10-09-2003, 03:08 PM
எல்லாருடை வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். வயசுபோன காலத்திலை மறதியும் கொஞ்சம் அதிகம்தானே. அதாலைதான் வாழ்த்தி எழுதும்போது சிலரது பெயர்கள் விடுபட்டுப்போச்சு, ஆனாலும் அதாலைமட்டும் அவர்கள் குறைந்தவர்கள் என்று ஆகிவிடாது. அவர்கள் அய்யாவைக் கோபிக்கமாட்டினம் என நினைக்கிறன.;. முன்பு ஒருதடவையும் எழுதினனான் குருவிகள் கொத்துவதுகூட அலாதியான இன்பமாகத்தான் இருக்கிறது. அஜீவன் ஈழத்துக் குறும்பட வரலாற்றில் மட்டுமல்ல அதுக்கு மேலையும் உலகளவில் நிலைத்து நிற்கப்போறவர். உங்களையெல்லாம் விமர்சிக்கிற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை ஏதோ என்ரை அறிவுக்கு எட்டியவரைக்கு அப்;பப்ப எதாவது உளறிவைப்பன். மன்னிச்சுக்கொள்ளுங்கோ நான் போலிக்குச் சொல்லவில்லை. யாழின் அபிமானியாகி இரண்டு வருடங்கள் இருக்குமென நினைக்கிறன். இந்த இடைப்பட்ட காலத்திலை அதன் வளர்ச்சி அசுர வளர்ச்சிதான். அதுமட்டுமில்லை ஆக்கதாரர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்தக் குறுகிய காலத்திலேயே தங்கள் எழுத்தின் வலிமையும், சமுதாயம்பற்றிய பொறுப்புணர்வு ஏற்பட்டிருப்பதுவும், எழுத்தில் மெருகேறியிருப்பதும் நன்கு தெரிகிறது. விபரம் தெரிஞ்சவை சோழியான் சொன்ன விசயத்தையும் கவனத்தில் எடுங்கோ. நீங்களெல்லாம் வாழுற காலத்திலை வாழக் கொடுத்துவச்சிருக்க வேணும்.

