06-13-2005, 01:58 AM
கியூபப் புரட்சியின் வெற்றியினைத் தொடர்ந்து, ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்டுத் துயரங்களை அனுபவிக்கும் மற்றைய லத்தீன் அமெரிக்க நாடுகளை விடுவிக்கவேண்டிய கடைமையின் அழைப்பை ஏற்று 1965 இன் இறுதியில் பொலிவியா சென்றடைந்தார்.
1966 அக்டோபரில் முறப்படி கொரில்லாப்படை இயக்கத்தைத் தொடங்கி வைக்கின்றார். 1967 அக்டோபரில் ஹிகெரா - டெல் - யூரோ யுத்ததில் காயப்படுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றார். தனிமைப்படுத்தப்படுகின்றார்.
1967 அக்டோபர் 9 அன்று காலையில் மரியோ தெரான் என்ற இரண்டாம் லெப்டினென்ட் சே குவேராவை மிக அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்கிறார்.
சே குவேராவின் இறப்பில் மூன்றாம் உலக நாடுகள் தம் நம்பிக்கை நட்சத்திரத்தினை இழந்தன. ஈடில்லாத கொரில்லாப் போர்முறையின் ஆசானை இழந்தன. ஆனால் அவரது இறப்பு எதையும் நிறுத்திவிடவில்லை. அவரே சொன்னதுபோல், புரட்சியின் முன் தனி மனித உயிர் என்பது ஒரு பொருட்டல்ல. அவரது இறப்பு ஏகாதிபத்தியத்துக்கு பல்லாயிரக்கணக்கான புதிய எதிரிகளை உருவாக்கியதோடு, இந்நாடுகளில் வர்க்கப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்தது.
1966 அக்டோபரில் முறப்படி கொரில்லாப்படை இயக்கத்தைத் தொடங்கி வைக்கின்றார். 1967 அக்டோபரில் ஹிகெரா - டெல் - யூரோ யுத்ததில் காயப்படுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றார். தனிமைப்படுத்தப்படுகின்றார்.
1967 அக்டோபர் 9 அன்று காலையில் மரியோ தெரான் என்ற இரண்டாம் லெப்டினென்ட் சே குவேராவை மிக அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்கிறார்.
சே குவேராவின் இறப்பில் மூன்றாம் உலக நாடுகள் தம் நம்பிக்கை நட்சத்திரத்தினை இழந்தன. ஈடில்லாத கொரில்லாப் போர்முறையின் ஆசானை இழந்தன. ஆனால் அவரது இறப்பு எதையும் நிறுத்திவிடவில்லை. அவரே சொன்னதுபோல், புரட்சியின் முன் தனி மனித உயிர் என்பது ஒரு பொருட்டல்ல. அவரது இறப்பு ஏகாதிபத்தியத்துக்கு பல்லாயிரக்கணக்கான புதிய எதிரிகளை உருவாக்கியதோடு, இந்நாடுகளில் வர்க்கப் போராட்டத்தை மேலும் வலுவடையச் செய்தது.
<b> . .</b>

