வணக்கம் நண்பர்களே...
தமிழகத் தமிழர்களிடையே பரப்பரப்பாகப் பேசப்பட்ட திரைப்படம் "Boys". படம் வருவதற்கு முன்னாலேயே
பெரும் எதிர்பார்ப்பு அப்படத்தின் மீது இருந்தது யாவரும் அறிந்ததே. இது தமிழக அரசியல் வாதிகளும்
சினமாத் துறையினரும் பனிப்போர் நடத்திக்கொண்டிருக்கும் காலம். துள்ளுவதோ இளமை, பாபா, சண்டியர்,
பாய்ஸ் என்று பல திரைப்படங்கள் அடுத்தடுத்து மோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. இதற்கு
பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வியாபாரம், விளம்பரம் என்று சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
ஆயினும் துள்ளுவதோ இளமை, பாய்ஸ் என்று இவ்விரண்டு படங்களும் கலாச்சார ரீதியாக தமிழ் மக்கள்
மீது பாதிப்பைச் செலுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
துள்ளுவதோ இளமைக்கு இருந்த எதிர்ப்பைக் காட்டிலும் பாஸ்ஸ் திரைப்படத்திற்கு அதிகமான எதிர்ப்புகள்
கிளம்பின. ஒன்று விமர்சனங்கள் வாயிலாக. மற்றையது நேரடி நடவடிக்கைகள் வாயிலாக. பெண்கள்
அமைப்புகள் தமது எதிர்ப்பையும், அரசியல்வாதிகள் தமது எதிர்ப்பையும் காட்டத் தவறவில்லை. ஆனால்
இவர்களது எதிர்ப்புகள், எந்த எதிர்பார்ப்புகளோடு நடந்தேறின? சுயநலமா? அல்லது...?
சரி இவர்கள் கலாச்சாரம் சீரழிந்து போகிறது என்று இப்படிப் பொங்கியெழ பாய்ஸ் படத்தில் அப்படியென்ன
இருக்கிறது? ஆபாசம்? இதுவரை தமிழ் சினமாவில் எதிர்ப்பகள் இல்லாமல் வந்து அரங்கேறின திரைப்படங்களை
விடப் புதிதாக ஏதும் உண்டா?
படத்தைவிட சங்கர் மீதுதான் அதிக விமர்சனம். அதற்குக் காரணம். சங்கர் திரைப்படங்களுக்குள் புதுமை நுழைக்க
விரும்பும் ஒரு கலைஞர். அவரது முன்னைய திரைப்படங்களில் நிறையவே செய்தும் காட்டியிருக்கிறார். அதனால்
அவரிடமிருந்து வேறமாதிரியான ஒன்றை சிலர் எதிர்பார்த்திருக்கலாம். அந்த எதிர்பார்ப்புகள் வீண்போனதால்
சிலவேளை இவர்கள் பொங்கியிருக்கலாம். இருந்தபோதும் கலாச்சாரச் சீரழிவு என்றும், புதிதாக ஆபாசம் என்றும்
ஆர்ப்பாட்டம் செய்ய என்ன காரணம்?
சரி... முதலில் படத்தைப் பற்றிக் கொஞ்சம்:
அழகான, அடக்கமான அறிமுகத்தோடு படம் தொடங்குகிறது. ஹீரோவிசம் இல்லாமல் கதாநாயகர்களைச்
சாதாரணமாகவே அறிமுகப்படுத்துகிறார்கள். ஏழை, பணக்காரர், நடுத்தரவர்க்கம் என பலவிதப் பொருளாதாரத்
தளங்களிலும் இருந்து வெவ்வேறு தனித்துவங்களும், திறமைகளும் கொண்ட ஐந்து இளைஞர்கள் பற்றிய கதை
இது. குட்டிச் சுவரில் (?) இருந்துகொண்டு பெண்களின் அழகை இரசிக்கும் கலைஞர்கள் இவர்கள்.
