11-21-2005, 03:37 PM
<b>நிலாச்சாரல் இணைய இதழ்</b>
Quote:<b>'பெண் விடுதலை நோக்கிய பயணம்'
மாலதி மைத்ரேயி, சல்மா போன்ற பெண் கவிஞர்கள் தமது சர்ச்சையான படைப்புகளை 'பெண் விடுதலை நோக்கிய பயணம்' என்று சொல்கிறார்கள். இது பற்றிக் கவிஞர் என்ற முறையில் என்ன நினைக்கிறீ¡கள்? </b>
அவர்களின் படைப்புகளில் தனிப்பட்ட சோகங்கள், ஆதங்கங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்தப் பதிவுகளில் சில அசாதாரண வார்த்தைகளை உபயோகித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவிதைகள் பிரபலமானதால், சில பெண் கவிஞர்களுக்கு இப்படி எழுதினால் தான் தனது எழுத்தைப் பெண் இலக்கியத்தில் பதிவு செய்வார்களோ? என்ற எண்ணம் வருகிறது. கவிதை தானாக வந்து விழ வேண்டும். அதில் வார்த்தைகளைப் புகுத்தக் கூடாது.
"சங்க இலக்கியத்தில் 1861 அகப்பாடல்களில் உடலுறவைப் பேசுகிற ஒரு பாடல் கூடக் கிடையாது" என்று பேராசிரியர் தொ.பரமசிவம் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி இருக்க, நாம் இந்தப் பெண் கவிஞர்கள் குறித்த விவாதத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பதால்தான் அவர்கள் மேலும் எழுதுகிறார்கள். ஒரு அணையில் இருந்த தண்ணீரைத் திறந்து விட்டவுடன் தண்ணீர் வேகமாக வரும். பின் மெதுவாக, சமச்சீரான வேகத்தில் போகும். அது மாதி¡¢த் தான் இதுவும். ஒரு கட்டுப்பாட்டில் இருந்த பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். அசாதாரணமானவர்களைப் பற்றிப் பேசிப் பேசியே சாதாரணமாக எழுதுகிற படைப்பாளிகளைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறதோ? என்று எனக்குத் தொ¢யவில்லை.

