Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முஸ்லிம்
#1
<span style='font-size:25pt;line-height:100%'>முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் சாத்தியமா?</span>
(சாத்வீகன் - மட்டக்களப்பு ~தமிழ்அலை|)


'வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டால் முஸ்லிம்களும் தமது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடும் நிலை ஏற்படும்" என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அண்மையில் இலங்கை வந்திருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் பில் கிரஹமிடம் தெரிவித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான காலம் முதல், ரவுூப் ஹக்கிம் முதற்கொண்டு பல முஸ்லிம் தலைவர்களும் முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தொடர்பாக கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றார்கள்.

அண்மையில் என்னை சந்தித்த ஒரு முஸ்லிம் ஊடகவியலாளரும், அதற்கான சாத்தியத்தை தெரிவித்திருந்தார். ~முஸ்லிம் இளைஞர்கள் மட்டும் ஆயுதப் போராட்டத்தில் குதித்துவிட்டால் அரபு நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு ஆயுதங்களையும், இன்னோரன்ன உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன| என்று அந்த அன்பர் குறிப்பிட்டார். ~முஸ்லிம்களுக்கு இயல்பாகவே அவர்களின் மார்க்கத்தில் உள்ள போர் அங்கீகாரமும், ஜிகாத்தை கொண்டு நடத்துவதற்காக அவர்களது மார்க்க நூல்களிலேயே வழங்கப்பட்டிருக்கின்ற அறிவுரைகளும், முஸ்லிம்களுக்கு பாரிய வெற்றியை நிச்சயம் பெற்றுத்தந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை| என்றும் அந்த அன்பர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது அந்த முஸ்லிம் அன்பர் கூறியது போன்று அவ்வளவு இலகுவான ஒரு விடயம் கிடையாது.

நிறைய விடயங்களைக் கருத்தில் எடுத்துதான் எந்த ஒரு தரப்பும் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கவேண்டும். இன்றைய கள நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது, முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் ஒன்றிற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. உணர்ச்சிவசப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமானால் ஒரு சில ஆயுதங்களை வைத்துக்கொண்டு வன்முறை நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபடமுடியும். ஒரு சில தாக்குதல்களை மேற்கொள்ள முடியும். ஆனால் தமிழ் சமூகம் போன்று பாரிய ஆயுதப் புரட்சி ஒன்றை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்கக்கூடிய களச் சாதகம் தற்பொழுது முஸ்லிம்களுக்கு நிச்சயம் கிடையாது என்றே கூறவேண்டும்.

முதலாவதாக முஸ்லிம்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு அடிப்படையான தேவைகள் எதுவும் இலங்கையில் கிடையாது. ஆயுதப் போராட்டத்தை எதற்காக மேற்கொள்ளவேண்டும் என்ற குறிக்கோளும் போதுமான அளவிற்கு அவர்களுக்கு கிடையாது. ஆயுதப் போராட்டம் ஒன்றை தொடருவதை அவர்கள் சமூகத்தின் முன்நிலையில் அவர்களால் சரியான முறையில் நியாயப்படுத்தவும் முடியாது. முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அவர்கள் அரசியல் பேச முடியும். ஆனால் முஸ்லிம் என்ற காரணத்தினால் மட்டுமே உரிமை எதுவும் மறுக்கப்பட்ட எவரும் இங்கு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

கடந்த காலத்தில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகள் விடுதலைப் புலிகளின் தலைமையினால் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டுள்ள நிலையில், ~தனி முஸ்லிம் அலகு| ~பேச்சுவார்த்தையில் ~சமபங்கு| என்ற கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்து ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பதை எவருமே ஏற்கமாட்டார்கள். அது நீண்ட கால நோக்கில் நடைமுறைச் சாத்தியமும் அற்றது. (தமிழ் மக்களின் போராட்டம் அவ்வாறு அல்ல. அவர்கள் தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக பலவற்றை இழந்திருந்தார்கள். தமிழ் மொழியை அழித்துவிடும் நடவடிக்கையில் சிங்களப் பேரினவாதிகள் சட்டாPதியாகவே பல காரியங்களைச் செய்தார்கள்.

