Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
போராட்டம் அத்தனை தமிழரின் நல்வாழ்வுக்குமாகத் தான் . அதை விடுத்து போராடுபவர்களுக்கோ அல்லது அவர்களின் உற்றம் சுற்றத்தினருக்கோ மட்டுமல்ல. இலங்கைத் தமிழினம் என்று சொல்லக்கூடிய நிலையும் அவர்களால் தான் ஏற்பட்டது. இதில் வட்டமும் சதுரமும் எதற்கு. இன்று போரட்டத்தின் சாதனையால் தான் ஈழத்தமிழன் மட்டுமல்ல உலகத் தமிழனம் கூட நம்மோடு நெருங்கி வந்திருக்கின்றது. நிலத்தைப் பற்று இத்தனை பற்றிருந்தால் நிச்சயமாய் எங்கோ போயிருந்து கொண்டு பேசிக் கொண்டிருக்கமாட்டீர்கள். இத்தனை சாதனைகளும் படைத்தது சிறு படையே. நீங்களும் போய் செர்ந்திருந்தால். அங்கே ஆக்கிரமிப்பாளன் நின்றிருப்பானா? அந்த நிலத்தினைக் காக்கும் பணியினில் ஈடுபட்டிருந்திருப்பீர்கள். நீங்கள் இடித்த புளியையே திரும்பத் திரும்ப இடிக்கின்றீர்கள். பிரயோசனப் படாது. சகல சுதந்திரங்களுடனும் வாழ்கின்றார்கள் தமிழர்கள் அவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியினுள். ஏன் படிக்கவில்லையா கிட்டடியில் உங்கள் இனத்தில் ஒரு எட்டப்பன் (லக்ஸ்மன்) கொடுத்த பேட்டி அவர்கள் நடைமுறை, ஒழுக்கங்களைப் பற்றி புகழேந்தே தள்ளிவிட்டார். உங்கள் அடுக்கல்கள் இங்கே ஒரு போதும் செல்லுபடியாகாது. நீங்கள் எழுதிய அத்தனையும் உங்கள் நன்பர்கள் உங்கள் ஆட்களுக்கு மட்டும் நடப்பது ஆச்சரியம் தான்.
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சிறிலங்கா சனாதிபதி சந்திரிகாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை, சமாதான நடவடிக்கைகளை புறந்தள்ளியுள்ள நிலையில் அதனை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி, முற்றாகவே அமைதி நடவடிக்கைகள் யாவற்றையும் செயலிழக்க வைக்கும் தனது அரசியல் மூலோபாயத்தை சனாதிபதி மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு செயற்படுத்திவருகிறார் என்பதையே அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் நிரூபித்து வருகின்றன.
மூன்று பிரதான அமைச்சுக்களை சந்திரிகா தன் வசப்படுத்திக்கொண்டதையடுத்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்கும் ஐ.தே.முன்னணி அரசு பெரும்பாலும் முற்றாகவே அதிகார வலுவற்ற பொம்மை அமைச்சரவை ஒன்றைக் கொண்டதாக மாறிவிட்டது.
இந்த நிலையில் ரணில் வெறுமனே ஒரு ~றப்பர் முத்திரை| பிரதமராக எத்தனை நாளைக்குத்தான் பதவியில் இருக்கமுடியும். இத்தகைய ஒரு நிலை அவரது அரசியல் ஆளுமைக்கு தகுந்த ஒன்றாக அமையாது என்பதுடன் அவரது எதிர்கால அரசியல் வாழ்வையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதும் உண்மையே.
இதை ரணில் நன்கு அறிவார்.
அதேசமயம் சந்திரிகாவின் இலக்கும் அதுவேயாகும்.
ரணிலின் அரசியல் ஸ்திரத்தன்மையை, அரசியல் செல்வாக்கை எத்தகைய ராஜதந்திரத்தை அல்லது சட்டபுூர்வ அரசியல் சதியை, பயன்படுத்தியேனும் சிதைப்பது சந்திரிகாவின் முக்கிய நோக்கமாக இருந்த அதேசமயம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப்பேச்சுவார்த்தையை ஆதரிப்பதுபோல் காட்டிக்கொண்டு, அதனை நிரந்தரமாக ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு செல்வதும் அவரின் திட்டமாகவும் இருந்தது.
இத்திட்டத்தின் மற்றொரு பக்கம் இன்னொரு அரசியல் சதியை இனவாத இலக்குடன் மேற்கொள்வதாகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுதலும் அவசியமாகும்.
அதாவது கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களிடையே பகைமை மற்றும் மோதல் உணர்வை, சமூக விரோத சக்திகளையும். தேசவிரோத தமிழ்க் குழுக்களையும் பேரினவாத வெறியர்களின் வழிகாட்டலில் செயற்படவைத்து அதிகரிப்பதும் சனாதிபதியின் தலைமையிலான பொ.ஐ. முன்னணியினரின் மறைமுகமான திட்டமுமாகும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவரிடையேயான நட்புறவும், பாரம்பரியப் புரிந்துணர்வும், பேரினவாதத் தலைமைகளின் மித்திரபேதத் தந்திரோபாயங்களால் கடந்த மூன்று தசாப்தங்களாக பெருமளவு சிதைவடைந்து இருதரப்பினருக்குமிடையே ஒரு விதமான பகையுணர்வு வளர சிங்களத் தலைமைகள் கையாண்ட யுக்திகள் பலவாகும். வடக்கிலும், கிழக்கிலும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும், ஏனைய மதங்களை பின்பற்றும் தமிழர்களுக்குமிடையே மத hPதியிலான முரண்பாடுகள் என எதுவுமே தலைது}க்கியதில்லை. இருதரப்பினரிடையே தாய்மொழியும் தமிழாக அமைந்திருந்தமையானது மத வேறுபாடுகளுக்கப்பால் இரு இனத்தவரிடையேயும் பரஸ்பர நல்லுறவு ஏற்படக் காரணமாகவும் இருந்தது.
வடக்கிலும் கிழக்கிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் தமிழ் என்ற மொழியால் இறுக்கமான உறவு - உணர்வுகளைப் பேணிவருவது பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு ஒரு போதுமே உடன்பாடாக இருந்தது கிடையாது. இந்த உறவு இறுக்கமானால் சிறுபான்மையினரான தமிழ் பேசும் இனத்தவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து ஒரு பெரிய வலிமையான சக்தியாகி சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானதும் ஆபத்தானதுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு சில தசாப்தங்களின் முன்னரே ஏற்பட்டுவிட்டது.
பண்டாரநாயக்கா முதல் - சந்திரிகாவரை சிங்களத் தீவிரவாத தலைவர்களும் காலத்திற்கு காலம் அவர்களின் அரசியல் மற்றும் ஏனைய தேவைகளின் அவசியத்தின் நிமித்தம் தமிழ் அரசியல்வாதிகளிடையே - அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி. பிளவுகளை ஏற்படுத்தி, முரண்பாடுகளை வளர்த்ததன் மூலம் சிறுபான்மையின் ஒருமித்த உரிமைக்கான போராட்ட உணர்வை நன்கு திட்டமிட்ட வகையில் சிதைத்தனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கிடையே பதவிப் போட்டியை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கியதன் பின்னணியில் சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரமான கைகள் இருந்தன.
இவையொன்றும் அந்தத் தலைமைகளுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் பதவி வெறியும், போட்டியுணர்வும் இன ஒருமைப்பாட்டையே சிதைத்து தங்களுக்குள்ளேயே சந்தி சிரிக்கும் அளவுக்கு அவமானகரமான வகையில் மோதிக்கொள்ளவே வழிவகுத்தது.
இஸ்லாமியத் தமிழ் தலைமைக்குள் எப்படி பேதங்களை உருவாக்கினார்களோ அதே வழியில் தமிழ் தலைமைகளுக்கும் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தலைவர்களுக்குமிடையே எத்தகைய நல்லுறவும் ஏற்படவிடாதும் பார்த்துக் கொண்டார்கள்.
நாட்டின் இனப்பிரச்சினையை இதற்கு அவர்கள் பயன்படுத்திய விதம் ஒரு துரோகத் தனமான சதியாகும்.
முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே இனத்துவ முரண்பாடுகளையும் மோதல்களையும், சமூக விரோத சக்திகளையும், கூலிப்படைகளையும் பயன்படுத்தி, சர்வதேச உளவு அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கிணங்க சிங்கள அரசியல்வாதிகள், பேரினவாத அமைப்புகளின் அனுசரணையுடன், ஏற்படுத்திய விதம் இரு தரப்பினரிடையேயும் நிரந்தரமான பகைமையுணர்வை விதைப்பதையே இலக்காகக்கொண்டதாகும்.
இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் இதற்கு பலியானவிதம் மிகவும் பரிதாபகரமானதாகும்.
தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அதேபோல் ஒரு கட்டம் வரும் போது, இஸ்லாமியத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் அரசு ஒடுக்கவே செய்யும் என்ற சிந்தனையோட்டமும் தொலைநோக்கு யோசனையும் இரு தரப்பு தலைமைகளுக்கும் இருந்தது கிடையாது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது இஸ்லாமியத் தமிழர்களின் உரிமைகளுக்குமான போராட்டம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவிடாது சிங்கள பேரினவாதம் அவர்களை பதவிப்பதர்களாக்கி விட்டது துயரமான விடயமே.
இன்று கிழக்கில் நடைபெறும் வன்முறைகளின் பின்னணியில் இயங்கும் அரச சார்பு, சமூக விரோத சக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவு ஏற்படுவதை சிதைப்பதையே ஒரே இலக்காகக் கொண்டுள்ளனர் என்பதை இஸ்லாமியத் தலைமைகளும், அடிப்படை மதவாத அமைப்புகளும் சிந்திக்க தவறிவிட்டன.
கிழக்கின் அசம்பாவிதங்களுக்கு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டும் சந்திரிகாவின் இரத்தக் கறை படிந்த கரங்களின் கொடூரத் தினை உடத்தலவின்ன படுகொலைகளின் போதாவது முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இன்று நடைபெறும் வன்முறைகளின் பின்னாலும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறை கரம் ஒன்று வேறு சில வெளிச்சக்திகளின் அனுசரணை மற்றும் ஆலோசனையுடன் செயல்படுகிறது என்பது உண்மையாகும்.
இந்த மறைகரம் இனம் காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்தநாட்டின் சமாதான முயற்சிகளைச் சிதைப்பதும், விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்வதும், தமிழ் - இஸ்லாமியத் தமிழ் மக்களிடையேயான உறவுகளைத் தகர்ப்பதும் தான் இந்த பேரினவாத வழிகாட்டலுடனான மறைகரத்தின் ~திருப்பணி| என்பதை இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் தமது பதவிப் பற்றின் காரணமாக இனங் காணத் தவறின் - இஸ்லாமியத் தமிழர்களை பெரும் அவலங்களுக்குள் தள்ளி விடும் வரலாற்றுத் தவறை புரிந்த குற்றம் அவர்களுக்குரியதேயாகும்.
நன்றி: ஈழநாதம் 05-12-03
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சிறிலங்கா சனாதிபதி சந்திரிகாவின் அதிரடி அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை, சமாதான நடவடிக்கைகளை புறந்தள்ளியுள்ள நிலையில் அதனை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கி, முற்றாகவே அமைதி நடவடிக்கைகள் யாவற்றையும் செயலிழக்க வைக்கும் தனது அரசியல் மூலோபாயத்தை சனாதிபதி மிகவும் கச்சிதமாக திட்டமிட்டு செயற்படுத்திவருகிறார் என்பதையே அவரது அண்மைக்கால நடவடிக்கைகள் யாவும் நிரூபித்து வருகின்றன.
