Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நல்லாத்தான் உல்டா பண்ணுறியள்...பிறகு சொல்லாதேங்கோ எங்களை சுயமா சிந்திக்க விடேல்லை அதுதான் உல்டா பண்ணுறம் எண்டு...உது மோகன் காலத்து விதி படத்தில இருந்து நல்லா திரிச்சு ஆண்களுக்கு எதிராத்தான் எல்லாம் காட்டுகினம்...அவன் சினிமாக்காரன் பெண்களின்ற காசைப்பறிக்கக் காட்டுறான் எண்டா...உண்மை அதுவாப் போயிடுமே...
உவள் வள்ளி கள்ளி...அந்த அப்பாவிப் பொடியை வசமா மாட்டவைச்சு தாலி வரைக்கும் கொண்டு வந்துட்டாள்...உவங்கள் பத்திரிகைக்காரரும் வீட்டில இருக்கிற சோம்பேறிப் பெண்களின்ற மதிப்பை பெறுகிறத்துக்காக இப்படித்தான் திரிச்சு எழுதுவாங்கள்...உண்மை என்னடா என்டா அமெரிக்கன்ர அணுகுண்டைவிட உவையள் சமுதாயக் கிருமிகள் பாருங்கோடா....உவையட்ட எயிட்ஸ் வைரசு கூடத்தோத்திடும் அவ்வளவுக்கு உவைதான் விசக் கிருமிகள்...அதுக்க பத்தினி வேசமும் விடுதலைக் கோசமும்..போட்டு அப்பாவிப் பொடியளின்ற தலையிலையெல்லே எல்லாத்தையும் கட்டிவிட்டுட்டு தாங்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்கினம்...! பொட்டியளை கெடுத்து குட்டிச் சுவராக்கிறதும் கெட்டபின்னர் தாங்கள் நல்ல பெள்ளைக்கு நடிக்கிறதும் மாதவி காலத்தில இருந்து இருக்கு...கண்ணகிக்கு நடுவிலதான் மாதவியும் வந்தவள்....அந்த அம்மா இல்லாட்டி கண்ணகியின்ற கற்புக்கு ஒப்பீட்டுக்கு எங்க போவினம்...ஒண்டை வீழ்த்தி இன்னொன்றை உயர்த்துறதுதான் உந்தப் பெண்களின் குணமே....! அதைத்தான் இப்ப ஆண்களிலும் நல்லாக் காட்ட வெளிக்கிட்டினம்..! தம்பிகளா ஏமாந்து போயிடாதேங்கோடா எப்பவும் பெண்களை விச ஜந்துகளாப்பாத்தியள் எண்டா கவனம் அதிகம் இருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பு பெறுவது மட்டுமன்றி கெளரவமாகவும் ஆண் என்ற தனித்துவம் காத்தும் வாழலாம்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
ஜேர்மன்காரியளை சொல்லுறியளோ?
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா அதிலும் ஓரவஞ்சகம் செய்யுறியள்.... ஜேர்மன்காரிகள் பரவாயில்லை...உங்க லண்டனில 16 இல்லை 12,13,14 லிலேயே சிகரட்டும் கையுமா...குழந்தையும் வயிறுமா அலையுதுகள்...அதை மறைச்சுப் போட்டு ஜேர்மன்காரியள் எண்ட உடனே ஓமோம் ஓமோம் போடுறியளோ....?! போடுவியள் போடுவியள் லண்டன் எண்டா பிறகு உங்கட உள்வீட்டுக் கதையளும் சந்திக்கு வந்திடுமெல்லே.....! :roll: எங்களுக்கு தெரியும் தாத்தா....உங்க லண்டனில இங்கிலீசு பேசுறம் எண்டு... காப்புலியளோட..... தமிழ்.....வழி வந்த.....குமரிகள்.....????.....!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
காப்புலியள் நல்லா இங்கிலீசு பேசுவாங்களா? சிலவேளை ஆண் பெண் சமத்துவமோ? ஏதோ களி கிண்டி சாப்பிடட்டும்.