தமிழ் மக்களை இல்லாதொழிக்கும் பல நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்வதற்கு உரிமையில்லை என்று கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களுக்கு அவ்வாறானதொரு நிலை தமிழ் தரப்பால் ஏற்படவில்லை. யாழ்பாணத்தில் 1990 இல் ஏற்பட்ட நிலை தற்பொழுது முற்றாகவே மாறிவிட்டது. 90 இல் இடம்பெற்ற பள்ளிவாசல் சம்பவம்; போன்றதொரு சம்பவம் அதன் பின்னர் நடைபெறவேயில்லை. இன்று ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் விவசாயம் மற்றும் வியாபாரம் செய்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மதத்தின் அடிப்படையில் எந்தவித ஒடுக்குமுறைக்கும் உள்ளாகாத நிலையில், முஸ்லிம் தரப்பினால் தொடரப்பட இருப்பதாகக் கூறப்படும் ஆயுதப் போராட்டம் என்பது எந்தவித அடிப்படை நோக்கத்தையும் கொண்டதாக இருக்கமாட்டாது. அதானால் அது நின்று நிலைக்கவும் சந்தர்ப்பம் இல்லை.)

எந்த ஒரு ஆயுதப் போராட்டத்திற்கும் இரகசியமானதும், பாதுகாப்பானதுமான ஒரு தளம் இருப்பது அவசியம். ஆயுதப் பயிற்சி பெறுவதற்கும், அந்த ஆயுதப் போராட்டத்தின் தலைமை பாதுகாப்பாகத் தங்கியிருந்து போராட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், ஆயுதப் போராட்டத்திற்கான வளங்கல்களை தடையில்லாமல் வளங்கிக்கொண்டே இருப்பதற்கும் பாதுகாப்பானதும், இரகசியமானதுமான ஒரு நிரந்தரத் தளம் நிச்சயம் அவசியம். விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் இந்தியாவை தமது தளமாக பயன்படுத்தினார்கள். பின்னர் ஓரளவு வளர்ச்சி அடைந்ததும், யாழ்ப்பாணத்தை தமது தளமாக பயன்படுத்தி வந்தார்கள். அதன் பின்னர் முல்லைக் காடுகளையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் தமது தளங்களாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

முஸ்லிம்கள் தமது ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஒரு பாதுகாப்பான தளத்தை தக்க வைத்திருப்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சாத்தியம் இல்லை. வடக்கு கிழக்கில் காடுகள் அனைத்துமே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. ஊரருக்குள், மக்கள் மத்தியில் தளம் அமைத்துப் போராடும் வசதி நீண்ட கால நோக்கில் நிச்சயம் முஸ்லிம் இளைஞர்களுக்கு கிடைக்கச் சாத்தியமில்லை.

முக்கியமாக முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது சர்வதேச சமுகத்தை எதிர்கொள்ளவது என்ற விடயத்தில் பாரிய பின்னடைவைச் சந்தித்துவிடும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இன்று பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்கா தலைமையில் கோதாவில் குதித்துள்ள சர்வதேச சமூகம், உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு போரைத்தான் நடாத்திக்கொண்டிருக்கின்றது. ஆயுத பலமுள்ள முஸ்லிம்களை அழித்தொழிக்கும் நடவடிக்கையைத்தான் அவை மேற்கொண்டும் வருகின்றன. அவர்களது பட்டியலில் ஆயுத பலமுள்ள முஸ்லிம் நாடுகள் கூட, பயங்கரவாதிகளாகத்தான் தென்படுகின்றார்கள். அப்படி இருக்கையில் புதிதாக ஒரு முஸ்லிம் குழு இலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் குதிப்பதற்கு அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த போது சிறீலங்கா இராணுவத்தின் மொத்தப் படையினரின் எண்ணிக்கை வெறும் 5000 மட்டுமே. தமிழீழப் போராட்டம் ஆரம்பமான காலப்பகுதியில் சிறீலங்காப் படையினர் அணிவகுப்பு மரியாதையை மேற்கொள்ளும் ஒரு இராணுவ அமைப்பாக மட்டுமே இருந்தது. ஏ.கே 47 ரகத் துப்பாக்கியைக் கூட முதன்முதலில் தமிழ் போரளிகளே இலங்கையில் அறிமுகப்படுத்தும் அளவிற்கு போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் சிறீலங்கா இராணுவம் பலவீனமான ஒரு நிலையிலேயே இருந்தது. ஆனால் இன்று சிறீலங்கா இராணுவத்தின் பலம் என்பது பாரியது.