மூன்று பிரதான அமைச்சுக்களை சந்திரிகா தன் வசப்படுத்திக்கொண்டதையடுத்து சிறிலங்காவின் நாடாளுமன்றத்தை பொறுப்பேற்று நாட்டை நிர்வகிக்கும் ஐ.தே.முன்னணி அரசு பெரும்பாலும் முற்றாகவே அதிகார வலுவற்ற பொம்மை அமைச்சரவை ஒன்றைக் கொண்டதாக மாறிவிட்டது.
இந்த நிலையில் ரணில் வெறுமனே ஒரு ~றப்பர் முத்திரை| பிரதமராக எத்தனை நாளைக்குத்தான் பதவியில் இருக்கமுடியும். இத்தகைய ஒரு நிலை அவரது அரசியல் ஆளுமைக்கு தகுந்த ஒன்றாக அமையாது என்பதுடன் அவரது எதிர்கால அரசியல் வாழ்வையும் மிக மோசமாகப் பாதிக்கும் என்பதும் உண்மையே.
இதை ரணில் நன்கு அறிவார்.
அதேசமயம் சந்திரிகாவின் இலக்கும் அதுவேயாகும்.
ரணிலின் அரசியல் ஸ்திரத்தன்மையை, அரசியல் செல்வாக்கை எத்தகைய ராஜதந்திரத்தை அல்லது சட்டபுூர்வ அரசியல் சதியை, பயன்படுத்தியேனும் சிதைப்பது சந்திரிகாவின் முக்கிய நோக்கமாக இருந்த அதேசமயம், விடுதலைப் புலிகளுடனான சமாதானப்பேச்சுவார்த்தையை ஆதரிப்பதுபோல் காட்டிக்கொண்டு, அதனை நிரந்தரமாக ஒரு ஸ்தம்பித நிலைக்கு கொண்டு செல்வதும் அவரின் திட்டமாகவும் இருந்தது.
இத்திட்டத்தின் மற்றொரு பக்கம் இன்னொரு அரசியல் சதியை இனவாத இலக்குடன் மேற்கொள்வதாகவும் உள்ளதை உணர்ந்து கொள்ளுதலும் அவசியமாகும்.
அதாவது கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவர்களிடையே பகைமை மற்றும் மோதல் உணர்வை, சமூக விரோத சக்திகளையும். தேசவிரோத தமிழ்க் குழுக்களையும் பேரினவாத வெறியர்களின் வழிகாட்டலில் செயற்படவைத்து அதிகரிப்பதும் சனாதிபதியின் தலைமையிலான பொ.ஐ. முன்னணியினரின் மறைமுகமான திட்டமுமாகும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தவரிடையேயான நட்புறவும், பாரம்பரியப் புரிந்துணர்வும், பேரினவாதத் தலைமைகளின் மித்திரபேதத் தந்திரோபாயங்களால் கடந்த மூன்று தசாப்தங்களாக பெருமளவு சிதைவடைந்து இருதரப்பினருக்குமிடையே ஒரு விதமான பகையுணர்வு வளர சிங்களத் தலைமைகள் கையாண்ட யுக்திகள் பலவாகும். வடக்கிலும், கிழக்கிலும் இஸ்லாமியத் தமிழர்களுக்கும், ஏனைய மதங்களை பின்பற்றும் தமிழர்களுக்குமிடையே மத hPதியிலான முரண்பாடுகள் என எதுவுமே தலைது}க்கியதில்லை. இருதரப்பினரிடையே தாய்மொழியும் தமிழாக அமைந்திருந்தமையானது மத வேறுபாடுகளுக்கப்பால் இரு இனத்தவரிடையேயும் பரஸ்பர நல்லுறவு ஏற்படக் காரணமாகவும் இருந்தது.
வடக்கிலும் கிழக்கிலும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் தமிழ் என்ற மொழியால் இறுக்கமான உறவு - உணர்வுகளைப் பேணிவருவது பௌத்த சிங்கள பேரினவாத அரசியல் தலைமைகளுக்கு ஒரு போதுமே உடன்பாடாக இருந்தது கிடையாது. இந்த உறவு இறுக்கமானால் சிறுபான்மையினரான தமிழ் பேசும் இனத்தவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து ஒரு பெரிய வலிமையான சக்தியாகி சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானதும் ஆபத்தானதுமான ஒரு நிலையை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற அச்சம் சிங்கள அரசியல் தலைமைகளுக்கு சில தசாப்தங்களின் முன்னரே ஏற்பட்டுவிட்டது.
பண்டாரநாயக்கா முதல் - சந்திரிகாவரை சிங்களத் தீவிரவாத தலைவர்களும் காலத்திற்கு காலம் அவர்களின் அரசியல் மற்றும் ஏனைய தேவைகளின் அவசியத்தின் நிமித்தம் தமிழ் அரசியல்வாதிகளிடையே - அவர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி. பிளவுகளை ஏற்படுத்தி, முரண்பாடுகளை வளர்த்ததன் மூலம் சிறுபான்மையின் ஒருமித்த உரிமைக்கான போராட்ட உணர்வை நன்கு திட்டமிட்ட வகையில் சிதைத்தனர்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் தலைமைகளுக்கிடையே பதவிப் போட்டியை ஊக்குவித்து மோதல்களை உருவாக்கியதன் பின்னணியில் சிங்களப் பேரினவாதத்தின் பயங்கரமான கைகள் இருந்தன.
இவையொன்றும் அந்தத் தலைமைகளுக்கு தெரியாத விடயமல்ல. ஆனால் பதவி வெறியும், போட்டியுணர்வும் இன ஒருமைப்பாட்டையே சிதைத்து தங்களுக்குள்ளேயே சந்தி சிரிக்கும் அளவுக்கு அவமானகரமான வகையில் மோதிக்கொள்ளவே வழிவகுத்தது.
இஸ்லாமியத் தமிழ் தலைமைக்குள் எப்படி பேதங்களை உருவாக்கினார்களோ அதே வழியில் தமிழ் தலைமைகளுக்கும் அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இஸ்லாமியத் தலைவர்களுக்குமிடையே எத்தகைய நல்லுறவும் ஏற்படவிடாதும் பார்த்துக் கொண்டார்கள்.
நாட்டின் இனப்பிரச்சினையை இதற்கு அவர்கள் பயன்படுத்திய விதம் ஒரு துரோகத் தனமான சதியாகும்.
முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே இனத்துவ முரண்பாடுகளையும் மோதல்களையும், சமூக விரோத சக்திகளையும், கூலிப்படைகளையும் பயன்படுத்தி, சர்வதேச உளவு அமைப்புக்களின் ஆலோசனைகளுக்கிணங்க சிங்கள அரசியல்வாதிகள், பேரினவாத அமைப்புகளின் அனுசரணையுடன், ஏற்படுத்திய விதம் இரு தரப்பினரிடையேயும் நிரந்தரமான பகைமையுணர்வை விதைப்பதையே இலக்காகக்கொண்டதாகும்.
இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் இதற்கு பலியானவிதம் மிகவும் பரிதாபகரமானதாகும்.
தமிழ் மக்கள் எவ்வாறு திட்டமிட்டு அடக்கி ஒடுக்கப்பட்டார்களோ அதேபோல் ஒரு கட்டம் வரும் போது, இஸ்லாமியத் தமிழர்களையும், மலையகத் தமிழர்களையும் அரசு ஒடுக்கவே செய்யும் என்ற சிந்தனையோட்டமும் தொலைநோக்கு யோசனையும் இரு தரப்பு தலைமைகளுக்கும் இருந்தது கிடையாது.
தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டம் என்பது இஸ்லாமியத் தமிழர்களின் உரிமைகளுக்குமான போராட்டம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவிடாது சிங்கள பேரினவாதம் அவர்களை பதவிப்பதர்களாக்கி விட்டது துயரமான விடயமே.
இன்று கிழக்கில் நடைபெறும் வன்முறைகளின் பின்னணியில் இயங்கும் அரச சார்பு, சமூக விரோத சக்திகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவு ஏற்படுவதை சிதைப்பதையே ஒரே இலக்காகக் கொண்டுள்ளனர் என்பதை இஸ்லாமியத் தலைமைகளும், அடிப்படை மதவாத அமைப்புகளும் சிந்திக்க தவறிவிட்டன.
கிழக்கின் அசம்பாவிதங்களுக்கு விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டும் சந்திரிகாவின் இரத்தக் கறை படிந்த கரங்களின் கொடூரத் தினை உடத்தலவின்ன படுகொலைகளின் போதாவது முஸ்லிம் மக்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இன்று நடைபெறும் வன்முறைகளின் பின்னாலும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் மறை கரம் ஒன்று வேறு சில வெளிச்சக்திகளின் அனுசரணை மற்றும் ஆலோசனையுடன் செயல்படுகிறது என்பது உண்மையாகும்.
இந்த மறைகரம் இனம் காணப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும்.
இந்தநாட்டின் சமாதான முயற்சிகளைச் சிதைப்பதும், விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயல்வதும், தமிழ் - இஸ்லாமியத் தமிழ் மக்களிடையேயான உறவுகளைத் தகர்ப்பதும் தான் இந்த பேரினவாத வழிகாட்டலுடனான மறைகரத்தின் ~திருப்பணி| என்பதை இஸ்லாமியத் தமிழ் தலைமைகள் தமது பதவிப் பற்றின் காரணமாக இனங் காணத் தவறின் - இஸ்லாமியத் தமிழர்களை பெரும் அவலங்களுக்குள் தள்ளி விடும் வரலாற்றுத் தவறை புரிந்த குற்றம் அவர்களுக்குரியதேயாகும்.
நன்றி: ஈழநாதம் 05-12-03
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் அண்மைக் காலமாக ஏற்படும் நல்லுறவை சீர்குலைக்கும் வகையில் திட்டமிட்ட hPதியில் பல அசம்பாவிதங்கள் மேற்கொள்ளப்படுவதை அறியக்கூடியதாகவுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை என தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் படுகொலை செய்யும் ஒருவித திட்டமிட்ட நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.
இத்திட்டமிட்ட நடவடிக்கைகளை பெருமளவில் புலிகள் மீது பழி சுமத்தும் ஒரு ஆபத்தான செயற்பாடும் வெளிப்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் திருமலையில் ஒரு கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு முஸ்லிம்களும், கிண்ணியாவில் வயற்காவலுக்குச் சென்ற மூன்று முஸ்லிம்களும் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டதையடுத்து அங்கு பெரும் பதட்ட நிலை காணப்பட்டது.
இது இவ்வாறு இருக்க, இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம் பொதுமக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையும் நாம் நினைவில் கொள்ளலாம்.
இவ்வாறான படுகொலை செயற்பாட்டை மேற்கொள்ளும் குழு யார் என்பதை இதுவரை இனம் காணமுடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
ஆனால் இந்த செயற்பாடுகளையடுத்து முஸ்லிம் காடையர்களில் சிலரை ஏவி தமிழ் மக்களை தாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனை அவதானிக்கும் போது தமிழ் - முஸ்லிம் மக்களுக்கிடையில் ஒரு மோதலை து}ண்டும் ஒரு குழுவின் செயற்பாடு என்பதையும் அந்த குழுவிற்கு இன்னும் இந்த செயற்பாட்டில் வெற்றி கிட்டவில்லை என்பதையும் எவரும் இலகுவில் புரிந்துகொள்ளலாம்.
இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களே பரவலாக பேசிக் கொள்ளும் அளவிற்கு முஸ்லிம் குழுவொன்றே இத்தாக்குதல்களின் பின்னணியில் இருப்பதாகவும் அந்த குழுவிற்கு முஸ்லிம் அரசியற் கட்சிகளின் ஆதரவும், அனுசரணையும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த முஸ்லிம் கட்சியும் அந்த கட்சியில் இருக்கும் சில அரசியல் தலைவர்களும் இந்த மோதலைத் து}ண்டிவிட்டு பின்னர் தாங்கள் முன்வந்து அதனைத் தங்களது தலையீட்டின் மூலமே தணிக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடுகளைக்காட்டி அரசியல் இலாபம் தேட முயல்கின்றனர்.
ஆனால் இந்த ஆபத்தான அரசியல் நாடகத்தில் அப்பாவி முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களுமே கொல்லப்படுகின்றனர்.
இதனை முஸ்லிம் மக்கள் சரியான வகையில் இனம் கண்டு கொள்ளாதபட்சத்தில் அவர்கள் பெரும் ஆபத்தை எதிர் கொள்ளப்போவதோடு கிழக்கு மாகாணத்தில் அமைதி என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது.
இந்த நிலையில் அண்மைக்காலமாக முஸ்லிம் இளைஞர்கள் தமது சுயபாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்தவேண்டும் என்ற கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.
இதனை குறிப்பிட்ட முஸ்லிம் கட்சியும் அதில் உள்ள குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுமே இதனை வெளிப்படுத்துகின்றனர். இவையெல்லாம் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களின் பின்னணியோடு தொடர்புபட்டதாக இருக்குமோ என்ற ஐயமும் பரவலாக பல்வேறு தரப்பினரிடமிருந்து எழுப்பப்படுகிறது.
இவை கிழக்கு மாகாணத்தை பல்வேறு துண்டுகளாக கூறு போடத்துடிக்கும் சிங்கள பேரினவாதிகளின் செயற்பாடு களை அங்கீகரிப்பவர்களின் வேலையென்பதை முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் தெளிவாகவே கிழக்கில் புரிந்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் நல்லுறவை சீர்குலைக்கும் குழுக்களை இனம் கண்டு கிழக்கு மாகாணத்தில் அமைதிநிலை ஏற்பட தமிழ் மக்களோடு சேர்ந்து முஸ்லிம் மக்கள் பாடுபடவேண்டிய தேவை உள்ளது.
ஏனென்றால் புலிகளால் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் புலிகள் முஸ்லிம் கட்சிகளோடு மட்டுமல்லாது, முஸ்லிம் மதத்தலைவர்க ளோடும் முஸ்லிம் பிரமுகர்க ளோடும் பல சந்திப்புக்களை மேற்கொண்டு ஏற்படுகின்ற சிற்சில பிணக்குகளும் தீர்வு கண்டு வருகின்றனர்.
இவ்வாறான சந்திப்புக்களின் போது புலிகள் முஸ்லிம் அரசியல் கட்சி பிரமுகர்களோடு நடத்திய சந்திப்புக்களில் காணப்பட்ட இணக்கப்பாடுகளை விட முஸ்லிம் மதத்தலைவர்களோடும் பிரமுகர்களோடுடனானதுமான சந்திப்புக்களின்போது ஏற்படுகின்ற இணக்கப்பாடுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியிருந்தன. இவையெல்லாம் கிழக்கு மாகாணத்தில் பல தாக்கங்களை வைத்துக்கொண்டு, அரசியல் நடத்துபவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இவையும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அனர்த்தங்களுக்கு காரணம்.
இவ்வாறுதான் முன்னர் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் அம்பாறையில் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்ட போது அதனை புலிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டதோடு, பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் பின்னர் அந்த கடத்தல் பின்னணியில் முஸ்லிம் குழுவினரின் சம்மந்தம் இருப்பதாக புலன் விசாரணைகளில் தெரியவர அப்படியே அந்த கடத்தல் நாடகம் கைவிடப்பட்டது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் நடைபெறும் அசம் பாவிதங்களின் பின்னணியில் பெருமளவு முஸ்லிம் குழுக்களும், அதனை ஊக்குவித்தவாறு சிங்கள பேரினவாதிகளும் இருப்பதும் பலமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனை சரியாக புரிந்து கொள்ளாது தமிழ் மக்கள் மீதும், புலிகள் மீதும் குற்றம் சுமத்துபவர்கள் உண்மைகளை புரிந்து கொள்ளவேண்டும், புரிந்து கொள்வார்களா?
நன்றி: ஈழநாதம் 05-12-03
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தொப்பிகள் எத்தனை தொப்பிகள் ?
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு இலாபம் என்பார்கள். சிங்களவர்களும் - தமிழர்களும் இரண்டு பட்டால் முஸ்லிம்களுக்கு இலாபம். முஸ்லிம்கள் என்று சொல்லும்போது முஸ்லிம் பொதுமக்களை நான் குறிப்பிடவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளையே குறிப்பிடுகிறேன்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் முஸ்லிம்களை அமைச்சராகக் கொள்ளாதஅமைச்சரவை இருந்ததே இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி இவைதான் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியை மாறி மாறிப் பிடித்து வந்திருக்கின்றன. அந்த நாள் தொட்டு இந்த நாள்வரை இந்த இரண்டு கட்சிகளிலும் முஸ்லிம்கள் அங்கம் வகித்து வந்திருக்கிறார்கள். இதனால் இதில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு கட்சிகளிலும் முஸ்லிம்கள் நிரந்தரமாக இருப்பதில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கூடுவிட்டுக் கூடுபாய்கிற விக்கிரமாதித்தன்போல மாறி மாறி முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி தாவி இருந்திருக்கிறார்கள்.
எடுத்துக் காட்டுக்குச் சொல்லவேண்டும் என்றால் எம்.எச். மொகமது அலி மூதூர் தொகுதியில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டிலும் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குப் போயிருக்கிறார். இரண்டுமுறை தமிழரசுக் கட்சி சார்பில் நின்றும் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலத்தில் முஸ்லிம்கள் பெருமளவில் அதில் இணைந்திருந்தார்கள். 1956ல் கல்முனையில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட முதலியார் எம்.எஸ். காரியப்பர் வெற்றி பெற்றார். அவரைப்போல அவரது மருமகள் எம்.எம். முஸ்தாபா நிந்தாவுூரில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்த வெற்றியைக் கொண்டாட கொழும்பு நகரசபை மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதலியார் காரியப்பர் மற்ற முஸ்லிம்களைப் போலல்லாது தான் தொப்பி பிரட்ட மாட்டேன் என்று தலையில் இருந்த தொப்பியைச் சுட்டிக் காட்டிப் பேசி பெரிய கையொலியைப் பெற்றுக் கொண்டார். ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து அவர் ஆளும் கட்சிப் பக்கம் நாலுகால் பாய்ச்சலில் தாவி விட்டார். அவரைப் பின்பற்றி அவரது மருமகள் முஸ்தாபாவும் கட்சி தாவினார்.
தமிழரசுக் கட்சியில் நெடுங்காலம் நிண்டு பிடித்தவர் ஜனாப் மசூர் மவுலான. தமிழரசுக் கட்சி சார்பில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்டு பலமுறை தோல்வி கண்டவர். ஆனால் அவரும் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமமாகி கோட்டல் கூட்டுத்தாபனத்தில் உப தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்டார்.
இவற்றை குறையாக நான் சொல்லவில்லை. நடந்தவற்றை இளைய தலைமுறையினருக்காக பதிவு செய்கிறேன். அவ்வளவுதான். ஆனானப்பட்ட "சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை" 1977ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் புகுந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சிக்குத்தாவி அமைச்சரானார். அவருக்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனா தேர்தல் சட்டத்தையே திருத்தினார். எதிர்க்கட்சியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சிக்கு தாவலாம். ஆனால் ஆளும் கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கு தாவமுடியாது. தாவினால் அவர் தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார். தர்மிஷ்டர் ஜே.ஆரின் "நீதி" இது!
1988ல் நடந்த பொதுத் தேர்தலில் இராசதுரை கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார். அதனாலென்ன. ஒன்றும் கெட்டுப் போகவில்லை.ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவருக்கு தூதுவர் பதவி கொடுத்து மலேசியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆங்கிலம் தெரியாமல் அவர் என்ன பாடுபட்டாரோ அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
1970ம் ஆண்டு பதியுதீன் மொகமது சிறீலங்கா கட்சி அமைச்சரவையில் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர்தான் தமிழ்மாணவர்களது உயர் கல்விக்கு எதிரான தரைப்படுத்தலை அமுல்படுத்திய புண்ணியவான். அவர் காலத்தில் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியெய்திய முஸ்லிம் மாணவர் எவருக்கும் வேலை இல்லை என்ற பிரச்சினையே இருக்கவில்லை. எல்லோருக்கும் தமிழ் ஆசிரியர் வேலை போட்டுக் கொடுத்தார்! ஏற்கனவே ஆசிரியர்களாக இருந்தவர்கள் பள்ளிக் கூட அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கு உயர்த்தப்பட்டார்கள். கல்வி அமைச்சில் பார்த்த இடமெல்லாம் நீக்கமற முஸ்லிம் அதிகாரிகள் நிறைந்திருந்தார்கள்! பலாலி, கோப்பாய் தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் நூற்றுக்கு தொண்ணுhறு விழுக்காடு முஸ்லிம் மாணவர்கள். "காக்காவுக்கு காக்கா செய்யாமல் வேறு யார் செய்யப் போகிறார்கள்" இதுதான் அமைசர் பதியுதீன் அவரது கொள்கையாக இருந்தது. அதனை ஒளிக்காமல் போகிற வருகிறவர்களிடம் வெளிப்படையாகச் சொன்னார்.
அமைச்சர் பதியுதீன் மொகமது கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் இலாபம் அடைந்த ஒரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு முதலாவது எம்.பி. செ. இராசதுரை. இரண்டாயிரம் மூவாயிரம் என்று வாங்கிக் கொண்டு சில கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு ஆசிரிய நியமனங்கள் பதியுதீன் மொகமதுவிடம் இருந்து வாங்கிக் கொடுத்தார். இவையெல்லாம் பழைய குப்பை. கிளறினால் அப்புறம் மூக்கைப் பிடிக்க வேண்டிவரும்.
மக்கள் முன்னணி அரசில் துறைமுகம் கப்பல் போக்குவரத்து அமைச்சராக இருப்பவர் எம்.எச்.எம். அஷ்ராப். அவரது முழுப் பெயர் முகமது குசேன் முகமது அஷ்ரப். சட்டத்தரணி. அவர் அமைச்சராக இருந்த கடந்த ஆறு ஆண்டுகளில் முஸ்லிம் மக்களது வேலையில்லாப் பிரச்சினையை பெருமளவு தீர்த்து வைத்துவிட்டார்.