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
குருவி இது உண்மை ஒரு காப்புலி அடிக்கடி எனது நண்பனின் சாப்பாட்டுகடையில் கொத்து றட்டி தருவீங்கா எண்டு கொச்சை தமிழில் சொல்லுவான் நாம் கேட்டோம் ஏன் அடிக்கடி கொத்து கேக்கிறாய் எண்டு அதற்கு அவன் ஒருநாள் தனது மனைவியைகூட்டிவந்து காரிற்குள்வைத்திருந்து அதுதான் என் மனைவி என காட்டினான். அது தமிழ் பெண்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா என்ன எப்பவும் கோதுமைமாவுடன் திரியுறியள் நோட்டீஸ் ஒட்டின பளக்கமோ?
வாசிக்க சிரமப்படுபவர்களுக்காக
சமீபத்தில் நடந்த விஷயம். ரொம்பவே உறுத்தியது. நிச்சயதார்த்தம் நடந்துஇ பத்திரிகைகள் அடிக்கப்பட்டுஇ திருமணம் இன்னும் நான்கு நாளில் என்ற நிலையில் அந்தப் பெண் ஏற்கெனவே விரும்பியவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டு இருக்கிறாள்.
‘இது என்ன புதுசுஇ ஓடிப் போறதெல்லாம் ரொம்ப சகஜம்தானே’ என்கிறீர்களா? இருக்கலாம். ஆனால் இதுபோன்ற நிலையில் செல்லும் பெண்ணின் மனோநிலை பற்றித்தான் குறிப்பிட விரும்புகிறேன்.
அந்தப் பெண்ணின் பக்கம் நியாயம் இருக்கலாம். சொன்னால் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள்இ அல்லது மிரட்டித் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்திருப்பார்கள் என்ற கதைகள் எல்லாம் கூட இருக்கலாம்.
ஆனால் திருமணத்துக்கு நாலு நாட்களுக்கு முன்பு காணாமல் போவது என்பது ஒரு பெற்றோருக்குக் கொடுக்கும் அதிகபட்ச தண்டனை என்றுதான் தோன்றுகிறது. காதலிப்பதும்இ விரும்பியவனை மண முடிக்க எந்தக் கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்வது என்ற திடசித்தமும் சரிதான்.
ஆனால் எல்லோரும் அறிய நிச்சயதார்த்தம் நடத்திஇ நிறையப் பேருக்கு ‘என் பெண்ணுக்குக் கல்யாணம்’ எனப் பத்திரிகை அனுப்பித் தெரிவித்த பிறகு திருமணம் நிறுத்தப்பட வேண்டிய சூழ் நிலை வருகிறது. இந்த நிகழ்ச்சி முன்னமே நடந்திருந்தால் கூட அவர்கள் நெருங்கிய சொந்தங்களோடு போய் விடும் விஷயம்இ இப்போது அத்தனை பேருக்கும் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டியதாகிறது. ‘என் பெண் இப்படிச் செய்து விட்டாள்இ அதனால் கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்’ என அழைப்பிதழ் கொடுத்த அத்தனை பேருக்கும் கூப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவல நிலையை விட பெற்றவர்களுக்கு வேறென்ன கொடிய தண்டனை வேண்டும்?
எத்தனையோ விஷயங்களில்இ கல்வியில்இ சிந்தனையில்இ நாகரிகத்தில் முன்னேறி விட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்கள்இ மகள்கள் இதை ஒரு நிமிடம் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? இந்தக் கலாசாரம் எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? ‘ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கலாமாஇ பிள்ள குட்டி பெத்துக்கிட்டு ஓடிப் போலாமா’ என்ற பாட்டு திருமண ரிசப்ஷனில் பாடப்படுகிறது. நிறைய வாண்டுகள்இ ஏன் சில பெரியவர்களே கூட கூச்சநாச்சமின்றி அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்!