ஆரம்பத்தில் ஐவரும் ஒருவரையே காதலிக்க முனைகிறார்கள், பின்னர் ஒருவனுக்கு வழிவிட்டு நண்பர்களாக
ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஐவரும் ஐந்து பெண்களைக் காதலிக்கிறார்கள். அதில் கதாநாயகியைக் காதலிக்கும்
பெடியன் காதலிக்காக நிர்வாணமாக ஓடுகிறான். இது வீட்டுக்குத் தெரியவந்து, காதல் விவகாரங்களும் தெரியவர
அனைவரது பெற்றோர்களும் சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நண்பர்களையும் பிரித்துக் காதலர்களையும் பிரித்து
வேலி போடுகிறார்கள். ஆனாலும் இதையெல்லாம் அடிக்கடி தாண்டி சந்தித்து தமது தாகங்களைத் தீர்த்துக்
கொள்கிறார்கள் பெடியங்கள். இறுதியாக பொறுக்க இயலாமல் கதாநாயகனும், கதாநாயகியும் திருமணம் செய்து
கொள்கிறார்கள். வீட்டில் இவர்களை ஏற்கவில்லை. இதனால் வெளியேறுகிறாகள். நண்பனுக்காக மற்றைய நால்வரும்
வெளியேறி கூட்டாக இருக்கிறார்கள். எங்கோ ஒரு குடிசையில் இருந்து கொண்டு பகுதிநேர வேலை செய்கிறார்கள்.
அப்போது பலவித சிக்கல்களையும், வாழ்வின் துன்பங்களையும் சந்திக்கிறார்கள். சோர்வடைந்து மீண்டும் துணிகிறார்கள்.
அதில் வரும் பணம் படிப்புக்குக் காணதென்பதால் புதிதாக சிந்திக்கிறார்கள். அதன்படி பாடல் ஆல்பம் செய்து
விற்பனை செய்கிறார்கள். அதன்போது பலவிதப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறாகுள். இறுதியாக Sony
நிறுவனத்திற்கு "பாய்ஸ்" இசைத் தட்டுச் செய்து கொடுத்து தங்கள் இலட்சியத்தை சாதிக்கிறார்கள்.
இதுதான் கதைச்சுருக்கும்.
காதல், நட்பு, காமம், வாழ்க்கை, அரசியல், மதம், கலாச்சாரம், சமூகம் என்று அத்தனையையும் சாதுவாகத்
தொட்டுச் சென்றாலும் அற்புதமாக சொல்லவந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். காதலுக்காக எதையும்
சந்திக்கத் தயாராகும் குணம், நட்புக்காகக் காதலைத் தியாகம் செய்யும் தன்மை என்று நிறையவே
செல்லியிருக்கிறார்கள். பிரச்சாரமாக இல்லாமல் சுருக்கமாகச் சிறு சிறு செயல்கள் மூலம் விளக்கியிருக்கிறார்கள்.
பொடாச்சட்டக் காட்சி தமிழகத்தின் இன்றைய அடிப்படை உரிமைப் பிரச்சினையப் பற்றிச் சொல்லியிருக்கு.
நக்சலைட் பற்றிச் சொல்லியிருக்கு. மதம் என்னும் பெயரால் பிச்சை எடுக்கும் சோம்பேறிகள் பற்றிச் சொல்லியிருக்கு.
காதல் தியாகம், காதல் வெற்றியும் வாழ்க்கைத் தோல்வியும் பற்றிச் சொல்லியிருக்கு. பிள்ளை வளர்ப்புப் பற்றிச்
சொல்லியிருக்கு. பெற்றோரைவிட்டு வெளியே வந்து அனுபவிக்கும் துன்பங்கள் பற்றியும், பணத்தின் அருமை பற்றியும்,
சொல்லப்பட்டிருக்கு. முயற்சியும், துணிவும், தன்னம்பிக்கயும் பற்றி இளைஞர்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கு.
உடலுறவு அனுபவம் பெறுவதற்காக ஒரு பெண்ணை அழைத்து வருகிறார்கள். அறைக்குள் ஒவ்வொருத்தராகச்
செல்கிறார்கள். (ஏதோ முந்தி அழியாத கோலங்கள் படத்தில வந்தமாதிரியாம்?)
1. முதலாவது ஒருவன் செல்கிறான். அவனுக்குள் இருக்கும் பயம், உணர்ச்சிச் சிக்கல்கள்
காரணமாக வெளியே வருகிறான். நண்பர்களிடம் தான் அப்பெண்ணை அனுபவித்ததாகப் பொய் சொல்கிறான்.
2. இரண்டாமவன் உள்ளே செல்கிறான். அவன் இது தப்பில்லையா என்று கேட்கிறான். அவள் அதற்குத் தப்புத்தான்
என்று சொல்கிறாள். காவலர்கள் தண்டனை அது இது என்று சிலதைச் சொல்கிறாள். பயப்படுகிறான்! வெளியே
வந்து அவனும் பொய் சொல்கிறான்.
