Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேண்டாம் தொலையட்டும்
#21
Kanani Wrote:அஜீவன் அண்ணை
நாங்கள் யார் இங்க வெள்ளையனின் கலாசாரத்தை கேலி செய்தது
அவன் அப்படித்தான்
எமது ஹிப்பிகளை என்ன செய்வது?

Hippy - A person who opposes and rejects many of the conventional standards and customs of society, especially one who advocates extreme liberalism in sociopolitical attitudes and lifestyles.

<span style='font-size:25pt;line-height:100%'>
No one is no ones god.</span>

AJeevan
Reply
#22
அஜீவன் அண்ணை நீங்கள் சொல்வது உண்மைதான்

மனிதன் எனும் ஆறறிவு விலங்கிற்கு கடமை கட்டுப்பாடுகள் அவசியம்

சுதந்திரம் இருக்கிறதென்பதற்காக நிர்வாணமாக நடுவீதியில் போவது தகுமா? அது என் சுதந்திரம் நீ யார் தலையிட? நீ என்ன கடவுளா என்றால்....அதை என்ன என்பது?
Reply
#23
kuruvikal Wrote:மேலை நாட்டுத்தத்துவம் வெள்ளைத்தோலைக் காப்பாற்றலாம்....கோடி கோடியாய் உலகெங்கும் கொடூர ஆயுதங்கள் செய்து விற்றுப்பிழைப்பது யார் இதே பூனைக்கும் நாய்க்கும் ஜீவகாருணியம் காட்டும் வெள்ளையர்கள் தான் அதுமட்டுமா ஆசியாவிலும் மத்திய கிழக்கிலும் வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் அழிவதெல்லாம் அப்பாவி மனித உயிர்கள்...அங்கே எங்கே போனது அவர்களின் மனிதாபிமானமும் ஜீவகாருணியமும்...இவர்கள் சொல்லமுதலே முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும் புறாவுக்கு உடல் கொடுத்த சிபியும் காட்டிய ஜீவகாருணியத்தை ஏன் உங்கள் இதயங்கள் காணமறுக்கின்றன...அங்கெல்லாம் நீங்கள் உணர்ந்தவற்றை ஏன் உங்கள் பிள்ளைக்களுக்கு இனக்காட்டவில்லை...வெள்ளையனிடம் படிக்க முதல் உங்களிடம் உள்ளதை ஏன் அறிந்து உங்கள் பிள்ளைகளுக்கு ஊட்ட மறுக்கிறீர்கள்...ஈழத்தமிழர் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக மேற்குலகை நோக்கி இடம்பெயர முதலே மேற்குலகில் உயர்கல்விக்காக வந்து குடியேறிய பல தமிழ் மக்கள் இன்னும் அதே கட்டுக் கோப்புடன் வாழ்கின்றனர்...பல இஸ்லாமிய நாட்டவர்கள் அதே காட்டுக்கோப்புடன் ஆண்டாண்டாய் வாழ்ந்து தமது தலை முறையையும் கட்டுக்கோப்பாக வளர்த்தெடுக்கின்றனர்....! வெள்ளையர்கள் காலனித்துவக் கொள்கையோடு உங்கள் வாசல்களில் வாழ்ந்த போது உங்கள் கலாசாரத்தையா பற்றிக் கொண்டு மீண்டார்கள்...தங்கள் கலாசாரத்தை பரப்பிவிட்டுத்தான் வந்தார்கள்...ஏன் அதை நீங்கள் இங்கு செய்யக் கூடாது...உங்களுக்கு உங்கள் காலாசாரத்தின் மீது அதன் தந்துவங்களின் மீது நம்பிக்கை இல்லை...அவற்றின் மீது ஒரு ஏளனப் பார்வை....உங்களின் மனங்களின் பலவீனமே நீங்கள் மாற்றுக்காலாசாரத்துள் விளங்கமின்றி தாவிக் குதிக்கக் காரணமே அன்றி வேறல்ல...அதை மறைக்கவே இத்தனை வேடங்களும்....!இப்படி விந்தை மனிதர்கள் வாழத்தான் வேண்டுமா....தன் சுயமிழந்து வாழ்ச்சொல்லி அடைக்கலம் தந்த வெள்ளையனே சொல்லாத போது நீங்கள் ஏன் சுயத்தை இழந்து மாறு வேடம் பூணுகிறீர்கள்....!அப்படி எதைத்தான் மறைக்க விரும்புகிறீர்கள்...ஓ ஓ...நாங்கள் மேலைத்தேய புதிய சமூகம்... எம்மை எம்பாட்டில் விட்டுவிடுங்கள் என்று பிரகடனத்துக்கான முயற்சியோ...நீங்கள் எப்படித்தான் வேடம் போட்டாலும் இயற்கை தந்த பிறப்புரிமை உங்களை காட்டிக் கொடுக்கும் வெள்ளையனும் உங்களை நன்கே பிரித்துணர்வான்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
அன்று உணர்ச்சி வழி பேசியதால் நாம் இன்று நடு வீதிக்கு வந்தோம். நாம் அதையே தீர்க்க தரிசனத்துடன் கொஞ்சமாவது சிந்தித்து செயலாற்றியிருந்தால் நம் நிலையே வேறு.