அவரவர்களுக்கு வரும்போது மட்டுமே வலியின் ரணமும்இ தீவிரமும் பாதிக்கிறது. மற்றபடி இதுபோன்ற நச்சு சூழ்ந்த கலாசார சீரழிவைப் பற்றிஇ டீ.வி.யைப் பார்ப்பது போல வேடிக்கை பார்த்து விட்டுப் போகின்ற சூழ்நிலைதான் நிறைய இருக்கிறது.
இன்றையச் சூழ்நிலையில் காதலிப்பது என்பது சர்வசாதாரணமாகி விட்ட நிலைதான். ஆண் பெண் ஒன்றாகப் படித்து வேலை பார்க்கும் சூழலில் ஒருவர்பால் ஒருவர் ஈர்க்கப்படுவது சகஜம்தான். ஆனால் இந்த உணர்வுகளை முறைப்படுத்தி எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதில்தான் அவர்களுடைய ஆளுமையே வெளிப்படுகிறது எனலாம்.
அந்தக் காலத்தில் காந்திஜிஇ இராஜாஜி குழந் தைகள் ஒருவரை ஒருவர் விரும்பிய கதை மிகப் பிரபலமானது. பெரியவர்கள் விதித்த நிபந்தனை களை ஏற்று அவர்கள் வென்றார்கள். எத் தனையோ பேர் தங்கள் பெற்றோர் சமாதானம் ஆகும்விதமாகச் செய்து இணைகிறார்கள். வேறு வழியில்லாமல் திருமணம் செய்து கொள்பவர் களும் இருக்கிறார்கள்.
ஆனால் பெற்றவர்களை கூனிக் குறுகச் செய்து திருமணம் செய்து கொள்வது என்பது எப்பேர்ப்பட்ட நிலை! இது தனிப்பட்ட ஒரு பெண்ணின் முடிவு என்று கூட எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இன்றைய பொறுப்பற்ற சமுதாயச் சூழலில் முளைக்க ஆரம்பித்திருக்கும் நச்சுக் காளான் என்றுதான் நினைக்க வேண்டும்.
குடும்பத்திலே ஒருவருக்கொருவரான ஆழ மான பிணைப்பு என்பது கொஞ்சம் கொஞ்ச மாகத் தகர்க்கப்பட்டு வருகிறது. தன் நாடுஇ தன் சமுதாயம்இ தன் குடும்பம்இ தன் பெற்றோர் இவை யெல்லாம் தங்களுக்குக் கிடைத்த வரம் என்றல் லவா பெருமைப்படவேண்டும்! ‘எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’ என்று பெருமிதமாகப் பாடினார்கள். எங்க அப்பாஇ அம்மா மாதிரி உண்டா என்று பெருமைப்பட்டார்கள்.
ஆனால் இன்று...? ‘‘டேய் அப்பா...’’ எனக் கூப்பிடச் சொல்லித் தரப்படுகிறது. ‘‘காயத்ரீ...’’ எனத் தன்னை அழைத்த மகனை வாரியணைக் கும் அம்மாஇ ‘‘இது மட்டும் டீ காயத்ரீன்னு கூப் பிடாம போனானே!’’ என்று பெருமைபடச் சொல்கிறாள்!
சிறு வயதிலேயே இங்கு சொல்லித் தரப்பட வேண்டியவைகள்இ கண்டிக்கப்பட வேண்டியவை கள் செய்யப்படுவதில்லை. ஒரு பிரபல நகைக் கடைக்காரரின் மனைவி ரொம்ப வருந்தி சமீபத் தில் ஒரு விஷயம் சொன்னார். ஒரு அப்பா வும்இ பெண்ணும் வந்தார்கள். அந்த டீன் ஏஜ் பெண் கடைச் சிப்பந்தியிடம் தன் தொப்புளைக் காட்டிஇ ‘‘இங்கே போட்டுக்கற நகை இருக்கா?’’ என்று கேட்டாளாம்! அப்பா பக்கத்தில் ந்¤ற்க கடைச் சிப்பந்தி தலைகுனிந்து கொண்டாராம். இது கற்பனையல்லஇ நிஜம்!
