06-05-2005, 10:18 PM
MUGATHTHAR Wrote:[b] புலம் பெயர் தமிழ் மக்களால் தமிழ் சமூகம் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா??????????
இன்று காலை தீபம் தொலைக்காட்சியில் மேலே குறிப்பிட்ட விடயம் தொடர்பான ஒரு உரையாடல் இடம்பெற்றது. அனேகா; இந்த நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்பு இருந்திருக்காது. இப்போ தீபம் சந்தாஅட்டை மூலமாகவே ஒளிபரப்பாவதாலும் வேலை காரணமாகவும் நேரம் கிடைத்திருக்காது. சரி நாங்களும் யாழ் களத்தில் இதைப்பற்றி ஒரு கருத்துகளை அலசுவம் என்ன?
புலம் பெயா; மக்கள் எத்தனையோ வகையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறார்கள் அதை மறுக்கவே முடியாது. முக்கியமாக பொருளாதாரத்தை குறிப்பிடலாம்
இதைவிட
1).தொழில் நுட்பஅறிவு (கணணி. இனையத்தளம் என)
2) பெண்கள் சுதந்திரம்
3) பிள்ளைகள் சுதந்திரம்
4) சமய.கலாச்சார.கலை அறிவு
5) பெண்ணும் ஆணுக்கு சமனாக வேலைக்கு போவதால் குடும்பத் தலைவனின் சுமைகள் கனுஷமான அளவு குறைந்திருக்கிறது
இப்படி நிறைய நன்மையான விடயங்கள் இருக்கிறது
இதை விட இவர்களுக்குத் தெரியாமலே ஒரு சில பாதிப்புக்கள் தாயகத்திலிருக்கும் எமது உறவுகளை சென்றடைகின்றன. நிகழ்ச்சியில் ஒரு நேயா; குறிப்பிட்டது போல வெளிநாட்டில் இருப்பவர்களின் சில உறவுகள் கல்வியில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை இதுக்குக் காரணம் படிப்புச் சரிவராவிட்டால் அண்ணனைப் பிடிச்சு எப்பிடியும் வெளிநாடு போகலாம் எண்ட நினைப்பு இருப்பதால் படிப்பில் ஆர்வம் குறைகிறது.பெற்றோரும் இதையே ஊக்கிவிக்கிறார்கள்
அடுத்தது நாம் அனுப்பும் பணம் அவர்களின் அத்தியாவசிய தேவையைவிட மேலதிகமாக இருப்பதால் வீண்செலவுகள் செய்வதற்கு வழி வகுக்கிறது அவர்கள் கஸ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலே போய்விடுகிறது ஆனபடியால் நாங்கள்தான் அவர்களை சோம்பேறிகள் ஆக்குகின்றோம்..உண்மைதானே?
இன்று ஊரில் வரதட்சனை இவ்வளவு தூரம் உயர்ந்தமைக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள் 4அண்ணன்கள் வெளிநாட்டிலிருந்தால் அவர்களின் தங்கைக்கு வரதட்சனையாக கேட்காமலே அள்ளிக் கொடுத்து பெருமைப் பட்டுகொள்கிறார்கள் இது தமிழ் சமூகத்துக்கு நன்மையா??
சரி இதேபோல் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கே வையுங்கள்
ஏதோ தலைப்பில் தொடங்கி எங்கேயோ போய் நிற்கும் இந்த விவாதம் ஒரு பொருத்தமான புதிய தலைப்புக்கு மாற்றப்பட்டு தொடர்தல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