அன்று இலங்கையைப் பார்த்து ஒரு சிங்கப்புர் உருவானது. இன்று?????????????????

மலேசிய பிரதமர் மகதீர் மொகமது அவர்கள் மன வேதனையோடு சொன்னதை இங்கு குறிப்பிடுகிறேன்.
<span style='color:green'>
\"நாம் (முஸ்லிம்கள்) திருக்குரானை மேலோட்டமாக படித்ததால் விஞ்ஞான வளர்ச்சிக்காகவும் எமது தேவைகளுக்காகவும் எதையுமே கண்டுபிடிக்காமலும்,செய்யாமலும் இருந்து விட்டோம்.
நாம் கலாச்சாரம் மதம் எனக் குறுகிப் போனதால் குறைந்த சனத் தொகை கொண்ட ஒரு சமுதாயம்,பெரும் தொகையான சமுதாயத்தைக் கொண்ட எம்மை அடிமை கொண்டு விட்டது\"

நேற்றைய சரி,இன்றைய தவறாக தெரிந்திருக்கிறது , மலேசியாவையே உலக தரத்துக்கு கொண்டு சென்று வியக்க வைத்த இந்திய-மலேய வம்சாவழியினரான பிரதமர் மகதீர் அவர்களுக்கு.

நாம் இன்னும் வேடர்கள் போல் கல்லெறிய நினைப்பதும். யாரோ அன்று எழுதிய சிலவற்றை நினைத்து , அங்கேயே நின்று கொண்டிருப்பதும் எந்த விதத்தில் நியாயம்?</span>


[scroll:6715aa276f][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#24
Quote:குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
US - F16 குண்டெறிபட்டு சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!


இப்படி எழுதினால் நாகரீக வளர்ச்சியாம்...


Quote:நாம் இன்னும் வேடர்கள் போல் கல்லெறிய நினைப்பதும்.

Quote:கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சூப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு.
இடைக்குக் கீழாயும் தொடைக்கு மேலாயும்
கம்பிகள்....கம்பிகள்.....
தம்பிகளின் , தங்கைகளின்
காற்சட்டைகளில் ஓட்டைகள்
கடகமளவில் கால் அகலம் றோட்டுக்கூட்ட
கலர் கலராய் நடைநடக்கும்
பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....


இதுவும் வேடுவார் காலம் நோக்கிய பயணம்
Reply
#25
யாரோ அன்று எழுதிய அகரவரிசைதான் இன்றும் மொழியாகி கருத்துக் காவுகிறது....அன்று எழுதியதென்று புறக்கணித்து இன்று புதிய மொழிவடிவம் கொண்டுவந்தால் என்னாவது....?????...விஞ்ஞானக் கல்வி வேறு கலாசாரம் வேறு...சீனர்களும் யப்பானியர்களும் கலாசாரம் விற்றா அல்லது விட்டா இன்று விஞ்ஞானத்தில் கொடிகட்டிப் பறக்கின்றனர்...யதார்த்தம் நியாயம் என்று அநியாயத்திற்கு தூபமிடாதீர்கள்...அப்படி செய்யாதிருப்பதும் ஒரு சமூகச் சேவையே....அமெரிக்க கொள்கையால் நாடுவளர்த்த மகதீர் இன்று முழு இஸ்லாமிய மதவாதியாகவும் அடிக்கடி காட்சிதருகிறார்.... காரணம்..அவரின் ஆட்சிமுடியும் வேளையில் சுயம் காட்டி நிக்கிறார் போலும்..!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
மேல்நாட்டுக்காரனாவது வேற்றுமெழி வேற்றுமதக்காரனை சுரண்டுறான்.. கொல்லுறான்.. நீங்கள் உங்களைத்தானே சுரண்டுறியள்.. கொல்லுறியள்.. அதுதான் வித்தியாசம் குருவிகளே.. கணணியாரே..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#27

இதுதான் உலகத்தின் நகர்வு என்பது.இவற்றை தடை செய்ய இயலாது.அப்படியாயின் விஞ்ஞானம் ஒரு போதும் வளர்ந்திருக்காது.நாம் கூட நம்மவருடன் நினைத்த நேரத்தில் தொடர்புகளைக் கொண்டிருக்கவே முடியாது. வளர்ந்தும் இருக்க முடியாது.

