06-13-2005, 01:30 AM
பெண்களைப்பற்றிய அவரது கண்ணோட்டம் கவனிக்கத்தக்கது. சே குவேரா சொல்லுகின்றார்: "பெண்கள் விடுதலை அடையவேண்டுமென்றால் அவர்கள் முழுச்சுதந்திரம் பெறவேண்டும். அவர்களின் உள்ளே ஒரு சுதந்திரம் மலரவேண்டும். அவர்களை சில நடவடிக்கைகளில் ஈடுபட விடாமல் தடுப்பது, உடல்ரீதியான காரணத்தால் மட்டுமல்ல. இன்னும் மாறாமல் இருக்கும் பழைய மரபின் மீதமும்தான்" என்கிறார்.
மூன்று கண்டங்களின் கூட்டு மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் சாவைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை விளக்குகின்றது. "நமது ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியதிற்கு எதிரான போர்முரசு. மனிதகுலத்தின் மாபெரும் எதிரியான அமெரிக்காவிற்கு எதிரான மக்கள் ஒற்றுமையின் போர்ப்பரணி. எங்காவது இறப்பு நம்மை எதிர்பாராமல் எதிர்கொண்டால் நமது போர்க்குரல் அதெற்கென செவிசாய்க்கும். ஏதாவது ஒரு காதை அடையும் பட்சத்தில், நமது ஆயுதங்களை எடுத்துப் போராட வேறு ஒரு கரம் நீளும் பட்சத்தில், இயந்திரத் துப்பாக்கியின் படபடக்கும் உறுமலின் பின்னணியில் கல்லறை கீதங்களை இசையோடு பாட மற்றவர்கள் தயாராக இருக்கும் பட்சத்தில், போரின் வெற்றியின் புதிய போர்க் கூச்சல்கள் முழங்கப்படும் பட்சத்தில் - நாம் அதை வரவேற்கின்றோம்."
மூன்று கண்டங்களின் கூட்டு மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில் சாவைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை விளக்குகின்றது. "நமது ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியதிற்கு எதிரான போர்முரசு. மனிதகுலத்தின் மாபெரும் எதிரியான அமெரிக்காவிற்கு எதிரான மக்கள் ஒற்றுமையின் போர்ப்பரணி. எங்காவது இறப்பு நம்மை எதிர்பாராமல் எதிர்கொண்டால் நமது போர்க்குரல் அதெற்கென செவிசாய்க்கும். ஏதாவது ஒரு காதை அடையும் பட்சத்தில், நமது ஆயுதங்களை எடுத்துப் போராட வேறு ஒரு கரம் நீளும் பட்சத்தில், இயந்திரத் துப்பாக்கியின் படபடக்கும் உறுமலின் பின்னணியில் கல்லறை கீதங்களை இசையோடு பாட மற்றவர்கள் தயாராக இருக்கும் பட்சத்தில், போரின் வெற்றியின் புதிய போர்க் கூச்சல்கள் முழங்கப்படும் பட்சத்தில் - நாம் அதை வரவேற்கின்றோம்."
<b> . .</b>