அதேபோன்று விடுதலைப் புலிகளின் படைப்பலமோ இன்று சிறீலங்கா இராணுவத்தை விட பலமடங்கு பாரியது. குறிப்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் திறமை என்பது வல்லரசுகளின் புலனாய்வுக் கட்டமைப்புக்களுடன் ஒப்பிடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது. அப்படி இருக்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளுவது என்பது நிச்சயம் படுதோல்வியையே அவர்களுக்குப் பெற்றுத் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயுத அமைப்புக்கள் உருவாகி சிறிது காலத்திலேயே அவை முற்றாக அழிக்கப்பட்டுவிடும் சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் வியாபாரிகள். இலாபத்தை அடிப்படையாகக் கொண்டே அவர்களின் பெரும்பாலான நகர்வுகள் இருக்கும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அரசியலும், போராட்டமும் கூட அப்படித்தான் இருக்கும். இவ்வாறு வியாபார நோக்கில் ஊறிப்போயுள்ள ஒரு சமூகத்தின் மத்தியில், அவர்களின் வியாபாரத்தை முற்றாகவே சிதைத்துவிடும்படியான ஒரு ஆயுதப் போராட்டத்தை நீண்ட காலத்திற்கு நடாத்த அச்சமூகம் நிச்சயம் அனுமதிக்காது. இழப்புக்கள் ஏற்பட ஏற்பட, போராட்ட அமைப்புக்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடும் சூழ்நிலை படிப்படியாக உருவாகும்.

முஸ்லிம்கள் மத்தியில் உருவாகும் ஆயுதக் குழுக்களில் உள்வாங்கப்படும் இளைஞர்கள், மார்க்க சிந்தனையில் ஊறிப்போனவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் திருக்குரானை அடிப்படையாக் கொண்டு இறுக்கமான கட்டுப்பாடுகளை முஸ்லிம் சமூகம் கடைப்பிடிக்கவேண்டும் என்று வற்புறுத்தும் நிலை நிச்சயம் ஏற்படவே செய்யும். அவற்றை மீறுவோருக்கு எதிராக மார்க்கத்தில் கூறப்பட்டபடி கடுமையான தண்டனைகளையும் வழங்க ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற அவர்களது செயற்பாடுகள் வெகு விரைவில் அவர்களை சமூகத்திலிருந்து அந்நியப்பட வைத்துவிடும். .

தமிழ் மக்களுக்கு எதிராக முஸ்லிம் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு சிறீலங்கா அரசு உதவிகள் புரியும் என்று ஒரு சிலர் கூறுகின்றார்கள். இது நடைமுறைச் சாத்தியமற்றது. முஸ்லிம் ஆயுத அமைப்புக்கள் உருவானால், அதனால் மட்டக்களப்பை விட மாவனல்லையும், மாளிகாவத்தையும்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகும். இது சிறீலங்கா அரசுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவர்கள் முஸ்லிம் ஆயுதக் குழுக்களை ஒரு அளவிற்கு அதிகமாக ஊக்குவிக்கமாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி சிறீலங்காப் படைகளில்; அவர்களை இணைத்து பயன்படுத்திக்கொள்ளவே அவர்கள் முயல்வார்களே தவிர, முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்கி தன் தலையிலேயே மண் அள்ளிப்போட ஒரு போதும் அவர்கள் விழையமாட்டார்கள்.

சிறீலங்கா அரசு முஸ்லிம் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக செய்திகள் வெளியாகிய மறு கணமே, சிறீலங்கா அரசு சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்ப்பினை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதனால் சிறீலங்கா அரசு ஒரு வரையறைக்கு அப்பால் முஸ்லிம்களை ஆயுதபாணிகளாக்க முன்வராது

இவை அனைத்தையும் விட, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆயுதக் குழுக்கள் உருவாகுவதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு போதும் அனுமதிக்கமாட்டார்கள். முஸ்லிம் இளைஞர்களை உணர்ச்சிவசப்படுத்தி தமது அரசியலைக் கொண்டு நடத்த வேண்டுமானால் அவர்கள் முயற்சிப்பார்களே தவிர, தமது கைகளை விட்டு முஸ்லிம் இளைஞர்கள் தொலைதூரம் செல்வதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள். ஆயுதப் போராட்டங்களை ஊக்குவித்த தமிழ் அரசியல்தலைமைகளுக்கு நேர்ந்த கதியை அவர்கள் நிச்சயம் மறந்திருக்கமாட்டார்கள்.

