Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததும் பிடித்தது
#11
போய் வா காதலனே!
*
உன்னையா

என்

உள்ளத்தில் எழுதினேன்...

* கை வளையல் கேட்டதற்கு

குரல்வளை தரவா என்றாய்...

கண்ணாடி வளையலுக்கே

கணக்கு பார்க்கிறவன்

என்பது தெரியாமல்

உன்னையா

என்

உயிரென்று கருதினேன்!

* புளியை விட

புளிப்புதான் என்றாலும்

என்

உதட்டின் நிறம் என்பதால்

ஜாம்பக்கா பிடிக்கும் என்றாய்...

* நான் குளிக்கும்

தண்ணீரை

வேருக்குத் திருப்பி விட்டதால்

என் வீட்டு

வேப்பங்காய் கூட

விதையில்லாத திராட்சையாக

இனிக்கிறதென்று

சொல்லிச் சொல்லியே

என்னைக் கொன்றாய்...

* கழுத்து வரையிலும்

காசு, நகை

ஆசைகளை வைத்துக் கொண்டு

வாய் வழியே

காதல் பொங்கி

வழிந்தவனே...

* நான்

உடுத்தியிருக்கும்

ஒற்றைப் புடவையைத் தவிர

மாற்றுத் துணி கூட

மறுப்பவன் நீ என்றால்

சரியான

ஆண்மகன் நீ

ஒத்துக் கொள்கிறேன்...

* என் வீட்டு

உத்திரத்தைப் பிடுங்கித்தான்

உன்

உடைந்த முதுகுக்கு

முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால்

போய் வா காதலனே...

உன்னை, என்

பழைய தோழிகளின் பட்டியலில்

சேர்த்துக் கொள்கிறேன்!

க.சந்திரகலா,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 06-29-2005, 08:52 AM
[No subject] - by வெண்ணிலா - 06-29-2005, 11:28 AM
[No subject] - by Mathan - 06-29-2005, 11:57 AM
[No subject] - by kavithan - 06-30-2005, 08:27 AM
[No subject] - by Niththila - 06-30-2005, 09:25 AM
[No subject] - by அருவி - 06-30-2005, 10:42 AM
[No subject] - by SUNDHAL - 07-03-2005, 01:04 PM
[No subject] - by kavithan - 07-03-2005, 10:38 PM
[No subject] - by KULAKADDAN - 07-04-2005, 05:57 AM
[No subject] - by SUNDHAL - 07-25-2005, 04:55 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2005, 07:09 AM
[No subject] - by ப்ரியசகி - 07-31-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)