அவர் அமைச்சின் கீழ் வரும் கொழும்பு துறைமு அதிகார சபையில் ஐயாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களை வேலையில் அமர்த்தி இருக்கிறார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சில தமிழர்கள் கூட முஸ்லிம் பெயர்களில் வேலையில் சேர்க்கப்பட்டார்கள். இது பிற்பாடு கண்டு பிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
கடந்த இரண்டுவாரமாக இவர் நடித்த நாடகம் பற்றியே கொழும்பில் இருந்து வெளியாகும் நாள், கிழமை ஏடுகள் இவற்றின் முன்பக்கச் செய்தியாக இருந்தன. சாதாரணமாக அரசியல் செய்திகளை சரியாகக் கணித்து எழுதும் "நம்நாடு" கொழும்பு முகவர் கடந்த வாரம் அஷ்ரப்பையும் அவரது முஸ்லிம் காங்கிரஸ்பற்றியும் எழுதும்போது கோட்டை விட்டு விட்டார். "சவால்விட்டபடியே அரசியல் கூட்டை முறித்தார் அஷ்ரப்! தனித்துப் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ்" என்பதுதான் அவர் எழுதிய செய்திக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு! பாவம். அவர் என்ன செய்வார். மெக்காவில் இருந்து நாடு திரும்பிய அஷ்ரப் விமானநிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த குண்டுதுளைக்காத உத்தியோக வண்டியை திருப்பி அனுப்பி விட்டு அவரது சொந்த வண்டியில் வீட்டுக்குப் போனார். அவரது மெய்பாதுகாப்பாளர்களுக்கும் கல்தா கொடுத்தார். மெக்காவுக்குப் போகுமுன் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக 22 பக்கக் கடிதத்தைக் கொடுத்த கையோடு அஷ்ரப் உத்தியோக வதிவிடத்தையும் காலி செய்து விட்டார். மெடினாவில் உம்றா யாத்திரையை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் அஷ்ராப் மீண்டும் 50 பக்கங்களில் ஒரு சூடான கடிதத்தை சனாதிபதி சந்திரிகாவுக்கு எழுதினார். அதில் சிறீலங்கா முஸ்லிம் கட்சிதான் நாட்டில் மூன்றாவது பெரிய கட்சி என்றார். தனது கட்சியின் ஆதரவின்றி மக்கள் முன்னணி ஆட்சிக் கட்டில் ஏற முடியாதென்றார். "அம்மணி நீங்கள் பிரபாகரனை மேசைக்கு அழைத்துப் பேசி அரசியல் தீர்வொன்றைக் கண்டாலும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவின்றி நீங்கள் சமாதனத்தை அடைய முடியாதென்று ( ஆயனயஅஇ நஎநn கை ஆச. Pசயடிhயமயசயn உழஅநள வழ வாந நெபழவயைவiபெ வயடிடநஇ வாந அரஉh-றயவெநன pநயஉந உயnழெவ டிந யஉhநைஎநன றiவாழரவ வாந ஆரளடiஅ உழஅஅரnவைல கரடடல வாசழறiபெ வைளநடக றiவா லழர யனெ ளவசநபெவாநniபெ லழரச உயரளந யனெ அளைளழைn) சனாதிபதி சந்திரிகாவை மிரட்டினார். எல்லாவற்றிற்கும் மேலாக அமைச்சர் பவுசியை அமைச்சரவையில் இருந்து தூக்காவிட்டால் தனது கட்சி மக்கள் முன்னணியோடு வைத்திருக்கிற கூட்டணியை உடைத்துக் கொண்டு தனித்துப் போட்டியிடும் என்றும் சவால் விட்டார்.
இப்படியெல்லாம் அவர் எகிறிக் குதித்ததைப் பார்த்த யார்தான் அவர் தனது விலகல் கடிதத்தை திருப்பிப் பெறுவார் என்றோ, வாலைச் சுருட்டி காலுக்குள் வைத்துக் கொண்டு மக்கள் ஐக்கிய முன்னணியில் போட்டியிடச் சம்மதிப்பார் என்றோ எதிர்பாத்திருக்க முடியும் ? ஆனால் அஷரப்பின் அரசியல் வாழ்க்கையை அவதானித்து வந்தவர்களுக்கு அவரது அரசியல் குத்துக்கரணங்களையிட்டு ஆச்சரியப்பட மாட்டார்கள்.
இவரது பிறந்த ஊர் அம்பாரை மாவட்டத்தைச் சார்ந்த சம்மான்துறை. பிறந்த திகதி 1948ம் ஆண்டு ஐப்பசி 23. மூன்று பெண்கள் ஒரு ஆண் அடங்கிய குடும்பத்தில் ஒரே ஆண் வாரிசு. தகப்பன் ஒரு விதானையார். "காரியப்பர் குடும்பம்" என அழைக்கப்படும் இந்தக் குடும்பம் அன்றைய கண்டி அரசர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குடும்ப உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல கிராமங்களின் தலையாரிகளாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988ம் ஆண்டில் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளுடனும் தேர்தல் உடன்படிக்கை செய்துகொண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டி போட்டுள்ளது. 1977ல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் வெற்றிக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரப்புரை செய்தது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை. "அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை வென்றெடுக்கத் தவறினாலும் நான் தமிழீழத்தை வென்றெடுப்பேன்" என அஷ்ராப் மேடைகளில் மார்தட்டினார். இப்படி மேடைகளில் முழக்கம் செய்வது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.
1988ம் ஆண்டு நடந்த சனாதிபதி தேர்தலில் அஷ்ராப்பும் அவரது முஸ்லிம் காங்கிரசும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளாரான ரணசிங்க பிரேமதாசாவை ஆதரித்தது. அப்போதெல்லாம் "பண்டாரநாயக்க" என்ற வார்த்தை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் கெட்ட வார்த்தையாகக் கணிக்கப்ட்டது. எழுபதுகளில் பிரதமர் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கா, கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமது, அலாவி மவுலானா புடைசூழ காத்தான்குடிக்கு வருகை தந்தபோது அவர்கள் மீது கல்லுகள் வீசப்பட்டது. கல்வீசியவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
ஒரு கட்டுரையாளர் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் பற்றி அண்மையில் எழுதும்போது அவர் மூன்று தொப்பிகளை வைத்திருப்பதாகச் சொன்னார். ஒன்று அவர் தலையில் போட்டுக் கொள்வததற்கு. மற்றது அரசியல் வளையத்தில் எறிவதற்கு. மூன்றாவது அவர் பேசுவதற்கு ( ஆங்கிலத்தில் ஒருவர் அர்த்தம் இல்லாமல் பேசினால் ர்ந ளை ளிநயமiபெ வாசழரபா hளை hயவ என்று சொல்வது வழக்கம்).
அஷ்ராப் தனது அரசியல் வாணிபத்திற்கு ஏழை முஸ்லிம்களின் வாக்குகளையும் பணக்கார முஸ்லிம்களின் நன்கொடைகளையும் நம்பி இருக்கிறார். அண்மையில் கொழும்பில் வாழும் கொழுத்த செல்வந்தரும், வணிகரும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டோடும் நேற்றுவரை கூடிக்குலாவிக் கொண்டிருந்தவருமான ஏ.ஜே.எம். முஸாமில் என்பவரை அஷ்ரப் தூண்டில் போட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு இழுத்துப் போட்டு விட்டார். இந்த இழுப்புக்கு முஸாமில் தலையில் இருக்கும் மூளையைவிட மடியில் இருக்கும் பணம்தான் முக்கிய காரணி என்பது சொல்லாமலே விளங்கும். முஸாமில் இப்போது முஸ்லிம் காங்கிரசின் இன்னொரு முகமான தேசிய ஒற்றுமை முன்னணி (யேவழையெட ருnவைல யுடடயைnஉந (Nருயு)) சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
கொழும்பில் நடந்த தேசிய ஒற்றுமை முன்னணியின் மாநாட்டுக்கு அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய சரத் கொன்கககேயை வந்திருந்தார். உடனே அவரைக் கட்டிப் பிடித்து உறவு கொண்டாடிய அஷ்ரப் அவரை முன்னணியின் உப தலைவராக அஷ்ரப் நியமித்தார். இவர் ஒரு சிங்கள-பவுத்த தீவிரவாதி. தமிழருக்கு எதிராக விஷம் கக்குவதில் பெரிய வல்லுனர். ஆனால் இருபத்து மணித்தியாலங்கள் கழித்து கொன்கககே மக்கள் ஐக்கிய முன்னணியில் போய்ச் சேர்ந்து விட்டார்! இந்த சம்பவம் அமைச்சர் அஷ்ரப் எந்தப் பிசாசோடும் சேரத் தயாராக இருப்பதைக் காட்டுகிறது அவருக்கும் அவரது கட்சிக்கும் கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. பதவி ஒன்றிலேயே குறி.
அஷ்ரப் கட்சிக்குள் சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் என கட்சி வட்டாரங்களில் முணுமுணுப்பு இருக்கிறது. அதனை உறுதிப்படுத்துவது முஸாமில் அவர்களது மைத்துனர் எம்.எம். சுகீர், அபுூபக்கர், டாக்டர் ஐ.எம். இலியாஸ் (யாழ்ப்பாண மாவட்டம்) இந்த மூவருக்கும் அஷ்ராப் கட்சியிலிருந்து கல்தா கொடுத்திருக்கிறார். இவர்கள் மூவரும் அண்மையில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் உறுப்pனர்களாக இருந்தவர்கள். தன்னை யாரும் அசைக்க முடியாது என்று திமிரோடு பேசுகிறார். குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் எந்தக் கொம்பனும் தன்னை நெருங்க முடியாது என்கிறார். ,அதனை நிரூபிப்பதுபோல வரப்பத்தான்சேனையில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் சேகு இசத்தீன் ஆதரவாளர் இருவர் சிறீலங்கா முஸ்லிம் கட்சி ஆதரவாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்! வேட்புமனு தாக்கல் செய்து விட்டு சேகு இசத்தீன் தனது ஆதரவாளர்களுடன் அக்கரைப்பற்றுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கல்முனை, காரதீவு போன்ற கிராமங்களில் தமிழர்களது கடை கண்ணிகளை கொள்ளையடித்து வீடு வாசல்களுக்கு தீயிட்டுக் கொளுத்தியவர்கள் முஸ்லிம் கட்சி ஆதரவாளர்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
அடுத்த அமைச்சரவையில் இரண்டு முழு அமைச்சர் பதவிகளையும் இரண்டு அரை அமைச்சர் பதவிகளையும் சனாதிபதி சந்திரிகாவோடு அஷ்ரப் பேரம் பேசி இப்போதே வாங்கிப் போட்டார் எனக் கதை அடிபடுகிறது. மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றி பெறாவிட்டால்? பாய்ச்சலில் வீரராhன அஷ்ரப்புக்கு இருக்கவே இருக்கிறது ரணில் விக்கிரமசிங்காவின் ஐக்கிய தேசியக் கட்சி! அது போனால் இது. ஒன்று போனால் மற்றது. பதவியென்றால் யாருக்கும் எவருக்கும் ஊழியம் செய்ய அவர் காத்திருக்கிறார்.
சும்மா சொல்லக் கூடாது அமைச்சர் அஷ்ரப் காட்டில் இப்போது பலத்த மழை பெய்கிறது. ஒன்றுக்கு மூன்று தொப்பிகள் வைத்திருக்கும் அவரை யாரும் எதுவும் செய்ய முடியாது.
(ளுநிவ 2000) வேலுப்பிள்ளை தங்கவேலு
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கச்சதீவை இழந்த தமிழனே! கச்சையையும் இழந்தாயோ?
"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நற்பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை" என்பது தமிழில் வழங்கும் நூற்றுக்கணக்கான பொருள் பொதிந்த பழமொழிகளில் ஒன்று. அது எல்லோருக்கும் தெரிந்த பழமொழியும் கூட. தமிழக முதல்வர் முத்துவேலர் கருணாநிதிக்கு அது தெரியாதிருக்க நியாயமில்லை.
இன்று நேற்றல்ல ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக பாக்கு நீரணையில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்லப்பட்டு வருகிறார்கள். அப்படிச் சுடப்பட்டோரின் எண்ணிக்கை முந்நூற்றை இதுவரை தாண்டியிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளில் 788க்கும் மேற்பட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
1983ம் ஆண்டிற்கும் 1994ம் ஆண்டு ஆனிமாதத்திற்கும் இடையில் தமிழக மீன்பிடிப் படகுகள் மீது 355 முறை சிறீலங்கா கடற்படை தாக்குதல் நடாத்தியுள்ளது. ஐம்பத்தொன்பது (59) படகுகள் எரிக்கப்பட்டன அல்லது நாசமாக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் தமிழக மீனவர்கள் மொத்தம் 93 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.