3. மூன்றாமவன் உள்ளே செல்கிறான். அப்போது அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதை அறிகிறான். அதனால்
அவனும் வெளியே வந்து பொய் சொல்கிறான்.
4. நான்காமவன் உள்ளே. தாலியிருப்பதைக் காண்கிறான். எனவே வெளியே வந்து பொய் சொல்கிறான்.
5. ஐந்தாமவன் உள்ளே. அப்போது இவர்கள் பேசிய நேரம் முடீவடைந்து விடுகிறது. அதனால் கொஞ்சநேரம்
சும்மா இருந்துவிட்டு வெளியே வந்து பொய் சொல்கிறான்.
இப்படி உள்ளே எதுவும் ஆபாசமாய் நடக்கவில்லை. சத்தம் போடுவது போல் ஒருவன் நடித்தான். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. அவ்வளவுதான்.
எல்லோருமே கலாச்சாரம் என்பதையும், சட்டம் ஒழுங்கு என்பதையும் மதிப்பதால் மதித்ததால் அவர்களால் ஒன்றும்
செய்ய இயலவில்லை. எனவே இந்தக் காட்சி கலாச்சாரச் சீரழிவா? அல்லது கலாச்சாரத்தை மீற எண்ணாத
இளைஞர்களை வைத்து மற்றைய இளைஞர்களுக்குச் சொன்ன பாடமா?
சில கவர்ச்சியாகக் காட்சிகள் வந்தன. இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் புதிதாக எதுவும் இல்லையே.
"மலே மலே" பாட்டுக்கு நடிகை மும்தாச்சின் ஆட்டம், தாயுமானவளே படத்தில் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும்
மனைவியாக நடித்தவரின் ஆபாசக் காட்சி, இவற்றையெல்லாம் மீறிய காட்சிகளாக இங்கே எதுவும் படவில்லை.
விஜயகாந்தின் ஒரு திரைப்படத்தில் "ஆபாசக் காட்சி கூடாது" என்று சொல்லும் கருத்திற்காய் ஆபாசமாய்க் காட்சி
அமைத்தார்களே... அப்போது ஒரு எதிர்ப்பும் வரவில்லையே? கத்தி தூக்காதே என்பதற்காகக் கத்தியைத் தூக்கித்தானே
காட்டுகிறார்கள். மற்றவனைக் கொன்றதற்காக இந்தியாவில் மரணதண்டனை செய்து அதே தப்பைத்தானே செய்கிறார்கள்.
இப்படியெல்லாம் பல சிக்கல்கள் இருக்கும் பொழுது இவர்கள் இப்படிக் கத்துவது நியாயமா?
ஒரு பெண்ணைக் கவர்வதற்காக சின்னச் சின்னக் குறும்புகள் செய்வதும், தம்மை மற்றையவரிடமிருந்து வித்தியாசப்
படுத்திக் காட்டுவதும் பெடியங்களின் இளமைத் துள்ளல். இதையெல்லாம் தவறென்று சொல்ல முடியுமா?
படத்திலேயே நகைச்சுவை நடிகர் விவேக்கின் மூலம் கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஆபாசத்தைப் பற்றியும், கலாச்சாரச்
சீரழிவு பற்றியும் நல்ல கருத்துகள் சொல்லப்பட்டனவே. அவற்றையெல்லாம் இவர்கள் பார்க்கவில்லையா? தொலைக்காட்சி-
களில் ஆபாசமாகக் காட்டுகிறார்கள், வீட்டிலேயே பெற்றோர் புகை பிடிக்கிறார்கள் அப்படியிருக்கும் போது பிள்ளை வெளியில்
போய்த்தானா கெட்டுப் போறான் நெற்றியில் அடிப்பதாய் கேள்விகள். இதுவெல்லாம் கண்ணில் படவில்லையோ?
பாதிமார்பு தெரியப் பெண்களை எல்லா சினிமாவிலுந்தானே காட்டினார்கள்? இதிலென்ன புதுசா? சாதாரணமாக தற்போதைய
தமிழ்த் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகைகள் என்று தனியாக யாரும் நடிப்பது குறைவு. காரணம் கதாநாயகிகளே முழுநேரமாய்
அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் இந்தத் திரைப்படத்தில் அப்படி கவர்ச்சி காட்ட யாரும் இல்லை. அதனால் தனியாக
அதற்கென்று வேறு துணைநடிகர்கள். அவ்வளவுந்தான்.
