10-09-2003, 10:28 AM
அனைவரது விமர்சனங்களிற்கும் நன்றி. கவிதைகளின் சரி பிழைகளையும் சுட்டிக்காட்டுங்கள்.
இதோ மீண்டும் சில எழுச்சிச்சுூடிகள்.
______________________________________
24)
மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி.
25)
புரட்சி விதை சேகரி
உன்னுள் விதை.
விருட்சமாய் எழு.
26)
இயலாமை என்பது
சோர்வின் அறிகுறி.
துடைத்தெறி.
27)
அழுதது போதும்
உன்னை எழுது.
உயர்வாய் உணர்வாய்.
28)
சிந்தனை கொள்
சிறை உடை.
நீயாய் வாழ்.
29)
உணர்வுகளை மெல்லாதே.
உரத்துச்சொல்லு.
நீண்ட ஆயுள்.
30)
தவறு விடுவது மனித இயல்பு.
திருந்திக் கொள்வது
உயரிய பண்பு.
31)
ஆண் பெண்
அடிமை விலங்கு
நேயமாய் வாழ்.
32)
இறந்த காலம் எதிர்காலம்
புதை புதை.
கிடைத்த பொழுதை
இன்பமாய் ஆக்கு.
33)
எள்ளி நகையாடாதே.
உனக்கு நீயே
குழிதோண்டிக்கொள்கின்றாய்.
34)
சத்தியம் எதற்கு?
சபதங்கள் எதற்கு?
வீணான சற்சைகள்
அமைதியை கெடுக்கும்.
35)
மற்றோர் திறமையை
மதிக்கக் கற்றுக்கொள்.
உனது திறமையை
உலகம் உணரும்.
ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.
8-10-2003
இதோ மீண்டும் சில எழுச்சிச்சுூடிகள்.
______________________________________
24)
மனிதருள் இறங்கு
மிரட்சி வேண்டாம்.
இயல்பறி.
25)
புரட்சி விதை சேகரி
உன்னுள் விதை.
விருட்சமாய் எழு.
26)
இயலாமை என்பது
சோர்வின் அறிகுறி.
துடைத்தெறி.
27)
அழுதது போதும்
உன்னை எழுது.
உயர்வாய் உணர்வாய்.
28)
சிந்தனை கொள்
சிறை உடை.
நீயாய் வாழ்.
29)
உணர்வுகளை மெல்லாதே.
உரத்துச்சொல்லு.
நீண்ட ஆயுள்.
30)
தவறு விடுவது மனித இயல்பு.
திருந்திக் கொள்வது
உயரிய பண்பு.
31)
ஆண் பெண்
அடிமை விலங்கு
நேயமாய் வாழ்.
32)
இறந்த காலம் எதிர்காலம்
புதை புதை.
கிடைத்த பொழுதை
இன்பமாய் ஆக்கு.
33)
எள்ளி நகையாடாதே.
உனக்கு நீயே
குழிதோண்டிக்கொள்கின்றாய்.
34)
சத்தியம் எதற்கு?
சபதங்கள் எதற்கு?
வீணான சற்சைகள்
அமைதியை கெடுக்கும்.
35)
மற்றோர் திறமையை
மதிக்கக் கற்றுக்கொள்.
உனது திறமையை
உலகம் உணரும்.
ஆக்கம்
நளாயினி தாமரைச்செல்வன்.
8-10-2003
[b]Nalayiny Thamaraichselvan