புத்தரும்,காந்தியும்,விவேகானந்தரும்,வள்ளுவரும்,ஏசுவும்,நபிகள் நாயகமும் ...............இன்னும் எத்தனை எத்தனை மாகான்கள் நாம் பிறந்த ஆசியாவுக்குள் பிறந்தார்கள்.....................நாம் திருந்தினோமா? நம் உயிர் துடிக்கும் இரத்த நாளங்கள் முழுவதும் வன்முறை........

நமது சிந்தனைகள், தத்துவங்கள் எல்லாம் நல்லவைதான். ஆனால் நாங்கள் மனித உயிர்களுக்கு எதுவித மதிப்போ,மரியாதையோ கொடுக்கத் தெரியாதவர்கள்.
நினைத்த போது எதுவும் பார்க்காமல் நடு வீதிகளில் எவரையும் கொன்று போடுபவர்கள். ஒருவரது உயிரின் மதிப்பு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருக் கலைப்பை எதிர்த்து கோசமிடும் உங்கள் பேனா ஏன் ஒரு கொலையை நியாயப் படுத்துகிறது. கொலை செய்யத் துாண்டுகிறது.
நீங்களும் அதைத்தானே எழுதுகிறீர்கள்...............
உங்கள் கருத்துகள் ஆக்கத்துக்கா? அழிவுக்கா?
shanthy Wrote:<b>வேண்டாம் தொலையட்டும்.</b>
குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
<span style='font-size:22pt;line-height:100%'>கல்லெறிபட்டுச் சாகவேணும் </span>
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
<span style='color:red'>தொலைந்தொழியட்டும்</span> வேண்டாம்.

உங்கள் கொலை வெறிதான் உங்கள் கலாச்சாரமாக இருந்தால்.நாங்கள் செத்துப் போவது மேல்..........

நாங்கள் வாழும் புலம் பெயர் நாடுகளில் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல பிராணிகளைக் கூட கொல்வதற்கு பாவம் பார்க்கிறார்கள்.மரண தண்டனையைக் கூட ஒரு மனிதனுக்குக் கூட கொடுக்க மறுக்கிறார்கள்.எத்தனை எத்தனை மாமிசம் சாப்பிடாத மேலை நாட்டவர்கள் இங்கே தெரியுமா? நமக்கு இறைச்சி இல்லாவிட்டாலே சோறு இறங்காது.
பிராணிகள் மேலுள்ள அன்பு அவர்களிடமிருக்கிறதே!!!!!!!!!!!!!
<span style='font-size:25pt;line-height:100%'>நாம் தத்துவங்கள் சொன்னோம் , பின்பற்றவேயில்லை.
மேலை நாட்டவர்கள் தத்துவங்களை படித்தார்கள். அதை தமது நடைமுறையில் பயன் படுத்துகிறார்கள்.இதுவே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அவர்களிடம் மனிதம் இருப்பதற்கும் , நம்மிடம் இல்லாமல் போனதற்கும் காரணம்.........</span>

<span style='font-size:25pt;line-height:100%'>மனிதநேயம் இல்லாத எந்த ஒரு மனிதனையோ ,படைப்பையோ என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. </span>

[scroll:4a5314ccc5][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்

அத்தனையும் மனிதநேயம் நிறைந்த உன்னத கருத்து. அஐPவன் எனது நன்றிகள். இப்படி ஒரு கருத்தை இத்தனை அழகாக முன்வைப்பீர்கள் என எதிர்பாற்கவே இல்லை.
Reply
#28
[size=14]புரிந்து கொண்ட இதயங்களுக்கு நன்றிகள்.............

நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் மானத்தோடு வாழ்கிறோம். சில காலம் வாழ்ந்த பிறகு இந்நாட்டு மன்னர்கள் போல் இந்நாட்டு குடியுரிமையோடு நிமிர்ந்து நடக்கிறோம்.

56 வருடங்களுக்கு மேல் நாட்டுக்கு உழைத்து ஓடாய் தேய்ந்து போன மலையக மக்களுக்கு இப்போதுதான் விடிவாம்.ஆனால் இன்னும் வாக்குரிமையில்லை.பெரும்பாலான முஸ்லிம் மக்கள் நிலை கூட இன்று அப்படித்தான்................

புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் எந்த உரிமையுமிமேயில்லாத நாம், இந்நாட்டு சுக போகங்களில் எவ்வளவோ அனுபவிக்கிறோம்.இது அங்கு முடியுமா?ஒவ்வொரு மனிதனும் வாழ்வை விட சாவையே நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம் என்கின்றனர்.ஏன் செத்தான் என்பது கூட தெரியாமல் செத்து வீதிகளில் கிடந்தவர்களைப் பார்த்து கதறியிருக்கிறேன்.நமது இனத்தால் நமது இனம் அழித்தொழிக்கப்பட்ட அளவு எதிர் தரப்பாரால் கூட அழிக்கப்படவில்லை என்பது மறைக்க முடியாத உண்மை. இன்றும் அது தொடர்கிறது....................கேள்வி பார்வையே இல்லாது சாவோர் எத்தனை எத்தனை?

இங்கு எந்த ஒரு பெண்ணும் இரவில் நடந்து போகலாம் அல்லது வேலைக்கு போய் வீடு வரலாம்.
ஒரு பெண் மாலை 6 மணிக்கு மேல் நடந்து செல்ல முடிந்தால் அன்றுதான் அந்த நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று காந்தி சொன்னார்.அவர் நினைத்தது புலம் பெயர் நாடுகளில் நடக்கிறது.மற்ற இடங்களில்..................வீட்டுக்குள் இருக்கும் பெண்ணே பட்டப்பகலில்........................வேண்டாம்.

கெட்டவர்கள் ,அயோக்கியர்கள் என்போர் உண்மையிலேயே நல்லவர்கள்................நல்லவர்கள் போல் வேசம் போடும் நரிக் கூட்டம் இருக்கிறதே............

நமது நாடுகளில் நாம் இன்றும் மூன்றாம் தர மனிதர்கள்.சாதி-சமய-இன-மொழி.....................எத்தனை எத்தனை கொடுமைகள்.
மனிதனை மனிதனாக பார்க்காத பார்வை. கோயிலுக்குள் நுழைய விடாத கொடுமை.குடிக்க ஒரு சொட்டு குடி நீர் கொடுக்காத தீண்டாமை எனும் கொடிய நோய்.எயிட்ஸ் போன்ற கொடிய நோய்கள் கூட இந்த அளவு என் மனதை புண்படுத்தியதில்லை................

வேண்டாம் தொலையட்டும் எனும் கலாச்சார மேன்மையாளர்களை விட , பாகுபாடு பார்க்காது இந்த நாடுகளில் , தங்கள் வீடுகளுகளுக்குள் அடைக்கலம் தந்து வாழ வழி விட்டு சுதந்திரமாய் சுவாசிக்க விட்ட கலாச்சாரமற்றவற்றவர்கள் என்னைப் போன்றவர்களுக்கு தெய்வங்கள்.

மனிதனை மனிதனாக பார்க்க தெரியாதவர்களோடு வாழ்வதை விட , நேசமிகு மிருகங்களுடன் வாழ்வதே மேல்.

<img src='http://www.yarl.com/forum/files/xmascard2.jpeg' border='0' alt='user posted image'>[size=15]
கல்லெறிந்து
கொல்ல - உன்
வார்த்தை வேண்டாம் தாயே
கருணை
கொள்ள - நின்
நெஞ்சில் எண்ணம் வேண்டும்
-அஜீவன்

[scroll:3a86081781][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#29
<span style='font-size:23pt;line-height:100%'>happiness come to you who give happiness to others

<img src='http://gdit.iiit.net/~sankar_s/photos/vivek/vivek7.jpg' border='0' alt='user posted image'>
speak helpful words
give cheerful smile to everyone
do a kind act
save a little
wipe the tears of one in distress</span>

<span style='font-size:25pt;line-height:100%'>are you seeking God? Then seek him in your heart.</span>

-swamy Vivegananda
Reply
#30
அனைவருக்கும் வணக்கம் ! இக்கவிதையில் வடிக்கப்பட்ட
'நரகல்களை மடியில்
அள்ளி வைத்து - அது
நாகரீமெனப் பெயர் சு10ட்டி
கறுப்பாயிருந்த தலை சிவப்பாகி
பச்சையாகி....
நாய் சு10ப்பிய பனங்கொட்டை
நல்ல வடிவு." என்ற வரிகள் நாகரீகம் எனும் பெயரில் அழகைக்கெடுக்கின்ற அலங்கோலங்களையே குறிக்கிறது. குறிப்பாக நரகல்கள் என்ற சொல்லின் பொருள் நீங்களெல்லோரும் நரகல்களை அள்ளி வைத்திருப்பது எனும் அர்த்தம் அல்ல. வாழ இடம்தந்தவர்களைக் குறைகூறவுமில்லை , அவர்களை ஏசவுமில்லை புரிந்து கொள்க அஜீவன்.
.

'குப்பைகளையெல்லாம் குடிநடுவில் குடியிருத்த
கொடிபிடிக்கும் கொள்ளையர்கள்
கல்லெறிபட்டுச் சாகவேணும்
கடவுளே கண்திறவாய்....!
அது தமிழ் வளர்க்கும் ஒளித்தலமாயினும்
தொலைந்தொழியட்டும் வேண்டாம்.