அடுத்ததாக, முஸ்லிம்கள் வன்முறையில் இறங்கிவிட்டால் எந்த ஒரு தீர்வையும் பெறமுடியாத அளவிற்கு நிலமை படு மோசமாக மாறிவிடும் என்பது புத்திஜீவி முஸ்லிம்களுக்கு நன்றாகவே தெரியும். முஸ்லிம்களின் உரிமைகள் மறுப்பதற்கு, முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டம் மேற்கொள்ளும் ஒரு காரணம் மட்டுமே போதுமானது என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு நன்றாகவே விளங்கும்.

எனவே மொத்தத்தில் முஸ்லிம்களின் ஆயுதப் போராட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் எந்தவகையிலும் சாத்தியமற்ற ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதிக்கப்போவதாக சில முஸ்லிம் அரசியல்வாதிகள் அடிக்கடி பம்மாத்துக் காண்பிப்பது, ஒரு மிரட்டலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அது சாத்தியம் இல்லை என்பது அவர்களுக்கும் நன்றாகத் தெரியும்.

இன்றைய காலட்டத்தில் தமிழ் தரப்பைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினால் மட்டுமே தமிழ் தரப்பால் முஸ்லிம்களை இலகுவாக வெற்றிகொள்ள முடியும். இதுதான் களமுனை யதார்த்தம்.

நன்றி: மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ~தமிழ்அலை| 02-11-03
Reply
#2
இன்று ஹக்கீம் நாடு திரும்புகிறார் புலிகளின் தன்னாட்சி வரைபு குறித்து முஸ்லிம் எம்.பிக்களுடன் பேச்சு.

விடுதலைப்புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகார சபை தொடர்பான யோசனைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடாத் தவுள்ளதாக அமைச்சர் ரவுூவ் ஹக்கீம் தெரிவித்தார். இங்கிலாந்து, அயர்லா ந்து உட்பட மேல் நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று நாடு திரும்பிய பின்னரே பேச்சு வார்த்தைகள் நடைபெறும் என முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இம்மாத நடுப்பகு தியில் இலங்கைக்கு விஜயம் செய் யும் நோர்வே பிரதி வெளிவிகார அமைச்சர் ஹெல்கிசனுடனும், அமைச்சர் ஹக்கீமிடமும் பேச்சு வார்த்தை நடாத்துவார் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை மாற்று யோசனை களை தயாரிப்பது குறித்து தமது ஆலோசனை களை முன்னாள் சட்டமா அதிபர் அரசியலமைப்பு விவகார அமைச்சர், முன்னாள் ஆலோசகரான கலாநிதி ஜம்பட் ஜயம்பதி, விக்கிரபுரத்ன கொங் கொங் பல்கலைக்கழக சட்டத் துறை ஆலோசகர் ஆகியோருடன் விரிவாக ஆராயப்படவுள்ளது.
நன்றி: மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் ~தமிழ்அலை|

ஒட்டகத்திற்கு இடம் கொடுத்தால் அது கூரையத்தான் பிக்கப்பாக்கும்.
Reply
#3
ஒருவரும் இங்கு ஒட்டகமில்லை.தமிழர்களை பின்னர் சிங்களவர்கள் ஒட்டகம் என்பார்கள்.

சிறுபான்மையினரை மதிக்கப் பழகுவோம்.அரசியல் வேறு மக்கள் வேறு..இரண்டையும் அன்று கலந்தமையினால்தான் இன்று சிங்களவரும் தமிழரும் 50 வருடங்கள சென்றாலும் இன்னும் ஒன்று சேர முடியாத காழ்ப்புக்குள்ளாகியுள்ளார்கள்.

