![[Image: lovers.jpg]](http://images.google.ch/images?q=tbn:8EvccyNzdIMJ:sunrisecounselling.com/images/artgallerypics/lovers.jpg)
<b>காதல் வாசல்</b>
<span style='color:green'><b>முழு விடுதலையைச் சுவாசித்து பூப்பதுதான் காதல். அது சிறைக்குள்ளும், எந்த விலங்குக்குள்ளும் அடைபட்டு, கட்டுப்பட்டு இருக்கச் சம்மதிக்காது</b>
[align=center:599b1897d1] - கவிஞர் அறிவுமதி[/align:599b1897d1]
[size=15]அண்ட சராசரங்கள் அனைத்தும் ஏதோ ஓர் ஈர்ப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த ஈர்ப்பு ஒவ்வோர் அணுவிலும் நிரம்பியிருக்கிறது என்கிறது விஞ்ஞானம். உயிர்சமூகம் தன்னை ஆண், பெண் என இரண்டாகப் பிரித்து தங்களுக்குள் உருவாகும் ஈர்ப்பின் மூலம் இணைந்து முழுமை பெற்றுவிடுகிறது.
இந்த இனிய உணர்வை 'காதல்' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. ஆதிமனிதர்கள் கட்டுப்பாடுகளற்று காதலித்தார்கள். அவர்கள் வாழ்தலின் முக்கிய குறிக்கோள் காதலாக மட்டுமே இருந்தது.
அதனால் காதலை விருப்பம்போல் அனுபவித்தார்கள். மனிதன் தங்களுக்கான ஒலி, ஓசை, மொழி, எழுத்து இவை எதுவும் அறியப்படாததற்கு முன்பே அவர்களால் அறியப்பட்டது காதல்; காதல்; காதல் மட்டுமே. கட்டுப்பாடுகளற்று காதலித்த ஆதிமனிதர்களின் மீது மெல்ல மெல்ல நாகரிகம் படர்ந்தபோது அவர்கள் தங்களுக்குள் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டார்கள். உறவுகள், குடும்பங்கள், இனக்குழுக்கள் எனப் பிரிந்து எல்லைக் கோடுகளை விரிந்தன. விரிந்த எல்லைக் கோடுகள் முதலில் காவு கேட்டது காதலைத்தான்; காதலர்களைத்தான். நாகரிகம் வளர வளர தேசம், மதம், இனம், மொழி என காதல் சுவர்கள் பல எழும்பின. இருப்பினும், காதல் தொடர்ந்து காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது. தங்களை அழித்துக் கொண்டு காதலை வாழவைத்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.
சிலர் சரித்திரமாகவும் நிலைத்துவிட்டார்கள். சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தன் காதலியை அடையாமலே தூக்கிலிடப்பட்ட தினத்தைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய அதிநவீன விஞ்ஞான உலகத்திலும் காதல் என்பது சமூகக்குற்றம் என்பது போன்ற எண்ணம் உருவாக்கப்படுகிறது. தங்களது வாழ்க்கைத் துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமையை இந்த சமூகம் இன்னும் இளைஞர்களுக்கு முழுமையாக வழங்கவில்லை.
காதல் சாமான்யனையும் சாதனையாளனாக்கிவிடும். காதல்தான் மிகப்பெரும் ஊக்கச் சக்தி. வாழ்க்கையில் வெற்றிபெற்றோர் எல்லாம் காதலித்தவர்களாகவும், காதலிக்கப்பட்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
வாழ்க்கையின் முழுமையான வெற்றி என்பது காதலையும் உள்ளடக்கியதுதான். இந்த உலகம் எப்போதும் காதலால் நிரம்பியே இருக்கவேண்டும். காதல் இல்லாத உலகம் சூன்யமானது.
காதலர்கள் நிறைந்த பூமியே சொர்க்க பூமி. அத்தகைய சொர்க்கபூமியை உருவாக்க வேண்டும் நாம். அதற்காக, காதலிக்கலாம் வாங்க.</span>
Koodal.com