Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிரித்தானிய தகவல்கள்
நாடுகடத்தல் தொடர்பில் புதிய சட்டம் குறித்து பிரிட்டன் ஆராய்கிறது

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050809105735mohammed203i-pa.jpg' border='0' alt='user posted image'>
<b>ஒமர் பக்ரி முகமட் பிரிட்டன் திரும்பத் தடை</b>

நாடுகடத்தப்படுவோர் பற்றிய வழக்குகளில் பிரிட்டனின் தேசிய பாதுகாப்பையும் நீதிபதிகள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் புதிய சட்டம் ஒன்றைப் பற்றி தாம் ஆராய்ந்து வருவதாக பிரிட்டிஷ் அரசு கூறியுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று நேற்று வியாழக்கிழமை 10 வெளிநாட்டவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

நாடு கடத்தப்படுவோர் அந்தந்த நாடுகளால் சித்திரவதை செய்யப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தைப் பெற, பிரிட்டிஷ் அரசு பல வெளிநாடுகளுடன் பேசி வருகிறது.

பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரிட்டன், அனைத்துலக அடிப்படை மனித உரிமைச் சட்டங்களை மீறும் நிலைக்கு வருகிறது என்று சித்திரவதைகள் குறித்த ஐ.நா பிரதிநிதி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அனைத்துலகச் சட்டங்களின் படி ஒருவர் சித்திரவதை செய்யப்படக் கூடிய நாட்டுக்கு அவரை ஒரு நாடு கடத்தக் கூடாது.

இதற்கிடையே லெபனானுக்குச் சென்றுள்ள வன்மைவாத முஸ்லிம் மத போதகர் ஒமர் பக்ரி முகமட் அவர்கள் பிரிட்டனுக்கு திரும்பிவர பிரிட்டன் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரிட்டனில் கடந்த 20 வருடமாகத் தங்கியிருந்த பக்ரிக்கு வழங்கப்பட்டிருந்த நிரந்தர வதிவிட உரிமையையும் ரத்துச் செய்துள்ளதாக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது

BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>BA flights resume amid crippling strike</b>

British Airways said it had resumed flights at Heathrow Airport on Friday as it tries to work through a crippling dispute that has grounded more than 100,000 of its passengers during the peak summer holiday season.

A BA franchise airline flight bound for Casablanca in Morocco left Heathrow shortly before 7 p.m. (1800 GMT) ahead of 30 other international and short-haul evening flights, a BA spokeswoman told Reuters.

Mike Street, the airline's director of customer services and operations, said BA faced a complex logistical challenge, with at least 100 aircraft and 1,000 flying crew in the wrong place.

"As a result it will take some time to return to a normal flying programme. We recognise how frustrating this must be, but we are working as hard as we can to get customers away on their holidays," he said.

The resumption of flights at Heathrow came shortly after around 1,000 BA staff, who walked out on Thursday in support of workers sacked at a catering supplier, returned to work.

Arbitrator ACAS began talks during the afternoon with the union and the catering supplier, Gate Gourmet.

"This is not our dispute. Our customers come first, and everyone involved in creating this unofficial situation must come to their senses," BA Chief Executive Rod Eddington said.

Around 100,000 passengers fly daily with BA during August, and about two-thirds of its flights, excluding franchises, use Heathrow, the world's busiest international hub

<b>Reuters.com</b>
Reply
<b>அபு ஹோட்டடாவை பிரிட்டன் ஜோர்தானுக்கு நாடு கடத்தும் இவர் ஜோர்தானிலும் தண்டனை விதிக்கப்பட்டார்</b>

பிரிட்டனில் கைது செய்யப்பட்ட பழைமை வாத இஸ்லாமிய மதகுரு அபு ஹோட்டடா அங்கிருந்து ஜோர்தானுக்கு அடுத்தவாரம் நாடு கடத்தப்படவுள்ளார் என ஜோர்தானிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 10 வெளிநாட்டினரில் ஹோட்டடாவுமொருவர்இ

