06-06-2005, 06:22 AM
<b>புளொட் அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் பீற்றர், ஊடகவியலாளர் சிவராம் படுகொலைச் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. </b>
அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுக்கு அடுத்தபடியாக கட்சியின் பதவி நிலை வகிக்கும் இவர், சுமார் 90 ஆயிரம் ரூபாய்கள் விலைமதிப்புடையதாகத் தெரிவிக்கப்படும், இன்டர் நெற், ஈ-மெயில் போன்ற சகல வசதிகளையும் கொண்ட ஊடகவியலாளர் சிவராமுடைய கையடக்கத் தொலைபேசியை எறிய மனமின்றி பாவித்து வந்தபோதே இலங்கை பொலிசாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் பீற்றர் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், இந்த விடயம் குறித்து தமது அமைப்பு எந்தவகையிலும் அறிந்திருக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் பெயருக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், பீற்றரின் இந்த நடவடிக்கையால் கட்சியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் சிவராம் கொலைச் சம்பவத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான மங்கள சமரவீரவும், ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்சவும் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில், அமைச்சர் மங்கள சமரவீர ~~மட்குறூப்|| என்கின்ற பெயரில் பாதாள உலகக் குழுவொன்றை வைத்திருந்ததாகவும், இதன் மூலம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திவந்ததாகவும் மேலும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியொன்றும், அதில் அமைச்சுப் பதவி வகிக்கும் கட்சியொன்றும் ஊடகவியலாளர் சிவராம் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்த சண்டே லீடர் வாரப்பத்திரிகை, கொலையாளிகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்கள் சில அரசியல் முக்கியஸ்தர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் விசாரணைகள் முடக்கப்படுமானால், அடுத்தவாரம் இதுதொடர்பான முழுமையான விபரங்கள் தமது பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
பேராசை பெரும் நட்டம்!
அமைப்பின் தலைவர் சித்தார்த்தனுக்கு அடுத்தபடியாக கட்சியின் பதவி நிலை வகிக்கும் இவர், சுமார் 90 ஆயிரம் ரூபாய்கள் விலைமதிப்புடையதாகத் தெரிவிக்கப்படும், இன்டர் நெற், ஈ-மெயில் போன்ற சகல வசதிகளையும் கொண்ட ஊடகவியலாளர் சிவராமுடைய கையடக்கத் தொலைபேசியை எறிய மனமின்றி பாவித்து வந்தபோதே இலங்கை பொலிசாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது அமைப்பின் நிர்வாகப் பொறுப்பாளர் பீற்றர் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை குறித்து அதிர்ச்சி வெளியிட்டிருக்கும் புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், இந்த விடயம் குறித்து தமது அமைப்பு எந்தவகையிலும் அறிந்திருக்கவில்லையெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் பெயருக்கு பங்கம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கும் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள், பீற்றரின் இந்த நடவடிக்கையால் கட்சியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஊடகவியலாளர் சிவராம் கொலைச் சம்பவத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான மங்கள சமரவீரவும், ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்சவும் தொடர்புபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சிக்காலத்தில், அமைச்சர் மங்கள சமரவீர ~~மட்குறூப்|| என்கின்ற பெயரில் பாதாள உலகக் குழுவொன்றை வைத்திருந்ததாகவும், இதன் மூலம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திவந்ததாகவும் மேலும் செய்திகள் கூறுகின்றன.
இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியொன்றும், அதில் அமைச்சுப் பதவி வகிக்கும் கட்சியொன்றும் ஊடகவியலாளர் சிவராம் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்த சண்டே லீடர் வாரப்பத்திரிகை, கொலையாளிகள் தொடர்பாக வெளியாகியிருக்கும் தகவல்கள் சில அரசியல் முக்கியஸ்தர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் விசாரணைகள் முடக்கப்படுமானால், அடுத்தவாரம் இதுதொடர்பான முழுமையான விபரங்கள் தமது பத்திரிகையில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
பேராசை பெரும் நட்டம்!