இந்த தவறை நாம் செய்யவேண்டாம்.
Reply
#4
தவறுகளை நாம் திருத்திக் கொண்டாலும் அவர்கள் திருந்துவார்களா? அரசியல் லாபங்களுக்காக காற்றடிக்கும் திசையில் பறக்கும் சந்தாப்பவாத அரசியல் வாதிகள் அந்த சகோதரர்களை நல்ல வழிக்குத் திரும்ப விடுவார்களா?
அன்புடன்
சீலன்
seelan
Reply
#5
முஸ்லீம்களைத் தூண்டிவிட்டு அரசியல் லாபம் தேடிய தலைமையின் வழிவந்தவர்தான் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் எனும் மதத்தை முன்னிலைப்படுத்தும் கட்சியின் தலைவர்....ஆயுதம் வாங்க பணம் இருக்கலாம்... இஸ்லாம்... முஸ்லீம் என்று மதம் என்றவகையில் முஸ்லீம் நாடுகளின் ஆதரவு இருக்கலாம்...ஆனால் போராட்டத்திற்கான தேவை என்பது இல்லை...காரணம் தமிழர் தரப்பு
வடக்குக்கிழக்கு முஸ்லீம்களுக்கும்.. தமிழர் தாயகமே அவர்களுக்கும் தாயகம் என்று அங்கீகரித்துள்ளது....!
முதலில் முஸ்லீம்கள் மதவாத வன்முறைகளை மதத்திற்காக வெறிகொண்டு மற்றைய இனத்தவர்களைத் தாக்குவதை... மதவழிபாட்டு இடங்களில் சமூகவிரோத செயல்களுக்கு ஒவ்வொரு வெள்ளியும் தூபமிடுவதை களைய வேண்டும் அல்லது ஒட்டு மொத்த உலகே அவர்களுக்கு எதிராக மனித இனத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆயுதம் தூக்க வேண்டி வரும்...! முஸ்லீம்கள் மதத்தால் தான் தனித்து அடையாளப் படுத்தப்படுகிறார்களே தவிர வடக்குக்கிழக்கில் அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே மதம் தவிர்ந்த சமூக வேறுபாடு என்பது கிடையாது...அப்படி இருக்க முஸ்லீம்கள் ஆயுதப்போராட்டம் என்ற ஒன்றை எதற்காக ஆரம்பிக்க வேண்டும்...தமது மத வெறியை மேன்மைப்படுத்தவென்றால் அது நிச்சயமாக மதவாத பயங்கரவாதமாகவே கருதப்படும் காரணம் அவர்களின் செயல் ஒட்டு மொத்த மனித இனத்துக்கும் பேரழிவு என்பதுடன் மற்றைய மதத்தவரும் இதே போல் தமது மதங்களின் மேன்மைக்காக ஆயுதம் தூக்கினால் மனிதன் வாழ்வது சாத்தியமாகுமா....?!
1990 இல் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் என்றுதான் பார்க்கப்படுகிறதே தவிர அதேகாலப்பகுதியில் முஸ்லீம் காடையர்களும் ஊர்காவல் படையினரும், ஜிகாத் அமைப்பினரும் தமிழ் கிராம மக்களை கொன்றொழித்ததையும் வீடுகளை சூறையாடியதையும் யாரும் நினைவில் கொள்ள மறுக்கின்றனர்...அந்த வகையில் நோக்கின் தமிழ் மக்கள் தான் முஸ்லீம்களின் அநியாயங்களுக்கு எதிராக போராட வேண்டியவர்களே அன்றி முஸ்லீம்கள் அல்ல...!அதேவேளை முஸ்லீம்களுக்கு தாங்கள் செய்துவந்ததின் ஆபத்தை உணர வைக்கவே அவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை சிலர் செய்திருப்பர் ஆனால் அதை தமிழ் மக்கள் அங்கீகரிக்கவில்லை...அவர்கள் முஸ்லீம்களை என்றும் சகோதரர்களாகத்தான் பார்க்கின்றனர் என்பதை சாதாரண முஸ்லீம்கள் அநுபவத்தால் உணர்ந்தே உள்ளனர்...அந்தவகையில் இலங்கையில் தமிழர் பகுதிகளில் முஸ்லீம் ஆயுதப் போராட்டம் என்பது ஒரு சிலரின் வன்முறைக் கும்பல்களாக அன்றி வேறு எந்த அமைப்பினராகவும் இருக்கும் தார்மீக உரிமை அவர்களுக்கு கிடையாது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
பூஷணிக்காய்.. பூஷணிக்காய்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#7
நமக்;குள் பிரிவினை எதற்;கு நாம் எல்லோரும் சகோதரர்கள். இதை புரியாதவர்களுக்;கு புரியவைப்போம்.யாரோ ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தை ஏன் வெறுக்க வேண்டும். அவர்களையும் அரவணைத்து செல்வதுதான்; எல்லோரது விருப்பம்.
Reply
#8
தமிழனிடம் மன்னிக்கும் மனப்பாங்கும் மறக்கும் குணமும் இருந்ததனால் இவைகளைப் பெரித படுத்தவில்லை. அவர்கள் தங்களின் சுயநலங்களுக்காகப் பெரிது படுத்தி ஆதாயம் தேட முயல்கின்றார்கள். விரைவில் பேரினத்தின் பாசம் புரியும் அப்போது நிச்சயம் உண்மைகள் புரியும். தமிழர் யாரையும் என்றும் பிரித்து வைத்துப் பார்க்கவில்லை. அவர்கள் தான் அப்படியானதொரு சந்தர்ப்பத்தை தமிழர் மனங்களில் விதை;தது. அவர்களாக புரிந்து கொண்டு வந்தால் எம் அனைவருக்கும் நலம். நாம் எமக்குள் சாதி மதம் என்ற பிரிவுகளால் பிரித்தாளப்பட்டதனால் தான் இன்று வரை நாம் துன்பப்படும் இனமாகவே உள்ளோம். ஒற்றுமையே இன்று தமிழருக்கு பலம் சேர்க்கும்.