கொந்தளிக்கும் கடலில், காற்றைக் கிழித்து, மழையில் நனைந்து, வெய்யிலில் காய்ந்து நம்பிக்கை ஒன்றையே துணையாகக் கொண்டு சாவுக்கும் வாழ்;வுக்கும் இடையில் வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள் இயற்கையின் சீற்றத்தினாhல் ஏற்படும் அழிவுகளை மட்டும் அல்லாமல் செயற்கையான அழிவுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு முறையும் நடுக்கடலில் வைத்து தமிழக மீனவர்களை சுட்டுத் தள்ளும் சிறீலங்கா கடற்படை "" தமிழக மீனவர்கள் எல்லை மீறி எங்கள் கடற்பரப்புக்கள் வந்தார்கள். சுட்டோம்"" என்று திமிரோடு சொல்லிவிடுகிறது.
பாக்கு நீரணையில் இந்திய -இலங்கைக் கடற்பிரதேசத்தைப் பிரிக்க ஏதோ வேலி போட்டிருப்பது போலவும், அந்த வேலி தாண்டி இந்த மீனவர்கள் சென்றது போலவும் சிறீலங்காக் கடற்படை நடந்து கொள்கிறது.
இப்படி நடுக்கடலில் நடக்கும் தாக்குதல்கள், கொலைகள்பற்றி கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் கவலைப்படுவதோ கண்டுகொள்வதோ இல்லை. இந்தியக் கடற்படை எந்தவிதத்திலும் இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லை.
தில்லி அரசோ முற்றாகக் கண்டு கொள்வதில்லை. சாகிறவர்கள் தமிழர்கள். சாதாரணமாகவே தமிழ்நாட்டுக் காரர்கள் என்றாலே வடக்கில் இருக்கும் இந்திக்காரனுக்கு இளப்பம் அதிகம். . அதிலும் சாகிறவர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் வசதி வாய்ப்பற்ற வறிய மீனவர்கள் என்றால் தில்லியில் இருப்பவர்கள் ஏன் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?
இந்தக் கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் என்று போராட்டங்கள் நடாத்தி இராமேசுவரம், நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதி மீனவர்கள் களைத்தே போனார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் உறுதி மொழிகள் சில வழங்கப்பட்டாலும் அந்த உறதி மொழிகள் பின்னர் காப்பாற்றப்படுவதில்லை.
கடந்த தை மாதம் 3 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 11 தமிழக மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்கள் வழக்கம்போல் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள். அதில் ஒரு மீனவர், பெயர் இராசா, நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானார். அவருக்கு உரிய நேரத்தில் போதிய சிகிட்கை அளிக்கப்படாத காரணத்தாலேயே அவர் இறந்துபட நேர்ந்தது என்று எஞ்;சிய மீனவர்கள் கூறினார்கள். இராசா நெஞ்சுவலியால்தான் இறந்தார் என்று இந்தியத் தூதுவரும் சிறீலங்கா சிறைச்சாலை அதிகாரிகளோடு ஒத்தூதினார். விடயம் அத்தோடு முடிந்து விட்டது. இறந்த மீனவரது குடும்பத்திற்கு சிறீலங்கா அரசிடம் இருந்து இழப்பீடு எதனையும் இந்தியத் தூதுவர் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை. அப்படியொரு முயற்றி செய்ததாகக்கூடச் செய்தி வரவில்லை.
சிறையில் வாடும் எஞ்சிய 10 மீனவர்களையும் விடுதலை செய்யக் கோரியும் அவர்கள் சென்ற விசைபடகுகளைத் திரும்பத் தருமாறும் கேட்டு இராமேசுவரம் மீனவர்கள் இரண்டு நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டார்கள். ஆனால் பலன் என்னவோ வட்டந்தான்.
இந்நாள்வரை இந்தப் பத்து மீனவர்களும் சிறீலங்காவின் கொடிய சிறைக்கூடத்தில் நாளும் பொழுதும் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மிக அண்மையில், சரியாகச் சொன்னால் சித்திரை 25ம் நாள் தமிழக மீனவர்கள் அறுவர் இலங்கைக்குச் சொந்தமான கடற்பகுதியில் எல்லை மீறி நுளைந்தார்கள் என்பதைக் காரணம் காட்டி காட்டுமிராண்டித்தனமான முறையில் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள். சுட்டுக் கொலை செய்யப்பட்டதோடு சிறீலங்கா கடற்படை அமைதி அடையவில்லை. அவர்கள் சென்ற படகையும் நாசம் செய்தது.
குமார், முனுசாமி, அஞ்சப்பன் என்று அழைக்கப்பட்டவர்களே சிறீலங்காக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நடுக்கடலில் பலியாகிய அப்பாவித் தமிழர்கள் ஆவர்.
எஞ்சிய வேலுச்சாமி, அரிச்சந்திரன், சந்திரசேகரன் என்ற மூவரும் படுகாயம் பட்டு மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். அவர்களது உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பிட்ட மீனவர்கள் எல்லை மீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் புகுந்தார்கள் என்று சொன்னால் அவர்களை கைது செய்வதுதானே? அவர்களை காகம் குருவி சுடுவதைப்போல் சுட்டுக் கொல்ல எந்த நாட்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?
அதிசயம் என்னவென்றால் இம்முறை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கொஞ்சம் விழித்துக் கொண்டு இந்தப் படுகொலையைக் கண்டித்துள்ளார்கள். திரு. வீரமணியின் தலைமையிலான திராவிடர் கழகம் இந்தப் படுகொலையைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்கு செய்யதுள்ளது.
இதைவிட மிகப் பெரிய உலக அதிசயம் என்னவென்றால் தமிழக முதல்வர் கருணாநிதியும் சிறீலங்கா அரசு தமிழக அரசின் பொறுமையைச் சோதிப்பதாக திருவாய் மலர்ந்துள்ளார். "அத்து மீறி நுழைந்தால் கைது செய்வதுதானே? சுடச் சொல்லி எந்தச் சட்டம் சொல்கிறது" என்று முதல்வர் சூடாகக் கேள்வி எழுப்பி உள்ளார்.
இப்படி "சிறீலங்கா அரசு தமிழகத்தின் பொறுமையை சோதிப்பதாகவும், இப்படியான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்றால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்" என்று மனோகரா, பராசக்தி பாணியில் முதல்வர் கருணாநிதி பேசுவது இதுதான் முதல் தடவை அல்ல. அவ்வப்போது இப்படி வீரவேசமாகப் பேசுவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது.
முதல்வர் கருணாநிதிக்கு சூடு சொரணை இருக்குதோ இல்லையோ இப்படி தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து சிறீலங்காவின் சிங்களக் கடற்படையினரால் காக்கை குருவிபோல் சுடப்பட்டு கொலைசெய்யப்படுவதைப் பார்க்க உலகளாவிய தமிழர்களுக்கு அவமானமாக இருக்கிறது.
சிறீலங்கா ஒரு சுண்டக்காய் நாடு. விடுதலைப் புலிகளிடமே சிறீலங்காவின் கடற்படை உட்பட முப்படையும் கும்பிடக் கும்பிட அடிவாங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நூறு கோடி மக்களைக் கொண்டதும் உலகத்தின் 4வது பெரிய இராணுவத்தையும் உடைய இந்தியாவின் பெருங்குடி மக்கள் ஒரு சுண்டங்காய் அளவு பருமனுள்ள சிறீலங்காவின் கடற்படையினரால் கேட்டுக் கேள்வியின்றி சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்.
ஒருவிதத்தில் இந்திய அரசு சிறீலங்காவிடம் தடியைக் கொடுத்து அடியை வாங்கிக் கொண்டிருக்கிறது.
தமிழக இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமான கச்சதீவை சிறீலங்காவின் அன்றைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவிற்கு சொந்த நட்புக் காரணமாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தாரைவார்த்துக் கொடுத்த காரணத்தாலேயே இன்று இந்திய மீனவர்கள் கச்சதீவையொட்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க முடியாமல் இருக்கிறது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் முன்னர் இருந்து கடல் எல்லை கச்சதீவு பறிபோனதன் காரணமாக சுருங்கி விட்டது.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது கி.பி. 1450 ம் ஆண்டில் ஏற்பட்ட பயங்கர கடல் கொந்தளிப்பால் தமிழகத்தின் தென்பகுதி கடலில் மூழ்கின. இப்படித் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்ட பிரதேசத்தில் கச்சதீவு உட்பட 11 தீவுகள் உருவாகின. இப்படித் தோன்றிய தீவுகள் எல்லாம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன.
கச்சதீவு இராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையில் இருந்து 13 மைல் தொலைவிலும் இருக்கிறது. கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரைமைல் தூரமும் கொண்டதாக இருந்தாலும் அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் நிறைந்ததாக உள்ளது.
1974ம் ஆண்டு கைச்சாத்தான ஒப்பந்தத்தின்படி கச்சதீவு சிறீலங்காவிற்குத் தாரை வார்க்கப்பட்டாலும் அதனை அண்டிய பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்று விதி அந்த ஒப்பந்தத்தில் காணப்பட்டது. மீனவர்கள் மட்டுமல்ல தமிழக யாத்திரியர்களும் செல்லலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த விதி பின்னர் நீக்கப்பட்டது. 1976ம் ஆண்டு எழுதப்பட்ட ஒப்பந்தந்தின்படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.
கச்சதீவு சிறீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க எதிர்த்தது. அப்போது முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை மைய அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.
1990ம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்" என்ற முழகத்தை முன்வைத்தது. 1991ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சபதம் செய்தார்.
1991ம் ஆண்டு ஐப்பசி 4ம் நாள் தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவை சிறீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை.
கலைஞர் கருணாநிதி பதவி இழந்து எதிர்கட்சி இருக்கைகளில் இருக்க நேரிட்டபோது கச்சதீவை மீட்கும் போராட்டம்பற்றி அவ்வப்போது அறிவித்தார். அறிவிப்போடு சரி. மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் கச்சதீவுப் பிரச்சினையை கலைஞர் கருணாநிதி முற்றாகக் கிடப்பில் போட்டு விட்டார். இதுதான் தமிழனது கச்சதீவு சிங்களவனது தீவாக மாறிய சோகக் கதை.
கச்சதீவை சிறீலங்காவிடம் இருந்து மீட்கும்வரை இராமநாதபுரம், நாகபட்டினம், வேதாரணியம் போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்களுக்கு பாக்கு நீரணையில் பாதுகாப்பு அடியோடு இல்லை.
இப்போது மாநிலத்தில் மட்டும் அல்ல. மத்தியிலும் திமுக, பாமக, மதிமுக போன்ற கட்சிகள் பதவி வகிக்கின்றன. கச்சதீவை சிறீலங்காவிடம் இருந்து மீளப்பெறவேண்டும் என்று கலைஞர் கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழர்களது எஞ்சியுள்ள மானத்தை காப்பாற்ற இதுவே நல்ல சமயம். இதனை நழுவவிடக்கூடாது. இல்லாவிட்டால் அவரது வீர வசனங்களில் அர்த்தமே இல்லை. கச்சதீவை இழந்த தமிழனே! கச்சையையும் இழந்தாயோ?
" நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி
வஞ்சனை சொல்வாஎ ரடி- கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி! "
என் அருமைச் செல்வமே! உன் தந்தையின் நன்மைக்குத்தான் உன் வீரக்கரங்களைக் கட்டிப் போட்டேன்! இந்த விசமக்காரி முன் சிரம் தாழ்த்தி நின்றேன்! யாருக்காக?
