Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
சீடியில் படம் பதிவது காட் அடிப்பது தவறா? அவற்றால் பணம் பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தால் தவறில்லை. இணையத்தில் அடுத்தவனுடைய மனைவிக்கு தூண்டில்போடுவதுதான் தவறு. முன்பெல்லாம் திருமணமாகாத பெண்களுக்கு வலைவிரித்தவர்கள் இப்போது மணமான பெண்களை இணையத்தில் தேடுகின்றார்கள். இது வளர்ச்சிதானே. யாழ் இணையத்தில் கிருபன் என்ற இளைஞன் இந்துமதமும் ஆண்பெண் உறவும் என்ற தலைப்பில் அசிங்கமான கட்டுரையை எழுதியதை கள உறவுகள் மறந்திருக்கமாட்டார்கள். யாழ்களத்தை குழந்தைகளும் பார்வையிடுகின்றனர் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றது. சிலகாலத்துக்கு முன்னர் ஒரு சிறுமி இணைந்திருந்தது.இப்படியான கட்டுரைகளை அவர்கள்பார்க்கமுடியுமா? இதைப்பார்த்தபால் பெற்றோர்கள் இணையத்தை விரும்புவார்களா?
இன்னுமொரு இளைஞன் தன்னுடைய இணையம் என்று ஒரு அதி ஆபாச இணையத்தின் முகவரியை யாழில் இணைத்திருந்தான்.
<b>ஐயா எதிரணித் தலைவர் அவர்களேஇ சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும்இ கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்ததுஇ இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... </b>
படத்தை இணையம் இல்லாமல் தரவிறக்கம் செய் அனித்தா ஏதோ ஒரு புதுவழி கண்டுபிடித்திருக்கின்றார் போலும் (அதை எங்களுக்கும் சொல்லுங்கள்)
<b>எதிரணித் தலைவர் அவர்களேஇ மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும்இ பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?</b>
பேரூந்துகளில் இறக்கி வைத்திருக்கலாம் அனித்தா மாட்டினால் தர்மஅடியும் கிடைக்கும். ஆனால் இணையத்தில் அடி கிடைக்காதது என்பது வசதி அல்லவா?
அனித்தா அவர்கள் சினிமாவை குறை கூறினார். போய்ஸ் படத்தில் ஒரு இளைஞனை நிர்வாணமாக ஓடவைத்ததும் தொப்புளில் பம்பரம் விட்டதும் ஓம்லெட் போட்டதும். இளைஞர்களால்தான் அது சினமாவின் தவறல்ல. அதை கையாள்பவர்களின் தவறு. அதே சினிமாவைக்கொண்டு தமிழ்ஈழத்தில் போராட்டத்தை வளர்க்கின்றனர். வி;ஞான தொழில் நுட்பத்தை எப்போதும் இளைஞர்கள்தான் தவறாக பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் ஒரு இளைஞன் தன்னுடைய சகமாணவியுடன் உடலுறவுகொண்டதை கைத்தொலைபேசியில் படம்பிடித்து நண்பர்களுக்கு அனுப்பியதை நீங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
இணையத்தில்
விஷ்ணு கூறியிருந்தார் வங்கி நடவடிக்கைகளை செய்யலாம் என்று ஆம் செய்யலாம். அவர்களுடைய தகவல்களை தெரிந்து கெண்டு வங்கி கணக்கில் மோசடிகளும் செய்கின்றார்கள் அல்லவா?
இணையத்தினால் பலருடைய உழைப்புக்கள் வீணாகப்போகின்றது .மென்பொருள் திருட்டுக்கள். கிறடிற்காட் மோசடி என்று இளைஞர்கள் தொல்லை செய்கின்றனர். சாதாரண இணையத்துக்கு கூட நிம்மதியாக செல்லமுடியாதவாறு ஆபாசப்படங்களும் எங்கள் கணனிகளை தொல்லைப்படுத்துபவர்களுமாக இணையத்தின் உபயோகத்தை சீரழிக்கின்றனர்.
இன்னும் சொல்லிக்கொண்டெ போகலாம் அதை செய்வதற்கு என்னுடைய அணியில் பலர் இருக்கின்றனர். வருவாகள்
உந்த கொமாண்டோக்களை அசரவைக்க எங்கள் கரும்புலிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.
நடுவர்ககளே எதிரணியினர் வெற்றி பெற தங்கத்தாமரை அப்பிடி இப்பிடி என்று குளிர வைக்க பார்ப்பார்கள் மயகத்தில் தவறான தீர்ப்பளித்து தீமைக்கு துணை போகமாடடீர்கள் என்ற நம்பிக்கையில் பின்னால் வர இருக்கும் எமதணிபொங்கியெழும் மக்கள் படைக்கு வழிவிட்டு
வாய்பளித்த இரசிகைக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்
நன்றி வணக்கம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சிறிது இடைவெளியின் பின்னர் விவாதம் மீண்டும் தொடர்கிறது. (எல்லாரும் தூங்கீட்டினம் போல பக்கத்தை இருக்கிறவை தட்டிஎழுப்புங்கோ)
சரி வியாசன் அவர்கள் இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக என்ன சொல்லிச்செல்கிறார் என்று பார்ப்போம்.
என்ன இருக்கைக்கா பஞ்சம் ஏதோ ஓரு ஆசனத்தில உக்காத்தாச்சு அது தான் வேணும் இது தான் வேணும் என்று சண்டை போடல. எல்லாத்தாமரையும் அவரவர்க்களிடத்தையே இருக்கட்டும். (இந்தத்தாமரை விசயம் வம்பாய்ப்போச்சு)
கருத்துக்கு வருவோம் இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக கருத்தை வைத்த அந்த அணித்தலைவரின் கருத்தைக்குறிப்பிட்டு
<b>உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா? </b>
அந்த இணையங்கள் எத்தனையோ தோன்றி மறைந்துவிட்டன என்கிறார் அவை குறிக்கோளின்றி பொழுதுபோக்கை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இணையப்பக்கங்களிள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் தமிழ் இருக்கின்றது என்பதால் தமிழ் இளையோர்கள் அவை யாவற்றாலும் நன்மை அடைகிறார்கள் என்று அறுதியிட்டுக்கூறமுடியாது அத்தோடு அவை யாவும் நன்மை பயக்கும் இணையங்கள் தான் என்றும் கூறிவிடமுடியாது. இணையப்பக்கங்களை உருவாக்குவதற்காக இலவச வசதிகளை பற்பல இணையங்கள் உருவாக்கிக்கொடுத்திருக்கின்றன. ஒருநாளைக்கு ஒரு பக்கத்திற்கு மேலாக தயாரித்துக்கொண்டு போகலாம்.
புலத்துத்தமிழ் இளையோர் இணையத்தை சரியாக பயன்படுத்தவில்லை என்று கூறும் வியாசன் அவர்கள். அப்படிப்பயன்படுத்தியிருந்தால் களத்தில் புனைபெயர்களில் உறுப்பினர்கள் உலாவத்தேவையில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். (குறிப்பாக தமிழினி பற்றிக்கூறியதால் தமிழினி என்ற பெயரில் எனக்கு அத்தனை பிரியம் அதனால் தான் தமிழினி என்ற பெயரை வைச்சிருக்கிறன். இந்தத்தமிழினியைக்குறிப்பிட்டிருந்தா இதைத்தான் சொல்லமுடியும்)
புனை பெயர்களில் வருவதற்குக்காரணம் பெரும்பாலும் உறுப்பினர்கள் தங்களை அடையாளப்படுத்த விரும்பாமையாக இருக்கலாம். அது இந்த நச்சரிப்புக்களை தவிர்க்கவே என்பது எவ்வளவு பொருந்தும் என்று கூறமுடியாது. மேலே கருத்தை வைத்துச்சென்ற ஒருவர் குறிப்பிட்டிருந்தார் தான் எழுதுவது பெற்றாருக்குத்தெரியாது என்று. அப்படியான காரணங்களிற்காகவும் இருக்கலாம். அதிகமாக ஆண் பெண் என்ற பேதம் இன்றி அனைவரும் புனைபெயரில் தானே வருகிறோம் ஒவ்வொருவரும் அதற்குரிய காரணத்தை சிந்தித்தால் தெரியும். :wink:
அடுத்ததாக ஒரு இணையத்தில் அரட்டை அடிக்கச்சென்ற போது தனக்குக்கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
மகனது பெயரின் முன்பகுதியை பயன்படுத்திச்சென்ற வியாசன் அவர்களிடம் கணவன் பற்றி விசாரித்திருக்கிறார் அரட்டையில் அடுத்தமுனையில் இருந்தவர் (உங்கட மகன் பெயரின் முன்பகுதி பெண்ணின் பெயரா இல்லை அந்த ஆசாமிக்கு ஏதாவது பிரச்சனையோ) எதுவானாலும்.
இந்த இணைய அரட்டையின் சீரழிவுகள் பற்றி முன்னால் வந்த இதே அணியினரும் சுட்டிக்காட்டியிருந்தார்கள் இதில் என்ன நன்மையிருக்கிறது என்பதை எதிரணியினர் தான் சொல்லவேண்டும். நட்புத்தேடுகிறோம் என்ற பதில் வைக்கப்பட்டிருந்தது இப்படியான நட்பைத்தேடுவது ஒரு சீரழிவில்லையா அப்படி என்று கேக்கிறார்கள். எங்கே பதில் எப்படி வருகிறது என்று பார்ப்போம்.
இப்படி கசப்பான அனுபவத்தை பெற்ற பெற்றோர் பிள்ளைகளை இணையத்தில் உலாவ அனுமதிப்பார்களா என்று கேட்டிருக்கிறார் வியாசன். இணையத்தில் இந்த அரட்டை தவிர்ந்த இன்னும் எத்தனையோ விசயம் இருக்கிறது. அரட்டை அறைக்குள் மட்டும் ஏன் செல்கிறீர்கள் என்று கூறுவார்களா எதிரணியினர் பார்ப்போமே..??
இந்தப்பட்டி மன்றத்தில் தனிப்பட்ட அதுவும் பட்டிமன்றத்தில் இல்லாதவர்களைப்பற்றிய கருத்தாடல்களைத்தவிர்த்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன். இதனால் வேறு பிரச்சனைகள் மனஸ்தாபங்கள் வரக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. தயவு செய்து இப்படியான கருத்துக்களை தவிர்ப்பது நல்லது.
ஆபாசப்படங்களை பேரூந்துகள் மற்றும் சுவர்களில் இணையத்திற்கு முதலே ஒட்டினார்கள் என்ற கருத்திற்கு பதில் வைக்கையில் அப்படி ஒட்டும் போது மாட்டினால் தர்ம அடிகிடைக்கும் ஆனால் இணையத்தில் அப்படி இல்லை என்கிறார் வியாசம்.
பேரூந்துகள் மற்றும் சுவர்களில் ஒட்டப்படும் ஆபாசப்படங்களை பார்க்கும் பெரியவர்கள் பெற்றோர்கள் (பிறர் நலனின் அக்கறை உள்ளவர்கள்) அவற்றை அகற்றிவிடுவார்கள். இணையத்தில் உள்ள படங்களை யாரும் அகற்றமுடியாது. யாழ் போன்ற கருத்துக்களங்களில் நிர்வாகிகள் அகற்றமுடியும். ஏனையவற்றில் தொடமுடியுமா..??
தொப்பிளில் பம்பரம் விட்டது தொடர்பான கருத்து வந்தது. தொப்பிளில் பம்பரம் விட்டது இளையோரா..?? கொஞ்சம் மேக்கப் பண்ணி இளைமையாய் நடிச்சா இளைஞன் என்று ஆகிவிடுமா என்ன..?? :wink: சினிமாவை சினிமாவாய் ஆபாசம் இன்றி எடுக்கும் ஒருசில இளைஞர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் ஆபாசத்தை படமாக்கி சினிமாவை சீரழிக்கும் பெரியவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் இல்லை என்கிறீர்களா..??
தனது கருத்தில் அடுத்ததாக விஞ்ஞான தொழில்நுட்பத்தை இளைஞர்கள் எப்போதும் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் வியாசன் அவர்கள் ஒரு உதாரணமாக ஒரு மாணவன் அனுப்பிய கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்ட படம் பற்றிசொல்லியிருக்கிறார். இப்படி அருமையான தொழில் நுட்ப வளர்ச்சியை சீரழிவிற்கு பயன்படுத்துகின்ற இளையோரிற்காக வருத்தப்படத்தான் முடியும்.
கைத்தொலைபேசி தொலைத்தொடர்பிற்குப்பயன்படுத்தபடின் அதில் வீடியோ தொழில்நுட்பம் எதற்கு?? என்ற கேள்வியை எழுப்பாமல் பிள்ளைக்கு அதனை வாரிவழங்கிய பெற்றோர்களின் நல்ல மனசைப்பாராட்டவே வேணும். ( ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ளும் மாணவன் என்றால் அவர் சிறியவரும் அல்ல எல்லாம் பிஞ்சில பழுத்ததால் வந்த வினையோ என்னவோ)
இந்த விஞ்ஞான தொழில் நுட்பத்தையும் வீடியோ தொலைபேசியையும் வைத்துக்கொண்டு இன்னும் பல இளைஞர்கள் உலகம் எங்கிலும் இருக்கின்ற செய்திகளை நமக்கு உடனுக்குடன் வழங்குகிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேக்கிறார்களா எதிரணியினர் பார்ப்போமே.??
சாதாரண இணையத்திற்குகூட நின்மதியாக செல்லமுடியாத படி ஆபாசப்படங்களை போடுவதும் தங்கள் கணணியை தொல்லைப்படுத்துவதுமாய் இளையோர்கள் பலவற்றைச்செய்கிறார்கள் என்று நொந்தவண்ணம் கூறிச்செல்கிறார்.
இந்த தொல்லைகளைத்தவிர்க்கத்தானே பல நிறுவனங்கள் ஆன்ரி வைரஸ்களை உற்பத்தி செய்து விட்டிருக்கின்றன இவற்றை நினைத்து நித்திரையைத்தொலைக்காமல் வாங்கிப்பாவித்து பயனடையுங்கள் என்று கூறிக்கொண்டு அடுத்த அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<span style='font-size:22pt;line-height:100%'>பட்டிமன்றத்தின் நடுவர்களாக,
தீர்ப்பளிக்க வந்திருக்கும் செல்வமுத்து மற்றும் தமிழினிக்கும்
பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த இரசிகைக்கும்
இங்கு பங்கு பற்ற இடம் தந்த யாழ் களத்துக்கும்
எதிரணித் தலைவராக இருக்கும் சோழியனுக்கும்
அவரது குழுவினருக்கும்
<b>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள்
இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்கள்</b>
என்ற எமது அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைஞனுக்கும்
எமது பக்க சார்பாக பேசும் நண்பர்களுக்கும்
இவற்றை ரசித்து சுவைக்கும் வாசக நண்பர்களுக்கும்
என் இனிய வணக்கம்.
எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி!
இதற்காக முயற்சி செய்யாமல் இருப்பதும்,
அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்...
இன்று செய்ய ஆரம்பிக்கும் முயற்சி
நாளை எல்லோரும் பாராட்டப்படுவதாக மாறலாம்..! அல்லது அப்படி இல்லாவிட்டாலும் செய்வதைச் செய்து விட்டோம்
என்ற ஆத்ம திருப்தியாவது கிடைக்கும்...
வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை..
அல்லது குறைந்த பட்சம் சரியான மதிப்பு கூட தருவதில்லை உலகம்.
அது போலவே நல்லவைகளை விட
தீமைகளே பலரது கண்ணையும் மனதையும் வசீகரிக்கின்றன.
எதுக் கெடுத்தாலும் அதன் நன்மைகளை பார்ப்பதையும்
ஆராய்வதை விடுத்து தீயவற்றை ஆராய்வதிலேயே
பல உள்ளங்கள் காலத்தைச் வீணடிக்கின்றனவே?
அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
எனவே
ஒரு சிறு கதையோடு இந்த பட்டி மன்றத்துக்குள் நுழையலாம் என நினைக்கிறேன்.
உங்கள் அனுமதி நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ஒரு சிறப்பு மிக்க நாடகமொன்றைக் காண இரண்டு நண்பர்கள் திரையரங்கு ஒன்றுக்கு சென்றார்களாம்.
அந்த நாடகத்தில் கதாநாயகி பாத்திரத்தில் நடித்த அழகான கதாநாயக நடிகையின்
கடைசி அத்தியாயமான அவள் இறக்கும் காட்சி வந்த போது
அரங்கமே நிசப்தத்தின் உச்சத்தை அடைந்து காணப்பட்டதாம்.
நாடகத்தில் அமிழ்ந்து போயிருந்த இரு நண்பர்களில் ஒருவர்
விழித்த கண் வாங்காது மேடையை பார்த்து விறைத்து நின்று கொண்டிருந்த அடுத்த நண்பரிடம் கேட்டாராம்.
\"நடிப்பு எப்படி என்று?\"
அதற்கு கண் வாங்காது மேடையை பார்த்து கொண்டிருந்த நண்பர் சொன்னாராம்
\"இன்னும் கொஞ்சம் துணி விலகாதா என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\" என்று..........
இது போலத்தான் நம் எதிரணியில் பலர்
நல்லவற்றை நுகரத் தெரியாது.
தவறான வழிகளில் போய் மூக்குடைபட்டு வந்து
இங்கே தமது அவலங்களைக் கொட்டுகிறார்கள்.
இது போன்ற அனுபவங்கள் எமது அணியினருக்கு கிடைத்ததில்லை.
காரணம் இதற்கான தேவை எமக்கில்லை என்பதை ஆரம்பம் முதலே விளக்கி வந்திருக்கிறார்கள்.
இனியாவது அப்படியான இடங்களுக்கு செல்ல மாட்டார்கள். :?:
காரணம் இந்த பட்டி மன்றம் நிச்சயம் இவர்களை நல் வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை
எமது அணியினருக்கு உண்டு.
எனவே வெட்டிப் பேசுவதை தவிர்த்து,
.....................
எதிரணி நண்பர்கள் தெரியாமல் இருக்கும் சில விடயங்களை முன் வைப்பது நல்லது எனக் கருதுகிறேன்.
சர்வதேச தகவல் வலைப்பின்னலில் சிக்கிய
உலக அரசியல் , அமெரிக்காவில் இராணுவ தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ,
முதலில் கணனிகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வலைப் பின்னல்,
பூகோள, நிர்வாக எல்லைகளைக் கடந்து
உலகின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கும்
இணையமாக வியாபித்திருப்பதற்கான சான்று கொண்ட
பல தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.
அரச நிர்வாகத்தில் இருந்து
பொழுது போக்கு வரை மட்டுமல்ல
அனைத்துத் துறைகளையும் இணையம்
இன்று ஆக்கிரமித்திருக்கிறது.
அது வர்த்தக நடவடிக்கைகளுக்கு உதவுகிறது.
கல்வி அபிவிருத்தியிலும் முக்கியமானதாக திகழ்கிறது.
ஒட்டுமொத்தமாக கூறுவதானால்,
இணையம் என்பது தகவல் புரட்சிக்கான ஆணிவேர்
என்ற நிலையில் இருந்து
சமூக மாற்றத்திற்கான இயந்திரம் என்றவாறு
உயர்ந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
மரணப்படுக்கையில் இருந்த தமிழ் கூட இணையத்தின் வழி பிராணவாயு கொடுக்கப்பட்ட நோயாளியின் நிலையில்
தற்போது பிழைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
தமிழ் மட்டுமல்ல மனித உயிர் காப்பதற்கான அறுவைச் சிகிச்சைகள் கூட
இணைய ஊடக வழி மூலம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளன.
இன்று இணைய ஊடகம்,
வலைப்பதிவுகள், இணையக் குழுக்கள் என்று
பார்க்கும் திசை எங்கும் தமிழ் மொழியை வியாபிக்க வழி வகுத்திருக்கிறது.
<b>\"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" </b>
என்னும் உயர்நோக்கத்தின் பல பரிமாணங்களாக
இணையம் தமிழை உலகெங்கும் பரப்ப வழி செய்திருக்கிறது.
அதாவது
இணைய பத்திரிகையாக - சஞ்சிகையாக -
தளமாக -மின்நூலகமாக - ஒலி-ஒளி வடிவாக ...................இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான
சிறப்பாய் பார்ப்போமானால் மிகப் பெரிய மின் நூலகங்களை
தமிழ் இணையப் பல்கலக்கழகங்கள் வடிவமைத்துள்ளது.
இவ் இணைய நூலகங்களில்
பாடத்திட்டம் தொடர்பான நூல்களும்
குறிப்புதவி நூல்களும் உள்ளன.
சங்க இலக்கியங்கள் முதல்
இக்கால இலக்கியங்கள் வரை
எல்லாத் தமிழ் இலக்கியங்களும்
இந்த மின் நூலகங்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்ப் பண்பாடு தொடர்பான ஒளி- ஒலிக் காட்சிகளும்
தமிழ்ப் பண்பாட்டுடன் தொடர்பான பரதநாட்டியம், நாதசுர இசை, ஏறு தழுவல் முதலானவற்றின் ஒளி- ஒலிக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
அறிவியல், தொழில் நுட்பம், மருத்துவம் தொடர்பான ஆங்கிலக் கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களும் மின்நூலகத்தில் தரப்பட்டுள்ளன.
ஏனைய உலக மொழிகளும் அடக்கம்.
சாதாரண நூலகத்திலிருந்து இந்த மின்நூலகங்கள் பல சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது.
தேவைப்படும் நூலை உடனே எடுத்துப் படிக்க இயலும்.
ஒரு நூலில் தேவைப்படும் பகுதியை மட்டும் உடனே தேடிக் கற்க இயலும்
பல்வேறு நூல்களில் உள்ள பல்வேறு கருத்துகளைத் தேடுதல் வசதியின் மூலம் ஒரே இடத்தில் திரட்டிக் கற்க இயலும்.
ஒரே நேரத்தில் ஒரே நூலை எத்தனைபேர் வேண்டுமானாலும் எங்கே இருந்தும் படிக்க இயலும்.
இப்படியான பணிகள் மூலம்
ஒருவரால் விரும்பிய ஒன்றை கற்பதற்கு கல்வி நிலையங்களை நாடிப் பொழுதை வீணடிக்க வேண்டியதில்லை.
நாடு விட்டு நாடு போக வேண்டியதில்லை.
இணைய வழி முலமே எதை வேண்டுமானாலும் எங்கிருந்தும் கற்கலாம்.
எந்த ஒரு கல்வி கற்கும் செயலுக்கும் அடிப்படத் தேவைகளான பாடங்களும் கலந்துரையாடல்களும் -
பயிற்சிகளும் தன் மதிப்பீடுகளும் - நூலகம்/அகராதி
- இறுதித் தேர்வுகள் போன்ற இவை அனைத்துமே, ஆங்கிலத்தில் (ஏனைய மொழிகளில்) மட்டுமல்ல தற்போது தமிழ் இணையதளக் கல்வியிலும் இடம்பெற்றுள்ளன.
பாடங்களுடன், பயிற்சிகள், தன்மதிப்பீடு வினாக்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இணைய வாயிலாகவே ஆசிரியருடன் கலந்துரையாடும் (CHAT) வசதியும் வழங்கப்படுகின்றது.
தவிரவும் இணைய வழித் தேர்வுகளை மேற்கொள்ளவும், எழுத்துத் தேர்வு எழுதவும் தொடர்பு மையங்கள் மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் எத்தனை எத்தனை.................
ஆங்கிலத்தில் இருக்கும் வலைத்தளங்கள் போல்
தமிழில் வலைத்தளங்கள் இருக்காது போனாலும்
ஒரு மாபெரும் அதீதமான வளர்ச்சி தமிழ் இணையத்தளங்கள் ஊடாக உருவாகியதை
யாராலும் மறுக்க முடியாது.
இணைய வழி தமிழ் வலைப்பதிவுகள்
மெல்ல மெல்ல தமிழ் இணைய உலகில்
தனக்கென தனியானதொரு இடத்தை பிடித்து வருகின்றன.
இன்னொரு முக்கியமான நிகழ்வு
ஏராளமான புதியவர்கள் உற்சாகத்துடன்
தமிழில் புதிய ஆக்கங்கள்,
வெளியான தமிழ் இலக்கியங்கள் போன்றவற்றை மின்பதிப்பாகவும் தந்த வண்ணமுள்ளனர்.
இணையத்தின் ஆணி வேரே Integration என்னும் ஒருங்கிணைப்புதானே?
<b>கூடி வாழ்ந்தால் கோடி</b> நன்மை என்று முன்னோர் சொன்னவற்றை இணைய வழி செயல்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கிறது.
உலகெங்கும் பரந்து வாழும் மக்கள்
முகம் தெரியாமல் இருந்தாலும்
ஒரே சமயத்தில் இணையத்தின் வழி இணைந்து
கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும்
நட்புப் பாலம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் முடிகிறதே என்பது பல காலத்துக்கு முன் நினைத்தும் பார்க்க முடியாத அதிசயம்தான்.
அது
நிலவில் மனிதன் கால் பதித்ததற்கு ஒப்பானது.
