07-14-2005, 02:12 PM
<b>ஐஸ்வர்யாராய்க்கு நடிகர் சல்மான்கான் கொலை மிரட்டல்</b>
1994-ம் ஆண்டு "மிஸ் வொர்ல்டு" அழகிப்பட்டத்தை வென்றவர் ஐஸ்வர்யாராய். மயக்கும் பார்வை, மற்றும் கொடி இடை அழகால் இவர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுக்க புகழ்ந்து பேசப்படும் அழகியாக உள்ளார்.
உலக அழகி பட்டம் வென்ற பிறகு அவர் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் `ஜீன்ஸ்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
ஐஸ்வர்யாராயின் வசீகரிக்கும் அழகில் மயங்கிய பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் அவர் மீது காதல் கொண்டார். ஆனால் அவரை ஐஸ்வர்யா ராய் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர் வீட்டுக்கு சென்று நடிகர் சல்மான்கான் தகராறு செய் தார்.
போலீசார் சமரசம் செய்து அவரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய்க்கும், ஐஸ்வர்யாராய்க்கும் காதல் மலர்ந்தது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யாராயை கடந்த 2001_ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் தகாத வார்த்தை களால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது இப்போது வெளியாகி உள்ளது. 2001-ம் ஆண்டு ஐஸ்வர்யாராய் அமெரிக்காவில் சுற்றுப்பய ணம் செய்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதை அறிந்த சல்மான்கான் ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ஐஸ்வர்யாராயை போனில் தொடர்பு கொண்டு "அபுசலி முக்காக ("பிரபல தாதா) ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும்" என்றான்.
இதை ஐஸ்வர்யராய் ஏற்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் ஆத்திரத்தில் கன்னா பின்னா வென்று திட்டி தீர்த்தார்.
சல்மான்கான் மொத்தம் 3 நாட்கள் தொடர்ந்து ஐஸ்வர்யாராய்க்கு போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். "எனக்கு அமெரிக்காவில் ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை கண்காணிப்பார்கள்" என்று முதலில் மிரட்டினார்.
இதை ஐஸ்வர்யாராய் கண்டு கொள்ளவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் மறுநாள் போனில், "உன்னை குடும்பத்தோடு கொன்று விடுவேன்" என்று மிரட்டினார். மேலும் அவர், "எனக்கு தாவூத் இப்ராகிம் உள்பட எல்லா தாதாக்களும் தெரியும். உன் கதையை முடித்து விடுவேன். என்னால் இதை செய்ய முடியும் என்று உனக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார்.
சல்மான்கானின் இந்த கொலை மிரட்டல்கள் குறித்து ஐஸ்வர்யாராய் போலீசில் புகார் செய்தார். ஆனால் இப்போதுதான் சல்மான்கான் விடுத்த கொலை மிரட்டல் வெளியில் தெரிய வந்துள்ளது. சல்மான்கான் போனில் மிரட்டிய பேச்சு ஆதாரம் இன்று வெளியாகி உள்ளது.
இதன் மூலம் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன் நடிகர் சல்மான்கானுக்கு ரகசிய தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1994-ம் ஆண்டு "மிஸ் வொர்ல்டு" அழகிப்பட்டத்தை வென்றவர் ஐஸ்வர்யாராய். மயக்கும் பார்வை, மற்றும் கொடி இடை அழகால் இவர் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுக்க புகழ்ந்து பேசப்படும் அழகியாக உள்ளார்.
உலக அழகி பட்டம் வென்ற பிறகு அவர் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் `ஜீன்ஸ்' படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
ஐஸ்வர்யாராயின் வசீகரிக்கும் அழகில் மயங்கிய பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் அவர் மீது காதல் கொண்டார். ஆனால் அவரை ஐஸ்வர்யா ராய் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவர் வீட்டுக்கு சென்று நடிகர் சல்மான்கான் தகராறு செய் தார்.
போலீசார் சமரசம் செய்து அவரை அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய்க்கும், ஐஸ்வர்யாராய்க்கும் காதல் மலர்ந்தது. விரைவில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யாராயை கடந்த 2001_ம் ஆண்டு நடிகர் சல்மான்கான் தகாத வார்த்தை களால் பேசி கொலை மிரட்டல் விடுத்தது இப்போது வெளியாகி உள்ளது. 2001-ம் ஆண்டு ஐஸ்வர்யாராய் அமெரிக்காவில் சுற்றுப்பய ணம் செய்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
இதை அறிந்த சல்மான்கான் ஆகஸ்டு மாதம் 28-ந்தேதி ஐஸ்வர்யாராயை போனில் தொடர்பு கொண்டு "அபுசலி முக்காக ("பிரபல தாதா) ஒரு நிகழ்ச்சி நடத்தவேண்டும்" என்றான்.
இதை ஐஸ்வர்யராய் ஏற்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் ஆத்திரத்தில் கன்னா பின்னா வென்று திட்டி தீர்த்தார்.
சல்மான்கான் மொத்தம் 3 நாட்கள் தொடர்ந்து ஐஸ்வர்யாராய்க்கு போனில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். "எனக்கு அமெரிக்காவில் ஆட்கள் இருக்கிறார்கள். உன்னை கண்காணிப்பார்கள்" என்று முதலில் மிரட்டினார்.
இதை ஐஸ்வர்யாராய் கண்டு கொள்ளவில்லை. இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சல்மான்கான் மறுநாள் போனில், "உன்னை குடும்பத்தோடு கொன்று விடுவேன்" என்று மிரட்டினார். மேலும் அவர், "எனக்கு தாவூத் இப்ராகிம் உள்பட எல்லா தாதாக்களும் தெரியும். உன் கதையை முடித்து விடுவேன். என்னால் இதை செய்ய முடியும் என்று உனக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார்.
சல்மான்கானின் இந்த கொலை மிரட்டல்கள் குறித்து ஐஸ்வர்யாராய் போலீசில் புகார் செய்தார். ஆனால் இப்போதுதான் சல்மான்கான் விடுத்த கொலை மிரட்டல் வெளியில் தெரிய வந்துள்ளது. சல்மான்கான் போனில் மிரட்டிய பேச்சு ஆதாரம் இன்று வெளியாகி உள்ளது.
இதன் மூலம் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி தாவூத் இப்ராகிமுடன் நடிகர் சல்மான்கானுக்கு ரகசிய தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் மும்பை பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