மதகுரு அபுஹோட்டடாவும் மற்றுமிருவரும் ஏற்கனவே பெல்மார்ஸ் சிறைக் கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது எவ்வித குற்றச் சாட்டும் சுமத்தப்படவில்லை. உள்துறை அமைச்சின் பணிப்புரைக்கிணங்க இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஜோர்தானில் இடம் பெற்று வந்த தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் ஹோட்டடா அங்கு தேடப்பட்டு வந்தவர். அவர் 1993 ஆம் ஆண்டு ஜோர்தானை விட்டு வெளியேறி பிரிட்டனில் தஞ்சம் புகுந்தார். பிரிட்டன் அபயமாளித்தது.;

அதே வேளை தொடர் குண்டுத் தாக்குதல்களுக்காக ஜோர்தானிய நீதிமன்றம் இவர் இல்லாமலே இவருக்கு ஆயுள் காலச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஜோர்தானிய இரண்டாயிரம் வருட கொண்டாட்டத்தின் போது அமெரிக்க இ இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் இவர் மீது குற்றஞ் சுமத்தப்பட்டிருந்தது. அபு ஹோட்டடாவும் ஏனையோரும் லண்டன் லூட்டான்இ லிஸிஸ்டர்ஷெயார்இ மேற்கு பிட்லேண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் பிரிட்டிஷ் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
veerakesari
Reply
<b>பிரிட்டனில் இஸ்லாத்தை பயன்படுத்தும் தெருச் சண்டியர் குழுக்கள்</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050810230818_40675320_prayers_203.jpg' border='0' alt='user posted image'>
<i> முஸ்லிம் தலைவர்கள் அச்சம்</i>
இங்கு பிரிட்டனைப் பொறுத்தவரை குறிப்பாக இளைஞர்கள் எவ்வாறு கடும்போக்கு இஸ்லாமியக் குழுக்களால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதை அறிவதில் தற்போது ஆர்வம் காண்பிக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் பிறந்து இங்கு குடியேறியஇ சில தீவிரவாதப் போக்குக் கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மதபோதகர்கள் மீது அரசாங்கம் உன்னிப்பான கவனத்தைச் செலுத்துவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் இங்கு லண்டனில் உள்ள தெருச் சண்டியர்களின் குழுக்கள் கூட தமது கூட்டத்துக்கு ஆட்சேர்க்க இஸ்லாத்தைப் பயன்படுத்துவதாகவும் இங்கு ஒரு கவலை காணப்படுகிறது.

இப்படியான குழுக்கள் இங்குள்ள இளைஞர்களை துப்பாக்கி முனையில் இஸ்லாத்துக்கு மாற்ற கட்டாயப்படுத்துவதாகவும் லண்டனின் சில பின்தங்கிய மற்றும் வறிய பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050804061527uk2203.jpg' border='0' alt='user posted image'>
<i>கவலை அதிகரிக்கிறது</i>
அப்படி மாறாத சில இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.

இந்த தெருச்சண்டியர் குழுக்கள் அரசியல் வன்செயல்களுடன் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.

ஆனால் இவர்களால் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்கள் பின்னர் இலகுவில் தீவிரவாதக் குழுக்களால் ஆட்சேர்க்கப்படுவதற்கான ஆபத்துக்கள் இருப்பதாக முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் கவலை காணப்படுகிறது.
BBC tamil
Reply
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரிட்டனில் செயற்பட முடியாது

TRO எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கையில் அறப் பணிகளைச் செய்ய பிரிட்டனில் அறக்கட்டளையாகப் பதிவு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக நிதி சேகரித்து வந்தது.

ஆனால், டி ஆர் ஓ அமைப்பு இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டதாக அண்மையில் செய்திகள் வந்தன.

இது குறித்து இலண்டனில் உள்ள இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் ஊடகத்துறை அதிகாரி சாரா ஜேன் டிக்பியைக் கேட்ட போது இந்தச் செய்தி உண்மைதான் என்று கூறினார்.

