06-13-2005, 01:40 AM
வாசிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அத்தியாவசியமானது என்பதை அவர் வாழ்ந்த காலம் முழுவது வலியுறுத்தி வந்திருக்கின்றார். கொரில்லாவாக செயல்பட்டு வாழ்ந்த காலங்களில், இவர் தோளில் சுமக்கும் பை மற்றவர்களுடையதைவிட அதிக கனமுள்ளதாகவே இருந்திருக்கின்றது.
சே குவேரா என்ற கட்டுறுதியான புரட்சிவீரனின் மனத்திண்மைக்கு அடிப்படை நேர்மையான எண்ணங்களின் மீது அவர் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கைதான். புரட்சிக்காகவும், உழைக்கும் மக்களை முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்தும், வறுமையிலிருந்தும், பிற தீமைகளிருந்தும் விடுவிற்பதற்காகவும் தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட தன்னலமற்றவர். முழுமுற்றான புரட்சிவாது சே குவேரா. அவரது முதன்மை அக்கறை, சந்தோஷம், உயர்ந்த இலட்சியம் - எல்லாமே புரட்சிக்கான முற்றான அர்ப்பணிப்புத்தான்.
சே குவேரா என்ற கட்டுறுதியான புரட்சிவீரனின் மனத்திண்மைக்கு அடிப்படை நேர்மையான எண்ணங்களின் மீது அவர் கொண்ட அசைக்கமுடியாத நம்பிக்கைதான். புரட்சிக்காகவும், உழைக்கும் மக்களை முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்தும், வறுமையிலிருந்தும், பிற தீமைகளிருந்தும் விடுவிற்பதற்காகவும் தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட தன்னலமற்றவர். முழுமுற்றான புரட்சிவாது சே குவேரா. அவரது முதன்மை அக்கறை, சந்தோஷம், உயர்ந்த இலட்சியம் - எல்லாமே புரட்சிக்கான முற்றான அர்ப்பணிப்புத்தான்.
<b> . .</b>