வளர்ந்து வரும் வலைப்பதிவுலகத்தின் போக்கை பார்க்கும் போது
இதுவரை வலைப்பதிவு வைப்பதெல்லாம் வெறும் புகழுக்காக, மறுமொழிக்காக எழுதப்படுபவை..
வீண்வேலை என்று கருத்து தெரிவித்து வந்தவர்களே கூட
இன்று வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதிலிருந்து
இணைய உலகில் இதற்கு கிடைக்க ஆரம்பித்திருக்கும் முக்கியதுவத்தை உணரலாம்.
எண்ணிக்கையின் அடிப்படையிலும் சரி,
தொழில்நுட்ப ரீதியாகவும் சரி- வலைப்பதிவுகளில் நாம் காணும் சீரான வளர்ச்சியும், அடுத்தடுத்த படிநிலையை அடைவதில் இருக்கும் உத்வேகமும் இணையம் சம்மந்தப்பட்ட தளங்களில் இருப்பது என்பது கண்கூடு.
<b>யாகு</b> குழுவில் என்று பார்த்தால் தமிழில் தான் அதிக அளவில் குழுக்கள் இருக்கின்றன.
அதே போல வலைப்பூக்களிலும் கூட.. தமிழ் தான் அதிகம் ஆட்சிமொழி...
வலைப்பூக்களில் பல திறமையான எழுத்தாளர்கள் இன்று எழுதிக்கொண்டிருக்கிறார்கள்...
ஈழத்தவரான நமக்கு சொந்தமான பல தமிழ் எழுத்துப் பொக்கிசங்கள்
யாழ் நூலக எரிப்போடு மண்ணாகி விட்டது.
அது போலவே நம் வளர்ந்து வரும் எழுத்தாளர்களது எண்ணங்கள் கூட தொலைந்து போனதும்
மறுப்பாகி குப்பைகளுக்குள் தூக்கி எறிப்பட்டதுமான நிகழ்வுகள் ஏராளம்.
இன்றைய நிலை அன்று இருந்திருந்தால்
எவ்வளவோ பதிவுகள் பாதுகாப்பாய் இருந்திருக்கும்?
எல்லோரும் எல்லாமும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை... சும்மா தோன்றுவதை கிறுக்கித்தள்ளினால் என்ன தவறு.. வாய்ப்பிருக்கும் போது, குறிப்பு போல மனதில் எழும் எண்ணங்களை எழுதி வைத்தால், என்றேனும் நாமே திரும்பிப் பார்க்கும் போது, மனம் கனிய வாய்ப்பிருக்கிறது..
அதுவே பலருக்கு ஒரு பதிவாகவும் ஆகி விடும்.
பலர் எழுதும் கட்டுரைகள் மூலம் அவர்களது பயமற்ற குரலை தமிழில் வெளிப்படுத்தியது என்றால், பயமற்ற சிந்தனைகளை இணையத்தில் வெளிப்படுத்தக் காரணமாய் இருந்ததும் இருந்து வருவதும் இணையதளம் என்று சொல்லலாம்.
இணையதளங்கள் \"தமிழின் மிக முக்கியமான விவாதங்ககளுக்கு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. சிறு பத்திரிகைகளும் சரி, பெரும்பத்திரிகைகளும் சரி தொடத் தயங்குகிற விவாதப் பொருட்கள்
இணைய வழி விவாதிக்கப் பட்டுள்ளன.
இப்படி விவாதத்தளத்தை விரிவு படுத்துவதும், ஆழப்படுத்துவதும் அதில் பங்குபெறுவோரின் விரிவாழத்தினைப் பொறுத்தது.
பொதுவில் காரசார விவாதங்களில் ஈடுபடுபவர்கள்,
தனி மடலில் நட்பு பாராட்டிக் கொள்வதெல்லாம்
இங்கே வெகு சாதாரணம்.
ஒருவர் நெடுநாள் வலை பதிக்கவில்லையெனில் அவரைப்பற்றிய கவலைகளையும், விசாரிப்புகளையும் சக வலைப்பதிவாளர்களிடையே காணலாம்.
இப்படி இணையத்தின் மூலம் துளிர்க்கும் நட்புகளும், கிடைக்கும் தொடர்புகளும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை பயப்பனவாக இருப்பதை அவரவர் வாழ்க்கையில் அறியலாம்.
கதை, கவிதைகள் அல்லாமல் அறிவியல், மானுடவியல், மொழிபெயர்ப்பு, நடப்புச் செய்திகள், விமர்சனங்கள் என்று இணையம் அளவுக்கு ஆழமாகவும் அறியாப் பிரதேசங்களைத் தொட்டும் எழுதப்பட்ட கட்டுரைகளை இடம் பெற வைத்த சிறப்பு இணையத்துக்கு உண்டு.
மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது.
சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.
\"சிறியோரை இகழ்தலும் இலமே\" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் இணைய ஊடகம்
சம-மரியாதை தருகிறது.
புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காத பத்திரிகைகள் இருக்கின்றன.
புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்தும் இணைய ஊடகத்தின் பணி முக்கயமானது.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது.
இது தமிழனின் துரதிர்ஷ்டம்.
அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள்.
மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.
குக்கிராமத்திலே இருக்கும் மாணவனின் சிந்தனையில் உதித்த பூமியைப் புரட்டும் கவிதையையோ அல்லது கட்டுரையோ வெளிவர இணையம் உதவுகிறது.
வெகுஜனப் பத்திரிக்கைகள் அடையாளம் காணாத
மிகச் சிறந்த கலைஞர்களை நாம் இணையத்தில் காணமுடியும்.
வெகுஜனப்பத்திரிக்கைகள் பிரசுரிக்காத இலக்கிய வடிவின் புதிய வடிவங்களும் எதிர்கால இணையத்தில் உருவாகும்.
இணையத்தாலும் வலைப்பூக்களாலும் அச்சு ஊடகங்களுக்கும் நிறைய நன்மை இருக்கிறது.
இன்றைய சூழலில் திரைப்பட விமர்சனங்கள் கிடைக்கின்றன.
நல்ல நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், பழைய கால நூல்களைப் பற்றிய அறிமுகங்கள் போன்றவை அச்சு ஊடகங்களில் கிடைப்பதில்லை.
இவை இணையத்தின் வாயிலாகக் கிடைக்கிறது.
ஜப்பான், சீனா, கொரியா, தைவான், கொங்காங், போன்ற நாடுகளில் எங்கும், எதிலும் சீனமொழியும், ஜப்பானிய மொழியும் இருக்கிறது. அவர்கள் படிப்பது, பேசுவது, கேட்பது, கணிணியில்,..........
ஒருபக்கம், அவர்கள் அவர்களுடைய மொழியில் படிப்பதால் அவர்களால் புதியன கண்டுபிடிக்கமுடிகிறது.
கணிப்பொறி ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குச் செய்திகளைப் பரிமாறும் முயற்சியில்
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு
அறிவியலாளர் முதன் முதலாக வெற்றிபெற்றனர்.
அன்று தொடங்கிய அப் பணி விரிந்து வளர்ந்தது.
உலகளாவிய அளவில் கணிப் பொறிகளிடையே செய்திகளைப் பரிமாறும் வகையில்
இணைக்கும் வலைப் பின்னல் எழுந்தது.
வளர்ச்சிக்கு வாய்ப்பான வகையிலேயே அவ்வலைப் பின்னல் இணையமாகியுள்ளது.
மனித சமூகத்திற்குக் கிடைத்துள்ள
மாபெரும் கொடையே இணைய ஊடகம்.
தகவல் பரிமாற்றத்திற்கும் விரைந்த தொடர்பிற்கும் சிறந்த தள மேடையே இணைய ஊடகம்தான் என்பதில் ஐயப்பாடு இருக்காது.
உலகின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு,
மற்றொரு மூலையில் கிடைக்கும் தகவல்களைப் பெறவும்; நிகழும் நிகழ்ச்சிகளை அறியவும்; உற்பத்தியாகும் பொருள்களை வாங்கவும்; இணையத்தின் இத்தகைய வலிமைகளை இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய உலகில் எல்லாமே சாத்தியம்தான்.
நீங்கள் வெளி நாடு சென்றிருந்தால் அங்கேயுள்ள ஒரு கணணி முன் இருந்துகொண்டு, உங்கள் வீட்டு கணணியை (அதன் முன்னால் இருந்து இயக்குவதுபோல்) இயக்க முடியும்.
சமகால தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலக மக்கள் அனைவரும் சமமாக அடைய வேண்டுமென்ற நோக்கில் ஐக்கிய நாடுகள் போன்ற அமைப்புக்கள் எவ்வளவோ முயற்சி செய்கின்றன.
இவை எல்லாம் சேர்ந்து எதிர்காலத்தில்
பன்முக ஆற்றல்வாய்ந்த இணையம்,
தமிழ்கூறும் நல்லுலகுக்குப் பயன் தரவேண்டும்.
தரும்.
<b>மெல்ல அல்ல விரைவாகவே தமிழ்
இணையத்தில் சிறக்கும்.</b>
அடுத்த தலைமுறை தமிழின் பெருமையை உணர இணையத்தின் பிரதான மொழியாக
தமிழ் மொழி அமைய வேண்டும் .
இது உண்மைதான்.
தமிழிலமைந்த பயன்பாட்டு மென்பொருட்கள் பெருக பெருக இன்றுள்ள இளைய தலைமுறையும் தமிழை மறக்க மாட்டார்கள்.
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்.......</b>
எனக் கூறி
எமது நண்பர்கள் நாங்கள் விட்டுச் சென்ற மிகுதியை தொடர்வார்கள் என்ற நம்பிக்கையோடு
வாய்ப்பு தந்த அனைவருக்கும்
நன்றி கூறி விடைபெறுகிறேன்.
வணக்கம்.</span>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
தனது விவாதத்தை ஆளமாக வைத்துச்சென்றிருக்கிறார் அஜீவன் அவர்கள்.
அவரது கருத்தில் இருந்து.
<b>எந்த ஒரு முயற்சியை ஆரம்பித்தாலும்,
அதை குறை சொல்வதற்கு யாரேனும் இருந்தே தீர்வார்கள் என்பது எழுதப்படாத விதி! தற்காக முயற்சி செய்யாமல்
இருப்பதும், அதை தவிர்ப்பதும் சரிதானா என்று கேட்டால்.. சரியல்ல என்றே சொல்லத்தோன்றும்... </b>
என்று கூறிகிறார் அஜீவன். எந்த ஒருவிடயத்திலும் உள்ள நிறைகளை எந்த அளவிற்கு நாங்கள் ஏற்கிறோமோ
அதே அளவிற்கு அதில் உள்ள குறைகளைப்பற்றியும் நாங்கள் சிந்திக்கதவறின் அந்த முயற்சியில் உள்ள மறைமுகமான அல்லது நேரடியான பாதகங்களை நாங்களே எதிர்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத்தள்ளப்படுவோம். நிறைகளை ஏற்கத்தயாராக இருக்கும் முயற்சியாளன் கண்டிப்பாக குறைகளையும் ஏற்கத்தயாராக இருக்கவேண்டும் இல்லையே அவனால்
வெற்றிபெறமுடிமா..?? குறைகள் சொல்கிறார்கள் என்பதற்காக முயற்சியைக்கைவிடமுடியுமா..?? எதிர்நீச்சல் போட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படவேண்டின் அவற்றைச்செய்து வெற்றி அடைவது ஒரு முயற்சியாளனது கடமை நொந்து கொண்டு ஒதுங்கிக்கொள்வது தனது முயற்சியில் அந்த முயற்சியாளனிற்கு இருக்கின்ற நம்பிக்கையின்மையையே காட்டும்.
<b>வாழும் காலத்தில் யாரையும் தூக்கிவைத்து கொண்டாடுவதில்லை.. அல்லது குறைந்த பட்சம் சரியான
மதிப்பு கூட தருவதில்லை உலகம்.</b>
உண்மை வாழும் போது மிகவும் தூற்றப்பட்ட கலைஞர்கள் நம் தமிழ் வரலாற்றில் இருக்கிறன்றார்கள். ஆனால் தூற்றுகிறார்கள் என்று அவர்கள் துவண்டுபோனார்களா..?? பாரதியார் எத்தனை எதிர்ப்புகளிற்கு மத்தியில் எத்தனை போராட்டங்கிற்குள்ளும் தனது படைப்புக்களை வழங்கிவிட்டுச்சென்றிருக்கிறார். சிறந்த கலைஞன் தன்னை பிறர் தூக்கிவைத்துக்கொண்டாடவேண்டும் என்று எதிர்பார்ப்பானா..??
தனது கருத்திறக்கு வலுவூட்டும் விதமாக ஒரு சிறிய கதையையும் கூறிச்செல்கிறார். இன்னும் கொஞ்சம் துணிவிலகாதா என்று பார்த்துக்கொண்டிருந்த
அந்த நபர் போன்றவர்களுக்கு இன்றைய சினிமாக்களில் பலகாட்சிகள் இருக்கின்றன இனிமேல் அப்படி கஸ்டப்படத்தேவையில்லையோ..?? :wink:
நல்லவற்றை நுகரத்தெரியாத எதிரணியினர் மூக்குடைபட்டு வந்து தமது அவலங்களை கொட்டுகிறார்கள் என்று கூறும் அஜீவன் அவர்கள் இப்படியான அனுபவங்கள் தமது அணியினருக்கு இல்லை என்று கூறுகிறார். இதற்கு என்ன கருத்துச்சொல்லப்போகிறார்கள் எதிரணியினர் பொறுத்துப்பார்ப்போம். இந்த கூற்று வெறுமனவே இந்தப்பட்டி மன்றத்திற்காக மட்டும் அன்றி நியமாகவே அது தான் நிலை என்றால் பாராட்டப்படவேண்டிய விடையம். :wink:
மேலும் அவரது கருத்துக்களைப்பார்க்கையில் இணையத்தின் நன்மைகள் பலவற்றை சிறப்பாக வைத்துச்சென்றிருக்கிறார். (இவை அனைத்தும் நமது புலம்பெயர்வாழ் இளையோருக்கு நன்மை தருகிறதா பொறுத்திருந்து பார்ப்போம். ) அரச நிர்வாகத்தில் இருந்து பொழுதுபோக்கு வரை மட்டுமன்றி அனைத்துத்துறைகளையும் இணையம் ஆக்கிரமித்துள்ளது என்ற கருத்தை முன்வைத்தார் அஜீவன் அவர்கள். இணையமானது கல்வி அபிவிருத்தியிலும் முக்கியமாக திகழ்கிறது என்கிறார். இது மறுக்க முடியாத உண்மை இதை இல்லை ஏன்று எதிரணியினரால் கூறமுடியமா..??
அண்மையில் நடந்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. எங்கள் கல்லூரியில் கல்விகற்கும் சகமாணவிக்கு ஒரு கடிதம் பெறவேண்டிய அவசர அவசிய தேவை வந்தது. அவர் உரிய இடத்திற்கு சென்று கேட்டபோது. எங்கள் சிஸ்டம் சட்டவுன் ஆகிவிட்டது வழமைக்குத்திரும்ப இன்னும் 2 நாட்கள் எடுக்கும் என்று கூறினார்கள். முற்றுமுழுதாக இணையத்தை தங்கியிருக்கும் போது இப்படியான சில பிரச்சனைகளையும் எதிர்நோக்கவேண்டி வரலாம். இவற்றைதவிர்க்கும் நடவடிக்கைகளை செய்து வைத்திருந்தால் அவற்றையும் வெற்றிபெறலாம்.
உலகஅரசியல் நிர்வாகம் என்று இணையம் புகுந்து விளையாடும் பல துறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார் அஜீவன் அவர்கள். இவற்றை இல்லை என்று கூறமுடியுமா எதிரணியினரால்?
மரணப்படுக்கையில் இருந்த தமிழ் இணையம் வழி பிராணவாயுவைப்பெற்று நோயாளியின் நிலையில் பிழைத்துள்ளது என்று ஒரு கருத்தை வைத்துள்ளார் அஜீவன். நோயாளியாச்சோ பிழைத்துள்ளதோ.. சில நோய்களை பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை தமிங்கிலம் தங்கிலீஸ் என்று பற்பல வடிவங்களில் இணையங்களில் தமிழ் கையாளப்படுகின்றது. இது தமிழில் மட்டும் அல்ல ஆங்கிலத்திலும் உண்டு. குறிப்பாக எழுத்துவடிவில் சொற்கள் சுருக்கப்பட்டு புதிய முறையே உருவாகி வருகின்றது. இது எந்த அளவில் ஒருமொழிக்கு நன்மை தருகிறது என்பது கேள்விக்குறியே..??
இணையத்தின் நன்மையால் உருவாகியிருக்கின்ற யாகூ குழுக்கள் மற்றும் அதிகரித்துவருகின்ற வலைப்புதிவுகள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். தமிழில் உள்ள இலக்கியங்கள் மின்னூல் வடிவில் இணையத்தில் கிடைக்கின்றன தமிழ்ப்பண்பாடு தொடர்பான ஒளி ஒலிக்காட்சிகள் இணையத்தில் இருக்கின்றன என்கிறார் அஜீவன். தமிழ் ஆராய்ச்சித்திட்டங்கள் பல இணையத்தின் ஊடாக உருப்பெற்று தங்கள் சேவையை ஆற்றிக்கொண்டிருக்கின்றன என்றும் கல்வி தொடர்பாக இணையம் வழங்கும் நன்மைகளை கூறிவிட்டிருக்கிறார். இளையோர்கள் அதிகமாக மாணவர்களாய் இருப்பார்கள் அவர்களிற்கு இது நன்மையில்லையா என்ன..?? புலத்தில் வாழ்பவர்கள் இலக்கியம் படிக்க புத்தகம் இல்லையே என்ற வருத்தத்தில் இருக்காது. மின்நூல் வாயிலாக கற்றுக்கொள்ள முடியும். அப்படி என்றார்கள் எங்கே எதிரணியினர் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம்.
யாழ்நூலக எரிப்பைப்பற்றி நினைவுகூரும் அஜீவன் அவர்கள். இணையவசதியிருந்திருந்தால் அந்த அரியபொக்கிசங்கள் மண்ணாகியிருக்கமாட்டாது பாதுகாக்கப்பட்டிருக்கும் என்கிறார்.
பத்திரிக்கைளிடம் இருக்கின்ற ஒரு சிறுமையைச்சுட்டிக்காட்டியிருக்கிறார். புகழ் பெற்றவர்கள் எழுதுபவையை மட்டும் எடுத்து பிரசுரிப்பார்கள் புதியவர்கள் புதிதாக ஆரம்பிப்பவர்களது ஆக்கங்களைக்கண்டு கொள்வதில்லை. ஆனால் இணையத்தில் அப்படி இல்லை எல்லாருடைய ஆக்கங்களும் வெளியிடப்படுகிறது. தாங்களாகவே வெளியிடமுடியும் என்கிறார். இது எழுத்துத்துறையில் இளையோருக்குக்கிடைத்த வரப்பிரசாதம் இல்லையா??. எதிரணியினர் என்ன கூறுகிறீர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இணையத்தினால் கிடைக்கும் இன்னொரு நன்மையை சுட்டிக்காட்டுகிறார் நாங்கள் பிறநாட்டில் இருந்து கொண்டும் எங்கள் கணணியில் உள்ளவற்றை பார்வையிடலாம் கணணியை இயக்கமுடியும் என்கிறார் இது நன்மையில்லையா.??
<b>இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும் எனக் கூறி </b>
கடைசியாக தனது கருத்தில் மேற்கண்டவாறு உறுதிபடக்கூறிச்செல்கிறார். எங்கே உலகத்தை ஆளும் இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர்கள் சீரழிகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நடுவர் அவர்களிற்கும், இளையோரை நல்வழிப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்கள் தவறாகப் போய்க்கொண்டிருப்பதை சுட்டிக்காட்ட சோழியன் அண்ணாவின் தலமையில் இங்கு இருக்கும் என்அணி சக நண்பர்களிற்கும், கெட்டுப்போகிறார்கள் என்று தெரிந்தும் சும்மா ஒப்புக்காக வாதாட வந்திருக்கும் எதிரணி நண்பர்களிற்கும் முதலில் வணக்கங்களைக் கூறிக்கொண்டு நேரடியாக விவாதக்களத்தில் இறங்குகின்றேன்.
எனக்கு முன் வந்து வாதாடிச்சென்ற எதிரணி நண்பரின் வாதத்திறனை பார்த்து வியந்து போய்விட்டேன். இணையம் அவரை எப்படிக் குழப்பவாதியாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா, இங்கு விவாதத்தின் தலைப்பு இணைய ஊடகத்தால் இளையோர் நன்மை அடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா என்று இருக்க அவர் அதனைத் தொட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் அதனால் சீரழிந்த இளையோரே அதிகம் உள்ளதாலாகும்.<b> நடுவர் அவர்களே பாருங்கள் அவர்களிற்கே தங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தான் தலைப்பை மறந்து ஏதேதோ எல்லாம் கூறுகிறார்கள்.</b>
அவர் நல்லதொரு கதையையும் சொல்லிச் சென்றார்; அதில் நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. <b>படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல்</b>, படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
இணையத்தில் நல்ல வாழ்க்கைத்துணையைச் சந்திக்க முடியாதா என்று எதிரணியினர் கேள்வி கேட்கின்றனர். எப்படிச் சந்தித்து நல்லவர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். யாராவது இணையத்தில் தமது இயற்பெயர்களுடன் வருகிறார்களா. அம்மா அப்பா பார்த்து பேசி செய்து வைக்கும் திருமணங்களும் நேரில் கண்டு காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களுமே முறிந்து போய்நிற்கும் இன்றைய சூழலில், இணையத்தின் மூலம் துணையைத் தேடலாம் என்று சொல்கிறீர்கள், அதைக் கேட்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை. <b>இதே யாழ்களத்தில் இணையக் காதலால் தன்னை ஏமாந்து தன் பொருளைப் பறிகொடுத்த ஒருவரைப்பற்றிய செய்தி வந்ததே மறந்து விட்டீர்களா நண்பர்களே</b>. இணையத்தில்பல நல்ல விடயங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம் அன்னம் போல பாலை மட்டும் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் அன்பான எதிரணியினர். பாலை மட்டும் பிரித்து பிரித்து குடித்ததால் தான் தமயந்திக்கும் நளனிற்கும் தூது போன அன்னம் இன்று மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்கும் ஒரு உயிரினம் ஆகிவிட்டது. அதுவும் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் தான் சொல்கிறோம் <b>அன்னம் அழிந்ததுபோல் இளையோரையும் அழியவிடாதீர்கள் </b>. எதிரணியினரிடம் ஒரு கேள்வி, இணையத்தில் நீங்கள் நல்லவை என்று கருதுபவைகளை இலவசமாகப் பெறமுடியுமா. அநேகமானவை பணம்செலுத்திப் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன. ஆனால் இளையோரைக் கவரும் விதத்தில் எவ்வாறு சீரழிக்கும் இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது உங்களிற்குத் தெரியும். அவற்றிற்கு பணம் கூட செலுத்தத்தேவையில்லை.
எதிரணிச் சிப்பாய்களுள் ஒருவர் கூறிச்சென்றார் பாடல்களை படங்களைச் செலவின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று, இதைத்தானே இணையம் இன்றைய இளையோரிற்கு சொல்லிக் கொடுக்கிறது. எப்படித் திருடலாம் என்று. பாடல்கள் படங்களில் கைவைப்பவர்கள்தானே அடுத்து கடனட்டை வங்கிப்பணம் திருடல்களில் இறங்குகிறார்கள். இதைத்தான் அடுத்தநாள் வேலை என்று கூறுகிறீர்களா? ஒருவர் தன் முழு உழைப்பையும் சிந்தி ஒரு படைப்பினை வெளியே கொண்டுவர அதனைத்திருடி நீங்கள் உற்சாகமடைவதுமட்டுமல்ல அடுத்தவனது வியாபார உரிமையையும் அல்லவா நீங்கள் திருடுகிறீர்கள். கனடாவிலே பல்கலைக்கழகத்திலே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் கிட்டத்தட்ட <b>80வீதமானவர்கள் கணினி மென்பொருட்களை பணம்கொடுத்து வாங்குவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் கணினித் துறையைச் சேர்ந்தவர்களும் கணிசமானவர்கள் இதனைத் தாம் செய்வதாகச் சொல்கிறார். </b>என்று அவ்வாய்வு சொல்கிறது. இப்படித்தான் இன்றை புலம்பெயர்ந்து வாழும் இளையோரும் இருக்கிறார்கள்.
நடுவர் அவர்களே எமது எதிரணி நண்பர்களிற்கு தலைப்பை ஞாபகப்படுத்துவதே எம் வேலையாய் போச்சு பாருங்க. இதுதான் இணையம் அவர்களிற்கு கொடுத்த நன்மைபோல் உள்ளது, தலைப்பை விடுத்து மற்றைய விடயங்களில் திசை திருப்புவது. இதை எதுக்கு இப்ப சொல்கிறேன் என்றால் இப்பட்டிமன்றத்தில் அலை என்றெல்லாம் சொல்லி எம்மைப் பயப்படுத்தப் பார்க்கிறார்கள். அவர்கள் கூறிய அலைக்கும் இப்பட்டிமன்றத் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்பது அவர்களிற்குத்தான் வெளிச்சம்.
