும்) அத்தியாவசியமாகி விட்டது. வேலைக்குப் போகின்றவர்களால் மக்களுக்கோ அல்லது அவர்களுக்கோ எந்தப்பாதிப்பும் இல்லை. ஆனால் சாதாரணமாக வேலைக்குப் போகாத பாடசாலை மாணவர்கள், சந்திகளில் வேலையற்று இருப்பவர்கள் போன்றோரிடம் காணப்படும் மோட்டார் சைக்கிள்கள் அவர்களுடைய எண்ணங்களில், நடத்தைகளில் மாற்றத்தை உண்டு பண்ணுகின்றது. (இதற்கு தென்னிந்திய திரைப்படங்கள் அதிகளவில் துணை புரிகின்றன) குழு மோதல்கள், தனியாக செல்லும் பெண்களுடன் சேட்டைகள் செய்தல், தங்களுடன் முரண்படும் நபர்களை குழுவாகச் சென்று தாக்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்படுத்தும் தொடர்பு இவர்களுக்கு வாய்ப்பாக உளாPதியான பாதுகாப்பையும், உத்வேகத்தையும் கொடுக்கின்றன. மிகத் தந்திரமாக இவ்வாறானவர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளால் சமுதாயத்தில் இலகுவில் ஊறுவிளைவிக்க முடிகின்றது.

குடாநாட்டில் நடக்கும் பாரிய சீரழிவுகளைத் தடுப்பதற்கு முதற்கட்டமாக தேவையற்ற விதத்தில் மாணவர்களின் கைகளில் பணம் புரள்வதைப் பெற்றோர்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். (வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தங்களின் உறவினர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு, அவர்களின் தேவைக்கு அதிகமாக பணத்தை கைகளில் அள்ளி வழங்குகின்றனர்.)

மாணவர் கைகளில் காணப்படும் பணப் புழக்கம், சமூகத்தை சீரழிப்பவர்களுக்கு மிகவும் வாய்ப்பாக இருக்கின்றது. அதாவது அந்த மாணவர்களுக்கு கவரக்கூடிய அனைத்துப் பொருட்களையும் எந்த வகையிலாவது பணம் சம்பாதிக்க அலையும் நம்மவர்களுடாக, மாணவர்களின் கைகளில் கிடைக்க வழி செய்கின்றார்கள்.

மோட்டார் சைக்கிள் விடயம் சாதாரண குடும்பங்களில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று ஆராய்ந்தால், குடாநாட்டில் சில குடும்பங்களுக்கு நேரடியாக வெளிநாடுகளில் இருந்து பணம் கிடைப்பதில்லை. அவர்கள் சாதாரண அரச உத்தியோகத்தர் ஆகவோ அல்லது விவசாயம் செய்பவர் ஆகவோ இருக்கும் பட்சத்தில் தங்களிடம் இருக்கும் பொன்னையோ பொருளையோ விற்றுத் தங்கள் பிள்ளைகளின் தேவையை புூர்த்தி செய்துகொள்கிறார்கள். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் பல குடும்பங்களில் உள்ள இளைஞர், யுவதிகள் களவு பாலியல் துர்நடத்தை போன்ற சமூக சீரழிவான செயல்களில் ஈடுபடுவதையும் குடாநாட்டில் காணக்கூடியதாக இருக்கின்றது.

பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் சாதாரண மக்களை தடம் புரளச் செய்வதை தடுக்கமுடியாது. தடம்புரள்வை நிறைவான கல்வி அதனு}டான சிந்தனை மூலமே வெற்றிகொள்ள முடியும்.