கடந்த 2000 மாவது ஆண்டு, இந்த டி ஆர் ஒ அமைப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்குவதாக இலங்கை ஊடகங்களில் வந்த செய்திகள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்றும்,இதனைத் தொடர்ந்து இந்தச் செய்திகள் உண்மையா இல்லையா என்பதைக் கண்டறிய நாங்கள் முறைப்படியான விசாரணை ஒன்றினைத் தொடங்கினோம் என்றும்,
இந்த விசாரணை கடந்த ஆகஸ்டு பத்தாம் தேதி முடிவிற்கு வந்தது என்றும்,
இந்த இடைப்பட்ட காலத்தில் இந்த டிஆர்ஒ பிரிட்டன் அமைப்பிற்கு ஒரு இடைக்கால மேலாளர் ஒருவரை நியமித்ததாக்வும், இவர் பிரிட்டிஷ் அறக்கட்டளை கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும், டி ஆர் ஓ அறக்கட்டளைக்கும் சம்மந்தமில்லாதவர் என்றும், இதன் நிர்வாகத்தை அந்த மேலாளர் எடுத்துக் கொண்டு அவரே அதை நடத்தினார் என்றும் அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்த டி ஆர் ஒ அமைப்பிற்கு எந்தவித சொத்துக்களும் இல்லை, பணம் எதுவும் இல்லை இதன் செயல்பாடு நின்று விட்டது அறப் பணிகள் எதுவும் செய்யவில்லை என சில வாரங்களுக்கு முன் இந்த இடைக்கால மேலாளர் எங்களுக்கு உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்தும், எங்களுடைய இறுதி விசாரணை அறிக்கை வரும் வரையிலும் எங்களுடைய அறக்கட்டளைப் பதிவுப் பட்டியலில் இருந்து டி ஆர் ஒ அமைப்பு எடுக்கப்பட்டுவிட்டது என்றும் சாரா ஜேன் டிக்பி கூறியுள்ளார்.

தங்களுடைய பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டு விட்டால் டி ஆர் ஓ அறக்கட்டளை இனிமேல் செயல்படாது. இந்த அமைப்பிடம் எவ்விதப் பணமும் இல்லை அதற்கு எந்தவிதச் சொத்துக்களும் இல்லை. நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் எதிலும் இந்த அமைப்பு TRO (UK) பெயரில் யாரும் ஈடுபடக் கூடாது, TRO (UK) என்ற பெயரில் எதுவும் செய்யவும் கூடாது. இந்த அமைப்பிற்கு அனுமதி கிடையாது. ஆனால், இடைக்கால மேலாளர் இதே போன்ற அறப் பணிகளைச் செய்ய புதிய ஆட்களைக் கொண்டு தமிழர் ஆதரவுக் கட்டளை, Tamil Support Foundation (TSF) என்ற பெயரில் மற்றொரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த TSF என்ற அமைப்பு 2005 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. டி ஆர் ஓ போன்றதொரு அறக்கட்டளை அமைப்புதான் இதுவும் என்றார் சாரா ஜேன் டிக்பி

இது பற்றி மேலும் கூறிய சாரா ஜேன் டிக்பி எங்களுடைய விசாரணையின் இறுதி அறிக்கை வரும் வரையில் டி ஆர் ஓ குறித்து இந்த விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து என்னால் இப்பொழுது எதுவும் கூற இயலாது. வெளியில் இருந்து ஒரு மேலாளரை, அதிகாரியை நாங்கள் டி ஆர் ஓ அமைப்பை நிர்வாகம் செய்ய நியமித்தோம். அதுவே மிகத் தீவிரமான நடவடிக்கை என்று கூறலாம். வெளியில் இருந்து ஒருவரை அழைத்து அறக்கட்டளையை நிர்வாகம் செய்யச் சொல்வது நங்கள் காரணம் இல்லாமல் செய்ய மாட்டோம். டி ஆர் ஓ அறக்கட்டளையின் நிதியைப் பாதுகாக்கவே அவர் நியமிக்கப்பட்டார். உதவி தேவைப்படும் மக்களுக்கு, அறப் பணிகளுக்கு சேகரிக்கப்பட்ட நிதி சென்றடைவதை உறுதி செய்யவோ அல்லது மற்றொரு அறக்கட்டளையான தமிழர் ஆதரவு கட்டளை TSF அமைப்பிற்கு நிதியை மாற்றாவோ இதற்கு என்ன நடவடிக்கை சிறந்தது என்பதை இந்த அதிகாரி முடிவு செய்வார் என்றார் இங்கிலாந்து அறக்கட்டளை ஆணையத்தின் சார்பில் பேசவல்லவரான சாரா ஜேன் டிக்பி.

