05-29-2005, 10:25 AM
kirubans Wrote:பெரும்பாலான தமிழ் ஆண்கள் எப்போதும் பெண் மீது அடக்குமுறையைப் பிரயோகிப்பவர்கள் (இது வன்முறை சார்ந்த அடக்குமுறை மட்டுமல்ல, கருத்தியல் சார்ந்ததும்தான்). வளர்ச்சியடைந்த நாடுகளில் பெண்களும் தங்கள் சொந்தக்காலில் நிற்பதால் ஊர் மாதிரி அடங்கி ஒடுங்கத் தேவையில்லை. பிரச்சினையின் வேர் என்னவென்று ஆராயாமல் எப்படியாவது பெண்களை விவாகரத்து கேட்காமல் பண்ணி அடங்கி ஒடுக்க இருக்க சமூகம், கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் துணைக்கு இழுக்கிறீர்கள்.
உண்மைதான். இந்த விவாகரத்து பிரைச்சனைக்கு அடிப்படையான புரிந்துணர்வின்மை, மன வேற்றுமைகள் போன்றவை முன்னமே இருந்து வந்திருக்கின்றது. அந்த சமயத்தில் பெண்களுக்கு சொந்த காலில் நிற்கும் அளவிற்கு சுய சம்பாத்தியமோ அல்லது சமுதாய உதவிகளோ இல்லாமையால அவர்களால் விவாகரத்து குறித்து பேச முடியவில்லை. தற்போது அவர்களால் தன்னிச்சையாக செயற்படும் அளவிற்கு தற்துணிவு உள்ள நிலையில் புரையோடி போயிருந்த பிரைச்சனைகள் வெளியில் வருகின்றது. அதனால் இந்த விவாகரத்திற்கான அடிப்படை காரணத்தை ஆராய வேண்டுமே தவிர பெண்களை அவர்களது கருத்துகள வெளிவரா வண்ணம் முன்பு போல் வைத்திருந்தால் பிரைச்சனையே வராது என்று சிந்திக்க கூடாது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