பொறுமை பொறுமை என்று சொல்லி வந்தேனே அவரையே சிiறியில் போட்ட பிறகு பொறுமைக்கு எங்கிருக்கிறது பெருமை? என் அருமை மனோகரா பொறுத்தது போதும்! பொங்கி எழு!
தாயின் ஆணை கிடைத்து விட்டது! புறப்படு மனோகரா புறப்படு!
மகாராசா எங்களுடைய குடும்பம் எப்படிச் சீரழிந்து விட்டது என்பதைப் பார்த்தீர்களா? கட்டுண்டு தவிக்கும் மனோகரனைப் பாருங்கள் மகாராசா?
ஹா! .....ஹா! ...ஹா!
ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மானிட உருவில் வந்து இந்த மண்ணை வளைக்க வந்த மாபாபிகளே!
இப்படிச் சிரித்தவர்கள் வாழ்ந்ததில்லை! அழுதவர்கள் கெட்டதில்லை! என்று ஜெகம் சொல்லும் மந்திரத்தை மறந்து விட்டீர்களா? செப்படி வித்தையால் செங்கோலை முறியடிக்க வந்த சிறுநரிக் கூட்டமே!
கண்ணீரின் மகிமையை உணர முடியாத கயவர் கும்பலே!
நடிகை கண்ணாம்பாவின் நீண்ட முழக்கத்தின் ஒரு பகுதியைத்தான் நினைவுப் பெட்டகத்தில் இருந்து மீட்டு முடிந்த மட்டும் மேலே தந்திருக்கிறேன்.
மனோகரா திரைப்படத்தில் இடம்பெறும் கலைஞர் கருணாநிதியின் இந்;த அனல் தெறிக்கும் வீர வசனங்களுக்கு இப்போது என்ன வந்தது என்ற கேள்விக் கணையை எனக்கு நீங்கள் வீசுவது தெரிகிறது. இதையும் படியுங்கள். அதன்பின் காரணம் தானகப் புரியும்.
"மடிந்தாள் உன்மகன் களத்தில்" என்றான்
மனம் ஒடிந்து நிமிர்ந்தான் தாய்க் கிழவி ஒருமுறை!
"தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு,
களமும் அதுதான்!
காயம் மார்பிலா? முதுகிலா?
கழறுவாய்" என்றாள் - முதுகில் என்றான்!
கிழவி துடித்தனள், இதயம் வெடித்தனள்,
வாளை எடுத்தாள்,
முழவு ஒலித்த திக்கை நோக்கி
முடுக்கினாள் வேகம்!
"கோழைக்குப் பால் கொடுத்தேன்"
குப்புற வீழ்ந்து கிடக்கும்
கோழைக்குப் பேர் போர்வீரனா?
முன்பொரு நாள்
பாய்ந்து வந்த ஈட்டிக்கும்
பதில் சொல்ல மார்பைக் காட்டிச்
சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளர்
அவனுக்குப் பிறந்தானா?
அடடா மானமெங்கே?
நீண்டு கவிதையில் காணப்படும் இந்த சில வரிகளுக்கும் கலைஞர் கருணாநிதிதான் சொந்தக்காரர். சங்ககால எட்டுத் தொகை நூல்களில்; ஒன்றான புறநாற்றில் காக்கைபாடினியார் நற்சென்னையார் என்ற செந்நாப்புலவர் பாடிய பாடலுக்கு (புறம் 278) கல்லுகளை அடுக்கி கொத்தனார் வீடு கட்டுவதுபோல சொல்லுகளை அடுக்கி புதுக் கவிதை தீட்டினாலும் வார்த்தகைளில் கொப்பளிக்கும் வேகத்தையும், சூட்டையும் சாமானியமானதென்று தள்ளிவிட முடியாது!;
1953ம் ஆண்டு கல்லல்குடிப் போராட்டத்தில் களம்சென்று பின்னர் திருச்சி சிறையில் ஆறுமாதக் கடுங்காவல் கைதியாக இருந்தபோது பிறந்த பல கவிதைகளில் இதுவும் ஒன்று. ""வைரமணிகள்"" என்ற நூல் வடிவில் இவை வெளிவந்தன.
இந்த வீர வசனங்களுக்குச்; சொந்தக்காரரான கலைஞர் கருணாநிதி போன்ற திராவிட இயக்கத்தவர்கள்தான் ஒரு காலத்தில் தமிழ் மக்களிடை, குறிப்பாக கல்லூரி மற்றும் பல்கலைக் கழக மாணவ - மாணவிகள் மத்தியில் சங்க காலத்துச் சிறப்பினையும், புறநானூற்றின் பெருமையையும், தமிழின் செழுமையையும் எடுத்துச் சொல்லி இன உணர்வையையும், இன எழுச்சியையும் விழிப்பையும் ஏற்படுத்தினார்கள். அந்தப் பேரெழுச்சி திமுக ஆட்சியைக் கைப்பற்று மட்டும் அதற்குச் சற்றுப் பின்னரும் தீக்கொழுந்தாக சுடரிட்டு எரிந்தது!
தமிழரின் பொற்காலமான சங்ககால புறநானூற்று காட்சிகளை சொல்லோவியமாகத் தீட்டிய திராவிட இயக்க எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக வளைந்து கொண்டு வந்த தமிழர்களின் முதுகெலும்பை நிமிர்த்தினார்கள்.
இந்திக்கு எதிரான மொழிப் போரில் "எப்பக்கம் வந்திடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்" என்று பரணி பாடப்பட்டது.
"வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும்
தோள்ளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப்போல் காவிரியைப் போல் கருத்துக்கள்
ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
செங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய் கின்;றதமிழ்
எங்கள் மூச்சாம்! "
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடல் தமிழ் நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் ஓங்கி ஒலித்தது!
இந்திக்கு எதிரான போரில் பல தமிழ் உணர்வாணர்கள் தங்கள் இன்னுயிரை ஈகை செய்தார்கள். ஆயிரக்கணக்கானோர் " புூங்குயில் கூவிடும் மாஞ்சோலை எம்மை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை" என்றும் "சிறைச்சாலை எங்கள் தவச்சாலை" என முழங்கிய வண்ணம் சிறை போனார்கள். தொண்டர்கள் மட்டுமல்ல பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களும் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றார்கள்.
அவையெல்லாம் இன்று கனவாய் பழங்கதையாய் போய்விட்டது. "" விடுதலைப் போராட்டமா? ஆயுதப் போரா? ஐயகோ எனக்கு வன்முறையே பிடிக்காது. அதை எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறறோம், இப்போதும் எதிர்க்கிறோம், முப்போதும் எதிர்ப்போம்"" என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாட்சிமை தங்கிய டாக்டர், கலைஞர் தமிழினத் தலைவர் முத்துவேலர் கருணாநிதி திருவாய் மலர்ந்திருக்கிறார். ஒரு தரம் அல்ல பல தடவை!
தமிழ்நாட்டில் பட்டங்களுக்கு மட்டும் பஞ்சமில்லை. கலைஞர் கருணாநிதி எத்தனை பட்டங்களை சுமக்க முடியாமல் சுமக்கிறார் பார்த்தீர்களா?
தமிழினத் தலைவர் என்றால் ஒரு தமிழனுக்கேனும் பொல்லாங்கு வந்துற்றால் அவனுக்காக அவர் படமெடுத்தாடும் நாகம் போல் சீற வேண்டாமா?எதிரியை தடிகொண்டு தாக்க வேண்டாமா? முதுகெலும்பை ஒடிக்க வேண்டாமா?
" தருக்கினாற் பிற தேசத்தார்
தமிழன்பால் என் நாட்டான்பால்
வெறுப்புறும் குற்றஞ் செய்தார்
ஆதலால் விரைந்தன்னாரை
நொறுக்கினார் அவர் முதுகெலும்பைத்
தமிழர்கள் என்ற சேதி
குறித்தசொல் கேட்டின்பத்திற்
குதிக்கும் நாள் எந்நாளோ?"
என்று உயிரோடு இருந்தபோது ஆதங்கப்பட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சென்ற 22ம் நாள் சனிக்கிழமை ஆனையிறவு - இயக்கச்சி இராணுவ தளங்களை முற்றாகத் துகள்துகளாகத் தகர்த்ததன் மூலம் சிங்கள இராணுத்தின் முதுகெலும்பை நொருக்கினார்கள். அதையிட்டு அண்ணாவின் பெயரையும் பாரதிதாசனின் பெயரையும் நாளொன்றுக்கு நூறுதரம் செபிக்கும் தமிழினத் தலைவர் வாய்திறந்து சில வார்த்தை முத்துக்களைத்தானும் உதிர்ப்பார் என்று சிலர் நினைத்தார்கள். மனிதர் வாயையே திறக்கக் காணோம். அந்த துணிச்சலை இப்போதெல்லாம் நாம் அவரிடம் எதிர்பார்க்க முடியாது. புறநானூற்றுக்கு புதிய கவிதை எழுதிய கலைஞர் எப்போதோ இறந்து போனார். இப்போ வாய் திறந்தால் ஆட்சிக்கும் தனது பதவிக்கும் ஆபத்து வந்து விடுவோமோ என்று பயந்து சாகும் வெறும் கருணாநிதிதான் இருக்கிறார்.
வி.புலிகளின் வெற்றியைக் கொண்டாட தமிழ்நாட்டில் தமிழ் உணர்வு கடல்மடை போல் பாயும் வீர மறவர்கள் நிறைய இருக்கிறார்கள். ஏன் "உள்ள உயிர் ஒன்றுதான் அதுவும் செந்தமிழுக்கென்றால் இன்றே செத்தொழிந்து போகட்டும்" என்று எண்ணிச் செயலாற்றும் எதற்கும் அஞ்சாத, எதிரிகளின் சொற்கணைகளுக்கு கண் இமைக்காத ஒரு தமிழர் படையே தமிழ்நாட்டில் இருக்கிறது.
மாவீரன் திரு. பழ. நெடுமாறன் தலைமையில்; இயங்கும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சிங்கள இராணுவத்தின் மிகப் பெரியதும் வெல்ல முடியாதது என எதிரியால் இறுமாப்புடன் கூறப்பட்டதுமான ஆனையிறவு இராணுவத்தளம் அடியோடு அழித்து விடுதலைப் புலிகள் வெற்றிக் கொடி நாட்டியதை விழாவாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்.
"ஆனையிறவை வெற்றிகொண்ட செய்தி தமிழர்கள் காதுகளில் தேனாகப் பாய்கிறது, 20ம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சிpயில் ஒன்றாக ஆனையிறவு இராணுவ தளம் தகர்க்கப்பட்டது தமிழினத்தின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்படும் என்று நெடுமாறன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமான யாழ்ப்பாணத்தை மீண்டும் புலிகள் கைப்பற்றப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. தமிழீழ விடிவு கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தொடங்கி விட்டது, தன்னிகரற்ற இராணுவத் தளபதியான பிரபாகரன் உயர்ந்து தமிழினத்துக்கு என்றும் அழியாத பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவருக்கும் அவரது தலைமையில் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்கள் சார்பில் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என மேலும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
மாவீரன் நெடுமாறனிடம் காணப்படும் இந்த மகிழ்ச்சி வெள்ளத்தை, பெருமிதத்தை கலைஞரிடம் காண முடியாது. அதை அவரிடம் எதிர் பார்ப்பது முட்டாள்தனம். அவர்தான் அந்த துர்வாச முனிவர் மேனகைக்குப் பிறந்த தனது குழந்தையை (சகுந்தலை) ஏற்க மறுத்ததுபோல தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காது இருந்து வருகிறார்.