டிஆர் ஒ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தவறானவை என்று மறுக்கும் அந்த அமைப்பின் இயக்குனர்களின் ஒருவரான என்.எஸ். மீர்த்தி அவர்கள், இது தொடர்பான விசாரணைகள் முடியும் வரை ஆங்கில அதிகாரிகள் மற்றும் டி ஆர் ஒ வின் அதிகாரிகள் அடங்கிய தமிழர் ஆதரவு கட்டளை என்னும் அமைப்பு ஒன்றை ஏற்படுத்திய பிரிட்டனின் அறக்கட்டளைகள் ஆணையம், டி ஆர் ஓவின் நிதியை புதிய அமைப்புக்கு மாற்றியுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் விசாரணை முடிவுகள் வரும் வரை டி ஆர் ஓ என்னும் அமைப்பு செயற்பட முடியாது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
BBC தமிழ்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>ஆசிய மாணவர்களைத் தாக்கிய வெள்ளைக்கார இளைஞருக்கு சிறை</b>

லண்டன்,
இனக்குரோத வெள்ளையர் குழுவைச் சேர்ந்த இளைஞரொருவருக்கு லண்டன் மாவட்ட நீதிமன்றமொன்று 16 மாத கால சிறைத்தண்டனை விதித்தது.

நீதிபதி தனது தீர்ப்பின் போது "ஓநாய்கள் தேடி ஓடக் கூடிய மிருகத்தை கண்டு பிடித்து விரட்டுவதற்கு ஒப்பான ஓர் சம்பவம் இதுவாகும்' எனக் குறிப்பிட்டார்.

மேற்படி இனவாதக் குழு மூன்று ஆசிய மாணவர்களை வழிமறித்து நையப்புடைத்துள்ளது. தாக்குதலுக்குள்ளான மூன்று மாணவர்களில் இருவர் சுயநினைவிழந்துள்ளனர். இதையடுத்து இக்குழு கைது செய்யப்பட்டது.

இம்மூன்று மாணவர்களில் ஒருவர் அஸ்கர் அலி என்பவரின் புதல்வராவார். இவர் 1980 களின் ஆரம்பத்தில் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்திலிருந்து வந்தவராவார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட் ஜேம்ஸ் பீற்றர் என்ற இளைஞருக்கு 18 வயதாகும். இவரின் குழுவில் 100 இளைஞர்கள் வரை இருக்கிறார்கள். இக்குழுவினர் தம் பாடசாலைக்கருகில் விளையாடும் 11, 14 வயது சிறுவர்களை துரத்திப் பிடித்து தாக்குவது வழக்கமாகும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக்குழுவினர் சம்பவ தினத்தன்று 11 வயதான இரு மாணவர்களை நையப் புடைத்து தரைமீது தள்ளி உதைத்தார்கள். இவ்விருவரையும் காப்பாற்ற முற்பட்ட 14 வயதுடைய சிறுவனொருவரையும் இக் குழுவினர் இழுத்தெடுத்து, தடியால் அடித்தும், கீழே தள்ளி மிதித்தும், உதைத்தும் தாக்கியுள்ளனர். இவரும் சுயநினைவிழந்துள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இக் குழுவினர் தாக்குதல் நடத்தும் போது இனத்துவேச கோசங்களை எழுப்பியுள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஜேம்ஸ் பீற்றர்ஸுக்கு 16 மாத கால சிறைத் தண்டனை விதித்த நீதிவான், ""இனக்குரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு இரக்கம் காட்டப்பட மாட்டாது'' என தமது தீர்ப்பில் தெரிவித்தார்
Veerakesari
Reply
<b>'பயங்கரவாத தடுப்புக்கு சில நாட்களில் நடவடிக்கை'- பிரிட்டிஷ் அமைச்சர்</b>

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050714114540clarke_afp203main.jpg' border='0' alt='user posted image'>
அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த அல்லது அவர்களை நிரந்தரமாக நாட்டினுள் ஒதுக்கி வைக்க தனது புதிய அதிகாரங்களின் கீழ் தான் அடுத்த சில தினங்களில் நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியிருக்கிறார்.

எவ்வகையான நடவடிக்கைகள் சட்டத்துக்கு ஒவ்வாத நடவடிக்கைகள் என்று கொள்ளப்படும் என்பது பற்றி பிரிட்டிஷ் அரசு பட்டியல் ஒன்றை லண்டன் குண்டு வெடிப்பை அடுத்து வெளியிட்டிருக்கிறது.

