07-03-2005, 01:04 PM
<b>ஓசையின்றி</b>
* ஓசையின்றி
வழிந்தோடிய
நீரோடை கண்டேன்
வாடிய உன் முகமதில்
கரு விழியாளே...
ஒரு சொல் கேளாய்...
* நம்மில்
ஏற்பட்ட காதல்
கால் சட்டையில் ஒட்டும்
கடற்கரை மணலல்ல
தட்டி விட்டுச் செல்ல...
* உச்சியில்
நிற்கும் சூரியன்
சுடத்தான் செய்யும்
தலை சாயத் தொடங்கினால்
சுட்ட சூரியனும் சுகமாகுமே...
சுற்றங்களும் அப்படித்தான்!
* காதலர்கள்
கட்டுண்டிருப்பது
நேற்றல்ல இன்றல்ல
என்றும் நிகழும்
நிகழ்வுதானே...
* உறவுகள் நம்மை
ஒருநாளும்
உதறித் தள்ளாது
நாம் திசை மாறி
தீயவற்றை நாடாது வரை!
* ஒருவரை ஒருவர்
நினைந்து
வெம்பி இருப்பதை விட
நம்பி இருப்போம்
நல்வழி பிறக்குமென்று!
* காலம் கனியும் வரை
நாம் சந்தித்தாலும்
நீ யாரோ
நான் யாரோ
என ஒதுங்கியே செல்வோம்!
* தனியாக இருந்தாலும்
நீயும், நானுமாய்
கனவுலகில் சஞ்சரிக்க
தடையேதுமில்லையே!
* நினைவு தானே
கனவாகிறது
கனவை நிஜமாக்க
ஆசையாய் காத்திருப்போம்
ஓசையின்றி!
ஏ.பி.முருகேசன்
* ஓசையின்றி
வழிந்தோடிய
நீரோடை கண்டேன்
வாடிய உன் முகமதில்
கரு விழியாளே...
ஒரு சொல் கேளாய்...
* நம்மில்
ஏற்பட்ட காதல்
கால் சட்டையில் ஒட்டும்
கடற்கரை மணலல்ல
தட்டி விட்டுச் செல்ல...
* உச்சியில்
நிற்கும் சூரியன்
சுடத்தான் செய்யும்
தலை சாயத் தொடங்கினால்
சுட்ட சூரியனும் சுகமாகுமே...
சுற்றங்களும் அப்படித்தான்!
* காதலர்கள்
கட்டுண்டிருப்பது
நேற்றல்ல இன்றல்ல
என்றும் நிகழும்
நிகழ்வுதானே...
* உறவுகள் நம்மை
ஒருநாளும்
உதறித் தள்ளாது
நாம் திசை மாறி
தீயவற்றை நாடாது வரை!
* ஒருவரை ஒருவர்
நினைந்து
வெம்பி இருப்பதை விட
நம்பி இருப்போம்
நல்வழி பிறக்குமென்று!
* காலம் கனியும் வரை
நாம் சந்தித்தாலும்
நீ யாரோ
நான் யாரோ
என ஒதுங்கியே செல்வோம்!
* தனியாக இருந்தாலும்
நீயும், நானுமாய்
கனவுலகில் சஞ்சரிக்க
தடையேதுமில்லையே!
* நினைவு தானே
கனவாகிறது
கனவை நிஜமாக்க
ஆசையாய் காத்திருப்போம்
ஓசையின்றி!
ஏ.பி.முருகேசன்
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

