Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படித்ததும் பிடித்தது
#1
காதல் ஒரு ஆச்சரியம்!

* அஞ்சல் அட்டை மாதிரி

திறந்தே இருக்கிறேன்

நீ படிக்கும்படியாக...

தபால் உறையாக

நீ

மூடியே இருக்கிறாய்

நான் தவிக்கும்படியாக!

* காதல் ஒரு ஆச்சரியம்...

அறுபத்திரெண்டு கிலோ எடையை

அந்தரத்தில்

மிதக்க விட்டிருக்கிறது!

* கூட்டமாய் இரை தேடுகிற

கோவில் புறாக்களின்

குணம் இல்லை உனக்கு...

பட்டாம்பூச்சியாக

நீ

தனித்தே பறப்பது

பிடித்திருக்கிறது எனக்கு!

* வானம் பார்த்திருக்கும்

ஏழை விவசாயி போல

எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறேன்;

பருவ மழையே

எப்போது பெய்வாய் நீ?

* கல்கி அவதாரத்தில்

கடவுள் வைத்த

காலடி போல

கவனமாகத்தான் நடக்கிறாய்...

அது சரி –

எல்லா அடியையும்

ஏன்

என் தலையில் வைக்கிறாய்!

* உண்ட மயக்கத்து

உறக்கமாக இருந்தாலும்

ஒவ்வொரு தடவையும்

உன் முகத்தை

மனக்கண்ணில்

பார்த்து விட்டுத்தான் படுக்கிறேன்;

அதுவே

நீண்ட உறக்கமாகிப் போனாலும்

கடைசியாய் கண்டது

உன் முகமாக இருக்கட்டும்!

க.சந்திரகலா, அதங்கோடு
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
படித்ததும் பிடித்தது - by SUNDHAL - 06-29-2005, 08:48 AM
[No subject] - by tamilini - 06-29-2005, 08:52 AM
[No subject] - by வெண்ணிலா - 06-29-2005, 11:28 AM
[No subject] - by Mathan - 06-29-2005, 11:57 AM
[No subject] - by kavithan - 06-30-2005, 08:27 AM
[No subject] - by Niththila - 06-30-2005, 09:25 AM
[No subject] - by அருவி - 06-30-2005, 10:42 AM
[No subject] - by SUNDHAL - 07-03-2005, 01:04 PM
[No subject] - by kavithan - 07-03-2005, 10:38 PM
[No subject] - by KULAKADDAN - 07-04-2005, 05:57 AM
[No subject] - by SUNDHAL - 07-25-2005, 04:55 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2005, 07:09 AM
[No subject] - by ப்ரியசகி - 07-31-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)