அடுத்து இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் பற்றிப் பேசினார்கள். உண்மைதான் நீங்கள் கூறுவது போல் செய்திகளை உடனுக்குடன் அறியவும், கூட்டங்களை வைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் <b>இணையத்தில் தரப்படும் செய்திகளில் எத்தனை வீதமானவை உண்மையானவை; உறுதிப்படுத்தப்பட்டவை.</b> இஸ்லாமியத் தீவிரவாதிகள் தம்மிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்று உளவு அமைப்புக்கள் கூறுகின்றன. அவற்றினைக் கண்காணிப்பதற்காகவே பல நூற்றுக்கணக்கான பணத்தினைக் கொட்டுகிறார்கள். இதுதான் நன்மையா.இவ்வாறான தளங்கள் யாரை மையப்படுத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அழிவது யார்? ஒரு தடவை இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்தம் சிந்தும் மண்டையோட்டின் படம் பெரிதாக வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திபோட்டார்கள். இப்படி ஒரு அரசாங்க இணையத்தளமே மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டு அந்நாட்டின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு சர்வதேச அளவில் இதற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்விணையத்தினால் இளையோர் நன்மையடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியலயே! சந்தேகம் தான் இணையப்பக்கங்களிலும் இணையத்தில் இணைபவர்களிலும் ஏற்படுமே தவிர அவை ஒருபோதும் இளையோர் நன்மையடையப் போவதில்லை.
"பட்டிமன்றம் தொடர்வோமா" என்னும் தலைப்பின் கீழ் தொடரும் கருத்தாடலில் எமது எதிரணி விவாதி குருவிகள் அவர்கள் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார். பாவம் அவர் அறிந்து செய்தாரோ அறியாமல் செய்தாரோ தெரியவில்லை. அது என்னவெனில் தமிழில் தோன்றும் புதுப்புதுச் சொற்கள். <b>இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது</b>. இதுதான் இளையோர் பெறும் நன்மையா அல்லது தமிழ் பெறும் நன்மையா. தமிழ் இன்று இணையத்தில் இரண்டாம் மொழியாக இருந்தால் கூட <b>ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே</b>. இதிலிருந்து தெரியவில்லையா தாமும் அழிந்து பிறரையும் அழிக்கத்தான் இளையோரிற்கு இணையம் பயன்படுகின்றது என்று.
ஆக புலம்பெயர்ந்த இளையோர் இணையத்தால் சீரழிந்து போகிறார்கள் என்று முடிவாகக் கூறி எனக்கு அடுத்து வந்து விவாதிக்க இருக்கும் என் அணிச் சகோதரர்கள் சீரான விளக்கங்களை உங்களிற்கு அளிப்பார்கள் எனக்கூறிக்கொண்டு இவ்வாய்பை அளித்த இரசிகைக்கும், தளத்திலே இடம் தந்து உதவிய மோகன் அண்ணாவிற்கும் நன்றியைக் கூறி நடுவர் அவர்கள் நல்ல ஒரு தீர்ப்பைத் தருவார் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன்.
நன்றி,
வணக்கம்.
(நேரம் ஒத்துழைக்க மறுத்ததனால் ஏற்பட்ட தாமதத்திற்கு மனம்வருந்துகிறேன். நன்றி.)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
அடடடா மறுபடி தொடங்கியிருக்கா. (இந்தப்பட்டிமன்றம் என்ன ஸ்பீட்ல போகுது என்று தெரியல) சரி இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற அணிக்காக கருத்தை வைச்சிருக்கும் அருவியின் விவாதத்தைப்பார்ப்போம்.
தனக்கு முன் வாதாடிச்சென்ற எதிரணி நண்பர் குழப்பவாதியாக மாறிவிட்டார் என்கிறார். தலைப்பைத்தொட்டுச்செல்லவில்லை என்கிறார். இணைய ஊடகத்தின் நன்மைகளை எடுத்துக்கூறிவிட்டுச்சென்றிருக்கிறார். இந்த நன்மைகள் இளையோருக்குப்பொருந்தாதா என்ன..??
சரி அருவியின் அடுத்த கருத்தைப்பார்ப்போம். படங்களில் துணிவிலகாதா என்று எதிர்பார்த்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையிலேயே இணையத்தில் பார்க்கிறார்கள். யாருக்கும் தெரியாமல் பார்க்கிறார்கள் பயம் இன்றிப்பார்க்கிறார்கள் என்று. அந்த அணியின் கருத்தையே தனக்கு சாதகமாக்கி கருத்துவைத்திருக்கிறார் அருவி.
இணையத்தின் வழி வாழ்க்கைத்துணையை அதுவும் நல்ல வாழ்க்கைத்துணையை தேடமுடியாதா என்ற எதிரணியினரின் கருத்திற்கு பதில் வைக்கையில். இணையத்தில் உலாவுவர்கள் யாராவது இயற்பெயருடன் வருகிறார்களா அப்படி என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
ஏன் பெயரையா காதலிக்கப்போகிறார்கள்?? எங்கே மற்ற அணியினர் கருத்தென்ன காத்திருந்து தான் பார்ப்போமே..?? பெற்றோர்கள் பேசி.. நேரில்க்கண்டு காதலித்துச்செய்கின்ற திருமணங்களே முறிந்து போய் இருக்கின்றன இணையத்தில் ஒருவரது எழுத்தைக்கொண்டு காதலித்தால் என்ன நிலையில் நிற்கும் அப்படி என்கிறார்..?? எங்கே எதிரணியினர் என்ன கருத்தை வைக்கிறார்கள் பார்ப்போம்.
தொடரும் இதே கருத்தில் இணையக்காதலால் ஏமாந்து தனது பொருளைப்பறிகுடுத்த ஒருவர்பற்றிய செய்தியை மறந்துவிட்டீர்களா அப்படி என்று கேள்வியும் எழுப்பியிருக்கிறார். மறந்திட்டீர்களா.? ஒரு இளைஞன் ஏமாற்றப்பட்டிருக்கான்? இது சீரழிவில்லையா அப்படி என்று கேக்கிறார் அருவி.
அன்னம் பாலை மட்டும் பிரித்துக்குடித்ததனால் தான் நள தமயந்திக்கு தூது சென்ற அன்னம் ஒருசில (அழிந்து போய்விட்டது)மிருகக்காட்சிச்சாலையில் பார்க்கும் உயிரினம் ஆகிவிட்டது. நமது இளையோரையும் அப்படி ஆக்கிவிடாதீர்கள் என்கிறார். பாலைமட்டும் பிரித்துக்குடித்த அன்னத்திற்கே இந்தக்கதியென்றால். நன்மைகள் சீரழிவுகள் இரண்டிற்குள்ளும் வாழும் இளையோர் நிலை எப்படி என்கிறாரா..??
நல்லவைகள் அனேகமாக பணம் செலுத்திப்பெறவேண்டியுள்ளது. சீரழிவுகளை இலவசமாகவே இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும் அப்படி என்கிறார் அருவி. எங்கே எதிரணியினர் என்ன சொல்கிறீர்கள்.
இணையமானது நம் இளையோருக்கு பாடங்கள் பாடல்களை மட்டும் அல்ல மென்பொருட்களையும் திருடக்கற்றுக்கொள்கிறது இந்தத்திருட்டுத்தான் நாளை கடனட்டை வங்கிப்பணம் திருடல்கள் போன்றவற்றிற்கு வழிவகுக்கும் என்று தனது ஆதங்கத்தைத்தெரிவித்திருக்கிறார். (யாரும் முயன்றிடாதீங்க பிறகு கம்பி தான்) மென்பொருட்களை வாங்கிறதுக்கெண்டே தனியா உளைக்கவேணும். :wink:
இணையமானது தகவல் பரிமாற்றம் மற்றும் செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறது என்பதை மறுக்கவில்லை ஏற்றுக்கொள்ளும் அவர் இணையத்தில் தரப்படும் இந்தச்செய்திகள் எத்தனைவீதம் உண்மையானவை என்று கேள்வியை எழுப்பிவிட்டுச்செல்கிறார். இன்னொரு உதாரணத்தையும் காட்டுகிறார் இலங்கை அரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோக பூர்வ இணையத்தினை மற்றவர்கள் கையாண்டு ஒரு மண்டை ஓட்டுப்படத்தை பிரசுரிதததாக பத்திரிகைகளில் வந்தது என்று குறிப்பிடுகிறார். ஒரு அரச இணையத்திற்கே இந்த நிலை என்றால்..?? தனிநபர் இணையங்கள் நிலை எப்படியிருக்கும்..?? இதற்கு என்ன சொல்கிறார்கள் எதிரணியினர். பார்ப்போமே.??
பட்டிமன்றம் தொடர்வோமோ என்ற தலைப்பில் நடந்த உரையாடலில் வைக்கப்பட்ட கருத்து ஒன்றைச்சுட்டிக்காட்டி அதை தனக்கு சாதகமாக்கி கருத்துவைக்கிறார்.
<b>
இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது. </b>
இணைய ஊடகத்தால் தமிழிற்கு ஏற்பட்ட சீரழிவுகளை எதிரணி வாயிலாக எடுத்து வந்திருக்கிறார். இதை இல்லை என்று வாதிடுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம்
<b>ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே. </b>
இன்னொரு முக்கியவிடையம் இது. தமிழிற்கு என்று ஒரு பொதுவான எழுத்துருவை அனைவரும் ஒற்றுமையாக எப்பதான் பயன்படுத்துவார்களோ தெரியாது. யுனிக்கோட்டில் மாற்றப்பட்ட தளங்களைத்தவிர மற்றத் தளங்களைப்பார்வையிட வேண்டும் என்றால் கண்டிப்பாக அவர்கள் பாவிக்கும் ஏழுத்துருவை தரவிறக்கி வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் எங்கள் கணணியின் வேகம் தான் குறைவடையும் என்கிறார்கள்.
பல கருத்துக்களை வெட்டி புதிதாக தனது கருத்துக்களையும் வைத்து. எதிரணியின் கருத்தையே திசைதிருப்பி தனது கருத்திற்கு வலுச்சேத்து அற்புதமான விவாதத்தை வைத்துச்சென்றிருக்கிறார் அருவி அருவியைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற தலைப்பில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
ஐயிரண்டு திங்களா அங்கம்எலாம் நொந்துபெற்றுப்
பையல்என்ற போதே பரிந்துதெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்து..
இப்படித்தான் எமது வாழ்க்கை ஆரம்பிக்கின்றது என்று பட்டினத்தடிகள் பாடினார். எங்கெங்கோ பிறந்து, எங்கெங்கோ அலைந்து, தமக்கென ஒரு வாழ்வை அமைத்து, புலத்திலே குழந்தைகளைப் பெற்று வளர்க்கும்போது எத்தனையோ சிரமங்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது என்பது யாவரும் அறிந்த உண்மை. அதிவேகமாக வளர்ந்துவரும் இந்தக் கணினி உலகிலே எம்மிளைஞர்கள் இந்த இணைய ஊடகத்தினால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிந்துபோகின்றார்களா? என்ற இந்த பட்டிமன்றத்திலே இதுவரை பத்துப்பேர் தமது கருத்துக்களை வைத்துள்ளனர். தமிழினியும் தனது கருத்துக்களை அவ்வப்போது அழகாக வைத்துள்ளார். கணினியோடு அமர நேரமின்மையால் அவற்றைப் பிரதி பண்ணியபோது அவை சுமார் 58 பக்கங்களை எட்டின. அவற்றிலிருந்து சிறிதளவாக என் கருத்தக்களைக் கூறுகின்றேன்.
சினிமாப்படங்ளையும், பாடல்களையும் சி.டி யில் அடிப்பதையும், சினிமா நடிக நடிகைகளின் நெளிகோல படங்களை பக்கம்பக்கமாக அலசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் திரும்பத்திரும்ப வைக்கப்பட்டன. இளைஞர்களுக்கு இணையம் கல்விகற்க வாய்ப்பளிக்கின்றது என்ற வாதமும் வைக்கப்பட்டது.
எம்மை தங்கத்தாமரையில் ஏற்றிவைத்து தான் பித்தளைத் தாமரையில் வீற்றிருந்து தனது கருத்துக்களை அழகாக மொழிந்தார் (சிறுபிள்ளை) அனித்தா. தமிங்கிலத்தில் உரையாடுபவர்கள் புலத்தில் மட்டுமல்ல தமது தாய்நாடுகளான இந்தியா, சிங்கப்புூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் வருகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார். "இணையம் என்பதே உலககைச்சுருக்கி திரையில் விரிப்பது" என்று அழகாகக் கூறினார். யாகூ அரட்டை அறைகளில் நடக்கும் அவது}றுகளையும், அறிவுபுூர்வமான விடயங்களையும் இருபகுதியினரும் சுட்டிக்காட்டினர்.
பின்னர்வந்த பிரியசகி தனக்கே உரித்தான புன்சிரிப்புடன் பெற்றோரைக் குறைசொல்லவேண்டாம் என்றார். வேற்றுமொழித் தனங்களைப் பார்ப்பதன் விளைவுகளையும் சுட்டிக்காட்டினார். தாயகத்திலிருந்து வரும் இளைஞர்கள் நாட்டுப்பற்றுள்ள விடயங்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்றார். இறுதியாக சுனாமியை உதாரணம் காட்டிச்சென்றார்.
அடுத்துவந்த விஷ்ணு மனக்கட்டுப்பாட்டின் மகிமையை வியந்தார்.
எத்தனையோ சாதனைகளைப் படைக்க வழிசமைக்கும் "யத்தையும்" சேர்த்து "கொல்வது" எவ்வகையில் பொருத்தமாகும்? என்று கேட்டார். இங்கே தமிழைக்கொலை செய்ததனால் அவருடைய இந்தக் கருத்தும் கொலைசெய்யப்பட்டுவிட்டன. (தமிழைத் தவறாக எழுதவேண்டாம் என்று பலமுறை கூறியிருந்தேன்) ஆனால் பின்னர் சொல்லிய நல்ல கருத்துக்களால் தமது அணியை வலுப்பெறச்செய்தார்.
முகத்தார் மிக்க மரியாதையாக நீதி தவறாத பாண்டிய மன்னனுக்கு எம்மை ஒப்பிட்டார். உடனேயே நீதி தவறியதால் என்ன நடந்தது நினைவிருக்கும் என்று மிரட்டுவதுபோல்… மிரட்டுவதுபோல் அல்ல உண்மையாகவே மிரட்டினார். அவருக்கு நான் கூறுவது ஒன்றுதான் "பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது." தங்கள் அணியில் அனுபவசாலிகள் இருப்பதாயும், தலையிடி வாராமல் இருக்க உடற்பயிற்சி செய்யும்படியும், பெண்களின் சுதந்திரம் பற்றியும், இந்தியாவின் இணையத்தளம் பற்றியும், நண்பர் வீட்டில் 15 வயதுச்சிறுவனால் தனக்கேற்பட்ட அனுபவத்தையும் உதாரணம் காட்டி தனது அணிக்கு வலுச்சேர்க்கும் கருத்துக்களை ஆணித்தரமாக வைத்தார். ஒரு சந்தேகம், இவரின் வதிவிடமான சுன்னாகச் சந்தை பாலைவன நாட்டிலா இருக்கிறது?
சினேகிதி வந்தார் சுனாமியின் போதும், இனி வருங்காலங்களிலும் இளைஞர்களின் பங்களிப்புக்களையும், இணையத்தால் பெறும் நன்மைகளையும், ஆபாசக்காட்சிகளால் ஏற்படும் அவலங்களையும் விளக்கியதோடு, முன்னர் வந்தவர்களின் கருத்துக்களுக்கும் மற்றவர்களைப்போல் விளக்கமும் தந்தார்.
இவரையடுத்து வியாசன் வந்தார். கைகளில் வயலினைப் பிடித்தபடியே தன் கருத்துக்களையும் முன்வைத்தார். நடுவர்களாகிய எம்மை தன் இதயத்தாமரையில் வைத்திருப்பதாகக் கூறி தன் வறுமை நிலையினை சொல்லாமல் சொன்னார். வியாசன்! இதயம் விலைமதிப்பற்றது அல்லவா? புனைபெயரில் வருபவர்களைப்பற்றிக் குறிப்பிட்டார். "லங்காசிறி" இணையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு வேறும் பலவற்றையும் உதாரணம் காட்டிச்சென்றார். இறுதியில் தங்கள் கரும்புலிகள் தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்றும் பின்னால் வரும் பொங்கியெழும் மக்கள் படைக்கு வழிவிடுவதாகக் கூறிச்சென்றார்.
எல்லோருக்கும் கூறுவது ஒன்றே ஒன்றுதான் நடுவர்களாகிய நாங்கள் பகட்டிற்கு மயங்கவோ, பயமுறுத்தல்களுக்குப் பணியவோ மாட்டோம் என்பதுதான்.
பட்டிமன்றத்தை அலங்கரிக்க அடுத்து வந்தார் அஜீவன். கணினிகளைப் பற்றிய விளக்கத்துடன் தெரியாத சில விடயங்களையும் தெரியப்படுத்தினார். பலவற்றையும் பெரிதான எழுத்தில் எழுதியும் தந்தார். இறுதியில் இணையத்தைவிட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில் இணைய ஊடகமே உலகத்தை ஆழும். என்று அழகாகக்கூறிச்சென்றார்.
அடுத்து வந்த அருவி அசைந்துகொண்டிருக்கும் சிறுவனின் வாயைப்போல அழகாகத்தன் கருத்துக்களை முன்மொழிந்தார். எதிரணியினர் தலைப்பை மறந்து ஏதேதோ வெல்லாம் கூறுவதாகக்கூறினார். கணினியில் திருட்டு நடப்பதாகக்கூறினார். "பட்டிமன்றம் தொடர்வோமா?" என்ற பக்கத்தினையும் தொட்டுக்காட்டித் தன் கருத்தக்களை முன்வைத்தார்.
அனைவரது கருத்துக்களுக்கும் தமிழினி அழகாகப் பதில் எழுதியிருந்தார். களத்திலே வந்து கருத்துக்களை எழுதமுடியாமல் ஆனபோதிலும் எல்லாவற்றையும் இயலுமானவரை படித்தேன். "தமிழினி மகக் கஸ்டமான பணியை தனியே வெற்றிகரமாகச் செய்துள்ளார். செல்வமுத்து வந்துட்டார் இனி இன்னும் கலகலக்கும் இந்த பட்டி….மன்றம் அப்படித்தானே?" என்று அஜீவன் குறிப்பிட்டிருந்தார். கலகலக்குமோ என்னவோ ஆனால் நிச்சயம் கவலைகளை மறக்கவைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இவற்றை எழுதினேன்.
இன்னமும் 17 பேர் தமது கருத்துக்களை முன்வைக்க இருப்பதனால் அடுத்து வருபவர்கள் சகோதரி இரசிகை முன்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ஒழுங்கில் வந்து தமது அணிக்கு உரம்சேர்க்கும் கருத்துக்களை காலம் தாழ்த்தாது முன்மொழியுமாறு தயவாக கேட்டுக்கொள்கிறேன்.
மதன், அடுத்த உங்கள் வரவைத்தான் அனைவரும் எதிர்பார்த்துககொண்டு இருக்கிறார்கள். வாருங்கள், வந்து உங்கள் அணிக்கு பலம் கூட்டுங்கள்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்.
நம்மவர்களிடையே ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்து நடாத்துவது இலகுவான ஒன்றல்ல பலசிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும், அவற்றை திறம்பட எதிர்கொண்டு இந்த பட்டிமன்றத்தை திறம்பட நடாத்தி கொண்டிருக்கும் ரசிகைக்கு எனது நன்றிகள். அதுதவிர தாயாரை இழந்த துயரத்தின் மத்தியிலும் பட்டிமன்ற நடுவராக இருந்து சிறப்பிக்கும் செல்வமுத்து அவர்களுக்கும், பட்டிமன்றத்தை வழிநடத்துவது இது முதல் தடவையாக இருந்தாலும் அதனை திறம்பட செய்துவரும் தமிழினிக்கும், இதனை நடாத்த தளம் அமைத்து தந்த யாழ் களத்துக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி.
பட்டிமன்றத்தில் எனது முறை வந்ததும் ரசிகையும் இளைஞனும் பலமுறை நினைவூட்டிய போதிலும் எனது வாதத்தை இன்றுதான் இணைக்க முடிந்தது. இதற்கு காரணம் ஏதும் சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. என்னால் பட்டிமன்றத்தில் ஏற்பட்ட காலதாமத்திற்கு வருந்துகின்றேன்.
இந்த பட்டிமன்றத்தின் தலைப்பு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்பது தான். இதில் நன்மையடைகின்றார்கள் என்பது தான் உண்மை என்று எதிரணி நண்பர்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் வாதாட வந்துவிட்டோமே என்பதற்காக ஒரு சில விதிவிலக்குக்களை பூதாகரமாக பெருப்பித்து காட்டி சீரழிந்துதான் போகிறார்கள் என்று நிறுவ முயல்கின்றார்கள். இதுவரை வாதாடிய எதிரணி நண்பர்களின் வாதங்கள் அனைத்தையும் படித்தேன். அவற்றில் இந்த விதிவிலக்குகளை தவிர சீரழிந்து போகிறார்கள் என்பதற்குரிய ஒரு சரியான காரணத்தை கூட அவர்களால் சொல்ல முடியவில்லை. இவற்றை நிரூபிக்க கடைசியாக வாதாடிய அருவியின் வாதத்தை பார்க்கலாம்.
Quote:எனக்கு முன் வந்து வாதாடிச்சென்ற எதிரணி நண்பரின் வாதத்திறனை பார்த்து வியந்து போய்விட்டேன். இணையம் அவரை எப்படிக் குழப்பவாதியாக மாற்றிவிட்டது பார்த்தீர்களா, இங்கு விவாதத்தின் தலைப்பு இணைய ஊடகத்தால் இளையோர் நன்மை அடைகிறார்களா அல்லது தீமையடைகிறார்களா என்று இருக்க அவர் அதனைத் தொட்டுச் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் அதனால் சீரழிந்த இளையோரே அதிகம் உள்ளதாலாகும். நடுவர் அவர்களே பாருங்கள் அவர்களிற்கே தங்கள் மேல் சந்தேகம் வந்துவிட்டது. அதனால் தான் தலைப்பை மறந்து ஏதேதோ எல்லாம் கூறுகிறார்கள்.
இதில் அருவி சொல்லியிருப்பது என்ன
1) அஜீவன் அண்ணாவின் வாததிறனை பார்த்து வியந்து போய்விட்டாராம் - ஆக அவரின் வாதமும் அதில் இருந்த எமது அணிக்கு சார்ப்பான கருத்துக்களும் தன்னை வாயடைக்க வைத்துவிட்டதாக மறைமுகமாக ஒத்து கொள்கின்றார்.
2) இதை சொன்ன அடுத்த கணமே அவரை குழப்பவாதி, தலைப்பை தொட்டு செல்லவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக பேசி தானே குழப்பவாதியாக காட்சியளிக்கிறார் அன்புக்குரிய அருவி. இதில் அருவி அஜீவன் அண்ணா தலைப்பை தொட்டு செல்லவில்லை என்பதை எங்காவது நிரூபித்திருக்கிறாரா? அப்படி செய்யாமல் குழப்பவாதி, தலைப்பை தொட்டுசெல்லவில்லை என்று கூக்குரலிட்டு என்ன பயன்? இது எப்படியிருக்கின்றது நிதிமன்றத்தில் ஒரு தரப்பை எதிர்தரப்பை சேர்ந்த சட்டதரணி ஆதாரம் ஏதையுமே சமர்ப்பிக்காமல் அவன் குற்றவாளி, குழப்பவாதி என்று புலம்புவதை போலிருக்கின்றது. இது பட்டிமன்றம் இங்கு வாதத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இனிமேல் எதிரணி தரப்பில் பேச வருபவர்களாவது வாதத்தை ஆதாரங்களோடு முன்வைக்குமாறு அன்புடன் கேட்கின்றேன்.