இவற்றுள் பயங்கரவாத வன்முறைகளை ஆதரித்து எழுதுதல், பிரசுரித்தல், போதித்தல், பிரசுரங்கள் விநியோகித்தல் ஆகியன அடங்கும்.

பயங்கரவாதத்தில் ஈடுபட மற்றவர்களைத் தூண்டுதலும் இதில் அடங்கும்.

தமது நடத்தைகளின் மூலம் இந்தச் சட்டங்களை மீறியவர்கள் பற்றிய உலகளாவிய கணனி விபரப்பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சார்ள்ஸ் கிளார்க் கூறியுள்ளார்.

தமது புதிய அதிகாரங்களை அமைச்சர் பயன்படுத்த முனையும் போது, சட்ட ரீதியான ஏராளமான சவால்களை அவர் எதிர் நோக்கலாம் என்று எமது பிபிசி உட்துறை விவகார ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.
Reply
பிரித்தானியாவில் கடந்த வாரமும் இவ்வாரமும் பொதுப் பரீட்சைகளுக்கான முடிவுகள் வெளியாகி இருக்கின்றன..! ஜிசிஈ ஏ லெவல் எனப்படும் உயர்தரப் பரீட்சைக்கு சமனான பரீட்சை முடிவுகளும் மற்றும் ஜிசிஎஸ்சி எனப்படும் சாதாரண தரத்துக்கு சமனா பரீட்சை முடிவுகளும் வெளியாகி விட்டன...! பெறுபேறுகளின் அடிப்படையில் எல்லாவற்றிலும் ஆண்களை விட பெண்களே முன்னணியில் திகழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..! அத்தோடு இரண்டு பரீட்சைகளிலும் சித்தியடைந்தோரின் சதவீதம் என்பது 96% க்கும் மேலாகும்...!

GCSE GRADES A*-C
England: 60.8%
Northern Ireland: 71%
Wales: 61.3%
All boys: 57%
All girls: 65.2%
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
பிரிட்டனுக்கான தெற்காசியரின் பங்களிப்பு

<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/20050901155620asian203.jpg' border='0' alt='user posted image'>
<b>பிரிட்டனின் முன்னணி தெற்காசிய வர்த்தகர்கள்</b>

பிரிட்டனின் மொத்த பொருளாதார உற்பத்தியில் பத்து சதம் பிரிட்டனில் வாழும் தெற்காசிய வம்சாவளியினரால் உருவாக்கப்படுவதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று மதீப்பீடு செய்துள்ளது.

பிரிட்டனின் மொத்த மக்கள் தொகையில் தெற்காசிய வம்சாவளியினர் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளனர், ஆனால், ஒவ்வோர் ஆண்டும் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு கிட்டத்தட்ட நூற்று எண்பது பில்லியன் அமெரிக்க டாலருக்கு சமமான அளவில் பங்களிப்புச் செய்வதாக ஆசிய தொழில்சார் பணிகளில் இருப்போர் மையத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

பல ஆயிரம் கோடிகள் கொண்ட தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தும் இலட்சுமி மிட்டலின் வெற்றிவரகமான வர்த்தகம் மற்றும் பிற தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தோரையும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

கடந்த ஜூலை மாதம் இலண்டனில் சில முஸ்லிம் இளைஞர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு தங்களுடைய வாழ்க்கை கடும் அழுத்தத்திற்குள்ளாகியிருப்பதாக பல ஆசியர்கள் உணரும் வேளையில் தங்களுடைய ஆய்வு வெளிவந்துள்ளதாக இந்த ஆய்வு மையம் தெரிவிக்கிறது.