அன்புடன்
சீலன்.
seelan
Reply
#9
ஐயா சீலன் நீங்கள் முன்பு எழுதிய கருத்துக்களை அவசியம் படிக்கவேண்டும். குறிப்பாக வன்னிக்குள் இருக்காதவர்கள்பற்றி எழுதிய கருத்து. அதாவது உங்களையே நீங்கள் மட்டம்தட்டி எழுதியகருத்து. அதற்கு இக்கருத்து ஒருபடி மேல்சென்றுள்ளது.
நன்றி வணக்கம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#10
சுற்றிச் சுற்றி சேற்றுக்குள்ளே இறங்குகிறேன் என்று நிற்கின்றீர்கள். நான் என்ன செய்ய. முதலில் ஊனக் கண்ணை சரி செய்து விட்டு வாருங்கள். யாரவது நல்ல டாக்குத்தரிடம் போய் கண்களுக்கு வைத்தியம் செய்து விட்டு வாருங்கள் பேசலாம். போராட்டத்திற்குப் பயந்து ஓடி ஒழிந்தவர்கள் என்ன காட்டிக் கொடுப்பவர்களையும் நான் மட்டம் தட்டித்தான் எழுதுவேன்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#11
ஐயா நீங்கள் முதலில் பார்க்கவேண்டிய டாக்குத்தரை பாருங்கள்.
பின்பு நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்தால் ஒருவேளை நீங்கள் எத்தனைபேரை அவமதித்துள்ளீர்கள் என்பது உங்களக்குப் புரிந்தாலும் புரியலாம்.. உங்கள் பிறவிக்குணம் வாங்குமட்டும் வாங்கி பின் முகத்திலி துப்புவதானால் அதற்கு ஒன்றும் செய்யமுடியாதுதான்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#12
ஐயா சோதரனே பின்னால் பார்க்காதீர்கள். முன்னால் பாருங்கள். வெகு அருகாமையில் ஒளி தெரிகின்றது. அதை நோக்கிச் செல்ல முயற்சியுங்கள். பின்னால் பார்த்தது நடந்து கொண்டிருந்தால் முன்னால் திறந்து வைத்திருக்கும் சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து அசிங்கங்களுடன் தான் எழுந்து வர வேண்டிவரும். அத்துடன் மூக்குடைபட வேண்டியும் வரும். சென்ற சில தினங்களில் ஆச்சி மூக்குடைபட்டது போல. ஆதலால் முன்னால் வேகமாச் செல்லுங்கள். ஆனால் நிதானமாகச் செல்லுங்கள். நாம் பல துன்பங்களைக் கடந்து வந்தவர்கள். ஆதலால் தற்போது பாதாளச் சாக்கடைகளைத் திறந்து வைத்து விழும் வரை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே வேகமாய் ஒளியை நோக்கி நடவுங்கள். ஆனால் வெகு நிதானமாய். இனிப் பின்னால் பார்க்க வேண்டிய அவசியம் வராதென்று எண்ணுகின்றோம். துரோகிகளுக்கு படியளப்பவர்கள் பாடம் படித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதனின்றும் வெளியெ வருங்கள். அருகாமையில் தெரியும் ஒளியை நோக்கி எல்லோரும் கை கோர்த்துக் கொண்டு செல்வோம். வெற்றி நிச்சயம். பழையவைகளை மறப்போம். மறுபடியும் மன்னிப்போம். ஆனால் ஏமாறமல் கடமையைச் செய்வோம். எழுதியதையே திருப்பித் திருப்பி எழுதிக் கொண்டிருந்தால் அலுப்படிக்கின்றது. ஆகவே நான் எழுதியதை ஒரு புதுக் கண்ணாடி வாங்கிப் போட்டுக் கொண்டு படித்து விட்டு வாருங்கள். உங்கள் துரோகத் தனங்களுக்கு துணைசேர்க்காமல். நிச்சயமாய் யாரும் வர மாட்டார்கள். எல்லோரும் அடையாளம கண்டிருப்பார்கள்.
களத்தில் உள்ள அதிகமானவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் தான் யாராவது எனது எழுத்தைப் பார்த்து அப்படி எல்லோரையும் சேர்த்து குறை சொன்னதா என்னை குறை சொல்ல வில்லை. மாண்பு மிகு உங்களைத் தவிர.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#13
ஏனப்பு சீலன்.. உங்களுக்கு வசதியான நேரம் எங்கேயோவெல்லாம் போறியள்.. சிலசமயம் நூற்றாண்டுகளெண்டுகூட போறியள்.. ஆனால் உங்களது அட்டூழியம் என்று வரும்போது மாத்திரம் பின்னால் பார்க்காதீர்கள் முன்னால் பாருங்கள் என்றால் எப்படி..? அவனவன் வந்து செய்யிற மனிதாபிமான உதவிக்குக்கூட சுரண்ட வந்திருக்கிறான் எண்டு சொல்லித்தானே சுரண்டுறியள். அதுதான் எனக்கு விளங்குதில்லை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#14
வசதியான நேரம் பார்த்துத் தான் உண்மைகள் சொல்லவேண்டும். அப்போது தான் செவிடுக் காதுகளுக்கும் அது போய்ச் சேரும்;. தமிழன் அட்டூழியம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டானே ஒழிய அவனாக அட்டூழியம் செய்ய முயற்சிக்கக் கூட இல்லை. அகிம்சா வாதம் பேசி வேட்டிகிழிய அடிவாங்கியது தான் அன்றைய யதார்த்தம், உண்மை. ஆகவே எங்கே எப்படி பேச வேண்டுமோ அங்கே அப்படித்ததான் பேச வேண்டும். கசாப்புக்கடைக்கரனிடம் போய் தர்மத்தையும் தாத்தாவிட் போய் இன மண் மானத்தையும் பேச முடியுமோ? குட்டக் குட்டக் குனிந்தோம். குனியக் குனிய உதை வாங்கினோம். ஒரு மானமுள்ள மனிதனால் இன்று தலை நிமிர்ந்திருக்கின்றோம். அடிக்கு அடி கொடுத்ததனாலும், அவலத்திற்கு அவலத்தைக் கொடுத்ததனாலும் இன்று தலை நிமிர்ந்திருக்கின்றோம். ஆகவே முன்னால் பாருங்கள். பின்னால் நடந்தவைகள் கெட்ட கனவாக மாறட்டும்.(நாம் குட்டுப்பட்டது கூட) நல்லவைகள் நடக்கும் என்ற நம்பிக்கையி;ல்.