நண்பன் துணி இன்னும் விலகாதா என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். இளையோர் மனதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்கள், அவர்களிற்கு இணையம் என்ற பெயரில் ஒரு கட்டில்லா சுதந்திரத்தை வழங்கி அவர்களைக் கெட்டுக் குட்டிச் சுவராக்கிறது என்று. படத்தில துணி விலகாதா என்று என்று பாத்துக்கொண்டிருந்தவர்கள் இன்று துணிவிலகிய நிலையில் இணையத்தில் பாக்கிறார்கள். அதுவும் யாருக்கும் தெரியாமல், படம் பாக்க போவதென்றால் யாராவது பார்த்து விடுவார்கள் என்ற பயம் இருக்கும். ஆனால் இங்கு அது ஒன்றும் இல்லையே.கணினியை இயக்கி அதிலிருந்து மிகவும் இலகுவாக ஒருவரினதும் பயமின்றி செல்லவேண்டிய இடமெல்லாம் சென்றுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
கதைகள் என்பது எழுத்தாளன் தன்னுடைய கருத்துக்களை இலகுவான முறையில் வாசகர்களுக்கு உணர்த்த உபயோகிக்கப்படும் ஒரு ஊடகம். அந்த வகையிலேயே அஜீவன் அண்ணாவும் ஒரு குட்டிகதையை சொல்லி எப்படி சபை முழுவதும் நல்லதை நுகர ஒரு விதிவிலக்கு தீமையை மட்டும் நுகர்வதை சுட்டிக்காட்டி அதேபோல் இணையத்தில் பெரும்பாலான இளையோர் நன்மையடைகிறார்கள் ஒரு சில விதிவிலக்குகள் தவிர என்பதை அருமையாக உணர்த்தியிருந்தார். அப்படி உணர்த்திய பின்பும் நண்பர் அருவி துணிவிலகியதை மட்டுமே எடுத்து விவாதிக்கின்றார் என்றால் அவரை என்ன சொல்ல? அவர் அஜீவன் அண்ணா சொல்லிய கதையில் இருந்த நீதியை புரிந்து கொள்ளாமல் எப்படி அவரை துணி விலகியதை பற்றி கொண்டாரோ அதே போல் அவரது அணியினரும் நன்மையடைகிறார்கள் என்ற உண்மையை ஒத்து கொள்ளாமல் வேறு எதையோ பார்த்துகொண்டு சீரழிகிறார்கள் என்று புலம்புகிறார்கள். ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.
அடுத்தது புலம்பெயர்ந்த இளையர்கள் இணையத்தில் துணிவிலகிய நிலையில் யாருக்கும் தெரியாமல் பார்க்கிறார்களாம் மற்றய இடத்தில் எலலாம் கஷ்டமாம் யாராவது பார்த்துவிடுவார்களாம். இதுதான் இந்த ஆண்டின் மிகபெரிய நகைச்சுவை. பிரித்தானியாவில் சன் பத்திரிகையை எடுத்து பார்த்தால் அதில் மூன்றாம் பக்கத்தில் தினமும் துணிவிலகிய படம் தான் வருகின்றது. இவ்வளவிற்கும் அது வயது வந்தோருக்கான பத்திரிகை அல்ல? அப்போ அதில் பார்க்க மாட்டார்களா? அருவி வசிக்கும் கனடா நாடு சென்றிருந்த போது அங்கு இரவில் தொலைக்காட்சிகளில் எந்தவித கட்டுப்பாடுமின்றி துணிவிலகிய படங்கள் காண்பிக்கப்படுவதை அவதானித்தேன். புலத்தில் ஒவ்வொரு படுக்கையறையிலும் தொலைக்காட்சி உள்ள நிலையில் அதில் பார்க்கமாட்டார்களா? இதுதவிர இது போன்ற சிடிக்கள் கட்டுப்பாடு ஏதுமின்றி நடைபாதைகளில் வைத்து விற்கப்படுகின்றன. இவற்றை வாங்குவது ஒன்றும் சிரமமான காரியமே இல்லை. இதுபோல இணையத்தில் தான் யாருக்கும் தெரியாமல் துணிவிலகிய படங்களை பார்க்கின்றார்கள் என்ற அருவியின் வாதத்தை தவறு என்பதை நிரூபிக்க பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
Quote:இணையத்தில் நல்ல வாழ்க்கைத்துணையைச் சந்திக்க முடியாதா என்று எதிரணியினர் கேள்வி கேட்கின்றனர். எப்படிச் சந்தித்து நல்லவர்கள் என்று அறிந்து கொள்வீர்கள். யாராவது இணையத்தில் தமது இயற்பெயர்களுடன் வருகிறார்களா. அம்மா அப்பா பார்த்து பேசி செய்து வைக்கும் திருமணங்களும் நேரில் கண்டு காதலித்து செய்து கொள்ளும் திருமணங்களுமே முறிந்து போய்நிற்கும் இன்றைய சூழலில், இணையத்தின் மூலம் துணையைத் தேடலாம் என்று சொல்கிறீர்கள், அதைக் கேட்க சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இதே யாழ்களத்தில் இணையக் காதலால் தன்னை ஏமாந்து தன் பொருளைப் பறிகொடுத்த ஒருவரைப்பற்றிய செய்தி வந்ததே மறந்து விட்டீர்களா நண்பர்களே. இணையத்தில்பல நல்ல விடயங்களைத் தேடிப் பெற்றுக்கொள்ளலாம் அன்னம் போல பாலை மட்டும் குடிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்கள் அன்பான எதிரணியினர். பாலை மட்டும் பிரித்து பிரித்து குடித்ததால் தான் தமயந்திக்கும் நளனிற்கும் தூது போன அன்னம் இன்று மிருகக்காட்சிச்சாலைகளில் பார்க்கும் ஒரு உயிரினம் ஆகிவிட்டது. அதுவும் எல்லா இடத்திலும் இல்லை. அதனால் தான் சொல்கிறோம் அன்னம் அழிந்ததுபோல் இளையோரையும் அழியவிடாதீர்கள் . எதிரணியினரிடம் ஒரு கேள்வி, இணையத்தில் நீங்கள் நல்லவை என்று கருதுபவைகளை இலவசமாகப் பெறமுடியுமா. அநேகமானவை பணம்செலுத்திப் பெறவேண்டியவைகளாக இருக்கின்றன. ஆனால் இளையோரைக் கவரும் விதத்தில் எவ்வாறு சீரழிக்கும் இணையத்தளங்கள் இயங்குகின்றன என்பது உங்களிற்குத் தெரியும். அவற்றிற்கு பணம் கூட செலுத்தத்தேவையில்லை.
தொலைபேசி, கடிதம் என்பவை எப்படி தமது எண்ணங்கள் கருத்துக்களை பரிமாற உதவியதோ அதை போல இணையமும் ஒரு ஊடகமாக இருந்து ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாற புரிந்துகொள்ள உதவுகின்றது. அதன் அடிப்படையிலேயே நமக்கு அறிந்தவர்களுடன் இணையம் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து புரிந்துகொண்டு பிடித்திருந்தால் வாழ்க்கை துணையாக மாற்றி கொள்ளலாம் என்கின்றோம். இணையம் இந்த யுகத்தின் அற்புதமான ஒரு தகவல் தொடர்பு ஊடகம் அதை சரியான வழியில் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள உபயோகித்து நன்மையடைகிறார்கள். எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.
ஒரு திருமணம் -முறிவடைவதற்கான காரணம் பெற்றோர் பார்த்து வைத்ததா, காதலித்து செய்ததா என்பதல்ல, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையே அதற்கு காரணம். எந்தவிதமான விதமான திருமணத்திற்கு முன்பும் ஒருவரை ஒருவர் தயக்கமின்றி புரிந்து கொள்ள கருத்துக்களை பரிமாறிகொள்ள விருப்பு வெறுப்புக்களை அறிய இணைய ஊடகத்தை பயன்படுத்தி நமது புலம்பெயர் இளையோர் நன்மையடைகின்றார்கள்.
இணைய திருமண சேவை பக்கங்கள், பல்கலைகழகங்களின் கருத்துகளங்கள், மெசஞ்சரில் நண்பர்கள் உறவினர்களால் அறிமுகம் உள்ளிட்ட பல வகைகளில் புதியவர்களை இயற்பெயருடன் அறிந்து பேசி புரிந்து வேறு விபரங்கள் ஏதும் தேவைப்பட்டால் இணைய மூலமே வேறு நண்பர்கள் உறவினர்களுடன் கலந்து பேசி வாழ்க்கை துணையை முடிவு செய்து பல இளையோர் நன்மையடைந்து இருக்கின்றார்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு இயற்பெயருடன் வராத இடங்கள் தான் அருவியின் கண்களுக்கு பட்டிருக்கின்றது அங்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாமா என்று சிரிக்கிறாராம். இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?
இங்கு அன்னம் ஏன் இறந்தது என்பதற்கு பாலை மட்டும் குடித்ததால் என்று புது விளக்கம் சொல்கின்றார் அருவி. அதை அப்படியே ஏற்று கொண்டாலும் அதில் ஒரு முரண்பாடு. அன்னம் பாலை மட்டும் குடித்ததால் அழிந்து போனது என்றால் அது பாலையையும் தண்ணீரையும் சேர்த்து அருந்த வேண்டும் என்று சொல்ல வருகிறாரா? இளையோர் நன்மை தீமை இரண்டையும் எடுத்து கொள்ள வேண்டுமா? என்ன அர்த்தமில்லாமல் புலம்புகிறாரே?
அடுத்து இணையத்தில் நல்லவற்றை பணம் கொடுக்காமல் இலவசமாக பெற்று கொள்ள முடியுமா ஆனால் கெட்டவை இலவசமாக கிடைக்கின்றனவே என்கிறார். அவருடைய வாதங்களில் எதுவுமே உண்மையில்லை போலிருக்கின்றது. அவருக்கு எந்த நன்மைகள் இலவசமாக கிடைக்கின்றன என்று அவர் உபயோகித்தவற்றில் சிலவற்றையே பட்டியல் போட்டு நினைவூட்டுகின்றேன்.
செய்திகள் - http://www.eelampage.com/
காலநிலை - http://www.bbc.co.uk/weather/
தகவல் தொடர்பு - MSN Messenger, Skype
நாணய மாற்று - http://www.xe.com/ucc/
இவைமட்டுமன்றி இலவச இணைய வங்கி சேவை உள்ளிட்ட பல விடயங்களை இலவசமாக பயன்படுத்துகின்றார். இவை அவருக்கு நன்மைகள் இல்லையா அல்லது அவர் இளையோர் இல்லையா? இது தவிர இலவசமாய் தர முடியாத உரிமமுடைய விட்யங்களை இளையோர் பணம் செலுத்தியும் பெற்று நன்மையடைகிறார்கள்.
Quote:எதிரணிச் சிப்பாய்களுள் ஒருவர் கூறிச்சென்றார் பாடல்களை படங்களைச் செலவின்றி பெற்றுக்கொள்ளலாம் என்று, இதைத்தானே இணையம் இன்றைய இளையோரிற்கு சொல்லிக் கொடுக்கிறது. எப்படித் திருடலாம் என்று. பாடல்கள் படங்களில் கைவைப்பவர்கள்தானே அடுத்து கடனட்டை வங்கிப்பணம் திருடல்களில் இறங்குகிறார்கள். இதைத்தான் அடுத்தநாள் வேலை என்று கூறுகிறீர்களா? ஒருவர் தன் முழு உழைப்பையும் சிந்தி ஒரு படைப்பினை வெளியே கொண்டுவர அதனைத்திருடி நீங்கள் உற்சாகமடைவதுமட்டுமல்ல அடுத்தவனது வியாபார உரிமையையும் அல்லவா நீங்கள் திருடுகிறீர்கள். கனடாவிலே பல்கலைக்கழகத்திலே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் கிட்டத்தட்ட 80வீதமானவர்கள் கணினி மென்பொருட்களை பணம்கொடுத்து வாங்குவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அதிலும் கணினித் துறையைச் சேர்ந்தவர்களும் கணிசமானவர்கள் இதனைத் தாம் செய்வதாகச் சொல்கிறார். என்று அவ்வாய்வு சொல்கிறது. இப்படித்தான் இன்றை புலம்பெயர்ந்து வாழும் இளையோரும் இருக்கிறார்கள்.
நண்பருக்கு திரும்பவும் குழப்பம் வந்திருக்கிறது பாருங்கள். கொஞ்ச நேரத்திற்கு முன்பு இலவசமாக கிடைக்காதா என்று கேட்டவர் இப்போது பாடல்கள் இலவசமாக கிடைக்கின்றதே என்று புலம்புகின்றார். தமிழ் இசைதட்டுக்களின் உரிமம் ஆங்கில இசையை போல் இன்னும் இணையத்தில் ஒழுங்கு படுத்தபடவில்லை. அத்னால் தற்போதைக்கு தமிழ் பாடல்களை இலவசமாக பெற்று கொள்ளும் அதே சமயம் ஆங்கில பாடல்களை பணம் செலுத்தி பெற்று கொண்டு இளையோர் நன்மையடைகிறார்கள். முன்பு ஆங்கில பாடல்களில் உரிமம் இணையவழி ஒழுங்குபடுத்துவதற்கு முன்பு அதுவும் இலவசமாக கிடைத்து வந்தது அவை ஒழுங்கு படுத்தப்பட்டு பணம் செலுத்தி உரிய வழியில் உரிமம் பெற வழி செய்யப்பட்ட பின்பு அவற்றை இளையோர் பெருமளவில் உபயோகிக்கின்றார்கள் தானே? அப்பிள் நிறுவனம் எவ்வளோ பாடல்களை இணையவழி விற்றிருக்கின்றது என்று நீங்கள் அறியாததா? இவற்றை விளக்கமாக விபரிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றூ நினைக்கின்றேன். ஆக எந்த பாடல்களாக இருந்தாலும் அவற்றை ஒழுங்குமுறைகள் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட பெற்று கொண்டு நன்மையடைகிறார்கள் நமது இளையோர்.
அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.
Quote:அடுத்து இணையத்தின் மூலம் தகவல் பரிமாற்றம் பற்றிப் பேசினார்கள். உண்மைதான் நீங்கள் கூறுவது போல் செய்திகளை உடனுக்குடன் அறியவும், கூட்டங்களை வைக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் இணையத்தில் தரப்படும் செய்திகளில் எத்தனை வீதமானவை உண்மையானவை; உறுதிப்படுத்தப்பட்டவை. இஸ்லாமியத் தீவிரவாதிகள் தம்மிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இணையத்தினைப் பயன்படுத்துகிறார்கள் என்று உளவு அமைப்புக்கள் கூறுகின்றன. அவற்றினைக் கண்காணிப்பதற்காகவே பல நூற்றுக்கணக்கான பணத்தினைக் கொட்டுகிறார்கள். இதுதான் நன்மையா.இவ்வாறான தளங்கள் யாரை மையப்படுத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் அழிவது யார்? ஒரு தடவை இலங்கை அரசாங்கத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இரத்தம் சிந்தும் மண்டையோட்டின் படம் பெரிதாக வந்திருந்ததாகப் பத்திரிகைகளில் செய்திபோட்டார்கள். இப்படி ஒரு அரசாங்க இணையத்தளமே மற்றவர்களால் கையகப்படுத்தப்பட்டு அந்நாட்டின் நடவடிக்கைகள் முடக்கப்பட்டு சர்வதேச அளவில் இதற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்விணையத்தினால் இளையோர் நன்மையடைகிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியலயே! சந்தேகம் தான் இணையப்பக்கங்களிலும் இணையத்தில் இணைபவர்களிலும் ஏற்படுமே தவிர அவை ஒருபோதும் இளையோர் நன்மையடையப் போவதில்லை.
இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம். இவற்றை பெரும் தொகையானோர் பார்வையிடுகின்றார்கள். பிபிசி செய்தி தளத்தில் கூட முக்கிய இலங்கை செய்திகளின் போது தமிழ் நெட்டுக்கு இணைப்பு வழங்கப்படுகின்றது . இதே போல நம்பகதன்மை அற்ற அல்லது மாற்று கருத்துடைய சில இணையங்கள் உண்டு தான் இவை எத்தனை பேருக்கு தெரியும்? தெரிந்த சிலராது அடிக்கடி படிக்கிறார்களா? அல்லது பிபிசி போன்றவற்றில் இணைப்பு தான் வழ்ங்கப்படுகின்றதா? இவை சரியான தளங்களை சரியான முறையில் தகவல்களை அறிய புலம் பெயர்ந்த இளையோர் பயன்படுத்தி பெரும்பாலானோர் நன்மையடைகின்றார்கள் என்று உணர்த்த போதுமானவை என்று நினைக்கின்றேன்.
Quote:\"பட்டிமன்றம் தொடர்வோமா\" என்னும் தலைப்பின் கீழ் தொடரும் கருத்தாடலில் எமது எதிரணி விவாதி குருவிகள் அவர்கள் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்டினார். பாவம் அவர் அறிந்து செய்தாரோ அறியாமல் செய்தாரோ தெரியவில்லை. அது என்னவெனில் தமிழில் தோன்றும் புதுப்புதுச் சொற்கள். இலக்கண விதி மீறி அவை தமிழில் உருவாக்கப்படுகின்றன. இதில் முன்னிலை வகிப்பது ஒவ்வொருவரும் தனித்தனியே ஆரம்பிக்கும் வலைப்பதிவுகள். அவற்றில் எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி யாரும் தம்விருப்பப்படி தமது கருத்துக்களை எண்ணங்களை விட்டுச்செல்ல முடிகிறது. அப்படியான ஒரு பக்கத்திற்குச் செல்லும் இளைஞன், ஏற்கனவே வேறு ஒரு நாட்ட மொழியுடன் தமிழின் பரீச்சயத்தை இழந்து நிற்கும் ஒருவனிற்கு, தமிழ் மீது ஒரு குழப்பத்தை உண்டுபண்ணி அவனது மொழியாற்றலையும் அல்லவா இவ்விணையம் சீரழிக்கிறது. இதுதான் இளையோர் பெறும் நன்மையா அல்லது தமிழ் பெறும் நன்மையா. தமிழ் இன்று இணையத்தில் இரண்டாம் மொழியாக இருந்தால் கூட ஒரு பொது தமிழ் எழுத்துருவைக் கண்டு பிடித்து ஒரே எழுத்துருவைக் கொண்டு இணையப்பக்கங்களை அமைக்கும் நிலைக்கு இன்னும் இளையோர் முன்வரவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா தாமும் அழிந்து பிறரையும் அழிக்கத்தான் இளையோரிற்கு இணையம் பயன்படுகின்றது என்று.
வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
இந்த பொது எழுதுருவுக்கும் இளையோர் சீரழிவு என்பதற்கும் என்ன பொருத்த்ம் என்று தெரியவில்லை. எப்படியிருந்தாலும் பொது எழுத்துரு யூனிகோட் தற்போது பாவனைக்கு வந்திருக்கின்றது என்பதை நண்பருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஆரம்பகாலங்களில் தமிழ் இணையபக்கங்களை அமைத்தோர் தமிழில் இணையபக்கத்தை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமக்கென ஒரு எழுத்திருவை கொண்டு ஆரம்பித்தார்கள். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து பொது எழுத்திருவை உருவாக்கி தளங்கள் அனைத்தும் பொது எழுத்துருவிற்கு மாறி வருகின்றனவே? யாழ், பிபிசி தமிழ் தளம், வலைப்பதிவுகள், கூகிழ் தமிழ் உட்பட பல பொது எழுத்திருவான யூனிகோட்டில் உருவாக்கப்பட்டவை தானே? ஏன் நண்பர் அருவி கூட் யூனிகோட்டில் தானே இந்த பட்டிமன்றத்தில் எழுதியிருக்கின்றார்? அதை அவர் வசதியாக மறந்து விட்டாரோ? இந்த பொது எழுத்துருவை தமிழ் யூனிகோட்டை கண்டுபிடித்து நன்மைய்டைந்தோர் புலம் பெயர்ந்த இளையோர் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
மாட்டுப்பொங்கல் முடிந்தும் மதனைக் காணவில்லையே என்று அனைவரையும் சிலநாள் ஏங்கவைத்து, அவரவர் சந்தேகங்களையும் தினம்தினம் ஓங்கவைத்து, அவசரமாக வந்து தனது கருத்துக்களை முன்வைத்துச் சென்றுவிட்டார் மதன். "பொறுத்தார் புூமியாள்வார்" என்பதைப்போல் தனது கருத்துக்களை ஆதாரங்களுடன் வைத்துள்ளார். இவற்றை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா?
எதிரணியினர் வாதாடவேண்டும் என்பதற்காக வாதாடுகின்றார்கள் என்றார். இரு அணியினர் வாதாடும்போது இது இயல்புதானே? எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே! இப்படி நான் கூறவில்லை, இக்கருத்துப்பட மதன் கூறுகின்றார். எதிரணியினரின் பதில் என்னதான் என்று பார்ப்போம்.
அஜீவனின் வாதத்திறமையைப் பார்த்து தான் வியந்துபோய்விட்டதாகக் கூறியது உண்மைதான். வியந்ததற்கான காரணத்தை விளக்கிய மதனின் வாதத்தை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா? பார்ப்போம்.
துணிவிலகிய காட்சிகளைப்பற்றி காரசாரமான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. மதன் ஒரு பத்திரிகையையும், தொலைக்காட்சிகளையும், கனடா நாட்டையும் உதாரணம் காட்டினார். எதிரணியினர் இதனையும் ஏற்றுக்கொள்வார்களா?
மணவாழ்க்கை நீடிக்கவேண்டுமென்றால் கணவன் மனைவிக்கிடையில் புரிந்துணர்வு மிக அவசியம். பெற்றோருக்காகவும், மற்றோருக்காகவும் திருமணம் செய்து கடமைக்காக வாழ்ந்துகொண்டிருக்கும் பலரையும், திருமணத்தின் பின்னர் ஒன்றாக வாழமுடியாமல் விவாகரத்தில் முடிகின்ற எத்தனையே குடும்பங்களையும் நம் தமிழ்ச்சமுதாயத்தில் காண்கிறோம். தமது வாழ்க்கைத்துணையைத் தாமே தேர்ந்தெடுக்கும் பொறுப்பை இன்றைய இளைஞர்களில் பலர் ஏற்றுக்கொண்டுள்ளனர். திருமணத்தின் முன்னர் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இணையம் நல்லதொரு ஊடகம் என்றார் மதன். கணினி வழியாக காதலராகிய கதையினைக்கொண்ட "காதலர் தினம்" என்கின்ற திரைப்படம் என் நினைவிற்கு வருகின்றது. காலம் மாறிவிட்டது, காதலிப்பதற்கு கணினியைப் பாவிப்பதில் தவறு என்ன இருக்கின்றது? இதற்கு எதிரணியினரின் பதில் என்னவாக இருக்கும்?
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கக்கூடிய நன்மைதரும் சிலவற்றைப் பட்டியலிட்டுக்காட்டினார். தமிழ்ப்படப்பாடல்களையும், ஆங்கிலப்பாடல்களையும் தரைவிறக்கம் செய்வதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். இலவசமாகக் கிடைக்காதா? என்றவர் உடனேயே இலவசமாகக் கிடைக்கின்றது என்கிறார் என்பதையும் எளிதாகச் சுட்டிக்காட்டினார் மதன்.
வலைப்பதிவுகள் பற்றியும், பொது எழுத்துரு பற்றியும் சிறு விளக்கமும் தந்தார்.
மதனின் வாதத்திறமையைப் பார்த்துவிட்டுத்தான் வர்ணன் தான் எழுதிய கருத்தையே இடம்மாறி வைத்துவிட்டாரோ?
காலந்தாழ்த்தி களத்திலே வந்து தன் கருத்துக்களை முன்வைத்திருந்தாலும் மிகவும் கவனமாகச் செய்திருக்கிறார் மதன். இது அவரின் அனுபவமோ அல்லது அலசி ஆராயும் திறனோ தெரியவில்லை. ஒருவேளை பொங்கல் கொடுத்து புத்துணர்ச்சியாகவும் இருக்கலாம்.
ஒவ்வொருவரும் அவரவர் வாதங்களை முன்வைக்கும்போது தம் திறமைக்கேற்ப சிறப்பாகவே செய்கின்றார்கள். இருபக்க வாதங்களையும் பார்க்கும்போது இரு அணியினருக்கும் இடையிலுள்ள இடைவெளி மிகமிகக்குறைவாக உள்ளதாகவே படுகிறது.
இனி வரவிருப்பவர்களில் குருக்காலபோவான் குறுக்கால போவாரோ? அல்லது நாரதர் கலகம் நன்மையில் முடியுமோ? அல்லது புளுகர்பொன்னையா புளுகித்தள்ளுவாரோ? அல்லது காக்கைவன்னியன் காட்டிக்கொடுப்பாரோ? பொறுத்திருந்து பார்ப்போம்.
Posts: 39
Threads: 1
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி , நன்றி மண்டபம் நிறைந்த உங்கள் கர கோசத்திற்கு மிக்க நன்றி........
மைக் டெஸ்டிங் வன்,டூ,திறி ...தம்பி கொன்சம் சத்தத்தைக் கூட்டும்.....ம் இப்ப ஒகே..
என் உயிரினும் மேலானா உடன் பிறப்புக்களே,என் இரத்தத்தின் இரத்தங்களே,உங்கள் ஆரவாரமான வரவேற்பைக் கண்டு உளம் மகிழ்ந்தோம் ,
முதற்கண் என் வணக்கத்தை இந்த மேடையிலே நடு நாயகமாக வீற்றிருக்கின்ற பெருங்குடி மகன் நடு நிலமையின் உறைவிடம் ஐயா செல்வமுத்து அவர்களுக்கும்,
பட்டாடை பளபளக்க ,கழுத்திலே பொன் நகை அலங்கரிக்க உதட்டிலே புன் நகை தவழ வீற்றிருக்கின்ற மூத்த உறுப்பினர் ,சிந்தனைச் செல்வி இனிய தமிழினி அவர்களுக்கும் செலுத்திக் கொள்கிறேன்.