கூச்சம் என்பது இல்லாமல் போனதற்கு நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கும் கலாசார சீரழிவுச் சாக்கடையல்லவோ காரணம்! புள்ள குட்டி பெற்றுக் கொண்டு ஓடிப் போவதைப் பற்றி மீண்டும் மீண்டும் பாடப்படுகிறது என்றால் இதை விடக் கேடுகெட்ட உதாரணமாக வேறு எதைச் சொல்ல முடியும்?
எதுவுமே சகஜம்இ எல்லாமே சாதாரணம் என்ற நிலைதான் இங்கு வந்து கொண்டிருக் கிறது. அதனால்தான் பெற்றவர்களைப் பற்றிய பெருமிதம் குழந்தைகளுக்கும் இல்லை. குழந்தை களை வளர்க்க வேண்டிய விதத்தையும் பெற் றோர்கள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.
போலி கௌரவம்இ போலி ஆடம்பரம்இ போலி ஜபர்தஸ்திற்காக இங்கு எவ்வளவு அலட்சியமா கச் செலவு செய்யப்படுகிறது? ‘‘என் மகன் இன்ஜீனியரிங் படிக்கிறான்’’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும்.
‘‘யு.எஸ்.ஸில் இருக்காள்’’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும். அதற்கா கத் தேவையோஇ தேவையில்லையோ எத்தனை இலட்சங்கள் செலவுஇ இழப்பு!
குடும்பமே இங்கு முகமூடிகளை அணிந்து கொண்டு நடமாடுவது போல இருக்கிறது. பெற்ற வர்களின் சிந்தனைகளும் மேன்மையாக இருப்பதில்லை. பிள்ளைகளின் போக்கும் நேர்மையாக இருப்பதில்லை. எனவே ஒவ்வொருவரும் முகமூடி களைப் போட்டுக் கொண்டு அலைகிறார்கள்.
இந்த முகமூடிகள் களையப்பட வேண்டிய காலகட்டம் ஒன்று வருகிறது. ஏதேனும் அவசரம்இ ஆபத்துஇ இக்கட்டான சூழ்நிலை இவைகள் ஏற்படும் போது ஒவ்வொருவரின் முகமூடியும் அவிழ்ந்து விடுகிறது. போலி கௌரவத்திற்காக ஆரம்பத்தி லிருந்து அன்னிய கலாசாரத்தைப் புகுத்தியவர் கள் பிற்காலத்தில் அன்பிற்காக அவஸ்தைப்படுகிறார்கள்.
உள்ளத் துணிவுஇ நேர்மைஇ திடசங்கல்பம் இவையெல்லாம் கொண்டு இரும்பு போல நிற்க வேண்டிய இளைஞர்கள் ஏதோ மயக்கத்திலே வாழ்க்கைச் சிக்கலிலே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறார்கள். சிக்கல் மேலும் வெளியே வர முடியாத சிறையாக மாறி விடுவதுதான் பரிதாபத்திற்கு உரியது.
இன்றையச் சூழ்நிலையில் வெளியிலேதான் பல்வேறு விதமாக நாடகமாட வேண்டியுள்ளது. வீட்டிற்குள்ளேயாவது போலி கௌரவம்இ தேவை யற்ற சிந்தனைகள் இவற்றைக் களைந்து உண்மையான அன்பும்இ அக்கறையும் ஒருவர்பால் ஒருவருக்கு இறுக பார்த்துக் கொள்ள வேண்டாமா?