அஜீவன் தங்களுக்கு கோபத்தை உண்டாக்கிய இவ்வரிகளின் பொருள் கற்காலம் நோக்கிப்போய்க்கொண்டிருக்கிறது தமிழினம் எனச்சொல்லிக் கொண்டு கற்காலம் நோக்கி வழிநடாத்துவோருக்குத்தான்.

இக்கவிதை கொலைவெறியை ஊட்டுவதாக நினைத்தால் அது நீங்கள் புரிந்து கொண்டது அப்படியென நினைக்கிறேன். நினைத்தபோது யாரையும் கொன்று போடும் வக்கிரமும் இக்கவிதைக்கு இல்லை. மனிதரை , மானுசத்தை நேசிக்கும் நேசிக்கின்ற குணமும் உண்டு. வன்முறையாகத்தான் தமிழரின் போராட்டம் கூடப்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிலிருக்கின்ற நியாயத்தை நாமே இருட்டடிப்புச்செய்ய முயன்று நியாயம் கற்பிக்கின்றோமே இதை எப்படிச் சொல்வது ?

நீங்கள் கூறுவது போல் நாடு எங்கோ போய்விட்டது. உண்மைதான். ஆனால் நீங்கள் பார்க்கும் பார்வையிலிருந்து விலகிப்போய்விட்டது. அண்மையில் இருமுறை தாயகம் போய்வந்துள்ளேன். நாட்டின் மாற்றங்களெல்லாம் உங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற நாகரீகத்தினை முன்வைத்து முன்னேறவில்லை. நாடுதனது அடையாளங்களுடன் தனது விழுமியங்களுடன் நிறையவே நிமிர்ந்துள்ளது.

இவ்வரிகளை விடவும் இன்னும் இருக்கின்றனவே அவை -
'இங்கு அப்பாக்கள் பலருக்கு
அமோகக்கொண்டாட்டம்
துணையாய் பியரடிக்க ஒருதுணையாய்
மகனின் நண்பனின்....

இன்னொருவீட்டுப் பிள்ளையை
இரவுக்குடிகாரனாக்கித் தன்பிள்ளையை
அரிச்சந்திரனாகக் கதையளந்து
எவளோ ஒரு தாயின் மகன்
தறுதலையாவதில் துளியும்
கவலையில்லை இவர்க்கெல்லாம்.

தன்பிள்ளை முகம் ஒருநாள்
கிளிந்து விட மாற்றான் தாய் பிள்ளை
கெடுத்ததாய் குறைசொல்லும்
குடிகாரத் தகப்பன்கள் துணையான அம்மாக்கள்
துலையாரோ இப்புவிவிட்டு.....?

பெண்ணின் உடைகுறைத்து - அவள்
அங்கங்களை அங்குமிங்கும் அசைத்துக்காட்டி
தானுறிஞ்சிப் பால்குடித்த முலைகளையே
விலையாக்கிப் பிழைக்கும் வித்தகர்கள்
காந்தம் இருப்பதாய்ப் பெண்ணில்
காமக்கனிரசம் சுரப்பதாய்க் கதையளந்து
காலம் பயன்பெறவேண்டிய
கண்ணுணரும் சாதனத்தை விபச்சாரமாக்கி....

இலக்கியம் படைப்பதாய் ஏமாற்றும்
வித்தைகளை 'இதுவெல்லோ நல்லபடம்"
அறியாததையா காட்டுகிறார் - உமக்கு
அதில் ஆர்வமில்லையா....?
அறிவார்ந்து சினிமாக்கலைபடித்த
சீமான்களும் சேர்ந்து வக்காளத்து.

மேலுள்ள வரிகளும் இக்கவிதையில் இடம்பெறும் வரிகளே.


அகிம்சையை உலகுக்குச் சொன்னவரென்ற காந்தியே தன்னை சத்தியவானாக உறுதிப்படுத்த ஒரு பெண்ணைத்தானே நிர்வாணமாக அருகில் இருத்தி உறுதிப்படுத்தினாராம். ஓ..சிலவெளை இதுதான் உலகத்தின் நகர்வா ? இவற்றைத்தடை செய்ய இயலாதோ ?
நிர்வாணமாக ஆதிமனிதன் திரிந்தான். ஆனால் நாகரீகமடைந்த மனிதன் ஆடையைத்தன் மானங்காக்கவும் அதையே அழகு சாதனமாகவும் பயன்படுத்தினான்.

கற்கால மனிதன் போல் நிர்வாணம்தான் எமது உண்மை என நிர்வாணமாய்த் திரியலாமா ?