அத்தோடு இந்த நிகழ்வை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் செயல் வீராங்கனை ரசிகை அவர்களுக்கும்,இந்த வாய்ப்புக்கு களம் அமைத்துக் கொடுத்த விற்பனர் மோகன் அவர்களுக்கும் எனது பாராடுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எமது தானைத் தலைவர் சொல்லின் செல்வர் சோழியன் அவர்கள் இந்த வெற்றி அணிக்கு
வழங்கிய ஆரம்ப உரையிலே விழுந்த அடியில் புத்தி பேதலித்து எமது எதிர் அணியினர் பட்டி மன்றத் தலைப்பயே மறந்து விட்டார்கள் போல் உள்ளது.
ஐயாமாரே ,அம்மாமாரே இந்தப் பட்டி மன்றத்தின் தலைப்புத் தான் என்ன?
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளயோர் இணய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா?அல்லது சீரைந்துபோகிறார்களா? என்பதுவே.ஆனால் எதிரணித் தலைவர் முதற்கொண்டு ,மிகுந்த பிரயத்தனங்களின் மத்தியில் மண்டையைக் குடைந்து கருத்து எழுதிய அம்மன் பக்தன் மதன் வரை இணயத்தின் பயன்களைப் பற்றியே கதை அளந்து கொண்டு இருகின்றனர்.இந்த பட்டி மன்றத்தின் தலைப்பு இணயத்தினால் ஏற்படும் பயன்களா என்ன?இதைச் சொல்லவா இந்தப் பட்டி மன்றம்.அட இதை ஒரு மூன்று வயசு குழந்தை கூடச் சொல்லுமே.
இங்கே முக்கியமாக விவாதிக்கப் படும் பொருள் தான் என்ன?இணயம் தமிழ் புலம் பெயர் இழயோரைச் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே?அங்கே ஒருவர் சொல்லுகிறார் அட இழஞ்சர் சீரழிய இணயமா வேணும் எண்டு.அட சீரழிய ஆயிரம் முறை இருக்கு.இணயம் மட்டும் தான் சீரழிக்கிறது என்பது அல்லவே பட்டி மன்றத்தின் விவாதப் பொருள்.இணையம் சீரழிக்கிறதா இல்லயா என்பது தானே விவாதப் பொருள்.
அப்படியாயின் இந்த இணயம் எப்படியானது?ஒருவரின் அந்தரங்கமான படுக்கை அறைக்குள் இந்த உலகத்தையே கொண்டு வருகிறது.ஒரு நான்கு சுவர்களுக்குள் முழு உலகத்தயே சந்தமிடாமல் ஒரு சில சொடுக்கு கழுக்குள் கொண்டு வருகிறது.உலகத்தின் ஒரு கோடியில் வக்கிர உணர்வுடயோரினால் கொட்டப்படும் குப்பைகளை அள்ளி பல்லாயிரம் மைல் களுக்கப்பால் இருக்கும் ஒரு வரின் வீட்டிற்குள்ளே கொட்டுகிறது.அட அதில நல்ல விசயங்களும் வருகுது தானே நீங்கள் ஏன் குப்பயக் கிளறு றீங்க எண்டு கினம். அட இங்க நாங்கள் விவாதிக்கிறது இழயோர் பற்றி, எனக்கு குப்பயாத் தெரியிறது அவைக்கு வேற மாதிரித் தெரியுது.ஒருத்தரும் தெரின்ச்சு கொண்டு சீரழியிறேல்ல ,தெரியாமத் தான் சீரழியிறவை.அப்ப நீங்கள் பெரியாக்கள் நல் வழிப் படுத்தலாமே எண்டு சொல்லுகினம்.அங்க தானே பிரச்சினை இருக்கு.இவை குப்பயக் கிளறுகினம் எண்டு என்னண்டு தெரியும்?அது தான் சத்தம் போடாம குப்பய இறக்க வழி இருக்குதே அதத் தானே இந்த இணயம் செய்யுது.இணயம் என்ற தொழில் நுட்பம் எவ்வாறு எமது இளயவரை இலகுவான வழியில் சீரழிக்கிறது என்பது தானே இங்கே கவனதில் எடுக்கப் பட வேண்டிய விடயம்.
ஆகவே ஆயிரம் பயன்கள் இருக்கலாம் இணயத்திற்கு .அவற்றை இங்கே பட்டியல் இடுவதால் எது வித பயனும் இல்லை ஏனெனில் அது விவாதப் பொருள் அல்ல.இணயம் சீரழிக்கிறது.அது சீரழிப்பதற்கான வழியை இலகுவாக்கிறது.
இதனால் சீரழிபவர்களின் கண்ணீர் கதையை நாம் நாளாந்தம் பதிரிகைகளில் வாசிக்கிறோம், காதலர் போல் நடித்து ஏமாற்றி விடப்பட்ட இளயவர் ஆயிரம்.கடத்தப் பட்டு வன்புணர்ந்து ஈற்றில் கொல்லப் பட்டோர் ஆயிரம்.இவர்களின் குடும்பங்கள் பட்ட துன்பம் சொல்லி மாழாது.இவற்றை அறிந்தும் இங்கே இணயத்தின் சீர்கேட்டை மறந்து அல்லது மறைத்து ,இணயத்தின் நன்மைகளைப் பட்டியல் இடும் எமது எதிரணியினரை என்ன வென்று அழைப்பது.
ஆகவே நடுவர் அவர்களே இங்கே எதிரணியினர் இன்னும் விவாதத்தை தொடங்கக் கூட வில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.இனி வருபவர்களும் அரைத்த மாவையே அரைப்பார்கள் போல் உள்ளது.இணயத்தால் இளயவர் சீரழிகின்றனர் என்பது மறுதலிக்க முடியாத உண்மை,உண்மை என்று ஆணித்திரமாகக் கூறிக் கொண்டு ,எனக்குப் பின்னால் வரும் எமது அணியினருக்கு நேரத்தை வழங்கும் நோக்கில் எனது இந்த வாதத்தை முடிக்கிறேன். எதிர் அணியினர் இனியாவது விவாததிற்கான பொருளை விளங்கி தமது வாதங்களை முன் வைப்பார்கள் என்று நம்புகின்றேன்.அவர்கள் தமது வாததிற்குத் தேவயான வார்த்தைகளைத் தேடி அலைந்து இந்தப்பார்வை ஆளர்களின் பொன்னான மணித்துளிகளை வீணாக்காமல் , அவர்களின் பொறுமையைச் சோதிக்காமல் விரைந்து வந்து தமது வாதத்தை வைப்பார்கள் என்று எண்ணி அமர்கிறேன் ,
நன்றி,
வணக்கம்.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கற்பனையிலேயே கரகோசங்களையும் மைக்கையும் உருவாக்கி அசலாக ஒரு பட்டி மன்றத்தில் நிற்பது போன்ற தோற்றத்தோடு தனது விவாதத்தை வைத்துச் சென்றிருக்கிறார் புளுகர் பொன்னையா அவர்கள். என்னையா பொன்னையா பெயருக்கேற்ற படி புளுகிச்சென்றிருக்கிறீர்கள். (நடுவர்கள் பற்றியதைச்சொன்னன் மிகுதியை பின்னால பாப்பம்)
சரி புளுகர் பொன்னையாவின் கருத்தினைப் பார்ப்போம்..
புளுகர் எதிரணியினர் தலைப்பையே மறந்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை வைச்துச் சென்றதோடு அவர்கள் இணைய ஊடகத்தின் பயன் பற்றியே பேசுகிறார்கள் இந்தப்பட்டி மன்றத்தின் தலைப்பு இணையத்தின் பயன்களா ? என்ன என்ற கேள்விகயைக்கேட்டுச்செல்கிறார். அதாவது பொன்னையா இணையத்தின் பயன்களை எடுத்து விவரிப்பதனால் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தில் அடையும் நன்மைகளை சொல்ல முனைகிறார்கள் போல அதன்மூலம் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் இணைய ஊடகத்தால் நன்மை அடைகிறார்கள் என்றதை கூறமுனைகிறார்கள் . அப்படியா எதிரணியினர் எங்கே பார்ப்போம் புளுகரின் புளுகுக்கு என்ன பதிலடி கொடுக்கிறார்கள் என்று.
இளையோர் சீரழிய பல வழிகள் இருந்தாலும் இணையமும் சீரழிக்கிறது அப்படி என்கிறார். இணையம் மட்டும் தான் சீரழிக்கிறது அப்படி என்றது விவாதம் இல்லை என்றதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இணையம் சீரழிக்கிறது என்பதைச் சொல்வது தான் தங்கள் வாதம் என்கிறார்.
ஒருவரின் அந்தரங்க படுக்கையறைக்குள் உலகத்தையே கொண்டு வருகின்ற இணையமானது எங்கோ ஒரு கோடியில் கொட்டப்படுகின்ற குப்பைகளை இன்னொரு முனையில் பல மைல்களுக்கு அப்பால் இருப்பவரது வீட்டிற்குள் கொட்டுகிறது அப்படி என்கிறார். ஐயா பொன்னையா.. இணையம் கொண்டு போய் கொட்டுதா இல்லை இணையத்தில நீங்கள் உள்ளிட்டு அள்ளுறியளா..?? பார்ப்போம் எதிரணியினர் கேட்கிறார்களா நாலு கேள்வி.
மேலும் அவர் தொடர்கையில் கூறுகிறார். ... இணையத்தில் நல்ல விடயங்களும் வருகிறது தானே நீங்கள் ஏன் குப்பையை மட்டும் கிளறுகிறீர்கள் என்று கேட்காதீர்கள் நாங்கள் விவாதிப்பது இளையோர் பற்றி என்கிறார். அத்தோடு புளுகர் போன்ற முதியவர்களுக்கு குப்பையாய் தெரிவது இளையோருக்கு நல்லதாய் தெரியலாம் என்கிறார். (அது ஒன்றும் இல்லை எல்லாம் வயசு செய்யிற வேலை.. புளுகர் மாதிரி வயசடைய எல்லாம் சரியாப்போயிடும்). அப்படியா..??
இன்னொரு கருத்தையும் வைத்துச் செல்கிறார். சீரழிபவர்கள் யாரும் தெரிந்து கொண்டு சீரழிவதில்லை.. சீரழிகிறோம் என்று தெரியாமலேயே சீரழிந்து போகிறார்கள். அப்படி சீரழிகிறவையை நல்வழிப்படுத்தவும் முடியவில்லை என்கிறார் காரணம் அவர்கள் நாலு சுவற்றுக்குள் அறையினுள் சத்தம் போடாமல் சீரழிவுகளை எதிர் கொள்கிறார்கள். அந்த சந்தர்ப்பத்தை இந்த இணையம் அமைத்துக் கொடுக்கிறது. அப்படி என்று கூறிச்செல்கிறார். பிள்ளை என்ன செய்யிது என்று தெரிஞ்சால் பெரியவர்கள் நல்வழிப்படுத்தலாம் கண்டிக்கலாம். பிள்ளை என்ன செய்கிறது என்றே தெரியாத நிலையில் எப்படி கண்டிப்பது நல்வழிப்படுத்துவது என்று கேட்கிறார் புளுகர் என்ன சொல்கிறீர்கள். பார்ப்போம் எதிரணியினர் கருத்தென்ன??
தொடர்ந்து பேசுகையில் இணையத்தின் பயன்கள் ஆயிரம் இருக்கலாம் அவற்றை பேசிப்பயனில்லை. சீரழிவையும் இணையம் கொடுக்கிறது சீரழிவிற்கு வழி வகுக்கிறது அப்படி என்று கூறிச் செல்கிறார். அத்தோடு இந்த இணைய சீரழிவினால் இளையோர் மற்றும் அவர்கள் படும் துயரங்கள் பற்றியும் கூறிச்செல்கிறார். பொருட்கள் இழக்கப்படுகின்றன.. பெண்கள் கடத்தப்படுகிறார்கள்... வன்புணர்வுக்கு உள்ளாகிறார்கள் இப்படியான சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன அப்படி என்று கூறிச்செல்கிறார். புளுகர் கூறிய இந்த சீரழிவுகள் எல்லாம் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோருக்கு பொருந்துகிறாதா இதை ஏற்றுக்கொள்கிறீர்களா ?? எங்கே நன்மையடைகிறார்கள் என்ற அணியினர் இதற்கு என்ன பதில் வைக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
புலம் பெயர்வாழ் இளையோர் இணைய ஊடகத்தால் சீரழிகிறார்கள் இதுவே உண்மை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைத்துச் செல்கிறார். செல்கையில் இன்னொன்றையும் கூறிச்செல்கிறார். எதிரணியினர் இன்னும் விவாதத்தை ஆரம்பிக்கவே இல்லை என்று சொல்கிறார். அப்படியா..?? எங்கே பொங்கியெழும் எதிரணியினரின் கருத்து வெள்ளம் புளுகரின் இந்த கூற்றை அடித்துச் செல்கிறதா இல்லையா பொறுத்திருந்து பார்ப்போம். அளவாக தனது கருத்தை வைத்துச்சென்ற புளுகர் பொன்னையாவைத் தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம் பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அனல் பறக்கும் இருதரப்பு விவாதங்களிடையே பீனிக்ஸ் பறவைகள் போல் நின்று தலைமை தாங்கும் ஆற்றல் மிகு நடுவர்களான திரு.செல்வமுத்து...மதிப்புக்குரிய தமிழினி அவர்களே..
என்தரப்பு அணிக்கு தலைமை தாங்கும் இளைஞன் அவர்களே..
மற்றும் எனது அணி சார்ந்த சக கள உறுப்பினர்களே..
எதிர் அணிக்கு தலைமை தாங்கும் திரு.சோழியன் அவர்களே..
இணையதளங்கள் நவீன உலகை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த நிலையில்:
இணையதளங்கள் என்பவை:
எந்த ஒரு சமுதாயத்தையும் வழி நடத்தும் இளையோர்க்கு...
ஆயிரக்கணக்கான நூல்கள்..
நூற்றுக்கணக்கான நூலகங்கள்..
பல்லாயிரக்கணக்கான மனிதர்களூடான சந்திப்புக்கள்...
தேடியும் நிறைவடையாத தேடல்கள்....
இப்பிடி பலவற்றின்மூலம் கிடைக்காத தகவல்களை...
ஒரே ஒரு கணணி திரை தரும் என்றும்..அதில் வரும் இணைய தளங்கள் செய்திருக்கிறது என்று தெரிந்தும்...
வீட்டுக்குள்ளேயே அது ஒரு பல்கலைக்கழகத்தை கொண்டுவரும் என்று புரிந்தும்..
இல்லையில்லை அவை தீங்குதான் ... சீரழிவுதான் எம் இளையோர்க்கு என்று சொல்லி வாதிட வந்திருக்கும் எதிர்தரப்பு வாதிகளே
அனைவருக்கும் எனது பணிவு கலந்த வணக்கங்கள்!
நடுவர் அவர்களே திரு.சோழியன் அவர்கள் நன்றாக ஒரு வாதத்தை வைத்தார். அது:
<b>புலம் பெயர்ந்து வாழும் இளைஞர்களை இரு பிரிவாக வகைப்படுத்தலாம்.
1. தாயகத்தில் பிறந்து சிறுவயதிலோ அல்லது அண்மைக்காலங்களிலோ புலம் பெயர்ந்து வந்தவர்கள்.
2. புலம்பெயர்ந்த நாடுகளிலேயே பிறந்து வளர்பவர்கள்.
இதிலே முதலாவது வகையினரில் பெரும்பாலானவர்களைத்தான் தமிழ் கருத்துக்களங்களிலே, தமிழில் கருத்தாடுபவர்களாகவோ அல்லது பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு எதையாவது தருபவர்களாகவோ, அல்லது ஆகக் குறைந்தது அங்கத்துவர்களாகவோ காணக் கிடைக்கிறது. ஆனால், இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் எவரையாவது யாழ் போன்ற கருத்துக்களங்களில் காணமுடிகிறதா? ஒரே வார்த்தையில் 'இல்லை' என மனவருத்தத்துடன்தான் கூறமுடிகிறது. வேண்டுமானால் இவர்களை, தமிழ் கருத்துக்களம் என்ற பெயரில் தமிங்கிலத்தில் உரையாடும் களங்களில் காணலாம். அங்கே என்ன செய்கிறார்கள்.. சினிமாவை.. நடிக நடிகையரை.. அவர்களுடைய நெளிகோல படங்களை பக்கம் பக்கமாக அலசுகிறார்கள். அவ்வளவுதான்</b>
நல்லாக சொன்னீங்க சோழியன்அவர்களே:
நீங்க சொன்ன 2 வது வகை தமிங்கிலம் பேசுபவர்கள்தான் கனடாவின் சரித்திரம் கண்டிராத ஒரு பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி முடித்தார்கள்!
பொய் சொல்கிறேன் என்று நினைத்தால்.. பி.பி.ஸி வானொலி கண்ட செவ்விக்கு கனடா பொங்குதமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பல்கலைக்கழக மாணவி ஒருத்தி சொன்னாளே..
இது முதற்கட்டம்.. நான் இங்கேதான் என் நினைவுதெரிந்தவரை இருக்கிறேன். ஆனால் இனம் முக்கியம் ... இதுக்கும் சிங்கள அரசாங்கம் பதில் சொல்லாவிடில் இன்னும் தீவிரமாக எம் போராட்டத்தை முன்னெடுப்போம்!
அதை விடுவோம்.. சுனாமி என்ற ஒன்று வந்திச்சு..சுவிஸ்ல
ரயில்வே ஸ்ரேசன்லயும்...
லண்டன்ல.. ஆலயங்கள் முன்னாலயும் போறவர் .. வாறவர் எல்லார்கிட்டயும்
எங்கள் இனம் பேரழிவை சந்திச்சு இருக்கு உதவி செய்யுங்க எண்டு மடியேந்தி பிச்சை கேட்டார்கள் என்று எல்லாருமே அறிந்தோம்.
இந்த இங்க பிறந்து வளர்ந்த இளையோர்தானே அதை செய்தாங்க.
அப்போ எங்கே போனிங்க நீங்க?
அவர்கள் பார்த்திராத இணையதளங்களா?
அது அவர்கள் பாதையை திசை திருப்பிச்சா?
சாட்டிங்கும் அதன் பிறகு டேற்றின்கும் என்று வாதாடுறீங்கள்.
சாட் பண்ண இணையம் வழி செய்யுதுதான்.. அதற்காக
24 மணி நேரமும் சாட் பண்ண முடியுமா?
அது ஒரு வகை பொழுதுபோக்கு... '
இயந்திரமயமான புலம் பெயர்வு வாழ்க்கை அதுக்கு இடம் கொடுக்குமா?
சாட் பண்ணுறதாலதான் நீங்கள் சொன்னவை எல்லாம் நடக்குது என்றால் ..
புலத்தில் உண்மையாக வாழ்பவர்கள் நீங்களாக இருந்தால் நம்புங்கள் ..
இளையோர்க்கு இணையதளங்கள்தான் அதுக்கு தேவை என்று இல்லை!!
புறச்சூழ்நிலைகளே அவற்றிற்க்கு அகலமாக கதவை திறந்து வைத்து காத்துக்கொண்டிருக்கிறது!
இன்னும் ஒன்றை சொன்னீர்கள் அது:
<b>காதலுக்கு வழி தேடுது. அதாவது காதல் என்ற பெயரிலே பருவ உணர்வுக்கு வடிகால் தேடுது. மனதிலுள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க இடம் தேடுது. நாலு சுவர்களுக்குள் இருந்து, 'சற்' ரூம்களிலே மன வக்கிரங்களைக் கொட்டித் தீர்க்குது. தெருவில் இறங்கி நேருக்கு நேராய் தைரியமாய் பேச முடியாததுகளை எல்லாம், 'சற் ரூம்'களிலே கொட்டிக் கிளறி குப்பையாக்கி தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்கிறது. இதுதான் பல 'சற் ரூம்'களிலே அதுவும் கண்காணிப்பாளரற்ற தமிழ் 'சற் ரூம்'களிலே வாசிக்க வாசிக்க வந்துகொண்டேயிருக்கும் சமாச்சாரங்கள்</b>.
அற்புதமாய் சொன்னீர்கள்
கனம் நடுவர் அவர்களே திரு.சோழியன் அவர்களின் வாதத்தின் மீதான என்னிடம் உள்ள கேள்விகள் இவை:
* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?
*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?
*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?
*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?
நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...
அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...
காகங்கள் கறுப்பானவை-ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!
என்பது போல் உள்ளது!
பிரியசகி அவர்கள் இன்னும் திறமையாக தொடர்ந்தார்:
அவர்சொல்கிறார்:
<b>தயவு செய்து கருத்தை தெளிவாக உள்வாங்குங்கள். பெற்றோரின் கணனி பற்றிய அறிவின்மையை இளையோர் தமது சீரழிவுகளுக்கு சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை கூறவந்தால்.. அதற்காக பெற்றோரை குறைகூறாதீர்கள்.. ஒரு சில டொலர்களுடன் நாடுகள் கடந்து.. புதிய சூழலிலே தம்மை நிலைநிறுத்திய அவர்களா அறியாமையுள்ளவர்கள்..? அது உண்மையல்ல. தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்ற நிலையில் ஓய்வெடுக்கிறார்கள். ....... இப்படி தொடர்ந்திருந்தார்!</b>
*தமது காலத்தில் தாம் அறிந்தவையே போதும் என்று ஓய்வெடுக்கிறார்கள் என்று சொன்னீர்கள்.
உங்களிடம் கேக்கிறேன்.. தற்காலகட்டத்தின் வளர்ச்சி போக்கில் முன்னைய சந்த்ததியை விட எல்லா விதமான துறைகளிலும்..
அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில் அவர்களின் பெற்றோர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை.. புலம்பெயர்ந்த்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சாதித்தார்களே எதனால் ? இணைய தளங்களினால் ஏற்பட்ட தீங்கினாலா?
*அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையதளங்களின் நன்மையினாலா?
*இணையதளங்களின் பாவனையானது எமது கலாச்சாரத்தை மறந்து வேற்று இனத்தவரின் கலாச்சாரத்தை பழகும் வழி உள்ளது என்றும் சொன்னீர்கள். -நல்லது..
இணையதளங்களின் பாவனையினால் வேற்றுக் கலாச்சாரத்தை தழுவி பெயர் பழக்கவழக்கம் எல்லாம் மாறி..மதம் மாறி ..மொழிமாறி.. போய்விட்ட எத்தனை இளையோர் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள்?
*இந்த இணையதளங்களின் வாசனையே அறியாத பல வளர்ந்தவர்கள்தான் இதை எல்லாம் பெரும்பாலும் எம்மிடையே செய்து கொண்டிருக்கிறார்களே- இது எதனால் ஆச்சு?
தொடர்ந்து திரு.முகத்தார் அவர்கள் அற்புதமாய் ஒரு கருத்தை வைத்தார் நடுவர் அவர்களே - அது :<b> முதலில் இந்த தலைப்பை ஏன் வந்தது என எதிர் தரப்பினர் புரிந்து கொள்ளவேணும் அவர்கள் கூறுவதுபோல இணையத்தினால்; நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்பிடி ஒரு தலைப்புக் கீழ் நாங்கள் வாதிடத் தேவையில்லையே </b>!
ஐயா விவாத மேடை என்பது எந்த தலைப்பிலும் வரலாம். தலைப்பு சில சமயங்களில் மழை பூமியில் இருந்து வருதா? இல்லை வானத்தில் இருந்து வருதா எண்டும் வரலாம். எந்த அணியில் நீங்கள் இருந்தாலும் .. உண்மை எது என்று சரியாக தெரிந்தாலும் ... எதிர்வாதங்களை வைத்தே ஆவீர்கள்.
மழைக்கு நீராவியின் வடிவில் பூமி கடல் காரணம்.. அதேபோல் பூமி இன்னும் காணாமல் போய்விடாமல் இருக்க வானமும் ஒரு காரணம்-!!!!!
ஆகவே தீர்ப்புக்கு முன்னம் தலைப்பை பற்றி சிலாகிப்பது அவ்ளோ உகந்தல்ல!
நடுவர் அவர்களே: <b>எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் உண்டு என்பது பொதுவிதி</b>! - தீமைபற்றி வாதம் புரிகிறோம்- என்றால் நன்மைக்கு வழிகாட்டுகிறோம்!
இணயதளங்கள் இளையோர்க்கு தீமை என்பதனால்தான் அதை பற்றி இங்கு விவாதிக்க வந்து இருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டி நல்லவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த... இணயதளம் ஒன்றையே பாவித்ததன் மூலம் - திரு.முகத்தார் அவர்கள் .... எதிரணியில் இருந்தாலும் எங்கள் அணிக்கு வலுவான கருத்தை சேர்த்தற்க்கு பாராட்டாமல் இருக்க முடியவில்லை!
நடுவர் அவர்களே- தீமை என்கில்லை? எதில் இல்லை?
தலைப்புக்கு சம்பந்தமாய் யாரும் பேசவில்லை என்கிறார்கள் எதிர்த்தரப்பினர்!
அவர்கள் அர்த்தப்படுத்துவதுதான் என்ன? சீரழிந்து போகிறார்கள்தான்! மிக சொற்ப சிலர்! அதே நேரம் இலட்சக்கணக்கானவர்கள் பயனடைகிறார்களே - அதை ஏன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை? ஒரு விமானம் சிதறி விழுகிறதென்றால்- விமானமே அபாயம் என்று சொல்கிறீர்களா? பயணம் இடைவழியில் நிற்கும்! - அதை தவிர உங்கள் விவாதத்தில் பயன் ஒன்றும் இல்லை!!