தாத்தா இவர்களின் மனிதாபிமானம் எல்லாம்; யுத்தம் நடக்கும் போது, மனித வாழ்வே சீரழிந்து கிடக்கும் போது எங்கே போனது? ஆணவ அரசினால் பொருளாதாரத் தடை விதித்து பட்டினிச்சாவை நோக்கி ஒரு இனத்தையே தள்ளியபோது, ஆயுதங்கள் கடனுக்கும் உதவிக்கும் கொடுத்து ஒரு இனத்தை அழிக்க துணை போன போது எங்கே இந்த மனிதாபிமானம்? தமது வயிறு வளர்க்க ஆயுதங்கள் விற்று நாடுகளைச் சுரண்டித் தின்பவர்களின் மனிதாபிமானம் பற்றி பேச வெட்கமாயில்லை. இன்றும் எமது கனிவளங்கைளைக் கொள்ளையடித்துக் கொண்டு போகவும் மனித வளங்களைக் சுரண்டிக் கொண்டு போகவும் தான் இந்த கித்தாப்பு எல்லாம். (தாத்தா முன்னர் புலம் பெயர்ந்தவர்களைப் போட்டு குழப்பியது போல குழப்பாமல் கவனமாகப் படியுங்கள். ஒரு சில நாடுகளை மட்டும் தான் நான் குறிப்பாக எழுதுகின்றேன். எதையும் எதிர்பார்க்கமல் உலக அமைதிக்காக பாடுபடும் நாடுகளையும் வம்புக்கிழுக்காதீhகள்) மனிதாபிமானத்தையே வியாபாரப் பொருளாக்கித் திரியும் இவர்கள் செயல் அந்த சொல்லுக்கே இழுக்காகும். அப்படி அவர்கள் ஏதும் செய்தாலும் தமது அநியாயங்களுக்கும், அக்கிரமங்களுக்கும் பிராயசித்தம் தேடத் தானே ஒழிய பரிதாபப் பட்டோ மனிதாபிமானப் பட்டோ அல்ல. இவர்களும், நீ அழிக்க உதவினாய், இனி ஆக்கவும் உதவி செய் என்ற மனப்பான்மையிலேயே பெறுகின்றனர். சுரண்டித தின்பதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசமுண்டு. சரி நீங்கள் எதற்கு இவர்களுக்காய் அடிக்கடி ஒப்பாரி வைக்கின்றீர்கள்? சுரண்டியதில் ஏதும் பங்கு….? சார்பாக பேசுவதால் பிஸ்கட் துண்டுகள் ஏதும்.....?!