BBC Tamil
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40767000/jpg/_40767224_petrolprice203.jpg' border='0' alt='user posted image'>

பிரித்தானியாவில் எரிபொருள் விலை மிக உச்சத்திற்கு சென்றுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு சாதாரண வகை பெற்றோல் லீற்றர் 91 ஆக இருந்தது, ஆனால் சில இடங்களில் தற்போது லீற்றர் 1 பவுஸ்சுக்கு விற்கப்படுகின்றது. இதனை எதிர்த்து நுகர்வோர் சங்கத்தை சேர்ந்தோர் லண்டனில் இருந்து வேல்ஸ் செல்லும் 4 நெடுஞ்சாலையில் போராட்டங்களையும் அதன் பின்பு எண்ணை சுத்திகரிப்பு ஆலைகளின் முன்னால் மறியல் போராட்டங்களையும் நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள். இந்த போராட்களினால் எரிபொருள் விநியோகம் குறையலாம் என்ற அச்சத்தில் அனைவரும் பெற்றோலை சேமித்து வைக்க முயன்றால் பெற்றோல் நிலையங்கள் முன் கியூக்கள் உருவாகலாம்.

ஹூம் இப்படி பெற்றோல் விலை கூடினா எப்படி சுத்தி திரியிறது <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
இங்கும் அதே நிலைதான் மதன்.............
Sfr.1.20 - 1.30க்கு இருந்த பெற்றோல் sfr1.71 - 1.75 (Swiss Frank)வரை போகிறது.

என்ன செய்வது?

ஐரோப்பா முழுவதுமல்ல
உலக நாடுகளில் விலை அதிகரித்திருக்கலாம்.
Reply
அட அப்ப கனடாவில பரவாயில்ல $0.90-$0.94 இலிருந்து $1.04-$1.06
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
இங்கு ஜெர்மனியிலும் 1.10-1௧.20 யூரோவில் இருந்து 1.35௧௧௧-1.45யூரோவாக உயர்ந்துள்ளது.
Reply
AJeevan Wrote:ஐரோப்பா முழுவதுமல்ல
உலக நாடுகளில் விலை அதிகரித்திருக்கலாம்.

அமெரிக்காவில் ஏற்பட்ட கத்தரினா சூறாவளியை தொடர்ந்து அங்குள்ள எண்ணை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் கிடைக்காமையாலே இந்த விலை உயர்வு என்றூ சொல்கிறார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/09/2005090914223920050906192807_39997000_chinapetrol203.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40804000/jpg/_40804148_body203apok.jpg' border='0' alt='user posted image'>

Mathan Wrote:போராட்களினால் எரிபொருள் விநியோகம் குறையலாம் என்ற அச்சத்தில் அனைவரும் பெற்றோலை சேமித்து வைக்க முயன்றால் பெற்றோல் நிலையங்கள் முன் கியூக்கள் உருவாகலாம்.

நேற்று புதன் கிழமை தொடங்கிய போராட்டத்தால் பெற்றோல் கிடைக்காத என்ற அச்சத்தில் லண்டனில் திங்கட்கிழமையே அனைவரும் எரிபொருளை சேமிக்க ஆரம்பித்து விட்டார்கள். திங்கட்கிழமை ஒரு இடத்திலும் பெற்றோல் எடுக்க முடியவில்லை, நான் போன பெற்றோல் நிலையங்களில் பெரும்பாலாவை பெற்றோல் முடிந்து மூடியிருந்தது, அப்படியில்லாமல் திறந்திருந்த ஒரு சில நிலையங்களிலும் பெரிய கியூ. அன்று பெற்றோல் எடுப்பதற்க்காக கிட்டத்தட்ட 1 மணித்தியாலத்திற்கு மேல் கியூவில் நிற்க வேண்டிருந்தது. செவ்வாய் கிழமையும் நிலமை மோசம் தான், தற்போது ஓரளவு பரவாயில்லை,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/05/business_petrol_pricing/img/1.jpg' border='0' alt='user posted image'>

பெற்றோல் 90p ஆக இருந்த போது அதில் வரி, உற்பத்தி செலவு என்பன எத்தனை வீதம் என்பதை இந்த படம் காட்டுகின்றது. பிரித்தானியாவில் மற்றய ஐரோப்பிய நாடுகளை விட வரி அதிகமாக இருப்பதாகவும் அதனாலேயே பெற்றோல் விலை அதிகம் என்றும் கூறப்படுகின்றது. அந்த வரியை குறைக்குமாறு கேட்டே பாவனையாளர் குழு ஒன்றினால் நேற்றய போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் அது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியளிக்கவில்லை,