<b>நடுவர் அவர்களே!
உண்ணும் உணவில் இருந்து - ஒரு சிலரின் உயிர்வாழ்வு வரை சில அம்சங்கள் பிறருக்கு தீங்காய் இருக்கிறது! அதனால் உணவே கூடாது என்று ஒதுக்கி வைக்கிறோமா?
இல்லை மனித இனமே அபாயமானது என்று சொல்லிவிட்டு போகலாமா?அப்புறம் உயிர்வாழ்தல் எப்பிடி நிலை பெறும்?</b>
புலம்பெயர்ந்த இளையோரை இணையதளங்கள் சீரழிக்கிறது என்கிறார்கள் எதிர்தரப்பினர் - ஆனால் இதுவரை அதனை தவிர்த்து அதற்க்கு சமனான - தீங்கில்லாத மாற்று ஊடகம் ஒன்றை இதுவரை அவர்கள் சுட்டி காட்டவில்லை!சுட்டிக்காட்ட போவதும் இல்லை! ஏனெனில் அவர்களிடம் விடை இல்லை!
வேற்றுநாட்டவருக்கு சவால்விடும் வகையில் மிககுறுகிய காலத்தில் பாடசாலைகளிலும் - கல்லூரிகளிலும்-பயிற்சிமையங்களிலும்- பயின்ற- பயில்கின்ற -பயில போகும் எம் இளையோர்க்கு அவர்களின் அறிவு தேடலுக்கு இந்த இணயதளங்கள் கை கொடுத்த-கொடுக்கின்ற- கொடுக்க போகும் இடங்கள் எத்தனை எத்தனை?
ஆபாசதளங்கள்-இணைய அரட்டைகள் என்ற ஒரு சில விடயத்தையே வைத்து மல்லுக்கட்டும் இவர்களிடம் கேட்கிறேன் நடுவர் அவர்களே...
இன்றைய இளையோர்க்கு
<b>பொருளாதாரம்-மருத்துவம்-இலக்கியம்-பன்னாட்டுத்தொடர்பு-கலை-தொழில்நுட்பம்-பத்திரிகைத்துறை-அரசியல்-ஆன்மீகம்-புவியியல்-உயிரியல்-தாவரவியல் -விண்ணியல் விநோதங்கள்-இசை-கற்கைநெறி-கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்-திரைத்துறை-வரலாறு-இயற்கை பற்றிய ஆய்வு- </b> ...
இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்- இத்தனை விடயங்களையும் மேற் சொன்ன ஒரு சில விடயங்களை வைத்து உதாசீன படுத்தலாமா?
<b>இவ்வளவு பேசும் இவர்கள் -இளையோர்க்கு ஒரு முன்மாதிரியாக செயற்பட முன்வந்து -இணையத்தின் தீங்கை வலியுறுத்தி- நாளைக்கே தங்கள் இணையதொடர்பை துண்டித்து ஒரு வழிகாட்டிகளாக செயற்பட முடியுமா?</b>
இல்லை என்றே பதில் வரும்- ஏனெனில் அதில் உள்ள நன்மைகள் அவர்களுக்கும் தெரியும்!!
ஒருசில புறநடைகளை பூதாகாரமாக்கி -இளையோர் மனதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி...
அதை தவிர்க்கலாமோ என்று ஒரு குழப்பம் கலந்த அச்சத்தை உருவாக்கி நவீன உலகின் போக்கிலிருந்து எம் இளையோரை அப்புறப் படுத்தலாமா?
அப்பிடியான செயல்களை செய்து வெற்றி கொண்டு -பழமைவாத கருத்துக்களை முன்வைத்து ஒரு இனத்தின் முனேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட்ட தலிபான்கள் போல் எம் இளையோரும் வாழ்வதில் எதிர் தரப்பினர்க்கு சம்மதமா?
இறுதியாக நடுவர் அவர்களே- உங்கள் தீர்ப்பு எதுவாகவும் இருக்கலாம்.
அதை பற்றி பேசவோ .. கருத்து சொல்லவோ எனக்கு எந்த அருகதையும் -அதிகாரமும் இல்லை!!-
ஆனால்... ஒரு வேளை உங்கள் முடிவு இளையோர்க்கு இணையதளங்கள் சீரழிவுதான் என்று அமைந்தால்-- புதுயுகத்துடன் போட்டி போட்டு ஓடும் இளையவர்களின் கால்களுக்கு குறுக்கே தடையாய் அது அமைந்துவிடுமோ- அவர்கள் ஆற்றலை முடக்கி போட்டுவிடுமோ?என்ற ஒரு சந்தேகத்தைஎன்னுள் நானே எழுப்பி -
வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்!!
-வணக்கம்-
-!
!
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
புளுகர் பொன்னையாவை அடுத்த தனது அணிக்கான வாதத்தை வைக்க வந்துவிட்டார் வர்ணன். அவர் கூறியதைப்போல பட்டிமன்றம் இப்போது மிகவும் சுூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது என்பது உண்மைதான். வெப்பத்தின் நடுவே வாழும் பீனிக்ஸ் பறவைக்கு எம்மை ஒப்பிட்டு ஆரம்பித்துத் தன் வாதங்களை முன்வைத்தார். எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும் இங்கு கருத்துக்களை வைக்கும் அத்தனைபேருடைய கருத்துக்களுக்கும் மதிப்பளித்து, ஆராய்ந்து பார்த்துத்தான் நாம் தீர்ப்பு வழங்குவோம்.
பல்கலைக்கழகங்களையே வீட்டுக்குள் கொண்டுவரும் கணினித்திரை தரும் இணையத்தளங்களின் நன்மையான தகவல்கள் தெரிந்திருந்தும் இல்லை இல்லை அவை தீங்குதான்.சீரழிவுதான் என்று எதிரணியினர் வாதாட வருகிறார்கள் என்று ஆரம்பித்தார். இக்கூற்று சரியா? தவறா?
எதிரணித்தலைவர் சோழியனுடைய கருத்துக்களையே மேற்கோள் காட்டி கனடாவில் இளையோரின் பொங்குதமிழ் நிகழ்ச்சி பற்றியும், சுனாமியின் அனர்த்தங்களின்போது சிறியோர்களின் பங்களிப்புக்கள் பற்றியும் குறிப்பிட்டார். இதற்கு எதிரணியினர் பதில் என்ன? இலண்டனில் இளையோருடன் நானும் சிலவேளைகளில் சேர்ந்து மடியேந்தினேன். அது ஒவ்வொருவரினதும் கடமைதானே!
"சாட்டிங்கிற்கும், டேற்றிங்கிற்கும்" இணையத்தளங்கள் தேவையில்லை என்றார். காதல் என்ற ஒன்று அதற்கு முன்னர் இருந்ததில்லையா? மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு மார்க்கங்கள் இருந்ததில்லையா? இணையம் வந்தபின்னர்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா? பல கண்காணிப்பாளர்கள் முன்னர் இருந்தும் அந்தக்குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா? என்று கேள்விமேல் கேள்வியாகக் கேட்டார். இது ஒரு சிறிய பங்குதான் என்றும், இந்த ஒன்றை வைத்து பலதை தீர்மானிக்க முடியாது என்றும் உதாரணங்களுடன் சுட்டிக்காட்டினார். காதல் புனிதமானது, அதைக் குப்பையாக்குவதும், தெய்வீகமாக்குவதும் அவரவரைப் பொறுத்தது அல்லவா? எதிரணியினர் இதனை ஏற்றுக்கொள்வார்களா?
முகத்தார் அவர்களும், அவரது அணியைச் சார்ந்தவர்களில் சிலரும் தலைப்பைப்பற்றிய தங்கள் கருத்துக்களை வைத்தனர். இணையத்தால் நன்மை மட்டும்தான் இருக்கிறதெண்டால் இப்படியான தலைப்புக்குக் கீழ் தாங்கள் வாதாடத்தேவையில்லை என்றும், எதிரணியினர் கொடுத்த தலைப்பில் இன்னும் தங்கள் விவாதத்தைத் தொடங்கவேயில்லை என்றும் குற்றம்சாட்டினர். இது உண்மையா? அல்லது நான் முன்பே குறிப்பிட்டதுபோல் "எப்படித்தான் எதிரணியினர் தமது கருத்துக்களை முன்வைத்தாலும் அவர்கள் எதுவும் வைக்கவில்லை என்று கூறுவது ஒன்றும் புதிதல்லவே!" என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றார்களா?
எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார் வர்ணன். "கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்" என்பதுபோல. தாம் தீமை வாதம் புரிந்து நன்மைக்கு வழிகாட்டுகிறோம் என்றார். முகத்தார் அவர்கள் எதிரணியில் இருந்தாலும் தங்கள் அணிக்கே வலுச்சேர்க்கிறார் என்றார். அதற்குப் பாராட்டும் தெரிவித்தார். உண்மையில் அப்படிச் செய்கிறாரா? முகத்தார் அவர்கள் இருக்கும் அணிக்கே குpழி தோண்டுகின்றாரா? அல்லது அவர் ஒரு முதியவர் என்பதால் அங்கிருக்கும் இளைஞரை தன் சொல்லம்புகளால் தாக்கப் பயந்து ஒரு முதியவரை வேண்டுமென்றே வர்ணன் தாக்குகின்றாரா? எதிரணிதான் இதற்குப் பதில் கூறவேண்டும்.
இணையத்தால் மிகச்சில சீரழிவுகள்தான் உண்டு ஆனால் பயனடைபவர்கள் பலர் என்றும் தன் வாதத்தை வைக்கிறார். சீரழிவை உண்டாக்காத ஊடகத்தை அவர்கள் காட்டவில்லை, காட்டவும் மாட்டார்கள் ஏனென்றால் அவர்களிடம் இதற்கு விடையே இல்லை என்று தனது கருத்தை ஆணித்தரமாக வைக்கிறார்.
எதிரiணியினர் இணைய அரட்டை, ஆபாசத்தளங்கள் என்ற சிலவிடயங்களையே வைத்து மல்லுக்கட்டுகிறார்கள் ஆனால் எத்தனையோ பயனுள்ளன இருக்கின்றன என்று பொருளாதாரம்- மருத்துவம்… என்று தொடங்கி விண்ணியல், வரலாறு, இயற்கை பற்றிய ஆய்வு என்று அடுக்கிக்கொண்டே போகிறார். சில காரணங்களை மட்டும் கூறி ஓர் இனத்தின் முன்னேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட எதிரணியினர் சம்மதமா? என்றும் கேட்கிறார்.
அவர் கூறுவதில் நியாயம் உள்ளதுபோலவே தெரிகிறது. ஆனால் வரப்போகும் தீர்ப்புபற்றி பேசவோ, கருத்துச்சொல்லவோ தான் வரவில்லை என்றும், இளையோருக்கு அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக வரும் தீர்ப்பு அமையுமோ என்று ஒரு சந்தேகத்தைத் தன்னுள் எழுப்பி முடித்திருக்கின்றார்.
நல்ல கருத்துக்களை வைத்து வாதம் செய்வது ஒரு திறமை. எதிரணியினரை தாக்கியே வாதமிடுவதும்; ஒருவித திறமைதான். இந்தவகையில் இரு அணியினரும் தாம் என்ன செய்கிறோம் என்று தெளிவுடனே செய்கின்றார்கள் என்றே நடுவர்களாகிய நாம் எண்ணுகிறோம். வரப்போகும் முடிவும் அதனைப்பொறுத்தே அமையும் என்று கூறி தீமை அணியிலிருந்து ஈஸ்வர் அவர்களை அழைக்கிறேன்.
நன்றி
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
ஐயா எனக்குத் தெரியாதையா வார்த்தை ஜாலம் தெரிந்ததை சொல்லுகின்றேன்.
அறிஞர்கள் நிறைந்த அரங்கில் என் கருத்துக்களை வைக்க பயமாக இருக்கின்றது.
பாருங்கோ பயத்திலை உங்களுக்கு வணக்கம்
சொல்ல மறந்திட்டன். தன் துயரத்திலும் இந்த பட்டிமன்றத்தில் முலம் இந்த இளைஞர்களை
திருத்த நல்ல தீர்ப்பு சொல்லவேண்டுமென்று ஆர்வத்துடன் வந்திருக்கும் நடுவர்
செல்வமுத்து ஐயா அவர்களே களத்திலை நல்ல கருத்துக்கள் வரவேண்டுமென்பதற்காக
பலருடைய கருத்துக்களில் வீச்சரிவாளை வீசிய அனுபவத்தில் இந்த பட்டிமன்றத்தை
திறம்பட நடத்திக்கொண்டிருக்கும் யாழினி அவர்களே டங் சிலிப்பாகிவிட்டது மன்னித்துக்
கொள்ளுங்கள் தமிழினி அவர்களே
மற்றும் மாண்புமிகு எனதணித்தலைவர் சோழியன்
அண்ணா அவர்களே மற்றும் இணையத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தால்
சீரழிகின்றனர் என்ற உண்மையை எடுத்துரைக்க வந்த நண்பர்களே
ஏதோ இந்த ரசிகை வில்லங்கத்தில் மாட்டிவிட்டா
வந்த நாங்கள் ஒப்புக்காக என்னத்தையாவது சொல்லிவிட்டு போவம் என்று ஒப்புக்காக
வாதாடும் எதிரணி நண்பர்களே
இந்த பட்டிமன்றத்தை சிறப்பாக ஒழுங்கு படுத்தி நடாத்தும்
ரசிகை அவர்களே
னைவருக்கும் எனது வணக்கங்களை சிரம் தாழ்த்தி கூறிக்கொள்கின்றேன்.
என்னுடைய அணியினர் அனைவரும்
திரும்ப திரும்ப ஒரு விடயத்தை சொல்லவேண்டியிருக்கின்றது. காரணம் எதிரணியினர் தோல்வியை
தவிர்ப்பதற்காக தலைப்பை விடுத்து இணையம் என்று பொதுவாக கருத்தை கூறுவதைப்பார்த்தால்
அவர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். தலைப்பிலிருந்து நழுவி
நடுவர்களை திசைதிருப்பி வெற்றியை தமதாக்குவோம் என்ற நப்பாசைதான்.
நாங்கள் உயரத்தில் ஏறுவதற்காக ஒருவருடைய
தோளில் ஏறி மேலே சென்றுவிட்டபின் ஐயோ நான் கட்டையனுக்கு மேலே மிதிச்சு
மேலே ஏறினனான் என்று குறை கூறுகவர்களல்ல. ஐயா இணையம் நல்லது. இது தகவல்களை
விரைவாக்குகின்றது. உண்மைதான். படத்தை பார்த்தபடி சுவாரசியமாக பேசமுடிகின்றது.
என்ன ஆச்சரியமான வளர்ச்சி. இலவச தொலைபேசிகளை வளங்குகின்றது. அற்புதம்.
பல அரியதகவல்களை நொடியில் பெற்றுக்கொள்ளமுடிகின்றது. இவற்றை நாங்கள்
மறுத்தால் நாங்கள்தான் உலகின் பெரிய பொய்யர்கள். இன்னும் எத்தனையோ நன்மைகள்.
தலைவணங்குகின்றோம். விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் இவற்றை மறுக்க
அஞ்ஞானவாதிகளல்ல. ஆனால் தவறு ரசிகையினுடையது அவர் தலைப்பை இணையம்
இளைஞர்களை கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா என்று வைக்காமல்
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால்
நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா? என்ற தலைப்பை
வைத்துவிட்டார்.
அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும்
நழுவுகின்றனர். தலைப்பை தங்களுக்கு சார்பாக வைத்துக்கொள்கின்றனர்.
சுவிஸிலிருந்து சிலகாலத்துக்கு முன்னர் எனக்கு ஒரு துண்டுப்பிரசுரம்
ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் இளைஞர்கள் பலர் புகையிரத நிலையங்களில்
நின்று கைத்தொலைபேசி கமாராவூடாக அங்கு செல்லும் தமிழ்பெண்களை
படம்பிடித்து அந்த படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து அந்த பெண்களை
மிரட்டுவதாக (அதை களத்தில் இணைத்திருக்கின்றேன்.) அவற்றை இணையத்திலும்
சேர்த்துவிடுவார்களாம்.
புலம்பெயர் பெற்றோர்கள் அதிகம்
கணனி அறிவில்லாதவர்கள். அதை பயன்படுத்தி இளைஞர்கள் தங்கள் இச்சைகளை
இணையமூலம் நிறைவேற்றுகின்றனர். இணையம் வருவதற்கு முன்னர் ஆபாச வீடியோக்களை
அதற்குரிய இடங்களில் வாடகைக்கு பெற்றுக்கொள்ளமுடியும். அதனால் சிறுவர்களை அவை
சேருவதை கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் இப்போது இணையத்தில் பலபக்கங்களுக்கு
சென்றால் விளம்பரம் வ¨்து ஆர்வத்தை தூண்டுகின்றது. நீங்கள் சொல்லாம் இணைய
தீச்சுவர் மூலம் தடைசெய்யமுடியுமென்று. ஒருதடவை அந்த இணையத்துக்கு சென்றால்
இளைஞர்கள் தூண்டப்பட்டுவிடுவர். அதன்பிறகு தீச்சுவர் போட்டென்ன போடாமல் விட்டென்ன?
இங்கு ஒருவர் கனடாவில் பொங்கு தமிழ்
இளைஞர்கள் நடாத்தினர் என்றார். சுனாமி நிதிசேர்த்தார்கள் என்றார். கனடாவின் பொங்கு
தமிழுக்கு இளைஞர்கள் பெயர் லேபிளாகப் பயன்பட்டதே ஒழிய அவர்கள முழுவதுமாக நிற்கவில்லை.
சில அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பெயர்பயன்பட்டது.
மற்றது தமிழ்நெற் யாழ் சங்கதி
என்ற இணையங்களின் பெயர் கூறப்பட்டது. அவை நமது விடுதலைக்காக உருவாக்கபட்ட
இணையங்கள். அவை இளைஞர்களை திசைதிருப்ப முயலாது. இணையத்தினால் இளைஞர்கள்
தெரிந்து கொள்ளமுடியாத அசிங்கங்களை நாலு சுவருக்குள் இணையம் என்ற ஊடகமூலம்
பெற்றுக்கொள்ள வழிசெய்துவிட்டது.
பார்த்துப்பேசுவதற்கு உருவாக்கப்பட்ட நெற்மீற்றிங்கை
பயன்படுத்தி சுயஇன்பம் கற்றுக்கொடுக்கின்றார்கள். எதிரணியினர் கூறலாம் தொலைக்காட்சியில்
ஆபாசபடங்கள் இல்லையா என்று? அதை பெரிதாக இளைஞர்கள் பார்க்கமுடியாது. பெற்றோர்களும்
சேர்ந்திருந்து பார்ப்பதால் தொலைக்காட்சிகளில் ஆபாசங்களை அவர்கள் பார்க்கமுடியாது.
மற்றையது அவை கட்டணமாக இயங்குகின்றன. இணையங்களுக்கு தொலைபேசிமூலமும்
பணம் செலுத்தமுடியுமென்பதால் சுலபமாகிவிடுகின்றது.
எதிரணியினர் இணையத்தால் நன்மை என்கின்றார்கள் ஏதாவது ஒன்றை காட்டினார்களா? பொதுவான இணையத்தை நன்மை என்று
வாதாடாமல் தலைப்புக்கேற்றவாறு உதாரணங்களுடன் வாதாடுங்கள். ஏன் யாழ் களத்திலேயே தேவையில்லாத அரட்டை சினிமா பகுதிகளில் எழுதுபவர்கள் தொகைதான் அதிகம். எதிரணியினர் இங்கு புலம்பெயர் தமிழ் இளைஞர்கள் இணையத்தில் ஏதாவது சாதித்திருக்கின்றார்கள் என்று கூறமுடியுமா? புலம்பெயர் நாட்டில் ஒரு குழப்பவாதி விடுதலைக்காக ஒரு இணையமும் எதிராக பல இணையங்களும் நடாத்துவதாக யாழில் ஒருவர் கூறியிருந்தார்.
நடுவர்களே உங்களை குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பை
விட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நானறிவேன். கூறுவதற்கு நிறைய இருக்கின்றது.
பின்னால் வரும் மக்கள் படைக்கு வழிவிட்டு அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
நன்றி வணக்கம்
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
அறிஞர்கள் நிறைந்த அவையிலே, வார்த்தைஐhலம் தெரியாத காக்கைவன்னியன், ஈஸ்வர் வரமுன்னரே வந்து, ஆரம்பிக்கும்போதே அனைவருக்கும் வணக்கம் கூறமறந்து, பயந்து பயந்து தன் வாதத்தினை முன்வைத்தார்.
இவரும் பெரும்பாலான தனது அணியினர் கூறுகின்ற குற்றச்சாட்டையே கூறுகிறார். எதிரணியினர் தலைப்பை விடுத்து நழுவுகிறார்கள் என்றார். தலைப்பைத் தங்களுக்குச் சார்பாக வைத்துக்கொள்கின்றார்கள் என்றார். இவர்கள் இதனைத் திரும்பத்திரும்பக் கூறுவதைப்பார்த்தால் இது உண்மைதான் என்று எதிரணியினர் இனிமேல் ஒத்துக்கொண்டுவிடுவார்களோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்பதை எதிரணியினர் மெய்யாக்கப்போகிறார்களா? இதற்கு எதிரணியினரின் பதில் என்ன?
இரசிகை தலைப்பை "இளைஞர்களைக் கெடுக்கின்றதா அல்லது வளர்க்கின்றதா" என்று வைக்காமல் "புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகின்றார்களா? அல்லது சீரழிகின்றார்களா?" என்று வைத்துவிட்டார் அதனால்தான் எதிரணியினர் தலைப்பிலிருந்து எல்லோரும் நழுவுகின்றார்கள் என்றும் கூறுகிறார்.
இந்த இடத்தில் நான் இதற்கு முன்னர் வாதாடிய வர்ணன் "எந்தத்தலைப்பிலும் விவாதமேடை வரலாம் என்று கூறி சில உதாரணங்களையும் கொடுத்தார்" என்று முன்பு கூறியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இன்றைய தலைப்பு இதுதான். இதற்குள் நின்று வாதாடுவதுதான் சிறப்பு. ஆனால் இத்தனை நாட்களுக்குப்பிறகு இது சரியல்ல என்று கூறுவதும் சரியல்ல.
அதிகமானோர் ஆபாசப்படங்களையும், சினிமாவையும், வீணான அரட்டைகளையும் அடிக்கடி ஆதாராமாகக் காட்டுகிறார்கள். விடுதலைக்காக உருவாக்கப்பட்ட இணையங்கள் இளைஞர்களைத் திசைதிருப்ப முயலாது என்றும் மற்றவைகளால் அவர்களைத் திசைதிருப்ப முயலும் என்பதுபோல் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார். இவ்வாதமே பலமுறைகளில் முன்வைக்கப்பட்டது. இதனை அப்படியே ஏற்றுக்கொள்ளலாமா? எதிரணியினர் தகுந்த பதில் தருவார்கள் என்ற எதிர்பார்க்கிறேன்.
நடுவர்களைத் திசைதிருப்ப முயல்கிறார்கள் என்றார். எம்மைக் குழப்ப நிலையில் வைத்திருப்பதற்காக தலைப்பைவிட்டு நழுவுகின்றார்கள். நீங்கள் தடம்புரளமாட்டீர்கள் என்பதை நன்கறிவேன் என்று எமக்கும் ஓர் எச்சரிக்கை விட்டுச்செல்வதுபோல் படுகின்றது. ஆனால் அது யாராலும் முடியாததொன்று.
"காக்கைவன்னியன்!" எச்சிரிக்கையாக இருக்கவேண்டிய பெயர்தான். களத்துள் நுழையும்போதே கடவுள் (ஈஸ்வர்) என்றும் பாராமல் அவருக்கு முன் வந்து சிறு குழப்பத்தை உண்டாக்கினார். இவரது வாதம் இனிமேல் பெரிய பெரிய குழப்பங்களையே உருவாக்குமா? அவரது அணியினர்கூட இவர் ஆப்பு வைத்துவிட்டார் என்று கூறுகின்றனர். இது தனது வாதத்தை களத்திலே முன்வைக்கவேண்டுமென்ற தீராத ஆவலினாலும் இருக்கலாம் அல்லவா?
எதிரணியினர்தான் இவை எல்லாவற்றிற்கும், அவருக்குப் பின்னால் வரும் மக்கள் படைக்கும் தகுந்த பதிலைத்தரவேண்டும். நன்மை அணியிலிருந்து அடுத்து பிருந்தனை அழைக்கிறேன்.
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
எல்லாருக்கும் நமஸ்தே
எனது பெயரை கு<b>ரு</b>க்காலபோவான் என்று பிழையாக எழுதிய தமிழ்ரசிகையை வன்மையாகக் கண்டித்து எனது விவாதத்தை ஆரம்பிக்கிறேன்.