நன்றி யாழ்குரு - தமிழ்நாதம்
----------------------------------
தாத்தா, கந்தர் இரண்டுபேரும் பணம் பணம் என்று புலம்புறது.....என்ன சதிகளுக்கு என்று இப்பதானே விளங்குது.. :wink:
Reply
Kanthar Wrote:தாத்தா
எல்லாம் ஒரு அரும்பொட்டுளை நிக்குது
எங்கை எதில என்ன வரப்போகுது எண்டு கொஞ்சம் பொறுங்கோ.
சந்தைக்கு வருந்தானே நல்லா மலிஞ்சா என்ன தாத்தா மெய்தானே?
ஓமொம் கந்தர்.. மலியிதுபோலைதான் கிடக்கு..
மலியுதெண்டுதான் எல்லாளன்.. வன்னியன்.. நோட்டீசுகள் சொல்லுது..
Idea
Truth 'll prevail
Reply
Kanani Wrote:<b>அவலம் போகும் புலம்பெயர்ந்தவர்களின் பணம்!
அதுவே தமிழருக்கு ஆப்பாக மாறுகின்ற அவலம்!</b>
.............
(இதற்கு தென்னிந்திய திரைப்படங்கள் அதிகளவில் துணை புரிகின்றன) குழு மோதல்கள், தனியாக செல்லும் பெண்களுடன் சேட்டைகள் செய்தல், 1.தங்களுடன் முரண்படும் நபர்களை குழுவாகச் சென்று தாக்குதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவர்களுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்படுத்தும் தொடர்பு இவர்களுக்கு வாய்ப்பாக உளாPதியான பாதுகாப்பையும், உத்வேகத்தையும் கொடுக்கின்றன. மிகத் தந்திரமாக இவ்வாறானவர்களுடன் ஏற்படுத்தும் தொடர்புகளால் சமுதாயத்தில் இலகுவில் ஊறுவிளைவிக்க முடிகின்றது.
..


.............. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் பல குடும்பங்களில் உள்ள இளைஞர், யுவதிகள் களவு பாலியல் துர்நடத்தை போன்ற சமூக சீரழிவான செயல்களில் ஈடுபடுவதையும் குடாநாட்டில் காணக்கூடியதாக இருக்கின்றது.

2. பொருளாதாரத்தில் ஏற்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் சாதாரண மக்களை தடம் புரளச் செய்வதை தடுக்கமுடியாது. தடம்புரள்வை நிறைவான கல்வி அதனு}டான சிந்தனை மூலமே வெற்றிகொள்ள முடியும்.

நன்றி யாழ்குரு - தமிழ்நாதம்
----------------------------------
தாத்தா, கந்தர் இரண்டுபேரும் பணம் பணம் என்று புலம்புறது.....என்ன சதிகளுக்கு என்று இப்பதானே விளங்குது.. :wink:

1. உதை தொடக்கி விட்டதும் உவையள்தான்

2. தடுக்கமுடியாது எண்டுறார். பேந்து நிறைவான கல்வியாலையும் சிந்தனையாலும் வெற்றி கொள்ளலாம் எண்டுறார். என்னத்தைதான் சொல்லவாறாரோ? உப்பிடிதான் இந்த களத்திலயும் கன பேர் எழுதுறவை. எழுதுற அவைக்கும் விளப்பமில்லை. வாசிக்கிற மற்றவைக்கும் விளப்பமில்லை.
Reply
கந்தர் அம்மான் உங்களிடம் எனக்குப் பிடித்த குணம் இதுதான் சொல்வதொன்று செய்வதொன்றாக இல்லாமல் புலம்பல் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருக்கிறீர்களே இந்த உறுதி யாருக்கு வரும்
\" \"
Reply
தம்பி ஈழவன்
என்ரை அப்பு அப்புவின்ரை அப்பு எண்டு எங்கடை மூதாதையர் எல்லாம் மழைக்கும் வெய்யிலுக்கும் மல்லுக்கட்டி எதிர்த்து நின்டுதான் பழக்கம். அந்த நாளேலை அப்பிடித்தான் தங்கடை சீவியத்திற்காக கமம் செய்தவை. என்ரை சின்ன வயசில கருக்கலில அப்பு என்னை எழுப்பி எங்கட தோட்டத்துக்கு கூட்டிக்கொண்டு போடும். எனக்கு இப்பவும் ஞாபகம் கிடக்கு செம்பாட்டு மண் காலில அப்பிக்கிடக்கும் பள்ளிக்கூடம் போகேக்கை.
இன்னும் சொல்லுறதெண்டால்
ஊரில தோப்பா நூறு பனையள் நிண்டாலும்
என்ரை அப்புவின்ரை ஆச்சி நினைவா முத்தத்தில நின்ட ஒற்ரை பனை மாதிரி கந்தர் கலங்க மாட்டார்.
புலம்புறனோ அலம்புறனோ எண்டதை காலம் பதில் சொல்லும்.
Reply
இந்த முற்றத்து ஒற்றைப் பனைக்கதையெல்லாம் செங்கை ஆழியான் சொல்லி நிறையப்பேருக்குத் தெரியும்

