10-01-2003, 09:18 AM
அஜீவன் , நளாயினி , யாழ் , தாத்தா ஆகியோரது கருத்துக்களில் சொல்லப்பட்டவை சொல்லப்பட வேண்டியவர்களைச் சேர்ந்தால் நன்மையே. இல்லையேல் செவிடன் காதில் ஊதிய.....அதுவாய்த்தானிருக்கும்.
<span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் !
'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன்பிள்ளை தானே வளருமாம் \"
ஊடகங்களும் அதைத்தான் பின்பற்றுகிறதோ என்னவோ.</span>
முகம் தெரியாதவர்களுக்காக
மாளிகைகளும் கட்டிக்கொடுப்போம் - ஆனால்
முன்னிற்கும் எம் பிள்ளையின் முகத்தையே அறியோம்.
சின்னத்திரைகளின் தொடர்களை
லட்சங்கள் கொடுத்தும் வாங்குவோம்
இலட்சியங்களை நெஞ்சில் சுமந்தபடி
சந்தர்ப்பம் கேட்டுவரும் சந்ததியை
சந்திக்கவே மாட்டோம்.
ஏனெனில் நாங்கள் இலட்சியவாதிகள்.
அண்ணனின் தம்பியாய் , ஆசானின் மாணாக்கனாய்
மாணாக்கனின் மாணவியாய் எங்காச்சும்
ஒரு தொடர்பிருந்தால் நாங்களே ராசாக்கள்.
ஒளி , ஒலிவாங்கியெல்லாம் எம்வசமே போங்கள்.
உண்மையாய் எங்களை நேசித்தோரெல்லாம்
து}சுதான் போங்கள் - அவர்கள்
தெரிவதேயில்லை எமக்கெல்லாம்.
குழிகள் பறிக்கும் குறியுடனே திரிகின்ற
மானிடர்கள் உள்ளவரை கிளிகளெல்லாம்
கழுகுகளே....!
நாங்களெல்லாம் சினிமாவும் பார்ப்பதில்லை
சின்னத்திரைத் தொடர்களும் பார்ப்பதில்லை
நன்றாகவே மற்றோரை நக்கல் பண்ணுவோம்.
அம்பிகை , அலைகள் இல்லாவிட்டால்
'அடச்சனியன்கள் ஏனாம் போடேல்ல"
இப்படியும் திட்டுவோம்.
இதுதான் இன்றைய மீடியா
வால்பிடித்து முகம்காட்டு இல்லையேல்
வாயைஅடக்கி மௌனியாய் இரு.
வால்பிடிக்கத் தெரியாத முட்டாள்கள் நாங்கள்
அதுதான் வசமாக நிறைய இருந்தும்
சாதிக்க முடியாமல் புதைகிறோம்.
<span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் !
'ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன்பிள்ளை தானே வளருமாம் \"
ஊடகங்களும் அதைத்தான் பின்பற்றுகிறதோ என்னவோ.</span>
முகம் தெரியாதவர்களுக்காக
மாளிகைகளும் கட்டிக்கொடுப்போம் - ஆனால்
முன்னிற்கும் எம் பிள்ளையின் முகத்தையே அறியோம்.
சின்னத்திரைகளின் தொடர்களை
லட்சங்கள் கொடுத்தும் வாங்குவோம்
இலட்சியங்களை நெஞ்சில் சுமந்தபடி
சந்தர்ப்பம் கேட்டுவரும் சந்ததியை
சந்திக்கவே மாட்டோம்.
ஏனெனில் நாங்கள் இலட்சியவாதிகள்.
அண்ணனின் தம்பியாய் , ஆசானின் மாணாக்கனாய்
மாணாக்கனின் மாணவியாய் எங்காச்சும்
ஒரு தொடர்பிருந்தால் நாங்களே ராசாக்கள்.
ஒளி , ஒலிவாங்கியெல்லாம் எம்வசமே போங்கள்.
உண்மையாய் எங்களை நேசித்தோரெல்லாம்
து}சுதான் போங்கள் - அவர்கள்
தெரிவதேயில்லை எமக்கெல்லாம்.
குழிகள் பறிக்கும் குறியுடனே திரிகின்ற
மானிடர்கள் உள்ளவரை கிளிகளெல்லாம்
கழுகுகளே....!
நாங்களெல்லாம் சினிமாவும் பார்ப்பதில்லை
சின்னத்திரைத் தொடர்களும் பார்ப்பதில்லை
நன்றாகவே மற்றோரை நக்கல் பண்ணுவோம்.
அம்பிகை , அலைகள் இல்லாவிட்டால்
'அடச்சனியன்கள் ஏனாம் போடேல்ல"
இப்படியும் திட்டுவோம்.
இதுதான் இன்றைய மீடியா
வால்பிடித்து முகம்காட்டு இல்லையேல்
வாயைஅடக்கி மௌனியாய் இரு.
வால்பிடிக்கத் தெரியாத முட்டாள்கள் நாங்கள்
அதுதான் வசமாக நிறைய இருந்தும்
சாதிக்க முடியாமல் புதைகிறோம்.
+++++ ++++
http://uyirvaasam.blogspot.com
http://uyirvaasam.blogspot.com