சரி விடுதலைப் போராட்டம் ஒரு புறம் இருக்கட்டும். அதை ஆதரிக்கவும், அதையிட்டுப் பெருமைப் படவும் ஒருவருக்குத் தகுதி வேண்டும். அது எல்லோருக்கும் வராது. இராசிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நால்வரில் நளினி நீங்கலாக மற்றவர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கலாம் என்று கலைஞர் கருணாநிதியின் அமைச்சரவை பரிந்துரை செய்திருக்கிறது. நளினிக்குப் பரிந்துரை செய்யததில் ஆச்சரியம் இல்லை. உச்ச நீதிமன்ற மூன்ற நீதியரசர்களில் ஒருவர் நளினிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டுமென்று ஏற்கனவே பரிந்துரை செய்திருக்கிறார். சோனியா காந்தியும் அவ்வாறுதான் பரிந்துரை செய்திருந்தார். அது மட்டுமல்ல மற்ற மூவர்களைப் பொறுத்தளவில் கருணை காட்டப்படுவதை தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றுகூடக் கூறியிருந்தார்.
அனைத்துலக மன்னிப்புச் சபை உட்பட மனிதவுரிமை அமைப்புக்கள் இந்த நால்வரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு இந்திய அரசை வற்புறுத்திக் கேட்டுள்ளன. இவ்வாறே வடநாட்டு மூத்த வழக்கறிஞர்கள் பலர் இந்த நால்வருக்கும் கருணை காட்டி தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு கேட்டிருக்கிறார்கள். அதற்கு மூன்று வலுவான காரணங்கள் முன் வைக்கப்பட்டன.
(1) தூக்குத் தண்டனை மனித நேயம், மனிதவுரிமை அடிப்படையில் காட்டுமிராண்டித்தனமான தண்டனை. உயிருக்கு உயிர் என்ற கோட்பாடு அநாகரிகமானது. உலகில் பெரும்பான்மையான நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்துள்ளன.
(2) இராசிவ் கொலை வழக்கு தடாச் சட்டத்தின் கீழ் விசாரித்து தீர்ப்பளிக்கப் பட்டது. அந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட மரண தண்டனை ஏற்கனவே உச்சநீதி மன்ற நீதிபதிகளால் இல்லத்துச் செய்யப்பட்டது. காரணம் அரசு தரப்பு இந்திய பாதுகாப்புக்கு எதிராக எதிரிகள் சதிசெய்தார்கள் என்று முன்வைத்த குற்றச்சாட்டை உச்சமன்ற நீதிபதிகள் நிராகரித்தார்கள். சதி ஒரு தனிநபருக்கு (இராஜிவ் காந்தி) எதிரானதேயொழிய நாட்டுக்கு எதிரானதல்ல எனவே தடாச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்புச் செல்லுபடியாகாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தார்கள்.
(3) கொலைக்குப் பொறுப்பானவர்கள் ஏற்கனவே இறந்து போனார்கள். இந்த நால்வரும் கொலையோடு நேரடியாகச் சம்பந்தப் படாதவர்கள்.
இந்தக் காரணங்களின் அடிப்படையில் மட்டுமல்ல தூக்குத் தண்டனையைக் கொள்கையளவில் எதிர்க்கும் கலைஞர் நால்வரது தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு பரிந்துரை செய்திருக்கலாம். தமிழினத் தலைவர் என்று பட்டத்தைச் சுமந்து கொண்டிருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஈடாகவும் நடக்க வேண்டும். ஆனால் ஏற்கனவே நான் குறிப்பிட்டதுபோல் காஞ்சுர மரத்தில் இருந்து தீங்கனிகளை எதிர்பார்க்க முடியாது. கோட்டானிடம் இருந்து கிளிமொழி கேட்க முடியாது.
வி.புலிகளுக்கு எதிரான தடையை நீடிப்பதைக்கூட கலைஞர் ஆதரித்து மத்திய அரசுக்கு அறிக்கை கொடுத்தார். அதை நியாயப்படுத்த ""ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலம் தொட்டு இந்தத் தடை பரிந்துரைக்கப் பட்டு வருகிறது"" என்ற சப்பை வாதத்தை கலைஞர் முன்வைத்தார். அப்படியென்றால் ஜெயலலிதாவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்காமல் அவரையே முதலமைச்சராக மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கலாம். அவர் வேண்டாம் என்றுதான் கலைஞரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். "" வி.புலிகளை பொறுத்த மட்டில் எனக்கும் ஜெயலலிதாவிற்கும் கருத்து வேறுபாடில்லை"" என்று கலைஞர் சொல்வதைப் பார்க்க அவர்மீது கோபத்திற்குப் பதில் பரிதாபந்தான் பிறக்கிறது!
கலைஞரைப் போன்றவர்கள் மகாகவி பாரதியார் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர் நடிப்பு சுதேசிகள்பற்றி எள்ளி நகையாடினார். இந்தக் கிளிக் கண்ணிகள் முத்துவேலர் கருணாநிதிக்கு சமர்ப்பணம்.
" நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி
வஞ்சனை சொல்வாரடி- கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி!
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி
நாட்டத்திற் கொள்ளாரடீ - கிளியே!
நாளில் மறப்பாரடீ"
(யேஅயெயனரஇ 2000)
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீர் ஆக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள்!
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பார்கள். நாய் வாலை மட்டுமல்ல ஆல மரத்தை பலா ஆக்க முடியாது. நீலநிறக் காகத்தை பச்சைக் கிளி போல் பேச வைக்க முடியாது. கருணை இல்லாத மூர்க்கனைச் சீர்படுத்த இயலாது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் ஒரு தனிப் பாடல் இருக்கிறது. ஒளவையார் பாடியது. இவர் சங்க கால ஒளவையார் அல்ல. பிற்காலத்தில் கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி வாழ்ந்த 12ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
ஆலைப் பலாஆக்க லாமோ அருஞ்சுணங்கன்
வாலை நிமிர்த்த வசமாமோ - நீலநிறக்
காக்கைதனைப் பேசுவிக்க லாமோ கருணையிலா
மூர்க்கனைச் சீர் ஆக்கலா மோ.
நாய், காகம், கருணையிலா மூர்க்கன் இவற்றோடு ஒளவையார் புத்த சாமிகளையும் சேர்த்திருக்கலாம். உலகத்துக்கு கருணையைப் போதித்த புத்தரின் சீடர்களுக்கு பேச்சு வார்த்தை, அமைதி என்றாலே "அலஜி""யாகப் போய் விட்டது. அது இன்று நேற்றல்ல வரலாற்றுக் காலம் தொடங்கி இந்த நோய் இருந்து வருகிறது.
""புலிகளுடன் பேசக் கூடாது. நாட்டில் உள்ள வளங்கள் அத்தனையையும் திரட்டி வி.புலிகளை போரில் தோற்கடிக்க வேண்டும். நாட்டில் இனப் பிரச்சினை என்று ஒன்றில்லை. இருப்பது தமிழ்ப் பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே. பெரும்பான்மைச் சிங்கள-பௌத்த மக்களின் உரிமைகள் எதையும் குறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது. அரசின் ஆணை சிறீலங்கா முழுதும் செல்லக் கூடியதாக இருக்க வேண்டும் "" இப்படியான வாசகம் அடங்கிய கடிதம் ஒன்றினை புத்தமத பீடாதிபதிகள் சனாதிபதி சந்திரிகாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
இந்தக் கடிதத்தில் மூன்று பீடாதிபதிகள், அஸ்கிரியா மதபீடாதிபதி வண. உடுகம சிறீபுத்தராகித்த தேரர், மல்வத்தை வண. இரம்புக்வெல சிறீ விப்பசி மகாநாயக்க தேரர் மற்றும் அமரபுர மகாநாயக்க தேரர், கையெழுத்து இட்டுள்ளார்கள்.
இந்த மஞ்சள் அங்கி அணிந்த புத்த தேரர்கள் பாத்திரம் ஏந்தி பிட்சை எடுத்து, பசித்தால் புசித்து பெண், பொன், மண் ஆசைகளைத் துறந்து, புத்தம், சங்கம், தர்மம் என்ற மும்மணிகளிடம் சரண் அடைந்த துறவிகள் அல்ல.
அரண்மனை போன்ற வீடுகளில் குடியிருந்து, பால் பழம் அருந்தி, பஞ்சு மெத்தையில் படுத்து பென்ஸ் தேரில் பவனி வரும் அஸ்கிரிய மல்வத்தை புத்தமத பீடங்களின் பீடாதிபதிகள். இவர்கள் காலில்நாடாளும் சனாதிபதி சந்திரிகா தொடங்கி சாதாரண அப்புகாமி வரை விழுந்து தொழுது எழும் புத்த(ஆ)சாமிகள்.
கடந்த காலங்களில் இந்த புத்தமத பீடாதிபதிகள், சிங்கள-பொத்த பேரினவாதிகள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண சிங்கள ஆட்சியாளர்கள் அவ்வப்போது எடுத்த அரைகுறை முயற்சிகளை முறியடித்திருக்கிறார்கள்.
பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் கிழித்தெறியப்படுவதற்கும், டட்லி சேனநாயக்கா -செல்வநாயகம் ஒப்பந்தம் கைவிடப்பட்டதற்கும் இந்த சக்திகளே காரணமாக இருந்தது.
சென்ற ஆண்டு சிறீலங்கா அரசு பெரிய ஆரவாரத்தோடு கல்வி, தொழிற்துறையில் சமவாய்ப்பு சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவரப் போவதாக அறிவித்தது. அந்தச் சட்ட மூலம் அறிவிக்கப்பட்டதுதான் தாமதம் அதனை எதிர்த்து புத்த பிக்குகள், கொழும்பு ஆனந்தா, நாலந்தா பௌத்த கல்லூரி மாணவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். எதிர்ப்பைக் கண்டு வெருண்டுபோன சனாதிபதி சந்திரிகாவும் அவரது மதிமந்திரி காமினி பீரீசும் அந்த சட்ட மூலத்தைக் கைவிட்டு விட்டதாக அவசர அவசரமாக அறிவித்தார்கள். அதன்பின்தான் அந்த எதிர்ப்பு அலை ஓய்ந்தது.
சிங்கள-தமிழ் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில், மனித நேயத்தின் அடிப்படையில் தீர்த்து வைக்க முன்வந்த நோர்வே நாட்டின் மீதும் இந்த சிங்கள-பௌத்த பேரினவாதிகளது நெற்றிக்கண் பார்வை திரும்பியுள்ளது. நோர்வே நாடு சிறீலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது. நோர்வே நாடு வி.புலிகளுக்கு ஆதரவான நாடு. வி.புலிகளை அந்த நாட்டில் சுதந்திரமாக இயங்க விட்டிருக்கும் நாடு என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள்.
கொழும்பில் உள்ள நோர்வே நாட்டு தூதுவரலாயம் முன் வீரவிதான, பயங்கரவாதத்திற்கு எதிரான தேசிய இயக்கம் போன்ற 49து பேரினவாத அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் வெளிநாடொன்றின் உதவி தேவைப் பட்டால் அது அண்டையிலுள்ள இந்தியாவாக இருக்கவேண்டும் என்கிறார்கள்.
நீண்ட காலமாக சிங்கள-பௌத்த பேரினவாதிகள் இந்தியாவிற்கு எதிராக விஷம் கக்கி வந்திருக்கிறார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை முழு மூச்சாக இந்த சக்திகள் எதிர்த்தன.
தமிழ்நாட்டுக்கும் இந்தியாவிற்கும் வித்தியாசம் காணமுடியாத கோளாறுதான் இந்த எதிர்ப்புக்கு உண்மையான காரணம் ஆகும்.