விவாதத் தலைப்பு <i>புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?</i> என்றதற்கு எமது தரப்பு இதுவரை உருப்படியான வாதம் வைக்கவில்லை நழுவி ஏதே எல்லாம் எழுதுகிறோம் என்றார்கள் எதிர்தரப்பார்கள்.
அதாவது புலம் பொயர்ந்த இளையோரை மாத்திரம் கருத்தில் கொண்டு அவர்கள் இணையம் என்னும் ஒரு ஊடகத்தால் நன்மையடைகிறார்களா இல்லையா என்ற வாதத்தை நாங்கள் சரியாக எதிர் கொள்ளவில்லை என்று தங்களைத் தாங்களே குளப்புகிறார்கள்.
இலத்திரனியல் தகவல் களஞ்சியங்களை இணைக்கும் பாலமாக, சுயகருத்துக்களை குழுமங்களில் குடில்களில் பலரோடு பகிர்ந்து விமர்சனம் பெற்று முன்னேறவும், கல்வித்துறையில் ஆசிரியரோடு சக மாணவர்களோடு, பொழுதுபோக்கும் துறையிலும் சமூகச்சேவையிலும் சகாக்களுடன் வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறையாகவும் எமது புலம் பெயர்ந்த இளையவர்கள் பயன்படுத்தி தம்மையும் வளம்படுத்தி எமது தேசியத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள். இவற்றை எனக்கு முன் வந்த எனது அணியினர் விபரமாக உதாரணத்தோடு தந்திருந்தார்கள்.
எமது தரப்பார் ஏற்கனவே ஒத்துக் கொண்டுவிட்டார்கள் இணையத்தால் <b>தீமைகளும் இருக்கு</b> என்று. அதற்காக இணையத்தால் இளையவர்களிற்கு <b>சீரழிவு மட்டும் தான் என்ற வாதம் தவறானது என்றதை தான் நிலை நாட்டி வருகிறார்கள்</b>. ஒருவர் கேட்டிருந்தார் இணையத்தால் எமது புலம்பெயர்ந்த சமூகத்தில் இளையவர் சாதித்த ஒன்றையாவது உதாரணமாக தரமுடியுமா என்று. புலம் பெயர்ந்த சமூகத்தில் எமது இளையவர் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் பங்கெடுத்த சந்தர்ப்பங்கள் கிடைத்தால் அப்படியான ஒரு அறியாமை அவருக்கு இருக்காது. ஆரம்பத்தில் நிகழ்ச்சிக்கு பங்களிக்கும் ஆர்வம் உள்ளவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி முதல் நிகழ்ச்சி நிரல், இடம் காலம் என்பன உறுதிசெய்யப்பட்டு அனைத்து ஆர்வமுள்ளோருக்கும் அறிவிக்கும் இறுதிக்கணம் வரை மாத்திரமல்ல நிகழ்ச்சி முடிந்த பின் அதன் நிழற்படங்கள், அங்கு பரிமாறப்பட்ட கருத்துக்கள் பிரசுரிக்கப்படுவது வரை மின்னஞ்சலின் அரட்டை மென்பொருட்களின் இணையத்தளங்களின் பங்கு முக்கியமானது. இவற்றிற்கு தொலைபேசி பத்திரிகைகள் வானொலி
போன்ற ஏனைய தொடர்பாடல் முறைகள் நிச்சையமாக உதவுகிறது. அதுமாத்திரமல்ல இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கடிதம் எழுதி வசதி கிடைக்கும் பொழுது நேரே சந்தித்தும் நடைமுறைப்படுத்தலாம் ஆனால் குறுகியகாலத்தில் தனிப்பட்ட பொறுப்புக்கள் மத்தியில் வினைத்திறன் மிக்க முறையில் ஒழுங்கு செய்ய எமது இளையவர்கள் இணையத்தை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இவை (தொடர்பாடல் முறைகள்) எல்லாம் அத்திவாரங்கள் போன்றவை, ஒரு கட்டிடத்தின் வெளி அழகைத்தான் ரசிப்பார்களே தவிர அதன் அத்திவாரத்தில் தான் அது தங்கியிருக்கிறது என்று ஒரு கணம் கூட சிந்திப்பவர்கள் மிக அரிது.
சிலர் வாதிடலாம் இணையத்தால் பல பயன்களிருந்தாலும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று, அதாவது ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம் கலந்துவிட்டால் அந்த ஒரு குடம் பாலும் நாஞ்சுதான் என்ற பாணியில். நஞ்சையும் நன்மையான வழிகளில் பாவிப்பதா இல்லையா என்பது முற்று முழுதாக எமது கைகளில் தான் உள்ளது, அதற்கு சிறந்த உதாரணம் எமது போராட்டம்.
எதிர்தரப்பு தலைவர் அரைத்த மாவை அவருக்கு பின்னர்வந்தவர்களும் அரைக்கிறார்கள் ஆபாசம் அறைக்குள் வருகிறது என்று. ஆபாசத்தை தேடுபவர் இருக்கும் வரை அவர் இருக்குமிடமெல்லாம் கிடைக்கும் எல்லா வழிமுறைகளாலும் அது வந்தே தீரும். அதற்கு தீர்வு வரும் வழியில் ஒன்றை அடைப்பது அல்ல. தேடுபவர் ஏன் தேடுகிறார், அதை எவ்வாறு திருத்திக் கொள்ளலாம் என்று சிந்தியுங்கள். அதே போல் தான் இன்னெருவர் தமிழ் அரட்டை ஒன்றில் தனது அனுபவமாக எழுதியிருந்தார், தன்னை ஒரு குடும்பப் பெண்ணாக எண்ணிய பின்பும் ஒருவன் தொலைபேசி இலக்கம் கேட்டான் என்று. தனது நிலையில் ஒரு அப்பாவி குடும்பப்பெண்ணிருந்திருந்தால் அவளின் குடும்பம் அவனால், அவன் அவளை சந்தித்த இணையத்தால், அதற்கு சந்தர்ப்பம் வழங்கிய அவர்கள் இருவரும் இருக்கும் புலம்பெயர்ந்த சமூகத்தால், சீரழிந்திருக்கும் என்று தனது வாதத்திற்கு பரிதாபமாக வலுச்சேர்க்க முயன்றார். அந்தக் குடும்பப்பெண் அப்பாவியாக இருக்கும் வரை அவள் ஆபத்தில் தான் இருப்பாள். அந்த பெண் புலம் பெயர்ந்த சமூகத்திலிருந்தால் மாத்திரம் தான் ஆபத்து வரும் அதுவும் அந்த ஆபத்து இணையத்தில் சீரழிந்த இளையவனால் தான் வரும் என்பது பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டு விட்டது என்ற மாதரி. ஒரு அப்பாவிப் பெண் வேலைக்கோ, படிக்கவே இல்லை சில கருமங்களை ஆற்ற வங்கி போன்ற இடங்களிற்கு கிரமமாக பேய்வரும் போது கூட அதே மாதிரியான ஆபத்துக்களை சந்திப்பாள். இவர்களின் எண்ண ஓட்டத்தில் தீர்வு கொடுப்பது என்றால் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்காலத்தில் இருந்த நடமுறைகளை தான் கொண்டுவர வேண்டும். நேயின் அறிகுறிகளுக்கு மாத்திரம் வைத்தியம் பார்த்து உங்களை ஏமாத்தாதீர்கள் நேய்க்கும் வைத்தியம் பார்ப்பது எப்படி என்று யேசிக்க முயற்சியுங்கள் இல்லாவிட்டால் தேற்க்கப்போவது நீங்கள் வெல்லப்போவது நோய்.
எதிர்த்தரப்பில் ஒருவர் கூறியிருந்தார் கணனி வேறு இணையம் வேறு. இணையம் இல்லாமல் கணனியில் பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று. இன்று இணையம் என்பது கணனிக்கு விரும்பினால் சேர்த்துக் கொள்ளப்படும் ஒன்றாக இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் எதிர்காலத்தில் இணையம் இல்லாம் கணனி இல்லை என்று அதன் வடிவமைப்பு இருக்கப்போகிறது, இதை நோக்கிய ஒருபடி நகர்விற்கு வின்டோஸ் விஸ்ரா நல்ல உதாரணம். இந்த விவாதத்திற்கு வெளியே இந்தக் களத்தில் பகிரப்பட்ட ஒரு அனுபவம், குறிப்பிட்ட ஒரு பிள்ளையின் பெற்றோர் மகள் எம்எஸ்என் இல் ஆண்களை மாத்திரம் நண்பர்களாக சேர்த்து வைத்திருந்தாள், பல்வேறு பட்ட படங்களை பரிமாறினாள் அதை அறிந்ததால் பெற்றோர் இணைய இணைப்பை துண்டித்து விட்டார்கள். ஆனால் அதை நேரடியாக செய்தால் பிள்ளை கேவித்துவிடும் என்று கணனிக்கு இணைய இணைப்பு வழங்கும் கடத்தியில் தில்லு முல்லுச் செய்துதார்கள் என்று.
இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம்.
எனவே இன்று உள்ள இணையத் தொடர்பாடல் வழிமுறைகளால் சீரழிகிறார்கள் என்று ஓலமிட்டு உங்கள் நேரத்தை விரையமாக்காதீர்கள் இல்லை அவற்றை இளையவர்கள் பெற்றுக் கொள்ளும் வழிகளை தடுத்து நேயின் அறிகுறிக்கு ஒத்தடம் குடுபதுபோல் தீர்வு கண்டுவிட்டதாக பெருமைபட்டுக் கொள்ளாதீர்கள். இதுவரை வந்த எல்லா எதிர்த்தரப்பாரும் சீரழிகிறார்கள் என்றதற்கு வஞ்சகமில்லாமல் உதாரணங்களை அடுக்கினார்கள். இதுவரை யாராவது சீரழிவை தடுப்பதற்கோ அல்லது குறைந்த பட்சம் எமது இளையவரின் சீரழிவை குறைப்பதற்கு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்று ஆக்கபூர்வமாக ஒரு உதாரணமாவது வைத்தார்களா?
தகவல் தொழில்நுட்பம் தனது புரட்ச்சிப்பாதையில் தொடரும், தொடர்பாடல்களுக்கு புதிய இலகுவான வினைத்திறன் மிக்கவழிகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கப் போகிறது. அவற்றை குரங்கின் கை பூமாலை போல் இல்லாது எவ்வாறு அனுபவித்து நாமும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றி ஒட்டுமொத்த சமூகத்தை வளப்படுத்த முடியும் என்ற முற்போக்கான சிந்தனையில் எமது நேரத்தை செலவிடுவோம்.
நன்றி வணக்கம்.
<b>பிற்குறிப்பு</b>, வீட்டில் நாற்காலியின் சுகத்திலிருந்து எழுதும் பட்டிமன்றத்திற்கு மக்கள் படை கரும்புலிகள் என்று உங்கள் அணியினரை ஊக்குவிப்பதாக எண்ணி அந்த தூய்மையான மறவர்களை சிறுமைப்படுத்தாதீர்கள்.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
இன்னொரு மொழியில் வணக்கம் கூறி, ஒருங்கிணைப்பாளரை வன்மையாகக் கண்டித்து தன் வாதத்தை முன்வைத்தார் குருக்காலை..... மன்னிக்கவும் குறுக்காலைபோவான். ஆங்காங்கே சிறிய எழுத்துப்பிழைகள் விட்டிருந்தாலும் ஆணித்தரமாக தன் கருத்துக்களை எழுதியிருக்கின்றார்.
எதிரணியினர் வாதங்களை நன்றாகப் புரிந்துகொள்ளாமல் தங்களைத்தாங்களே குளப்புகிறார்கள் என்று ஆரம்பித்தார். இது உண்மையா?
இலத்திரனியல் தகவல் களஞ்சிங்களை இணைக்கும் பாலம், இதனு}டாக வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறைகளை ஏற்படுத்தி வளம்பெறலாம் என்று முன்வந்தோர் உதாரணத்தோடு தந்திருந்தார்கள் என்றார். தனது அடுத்த கருத்தில் இளையவர்கள் முன்னின்று ஒழுங்குபடுத்தும் நிகழ்வுகளில் எதிரணியிலிருந்து கருத்துக்கூறுபவர்களில் சிலர் பங்கெடுப்பதில்லை அதனால்தான் இந்த அறியாமை என்றார். இது உண்மையா?
இணையத்தால் பல நன்மைகள் இருந்தும் சில தீமைகளே அதை ஒரு சீரழிவுக்கருவியாக நோக்க வைக்கிறது என்று கூறி, அதனை கொடிய நஞ்சிற்கு ஒப்பிட்டார். நஞ்சையும் நல்லவழிகளில் பாவிக்கலாம் என்று எமது போராட்டத்தை உதாரணம் காட்டினார். இவைகளுக்கு எதிரணியினர் என்ன பதில் தரப்போகிறார்கள் என்று பார்ப்போம்.
ஆபாசம், ஆபாசம் என்று எதிரணியினர் அரைத்தமாவையே திரும்பத்திரும்ப அரைக்கிறார்கள் என்றார். ஆனால் அவர்களுடைய இந்த மா இன்னும் நன்றாக அரைபடவில்லைப்போல் இருக்கிறது. ஆபாசத்தைத் தேடுபவர் இருக்கும்வரை அது வந்தே தீரும் என்றார். அதுதானே! கூடாது என்று தெரிந்தும் ஏன் தேடுகிறார்கள்? இணையத்தளத்தினு}டாக ஒரு குடும்பப் பெண்ணிற்கு வரவிருந்த ஆபத்து வெளியிலும் ஏற்படலாம் என்று விரிவாக எழுதியிருந்தார்.
இதுவரை எதிர்தரப்பார் சீரழிகிறார்கள் என்பதற்கு உதாரணங்களை அடுக்கினார்களேயன்றி, அவற்றைத் தடுப்பதற்கோ, குறைப்பதற்கோ ஆக்கபுூர்வமான எதனையும் முன் வைக்கவில்லை என்றார். இப்படி ஓலமிட்டு நேரத்தை விரையமாக்க வேண்டாம் என்று உரத்துக் கூறுவதுபோல் எனக்குப்பட்டது. இது எதிரணியினருக்கு நன்றாகவே விளங்கியிருக்கும். என்று நினைக்கிறேன். விரைந்துவந்து உங்கள் வாதங்களை முன்வையுங்கள்.
இணையத்தின் சிறந்த எதிர்காலம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். அப்போ, எதிர்காலத்தில் இந்தச் சீரழிவுகள் இன்னும் அதிகரிக்குமா? இல்லை இதனால் ஏற்படும் நன்மைகள் பெருகுமா?
தகவல் தொழில்நுட்பம் தனது புரட்சிப்பாதையில் தொடரத்தான் போகிறது, தொடர்பாடல்களுக்கு புதிய புதிய வினைத்திறன் மிக்க வழிகள் இன்னும் இலகுவாக இருக்கத்தான் போகின்றன, அவற்றை "குரங்கின் கை புூமாலை" போல் ஆக்காது எல்லோருக்கும் பயனுள்ளதாக ஆக்கும் முற்போக்கான சிந்தனையில் எமது நேரத்தைச் செலவிடுவோம் என்று அழகாகக்கூறி அற்புதமாகத் தன் வாதத்ததை முடித்திருந்தார்.
பெயர்தான் குறுக்காலை போவான், அனால் அவர் குறுக்கலை போகாமல் ஓர் உறுதியான நேர்வழியில் செல்வதுபோல் எனக்குப்படுகிறது. அவரது வாதத்திறமை அப்படி இருக்கின்றது. அடுத்து தீமை அணியிலிருந்து வரப்போகும் ஈஸ்வர் காத்திருந்து, காத்திருந்து பொறுமையை இழந்து, டென்சனாகி, பக்கத்திலிருப்பவரைக் கடிக்காமல் என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.
நன்றி.
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்த தமிழ் வழி வந்த பெருங்குடி மக்களே (பார்வையாளர்களே) சீர்தூக்கிச் சமன் செய்யும் துலாக்கோல் போல் நடுநிலைமை தவறாது தீர்ப்புச் சொல்ல வந்திருக்கும் நடுவர்களே, எனக்கிங்கு நான் கேட்டவுடன் சீட்டுத்தந்த இரசிகை அவர்களே, மற்றும் இணைய ஊடகம் எம்தமிழ்ச் சிறார்களுக்கு விளைவிக்கும் பெருஞ் சீர்கேடுகளைக் கண்டு, மனம் நொந்து, வெந்து, குமுறிக் கொண்டிருக்கும் எனதணியினரே, எல்லோருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
மன்னிக்கவும். இன்னும் சிலர் இங்கு இருக்கிறார்கள். என்னவோ இணைய ஊடகங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞர்களை ஏதோ வாழவைக்கிறதாம் என்று கூறிக்கொண்டு (புூனை பால் குடிக்கும்போது கண்ணை மூடிக் கொள்ளுமாம் அதுபோல) சமூகத்தின் சீரழிவு புரியாத அப்பாவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடுவர் அவர்களே!. உங்களுக்குத் தெரியாதது இல்லை. <b>உண்மை செருப்புப் போட்டுக் கொண்டு வீதியில இறங்க முதல பொய் பல்லக்கில ஏறி ஊரையே சுற்றி வந்துவிடுமாம்.</b> அதுபோலத்தான் எதிரணியினர் பாவம் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நடுவர் அவர்களே! உலகத்து மக்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. <b>தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத் தெரியாமல் (புரியாமல்) சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.</b>
2. தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக் கொள்பவர் (தப்பித்துக் கொள்பவர்)
இதில எதிரணியினர் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்களாகவே புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நடுவர் அவர்களே!
நான் தெரியாமல்தான் கேட்கிறேன். எதிரணியினர் புலம்புவது போல மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக் கொள்ளலாம் (பார்க்க- சிநேகிதியின் கருத்து) என்ற கருத்தை நீங்களும் ஒத்துக் கொள்கிறீர்களா?.
<b>மனக்கட்டுப்பாடு</b> - அது பெரியவங்க நாங்களே இல்லாம அல்லாடிட்டுக் கிடக்கிறோம். இதில இளைஞர்களுக்கு இருக்கும் எண்டு நினைக்கிறீங்க????
எத்தனையோ அடிபட்டு, அவமானப்பட்டு, அனுபவப்பட்டு இன்னுமே பெரியவங்களால தங்கட மனசக் கட்டுப்படுத்த (மனம் ஒரு குரங்கு. அதைத் தாவவிட்டால் தப்பி ஓடவிட்டால்............)
மார்க்கம் இல்லாம ஓடுப்பட்டுத் திரியுறாங்க.
மனக்கட்டுப்பாடு என்ன கடையில வாங்கிற கொம்பியுூட்டர் பாட்ஸ் எண்டு நினைச்சாங்களா. வாங்கிப் புூட்டிவிட்டா சரி எண்டு........
அது ஒண்ணுமில்ல நடுவர் அவர்களே. எதிரி அணியில பாத்தீங்கெண்டா பெரும்பாலும் (ஒன்றிரண்டு கட்டையில போறதுகள தவிர) பட்டிமன்றத் தலைப்புக்கு சம்பந்தப்பட்ட புலம்பெயர் இளைஞர்களே ஆக்கிரமிச்சு இருக்கிறப் பாக்கலாம். அதுதான் அவர்களுக்கு தாங்கள் சீரழிஞ்சு கொண்டிருக்கிறது தெரியேல்ல. <b>அவர்களின் நலன்களில அக்கறை</b> உள்ள நான் (தூயவன் கவனிக்கவும்) இந்தப்பக்கம் இருந்து பார்த்து கவலைப்பட்டு, ஏதோ என்னால் இயன்றவரை புத்திமதி சொல்லலாம் என்று வந்தேன்.
இன்னுமொரு முக்கியமான ரகசியம் உங்களுக்கு மட்டும் சொல்லுறன் நடுவர் அவர்களே.
உலகத்திலேயே பகுத்தறிவு உள்ள <b>மிருகம்</b> என்று மனிதனை சொல்லுவினம். பகுத்தறிவு எண்டா என்ன???? <b>நல்லது எது கெட்டது எதுஎண்டு அலசி ஆராய்ந்து (பகுத்து, அறிந்து) சரியான, மிகச் சரியான, மிகமிகச் சரியான முடிவை எடுப்பது.
இங்கு எத்தனைபேர் அப்படி சரியான முடிவு எடுக்கிறார்கள். (உங்களைத் தவிர) சரியான முடிவுதான் எடுத்திருப்பதாக நாம் முடிவு எடுக்கும்போது நினைத்திருப்போம். ஆனால் பின்னர் அதுவும் பிழையான முடிவுதான் என்று அறிந்து கவலைப்படாதவர் யாராவது இங்கிருக்க முடியுமா????
ஏதாவது ஒரு இடத்தில எப்பவாவது ஒரு சந்தர்ப்பத்தில எல்லோருமே பிழையான முடிவு எடுத்துத்தான் இருப்போம். (அப்பிடி நான் ஒருக்காலும் செய்ததில்லை என்று இங்கு யாராவது வாதிடுவார்களானால், அவர்களுக்கு தான் பிழையான முடிவு எடுத்தது இன்னும் தெரியாமல் இருக்கும்) பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியில வரும்போது, எல்லாமே சரியான விடை எழுதிப் போட்டு வாறவை எத்தினைபேர் வெளியில வந்து மற்ற மாணவரோடு கதைச்சபிறகு கவலைப் பட்டிருப்பினம்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நடுவர் அவர்களே! அழிவுப் பாதையில போறவன் எவனுமே தான் அழிவுப்பாதையில போறது தெரிஞ்சு போறதில்ல. அது நல்ல பாதையெண்டு பிழையான ஒரு முடிவை அவன் எடுத்திருந்தா, அவனுக்கு எவ்வளவுதான் மனக்கட்டுப்பாடு இருந்தும் பிரியோசனமில்லை. அப்பிடி பிழையான முடிவை எடுத்தவர்கள்தான் எதிரணியில நிறையப் பேர் இருக்கினம். அங்க மனக்கட்டுப்பாடு இருந்தும் என்ன லாபம். [b]சீரழிவு சீரழிவுதானே. </b>இதைவிட முக்கியமான ஒரு விடயத்திற்கு வருகிறேன்.
உலகத்தில எந்தப் பொருள் (அல்லது ஒரு விடயம்) கவரும் தன்மையைக் கொண்டிருக்கோ, அது எப்போதுமே தனக்குள்ளே மறைமுகமான (Hidden traps) பொறிகளைக் கொண்டிருக்கும். இதை யாரும் விஞ்ஞானிகளோ, மேதைகளோ முதல்லேயே சொல்லியிருக்காவிடில், எழுதி வச்சுக் கொள்ளுங்கோ இன்றையில் இருந்து இது ஈஸ்வர் விதி (Eswar`s law) என்று அழைக்கப்படும்.
இதற்கு உதாரணம் நான் பக்கம் பக்கமா எழுதலாம். ஏனெண்டா இந்த விதிக்குள்ள அடங்காதது எதுவுமில்ல. இங்க நான் பொறி என்று சொன்னதுக்குள் இழப்புக்கள் எதுவாகவும் இருக்கலாம். நேர விரயம், பண விரயம், பொருள் விரயம், உடல் சீர்கேடு, இறப்பு உட்பட எதுவாகவும் இருக்கலாம். <b>ஏன் எத்தனையோ பேர் பைத்தியமா</b>க் கூடத் திரியிறாங்க. இதுவும் ஒரு பொறிதான் என்று அவர்கள் கண்டுபிடித்து திருந்துவதற்குள் காலம் கடந்திருக்கும். இதற்கு மாமன்னர் முதல் மகாமுனி வரை எவரும் விதிவிலக்கல்ல.
<i>சிகரட் குடிக்கிறவை, மதுபானம் பாவிக்கிறவை, போதைப்பொருள் பாவிக்கிறவை சீட்டு விளையாடுறவை, இவ்வளவு ஏன் தொலைக்காட்சியில தொடர்நாடகம் பார்க்கிறவை எல்லாரையும் கேளுங்கோ. ஒரே பதில்தான் வரும். தொடக்கத்தில <b>சும்மா பொழுதுபோக்குக்குத்தான் தொடங்கினது. இப்ப விட ஏலாமக் கிடக்கு</b>.</i>
ஏன் யாழ் களத்துக்கு சும்மா வந்து போன நாங்களே இதுக்குள்ள கட்டுண்டு கிடக்கேல்லையா. ஒருநாளைக்கு யாழுக்கு வராட்டி ஏதோ முக்கியமான வேலையை செய்யாம விட்டமாதிரி மனசு குறுகுறுக்காதவர் யாரும் இருக்கிறீர்களா.
இப்ப எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை எடுத்து நோக்குவோமாக இருந்தால், அங்கே <b>இணையத்தின் </b>பலாபலன்கள் பக்கம் பக்கமாக எடுத்துக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.
<b>அதெல்லாம் வெறும் கவர்ச்சி!!!!!!!</b>
அதற்குள்ளே மறைந்து கிடக்கின்ற தீமைகள் அவர்களின்ட கண்ணுக்கு இப்ப தெரியாது. அதால அவர்கள் படப்போற சீரழிவுகள் அவர்களுக்கு இன்னும் புரியேல்லை. எங்கட அணி நண்பர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். இளையோர்தானே. இனி நீங்கள் ஒருக்கா ஆணித்தரமா சொல்லிவிட்டீங்களெண்டா அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு இருக்கு.
