06-13-2005, 01:12 AM
பே ஆஃப் பிக்ஸ் படையெடுப்பு அமெரிக்க ஜனாதிபது கென்னடியின் வீழ்ச்சிக்கான படையெடுப்பு. அப்போது பினார் டெல் ரியோவில் ராணுவ கமாண்டராக சே இருந்தார். தவறுதலாக அவரது துப்பாக்கி கீழே விழுந்து வெடித்ததில் காலில் காயமுற்றார். இச் சம்பவத்தை காஸ்ரோவுக்கும், சேவுக்கும் மோதல் வந்ததால், சே தற்கொலைக்கு முயன்றதாக அமெரிக்கா வத்ந்தியைப் பரப்பியது.
டிசம்பரில் ஐ.நாவில் பேசும்போது " ஒரு அநுபவமிக்க விவசாயி தந்து பயிரின் குறைகளை நீக்கி உற்பத்தியை தரமானதாக்குவதுபோல, புரட்சி மக்களைத் தூய்மைப்படுத்துகின்றது" என்றார்.
மெல்ல மெல்ல சே குவேரா ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஆழ்ந்த அரசியல், பொருளாதார, சமுகவியல் வல்லுநர் என்பது வெளிப்படலாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மனிதாபிமானி, ஒரு மருத்துவர்.
மருத்துவம் என்ற சேவை பணக்காரர்களின் இரத்தக்கொதிப்பிற்கு நிவாரணம் தேடுவதாக இல்லாமல், ஏழைகளை வியாதியிலிருந்து விடுவிற்பதற்குப் பயன்பட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே அவர் குறியாக இருந்தார். மருத்துவம் என்பதை அவர் இப்படி விபரிக்கின்றார். " ஒருநாள் மருத்துவம் தன்னை வியாதி வராமல் தடுப்பதை விளக்கும் அறிவியலாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதனுடைய மருத்துவக் கடமைகளை மக்களே செய்யுமாறு அவர்கள் வழிநடத்திச் செல்லப்படவேண்டும். நாம் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் புதிய சமுதாயத்தின் மக்களின் சக்திக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை அல்லது அதைப்போன்ற வேறு அவசரத் தேவைகளின்போது மட்டும் மருத்துவம் தலையிடவேண்டும்."
டிசம்பரில் ஐ.நாவில் பேசும்போது " ஒரு அநுபவமிக்க விவசாயி தந்து பயிரின் குறைகளை நீக்கி உற்பத்தியை தரமானதாக்குவதுபோல, புரட்சி மக்களைத் தூய்மைப்படுத்துகின்றது" என்றார்.
மெல்ல மெல்ல சே குவேரா ஒரு புரட்சியாளர் மட்டுமல்ல, ஆழ்ந்த அரசியல், பொருளாதார, சமுகவியல் வல்லுநர் என்பது வெளிப்படலாயிற்று. எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு மனிதாபிமானி, ஒரு மருத்துவர்.
மருத்துவம் என்ற சேவை பணக்காரர்களின் இரத்தக்கொதிப்பிற்கு நிவாரணம் தேடுவதாக இல்லாமல், ஏழைகளை வியாதியிலிருந்து விடுவிற்பதற்குப் பயன்பட வேண்டும் என்பதில் ஆரம்பம் முதலே அவர் குறியாக இருந்தார். மருத்துவம் என்பதை அவர் இப்படி விபரிக்கின்றார். " ஒருநாள் மருத்துவம் தன்னை வியாதி வராமல் தடுப்பதை விளக்கும் அறிவியலாக மாற்றிக் கொள்ளவேண்டும். அதனுடைய மருத்துவக் கடமைகளை மக்களே செய்யுமாறு அவர்கள் வழிநடத்திச் செல்லப்படவேண்டும். நாம் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் புதிய சமுதாயத்தின் மக்களின் சக்திக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சை அல்லது அதைப்போன்ற வேறு அவசரத் தேவைகளின்போது மட்டும் மருத்துவம் தலையிடவேண்டும்."
<b> . .</b>