அஜீவன் ! வன்முறையாளர்களுடன் நானும் வாழ்ந்திருக்கிறேன். வன்முறையாளர்களின் சொந்தக்காரியாகவும் இருந்திருக்கிறேன். ஏன் தற்போது வன்முறையாளராகத் திரிகின்ற பல இளைஞர்களுக்குத் தமிழ் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த வன்முறையே வாழ்வென்று திரிந்த பலரைத்திருத்தியும் இருக்கிறேன். அவர்கள் இப்போ மனிதர்களாக மானுடத்தை நேசிப்பவர்களாக வாழ்வதையும் காண்கிறேன். காக்காத்தலைகள் அழகாகி , கடுக்கள் காதுகள் நேராகி நிமிர்ந்துள்ளார்கள் பலர். அவர்களிடமிருந்து வந்த ஞானத்தின் எதிரொலியே இக்கவிதை.

<span style='font-size:25pt;line-height:100%'>கொலைவாளினை எடடா பகைகொடியோர் தலை அறவே என்ற பாரதிதாசனின் வரிகளுக்குள் இருப்பது கொலைவெறியல்ல. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அவலம் தந்தவனுக்கே அதைத்திருப்பிக்கொடு என்பது எமது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சொன்னது இது வன்முறையைத் து}ண்டும் வாசகம் அல்ல. அவலங்களால் அழிந்து , அழுது கொண்டிருக்கும் ஒரு இனத்தின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் வரிகள். </span>

அஜீவன் தவறுகள் இருப்பின் மன்னிக்க. எனது கருத்தை எதிர்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்திற்கு எனது நியாயத்தை எழுதவும் எனக்கு உரிமையுண்டல்லவா.....!
Reply
#31
[b]<span style='font-size:25pt;line-height:100%'>புரிந்து கொண்டேன் உங்களைப் புரிந்து கொண்டேன்...</span>
<img src='http://www.yarl.com/forum/files/xmascard2.jpeg' border='0' alt='user posted image'><span style='color:red'>
கல்லெறிந்து
கொல்ல - உன்
வார்த்தை வேண்டாம் தாயே
கருணை
கொள்ள - நின்
நெஞ்சில் நல்லெண்ணம் வேண்டும்
-அஜீவன்

shanthy Wrote:[size=15]வன்முறையாளர்களுடன் நானும் வாழ்ந்திருக்கிறேன். வன்முறையாளர்களின் சொந்தக்காரியாகவும் இருந்திருக்கிறேன். ஏன் தற்போது வன்முறையாளராகத் திரிகின்ற பல இளைஞர்களுக்குத் தமிழ் ஆசிரியையாகவும் இருந்திருக்கிறேன். ஆனால் இந்த வன்முறையே வாழ்வென்று திரிந்த பலரைத்திருத்தியும் இருக்கிறேன். அவர்கள் இப்போ மனிதர்களாக மானுடத்தை நேசிப்பவர்களாக வாழ்வதையும் காண்கிறேன்.

அஜீவன் தவறுகள் இருப்பின் மன்னிக்க. எனது கருத்தை எதிர்க்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கருத்திற்கு எனது நியாயத்தை எழுதவும் எனக்கு உரிமையுண்டல்லவா</span>.....!
Confusedhock: அன்புடன் திருத்த முயன்று வழிகாட்டியாகி நீங்கள் வெற்றி பெற்றிருந்தால், மகிழ்ச்சிக்குரிய விடயம்.

:?: தற்கொலை செய்து கொள்ளக் கூட எனக்கு உரிமையில்லை.அப்படியிருக்கும் போது, ஒரு சீர்திருத்தவாதியும் ,ஆசிரியையுமான உங்கள் வார்த்தைகளில்,
<span style='color:red'>கல்லலெறிந்து....................... வார்த்தைக்கு வார்த்தை................ அது தோல்விக்குரிய , வேதனை தரும் விடயம்தானே?.....................

Idea நாம் வாழும் நாடுகளில் கருத்துச் சுதந்திரம் நிறையவே உண்டு.தொடர்ந்து நல்லவைகளை நிறைய எழுத வாழ்த்துகள்...........</span>