சுற்றுப்புறத் தூய்மைஇ சுகாதாரம் இதெல்லாம் ரொம்பப் பார்க்கிறோம். ஒரு ஈ பண்டத்தில் உட் கார்ந்து விட்டால் அருவெறுப்பு வருகிறது. ஆனால் எத்தனை ஈக்கள் கண்ணுக்குத் தெரியா மல் குடும்பத்தை மொய்த்துக் கொண்டு இருக் கின்றன. வேண்டாம் இந்தக் கொடுமை நமக்கு.
கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கிய கதை தான். நம் குடும்பத்தின் அற்புதமான பண்புகளைக் கொடுத்துஇ மலிவான பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறோம். குடும்பமே சிதறிப் போய் விட்டால் அப்புறம் என்ன நாகரிகம்இ பண்பாடு இருக்கும்?
இன்றும் அழகிய சித்திரத்தை வீட்டிற்குள் வரையலாம். அதற்குக் கொஞ்சம் கவனமும்இ கண்காணிப்பும் இருந்தால் போதும். அதற்குத் தேவை தெளிவான சிந்தனைஇ மனம்!
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்த தொற்றுநோய் யாழ்பாணம் வரை இண்று பரவியுள்ளமை கவலைதரும் விடயமே
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பாத்தியளே இளைஞர்களைப் பற்றிய தப்பபிப்ராயங்கள் அசுர வேகத்தில் வளர தற்போதைய இளைஞர்களின் தறிகெட்ட செயல்கள் எவ்வளவு துரித காரணிகளாக அமைகின்றன...இதற்குக் காரணம் பெற்றோர் பிள்ளைகள் பிணைப்பு வலுவிழந்துள்ளமையும்...பிள்ளைகள் தாங்கள் எல்லாம் தெரிந்தவர்கள்...சமுதாயம் சொல்லும் நல்லதுகளுக்கும்... அவர்கள் தரும் செய்தி... அவை சமுதாய வேலிகள் நாங்கள் சுதந்திரப் பறவைகள் சமுதாய வேலி தாண்டிப் பறக்கின்றோம்... என்று தமக்குத் தெரிந்த அந்நிய நாகரிகத்தை புகுத்துவதுதான்.....இதற்குள் ஆண் பெண் சமத்துவம் கேட்டு புறப்பட்டிருக்கும் பெண்களும் சிக்கி பெரிய சமூகச் சீரழிவே நடந்தேறிக் கொண்டிருக்கிறது....இதற்காகத்தான் சொல்கிறோம் சமூக விழுமியங்கள் பாதுகாக்கப்படும் பொருட்டு சமூக வளர்ச்சி மாற்றங்கள் சரியான வழியில் கொண்டு செல்லப்பட வேண்டும்... ஆண், பெண் இருவரும் கட்டுப்பாடுகள் ஒழுக்கங்கள் என்ற சிறப்பு விதிகளை பின்பற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்...அதை விடுத்து சமுதாயம் என்றால் என்ன..ஒழுக்கம் என்றால் என்ன...அதையேன் நாங்கள் இளைஞர்கள், பெண்கள் மாற்றி அமைக்க முடியாது.... என்று கேள்வி கேட்பவர்கள்....எதிர்காலத்தில் உங்கள் சமுதாயக் கட்டமைப்பைபற்றிய சிறு கற்ப்பனை முன்னோட்டத்தையாவது தந்துவிட்டுக் கேளுங்கள்... :!:

மீண்டும் சொல்கிறோம் சமுதாய நலன் கருதி தேவையெனில் பெண்களும் சரி ஆண்களும் சரி பாடசாலையில் மாணவர்கள் கட்டுப்படுத்தப்படுவது போல கட்டுப்படுத்தப்பட வேண்டியவர்களே...எங்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம்...இப்படித் தறிகெட்டதனங்கள் வளரவே வழி சமைக்கும்...! இதை நாங்கள் அநுபவவாதிகளாக அன்றி இளைஞர்களா இருந்தே சொல்கிறோம்...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>