அன்புடன்
சீலன்
seelan
Reply
#15
ஓமோம்.. 18 வருஷம் கிழிச்சுமுடிஞ்சு இப்ப இரண்டு வருஷத்துக்கு வக்காலத்தோ.. நல்லது.. தொடருங்கோ..
Truth 'll prevail
Reply
#16
ஐயா சொல்வதையும் சொல்லிவிட்டு மழுப்பல் வேண்டாம்.. எழுதிய அத்தனையையும் போய்ப் பாருங்கள். உங்களது தூற்றல் வேண்டாத நாடு இல்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#17
பதினெட்டு வருடம் நின்று நிலைதததனால் தான் இன்று ஒரு உண்ணத மானத் தமிழ் தலைவனின் கீழ் தமிழன் என்று தலைநிமிர்ந்திருக்கின்றோம்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#18
P.S.Seelan Wrote:பதினெட்டு வருடம் நின்று நிலைதததனால் தான் இன்று ஒரு உண்ணத மானத் தமிழ் தலைவனின் கீழ் தமிழன் என்று தலைநிமிர்ந்திருக்கின்றோம்.
கீழ்தான்.. 50 வருஷம் கீழ்தான்..
கூட்டுச்சேர்ந்ததுகளையும் சேர்த்துத்தானே 18 வருடம்.. பிறகென்ன.. வெட்கம்.. மானம்.. ரோசம்..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#19
இருப்பதனால் தான் நிலைத்து நிற்கின்றோம். தலைநிமிர்ந்து. வரலாற்றுக் கதைகள் மறுபடியும் உயிர் பெறுகின்றன.கோயிலுக்குத் தான் புூவும், கற்புூரமும். வெளிக்குப் போகுமிடத்திற்கல்ல. போற்றவும் தெரியும் தூற்றவும் தெரியும். உண்மை நிலைகளை புரிவதனால் தூற்றுகின்றேன். சொந்தக் கோப தாபத்திலில்லை.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#20
P.S.Seelan Wrote:இருப்பதனால் தான் நிலைத்து நிற்கின்றோம். தலைநிமிர்ந்து. வரலாற்றுக் கதைகள் மறுபடியும் உயிர் பெறுகின்றன.கோயிலுக்குத் தான் புூவும், கற்புூரமும். வெளிக்குப் போகுமிடத்திற்கல்ல. போற்றவும் தெரியும் தூற்றவும் தெரியும். உண்மை நிலைகளை புரிவதனால் தூற்றுகின்றேன். சொந்தக் கோப தாபத்திலில்லை.
நீங்கள் போராட்டம் என்ற குறுகிய வட்டத்தினுள் நிற்கிறீர்கள்.. நான் இலங்கைத்தமிழினம் என்ற பெரிய வட்டத்தினுள் நிற்கிறேன்.. இருந்ததில் நிலத்தில் பாதி இல்லை.. சமூகத்தில் பாதி இல்லை.. ஒழுங்குமுறையில் பாதியில்லை.. பேச்சுச் சுதந்நிரம் தமிழ்ப்பகுதிகளில் இல்லை.. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)