படங்கள் நன்றி - பிபிசி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>பிரிட்டிஷ் அரசோ, பிரிட்டன் வாழ் கிறித்தவர்களோ இராக் போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: பிரிட்டனின் கிறித்துவ மதபீடம் </b>

இராக் மீது தொடுக்கப்பட்ட போருக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க பிரிட்டிஷ் அரசு மறுத்தால், கிறித்தவ மக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இங்கிலாந்து கிறித்தவ மத பீடத்தின் ஆயர் குழு ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இராக் மீது படையெடுத்தது மிகப் பெரிய தவறு என்றும் இரு மதங்களும் உண்மக்கான சமரத்திற்கான சந்திப்பு ஒன்றை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியிட்டோரில் ஒருவரான ஆக்ஸ்போர்ட் நகர ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஹாரிஸ் அவர்கள் எமது பிபிசிக்குத் தகவல் தரும்போது இராக்கில் நிலையான ஜனநாயகம் நிறுவப்பட்ட பிறகு கசப்பான நினைவுகளை குணப்படுத்தும் புனிதப் பணியை கிறித்த தேவாலயம் ஏற்கும் என்றும் குறிப்பிட்டார்.

- BBC tamil
Reply
<b>இன, நிற, மத அடிப்படையில் பிரிட்டன் பிளவுபடுகிறது என அதிகாரி எச்சரிக்கை</b>


சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் பள்ளிகளுக்கு முக்கிய இடமுண்டு
இன, நிற, மத பேதங்களின் அடிப்படையில் பிரிட்டன் மேலும் மேலும் பிளவுபட்டு வருகிறது என்று பிரிட்டிஷ் இன-உறவுகளுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ட்ரெவர் பிலிப்ஸ் கூறியுள்ளார்.

சமுதாயத்தை ஒருங்கிணைப்பதில் அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளைவிட பிரிட்டன் சிறப்பாக செயல்பட்டாலும், ஒரு மெத்தனமான மனநிலை, பிரித்துவைப்பதை வளர அனுமதிப்பதாக பிபிசிக்கு அளித்த செவ்வியொன்றில் இன சமத்துவத்துக்கான ஆணையத்தின் தலைவரான பிலிப்ஸ் கூறினார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40017000/jpg/_40017188_teacher203.jpg' border='0' alt='user posted image'>
வெள்ளையின மாணவர்கள் மற்றும் பிற இன மாணவர்களை ஒருங்கிணைப்பதில் பள்ளிகளும் பல்கலைக் கழகங்களும் தோல்வியடைவதால், கல்வி வசதி வாய்ப்புகள் சற்று குறைவான இருக்கும் பகுதிகளில் வரிய நிலையில் உள்ள குழந்தைகள் வளர நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

இம்மாதிரி சமுதாயம் பிரித்து வைக்கப்படுவது அதிகரித்துவருவது, தீவிரவாதிகளுக்கு ஒரு வளமான ஆளெடுக்கும் வாய்ப்பை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

¿ýÈ¢: À£À£º¢ ¾Á¢ú
Reply
பிரித்தானியாவில்.. பெருமைக்காக மட்டுமே சிலர்
பற்பல மேடையேற்றங்களை நடாத்துகின்றார்கள்..
தமிழை பிள்ளை ஆங்கிலத்தில் எழுதி வைத்து
தப்புத்தப்பாய் படிக்க.. என்ன கொடுமை..
எங்கள் கலைகள் காப்பாற்றப்படுகிறதாம்...தமிழ்
கடவுளே பல குழந்தைகள் தமிழ் மறந்து..
ஏதாவது செய்யவேண்டும் எல்லோரும்.. தமிழைக் காக்க

...விகடகவி...
--- vikadakavi---
... ...
.
Reply
உண்மைதான்.....
இங்கிருக்கும் பிள்ளைகள் உறுப்படியாக தமிழை கற்க இங்குள்ள(London & Europe) பெரியவர்கள் ஆவண செய்ய வேண்டும்....

நான் ஒரு பிள்ளையை சந்தித்தேன்..
நன்றாக தமிழில் பாடுகிறது, ஆனால் பேசினால் பதில் பேச தடுமாறுகிறது.

என்ன கொடுமை இது?
தமிழ் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது
கேட்டால் நாங்கள் ''டமில்'' என்று சொல்லுதுகள்


!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)