உங்கள் கவித்துவத்தின் ரசிகன்,
-அஜீவன்

[scroll:abfb7c6a10][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#32
மனிதன் மனிதனாக வாழவேண்டும்....தனக்கென்று விலங்கிலிருந்தும் சிறப்புக் கொண்டு வாழவேண்டும் அன்றில் ஆறாம் அறிவாம் பகுத்தறிவிருந்தும் பலனில்லை...! அவ்வறிவின்றேல் உண்மை மனித நேயம் என்பது பேச்சளவில்தான் மனதளவில இல்லை...!கலாசாரத்திற்கும் மனித நேயத்திற்கும் நிறைந்த இடைவெளி உண்டு...மனித நேயம் மனிதனான ஒவ்வொருவனுக்கும் அவசியம்... காலாசாரம் என்பது மனிதன் தன்னால் நடத்தையால் மாறுப்பட்டிருப்பினும் மனித நேயத்திற்கு குழிபறிப்பதில்லை....மனிதன் மிருகமாகிக் கொண்டு மனித நேயம் தேடுவது சினிமாவுக்கு உதவலாம் சீவியத்திற்கு உதவாது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#33
kuruvikal Wrote:மனிதன் மனிதனாக வாழவேண்டும்....தனக்கென்று விலங்கிலிருந்தும் சிறப்புக் கொண்டு வாழவேண்டும் அன்றில் ஆறாம் அறிவாம் பகுத்தறிவிருந்தும் பலனில்லை...! அவ்வறிவின்றேல் உண்மை மனித நேயம் என்பது பேச்சளவில்தான் மனதளவில இல்லை...!கலாசாரத்திற்கும் மனித நேயத்திற்கும் நிறைந்த இடைவெளி உண்டு...மனித நேயம் மனிதனான ஒவ்வொருவனுக்கும் அவசியம்... காலாசாரம் என்பது மனிதன் தன்னால் நடத்தையால் மாறுப்பட்டிருப்பினும் மனித நேயத்திற்கு குழிபறிப்பதில்லை....மனிதன் மிருகமாகிக் கொண்டு மனித நேயம் தேடுவது சினிமாவுக்கு உதவலாம் சீவத்திற்கு உதவாது...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உள்ளத்தில் உள்ளவைதான் வார்த்தைகளாகும். முகமூடி அணிந்து முகம் தெரியாமல் வருவதால் எவரையும் அடையாளம் காண முடிவதில்லை.வெளியே வந்தால் நிச்சயம் தெரிந்து விடும்............
Reply
#34
<img src='http://mars.jpl.nasa.gov/gallery/artwork/browse/neanderthals_br.jpg' border='0' alt='user posted image'>

குழந்தையாகி சிறுவனாகி இளைஞனாகி முதியவனாகி இத்தனை மாற்றங்கள் முகத்தில்.... அகத்தில் அறிவு வளர்ச்சியின் பின் எல்லாம் ஆய்வின் விதியே...! ஆய்வோம் அறிவோம்.... இன்று நல்லதாவது நாளை கெட்டதாகும் இன்று கெட்டதாவது நாளை நல்லதாகலாம்....?! ஒரு நாள் ஆடையின்றி இருந்தோம் நாகரிகம் என்று ஆடை தந்தோம்...இன்று மீண்டும் ஆடை திறக்கின்றோம்....நாளை மீண்டும்....அன்று அறிவு வளர முதல் செய்தோம் இன்று அறிவிழந்து செய்கின்றோம்....?! எங்கே போகின்றோம் விஞ்ஞானத்தை துணைக்கிழுக்கும் நாம்.... விஞ்ஞானத்தின் எந்தப் பிரிவு சொன்னது ஆடை குறைத்து... தோல் நிறை வியர்வைச் சுரப்பிகள் பூசியடைத்து...உடலின் வெப்பம் பேணும் மயிர் பிடுக்கி...இயற்கைக்கு மாறாய் உறவு வளர்த்து....சா... வெட்கம் பகுத்தறிவே இழந்தபின் விஞ்ஞான அறிவா....எம்மால் மனத்தை அடக்க முடியவில்லை ...அடக்கி வழிகாட்டியவனையும் அப்படியே பின்பற்ற முடியவில்லை...பிறகேன் உபதேசம்...ஏட்டுச் சுரக்காயாகட்டும்....?!
உண்மை ஒருநாள் இயற்கையால் உணர்த்தப்படும் அதுவரை காத்திருப்போம்...அதுவும் விஞ்ஞானந்தான் சொல்கிறது...!மதியிழந்து திசைமாறும் மனிதன் இருக்கலாம் பறவை இருக்கமுடியுமா....?! இயற்கை வழிகாட்ட பயணம் நடக்குது...வாழ்வில் வெற்றி நிலைக்குது.....எங்கும் முடிவு ஒன்றுதான் மரணம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#35
வாழ்த்துக்கள் குருவிகள்.நல்ல சிந்தனை
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#36
<span style='font-size:25pt;line-height:100%'> <b>Man making a monkey out of himself......</b></span>
<img src='http://www.ekkcom.com/monk5.jpg' border='0' alt='user posted image'>
kuruvikal Wrote:<span style='color:red'>மனிதன் மனிதனாக வாழவேண்டும்....தனக்கென்று விலங்கிலிருந்தும் சிறப்புக் கொண்டு வாழவேண்டும் அன்றில் ஆறாம் அறிவாம் பகுத்தறிவிருந்தும் பலனில்லை...!
kuruvikal Wrote:[size=15]மதியிழந்து திசைமாறும் மனிதன் இருக்கலாம் பறவை இருக்கமுடியுமா....?! இயற்கை வழிகாட்ட பயணம் நடக்குது...வாழ்வில் வெற்றி நிலைக்குது.....!
[size=18]ஆகா......... கருத்து மாறாத ஒத்த சிந்தனைகள்?</span>