எதிரணி அப்பாவிகள் பட்டியலிட்டதுபோல் இணையத்தின் பயன்கள் சொல்லிடங்காதவைதான். இளைஞன் முதல் இறுதியாக வந்தவர்வரை இணையத்தின் நன்மைகளை எக்கச்சக்கமாக எடுத்து வீசினார்கள். ஆனால்......... ஆனால்............ புலம் பெயர்ந்த தமிழ் இளைஞருக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய நன்மைகளை பட்டியலிட மறந்து விட்டார்கள். பாவம் அவர்கள் அப்படியொன்று இருந்தால்தானே.......
<b>இணையத்தின் வசதிகள் எங்களுக்கும் தெரியுமையா</b>. இந்த இணைய நூற்றாண்டில் காலைக் கடன் கழிப்பதற்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். (அதுவும் எடுத்துச் செல்லும் கணனி இருந்தா காலைக்கடன் கழிக்கிற நேரத்திலும் இணையத்தை பார்வையிடலாம்)
படிக்க வேணுமா.......... <b>இணையம். </b>
வங்கிக்கு போக வேணுமா.......... <b>இணையம் </b>
கடைக்கு போக வேணுமா........ <b>இணையம் </b>
வாசிகசாலை............. ஊகூம் <b>இணையம்.</b>
ஊருக்குச் சென்று உறவினரைப் பாக்க வேணுமா, கதைக்க வேணுமா........... <b>இணையம் </b>
இனி கோயிலுக்கும் ஒருவனும் போகமாட்டான் ......... இணையத்தில இருக்கிற கோயிலைப் பாத்து ஒரு கும்பிடு போட்டா காணாதே?
<b>காசி என்ன கங்கை என்ன..... கைக்கெட்டும் தூரம்தான்.......போங்கடா!</b>
எங்கட காலத்தில பையன்கள் (நானல்ல நண்பர்கள்) விடியக் காலம எழுந்து, சீவிச்சிங்காரிச்சு சைக்கிளை எடுத்துக் கொண்டு எங்கேயோ போய்விட்;டு களைத்து விழுந்து வருவார்கள். வீட்ட வந்தா அப்பா கேட்பார், <b>என்ன கொண்டுபோய் விட்டுட்டு வந்தாச்சா.</b> இதே போல மாலையிலும் வீட்டை கொண்டை விடவேணும். இதைவிட கோயில் குளத்துக்கு கூட்டிக்கொண்டு போக வேணும். பயந்து பயந்து சந்திக்க வேணும். இப்படி அல்லாடி வளர்ந்தது எங்கள் காலத்து காதல். ஆனா இப்ப இருந்த இடத்தில இருந்து <b>இணையக் காதல்</b>. காதலுக்காக அலைவதிலும் ஒரு சுகமுண்டென்று சொல்லக் கேள்வி. அந்த சுகம் இப்ப கிடைக்குமா.???????
அந்தக் காலத்தில வாசிகசாலைக்குப் போனா, பத்திரிகை படிச்சு அறிவைப் பெருக்குவது மட்டுமல்ல, நாலு தெரிஞ்ச மனிசரைச் சந்திக்கலாம், அவையோட கேள்விப்பட்ட செய்திகளை கலந்து பேசலாம் காற்றோட்டமா இருந்து. நாலு சுவத்துக்கு நடுவில இருந்து உங்களோட நான் கதைச்சாலும் முகம் பாத்துப் பேசுறது மாதிரி வருமே.
இப்பிடி எல்லா வசதிகளும் கைக்கெட்டும் நிலை இருந்தாலும், அதில ஒருவகை இழப்பு இருக்கிறதை நீங்கள் எல்லோருமே உணர்ந்திருப்பீங்கதானே.
<b>இனி புலம் பெயர்ந்த தமிழ் இளையோர் இந்த இணையத்தால் எப்பிடி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறனர் என்று பார்ப்போம்.</b>
உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு.
எங்கட காலத்தில ஒரு திருட்டு தம் அடிக்கிறதெண்டாலும் எவ்வளவு கஷ்டங்கள், யாராவது பாத்திடப் போயினம். சொந்தக்காரர் மட்டுமெண்டில்லை. ஊரவன் யார் பார்த்தாலும் துலைஞ்சிது. போறபோக்கில வத்தி வச்சிட்டுப் போயிடுவாங்கள். <b>ஒரு பிள்ளை நல்ல பிள்ளையா </b>வளக்கப் படவேணும் எண்டதில ஊரே கவனமா இருக்கும்.
ஆனா இப்ப புலம் பெயர்ந்த இடத்தில???????? கட்டுப்பாடுகள் எதுவும் அற்ற நிலை. தமிழன் யார் பார்த்தாலும் எனக்கென்ன. அப்பா அம்மாவே என்னை அடிக்கேலாது. இதில மற்றவன் என்ன சொல்லுறது எண்ட நிலை.
அதைவிட முக்கியமாக வெளிநாடு வந்த பெரும்பான்மை பெற்றோர் தங்கள் வசதிகளைப் பெருக்குவதில் காட்டுற அக்கறையை, தங்கள் அறிவைப் பெருக்குவதில் காட்டுவதில்லை.
நாளுக்குநாள் முன்னேறிவரும் நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை விளங்கிக் கொள்வதில் பல பெற்றோர் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான இடைவெளி அதிகம். பிறகென்ன பிள்ளைகள் காட்டில மழைதான்.
மதன் அண்ணாச்சி சொல்லியிருந்தார் பத்திரிகை, தொலைக்காட்சியில இல்லாத கெட்ட விசயங்களா எண்டு (பார்க்க மதனின் கருத்தை).
ஐயா ! லண்டன் பத்திரிகையில மூண்டாம் பக்கத்தில என்ன வருதெண்டு லண்டனில இருக்கிறவங்களுக்கு தெரியும். ஜேர்மனில இருக்கிறவங்களுக்குத் தெரியுமா????
கனடாத் தொலைக்காட்சியில காட்டிறது இத்தாலியில தெரியுமா?????
ஆனா இணையத்தில போட்டா, அது எல்லா இடத்திலும் தெரியுமய்யா. இணையத்தின்ரை சக்தி பெரிசய்யா. பத்திரிகையும் தொலைக்காட்சியும் சேர்ந்து பத்துப் பேரைக் கெடுத்தா, <b>இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி.</b>
அதுமட்டுமில்ல, அந்தக்காலத்தில யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் வந்ததாக. பெரியவர்களுக்கே அங்கொன்று இங்கொன்றாகத்தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்ப புலம்பெயர் நாட்டில் இளையோர் பலருக்கு நீரிழிவு நோய். காரணம் என்ன. அதுதான் <b>எல்லாமே இருந்த இடத்திலேயே கிடைக்குதே. உடல் வருத்தி உழைப்போ, உடற்பயிற்சியோ இல்லையே. புலம் பெயர்ந்த இளையோர் உடற்பயிற்சியையும் இணையத்தின் மூலம் செய்ய வசதியேதும் இருக்கா எண்டு தேடுவதாகக் கேள்வி</b>.
இது நன்மையா மறைந்திருக்கும் தீமையா????????
இதைவிட புலம்பெயர் தமிழ் இளையோரிடம் சாதாரணமாகக் காணக்கூடியது மூக்குக் கண்ணாடிப் பாவவை. எங்கட காலத்தில எங்காவது ஒருவன் கண்ணாடி பாவிப்பான். அவனுக்கு கண்ணாடி எண்டே பட்டப் பெயர் வைத்திருப்போம். இப்ப கண்ணாடி எண்டா எந்தக் கண்ணாடி என்று கேள்வி வரும்.
இதைவிட பல புதிதுபுதிதான நோய்கள் மௌஸ் பிடிச்சா கைநரம்பு பிச்சுக்குதாம். தொடர்ந்து தட்டச்சை தட்டிக்கொண்டே இருந்தா தட்டச்சேபோவியா என்றொரு நோய். ஒக்காந்து ஒக்காந்து ஒக்கார்ற இடமே காய்ச்சுப் போச்சு. (எந்திரிச்சு வேல செய்யுங்கப்பா). இன்னும் பல புதுநோய்கள் இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. எல்லாமே இணையத்தின் உதவியுடன் (கணனிக்;கு முன்னால) மனிதன் சோம்பேறியா மாறுவதால.
இவ்வளவு நேரமும் நான் சொன்னதில இருந்து நடுவர் அவர்கள் என்ன முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். ஆஆஆஆஆ அதேதான்.
அளவுக்கு மிஞ்சினா இணையமும் நஞ்சு
மீண்டும் எனக்கு (இப்பவாவது) சந்தர்ப்பம் அளித்த எனதணி நண்பர்கள், ஒருங்கிணைப்பாளர், மட்டுறுத்துனர், மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.....
அன்புடன்
ஈஸ்வர்
<b>உடல் உழைப்புக்கு மதிப்பில்லாமல் செய்த இணையத்தை அளவோடு பாவிப்போம். இணையம் எங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது. அது சீரழிவை நோக்கிய பாதை!!!!!</b>
!
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் சீரழிகிறார்கள் என்ற தனது அணிக்காக பல அரிய கருத்துக்களை வைத்துச்சொன்ற ஈஸ்வர்.. சீரழிவுகளை புரியாத(அறியாத) அப்பாவிகளுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் கூறிச்செல்கிறார். தனது காலத்து அனுபவங்கள் பலவற்றையும் பகிர்ந்து செல்கிறார். எங்கே பார்ப்போமே...
உண்மை செருப்புப்போட்டு வீதியில் இறங்கமுதல் பொய் பல்லக்கில் ஏறி ஊரையே சுற்றி வந்துவிடும் என்று
கூறிச்செல்கிறார். கடைசியாய் வெளியுலகம் காணப்போவது உண்மையைத்தானே ஈஸ்வர்..?? :wink:
உலகத்து மக்களை இருவகையாகப்பிரிக்கும் ஈஸ்வர்..
1) தாங்கள் சீரழிகிறோம் என்பது கூடத்தெரியாமல் சீரழிந்து கொண்டிருப்பவர்கள்.
2) தங்களுக்கு சீரழிவு வருவதை புரிந்து கொண்டு சுதாகரித்துக்கொள்பவர்கள்
என்கிறார்.. அப்ப தாம் சீரழிகிறோம் என்று தெரிந்தும் சீரழிபவர்கள் உலகத்தில் இல்லையா என்ன..??
மனக்கட்டுப்பாடு இருந்தா சீரழியாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறார் ஈஸ்வர்.. பெரியவர்களே மனக்கட்டுப்பாடு இல்லாமல் அல்லாடிக்கிடக்கிறோம் இதில்
இளைஞருக்கு எப்படி இருக்கும் என்று கேட்கிறார்..?? எங்கே பார்ப்போம் எதிரணியினர் என்ன பதில் வைக்கிறார்கள் என்று.
மனம் ஒரு குரங்கு அனுபவப்பட்ட பெரியவர்களே அதை அடக்கமுடியாமல் திண்டாடுறார்கள். இளையோரால்
முடியுமா என்று கேட்கிறார்..?? எங்கே எடுத்துவிடுங்கள் உங்கள் பதிலை எதிரணியினர்.
எதிரணியில் இருப்பவர்களில் ஓரீருவரைத்தவிர மற்றவர்கள் இளையோரே அது தான் அவர்களுக்கு தாங்கள் சீரழிந்து கொண்டிருப்பது தெரியவில்லை என்கிறார். அவர்களது நலன்களில் அக்கறை உள்ள ஈஸ்வர் கவலைப்படுகிறாராம்.. இளையோரை அந்தப்பாட்டன் உங்களுக்காக கவலைப்படுகிறார் ஒரு கணம் செவி சாயுங்களேன்.
பாத்துப்பாத்து ஈஸ்வர்.. இந்தக்காலத்தில புத்திமதியை எல்லாம் நம் இளையோர் எங்க கேக்கிறாங்க..?? :wink:
உலகத்தில் பகுத்தறிவு கொண்ட மிருகம் மனிதன் தான் என்று சொல்லும் ஈஸ்வர்.. இங்கு எத்தனைபேர் ஒரு
விடையத்தை அலசி ஆராய்ந்து சரியான முடிவை எடுக்கிறீர்கள்...? என்று கேள்வியை எழுப்பியதோடு.. நாம்
எடுத்த முடிவு பிழையென பின்னர் வருந்தாதவர் யாராவது இருக்கிறீர்களா என்ற கேள்வியையும் எழுப்புகிறார்..
யாராவது இருக்கிறீர்களா..?? ஒரு தடவையேனும் பிழையான முடிவு எடுக்காதவர்கள் இருக்கிறீர்களா??
ம் இல்லாத்தையும் விட.. பட்டிமன்றத்தில் ஈஸ்வர் விதி என்ற ஒரு விதியை வேறு உருவாக்கிச் செல்கிறார். அதாவது "கவரும் தன்மை கொண்ட பொருள் எப்போதுமே தனக்குள் மறைமுகமாக பொறிகளைக்கொண்டிருக்கும்" என்று
கூறுகிறார். இதை ஏற்கனவே யாரும் சொல்லியிருக்காவிட்டால் யாழ் சார்பாக.. அறிமுகப்படுத்திவிடுவம். :wink:
அந்த விதியை நிறுவுவதற்கு பல உதாரணத்தை காட்டமுடியும் என்று கூறும் ஈஸ்வர். அந்த மறைமுக பொறியிற்குள் மாட்டிக்கொண்டு நாம் இழப்பது எதுவாகவும் இருக்கலாம் நேரம், பணம், பொருள், ஆரோக்கியம், உடல். ஏன் உயிரைக்கூட என்று கூறிச்செல்கிறார். என்ன சொல்கிறார்கள் எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்.. ஏதாவது ஒருவகையிலாவது இந்த பொறியிற் சிக்கியிருக்கிறீர்களா..??
எதிரணியினர் பலரும் வைத்த கருத்தின் சாராம்சத்தை நோக்க வெளிக்கிட்ட ஈஸ்வர். அவர்கள் இணையத்தின்
பலாபலன்களை பக்கம் பக்கமாய் கூறியிருக்கிறார்கள் என்கிறார். இந்த பலாபலன்களிற்குள் கிடக்கின்ற சீரழிவுகளை புரிய மறுக்கிறார்கள் எதிரணியினர் என்று கவலைப்படிற மாதிரியிருக்கு. இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார்.. இணையத்தின் பலன்களை வைத்துச் சென்றவர்கள். புலம் பெயர் வாழ் இளையோருக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளை பட்டியல் இட மறந்துவிட்டார்கள் என்கிறார்.. எங்கே தகுந்த விளக்கம் கொடுக்கிறார்களா எதிரணியினர் பொறுத்திருந்து பார்ப்போம்... அந்த பலா பலன்கள் தமிழ் இளையோருக்கு
பொருந்தாதா என்ன..? அப்படி என்று கேக்கிறாங்க எதிரணியினர்.
இணையத்தின் பயன்கள் பலவற்றை தானும் எடுத்து விட முடியும்.. என்று கூறி பல நன்மைகளை எடுத்து
விட்டிருக்கிறார். கழிப்பறைக்கு மட்டும் கதிரையை விட்டு எழுந்தால் போதும். அதுவும் மடிக்கணணி வைத்திருந்தால்
அங்கும் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி.. நன்மைகளை சிலவற்றை சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நன்மைகளால் இளையோருக்கு கிடைக்காது போகும் பலவற்றையும் விளக்கியிருக்கிறார்..
இணையக்காதலில் காதலுக்காய் அலையும் சுகம் உண்டா..?? என்று கேட்கிறார். துணையை பத்திரமாய் வீடு
சேர்க்க வழி உண்டா கேட்கிறார். இந்த நாடுகளில தான் உந்த பிளாக் கற் வேலை அவசியம்.. :wink:
இணையத்தில் நூல் நிலையம் இருக்கலாம் ஆனால் வாசிகசாலை சென்று படிச்சு நாலு மனிசரை சந்திச்சு..
அறிஞ்சதைப்பகிர்ந்து பிறர் அறிஞ்சதைப்பெற்று.. காற்றோட்டமாய் இருந்து பேசமுடியுமா அப்படி என்று கேக்கிறார்.. நாலு சுவற்றுக்குள் சுவாசித்த காற்றையே சுவாசிக்கிறீர்கள் என்கிறார்.
இன்னொன்றை சொல்கிறார்.
<b>உங்களுக்குத் தெரியாததா, தமிழ்சமூகம் தங்கட பிள்ளைகளை பொத்திபொத்தி வளர்க்கிற சமூகம். தோளுக்கு
மேல வளர்ந்த பையன் எண்டாலும் சரிதான், வயதுக்கு வந்த பெண் எண்டாலும் சரிதான் முடிவுகள் அப்பா
அம்மாதான் எடுக்க வேணும். பிள்ளைகளுக்கு சுயமா முடிவு எடுக்கத் தெரியாது என்பது பெற்றோரது கணிப்பு</b>
அவர்களது இந்த எண்ணம் சரியா..?? பிள்ளைக்கு சுயமா முடிவை எடுக்கத்தெரியாது என்று முடக்கி வைக்கலாமா..??
பாவம் ஈஸ்வர் ஒரு திருட்டு தம் அடிக்க எவ்வளவு கஸ்டப் பட்டிருககிறார் என்றது இப்பான் தெரியுது. பெற்றார்
மட்டும் அல்ல ஊரே கண்ணுக்க எண்ணையை விட்டுக்கொண்டு திரிஞ்சிருக்குது என்றால் பாருங்களேன். அப்படி வளர்ந்ததால் பிள்ளையள் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டார்களா?? பெற்றோருக்காய் வெளியில் நடித்து பள்ளிக்கூட கழிவறை வழிய தம்மடிச்ச அனுபவங்கள் பலருக்கு இருக்குமே..?? :wink:
ஒரு நாட்டுப்பத்திரிகையையும் தொலைக்காட்டிசியையும் இன்னொரு நாட்டைச்சேர்ந்தவர்கள் பார்க்க முடியாது என்று
கூறும் ஈஸ்வர் ஆனால் எல்லா நாட்டைச் சேந்தர்வகளும் இணையம் பார்க்கலாமே என்று மதனது கருத்திற்கு தனது
கருத்தை வைத்திருக்கிறார். பத்திரிகையும் தொலைக்காட்சியும் பத்துப் பேரைக் கெடுத்தா, இணையம் நூறு பேரைக் கெடுத்த மாதிரி. என்கிறார் எங்கே என்ன சொல்கிறார்கள் பார்ப்போமே..
தனது கருத்தில் தொடர்ந்து.. கணணியை பாவிப்பதால் ஏற்படுகின்ற நோய்கள் பற்றி தெரிவித்து அளவுக்கு
மிஞ்சினா இணையமும் நஞ்சே என்று கூறிச்செல்கிறார் ஈஸ்வர்..இணையம் எம்மைக் கட்டுப்படுத்தக்கூடாது அது சீரழிவை நோக்கிய பாதை என்று கூறிச் செல்லும் ஈஸ்வரைத்தொடர்ந்து இணைய ஊடகத்தால் புலம்பெயர்வாழ் தமிழ் இளையோர் நன்மை அடைகிறார்கள் என்ற
அணியில் இருந்து ஒருவரை அழைக்கிறோம்.
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
யாழ்க்கள உறவுகளாகிய உங்களின் அன்பினை பகிர்ந்து இப்பட்டிமன்றத்துள் நுளைகின்றேன்.
தவறுகள் இருப்பின் பொறுத்தருளுக.
முதலில் நல்ல ஒரு ஆழமான தலைப்பினைத் தேர்ந்தெடுத்து பட்டிமன்றத்தை ஒழுங்கு படுத்திய ரசிக்கைக்கு எனது நன்றிகளைத்தெரிவித்து.
யாழ்க்களத்தை நானறிந்த காலம்வரை நாணயத்துடன் நேர்மையையும் கொண்டுள்ள நடுவர்களான தமிழினி அக்கா மற்றும் செல்வமுத்து ஐயா ஆகிய இருவருக்கும் எனது தாழ்மையான வணக்கத்தை தெரிவித்து.
கருத்துக்களில் காந்தமும் கள உறவுகளிடம் கண்ணியத்தோடும் களமாடும் எங்கள் அணியின் வெற்றிக்கு வளிகாட்டும் இளைஞ்ஞனுக்கும் எமது இளைஞ்ஞன் ஏவும் கணைகளாய் மாறி எதிரிகளைத்தாக்கும் கருத்துக்கணைகளாகிய எமதணி நண்பர்களை வாழ்த்தி.
என்நேரமும் ஏதோ ஒன்றுக்காய் ஒடுவதோடு நில்லாது. கனிவான வார்த்தைகளால் எழிமையான கருத்தோடு எங்கிருந்தாலும் யாள்கள உறவுகளோடு உறவாட ஓடிவரும் எதிரணிதலைவர் சோழியன் அண்ணாவுக்கும். அவர் ஓடும் பொழுது அவருக்கு உதவிக்காய் ஓடி எதிரணியின் வெற்றிக்காய் பாடுபடும் எதிரணி உறவுகளின் வெற்றிக்காய் அவர்களையும் வாழ்த்தி, எனது வாதத்தை தொடர்கின்றேன்.
<b>புலம்வாழ் தமிழ் இளையோர்கள் இணைய ஊடகத்தால் நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிந்துபோகிறார்களா?" </b>
<img src='http://img405.imageshack.us/img405/8713/photo95jz.jpg' border='0' alt='user posted image'>
நன்றி பதிவு இணையம்
<b>இணயத்தினால் தமிழ் இளைஞ்ஞர்கள் பயனைடைகின்றார்கள் இதுவே எனது வாதம்.</b>
புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்கள் அறிவாளிகள். அவர்கள் அன்னப்பறவை போல பாலையும் தண்ணீரையும் பிரித்தறிந்து தமக்கு பயயுள்ளவற்றையே உண்பார்கள்.அவர்கள் நமது எதிர்காலதூண்கள். நீங்கள் புலம்பெயர் தமிழ் இளைஞ்ஞர்களை கவனித்திருப்பீர்களானல். ஒன்றை கவனித்திருப்பீர்கள். ஒருகாரியத்தில் ஈடுபட்டால் மிகவும் சாதுரியமாக செய்து முடிப்பார்கள். அதுவும் கணனியில் என்றால் சொல்லவே வேண்டாம். இங்கே பாடசாலை செல்கின்ற பல நமது இளைஞ்ஞர்கள் இணையத்தின் பயனாளிகளே. இணயத்தின் பயனால் இவ் மாணவர்களே இன்றய புலம்பெயர் சமூகத்தில் கொடிகட்டி பறக்கின்றார்கள்.
இன்றய புலம்பெயர் தமிழ் இளைஞ்னன் இணய உதவியுடன் தகவல் சேகரிப்பினால் பன்மடங்கு அறிவாற்றலுள்ளவனாக விளங்குகின்றான்.
ஐய புளுகர் பொன்னையா அவர்களே! தலைப்பினை எமக்கா விளங்கப்படுத்துகின்றீர்கள். தலைப்பை விளங்கித்தானையா களமாட வந்தோம். எமது அணியினர் எமது நிலையை விளக்கிய பின்பும் உங்கள் அணியின் வீண்வாதம் தொடர்கின்றது.
ஐயா புளுகர் பொன்னையா என்னையா நீங்கள் சொல்வது நீயாயமா? ஐயா முத்து எடுக்கவேண்டுமென்றால் மூச்சடக்கித்தான் ஆகணும். முத்து குளிக்கும்போது முழ்ச்சங்கு குத்திவிடும்மென பயந்தால் எப்படி? முத்தை சுற்றி முள்சங்கு இருக்கத்தான் செய்யும்.
முள்சங்கின் குத்தினை வாங்காது முத்தை எடுப்பதுதில்த்தான் உங்கள் வெற்றி. சரி முள் குற்றினாலும் முத்தை எடுத்தீர்களானால் அதுகும் ஒருவகை வெற்றிதான். வயலில் நெல் விதத்தவன் தரையில் பாம்பு பூச்சிகள் இருக்குமென பயந்து.வயலுக்க பாம்பு வருமே... வந்தால் கடிக்குமே... கடித்தால் நான் என்ன செய்வேன் என விவசாயி எண்ணினால் நிலமை என்ன ஆகும். துணிந்து களம் புக வேண்டும். களத்திலுள்ள நன்மைகளை பெறவேண்டும். அதுதான் இன்றய நமது இளைஞ்ஞர்கள் செய்கின்றார்கள். ஒருசில புலம்பெயர் தமிழ் இளஞ்ஞர்கள் இணையத்தால் சீரளிகின்றார்கள் என்பதற்காய் ஒட்டுமொத்த தமிழ் அறிவாற்றல் படைத்த இளைஞ்ஞர்களையும்
குற்றவாளிக்கூண்டில் நிறுத்த நானும் எனது அணியினரும் தயாராக இல்லை என கூறி.
இவ்வரிய வாய்ப்பினை எமக்களித்த யாள் களத்திற்கும், பொறுப்பாளருக்கும், மட்டுறுத்தினர்களுக்கும் நன்றியைக்கூறி விடைபெறுகின்றேன்.
|