இப்போது கூட வட-கிழக்கில் வாழும் தமிழர்களைக் காட்டிலும் மலையகத் தமிழர்கள் மீது இந்த பேரினவாத சக்திகள் அதிக வெறுப்பைக் கக்கி வருகின்றன.
அப்படியென்றால் இந்தியா மீது ஏன் இந்தத் திடீர்க் காதல்? அது ஒரு அரசியல் தந்திரந்தான். நோர்வே நாட்டை வேண்டாம் என்றால் அது அப்பட்டமானன பச்சை சந்தர்ப்வாத எதிர்ப்பாகத் தெரியும். அதற்காகவே நோர்வே வேண்டாம் இந்தியாவை அழையுங்கள் என்று சொல்கிறார்கள்.
நோர்வே நாட்டை வேண்டாம் என்பவர்கள் அந்த நாடு வாரி வழங்கும் நிதியுதவியை வேண்டாம் என்று சொல்வதில்லை. அந்த நிதியுதவியைப் பெறுவதற்கு வெட்கப்படுவதும் கிடையாது.
இவ்வளவிற்கும் நோர்வே நாடு சனாதிபதி சந்திரிகாவின் அழைப்பின் பேரில்தான் சிறீலங்கா அரசு -விடுதலைப் புலிகள் இரு சாராரையும் பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வர ஒப்புக் கொண்டுள்ளது.
நியாயமாகப் பார்க்கப் போனால், தர்க்க ரீதியாகப் பார்க்கப் போனால் இந்த சிங்கள-பௌத்த பேரினவாதிகளது கோபம் சந்திரிகா மீதுதான் திரும்பியிருக்க வேண்டும்.
ஆர்ப்பாட்ட ஊர்வலம் நோர்வே நாட்டு தூதுவராலயத்துக்கு முன் இல்லாமல் அலரிமாளிகைக்கு முன்னால் இடம் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து எய்தவன் இருக்க அம்பை நோவ வேண்டிய அவசியம் இல்லை.
அஸ்கிரிய மல்வத்தை புத்தமத பீடாதிபதிகளது கோபாக்கினியைத் தணிக்க நீதி அமைச்சர் பீரிஸ் கண்டிக்கு யாத்திரைபோய் திரும்பி இருக்கிறார். இந்த மதபீடாதிபதிகளைச் சந்தித்த அமைச்சர் இனப்பிரச்சினை தொடர்பாக நடக்கும் பேச்சுவார்த்தையில் இரகசியம் எதுவும் இருக்காது என்றும் தீர்வுத் திட்டம் மக்கள் முன்னிலையில வைக்கப்படும் என்றும், பெரும்பான்மை சிங்கள-பௌத்த மக்களது உரிமை எதுவும் மெலினப்படுத்த மாட்டாது எனவும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் உறுதி மொழி அளித்துள்ளார்.
சிங்கள ஆட்சியாளர்கள் இப்படி ஏன் மஞ்சள் சட்டைக்குள் மறைந்து கொண்டிருக்கும் யுத்த வெறியர்களுக்குப் பயந்து சாகிறார்கள்? இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
(1) சிறீலங்கா சுதந்திரக் கட்சி சரி, ஐக்கிய தேசியக் கட்சி சரி தங்கள் தேர்தல் வெற்றிக்கு இந்த புத்தமத பீடாதிகள், பௌத்த பிக்குகள் இவர்களை நம்பி இருக்கிறார்கள்.
(2) பௌத்த மத பீடாதிபதிகள் சிறீலங்கா அரசு தங்களுடைய ஆலோசனைப்படியும் ஆசியோடும் ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளார்கள். இந்த உரிகை சிங்கள மன்னர்களது காலத்திலும் இருந்து தங்களுக்கு இருந்து வந்துள்ளது என்பது அவர்களது வாதம்.
ஒரு கோணத்தில் பார்க்கும்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடாத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு சிங்கள-பௌத்த பேரினவாதிகள் எதிர்ப்பதை நாங்கள் புரிந்து கொள்ளலாம். காரணம் இந்த புத்தமத பீடாதிபதிகள் முதலில் தங்களை பௌத்த சிங்களவர்களின் இரட்சகர் எனவும் அப்புறந்தான் புத்தரின் சீடர்கள் என்றும் பகிரங்கமாகச் சொல்லி வருகிறார்கள்.
மௌரிய பேரரசின் சக்கரவர்த்தியான அசோகன் கலிங்கப் போரில் ஏற்பட்ட மனித உயிரழிவுகளைப் பார்த்து மனம் உடைந்து போய் அமைதியைத் தேடுகிறான். அன்பு, கருணை, அகிம்சை இவற்றைப் போதிக்கும் புத்தபிரானின் போதனைகள் அவனுக்கு மனச் சாந்தி அளிக்கிறது. புத்தசமயத்திற்கு மதம் மாறிய அவன் புத்தரின் போதனையை பாரதநாட்டில் மட்டுமல்ல அதற்கு வெளியே கடல்கடந்தும் பரப்ப தீவிர முயற்சி செய்து அதில் வெற்றியும் கண்டான்.
அங்கே போரினால் ஏற்பட்ட உயிர் அழிவை வெறுத்து அசோகன் மும்மணிகளிடம் சரண் அடைகிறான். ஆனால் இங்கே மும்மணிகளிடம் சரண் அடைந்த புத்தமத பீடாதிபதிகள் போருக்குத் தூபதீபம் காட்டுகிறார்கள். அமைதி வேண்டாம் போர்ப்பறை கொட்டட்டும் என்று முழங்குகிறார்கள்!
துறவுக்கு அடையாளமாக மஞ்சள் அங்கி அணிந்து, இகபர சுகங்களைத் துறந்து, மும்மணிகளை வணங்கி, புத்தரின் பத்துவகைச் சீலங்களை மேற்கொண்டு, நான்குவகை வாய்மைகளைக் கடைப்பிடித்து, அட்டாங்க மார்க்கத்தில் ஒழுகுவதே பௌத்த தேரர் ஒருவருக்கு புத்தபகவானால் விதிக்கப்பட்ட உயரிய ஒழுக்க நெறியாகும்.
புத்தமதம் மனித உயிர்களுக்கு மட்டும் அல்லாமல் எந்த உயிர்களுக்கும் மனத்தினாலோ, வாக்கினாலோ தீங்கு விளைவிக்கக் கூடாதென்ற உயரிய கோட்பாட்டை கொண்டதாகும்.
பௌத்தர்களில் இல்லறத்தாரும், துறவறத்தாரும் புத்தர், தர்மம், சங்கம் என்னும் மும்மணிகளைச் சரணம் (அடைக்கலம்) அடைய வேண்டும். இதற்குப் பாலி மொழியில் திரிசரணம் என்பது பெயர்.
புத்தம் சரணம் கச்சாமீ ( புத்தரிடம் அடைக்கல் புகுகிறேன்)
தர்மம் சரணம் கச்சாமீ ( தர்மத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)
சங்கம் சரணம் கச்சாமீ (சங்கத்திடம் அடைக்கலம் புகுகிறேன்)
இதை மூன்ற முறை சொல்ல வேண்டும். அதாவது மும்மணிகளை மூன்று முறை வணங்க வேண்டும்.""முத்திற மணியை மும்மையின் வணங்கி""என்பது மணிமேகலை வாக்கு.
பௌத்த தேரர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்துவகை ஒழுக்கங்கள் (தசசீலங்கள்) ஆவன. (1) கொல்லாமை. (2) கள்ளாமை. (3) பிறனில் விளையாமை. (4)பொய் சொல்லாமை. (5)கள்ளுண்ணாமை. இவை பஞ்ச சீலம் எனப்படும். இவை துறவறத்தோருக்கும், இல்லறத்தோருக்கும் பொதுவானவை. பௌத்த தேரர்கள் இவற்றுடன் சேர்த்து மேலும் ஐந்து ஒழுக்கங்களை மேற்கொள்ள வேண்டும். அவை (6) உண்ணத் தகாத வேளையில் உணவு கொள்ளாமை. (7) இசை, ஆடல், பாடல், நாடகம் முதலியவற்றைக் கேட்டலும் பார்த்தலும் செய்யாமை. (8) சந்தனம், மலர் முதலிய நறுமணப் பொருள்களை நீக்குதல் (9) உயரமானதும் விசாலமானதுமான இருக்கைகளை நீக்குதல். (10) நாணயங்களையும் வெள்ளி பொன் முதலிய விலையுயர்ந்த பொருள்களையும் நீக்குதல் என்பன.
திரிசரணம், தச சீலம் இவற்றை மேற்கொண்டால் மட்டும் போதாது. நிர்வாணம் அடைவதற்கு இவற்றுடன் நான்கு வாய்மைகளையும் எண்வகையான நெறிகளையும் கைக்கொண்டு ஒழுக வேண்டும். நான்கு வாய்மைகளை ஆரிய சத்தியம் என்றும், எட்டு வகையான நெறிகளை ஆரிய அஷ்டாங்க (எட்டு) மார்க்கம் என்றும் கூறுவார்கள். (ஆரிய என்றால் உயர்ந்தது என்று பொருள்).
நான்கு வாய்மைகளாவன (1) துன்பம். (2) துன்ப காரணம். (3) துன்ப நீக்கம், (4) துன்பம் நீக்கும் வழி என்பன.
எட்டுவித உயர்ந்த வழியாகிய அஷ்டாங்க மார்க்கங்களாவன (1) நற்காட்சி. (2) நல்லொழுக்கம். (3) நல்வாய்மை. (4) நற்செய்கை. (5) நல்வாழ்க்கை. (6)நன்முயற்சி. (7) நற்கடைப்பிடி. (8) நற்றியானம்.
இவையே தேரவாத பௌத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும்.
கடவுள் உண்டு என்பதை மறுக்கும் பௌத்தமதம் ஒவ்வொருவரும் தத்தமது நிர்வாணத்தை(முக்தியை) புத்தர் காட்டிய வழிகளில் ஒழுகித் தாமே தேடிக் கொள்ள வேண்டும் என்று போதிக்கிறது. கங்கையில் முழுகுவது, காவிரியில் குளிப்பது, விரதம் இருப்பது, வேள்வி, புூசை, தேர், திருவிழா, காவடி, யாத்திரை இவற்றால் நிர்வாணத்தை அடைய முடியாது என்பது புத்தசமயக் கோட்பாடாகும். ""நான் வழியைத்தான் காட்ட முடியும். ஆனால் அதில் நடக்க வேண்டியவர்கள் நீங்கள்"" என்று திட்டமாகச் சொன்னவர் புத்தர்.
ஆனால் இன்றைய சிறீலங்கா பௌத்தமத பீடாதிபதிகள் புத்தர் போதித்த போதனை எதையும் பின்பற்றுவதாக இல்லை. ஆன காரணத்தினாலேயே இன்று உலகில் மது அருந்துதல், தற்கொலை செய்தல், விபச்சாரத் தொழில் இவற்றில் பௌத்த சிறீலங்காவே முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது. நாய்வாலைக் கூட நிமிர்த்தி விடலாம் ஆனால் யுத்தத்திற்கு அறைகூவல் விடும் கருணையில்லா அஸ்கிரிய, மல்வத்தை புத்தமத பீடாதிபதிகளையும் ஏனைய பௌத்த பிக்குகளையும் அந்தப் புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீர் ஆக்க முடியாது.
ரனெநகiநென
ரனெநகiநென
ஆழசந...
லுயாழழ! ளுவைநடீரடைனநச
ஜஊடழளநஸ
ஜஊடழளநஸ
லுயாழழ! ளுவைநடீரடைனநச
|