kuruvikal Wrote:<img src='http://www.yarl.com/forum/files/alt.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:25pt;line-height:100%'>
இன்று நல்லதாவது நாளை கெட்டதாகும் இன்று கெட்டதாவது நாளை நல்லதாகலாம்....?! </span>இயற்கை வழிகாட்ட பயணம் நடக்குது...வாழ்வில் வெற்றி நிலைக்குது.....எங்கும் முடிவு ஒன்றுதான் மரணம்...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: Idea
<span style='font-size:22pt;line-height:100%'> இன்று நல்லதாவது நாளை கெட்டதாகும் இன்று கெட்டதாவது நாளை நல்லதாகலாம்.
எங்கும் முடிவு ஒன்றுதான் மரணம்...!
-kuruvikal</span>

<span style='font-size:22pt;line-height:100%'>தீர்க்கதரிசிகள் இப்போதும் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி..........</span>
-அஜீவன்

[scroll:97a462b007][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply
#37
அதிகம் அலட்டிக்கொள்ளாத அஜீவன், அரட்டையடிக்கும் குருவிகளென ஆளாளுக்கு அள்ளித்தெளிக்கும் கருத்துக்கள் ............... சுப்பர் இவ்வளவு காலமாக உங்கள் சிந்தனைகளுக்கெல்லாம் அணைபோட்டு வைத்ததேனோ?. களம் உண்மையிலேயே இப்பத்தான் ஒரு ஜனரஞ்சகமான பக்கமாக மாறிவருகிறது. வெறும் அலட்டல்களாகவோ அன்றி உயர் இலக்கியவாதிகளுக்கான பக்கமாகவோ இல்லாமல் சாதாரண வாசகர்களையும் கவரும் விதத்தில் கருத்துக்களும் கலகலப்பும் சரியானவிகிதத்தில் கலந்து தித்திக்கின்றதே. களமாடும் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துக்கள்
Reply
#38
ஒன்றைமட்டும் மறந்துபோகாதையுங்கோ உந்த வெள்ளையனுகள் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுற சாதி. ஜீவகாருண்யம் பேசுவாங்கள் பண்ணையிலை கோழியை இறகுகளை விரிக்கக்கூட முடியாத சிறு கூட்டில் அடைப்பாங்கள். கூட்டின் நீள அகலத்தை ஒரு சென்ரிமீட்டராலை அதிகரிக்க பலகாலம் பேச்சுக்கள் நடத்துவாங்கள். சுதந்திரம் பற்றி நிறையப் பேசுவாங்கள் பாகிஸ்தாiனோடையும் கைகோர்த்து நிப்பாங்கள். மனித உயிரின் மதிப்புப் பற்றியும் பேசுவாங்கள் ஆனால் தங்கட அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படாதவரையில்தான்...... எல்லாம்
Reply
#39
கோழிகள் இருக்குமட்டும் பண்ணைகளும் இருக்கும்.
.
Reply
#40
Ampalathar Wrote:ஒன்றைமட்டும் மறந்துபோகாதையுங்கோ உந்த வெள்ளையனுகள் தொட்டிலையும் ஆட்டிப் பிள்ளையையும் கிள்ளுற சாதி. ஜீவகாருண்யம் பேசுவாங்கள் பண்ணையிலை கோழியை இறகுகளை விரிக்கக்கூட முடியாத சிறு கூட்டில் அடைப்பாங்கள். கூட்டின் நீள அகலத்தை ஒரு சென்ரிமீட்டராலை அதிகரிக்க பலகாலம் பேச்சுக்கள் நடத்துவாங்கள். சுதந்திரம் பற்றி நிறையப் பேசுவாங்கள் பாகிஸ்தாiனோடையும் கைகோர்த்து நிப்பாங்கள். மனித உயிரின் மதிப்புப் பற்றியும் பேசுவாங்கள் ஆனால் தங்கட அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் பாதிக்கப்படாதவரையில்தான்...... எல்லாம்

<span style='font-size:25pt;line-height:100%'>வெள்ளையன் கையில தொங்கிக் கொண்டே , அவனுக்கு புரியாத மொழியில, அவனுக்கே உபயமா?</span>

-அஜீவன்

[scroll:8d1d094ea0][size=15]எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை. -அஜீவன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)