07-07-2005, 09:46 AM
aswini2005 Wrote:தப்பிக்கிறதுக்கு நல்ல சாட்டு இந்த வசனம். கதைக்கிறவர்களோ உங்களுடன் வாழ வருகிறார்கள் ஸ்ராலின் ?அஸ்வினி மெடம் சுண்டல் சீதனம் வேண்டுபவர்கள் சொல்லும் நொண்டிச்சாட்டுப்பற்றி சொன்ன கருத்துக்கு பொழிப்புரை வழங்கினேன் .அவ்வளவுதான் (கிண்டலாக).சீதனம் என்ற கருத்தை ஆதரிக்கும் எண்ணத்தில் அல்ல-------அஸ்வினி மெடம் ஏங்க வீணாய் என்னோடை சண்டைக்கு வாறீங்க
கடந்த வருடம் ஒரு ஆணுக்கு திருமணம் நடந்தது. வயது 42. அவர் கொழுத்த சீதனத்துடன் தன்னிலும் 15வயது குறைந்த பெண்ணுக்காக காத்திருந்தார். இப்போது 9வயது குறைந்த பெண்தான் கிடைத்தாள். ஆனால் அவரது நரைக்கும் வழுக்கைக்குக் காத்திருக்கும் தலைக்கும் இடிந்த முகத்துக்கும் 20லட்டசமாம்.
அவரை ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்த போது (5வருடம் முதல்) ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறீங்கள். சீதனம் வாங்கியென்ன கோட்டையா கட்டப்போகிறீர்கள். எனக் கேட்டதற்கு அவர் சொன்னார்.
1983இலஇ அவர் வெளிநாடு வர அவரது அம்மாவும் அண்ணனும் காணிவித்துத்தானாம் தந்தவை. அந்தக்காணி இப்ப 70லச்சமாம் பெறுமதி. அதைதன்னை தேவைப்படுகிற பெண் தந்துவிட்டு தன்னை அடையலாம் என்றார். திருமணமானபின் மனைவியை தான்தானாம் உழைத்து உணவு கொடுத்து உயிர் உள்ளவரையும் கவனிக்க தனக்கு என்ன சம்பளமா தருவினம் ? விரும்பினா சீதனம் தந்து என்னை அடையட்டும். விருப்பமில்லாட்டில் போகட்டும். அக்கான்ரை பிள்ளையள் அண்ணனரை பிள்ளையளுக்கு உள்ளதை குடுத்திட்டு இப்பிடி இருந்திடுவேன் என்றார். இப்படியும் உள்ளார்கள் ஸ்ராலின்.
தப்பிக்கொள்ள முக்கியமான இடம் பிழையென்று நீங்கள் சொல்லுவது தவறுதான்.