உங்களுக்கு அப்பு ஆச்சியுடன் கமம் செய்த வலிமை உண்டு எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உறவுகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்ததும் அகதியாகி ஓடித்திரிந்ததும் சுற்றிவளைப்புகளில் அடிவாங்கியதும் இன்னும் நிறையத் தெரியும் ஆகவே அலம்பினாலும் பார்த்து அலம்புங்கள்

நான் 2001 இல்தான் யாழ்ப்பாணத்தை விட்டுப் புறப்பட்டேன் ஆகவே பார்த்துப் புலம்புங்கள்
\" \"
Reply
Quote:கந்தர் அம்மான் உங்களிடம் எனக்குப் பிடித்த குணம் இதுதான் சொல்வதொன்று செய்வதொன்றாக இல்லாமல் புலம்பல் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தும் புலம்பிக்கொண்டிருக்கிறீர்களே இந்த உறுதி யாருக்கு வரும்
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
Quote:உங்களுக்கு அப்பு ஆச்சியுடன் கமம் செய்த வலிமை உண்டு எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உறவுகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்ததும் அகதியாகி ஓடித்திரிந்ததும் சுற்றிவளைப்புகளில் அடிவாங்கியதும் இன்னும் நிறையத் தெரியும் ஆகவே அலம்பினாலும் பார்த்து அலம்புங்கள்
காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்.... Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்....
எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..
Idea
Truth 'll prevail
Reply
தொடக்கிவைச்சதே நீங்கள்தானே
[b] ?
Reply
Paranee
கள்ளக்கடத்தல்காரர்தான் தொடக்கிவைச்சது.. அவங்களுக்குத்தான் பிரச்சனையிருந்தது.. சாதாரண பொதுமக்களுக்கு பிரச்சனை இருக்கேல்லை..
Truth 'll prevail
Reply
ஏன் தாத்தா 50 களிலும் 70 வதுகளிலும் 80 களிலும் அடிவாங்கினது கள்ளக்கடத்தல்காரர்களோ...ஏன் இப்பவும் அதே கள்ளக்கடத்தல்காரர்கள் இரண்டு பக்கமும் இருக்கிறார்களே... அப்ப அவைக்காகவே நோர்வே மத்தியஸ்தம் வகிக்குது.... உலகம் பேசு பேசு எண்டு சொல்லுது....????! கள்ளக்கடத்தல்காரன் நினைச்சிருந்தா அப்பவே தண்ர பிரச்சனையை கையூட்டல் வழங்கி சாகவாசமாத் தீத்திருப்பான்.....????! வியாபாரமும் ஓகோ ஓகோ எண்டிருந்திருக்கும்....! இப்பவும் தெற்கில வெற்றிகரமா நடக்குதானே..கள்ளக்கடத்தல்.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
கடத்தல் போய் கைநீட்டல் நடக்கிது.. கையூட்டல் போய் யாசகம் நடக்கிது.. பிச்சைக்காரன் அவனில்லை நான்தான் எண்டு சர்வதேச சமூகத்திட்டை பிச்சை கேள்படுது.. எழுத தூக்கிப்போடுவாங்கள் மறைக்க..
:oops:
Truth 'll prevail
Reply
Mathivathanan Wrote:
tamilini Wrote:காலம் செய்த கோலம்..... எல்லார் வீட்டிலும்.. ஓலம்....
எல்லாம் ஆயுதம்தூக்கி கொண்டுவந்ததுதான்.. தற்போது கீழே வைத்தாலும் கடைசி ஒரு தலைமுறைக்காவது தொடரும்..
Idea

ஒரு தலை முறைக்கு தொடராது ,ஒரு தலை முறையும் மிஞ்சாது. புலிகள் ஆயுதத்தை வைத்தால்.
முன்னர் நடந்ததையும் நினைத்துப் பாருங்கள் .
[b][size=18]
Reply
ஆயுதம் கீழே வைத்தால் சிங்களவன் திரும்ப போக சர்வதேச அழுத்தம் இருக்கும்.. ஒரு தலைமுறைக்காவது உள்நாட்டு யுத்தம் தொடரும்.. ஆனால் ஈழ தமிழ் சமூகம் தப்பும்.. மீழ வழியுண்டு..
ஆயுதம் வைத்திருந்தால் சர்வதேச சமூகத்தின் பூரண ஆதரவு அரசாங்கத்துக்கு இருக்கும்.. ஒரு தலைமுறை யுத்தம் தொடரும்.. முழு சிங்கள் தேசமாகும்.. ஈழ தமிழ் சமூகம் இடம்பெயரவேண்டியதுதான்..
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)