என்ன ஆபாச வசனங்கள் இருக்கு? ஆபாச வசனங்கள் என்று விளங்கிக் கொள்ள முடிந்தவர்களுக்குத் தானே விளங்கும்.
மற்றையவர்க்கு அது எப்படி விளங்கும். அதாவது வயதுக்கு வந்தவர்களுக்கு ஏற்கனவே அதுபற்றித் தெரிந்தவர்களுக்குத்தானே
விளங்கிக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் வகுப்பெடுத்தால் தான் விளங்கும்.<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அப்படி சின்னப் பொடியங்கள் பெட்டையளுக்கு
அந்த வசனங்களின் அர்த்தங்கள் விளங்குமென்றால், அவர்கள் வீட்டில் பெற்றோர்கள் அப்படியான வசனங்களை வெளிப்படையாகப்
பேசியதாகத் தானே பொருள்படும்.
கத்தியெடுத்து வெட்டுறான், பாய்ந்து பாய்ந்து அடிக்கிறான் இதெல்லாம் அப்ப சின்னப் பிள்ளையள் பார்க்குதுகள்தானே?
விஜயகாந்த், இரஜனிக்காந்த் என்று எத்தனையோபேர் இப்படி நடித்திருக்கிறார்கள் (அடித்திருக்கிறார்கள்), அப்போதெல்லாம்
பிள்ளையள் கெட்டுப் போகேல்லயா? படத்தில எவ்வளவோ நல்லதுகள் இருக்கு. புதசா எந்த ஆபாசமோ, கலாச்சாரச்
சீரழிவோ அங்கில்லை. அதற்கு மாறாக அதுபற்றிய நல்லகருத்துக்கள் தான் சொல்லப்பட்டிருக்கு.
சரி இத விடுவம்.
கிராபிக் தொழில்நுட்பம் மேற்கத்திய நாடுகளுக்கு ஈடான முறையில் பயன்படுத்தப்பட்டிருக்குறிது என்று பாராட்டலாம்.
கிராபிக் உருவங்களும் பாடல்காட்சிகளில் வந்து போவது அருமை. புதிய தொழில்நுட்பம் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பாடல்களில் ஆங்கிலம் அதிகம். ஆனாலும் தமிழை மேற்கத்திய இசைக்கு ஏற்ப வளைக்க முயன்றிருக்கிறார்கள்.
சில இடங்களில் வளைந்திருக்கிறது. சில இடங்களில் உடைந்து போயிற்று. "கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் மறக்கச்
செய்வது காதல்" போன்ற வரிகள் உதாரணம். ஆங்கிலத்தைக் குறைத்திருக்கலாம்.
விவேக்கின் நகைச்சுவை இரசிக்கத்தக்கது. சிந்திக்கத் தக்கது. மற்றைய படங்கள் போல் அல்லாமல், இதில் அடக்கமாக
வாசித்திருக்கிறார்.
சில லோஜிக் பிழைகள் இருக்கு. மற்றும் சில குறைகள் இருக்கு. ஆனாலும் அவையெல்லாம் படத்தின் கதையோட்டத்தில்
மறைக்கப்பட்டுவிட்டன. உதாரணமாக சாதாரண இளைஞர்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் உடை நடைகள் எல்லாம்
கொஞ்சம் மேட்டில் இருக்கு. இதுபோன்ற சின்னச் சின்னப் பிழைகள் ஆங்காங்கே இருக்கு.
படத்தைப் பற்றி நிறையவே அலசி ஆராயலாம். இருந்தாலும் இங்கே கலாச்சாரச் சீரழிவு மண்ணாங்கட்டி என்று கத்தியவைக்கு
மட்டுந்தான் சிலவற்றை எழுதியுள்ளேன்.
படத்தைப் பாருங்கள். உங்கள் இளம்பிள்ளைகளோடு சேர்ந்திருந்து பாருங்கள். கற்றுக்கொள்ள நிறையப் பாடங்கள் அதிலுண்டு.
கற்றுக்கொள்ளலாம். பெற்றவரும் கற்றுக் கொள்ளலாம்.
சங்கரிற்கு கைதட்டல்கள். இருந்தாலும் தமிழைக் கொஞ்சம் கவனியுங்கள்...<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->